தென் கொரியாவின் முன்னாள் அதிபர் ரோ மூ யுன் (62) இன்று தற்கொலை செய்துகொண்டார். நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள அவரது சொந்த ஊருக்கு அருகேயுள்ள மலை ஒன்றில் ஏறி அங்கிருந்து கீழே குதித்ததாகவும், பாறை ஒன்றின் மீது அவர் உடல் பலமாக மோதியதில் படுகாயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, தகவல் கிடைத்ததும் அவர் பூசான் நகர மருத்துவமனைக்கு உள்ளூர் நேரப்படி காலை 8.15 மணிக்கு கொண்டுச் செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி காலை 9.30 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது. தற்கொலை செய்வதற்கு முன்னர் அவர் எழுதி வைத்திருந்த தகவல் குறிப்பில், வாழ்க்கை மிகவும் கடினமாக உள்ளது என்றும், ஏராளமான மக்களை அவதிக்குள்ளாக்கியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் முக்கியத் தலைவர்களில் ஒருவர் தற்கொலை செய்திருப்பது தென் கொரியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.