முல்லை மாவட்ட முஸ்லிம் குடும்பங்களின் விபரம் கோரல்

முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம் குடும்பங்களின் விபரங்கள் கோரப்படுகின்றன. அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை (முல்லைத்தீவு மாவட்டக் கிளை) இதற்கான வேண்டுகோளை விடுத்துள்ளது. இது தொடர்பாக மேற்படி சங்கத்தின் தலைவர் எம். எச். எம். இப்ராஹிம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- 1990ஆம் ஆண்டு முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களாகிய நாம் பல மாவட்டங்களிலும் வாழ்கின்றோம். அந்த குடும்ப விபரங்கள், அரச ஊழியர்கள், உலமாக்கள் போன்றோரிடமிருந்து விபரங்களை திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

புத்தளம், குருநாகல், அனுராதபுரம், கண்டி, கம்பஹா மற்றும் களுத்துறை போன்ற மாவட்டங்களில் வாழ்கின்ற முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்களின் விபரங்கள் கட்டாயம் திரட்டப்பட வேண்டியுள்ளதால், அதற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பப் படிவங்கள் பெற்ற குடும்பத் தலைவரோ/ தலைவியோ, உலமாக்களோ, அரச ஊழியர்களோ அல்லது இதுவரையும் விண்ணப்பங்கள் கிடைக்காதவர்களோ 0718232462, 0714494040, 0312226710 இவர்களுடன் தொடர்பு கொண்டு விபரங்களை பெற்று 17ம் திகதிக்கு முன், ஹிஜ்ரா மாவத்தை, கரிக்கட்டை, மதுரங்குளி என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *