கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

கடைசி ஆட்டத்தில் மானம்காத்த இங்கிலாந்து

200909eng-cr-team.bmpஇங்கி லாந்து மற்றும் அவுஸ்திரேலியா இடையிலான  7 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில்  அவுஸ்திரேலியா முதல் 6 போட்டிகளிலும்  வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றிய நிலையில் இன்று நடைபெற்ற 7 வது ஒருநாள் போட்டியில் தோல்வியடைந்ததால் இங்கிலாந்து தனது மானத்தை ஓரளவு காத்துக்கொண்டது.

இந்த தோல்வியின் மூலம் அவுஸ்திரேலியா 7 போட்டி கொண்ட தொடரில் 6-1 என முன்னிலை பெற்றுள்ளது. டெஸ்ட் தொடரில் 1-2 என தோல்வி அடைந்த அவுஸ்திரேலியா அதற்கு பழி தீர்க்கும் வகையில் ஒருநாள் தொடரில் இங்கிலாந்தை மண்ணைக் கவ்வவைத்து வந்தமை தெரிந்ததே.

Australia 176 (45.5 ov)
England 177/6 (40.0 ov)
England won by 4 wickets (with 60 balls remaining)
NatWest Series [Australia in England] – 7th ODI

Played at Riverside Ground, Chester-le-Street
20 September 2009 (50-over match)
       
 Australia innings (50 overs maximum)
 SR Watson  c Swann b Anderson  0
 TD Paine†  c †Prior b Onions  4 
 RT Ponting*  c Collingwood b Swann  53 
 MJ Clarke  run out (Morgan/Collingwood)  38 
 MEK Hussey  c Denly b Bresnan  49 
 CL White  b Swann  1
 JR Hopes  c & b Swann  11 
 MG Johnson  c Anderson b Swann  10 
 NM Hauritz  c & b Shah  3
 B Lee  b Swann  0 
 BW Hilfenhaus  not out  2
 Extras (lb 1, w 4) 5     
      
Total (all out; 45.5 overs) 176 (3.84 runs per over)

Fall of wickets1-0 (Watson, 0.4 ov), 2-17 (Paine, 3.4 ov), 3-96 (Ponting, 24.5 ov), 4-110 (Clarke, 27.6 ov), 5-112 (White, 28.5 ov), 6-138 (Hopes, 36.3 ov), 7-158 (Johnson, 40.4 ov), 8-158 (Lee, 40.6 ov), 9-163 (Hauritz, 43.1 ov), 10-176 (Hussey, 45.5 ov) 
        
 Bowling
 JM Anderson 7 0 36 1
 G Onions 9 1 28 1
 TT Bresnan 6.5 0 25 1
 PD Collingwood 7 0 37 0
 GP Swann 10 1 28 5
 RS Bopara 1 0 7 0 
 OA Shah 5 1 14 1

England innings (target: 177 runs from 50 overs)
 AJ Strauss*  c Hilfenhaus b Hauritz  47 
 JL Denly  run out (†Paine/Ponting)  53 
 RS Bopara  lbw b Watson  13 
 OA Shah  c †Paine b Hopes  7
 PD Collingwood  not out  13
 EJG Morgan  c †Paine b Lee  2
 MJ Prior†  c Ponting b Hilfenhaus  11
 TT Bresnan  not out  10  
 Extras (b 4, lb 2, w 6, nb 9) 21     
      
Total (6 wickets; 40 overs) 177 (4.42 runs per over)
Did not bat GP Swann, JM Anderson, G Onions 
Fall of wickets1-106 (Strauss, 20.4 ov), 2-129 (Denly, 27.1 ov), 3-133 (Bopara, 28.6 ov), 4-137 (Shah, 29.2 ov), 5-141 (Morgan, 31.4 ov), 6-162 (Prior, 36.2 ov) 
        
 Bowling O M R W Econ  
 B Lee 10 3 33 1 
 BW Hilfenhaus 6 1 38 1
 MG Johnson 5 0 29 0  
 NM Hauritz 8 0 30 1
 JR Hopes 6 1 29 1
 SR Watson 5 0 12 1 

Match details
Toss England, who chose to field
Series Australia won the 7-match series 6-1

ஆஸ்ட்ரேலியா மீண்டும் முதலிடம்

999cri.jpgடெஸ்ட் போட்டித் தரவரிசையில் முதலிடத்தை இழந்த ஆஸ்ட்ரேலியா தற்போது ஒரு நாள் கிரிக்கெட் ஐ.சி.சி. தரவரிசையில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. இதனால் இந்தியா 3-வது இடத்திற்கு கீழிறங்கியது. தென் ஆப்பிரிக்கா இரண்டாம் இடத்தில் உள்ளது.

நாட்டிங்காமில் நடைபெற்ற 6-வது ஒரு நாள் போட்டியிலும் ஆஸ்ட்ரேலியா, இங்கிலாந்தை வீழ்த்தியதன் மூலம் முதலிடத்தை மீண்டும் பிடித்துள்ளது. ஆனால் தென் ஆப்பிரிக்காவும், ஆஸ்ட்ரேலியாவும் புள்ளிகள் அளவில் 127 புள்ளிகளுடன் சம நிலையில் உள்ளதால் 7-வது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து, ஆஸ்ட்ரேலியாவை வெற்றி பெறாமல் செய்து விட்டால் ஆஸ்ட்ரேலியா மீண்டும் 3-வது இடத்திற்குத் தள்ளப்படும் வாய்ப்பு உள்ளது.

தரவரிசை விவரம்:

ஆஸ்ட்ரேலியா – 127 புள்ளிகள்
தென் ஆப்பிரிக்கா – 127 புள்ளிகள்
இந்தியா – 126 புள்ளிகள்
பாகிஸ்தான் – 109 புள்ளிகள்
இலங்கை – 108 புள்ளிகள்
நியூஸீலாந்து – 105 புள்ளிகள்
இங்கிலாந்து – 102 புள்ளிகள்
வெஸ்ட் இண்டீச் – 78 புள்ளிகள்
வங்கதேசம் – 55 புள்ளிகள்
ஜிம்பாப்வே – 26 புள்ளிகள்.

அகில இலங்கை பாடசாலை மட்ட மெய்வல்லுநர் போட்டி

190909images-sports-games.jpgஅகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட விளையாட்டுப் போட்டியின் மெய்வல்லுநர் போட்டி நிகழ்ச்சிகளை இம்மாதம் 23ம் திகதி தொடக்கம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை கல்வியமைச்சின் உடற்கல்வி விளையாட்டுப் பிரிவி மேற் கொண்டுள்ளது.

கொழும்பு சுகதாச விளையாட்டரங்கில் தொடர்ச்சியாக 5 தினங்கள் நடத்தப்படவுள்ள இந்த போட்டி நிகழ்ச்சிகள் 27ம் திகதி நிறைவடைய உள்ளதாக உடற் கல்வி மற்றும் விளையாட்டுத் துறைக்கு பொறுப்பான கல்விப் பணிப்பாளர் எல்.கே. ஜயவீர அறிவித்துள்ளார்.

மாகாண மட்டப் போட்டிகளில் வெற்றி பெற்ற நாட்டின் ஒன்பது மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் போட்டியாளர்கள் தேசிய மட்டப் போட்டிகளில் பங்குபற்ற உள்ளனர்.

போட்டியாளர்கள் அனைவரும் தமது வயது மற்றும் அடையாளம் என்பவற்றை உறுதிப்படுத்தும் வகையில் தேசிய அடையாள அட்டையையும், பிறப்புச் சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளனர். மாகாண மட்டத்தில் ஏற்கனவே விண்ணப்பப்படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள போட்டியாளர்களை தவிர பட்டியலில் வேறு எவரையும் மாற்றுவதற்கு இடமளிக்கப்படமாட்டாது.

போட்டியாளர்களின் பெயர் மாற்றம் மற்றும் நிகழ்ச்சி மாற்றம் செய்ய வேண்டுமாயின் முன்கூட்டியே தொடர்பு கொண்டு மாற்றிக் கொள்ள வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணியை யாரும் சாதாரணமாக எடைபோட்டு விடவேண்டாம்- சங்ககரா

120909sanath-jayasuriya.jpgசாம்பி யன்ஸ் டிராபி போட்டியில் நம்பிக்கையுடன் களமிறங்குகிறோம் என்று இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் குமார் சங்ககரா கூறினார். தென்னாப்பிரிக்காவில் செப்டம்பர் 22-ம் திகதி முதல் ஐசிசி சாம்பியன்ஸ் கிண்ண போட்டிகள் நடைபெறவுள்ளன. மொத்தம் 8 நாடுகள் இப்போட்டியில் பங்கேற்கவுள்ளன.

இப்போட்டியில் பங்கேற்பதற்காக இலங்கை கிரிக்கெட் அணி வியாழக்கிழமை ஜோஹன்னஸ்பர்க் வந்தடைந்தது. பின்னர் நிருபர்களுக்கு இலங்கை அணியின் கேப்டன் சங்ககரா அளித்த பேட்டி:

போட்டியை வெல்லக்கூடிய அணியாக இலங்கை அணியை வல்லுநர்கள் கணிக்கவில்லை. எனவே எங்கள் மீதான அழுத்தம் குறைந்துள்ளது. இதற்காக இலங்கை அணியை யாரும் சாதாரணமாக எடைபோட்டு விடவேண்டாம். நாங்கள் நம்பிக்கையுடன் களமிறங்குகிறோம். தென்னாப்பிரிக்கா, இந்தியா, நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலியா அணிகளில் ஒன்று கோப்பையை வெல்லும் என்று நிபுணர்கள் கணித்து வருகின்றனர். இருப்பினும் எங்கள் அணியில் உள்ள ஒவ்வொரு வீரரும் முழு நம்பிக்கையுடன் களம் காணவுள்ளனர். கோப்பையை வெல்ல முழு கவனம் செலுத்துவோம்.

வேகப்பந்து வீச்சுதான் எங்களது அணியின் பலம். அதே நேரத்தில் உலகத்தரம் வாய்ந்த 2 சுழற்பந்து வீச்சாளர்கள் மெண்டிஸ், முரளிதரன் எங்கள் அணியில் உள்ளனர் என்றார் அவர். சாம்பியன்ஸ் டிராபியின் முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணியுடன் இலங்கை மோதவுள்ளது.

நிலநடுக்கம் வருவதை எச்சரிக்கும் கருவி – தாய்வான் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

190909computer.jpgநில நடுக்கம் ஏற்படுவதற்கு 15 வினாடிகள் முன்னதாக அபாய மணியை எழுப்பும் கருவி ஒன்றை தாய்வான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

லெப்டாப்பின் அளவில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே இருக்கும் இந்த கருவி கம்ப்யூட்டருடன் பொருத்தி கொள்ளும் வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும்,  இதை லிப்ட்களுடனும் இணைத்துக் கொள்ளலாம். இந்த கருவி குறித்து தாய்வான் தேசிய பல்கலைக்கழகத்தின் புவியியல் பிரிவு பேராசிரியர் வூ யி மின் கூறுகையில் :-

இந்தக் கருவி நில நடுக்கத்தின் போது ஏற்படும் குறுக்கலை, நெட்டலைகளை அடையாளம் காணும் நில நடுக்கம் தரைமட்டத்துக்கு வரும் முன்பே அலைகளை இந்தக் கருவி கண்டறிந்து எச்சரிக்கை செய்யும். இதன் மூலம் 15 வினாடிகள் முன்னதாக நில நடுக்கம் ஏற்பட போவதை அறிந்து கொள்ளலாம். இந்த கால அவகாசத்தை பயன்படுத்திக் கொண்டு மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல முயற்சிக்கலாம் என்றார்.

சச்சின் மீதான விமர்சனத்தை பின்வாங்கப் போவதில்லை – மஞ்சுரேக்கர்

sep-14-2009-india.jpgசச்சின் டெண்டுல்கர் இலங்கையில் ஆடிய விதம் குறித்து மகிழ்ச்சியடைந்துள்ள முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர், அதற்காக கடந்த ஆண்டு சச்சின் டெண்டுல்கர் திணறிய போது வைத்த விமர்சனத்தை பின்வாங்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு சச்சின் டெண்டுல்கர் தன் ஃபார்மிற்காக திணறிய போது ஓய்வறையில் ஒரு யானை என்று வர்ணித்தார்.

அதாவது கடந்த ஆண்டு 51 ஒருநாள் போட்டி களில் சச்சின் டெண்டுல்கர் இந்தியா முதலில் துடுப்பெடுத்தாடிய போது 24 இன் னிங்ஸ்களில் 62.10 என்ற சராசரி வைத்திருந்தார். ஆனால் அதே காலக் கட்டத்தில் இந்தியா இரண் டாவதாக துடுப்பெடுத்தாடிய போது அல்லது இலக்கைத் துரத்தும்போது 26 ஓட்டங்களையே சராசரியாக வைத்திருந்தார் என்பதே சஞ்சய் மஞ்சு ரேக்கர் கடந்த ஆண்டு வைத்த விமர்சனத்திற்கு காரணம்.

சச்சின் டெண்டுல்கரிடம் இது பற்றி ஒருவரும் வாயைத் திறக்காததற்கு காரணம் அவரது ஆளுமை அவ்வளவு பெரியது என்று கூறும் போதுதான் ஓய்வறையில் அவர் ஒரு யானை என்று கூறினார் மஞ்சுரேக்கர்.அந்த காலக் கட்டத்தில் டெண்டுல்கர் சுதந்திரமாக விளையாடவில்லை. அந்தக் காலக் கட்டத்தில் அவர் எச்சரிக்கையுடன் விளையாடினார். அழுத்தம் அவரது முகத்தில் தெரிந்தது. அவுட் ஆகிவிடுவோம் என்ற அச்சம் அவரிடம் இருந்தது. ஆனால் இப்போது அது போய் விட்டது. அவர் தன் பேட்டிங்கை மகிழ்ச்சியுடன் விளையாடுகிறார்.

அவர் ஒரு மகத்தான வீரர். ஆனால் அவரும் ஒரு மனிதன்தானே. அவரை 14 வயது முதல் நான் நெருக்கமாக கவனித்து வருகிறேன். அவர் தோல்வி, அவுட் ஆகிவிடுவோம் என்ற பயத்தில் விளையாடினார் என்பதை என்னால் உணர முடிந்தது. இதனால் அப்போது கூறிய கருத்தை இப்போது மாற்றிக் கொள்ள விரும்பவில்லை என்றார். ஆனால், டெண்டுல்கரின் ஆட்டம் தற்போது புத்துணர்வு அளிப்பதாக உள்ளது என்று கூறிய சஞ்சய் மஞ்சுரேக்கர், இலங்கைக்கு எதிரான இறுதிப் போட்டியில். அவர் அடித்த பேக் ஃபுட் கவர் டிரைவ், பிரண்ட் ஃபுட் கவர் டிரைவ் ஆகியவற்றைப் பார்க்கும் போது தற்போது அவர் 5 ஆண்டுகளுக்குப் பின்னால் சென்றது போல் தெரிகிறது. இப்போது அவர் சுதந்திரமாக விளையாடுகிறார் என்றார்.

சம்பியன் கோப்பையை வென்று வூல்மருக்கு அர்ப்பணிப்போம் – பாகிஸ்தான் கப்டன் யூனுஸ்கான்

190909pakistan-cricket-team.jpgதென் ஆபிரிக்காவில் நடைபெறும் சம்பியன்ஸ் கோப்பையை வென்று மறைந்த பயிற்சியாளர் வூல்மருக்கு அர்ப்பணிப்போம் என்று பாகிஸ்தான் கப்டன் யூனுஸ்கான் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த தென் ஆபிரிக்காவைச் சேர்ந்த பொப் வூல்மர் கடந்த 2007ஆம் ஆண்டு மே. தீவில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட்டின் போது (50 ஓவர்) மர்மமான முறையில் இறந்தார். பிறகு அவரது மரணம் இயற்கையானது என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அவரது மண்ணில் நடக்கும் சம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் வாகை சூடி கோப்பையை அவருக்கு அர்ப்பணிப்போம் என்று பாகிஸ்தான் அணியின் கப்டன் யூனுஸ்கான் சூளுரைத்து இருக்கிறார்.

8 அணிகள் பங்கேற்கும் சம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் வருகிற 22ம் திகதி தென் ஆபிரிக்காவில் தொடங்குகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் தனது தொடக்க ஆட்டத்தில் 23ம் திகதி மே. தீவை எதிர்கொள்கிறது.

தென்ஆபிரிக்கா புறப்படுவதற்கு முன்பாக யூனுஸ்கான் கராச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது, நாங்கள் வூல்மரின் சொந்த ஊருக்கு (தென் ஆபிரிக்கா) போகிறோம். சம்பியன்ஸ் கோப்பையை வென்று அவரது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியை கொண்டாடுவோம் என்று நம்புகிறேன்.

கடந்த 2006ஆம் ஆண்டு சம்பியன்ஸ் கோப்பை போட்டி இந்தியாவில் நடந்த போது வூல்மர் எங்களுடன் இருந்தார். அந்த போட்டியின் கடைசி நேரத்தில் ஊக்கமருந்து சோதனையில் சிக்கி அக்தர், முகமது ஆசிப் ஆகியோர் விளையாட முடியாமல் போனதால் வூல்மர் மிகுந்த ஏமாற்றம் அடைந்தார். அந்த தொடரில் முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றோம். அடுத்த இரு ஆட்டங்களில் தோல்வி கண்டோம். இந்த கோப்பையை வெல்ல வேண்டும் என்பதில் அவர் ஆர்வமாக இருந்தார்.

வூல்மர் மறைவு பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு மிகப் பெரிய இழப்பு, இதனால் நாங்கள் இன்னும் வருத்தப்படுகிறோம். அவரது மறைவுக்குப் பிறகு அவரது மனைவி மற்றும் மகன்களுடன் நான் அவ்வப்போது தொடர்புகொண்டு பேசி வருகிறேன்.  கடந்த ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடந்த 20 ஓவர் உலக கோப்பையை வென்ற போது அக் கோப்பையை வூல்மருக்கு அர்ப்பணிப்பதாக அறிவித்தோம்.  இந்த முறையும் கோப்பையை வென்று அவருக்கு சமர்ப்பிப்போம்.  ஏனெனில் இது அவர் வாழ்ந்த நாடு என்றார்.

வடமாகாண விளையாட்டுப் போட்டிகள் யாழ்ப்பாணத்தில் ஆரம்பம். – வவுனியா நிவாரணக் கிராமங்களிலிருந்தும் மாணவர்கள் பங்கேற்பு

190909images-sports-games.jpgவட மாகாண விளையாட்டுப் போட்டிகள் யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று கோலாகலமாக ஆரம்பமாகியது. கிளிநொச்சி, முல்லைத்தீவு மாணவர்களும் போட்டிகளில் கலந்துகொள்ள ஏற்பாடு செய்யும் வகையில் வவுனியா நிவாரணக் கிராமங்களிலிருந்தும் மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ். அரச அதிபர் கே. கணேஸ், வடமாகாண பிரதம செயலர் இளங்கோ உட்பட பிரமுகர்கள் துரையப்பா விளையாட்டரங்கு நுழைவாயிலிருந்து  மேள தாளங்களுடன் அழைத்துச் செல்லப்பட்டனர்.

