இலங்கையில் முகாம்களில் உள்ள மக்களுக்கு நடமாட்ட சுதந்திரம் வேண்டும்: ஹியூமன் ரைட்ஸ் வாட்ச்

HRW Logoஇலங் கையில் மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்து முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள மக்களை வெளியே செல்ல அதிகாரிகள் அனுமதித்தால் அம்மக்கள் வெளியே சென்று தங்கத் தயாராக இருப்பதாக சர்வதேச மனித உரிமைகள் அமைப்பொன்று அறிவித்திருக்கிறது.

அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இவ்வாறு முட்கம்பி வேலிகளுக்குள் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இந்த மக்கள் வெளியேசெல்ல அனுமதிக்கப்பட வேண்டுமென்றும் தெரிவித்திருக்கிறது.

இலங்கையில் மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்து முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சுமார் மூன்று லட்சம் மக்களில், 10 வயதிற்கும் 60 வயதிற்கும் இடைப்பட்ட மக்கள் தொகுதியினர் அந்த முகாம்களில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.

இவர்களில் கணிசமான எண்ணிக்கையிலான மக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டால் இந்தப்பகுதிகளில் வசிக்கும் தங்கள் உறவினர்களுடன் சென்று தங்குவதற்குத் தயாராக இருக்கிறார்கள் என்று ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *