கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

குர்ஆன் மத்ரஸாவின் சான்றிதழ் வழங்கும் விழா

மள்வானை காந்தி வளவ்வ ஸஹீத் ஹாஜியார் மாவத்தையில் அமைந்துள்ள அல் முஸ்தபவிய்யா குர்ஆன் மத்ரஸாவின் முதலாவது சான்றிதழ் வழங்கும் வைபவம் இன்று பி.ப. 4.00 மணிக்கு மத்ரஸா முற்றவெளியில் நடைபெறவுள்ளது. மத்ரஸாவின் உஸ்தாத் தக்கியாவின் பேஷ் இமாமுமான அல் ஹாபிழ் அல் ஆலிம் மொகமட் றில்வான் தலைமையில் இது நடைபெறும். நான்கு வருட பயிற்சியை பூர்த்தி செய்த எட்டு மாணவர்கள் சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்படவு ள்ளனர்.

கம்பஹா மாவட்ட உயர் நீதிமன்ற நீதவான் அல்ஹாஜ் எம். எம். ஏ. கபூர் பிரதம அதிதியாகவும், பேருவளை அல்முஸ்தபவிய்யா பேஷ் இமாம் மெளலவி அல்ஹாஜ் ஏ. சீ. எம். முபாரக் பிரதம பேச்சாளராகவும் சமூக சேவையாளர் அல்ஹாஜ் எம். எச். ஏ. ஸஹீத், சமாதான நீதவானும் ஆங்கில ஆசிரியருமான ஹனபி ஆகியோர் உட்பட பலர் இவ்வைபவத்தில் கலந்துகொள்வார்கள்.

முல்லை மாவட்ட முஸ்லிம் குடும்பங்களின் விபரம் கோரல்

முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம் குடும்பங்களின் விபரங்கள் கோரப்படுகின்றன. அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை (முல்லைத்தீவு மாவட்டக் கிளை) இதற்கான வேண்டுகோளை விடுத்துள்ளது. இது தொடர்பாக மேற்படி சங்கத்தின் தலைவர் எம். எச். எம். இப்ராஹிம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- 1990ஆம் ஆண்டு முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களாகிய நாம் பல மாவட்டங்களிலும் வாழ்கின்றோம். அந்த குடும்ப விபரங்கள், அரச ஊழியர்கள், உலமாக்கள் போன்றோரிடமிருந்து விபரங்களை திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

புத்தளம், குருநாகல், அனுராதபுரம், கண்டி, கம்பஹா மற்றும் களுத்துறை போன்ற மாவட்டங்களில் வாழ்கின்ற முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்களின் விபரங்கள் கட்டாயம் திரட்டப்பட வேண்டியுள்ளதால், அதற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பப் படிவங்கள் பெற்ற குடும்பத் தலைவரோ/ தலைவியோ, உலமாக்களோ, அரச ஊழியர்களோ அல்லது இதுவரையும் விண்ணப்பங்கள் கிடைக்காதவர்களோ 0718232462, 0714494040, 0312226710 இவர்களுடன் தொடர்பு கொண்டு விபரங்களை பெற்று 17ம் திகதிக்கு முன், ஹிஜ்ரா மாவத்தை, கரிக்கட்டை, மதுரங்குளி என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

சேது சமுத்திர திட்டத்தை எதிர்ப்பது ஏன்? ஜெயல‌‌லிதா ‌விள‌க்க‌ம்

jayalaitha.jpgசேது சமுத்திர திட்டத்தில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு குறித்த அறிக்கையில் முரண்பாடுகள் இருப்பதாக தெரிவித்ததன் அடிப்படையிலும், இத்திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று பல லட்சக்கணக்கான மீனவர்கள் கருத்து தெரிவித்ததன் அடிப்படையிலும்தான் அ.இ.அ.தி.மு.க. இ‌ந்த ‌தி‌ட்ட‌த்தை எதிர்‌க்‌கிறது எ‌ன்று அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் பொதுச் செயலர் ஜெயலலிதா விளக்கம் அளித்துள்ளார்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், ”2006ஆம் ஆண்டு அ.இ.அ.தி.மு.க வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்படும் என்று கூறியிருப்பதாக முதலமை‌ச்ச‌ர் கருணாநிதி தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். சொல்லாத ஒன்றை அவர் கூறியிருக்கிறார்.

சேது கால்வாய் திட்டம் எம்.ஜி.ஆராலும், என்னாலும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வற்புறுத்தப்பட்ட திட்டம் என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், 3600க்கும் மேற்பட்ட கடல் உயிரினங்கள் மற்றும் கடல் தாவரங்கள் அழிந்துவிடும் என்று சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் தெரிவித்ததன் அடிப்படையிலும், மும்பை இயற்கை வரலாறு குழுமம் சேது சமுத்திர திட்டத்தில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு குறித்த அறிக்கையில் முரண்பாடுகள் இருப்பதாக தெரிவித்ததன் அடிப்படையிலும், இத்திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று பல லட்சக்கணக்கான மீனவர்கள் கருத்து தெரிவித்ததன் அடிப்படையிலும்தான் பொதுமக்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் அ.இ.அ.தி.மு.க இத்திட்டத்தை எதிர்க்க ஆரம்பித்தது.

மக்களுக்காகவே திட்டம் என்பதில் அ.இ.அ.தி.மு.க உறுதியாக உள்ளது. சராசரி மக்களின் வாழ்வாதாரங்களை கொள்ளையடித்து சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் கருணாநிதியின் தன்னல திட்டத்தை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.

சேது சமுத்திர திட்டம் குறித்த பொதுமக்கள் கேட்புரை கூட்டங்களின் அறிக்கையை 7 நாட்களுக்குள் அனுப்பி வைக்கும்படி தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிட்டதோடு மட்டுமல்லாமல், தவறினால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1986 பிரிவு 15ன் கீழ் தண்டனைக்குரிய பிரிவுகள் செயல்படுத்தப்படும் என மிரட்டிய கருணாநிதி முழுவதுமாக மாநில அரசை புறக்கணித்து சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான ராஜீவ்காந்தி மறுவாழ்வு திட்டம் பொதுத்துறை வங்கிகள் மூலம் செயல்படுத்தப்படும் என்று அப்போதைய மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் மூலம் அறிவிக்க செய்த கருணாநிதி, கடலோர பகுதிகளை மேம்படுத்தும் மாநில அரசுகளின் அதிகாரங்களை நியாயமற்ற முறையில் அபகரிக்க காரணமாக இருந்த கருணாநிதி சமீபத்தில் மாநில சுயாட்சி குறித்துஅறிக்கை விட்டதுதான் உலகமகா அதிசயமாகும்” எ‌ன்று ஜெயல‌லிதா கூறியுள்ளார்.

ஈரான் ஜனாதிபதி தேர்தலில் அகமதிநிஜாத் பெரும் வெற்றி!!

president-ahamadinejad.jpgஈரான் ஜனாதிபதி தேர்தலில் அதிபர் மஹமூத் அகமதிநிஜாத் பெரும் வெற்றி பெற்றுள்ளார். ஆனால் “இந்தத் தேர்தல் மோசடியாக நடந்துள்ளது. நானே வெற்றி பெற்றுள்ளேன். ஆனால் அதைத் திரித்து அகமதிநிஜாத் வெற்றி பெற்றதாக கூறியுள்ளனர்” என்று அவரை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் பிரதமர் மீர் உசேன் மெளசவி.கூறியுள்ளார்

ஈரான் ஜனாதிபதி தேர்தல் விதிப்படி மொத்தம் பதிவான வாக்குகளில் 50 சதவீதத்தைப் பெறுபவர்தான் ஜனாதிபதிக முடியும். இல்லாவிட்டால் மறுபடியும் தேர்தல் நடத்தப்படும். ஆனால் அகமதி நிஜாத் 60 சதவீதத்திற்கும் மேலான வாக்குகளைப் பெற்றுள்ளாக தகவல்கள் கூறுகின்றன. இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் பெரும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். ஈரான் ஜனாதிபதி தேர்தல் முடிவை உலக நாடுகள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்தன. மெளசவி வெற்றி பெறக் கூடும் என சில செய்திகள் கூறி வந்தன. ஆனால் அகமதிநிஜாத் அபார வெற்றி பெற்றுள்ளார்.

20-20 உலக கோப்பை கிரிக்கெட்: இன்றைய ஆட்டங்கள்

11bravo20-20.jpgதென் ஆப்பிரிக்கா Vs வெஸ்ட் இண்டீஸ் (இ பிரிவு)
இடம்: லண்டன் ஓவல், இலங்கை நேரம்: மாலை 6 மணி

நியுசிலாந்து Vs பாகிஸ்தான் (எப் பிரிவு)
இடம்: லண்டன் ஓவல், இலங்கை நேரம்: இரவு 10 மணி

இரான் அதிபர் தேர்தலில் நேற்று உற்சாக வாக்குப்பதிவு

11iran.jpgஇரானில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் எதிர்பாராத அளவுக்கு அதிகமாக மக்கள் திரண்டு வாக்களிக்க வந்திருந்ததால், அங்கு வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கப்பட்டது.

இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபர் மஹ்மூட் அஹ்மடி நிஜாத் முன்னாள் பிரதமர் மீர் ஹொசைன் மூஸவி ஆகியோரிடையே கடும் போட்டி நிலவுகிறது.

இரானில் மொபைல் தொலைபேசி மூலமாக செய்திகளை பரிமாறிக் கொள்ளும் சேவைகள் பாதிக்கப்பட்டிருப்பதால், தம்மால் வாக்குச் சாவடிக்குக்கு இடையேயான மேற்பார்வையை ஒருங்கிணைப்பு செய்ய முடியாத நிலை உள்ளதாக முசவி அவர்களின் ஆதரவாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருவதாக தொலைத் தொடர்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த இரு வேட்பாளர்களை தவிர மெஹ்டி கரௌபி மற்றும் மொஷென் ரெசாய் ஆகிய இரு வேட்பாளர்களும் போட்டியில் இருக்கிறார்கள்.

‘டுவென்டி 20’ உலககோப்பை கிரிக்கெட் – குரூப் ‘இ’ பிரிவில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி

11bravo20-20.jpgஇங்கிலாந் தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கும் ‘டுவென்டி 20’ உலககோப்பை கிரிக்கெட் தொடரின் ‘சூப்பர் 8’ சுற்றுப் போட்டியில், குரூப் ‘இ’ பிரிவில் இடம் பெற்ற இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் ஜெயித்த இந்திய அணி 20  வது ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்திருந்தது.

தொ‌டர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 19வது ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டுவென்டி 20 உலககோப்பை கிரிக்கெட்’சூப்பர் 8′ சுற்றுப் போட்டியில் இலங்கை வெற்றி

muralitharan-sri-lankas.jpgஇங்கி லாந்தின் லோர்ட்ஸ் மைதானத்தில் சற்றுமுன் நடைபெற்று முடிந்த ‘டுவென்டி 20’ உலககோப்பை கிரிக்கெட் தொடரின் ‘சூப்பர் 8’ சுற்றுப் போட்டியில், குரூப் ‘எப்’ பிரிவில் இடம் பெற்ற பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கிடையிலான போட்டியில் இலங்கை வெற்றி பெற்றது

டாஸ் வென்ற இலங்கை அணி 20 வது ஓவரில் 7விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணி 20 வது ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து இலங்கை 19 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

டபிள்யு.டி.ஏ., ஏகான் கிளாசிக் டென்னிஸ் – சானியா மிர்சா அரையிறுதிக்கு முன்னேற்றம்

27-saniamirza.jpgஇங்கி லாந்தில் உள்ள பர்மிங்ஹாமில் உலகின் முன்னணி வீராங்கனைகள் பங்கேற்கும் டபிள்யு.டி.ஏ., ஏகான் கிளாசிக் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடந்த ஒற்றையர் காலிறுதியில் இந்தியாவின் சானியா மிர்சா, ஹங்கேரியின் மெலிண்டா ஜின்க்கை 6 1, 7 6 என்ற நேர் செட்டில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்

வடகொரியாவுக்கு எதிராக ஐ நா தீர்மானம்?

misyl.jpgவட கொரியா சமீபத்தில் நடத்திய அணு ஆயுத சோதனைகளுக்கு பதில் தரும் முகமாக அந்த நாட்டிற்கு எதிரான தடைகளை விரிவாக்கும் வரைவு தீர்மானத்துக்கு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் அங்கம் வகிக்கும் ஐந்து நாடுகளும் ஒத்துக் கொண்டுள்ளதாக ஐ நாவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ நா பாதுகாப்பு சபையில், சுழற்சி முறையில் பதவி வகிக்கும் ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் இணைந்து தயாரித்துள்ள வரைவு தீர்மானம் ஐ நா பாதுகாப்பு சபையின் அனைத்து உறுப்பினர்களையும் உள்ளடக்கிய அவையில் விவாதிக்கப்படும் என்று ராஜ தந்திரிகளை மேற்கோள் காட்டி செய்திகள் தெரிவிக்கின்றன.