கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

ICC Champions Trophy 2009/10 – நேரஅட்டவணை

the-glittering-trophy.bmpஐ.சி.சி சாம்பியன் கிண்ண ஆறாவது ஒரு நாள் கிரிக்கெட் தொடர் தென் ஆப்ரிக்காவில் நேற்று ஆரம்பமாகியது. மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்கும் இப்போட்டி நேரஅட்டவணை வருமாறு

Tue Sep 22          
14:30 local | 12:30 GMT 
18:00 IST  1st Match, Group B – South Africa v Sri Lanka
SuperSport Park, Centurion    
 
Wed Sep 23          
14:30 local | 12:30 GMT
18:00 IST  2nd Match, Group A – Pakistan v West Indies
New Wanderers Stadium, Johannesburg  

Thu Sep 24         
09:30 local | 07:30 GMT
13:00 IST  3rd Match, Group B – South Africa v New Zealand
SuperSport Park, Centurion  

Fri Sep 25          
14:30 local | 12:30 GMT 
18:00 IST  4th Match, Group B – England v Sri Lanka
New Wanderers Stadium, Johannesburg  

Sat Sep 26         
09:30 local | 07:30 GMT
13:00 IST  5th Match, Group A – Australia v West Indies
New Wanderers Stadium, Johannesburg  

Sat Sep 26          
14:30 local | 12:30 GMT
18:00 IST  6th Match, Group A – India v Pakistan
SuperSport Park, Centurion 

Sun Sep 27
09:30 local | 07:30 GMT
13:00 IST  7th Match, Group B – New Zealand v Sri Lanka
New Wanderers Stadium, Johannesburg    
 
Sun Sep 27          
14:30 local | 12:30 GMT
18:00 IST  8th Match, Group B – South Africa v England
SuperSport Park, Centurion  
 
Mon Sep 28          
14:30 local | 12:30 GMT
18:00 IST  9th Match, Group A – Australia v India
SuperSport Park, Centurion
 
Tue Sep 29          
14:30 local | 12:30 GMT
18:00 IST  10th Match, Group B – England v New Zealand
New Wanderers Stadium, Johannesburg
 
Wed Sep 30
09:30 local | 07:30 GMT
13:00 IST  11th Match, Group A – Australia v Pakistan
SuperSport Park, Centurion
 
Wed Sep 30          
14:30 local | 12:30 GMT
18:00 IST  12th Match, Group A – India v West Indies
New Wanderers Stadium, Johannesburg  
 
Fri Oct 2          
14:30 local | 12:30 GMT
18:00 IST  1st Semi-Final – TBC v TBC (A1 v B2)
SuperSport Park, Centurion  
 
Sat Oct 3          
14:30 local | 12:30 GMT
18:00 IST  2nd Semi-Final – TBC v TBC (B1 v A2)
New Wanderers Stadium, Johannesburg
 
Mon Oct 5          
14:30 local | 12:30 GMT
18:00 IST  Final – TBC v TBC
SuperSport Park, Centurion 

ஐ. ம. சு. மு. வேட்பாளர் நிஷாந்த விளக்கமறியலில்

southern_province2.jpgதென் மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிடும் நிஸாந்த முத்துஹெட்டிகம எதிர்வரும் 28ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமாகிய நிமல் மெதிவக்க தெரிவித்தார்.

காலி மாவட்ட வேட்பாளராகப் போட்டியிடும் இவர் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் பொலிஸ் மா அதிபருக்கும் பொலிஸாருக்கும் எதிராகக் கருத்து தெரிவித்தமையால் அவர் நேற்று முன்தினம் (21) பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.  காலி மஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இவர் செப்டம்பர் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

இவரது வழக்கை நேற்று மீள விசாரணைக்கு எடுத்துக்கொண்ட காலி மஜிஸ்திரேட் நீதவான் மீண்டும் எதிர்வரும் 28ஆம் திகதி வரை இவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். வேட்பாளர் நிஷாந்த, அதே கட்சியில் போட்டியிடும் பிரபல நடிகை அனார்க்கலி ஆகர்ஷாவுக்கு இடையூறு ஏற்படுத்தினாரென அவர் மீது நடிகை பொலிஸாரிடம் புகார் தெரிவித்திருந்தார்.

இதற்கமைய பொலிஸார் செயற்பட்டு நடவடிக்கை எடுத்தனர். இது தொடர்பாக செய்தியாளர் மாநாடொன்றை நடத்திய நிஷாந்த, பொலிஸ் தம்மிடம் அடாவடித்தனமாக நடந்து கொண்டதாகக் கூறி தகாத வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டார். பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸாருக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையிலான கருத்துக்களையடுத்தே இவர் கைதுசெய்யப்பட்டதாக தெரிய வருகிறது.

தெற்காசிய நாடுகளுக்கான விளையாட்டுப் போட்டி: முதற் தடவையாக பெண்களுக்கான உதைப்பந்தாட்டம்

பங்களாதேஷில் நடைபெறவுள்ள தெற்காசிய நாடுகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியின் போது முதற் தடவையாக பெண்களுக்கான உதை பந்தாட்ட நிகழ்ச்சியை நடத்துவதற்கு தீர்மானிக் கப்பட்டுள்ளது.

தெற்காசிய நாடுகளுக்கிடையிலான விளையாட்டு விழாவில் பெண்களுக்கான உதைபந்தாட்டத்தையும் சேர்த்துக் கொள்ளுமாறு பங்களாதேஷ் வேண்டுகோள் விடுத்திருந்தது.  அதனை தொடர்ந்து ஆரம்பத்தில் 23 வயதுக்குட்பட்ட குழுக்களை உள்வாங்குவாக தீர்மானிக்கப்பட்ட போதிலும் பின்னர் வயது கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது.

இப்போட்டியில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், மாலைதீவு மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் பங்கேற்கவுள்ளன. இப் போட்டியில் கலந்து கொள்ளும் இலங்கை அணியை தெரிவு செய்வதற்கான தெரிவு போட்டிகள் இம் மாதம் 29 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொழும்பு சீ. ஆர். சி. மைதானத்தில் நடைபெறவுள்ளன.

சவால்களை எதிர்நோக்கினாலும் கொள்கையில் உறுதி : கி.மா. முதலமைச்சர்

210909pillayan.jpgதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தமது கொள்கைகளையும் எதிர்காலத் திட்டங்களையும் மக்கள் மத்தியில் முன்னெடுத்துச் செல்லும் போது பல்வேறு சவால்களை எதிர்நோக்கினாலும் தமது கொள்கையில் உறுதியுடன் இருப்பதாக அக்கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

வாழைச்சேனை பிரதேசத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கிராமிய மட்ட அங்கத்தவர்களுக்கான உறுப்புரிமை வழங்கும் வைபவம் பேத்தாழை குகனேசன் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய கிழக்கு மாகாண முதலமைச்சர்,

“தமிழ் மக்களின் அரசியல் உரிமை, அபிலாஷை மற்றும் தனித்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டதே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கொள்கையாகும். சமூக ரீதியான பிராந்திய அரசியல், குறிப்பாக தமிழர்கள் சார்ந்த பிரச்சினைகளை முன்னுரிமைப்படுத்துவதற்குரிய ஒரு கட்சியாகவே இன்று எமது கட்சி விளங்குகின்றது. நீண்டகால இடைவெளிக்குப் பின்னர் கிழக்கு மாகாணத்தில் ஓர் அரசியல் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது எமது கட்சியாகும். கிழக்கில் இதுவரைக்கும் அரசியல் தலைமைத்துவத்தில் ஸ்திரமற்ற நிலையே காணப்பட்டு வருகின்றது.இதனை மாற்றி அமைக்க வேண்டும். என்றார். 