தேசியக் கொடியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும், மாகாண கொடியை ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறியும் ஏற்றி வைத்தனர். இதனைத் தொடர்ந்து அனைவரும் வெள்ளைப் புறாக்களை பறக்கவிட்டனர். இதனைத் தொடர்ந்து போட்டிகள் ஆரம்பமாகின. முதலாவதாக 1500 மீற்றர் ஓட்டப் போட்டிகள் நடைபெற்றன. போட்டிகள் ஆரம்பமாவதற்கு முன்னர் ஒலிம்பிக் தீபத்தை வவுனியா, யாழ். மாணவர்கள் ஏந்திச் சென்றமை குறிப்பிடத் தக்கது.

வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ். மாவட்டங்களை உள்ளடக்கியதாக நடைபெறும் இவ்விளையாட்டுப் போட்டிகள், நாளை ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்படுகிறது.

சூரிய மண்டலத்துக்கு வெளியே பாறையிலான முதல் கிரகம் கண்டுபிடிப்பு

சூரிய மண்டலத்துக்கு வெளியே பாறையிலான முதல் கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

சூரிய மண்டலத்தில் பூமியில் மட்டும் தான் மனிதர்கள் வாழ்கிறார்கள். ஆனால் மற்ற கிரகங்களிலும் உயிரினங்கள் இருக்கலாம் என்ற எண்ணம் விஞ்ஞானி களுக்கு இருக்கிறது- இதனால் வேறு கிரகங்களில் உயிரினம் இருக்கிறதா என்பதை கண்டு பிடிப்பதற்கான தேடும் படலத்தை விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ளனர்.

சூரிய மண்டலத்துக்கு வெளியே 300க்கும் மேற்பட்ட கிரகங்கள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். ஆனால் அவை உறுதியில்லாதவை. உயிரினம் உயிர் வாழ வேண்டுமானால் உறுதியான தரைப்பகுதி இருந்தால்தான் முடியும். 300க்கும் மேற்பட்ட கிரகங்களும் வெறும் வாயுவால் ஆனவை.

சமீபத்தில் ஐரோப்பிய விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் உறுதியான பாறை வடிவிலான ஒரு கிரகம் கண்டுபிடிக்கப்பட்டது. இது சூரிய மண்டலத்துக்கு வெளியே உள்ள முதல் பாறை கிரகம் ஆகும். பாறை வடிவிலான கிரகம் கண்டுபிடித்து இருப்பது முக்கியமானதாக கருதப்படுகிறது.

இதற்கு கோரோட் – 7 டி என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது. நாம் கண்டுபிடித்த கிரகங்களிலேயே பூமி மாதிரி இருப்பது இந்த கிரகம் தான் என்று ஜெர்மனியில் உள்ள துரிங்கர் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் டைரக்டர் ஆர்ட்டி ஹார்ட்செஸ் தெரிவித்தார்.

உலகின் மிக நீள தொலைக்காட்சி நெடுந்தொடர் முடிவுக்கு வருகிறது

guidinglightsoapopera.jpgஉலகி லேயே மிக நீளமான தொலைக்காட்சித் தொடரான ‘கைடிங் லைட்’ எனும் அமெரிக்க நெடுந்தொடர் 72 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது முடிவுக்கு வருகிறது.

1937ஆம் ஆண்டு என்.பி.சி. வானொலியில் தினந்தோறும் 15 நிமிடங்கள் என்று ஆரம்பித்த இத்தொடர் மக்களின் பேராதரவுடன் 1952ஆம் வருடம் தொலைக்காட்சித் தொடராக உருமாற்றம் பெற்றிருந்தது.

ஸ்பிரிங்ஃபீல்ட் என்ற கற்பனையான நகரத்தில் நடக்கும் காதல், கல்யாணம், கள்ளக் காதல், விவாகரத்து, அவ்வப்போதைய மர்மக் கொலை என்பதாக இந்த தொடர் சுவாரஸ்யத்துக்கு பஞ்சமில்லாமல் சென்றது.  ஆனால் பலவித தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பெருகிவிட்ட தற்போதைய சூழலில் இந்நிகழ்ச்சியின் பார்வையாளர் எண்ணிக்கை குறைந்துவந்தது.