கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

புலிகளின் தளபதிகள் சொர்ணம், சசிமாஸ்டர் நேற்று தாக்குதலில் பலி

udaya_nanayakkara_brigediars.jpgபுலிகளின் முக்கிய சிரேஷ்ட தளபதிகளான சொர்ணம் மற்றும் சசி மாஸ்டர் ஆகிய இருவரும் நேற்றுக் கொல்லப்பட்டனர்.

வெள்ளமுள்ளி வாய்க்கால் பிரதேசத்தில் நிலை கொண்டுள்ள பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதல்களிலேயே இவர்கள் இருவரும் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

பாதுகாப்பு வலயத்திற்குள் முடக்கப்பட்டுள்ள பிரபாகரனையும் அவரது முக்கிய சகாக்களையும் இலக்கு வைத்து படையினர் தாக்குதல் நடத்திய வண்ணம் முன்னேறி வருவதாகவும் இறுதிக்கட்ட நடவடிக்கை வெற்றியளித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வருணை எதிர்த்த அனைவரின் டெபாசிட் காலி

varun.jpgஉ.பி.  மாநிலம் பிலிபிட் தொகுதியில் வருண் காந்தி போட்டியிட்ட பிலிபித் தொகுதியில் வருண் காந்தியைத் தவிர மற்ற அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் தொகையை இழந்தனர். இவர்களில் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் வேட்பாளர்களும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

வருண் காந்தி இத்தேர்தலில் 4,19,539 வாக்குகள் பெற்று, 2,81,501 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.காங்கிரஸ் கட்சிக்கு 2வது இடமும், சமாஜ்வாடிக் கட்சிக்கு 3வது இடமும், பகுஜன் சமாஜ் கட்சிக்கு 4வது இடமும் கிடைத்தது. வருண் காந்தியைத் தவிர மற்ற வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர்.

சோனியாகாந்தி அமோக வெற்றி

06-sonia.jpgஉத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 3 – 3/4 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவருக்கு 4 லட்சத்து 81 ஆயிரத்து 490 ஓட்டுகள் கிடைத்தன.  இது, இந்த தொகுதியில் சோனியாகாந்தி பெற்ற 3-வது வெற்றியாகும்.

சோனியாவை எதிர்த்து போட்டியிட்ட பகுஜன் சமாஜ் வேட்பாளர் குஷ்வாகா 2 லட்சத்து 9 ஆயிரத்து 324 வாக்குகள் பெற்றார். மேலும் களத்தில் இருந்த 15 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.  ரேபரேலி தொகுதி,  மறைந்த இந்திராகாந்தி, பெரோஸ் காந்தி ஆகியோர் போட்டியிட்ட தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

”தலைவர் வே பிரபாகரன் பொட்டம்மான் உள்ளே” சூசையின் மனைவி – ”புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும்.” அமெரிக்க அதிபர் – ”நாங்கள் எதுவும் செய்யத் தயாராக இருக்கிறோம்.” எஸ் பத்மநாதன் எல்ரிரிஈ

Obama_President_of_AmericaSelvarasa_Pathmanathan_LTTE

”I urge the Tamil Tigers to lay down their arms.” US President. ”we are ready to anything” S. Pathmanathan, LTTE.

”நாங்கள் எதுவும் செய்யத் தயாராக இருக்கிறோம்.” என்று எல்ரிரிஈ சர்வதேசப் பொறுப்பாளர் இன்று அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு வெளிப்படையாகத் தெரிவித்து இருக்கிறார். சில தினங்களுக்கு முன் எல்ரிரிஈ ஆயுதங்களை ஒப்படைக்க  வேண்டும் என்று அமெரிக்க அதிபர் விடுத்த வேண்டுகோளுக்கு இந்தியத் தேர்தல் முடிவுவரை காத்திருந்து விட்டு தற்போது ‘நாங்கள் எதுவும் செய்யத் தயாராக இருக்கிறோம்’ என எல்ரிரிஈ தெரிவித்து உள்ளது. தமிழ் மக்களைக் காப்பாற்றுவதற்காக நாங்கள் எதுவும் செய்யத் தயாராக இருப்பதாக செல்வராஜா பத்மநாதன் தெரிவித்து உள்ளார்.

இதற்கிடையே நேற்று (மே 15 2009) கைது செய்யப்பட்ட கடற்புலிகளின் தளபதி சூசையின் மனைவி வழங்கிய தகவல்களின் படி எல்ரிரிஈ தலைவர் வே பிரபாகரன் புலனாய்வுப் பிரிவுப்பொறுப்பாளர் பொட்டு அம்மான் ஆகிய முக்கிய தலைவர்கள் இன்னமும் அங்கேயே இருப்பதாகத் உள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவிக்கின்றது.

எல்ரிரிஈ சர்வதேசப் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் அமெரிக்க அதிபருக்கு அளித்துள்ள பதிலின்படி எல்ரிரிஈ தங்களால் பணயம் வைக்கப்பட்டவர்கள் அனைவரையும் விடுவிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம் எல்ரிரிஈ தங்கள் ஆயுதக் கிடங்குகளை வெடிக்க வைப்பதாகவும் அவர்கள் பெரும் கூட்டுத் தற்கொலைக்குத் தாக்குதலுக்கு தயாராகலாம் எனவும் இலங்கை இராணுவப் பேச்சாளர் தெpரிவத்து உள்ளார். இன்று வெடிமருந்து நிரப்பிய பஸ் வண்டி ஒன்றை புலிகள் 58வது படையணியை நோக்கி ஓட்டி வந்ததாகவும் அது இலக்கை அடைய முன்னரே வெடித்ததாகவும் அவ் இராணுவ அதிகாரி தெரிவிக்கின்றார். இவ்வாறான பல தற்கொலைத் தாக்குதல் முயற்சிகள் இடம்பெற்றுள்ளதாக இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர்.

Relted News & Articles:

‘புலிகள் ஆயுதங்களைப் போட்டு சரணடைய வேண்டும்!’ யுஎன் பாதுகாப்புச் சபை

”புலிகள் ஆயுதங்களைக் கைவிடுவது நிரந்தரத் தீர்வுக்கு அவசியம்” பிரான்ஸ் – பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர்கள் அறிக்கை – புலிகளின் கையில் ஆயுதம்? : த ஜெயபாலன்

”எமது மக்களது பாதுகாப்பின் நிமிர்த்தமே ஆயுதம் தரித்தோம், ஆகையால் அவர்கள் பேரில் அவற்றினை களையவும் தயாராக இருக்க வேண்டும்.” : ரவி சுந்தரலிங்கம்

”ஆயுதங்களை சர்வதேச கண்காணிப்பில் வைத்துவிட்டு புலிகள் பேச்சுவார்த்தைக்கு முன்வருவதை வரவேற்கிறோம்” சிவாஜிலிங்கம் – நேர்காணல் : ரி சோதிலிங்கம் & த ஜெயபாலன்

._._._._._.

அமெரிக்க அதிபர் விடுத்த வேண்டுகோள் :

”we have a humanitarian crisis that’s taking place in Sri Lanka, and I’ve been increasingly saddened by the desperate news in recent days. Tens of thousands of innocent civilians are trapped between the warring government forces and the Tamil Tigers in Sri Lanka with no means of escape, little access to food, water, shelter and medicine. This has led to widespread suffering and the loss of hundreds if not thousands of lives.

Without urgent action, this humanitarian crisis could turn into a catastrophe. Now is the time, I believe, to put aside some of the political issues that are involved and to put the lives of the men and women and children who are innocently caught in the crossfire, to put them first.

So I urge the Tamil Tigers to lay down their arms and let civilians go. Their forced recruitment of civilians and their use of civilians as human shields is deplorable. These tactics will only serve to alienate all those who carry them out.

I’m also calling on the Sri Lankan government to take several steps to alleviate this humanitarian crisis. First, the government should stop the indiscriminate shelling that has taken hundreds of innocent lives, including several hospitals, and the government should live up to its commitment to not use heavy weapons in the conflict zone.

Second, the government should give United Nations humanitarian team access to the civilians who are trapped between the warring parties so that they can receive the immediate assistance necessary to save lives.

Third, the government should also allow the United Nations and the International Committee of the Red Cross access to nearly 190,000 displaced people within Sri Lanka so that they can receive additional support that they need.

The United States stands ready to work with the international community to support the people of Sri Lanka in this time of suffering. I don’t believe that we can delay. Now is the time for all of us to work together to avert further humanitarian suffering.

Going forward, Sri Lanka must seek a peace that is secure and lasting, and grounded in respect for all of its citizens. More civilian casualties and inadequate care for those caught in resettlement camps will only make it more difficult to achieve the peace that the people of Sri Lanka deserve.”

The United United States President Barrack ObamaStates president Barrack Obama.

._._._._._.

எல்ரிரிஈ இன் சர்வதேசப் பொறுப்பாளர் விடுத்த பதில்: (தமிழ்நெற்றில் இருந்து)

“The situation in Vanni has reached colossal proportions and what is happening there is unprecedented human carnage. At this juncture we are ready to anything that is necessary to save the Tamil people trapped in the unrelenting war that is waged on them. We heed the call by the US President and are prepared to take measures that will spare the life of our people, The international community now has to act with fairness and openness and should take full responsibility for the people who are being targeted with no mercy or dignity,

LTTE is extremely mindful of the civilian hardships and is prepared to take all necessary measures that would immediately stop the current carnage. The president’s call for stopping the humanitarian crisis has been heard by the LTTE and is willing to heed to his call. The international community now has to act with fairness and openness and should take full responsibility for the people who are being targeted with no mercy or dignity. Our people are now at the mercy of the international community and it has to take full responsibility for the future of our people. We call on the Sri Lankan Government too to take note of the President’s call and do everything possible to stop a blood bath unfolding.

The LTTE has relentlessly fought for the rights of our people for over three decades and will always do what is best for them. President Obama’s recent remarks gives us hope that at last he has taken an active interest in the plight of our people. A military solution will not end the current conflict. A lasting, respectful and equitable solution for our people can only be reached through political means. We have always shown our preparedness to enter a political process as long as all parties were willing to act faithfully to the process.

Encouraged by the hopeful words of President Obama the LTTE is again stating its categorical position to enter a political process facilitated by neutral international parties and find a meaningful solution to the ethnic crisis. It is the best option for all people living in the island of Sri Lanka. Both the Sri Lankan Government and us, we together have to find a solution and a way to resolve the crisis. An onslaught by the Government will only result in thousands more dying and will not pave a way for a dignified and respectful outcome. We are ready to cooperate and work towards peace as Mr Obama has insisted.”

S. Pathmanathan, Head of LTTE’s International Diplomatic Relations.

சுனாமி போல பாய்ந்து வந்த பணத்தால் சாகடிக்கப்பட்ட ஜனநாயகம்-வைகோ

vaiko00001.jpgதமிழகத்திலும், புததுவையிலும் திமுக, காங்கிரஸ் கூட்டணி சுனாமி வெள்ளமாக செலுத்திய ஊழல் பணத்தால் ஜனநாயகம் சாகடிக்கப்பட்டு விட்டது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தேர்தல் முடிவு குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை..

தமிழகத்திலும், புதுவையிலும் திமுக, காங்கிரஸ் கூட்டமி சுனாமி வெள்ளமாக செலுத்திய ஊழல் பணத்தால் பல தொகுதிகளில் ஜனநாயகம் சாகடிக்கப்பட்டது. இருப்பினும், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் தலைமையில் அமைந்த இந்த கூட்டணி பெற்ற வெற்றி ஜனநாயகத்திற்கு சூட்டப்பட்ட மகுடமாகும்.

விருதுநகர் தொகுதியில், எனது வெற்றிக்காக பாடுபட்ட கூட்டணிக் கட்சியினருக்கும், எனக்காக வாக்களித்த வாக்காளர்களுக்கும் எனது நன்றிகள். கூட்டணியின் நலன் காக்கவும், ஈழத் தமிழர் துயர் துடைக்கவும், இந்திய ஜனநாயகத்திற்கு வலுவூட்டவும், முன்பை விட முனைப்புடன் செயல்படுவோம் என்று கூறியுள்ளார் வைகோ.

மன்மோகன் தான் மீண்டும் பிரதமர்: சோனியா

06-sonia.jpgபாராளுமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 256 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பெருவாரியான வெற்றியை பெற்றுள்ளது காங்கிரஸ் கூட்டணி.

இதனால் இன்று காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  ‘’காங்கிரஸ் கூட்டணி மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நன்றி.  சரியான முடிவையே எடுத்திருக்கிறார்கள்.   மன்மோகன்சிங்தான் மீண்டும் இந்தியாவின் பிரதமர்.

இதில் எந்தவித மாற்றமும் இல்லை’’ என்று உறுதியாக தெரிவித்தார்

ராகுல்காந்தியும் அமைச்சரவையில் இடம்பெறுவார்: மன்மோகன்சிங்

karunanithi-apalo-hos1.jpgபாராளுமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 256 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பெருவாரியான வெற்றியை பெற்றுள்ளது காங்கிரஸ் கூட்டணி. இதனால் இன்று  பிரதமர் மன்மோகன்சிங் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது,   ‘’சோனியா, ராகுல் மீது மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.  அதனால் தான் வெற்றீயை தந்திருக்கிறார்கள். அமைச்சரவையில் ராகுல்காந்தியும் இடம்பெறூவார்.   மதச்சார்பற்ற கட்சிகள் அனைத்தும் ஒன்று சேரவேண்டும்’’ என்று தெரிவித்தார்.

எல்ரிரிஈ இன் பிளக் சற்றடே – Black Saturday : இந்தியா தேர்தல் முடிவு : த ஜெயபாலன்

Pirabakaran_VIndian_Election1.
எல்ரிரிஈ இன் பிளக் சற்றடே இன்று என்றால் மிகையல்ல. இந்தியத் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று நம்பி ஒரு துண்டுநிலத்தை தேர்தல் வரை தக்க வைத்துக் கொண்ட எல்ரிரிஈ க்கும் அதன் ஆதரவு சக்திகளுக்கும் பேரிடியாகி உள்ளது தமிழகத் தேர்தல் முடிவு. மேலும் கடந்த கால்நூற்றாண்டாக தமது கட்டுப்பாட்டில் ஏதாவது ஒரு பிரதேசத்தை வைத்திருந்த எல்ரிரிஈ இன்று தனது இறுதித் துண்டு நிலத்தையும் இழந்துகொண்டு உள்ளது.

எல்ரிரிஈ அனைத்துலக தொடர்பக பேச்சாளர் திலீபனதும் சர்வதேசப் பேச்சாளர் செல்வராஜா பத்மநாபனதும் கடைசி வேண்டுகோள்களும் பலனளிக்காத நிலையில் இந்திய – தமிழக தேர்தல் முடிவுகளும் எல்ரிரிஈ இன் எதிர்பார்ப்பிற்கு மாறாக வந்துகொண்டு உள்ளது. மீண்டும் மத்தியில் காங்கிரசும் தமிழகத்திலும் திமுகவும் ஆட்சியமைக்கலாம் என்றே இதுவரை வெளியான தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன. ‘மம்மியின் வரவுக்காக காத்திருந்த தம்பி’ இத்தேர்தலில் ‘மம்மி’யைத் தொலைத்துவிட்hர். இதனாலும் இலங்கை இராணுவம் ஈட்டியுள்ள இராணுவ வெற்றியினாலும் ‘தம்பி’யின் நிலை அவருடைய அரசியல் எதிர்காலம் மிகுந்த நெருக்கடிக்குள் தள்ளப்பட்டு உள்ளது.