இலங்கை அணி தோல்வி அடைந்து வெளியேறியது

1509fiba-news203a.jpgஇந்தி யாவில் நடைபெற்றுவரும் 23 ஆவது ஆசிய மகளிர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை விளையாடிய கடைசி லீக் ஆட்டத்திலும் தோல்வி அடைந்து வெளியேறியது.

சென்னையில் நடைபெற்றுவரும் இந்த போட்டியில் இலங்கை மகளிர் கூடைப்பந்து அணி நேற்றைய தினம் பிலிப்பைன்ஸ் அணியை சந்தித்தது. இதில் தொடர்ந்தும் சோபிக்கத் தவறிய இலங்கை அணி 5570 என்ற புள்ளிகள் அடிப்படையில் தோல்வி அடைந்தது. இலங்கை அணி சார்பாக பிரெமிலா பேருவலகே மற்றும் இனோகா ஜுவான் ஆகியோர் அதிகபட்சமாக தலா 12 புள்ளிகளைப் பெற்றனர்.

இதன்மூலம் இலங்கை அணி இம்முறை ஆசிய மகளிர் கூடைப்பந்து போட்டியில் விளையாடிய 5 லீக் ஆட்டங்களிலும் தோல்வியை சந்தித்து தொடரில் இருந்து வெளியேறியது. “பி’ பிரி வில் விளையாடிய இலங்கை அணி இதற்கு முன்னர் மலேசியா (4581), கஸகஸ்தான் (4094), லிபியா (5496) மற்றும் உஸ்பெகிஸ்தான் (4889) அணிகளுடனான போட்டிகளிலும் தோல்வியை சந்தித்தது.

இதன்படி 12 நாடுகள் பங்கேற்றுள்ள இம்முறை ஆசிய மகளிர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை அணி கடைசி இடத்தை பிடித்தது.

ஐ.சி.சி சாம்பியன் கிண்ண கிரிக்கெட் தொடர் : Sri Lanka won by 55 runs (D/L method)

kumar-sangakkara.jpgகிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐ.சி.சி சாம்பியன் கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று துவங்குகிறது. முதல் போட்டியில் தென் ஆப்ரிக்க அணி,  இலங்கையை எதிர்கொள்கிறது. சாம்பியன் கிண்ண ஆறாவது ஒரு நாள் கிரிக்கெட் தொடர் தென் ஆப்ரிக்காவில் இன்று துவங்குகிறது. மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்கின்றன.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) ஒரு நாள் தரப்பட்டியலில் நீண்ட நாட்களாக முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த அவுஸ்திரேலிய அணியை பின்னுக்குத் தள்ளியது தென் ஆப்ரிக்கா. தற்போது ஒரு நாள் போட்டிகளில் சுப்பர் போர்மில் இருக்கும் தென் ஆப்ரிக்கா அணி,  இந்த முறை சாம்பியன்ஸ் கோப்பை வெல்வதில் உறுதியாக உள்ளது.

தென் ஆப்ரிக்காவின் துடுப்பாடட வரிசை எதிரணியை மிரட்டுகிறது. கேப்டன் ஸ்மித், காலிஸ்,  டுமினி,  ஆம்லா, பவுச்சர் ஓட்டங்களைக்  குவிக்க காத்திருக்கின்றனர். பயிற்சி போட்டியின் போது விலா எலும்பில் காயமடைந்த கிப்ஸ் இன்றைய போட்டியில் பங்கேற்காதது சற்று பின்னடைவு தான். பந்து வீச்சில்; ஸ்டைன்,  நிடினி, பார்னெல் அசத்த உள்ளனர். கடந்த 1998 ம் ஆண்டு நடந்த முதல் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தென் ஆப்ரிக்கா கோப்பை வென்று அசத்தியது. அதற்குப் பின் இத்தொடரில் சாதிக்க வில்லை. தற்போது 11 ஆண்டுகளுக்குப் பின் கோப்பை வெல்லும் முனைப்பில் உள்ளது.

