கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

பிரபாகரனின் உடல் தகனம் செய்யப்பட்டு அஸ்தி இந்து சமுத்திரத்தில் எறியப்பட்டது- இராணுவத் தளபதி

fonseka-000.jpgதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உடலை இலங்கைப் பாதுகாப்புப் படையினர் தகனம் செய்து விட்டனர் என்று இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். சிங்கள வார இதழ் ஒன்றுக்கு அவர் பேட்டியளிக்கையில் மேற்கண்டவாறு கூறியதாக ஏ.எவ்.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜெனரல் சரத் பொன்சேகா மேலும் கூறுகையில், “முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம் பெற்ற கடும் தாக்குதலையடுத்து செவ்வாய்க்கிழமை காலை பிரபாகரனின் உடல் அடையாளம் காணப்பட்டது. நாம் அதே பிரதசத்தில் பிரபாகரனின் உடலைத் தகனம் செய்து அஸ்தியை இந்து சமுத்திரத்தில் எறிந்தோம். பிரபாகரன் இறக்கும் முன்னர் நாங்கள் யுத்தத்தில் வெற்றியடைந்து விட்டதாக நான் அறிந்து கொண்டேன். ஆனால், அவரது மரணம் ஊர்ஜிதமான பின்னர் நான் பெரு மகிழ்ச்சியடைந்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

“விஷ்வ கீர்த்தி ஸ்ரீ திரீசிங்கள தீஸ்வர” – ஜனாதிபதி மஹிந்தவுக்கு நாட்டின் அதி உயர் விருது

pr-kandy-dala.jpg“விஷ்வ கீர்த்தி ஸ்ரீதிரீசிங்கள தீஷ்வர” என்ற அதி உயர்விருது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நேற்று வழங்கப்பட்டது.

தீவிரவாதத்தை நாட்டிலிருந்து முற்றாக ஒழித்து எமது இலங்கை ஒரே நாடு என்பதை உறுதிப்படுத்தும் வகையில் முப்படைத் தளபதிகள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோரின் துணையுடன் வெற்றியை ஈட்டித் தந்தமைக்காக கண்டி அஸ்கிரிய, மல்வத்த பீடங்கள் இந்த விருதை வழங்கின.

இதே போன்று நாட்டை மீட்பதற்காக ஜனாதிபதிக்கு பக்கபலமாக நின்ற பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ, முப்படைகளின் தளபதிகள், பொலிஸ் மாஅதிபர், சிவில் பாதுகாப்பு பிரிவுக்கு பொறுப்பானவர் போன் றோருக்கு நன்றி தெரிவிக்கும் விருதுகளும் வழங்கப்பட்டன.

தலதா மாளிகையின் தியவதன நிலமே நிலஸ்கதேவ பண்டார அங்கு வரவேற்புரை நிகழ்த்தினார். ஜனாதிபதிக்குரிய கெளரவ பட்டத்தை ஆனமடுவாவே தம்மசித்தி தேரர் சபா மண்டபத்தில் வாசித்தார். பின்னர் ஜனாதிபதிக்குரிய பாராட்டுப் பத்திரமாகிய “விஷ்வ கீர்த்தி ஸ்ரீ திரீ சிங்களராதீஸ்வர” என்ற பட்டம் வெள்ளிப் பேழையினுள் இடப்பட்டு இரு மகாநாயக்கர்களினாலும் ஒரே நேரத்தில் வழங்கப்பட்டது.

இதன் பின்னர் முப்படைகளின் தளபதிகள் உட்பட பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு இதே போன்ற பட்டங்களை மகா நாயக்கர்கள் வழங்கினர். தியவதன நிலமே இவர்களுக்கு நினைவுச் சின்னங்களையும் வழங்கி கெளரவித்தார்

பிரதி கல்வியமைச்சர் மெளலவிமார் சந்திப்பு

பிரதி கல்வி அமைச்சர் மு. சச்சிதானந்தனுடன் மெனலவிமார்களுக்கான சந்திப்பு நாளை கல்முனையில் நடைபெறவுள்ளது.

உலமா கட்சித் தலைவர் மெளலவி முபாறக் அப்துல் மஜீதின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இச்சந்திப்பில் மெளலவி ஆசிரிய நியமனம் சம்பந்தமாக இது வரையில் எடுக்கப்பட்டுள்ள செயற்திட்டங்கள் பற்றி பிரதி கல்வி அமைச்சர், மெளலவி மற்றும் மெளலவியாக்களுக்கு விளக்கமளிக்கவுள்ளார்.

இச்சந்திப்பில் கலந்துகொள்ளுமாறு அம்பாறை, மட்டக்களப்பு மாவட்ட மெளலவி ஆசிரிய விண்ணப்பதாரிகள் அனைவரும் கலந்துகொள்ளும்படி வேண்டப்படுகின்றனர். மேலதிக விபரங்களுக்கு 0712946509 எனும் இலக்கத்துடன் தொடர்புகொள்ளும்படி வேண்டப்படுகின்றனர்.

சமூக சேவையாளரும், கடற்றொழில் அமைச்சின் அம்பாறை மாவட்ட இணைப்பாளருமான எஸ்.எச். அமீரின் அழைப்பின் பேரில் கல்முனைக்கு விஜயம் செய்யும் பிரதியமைச்சர் கல்முனை ஸாஹிரா, கல்முனை பாத்திமா கல்லூரிகளுக்கும் விஜயம் செய்யவுள்ளார்.

தென்கொரிய முன்னாள் அதிபர் தற்கொலை

_roh_mourninggetty.jpgதென் கொரியாவின் முன்னாள் அதிபர் ரோ மூ ஹியுன் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகத் தோன்றும் சம்பவம் தொடர்பில் இந்நாள் அதிபர் லீ முயுங் பாக் ஆழமான அதிர்ச்சி வெளியிட்டுள்ளார்.

2008ல் தான் பதவிக்கு வருவதற்கு முன்பாக, ஐந்து ஆண்டு காலம் பொறுப்பில் இருந்த ரோ உயிரிழந்தமையை தன்னால் நம்ப முடியவில்லை என்றும், அது பெரும் கவலையைத் தந்துள்ளது என்றும் அவர் கூறினார்.

தனது வீட்டின் அருகில் இருந்த ஒரு மலை முகட்டிலிருந்து கீழே விழுந்ததில் ரோ உயிரிழந்துள்ளார். தற்கொலை செய்து கொள்ளப்போவதாக அவர் ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார் என்று பொலிசார் கூறுகின்றனர்.

ரோ ஒரு எளிமையான விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் கல்லூரி சென்று படித்ததில்லை, ஊழலற்ற ஆட்சி, வடகொரியாவுடன் சமாதானம் போன்றவற்றை முன்னிறுத்தி நாட்டின் அதிபரானவர் அவர். அண்மைய மாதங்களாக அவர் மீது ஊழல் புகார்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. ஆனால் அவற்றை அவர் மறுத்திருந்தார்.

ஸ்வாட்டில் மிங்கோரா நகருக்குள் நுழைந்ததாக பாகிஸ்தான் இராணுவம் கூறுகிறது

pakarmy_.jpgஸ்வாட் பள்ளத்தாக்கில் உள்ள முக்கிய நகரான மிங்கோராவுக்குள் தமது படைகள் நுழைந்துவிட்டதாக கூறியுள்ள பாகிஸ்தான் இராணுவம், அங்கு தலிபான் கிளர்ச்சிக்காரர்களுடன் நேரடி மோதல்கள் நடந்து வருவதாக குறிப்பிட்டுள்ளது. ஸ்வாட் பள்ளத்தாக்கில் தலிபான்களுக்கு எதிராக இராணுவத்தால் மேற்கொள்ளப்படுகின்ற இராணுவ நடவடிக்கையில், இந்த மோதல்கள் மிகவும் முக்கியமானவை என்று எமது செய்தியாளர் கூறுகிறார்.

