குர்ஆன் மத்ரஸாவின் சான்றிதழ் வழங்கும் விழா

மள்வானை காந்தி வளவ்வ ஸஹீத் ஹாஜியார் மாவத்தையில் அமைந்துள்ள அல் முஸ்தபவிய்யா குர்ஆன் மத்ரஸாவின் முதலாவது சான்றிதழ் வழங்கும் வைபவம் இன்று பி.ப. 4.00 மணிக்கு மத்ரஸா முற்றவெளியில் நடைபெறவுள்ளது. மத்ரஸாவின் உஸ்தாத் தக்கியாவின் பேஷ் இமாமுமான அல் ஹாபிழ் அல் ஆலிம் மொகமட் றில்வான் தலைமையில் இது நடைபெறும். நான்கு வருட பயிற்சியை பூர்த்தி செய்த எட்டு மாணவர்கள் சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்படவு ள்ளனர்.

கம்பஹா மாவட்ட உயர் நீதிமன்ற நீதவான் அல்ஹாஜ் எம். எம். ஏ. கபூர் பிரதம அதிதியாகவும், பேருவளை அல்முஸ்தபவிய்யா பேஷ் இமாம் மெளலவி அல்ஹாஜ் ஏ. சீ. எம். முபாரக் பிரதம பேச்சாளராகவும் சமூக சேவையாளர் அல்ஹாஜ் எம். எச். ஏ. ஸஹீத், சமாதான நீதவானும் ஆங்கில ஆசிரியருமான ஹனபி ஆகியோர் உட்பட பலர் இவ்வைபவத்தில் கலந்துகொள்வார்கள்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *