கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

வருண்காந்தி மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து: உச்சநீதிமன்றம்

varun.jpgஉச்ச நீதிமன்றம் வருண்காந்தி மீதான தேசிய பாதுôகாபபு சட்டத்தை ரத்து செய்தது . வருண்காந்திக்கு தேர்தல் பிரசாரத்தின்போது முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக புகார் கூறப்பட்டது. இதனால் அவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஒரு ஆண்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். பரோலில் வெளியே வந்துதான் தேர்தல் பிரசாரம் செய்தார்.

பா.ஜ., வேட்பாளர் வருண் காந்திக்கு அளிக்கப்பட்ட பரோல் நீட்டிப்பு இன்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில், வருண் காந்தி சுப்ரீம் கோர்ட்டில், தன் மீதான தே.பா. சட்டம் ரத்து செய்யவேண்டும் என்ற உ.பி. ஆலோசனை குழு பரிந்துரைத்தது படி அது விரைவில் அமல் படுத்தப்பட வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தா. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் வருண் மீதான தே.ப., சட்டத்தை நீக்கி உத்தரவிட்டனர்.

தமிழகத்தில் 3இடங்களில் நாளை மறுவாக்குப்பதிவு

india-elc.jpgதமிழகத்தில் 39 தொகுதிகளிலும், புதுச்சேரியிலும் நேற்று மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது.  இதில் 3 வாக்குச்சாவடிகளில் ஏற்பட்ட குளறுபடியால்  மறு வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது.

அதன்படி பொள்ளாச்சி, அரக்கோணம், சேலம் தொகுதிகளில் தலா ஒரு வாக்குச்சாவடிகளில் நாளை மறு வாக்குப்பதிவு நடக்க உள்ளது. காலை 7மணி முதல் மாலை 5மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியின் கோரிக்கையை ஏற்றாவது புலிகள் சரணடையவேண்டும் – கோஹன

palitha_koahana.jpgவிடுதலை புலிகள் ஆயுதங்களை கீழே வைக்கவேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா வலியுறுத்தியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதியின் கோரிக்கையை ஏற்றாவது புலிகள் ஆயுதங்களை களைந்து சரணடைவார்கள் என்று எதிர்பார்க்கிறோம் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித்த கோஹன தெரிவித்துள்ளார்.

இலங்கை விவகாரம் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா வெளியிட்டுள்ள கருத்துக்கள் தொடர்பிலேயே பாலித்த கோஹன இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், புலிகள் ஆயுதங்களை கீழே வைத்து சரணடையவேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

அத்துடன் பல சர்வதேச நாடுகளும் புலிகள் ஆயுதங்களை கைவிட்டு சரணடையவேண்டும் என்று கோரிக்கை விடுத்துவருகின்றன. இலங்கை அரசாங்கமும் இந்த கோரிக்கையையே முன்வைத்துவருகின்றது.

தற்போதைய நிலைமையில் சர்வதேச சமூகம் கடுமையான தொனியில் புலிகளுக்கு அழுத்தம் தெரிவித்து வருகின்றது. எனவே சர்வதேசத்தின் கோரிக்கைக்கு தற்போதைய நிலைமையிலாவது புலிகள் இணங்கி அரசாங்கப் படையினரிடம் சரணடையவேண்டும் என்றார்.

3ஆவது நாளாகவும் கிறீன் ஓசியன் கப்பல் முள்ளிவாய்க்கால் நோக்கி பயணம்

ship.jpgமூன்றாவது நாளாகவும் உணவுப்பொருட்களை ஏற்றிக் கொண்டு முள்ளிவாய்க்கால் பகுதிக்கு கிறீன் ஓசியன் கப்பல் பயணிக்கிறது. 500 தொன் உணவுப் பொருட்களுடன் ஓரியன்டல் பிரின்சஸ் கப்பல் புறப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தொடர்ச்சியாக இரண்டு தினங்கள் முயன்றும் முள்ளிவாய்க்கால் பகுதியைச் சென்றடைய முடியாமல் திருகோணமலைக்குத் திரும்பிய கிறீன் ஓசியன் கப்பல் இன்று காலை மீண்டும் முல்லைத்தீவு பகுதிக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளதாக ஐசிஆர்சியின் தகவல் அதிகாரி சரசி விஜேரட்ண தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் கவுன்சிலின் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