கடந்த 24 மணி நேரத்தில் 17 கிளர்ச்சிக்காரர்கள் கொல்லப்பட்டதாகவும், தலிபான்களின் பெரும்பாலான வெடிபொருட் கிடங்குகள் அழிக்கப்பட்டுவிட்டதாகவும், இராணுவம் கூறுகிறது. ஆனால், இந்த இழப்புக்களை தலிபான்கள் மறுத்துள்ளனர்

முதல் அரை இறுதியில் ஹைதராபாத் வெற்றி : இன்று இரண்டாவது அரை இறுதிப் போட்டி

ipl-2009-01.jpgநேற்று நடந்த ஐபிஎல் முதல் அரை இறுதிப் போட்டியில் ஹைதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணி அபாரமாக ஆடி, டெல்லி டேர்டெவில்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. இன்று நடைபெறும் 2ஆவது அரை இறுதியில், சென்னை அணியும், பெங்களூரும் சந்திக்கின்றன. தென் ஆபிரிக்காவில் நடந்து வரும் ஐபிஎல் போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டி விட்டன.

நேற்று முதலாவது அரை இறுதிப் போட்டி செஞ்சூரியன் பார்க் மைதானத்தில் நடந்தது. ஜோஹன்னஸ்பர்க்கில் இன்று இரவு 8.00 மணிக்கு சென்னை-பெங்களூர் அணிகளுக்கு இடையிலான அரை இறுதிப் போட்டி நடைபெறுகிறது. ,

அழைப்பு விடுத்த பிரதமருக்கு நன்றி:கலைஞர்

pm-manmogan.jpgமத்திய அமைச்சரவையில் திமுக இடம்பெறுவதற்கான பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்படாததால் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவு தருவதாக முதல்வர் கருணாநிதி அறிவித்தார். இதனால் திமுக- காங்கிரஸ் கூட்டணி குறித்து பல்வேறு செய்திகள் வெளிவந்தன.  இவற்றை மறுத்த பிரதமர் மன்மோகன்சிங், அமைச்சரவையில் இடம்பெற முதல்வர் கருணாநிதிக்கு அழைப்பு விடுத்திருக்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.

இது குறித்து முதல்வர் கருணாநிதி, ‘’அமைச்சரவை அமைக்கும் காலத்தில் டெல்லியில் திட்டமிட்ட பொய்ப்பிரச்சாரம் செய்தார்கள்.  இவற்றுக்கெல்லாம் விளக்கமளித்து மறுத்த பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு நன்றி. மத்திய அமைச்சரவையில் பங்கேற்க அழைப்பு விடுத்த பிரதமருக்கு நன்றி’’ என்று தெரிவித்துள்ளார். அவர் மேலும்,  ‘’அமைச்சரவையில் பங்கேற்பது குறித்து விவாதித்து முடிவு அறிவிக்கப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.

6 மத்திய அமைச்சர்கள் இலாகாக்கள் அறிவிப்பு

india-f-m.jpgஇந்தியாவின் பிரதமராக இரண்டாவது முறையாக மன்மோகன்சிங் மீண்டும் பதவி ஏற்றார். அவருடன் 19 `கேபினட்’ மந்திரிகளும் பதவி ஏற்றனர். இவர்களில் பிரணாப் முகர்ஜிக்கு நிதித்துறையும், ப.சிதம்பரத்துக்கு உள்துறையும், ஏ.கே.அந்தோணிக்கு பாதுகாப்பு துறையும், எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு வெளியுறவு துறையும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜிக்கு ரெயில்வேயும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருக்கு வேளாண்மை, உணவு மற்றும் சிவில் சப்ளை துறையும் ஒதுக்கப்பட்டுள்ளன.

தென்கொரியாவின் முன்னாள் அதிபர் தற்கொலை

தென் கொரியாவின் முன்னாள் அதிபர் ரோ மூ யுன் (62) இன்று தற்கொலை செய்துகொண்டார். நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள அவரது சொந்த ஊருக்கு அருகேயுள்ள மலை ஒன்றில் ஏறி அங்கிருந்து கீழே குதித்ததாகவும், பாறை ஒன்றின் மீது அவர் உடல் பலமாக மோதியதில் படுகாயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து, தகவல் கிடைத்ததும் அவர் பூசான் நகர மருத்துவமனைக்கு உள்ளூர் நேரப்படி காலை 8.15 மணிக்கு கொண்டுச் செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி காலை 9.30 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது. தற்கொலை செய்வதற்கு முன்னர் அவர் எழுதி வைத்திருந்த தகவல் குறிப்பில், வாழ்க்கை மிகவும் கடினமாக உள்ளது என்றும், ஏராளமான மக்களை அவதிக்குள்ளாக்கியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் முக்கியத் தலைவர்களில் ஒருவர் தற்கொலை செய்திருப்பது தென் கொரியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடும்ப நலனுக்காக கருணாநிதி ஆட்சியில் பங்கு கேட்கிறாரென கட்சிகள் குற்றச்சாட்டு

karunanithi.jpgதி.மு.க.வின் சுயநலப் போக்கு மத்திய அமைச்சரவையில் தெள்ளத் தெளிவாகி இருக்கிறது. குடும்ப சுயநலத்திற்காக ஆட்சி நடத்துவதற்கு தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி முயல்கிறாரென குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் எஸ். ஷேக் தாவூத் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;

கருணாநிதியின் குடும்ப அரசியல் காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 அல்லது 5 பேர் மத்திய அமைச்சரவையில் முக்கிய இலாகாக்களை கேட்டு அமைச்சரானால் ஒரு குடும்ப ஆட்சி இந்தியாவில் மீண்டும் மன்னராட்சியைக் கொண்டுவந்தது போல் அமையாதா? படித்தவர்கள் அரசியல் வித்தகர்கள் என்ன நினைக்கிறார்கள்? இது ஜனநாயகக் கேலிக்கூத்து.

ஆகவே ஒரு குடும்ப ஆட்சிமுறை மறுக்கப்பட வேண்டும். ஆனாலும், கருணாநிதி குடும்ப நலன் காரணமாக பிடிவாதமாக தி.மு.க.விற்கு மத்தியில் 9 அமைச்சர்கள் கேட்டு அது மறுக்கப்பட்டு 7 அமைச்சர்கள் காங்கிரசாரால் ஒத்துக்கொள்ளப்பட்டு மீண்டும் ஒரு சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தி அதுவும் மறுக்கப்பட்டு காங்கிரசின் புதிய திட்டப்படி 9 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு மத்திய அமைச்சர் என்ற நிலையை தி. மு.க நிராகரித்துவிட்டதாக நாளேடுகளில் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. வெளியில் இருந்து காங்கிரசுக்கு ஆதரவு என்று கருணாநிதியால் சொல்லப்படுவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. மொத்தத்தில் மழை ஓய்ந்தும் தூவானம் விடாமல் இருக்கிறது.

கருணாநிதி அவர்கள் மத்தியில் காங்கிரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்து தமிழகம் திரும்பினால் தமிழகத்திலும் கருணாநிதி தலைமையிலான மந்திரி சபை ஆட்டம் காணுகின்ற சூழல் உருவாகும். தமிழகத்தில் காங்கிரஸ் ஆதரவுடன் தான் தி.மு.க சிறுபான்மை அரசு ஆட்சியில் உடும்புப் பிடியாக ஒட்டிக்கொண்டிருக்கிறது. காங்கிரஸ் ஆதரவு தமிழகத்தில் விலக்கிக்கொள்ளப்பட்டால் தமிழகத்தில் உள்ள மற்ற கட்சிகள் எல்லாம் காங்கிரசை ஆதரித்து காங்கிரஸ் ஏன் தமிழகத்தில் காமராஜர் ஆட்சி அமைக்கக்கூடாது? இது ஒரு நல்ல முன்மாதிரியாக காங்கிரசாருக்கு அமையும்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க நல்ல வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த அரிய சந்தர்ப்பத்தை தமிழக காங்கிரஸ் தலைவர்கள் பயன்படுத்திக்கொள்வார்கள் என்று தமிழ் மாநில முஸ்லிம் லீக் நம்புகிறது.