திரையுலகத்தையும் வைக்கோ போன்ற சில அரசியல் தலைவர்களையும் நம்பி பணம் கட்டிய எல்ரிரிஈ தமிழ் நாட்டு மக்களிடம் நெற்றியடி வாங்கி உள்ளனர். தமிழ் நாட்டு மக்களுடைய தேர்தலை தமிழீழத்திற்கான வாக்கெடுப்பாக பிச்சாரம் பண்ணி இன்று தாமே தமக்கு மண்ணள்ளிப் போட்டு உள்ளனர். மக்கள் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் வை கோ பதினேழாயிரத்திற்கும் அதிகமான வாக்குகளால் தோல்வி அடைந்தார். காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் துடைத்தெறியப்படும் என்று முழங்கிய நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக் தாகூரிடம் வைக்கோ தோல்வி அடைந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைப் பிரச்சினையை மட்டும் வைத்துக் கொண்டு தமிழகத்தில் அரசியல் செய்ய முற்பட்டவர்களுக்கு தமிழக மக்கள் வழங்கியுள்ள அரசியல் பாடமாகவே இது அமைந்து உள்ளது. அயல்நாட்டு அரசியலை வைத்துக் கொண்ட இன உணர்வுகளைத் தூண்டிய அரசியல் தலைவர்களுக்கு தமிழக மக்கள் கன்னத்தில் பளீர் என்று அறைந்துள்ளனர்.

இத்தேர்தல் முடிவுகளை வைத்தக் கொண்டு தமிழக மக்கள் இலங்கைத் தமிழர்களுக்கு எதிராகச் செயற்பட்டுவிட்டார்கள் என்ற பிரச்சாரத்தை எல்ரிரிஈ ம் அதன் ஊடகங்களும் கட்டவிழ்த்துவிடும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் தமிழக மக்கள் இலங்கைப் பிரச்சினைக்கு வாக்களிக்வில்லை என்பதே உண்மை. அவர்களுக்கு உள்ள அரசியல் தெரிவு மிகவும் மட்டுப்படுத்தப்பட்டது. திமுக – அதிமுக என்ற எல்லைக்கு அப்பால் அவர்களுக்கு பெரிதாக வேறு தெரிவுகள் இல்லை. அதனால் தவிர்க்க முடியாமல் இவ்விரு கட்சிகளில் ஒன்றே ஆட்சியமைக்கின்றன. இதற்குள் குறுக்கு வழியில் இலங்கையில் நடைபெறும் மனித அவலங்களைக் கொண்டு தங்கள் வாக்கு வங்கிகளை நிரப்ப முற்பட்டவர்களுக்கு இத்தேர்தல் மிகப்பெரும் ஏமாற்றமே.

2005ல் ஆட்சிக்கு வந்த மகிந்த அரசு புலிகளை அழிப்பதற்கான புரஜக்ற் பீக்கன் திட்டத்தை வடிவமைத்த போது தமிழகத் தேர்தல் இருப்பதை அவர்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை. புரஜக்ற் பீக்கனின் இரண்டாவது கட்டம் ஏப்ரல் 30 முடிவடையும் என்று திட்டமிடப்பட்ட போது அதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்கிய இந்தியா, இது தனது தேர்தலைப் பாதிக்காது என்பதை சரியாகவே கணித்து உள்ளது என்றே சொல்லலாம். தமிழின உணர்வாளர்கள் வெத்து வேட்டுக்கள் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டு உள்ளது.

ஏப்ரல் 30 முடிவுக்கு வர வேண்டிய இலங்கை அரசின் புரஜக்ற் பீக்கன் 16 நாட்களே பிந்தியுள்ளது. இராணுவ ரீதியில் திட்டம் வகுத்து குறித்த கால எல்லைக்குள் அதனை நிறைவேற்றும் அளவிற்கு இலங்கை இராணுவம் சிறப்புத் தேர்ச்சி பெற்றுள்ளதையும், அதற்கு சர்வதேச ஆதரவு இருப்பதையும் எல்ரிரிஈ கணிக்கத் தவறிவிட்டுள்ளது. புரஜக்ற் பீக்கன் திட்டத்தை இரு ஆண்டுகளுக்கு முன்னரேயே எல்ரிரிஈ அறிந்திருந்த போதும், அவர்களிடம் இருந்த அதீத நம்பிக்கையும் தமிழக தமிழ் இன உணர்வாளர்கள் மற்றும் புலம்பெயர் புலி ஆதரவு சக்திகளில் இருந்த நம்பிக்கையும் அவர்களை ஒரு மாயைக்குள் தள்ளி இருந்ததாகவே கருத முடிகிறது. ஆயுதங்களை வாங்குவது போல் சில தலைவர்களையும் மக்களையும் நினைத்தவுடன் வாங்கி விடலாம் என்ற எண்ணத்திற்கு தமிழகத் தேர்தல் சிறந்த பாடமாக அமைய உள்ளது.

Wanni_War2.
நேற்று (15 மே 2009) முதல் இன்று (16 மே 2009) மதியம் வரை 20000க்கும் அதிகமான மக்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்துள்ளனர். இவர்களில் புலிகளின் கடற் தளபதி சூசையின் மனைவி பிள்ளைகள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் 11 பேரும் அடங்குகின்றனர். எல்ரிரிஈ சார்பு ஊடகங்கள் வன்னியில் கொல்லப்பட்ட மக்களின் அவலங்கைளக் கொண்டு தங்கள் பிரச்சாரங்களை முடக்கிவிட, வெளியேறும் மக்களின் நேரடியான காட்சிகள் இலங்கைத் தொலைக்காட்சிகளில் தொடர்ச்சியாக ஒலி பரப்பப்பட்டுக் கொண்டு உள்ளது. இவ்விரண்டு பிரச்சாரக் காட்சிகளும் அம்மக்கள் எவ்வளவு கொடுமையான சூழலுக்குள் வாழ நிர்ப்பத்திங்கப்பட்டு இருந்தார்கள் என்பதை உலகுக்கு எடுத்துக் காட்டுகின்றனன.

இன்று மதியம் வரை 12000 பேர்வரை இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளதாக வன்னியில் இருந்து கிடைக்கும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. எல்ரிரிஈ தங்களது கட்டுப்பாட்டுப் பகுதியில் 165000 பேர் உள்ளனர் என்று குறிப்பிட்ட போதும் 50,000 வரை அங்கு இருந்திருக்கலாம் என ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிட்டு இருந்தது. தற்போது 20000 மக்கள் வெளியேறிய போதும் யுத்தப் பகுதியில் இன்னமும் பல்லாயிரக் கணக்கானோர் இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது.

50000 இராணுவம் ஒரு சில கிலோமீற்றரைச் சுத்தி உள்ள நிலையில் எல்ரிரிஈக்கு தொடர்பில் இருந்த சிறு கடற்பரப்பும் தற்போது இராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. தற்போது 500 சதுர மீற்றர் பகுதிக்கு உள்ளேயே எல்ரிரிஈ குறுக்கப்பட்டு உள்ளது. பெரும்பாலும் தாக்குதல்கள் மந்தமடைந்து உள்ளதால் பாரிய உயிரிழப்புகள் இன்று ஏற்படவில்லை என அங்கிருந்து கிடைக்கும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் ஜனவரி முதலான மூன்று மாத காலப்பகுதியில் 8000 வரையான பொதுமக்கள் கொல்லப்பட்டு உள்ளதாகவும் அதனைப் போன்று பல மடங்கானோர் காயப்பட்டு உள்ளதாகவும் யுஎன் மதிப்பிட்டு உள்ளது.

யுத்தப் பகுதியில் இருந்து மீண்டு வருபவர்களுக்கு உடனடியான சமைத்த உணவுகளை வழங்குவதாக உலக உணவுத் திட்டம் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்து உள்ளது. பல நாட்கள் வாரத்திற்குப் பின் அவர்களுக்குக் கிடைக்கும் முதலாவது சமைத்த உணவு என உலக உணவுத் திட்டம் தெரிவிக்கிறது.

SL_Army_in_Final_Phase3.
தமிழ் மக்களுக்கு தங்கள் கெட்ட கனவிலும் தோண்றியிராத இந்தக் கொடுமையை இலங்கை இராணுவமும் எல்ரிரியும் சேர்ந்தே இழைத்துள்ளனர். வெளியேறி வருபவர்களின் வாக்குமூலங்கள் தமிழ் மக்களை மட்டுமல்ல சிங்கள முஸ்லீம் மக்களின் கண்களையும் குளமாக்கி உள்ளது. புலத்தில் உள்ளவர்கள் தங்கள் மண்ணை விட்டு வெளியேறிய இவர்களை துரோகிகளாக முத்திரை குத்த முற்பட தெற்கில் உள்ள சிங்கள முஸ்லீம் சமூகங்கள் தங்களாலான உடனடி உதவிகளுடன் ஆபத்தில் கைகொடுக்க வந்துள்ளனர்.

தங்களது போராட்டங்கள் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துவிட்டதாக புலகாங்கிதம் அடையும் புலத்தில் உள்ள போராட்டக்காரர்கள் அந்தக் கவனம் அந்தப் போராட்டத்தால் அல்ல அது அந்த மக்கள் தங்கள் உயிரைவிட்டு பெற்ற கவனயீர்ப்பு என்பதை மறந்துவிடுகின்றனர். எல்ரிரிஈ யும் அதன் ஆதரவு சக்திகளும் மக்களின் உயிரைப் பிழிந்து தான் போராடி முடியும் என்பதை ஒரு போராட்ட தந்திரமாகவே மேற்கொண்டிருந்தனர். புலத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொள்பவர்களுக்கே சமைத்த உணவை வருவித்து வழங்கியவர்கள், வாரங்களாக பட்டினிச்சாவில் இருந்து வரும் மக்கள் பற்றி எவ்வித அக்கறையும் கொண்டிருக்கவில்லை என்பதிலும் பார்க்க, அம்மக்களை இழிவுபடுத்துகின்ற முறையிலேயே செயற்பட்டனர். யுத்தத்தில் சிக்குண்ட மக்களின் நலனை எவ்விதத்திலும் பிரதிபலிக்காத புலத்து போராட்டங்கள் அர்த்தமற்றுப் போனதில் – பயனற்றுப் போனதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை.

இலங்கை முகாம்களுக்கு மே 5ம் 6ம் திகதிகளில் சென்று திரும்பிய எல்ரிரிஈ க்கு அனுதாபமான லிபிரல் டெமொகிரட் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பிபிசி ரெடியோ 4 ற்கு வழங்கிய நேர்காணலின் ஒரு பகுதி:

BBC Radio 4: A Group of MPs just returns from fact finding mission to Sri Lanka. We are joining one of them, Malcolm Bruce, the Liberal Democrat Chairs of International Affairs Select Committee. Good morning!