muslim_council_donation.jpgவடக்கிலிருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு வழங்குவதற்காக முஸ்லிம் கவுன்சிலினால் சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் இன்று ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவிடம் கையளிக்கப்பட்டன. இது தொடர்பான வைபவம் இன்று முற்பகல் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இவ்வைபவத்தில் கலந்துகொண்ட முஸ்லிம் கவுன்சிலின் பிரதிநதிகள் 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான நிவாரணப் பொருட்களை அமைச்சரிடம் கையளித்தனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா,  இலங்கையிலுள்ள முஸ்லிம் அமைப்புக்களின் ஒன்றியமான முஸ்லிம் கவுன்சில் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்தோருக்கு ஏற்கனவே பல இலட்சம் ரூபாய் பெறுமதியான நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளது. இன்று 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளனர். இதற்காக அந்த அமைப்புக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் எனக் கூறினார்.

பகலிரவு டெஸ்ட் போட்டியை நடத்த ஐ.சி.சி. ஆலோசனை

28icc.jpgசர்வதேச கிரிக்கெட் கௌன்ஸில் பகலிரவு டெஸ்ட் போட்டியை நடத்துவது குறித்து பரிசீலித்து வருகிறது. லண்டனில் கிளைவ் லொயிட் தலைமையில் சர்வதேச கிரிக்கெட் கௌன்ஸிலின் கிரிக்கெட் குழு கூட்டம் ஆரம்பமானது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தின் போதே பகலிரவு டெஸ்ட் போட்டிகளை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.

பார்வையாளர்களின் வருகையை அதிகரிக்கும் வகையில் ஒருநõள் போட்டிகளை போன்று டெஸ்ட் போட்டிகளையும் பகலிரவு ஆட்டங்களாக நடத்தலாம் எனும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும், டெஸ்ட் போட்டிகளில் நடுவர்களின் முடிவை எதிர்த்து முறையீடு செய்ய வாய்ப்பளிக்கும் முறையை தொடர்வது குறித்தும் அலோசிக்கப்படவுள்ளது. தற்போது இந்த முறை பரிசோதனை முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று இது குறித்து முடிவு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது

இந்த குழுவின் பரிந்துரை கிரிக்கெட் கௌன்ஸிலின் முதன்மை குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும். ஜூன் மாத இறுதியில் இந்த குழு கூடி இறுதி முடிவு எடுக்கும்.

நலன்புரி நிலையங்களுக்கு ‘யூனிசெப்’ 1000 மலசலகூடங்கள் அன்பளிப்பு

unicef.jpgஅரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குத் தப்பி வந்து வவுனியாவில் உள்ள நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளோருக்கு 1000 மலசலகூடங்களை அமைத்துக் கொடுக்க  ‘யுனிசெப்’ நிறுவனம் முன்வந்துள்ளதாக மீள்குடியேற்ற மற்றும் அணர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அமைச்சின் செயலாளர் யு.எல்.எம். ஹால்தீன் தெரிவிக்கையில், வவுனியாவிலுள்ள இடம்பெயர்ந்தோருக்கு மலசலகூட வசதிகளைச் செய்துகொடுப்பது தொடர்பான பேச்சுவார்த்தையொன்று , அமைச்சர் றிஷாத் பதியுதீன் தலைமையில் இடம்பெற்றது. மீள்குடியேற்ற அமைச்சில் இடம்பெற்ற இப்பேச்சுவார்த்தையில் யுனிசெப் நிறுவனத்தின் உயரதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

வவுனியாவில் உள்ள நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்தோருக்கு அரசாங்கம் சகல வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. அவர்களது தேவைகள் இனங்காணப்பட்டு நாளாந்தம் அவை நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த அடிப்படையில் யுனிசெப் நிறுவனத்தினால் வழங்கப்படவுள்ள 1000 மலசலகூடங்கள் முதற்கட்டமாக தற்போது இயங்கி வரும் நலன்புரி நிலையங்களிலேயே அமைக்கப்படும். இவ்வாறு அமைக்கப்பட்டு எஞ்சுகின்றவை புதிதாக அமைக்கப்படவுள்ள நிவாரணக் கிராமங்களுக்கு வழங்கப்படும் எனக் கூறினார்.