Malcolm Bruce, MP: Good morning!

BBC: What did you find?

Malcolm Bruce, MP: Horror stories in Britain about conditions in Sri Lanka camps housing hundreds of thousands of Tamil refugees are wrong. There may be shortages, but refugees I spoke to were happy to have escaped the fighting in the North.

BBC: You are just using the word, terrorists. It is a very loaded one. We are talking about the Tamil Tiger rebels here, Aren’t you?

Malcolm Bruce, MP: Well, I have to say these Tamil Tigers have assassinated many many Tamils including in and out of governments and the opposition parties and we had very credible evidence many of the people we met in camps to say they were threatened and shot at by their own side and told them if they try to leave the conflict zone their lives be at risk and in those circumstances, I think there is a clear indication that this is a divided community and the unless you end terrorism you can’t actually build the united Sri Lanka.

http://www.nowpublic.com/world/tamil-tigers-are-terrorists-malcolm-bruce-mp-2

நிலைமைகள் இவ்வாறு இருக்கையில் உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் முன்னிலைப்படுத்தி மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்கள் அர்த்தமற்றுப் போவதில் ஆச்சரியப்படுவதற்கில்லை. வன்னி முகாம்களில் பல்வேறு அடிப்படைப் பிரச்சினைகள் உண்டு. இலங்கை அரச படைகள் பல்வேறு மனித உரிமை மீறல்களை மேற்கொண்டுள்ளனர். பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்களின் உயிரிழப்புகளுக்கு இலங்கை அரசபடைகள் காரணமாக இருந்துள்ளன. அதேசமயம் இவை அனைத்திற்கும் எல்ரிரியும் காரணமாக இருந்த உள்ளது. ஆனால் புலத்தப் போராட்டங்கள் உண்மையான தகவல்களின் அடிப்படையில் அல்லாமல் அரசியல் சார்புநிலையுடன் செயற்பட்டதால் அவை வெறும் சலசலப்பையே ஏற்படுத்தின.

வன்னி மக்கள் எதிர்கொண்ட அவலத்திற்கு இலங்கை அரசும் எல்ரிரியும் சம பொறுப்புடையவர்கள். எல்ரிரிஈ பயங்கரவாதிகள் என்றும் இலங்கை அரசு சட்டரீதியானதும் என்று பார்த்தால் இலங்கை அரசு இந்த அவலத்திற்கு கூடுதல் பொறுப்பை ஏற்கவேண்டும். ஆனால் தமிழ் மக்களின் பக்கத்தில் நின்று பார்த்தால் வன்னி மக்களின் இந்த அவலத்திற்கு எல்ரிரிஈ யே கூடுதலான பொறுப்புடையவர்கள். தங்களை நம்பி வந்த வன்னி மக்களின் முதுகில் எல்ரிரிஈ குத்தியுள்ளது.

இலங்கை அரசு எல்ரிரிஈ இன் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதால் மட்டும் இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்ததுவிட முடியாது. இராணுவ ரிதியாக நிலப்பரப்பை வெற்றி கொள்வதும் கட்டுப்படுத்துவதும் ஒப்பீட்டளவில் இலகுவானது. ஆனால் அந்த நிலப்பரப்பில் உள்ள மக்களின் இதயங்களை வெல்வதன் மூலம் மட்டுமே இலங்கையில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த முடியும்.

எவ்வாறாக எல்ரிரிஈ யை விபரித்தாலும் அவர்களின் உருவாக்கத்திற்குக் காரணமாக இருந்தது இலங்கை அரசின் இனவாதப் போக்கு. இனம் காணப்பட்டு உள்ள அப்பிரச்சினைக்கு தீர்வினை முன்வைக்காமல் இலங்கை அரசு இலங்கையில் சமாதானத்தை எதிர்பார்க்க முடியாது. எல்ரிரிஈ அழிக்கப்பட்டால் இலங்கையில் சமாதானம் வந்துவிடும் என்பது அர்த்தமற்ற வாதம். இன்று மக்களுக்குள்ள உடனடிப் பிரச்சினை உயிரைப் பாதுகாப்பது. அதனால் அவர்கள் ஏனைய பிரச்சினைகள் இரண்டாம்தரமாக உள்ளது. ஆனால் எதிர்காலத்தில் ஏனைய பிரச்சினைகள் மீண்டும் முன்னிலைக்கு வருவது தவிர்க்க முடியாதது.

இதுவரை இலங்கை அரசு தனது மனிதத்துவத்திற்கு எதிரான அத்தனை செயற்பாடுகளுக்கும் எல்ரிரிஈ யை முன்னிறுத்தி அவற்றில் இருந்து தப்பிக் கொண்டது. இன்று முழு இலங்கையும் தனது கட்டுப்பாட்டில் இருப்பதாக இலங்கை அரசு பறைசாற்றுவதால் நாட்டின் சட்டம் ஒழுங்கிற்கு அரசு முழுமையான பொறுப்புடையது. எல்ரிரிஈ அங்கும் இங்குமாக மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதலை நடத்தக் கூடியதாக இருந்தாலும் அரசு சட்டம் ஒழுங்கை கடைப்பிடிக்க வேண்டிய கடமைப்பாடு உடையது.