காங். எதிராக பிரசாரம் செய்த சீமான் விரட்டியடிப்பு

india-elc.jpg
காரைக்குடியில் ஒரு வாக்குச் சாவடிக்கு வந்து இலங்கைத் தமிழர்களுக்கு காங்கிரஸ் துரோகம் செய்துவிட்டதாகக் கூறி, அதிமுகவுக்கு வாக்களிக்குமாறு பிரசாரம் செய்த இயக்குனர் சீமானை திமுகவினரும் காங்கிரஸாரும் விரட்டியடித்தனர்.

வாக்குச் சாவடிக்கு அருகே வந்த சீமான், காங்கிரஸ் வேட்பாளர் ப.சிதம்பரத்துக்கு வாக்களிக்காதீர்கள், அதிமுகவுக்கு வாக்களியுங்கள் என்று அங்கிருந்த மக்களிடம் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த சிதம்பரத்தின் ஆதரவாளர்களும் திமுகவினரும் அவரைச் சுற்றி வளைத்தனர். பின்னர் அவரை அங்கிருந்து விரட்டியடித்தனர். அடிதடி நடக்கும் சூழல் ஏற்பட்டதால் பொலிஸார் அவரை ஒரு ஜீப்பில் அழைத்துச் சென்று தூர இடத்தில் இறக்கி விட்டுவிட்டு வந்தனர். இதையடுத்து தனது சொந்த ஊரான அரணையூர் சென்று வாக்களித்தார் சீமான்.

அமீருக்கு வாக்கு இல்லை…

அதே போன்று இலங்கைத் தமிழர் விஷயத்தில் தீவிரம் காட்டி வரும் இன்னொரு இயக்குனரான அமீரின் குடும்பத்தினர் மதுரை கே.கே. நகரில் ஒரு அபார்ட்மென்டில் வசிக்கின்றனர். ஆனால் இம்முறை வாக்காளர் பட்டியலில் அமீரின் பெயர் இல்லை. இதனால் வாக்களிக்க வந்த அவர் வாக்களிக்க முடியாமல் திரும்பினார்.

புலிகளின் முயற்சி படையினரால் முறியடிப்பு – பிரிகேடியர் உதய நாணயக்கார

udaya_nanayakkara_brigediars.jpgபடையினரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள்ளிருக்கும் முல்லைத்தீவு, சரவாத்தோட்டம் பிரதேசத்தைக் மீண்டும் கைப்பற்றுவதற்காக விடுதலைப் புலிகள் இன்று அதிகாலை மேற்கொண்ட முயற்சி இராணுவத்தினரால் முறியடிக்கப்பட்டுள்ளது என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். சுமார் நான்கு மணித்தியாலங்கள் வரை நீடித்த இந்த முறியடிப்புத் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் மூன்று தற்கொலைப் படகுகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் ஒரு படகு கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன் மேலும் சில படகுகள் பகுதியளவில் சேதமாக்கப்பட்டுள்ளன. இதில் புலிகள் தரப்புக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

இது தொடர்பில் இராணுவ பேச்சாளர் மேலும் கூறியதாவது சரவாத்தோட்டம் பகுதியில் நிலைக்கொண்டுள்ள படையினரின் பாதுகாப்பு அரணைத் தகர்த்து அந்தப் பகுதியைக் கைப்பற்றுவதற்கான முயற்சியிலேயே விடுதலைப் புலிகள் இன்று அதிகாலை முயற்சித்தனர். இதில் நான்கு தற்கொலைப் படகுகள், 15 தற்கொலைக் குண்டுதாரிகள், உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்கள் ஈடுபட்டிருந்தனர்.

நேற்று இரவு 9 மணிமுதல் அதிகாலை 1.30 வரையான சுமார் நான்கு மணிநேரமாக இடம்பெற்ற படையினரின் இந்த முறியடிபபுத் தாக்குதலில் விடுதலைப் புலிகள் தரப்புக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் பணியாளர் ஷெல் தாக்குதலில் பலி

medical_lorry.jpgசர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் பணியாளர் ஒருவர் மோதல் இடம்பெறும் பகுதியில் ஷெல் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.ஷெல் தாக்குதலில் உயிரிழந்தவர் நீர் விநியோகம் தொடர்பான தொழில்நுட்பவியலாளராக கடமையாற்றியவர் என சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.

ஒரு பிள்ளையின் தந்தையான இவரும், இவரது தாயாரும் ஷெல் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மோதல் வலயத்தில் இதுவரை சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் 3 பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர்.