இலங்கை அரசின் புரஜகற் பீக்கனின் மூன்றாவதும் இறுதியானதுமான கட்டம் அடுத்த ஜனாதிபதித் தேர்தல் வரை தொடர உள்ளது. எல்ரிரிஈ யைக் களையெடுக்கும் இத்திட்டம் மிகவும் சிரமமானது. இதில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை முன்வைத்து மக்களை அரசியல் ரிதியாக வென்றெடுக்காத வரை இதில் அரசு வெற்றிபெற முடியாது. அவ்வாறு செய்யாதபட்சத்தில் தமிழ் மக்கள் தொடர்ந்தும் இன ஒடுக்குமுறைக்கு உள்ளானால் அது தமிழ் மக்களை மீண்டும் எல்ரிரிஈ யை நோக்கித் தள்ளுவதாகவே அமையும். அவ்வாறான ஒடுக்குமுறை தொடருமானால் வன்னி முகாம்கள் எல்ரிரிஈ இன் விளைநிலங்களாக மாறினால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

எல்ரிரிஈ உடன் இராணுவ வெற்றியைக் கொண்டுள்ள அரசு எதிர்காலத்தில் மக்களை வென்றெடுக்க வேண்டிய கடுமையான சூழலை எதிர்கொள்ளும். இது தொடர்பாக ஐநா செயலாளர் நாயகத்தின் இனப்படுகாலையைத் தடுப்பதற்கான ஆலோசகர் பிரான்ஸிஸ் டெங் இன் கருத்து குறிப்பிடத்தக்கது.

”இந்தத் துருவ முரண்பாடு இன மத – அடையாளம் சார்ந்த ஆழமான பிளவைக் கொண்டது. இது வெல்பவர்கள் தோற்பவர்கள் என்பதில் முடிவுக்குவராது. இது இராணுவ வெற்றியுடன் மட்டும் முடிவுக்குவராது. சட்டப்படியான பிரச்சினைகளை வெளிப்படுத்தி தீர்வுகாணாமல் நீண்ட காலத்தில் இராணுவ வெற்றிகளை தக்க வைக்க முடியாது.”

ஐநா செயலாளர் நாயகத்தின் இனப்படுகாலையைத் தடுப்பதற்கான ஆலோசகர் பிரான்ஸிஸ் டெங்

”This polarizing conflict is identity–related, with ethnicity and religion as deeply divisive factors. It will not end with winners and losers, and it cannot be ended solely through a military victory that may not be sustainable in the long run unless legitimate grievances are addressed.”

Francis Deng. _ Special Adviser of the Secretary-General on the Prevention of Genocide.

2004 இந்திய பாராளுமன்ற தேர்தலின் முடிவு – மொஹமட் அமீன்

india-elc.jpgஒவ்வொரு மாநிலத்திலும் கடந்த 2004 பாராளுமன்ற தேர்தலின் போது கட்சிகள் பெற்ற ஆசனங்கள் விவரம் கீழே தரப்பட்டுள்ளன. 2009 இந்திய பாராளுமன்ற தேர்தலின் முடிவுகள் இன்று பிற்பகலின் பின் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு
மொத்த ஆசனங்கள் – 39-
தி.மு.க – 16,
காங்கிரஸ் – 10,
பா.ம.க – 5,
ம.தி.மு.க – 4,
இந்திய கம்யூ. – 2,
மார்க்சிஸ்ட் – 2

கேரளா
மொத்த ஆசனங்கள் – 20-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு – 12,
 இந்திய கம்யூனிஸ்டு – 3
கேரளா…..காங்கிரஸ் – 1,
மதசார்பற்ற ஜனதா தளம் – 1,
பிற கட்சிகள் – 3

ஆந்திரா
மொத்த ஆசனங்கள் – 42-
காங்கிரஸ் – 29,
தெலுங்கு தேசம் – 5,
தெலுங்கானா ராஷ்டிரீய சமிதி – 5,
பிற கட்சிகள் – 3

கர்நாடகா
மொத்த ஆசனங்கள் – 28-
பா.ஜனதா – 18.
காங்கிரஸ் – 8,
மத சார்பற்ற ஜனதா தளம் – 2

ஒரிசா
மொத்த ஆசனங்கள் – 21-
பிஜூ ஜனதா தளம் – 11
பா.ஜனதா – 7
காங்கிரஸ் – 2
ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா – 1

மே.வங்காளம்
மொத்த ஆசனங்கள் – 42-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு – 26
காங்கிரஸ் – 6
இந்திய கம்யூனிஸ்டு – 3
பார்வர்டு பிளாக் – 3
புரட்சி சோசலிஸ்ட் கட்சி – 3
திரிணாமுல் காங்கிரஸ் – 1

ஜார்கண்ட்
மொத்த ஆசனங்கள் – 14-
காங்கிரஸ் – 6
ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா – 4
ராஷ்டிரீய ஜனதா தளம் – 2
பா.ஜனதா – 1
இந்திய கம்யூனிஸ்டு – 1

சத்தீஷ்கார்
மொத்த ஆசனங்கள் – 11-
பா.ஜனதா – 10
காங்கிரஸ் – 1

கோவா
மொத்த ஆசனங்கள் – 2-
காங்கிரஸ் – 1
பா.ஜனதா – 1
மராட்டியம்
மொத்த ஆசனங்கள் – 48-
காங்கிரஸ் – 13
பா.ஜனதா – 13
சிவசேனா – 12
தேசியவாத காங்கிரஸ் – 9
இந்திய குடியரசு கட்சி-ஏ – 1

குஜராத்
மொத்த ஆசனங்கள் – 26-
பா.ஜனதா – 14
காங்கிரஸ் – 12

மத்தியபிரதேசம்
மொத்த ஆசனங்கள் – 29-
பா.ஜனதா – 25
காங்கிரஸ் – 4

ராஜஸ்தான்
மொத்த ஆசனங்கள் – 25-
பா.ஜனதா – 21
காங்கிரஸ் – 4

அரியானா
மொத்த ஆசனங்கள் – 10
காங்கிரஸ் – 9
பா.ஜனதா – 1

டெல்லி
மொத்த ஆசனங்கள் – 7
காங்கிரஸ் – 6
பா.ஜனதா – 1

பஞ்சாப்
மொத்த ஆசனங்கள் – 13
அகாலிதளம் – 8
பா.ஜனதா – 3
காங்கிரஸ் – 2

ஜம்மு-காஷ்மீர்-
மொத்த ஆசனங்கள் – 6
காங்கிரஸ் – 2.
ஜே.கே.என் – 2
பிற கட்சிகள் – 2

இமாசலபிரதேசம்
மொத்த ஆசனங்கள் – 4
காங்கிரஸ் – 3
பா.ஜனதா –

உத்தரகாண்ட்
மொத்த ஆசனங்கள் – 5
பா.ஜனதா – 3
காங்கிரஸ் – 1
சமாஜ்வாடி – 1

உத்தரபிரதேசம்
மொத்த ஆசனங்கள் – 80
மாஜ்வாடி – 35
பகுஜன் சமாஜ் – 19
பா.ஜனதா – 10
காங்கிரஸ் – 9
ராஷ்டிரீய லோக் தளம் – 3
பிற கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் – 4

பீகார்
மொத்த ஆசனங்கள் – 40
ராஷ்டிரீய ஜனதா தளம் – 22
ஐக்கிய ஜனதா தளம் – 6
பா.ஜனதா – 5
லோக், ஜனசக்தி – 4,
காங்கிரஸ் – 3

அசாம்
மொத்த ஆசனங்கள் – 14
காங்கிரஸ் – 9
பா.ஜனதா – 2
சாம் கணபரிஷத் – 2
சுயேச்சை – 1

மேகாலயா மொத்த ஆசனங்கள் – 2
காங்கிரஸ் – 1
திரிணாமுல் காங்கிரஸ் – 1

அருணாசலபிரதேசம் மொத்த ஆசனங்கள் – 2
பா.ஜனதா – 2

சிக்கிம் மொத்த ஆசனங்கள்- 1
சிக்கிம் ஜனநாயக முன்னணி – 1

திரிபுரா மொத்த ஆசனங்கள் – 2
மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு – 2

நாகாலாந்து மொத்த ஆசனங்கள்- 1
நாகாலாந்து முற்போக்கு முன்னணி – 1

மணிப்பூர் மொத்த ஆசனங்கள் – 2
காங்கிரஸ் – 1
சுயேச்சை – 1

மிசோரம் மொத்த ஆசனங்கள் – 1
மிசோரம் தேசிய முன்னணி – 1

னியன் பிரதேசங்கள்
புதுச்சேரி – பா.ம.க.
அந்தமான்-நிகோபார் – காங்கிரஸ்,
லட்ச தீவுகள் – ஐக்கிய ஜனதா தளம்
டாமன்-டையூ– காங்கிரஸ்
சண்டிகார் – காங்கிரஸ்
தத்ரா-நாகர்ஹவேலி – பி.என்.பி.

போர்ப்பகுதி மருத்துவர்களுக்கு அமைதி விருதுக்கு ஐ.நா பரிந்துரை

varatharaja.gifஇலங்கையில் 26 ஆண்டுகளாக நடந்து வரும் போர் ஒரு முடிவுக்கு வரும் கட்டத்தை எட்டியிருப்பது போல் தோன்றும் நிலையில் , அந்தப்பகுதியில் மிகவும் கடினமான சூழலில் பணியாற்றிவந்த வரதராஜா, சத்யமூர்த்தி போன்ற மருத்துவர்கள் பாராட்டப்படவேண்டியவர்கள், கௌரவிக்கப்படவேண்டியவர்கள் என்று ஐ.நா மன்ற இலங்கை அதிகாரி கோர்டன் வெயிஸ் கூறியுள்ளார்.

இது குறித்து பிபிசியிடம் பேசிய வெயிஸ், இந்த மருத்துவர்கள் இந்த கடினமான மாதங்களில் அப்பகுதியில் மருத்துவ சேவைகளை தன்னந்தனியாக நடத்தும் பொறுப்பை அவர்கள் சுமந்தார்கள். மருந்துகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் பற்றாக்குறை நிலவிய சூழலிலும், பெருந்தொகையான மக்கள் கொல்லப்பட்டு காயமடைந்த சூழலிலும் அவர்கள் தங்கள் பணியை தங்களால் முடிந்த மட்டில் செய்தார்கள். எனவே ஐ.நா மன்றம் அவர்களுக்கு அமைதி பரிசு தர சிபாரிசு செய்திருக்கிறது. அவர்களை பிப்ரவரியிலேயெ இந்த பரிசுக்கு சிபாரிசு செய்துள்ளோம். என்றார் கார்டன் வெயிஸ்.