தென் ஆப்ரிக்காவுக்கு சற்றும் குறைவில்லாத அணியாக களமிறங்குகிறது இலங்கை. தில்ஷன்,  ஜயசுரியாவின் அதிரடியும்,  முரளி, மெண்டிஸ் சுழலும் கைகொடுக்கும் பட்சத்தில்,  இன்றைய போட்டியில் தென் ஆப்ரிக்காவை இலங்கை அணி எளிதாக வீழ்த்தலாம். அனுபவ வீரர்களான சங்ககரா,  ஜெயவர்தனா நம்பிக்கை அளிக்கின்றனர்.

வலுவான துடுப்பாட்ட வரிசை கொண்ட இலங்கை அணிக்கு, சமரவீரா, கண்டம்பி, கபுகெதரா ஆகியோரை உள்ளடக்கிய மிடில் ஓடர் கூடுதல் பலம் அளிக்கிறது. மாலிங்க,  குலசேகராவின் வேகப்பந்து வீச்சு, தென் ஆப்ரிக்காவை மிரட்டும் என்பதில் சந்தேகமில்லை.

தென் ஆப்ரிக்கா, இலங்கை அணிகள் இதுவரை 45 ஒரு நாள் போட்டிகளில் மோதி உள்ளன. இதில்,  தென் ஆப்ரிக்கா 22,  இலங்கை 21 வெற்றிகளை பதிவு செய்துள்ளன. 2 போட்டிகளுக்கு முடிவு இல்லை. சாம்பியன்ஸ் டிரொபி போட்டிகளில் இவ்விரு அணிகளும் இரண்டு முறை மட்டும் மோதி உள்ளன. இரண்டு போட்டியிலும் தென் ஆப்ரிக்காவே வென்று உள்ளது.

இவ்விரு அணிகள் மோதிய ஒரு நாள் போட்டிகளில், தென் ஆப்ரிக்காவின் அதிக பட்ச ஸ்கோர் 317 (2002, செஞ்சரியன்). குறைந்த பட்ச ஸ்கோர் 154 (1993,  கொழும்பு). இலங்கை அணியின் அதிக பட்ச ஸ்கோர் 308 (2004, கொழும்பு). குறைந்த பட்ச ஸ்கோர் 98 (1993,  கொழும்பு).

ICC Champions Trophy – Group B
Sri Lanka 319/8 (50.0 ov)
South Africa won the toss and elected to field
22 September 2009 – day/night (50-over match)
       
 Sri Lanka innings
 TM Dilshan  c Morkel b Steyn  106
 ST Jayasuriya  lbw b Steyn  10 
 KC Sangakkara*†  c & b Duminy  54
 DPMD Jayawardene  c Duminy b Parnell  77
 TT Samaraweera  c van der Merwe b Parnell  37 
 AD Mathews  b Steyn  15
 SHT Kandamby  c Duminy b Parnell  6
 KMDN Kulasekara  run out (van der Merwe/Steyn)  1
 M Muralitharan  not out  0  
 Extras (lb 5, w 5, nb 3) 13     
      
 Total (8 wickets; 50 overs) 319 (6.38 runs per over)
To bat SL Malinga, BAW Mendis 
Fall of wickets1-16 (Jayasuriya, 2.2 ov), 2-174 (Sangakkara, 27.6 ov), 3-181 (Dilshan, 29.1 ov), 4-297 (Jayawardene, 46.3 ov), 5-297 (Samaraweera, 46.4 ov), 6-314 (Kandamby, 48.6 ov), 7-317 (Kulasekara, 49.4 ov), 8-319 (Mathews, 49.6 ov) 
        
 Bowling
 DW Steyn 9 2 47 3
 WD Parnell 10 0 79 3
 JH Kallis 7 0 43 0
 JA Morkel 4 0 39 0
 J Botha 9 0 53 0
 RE van der Merwe 10 0 42 0
 JP Duminy 1 0 11 1

  South Africa innings (target: 262 runs from 37.4 overs)
 
GC Smith*  b Mendis  58 
 HM Amla  b Mathews  2 
 JH Kallis  c Mathews b Mendis  41 
 AB de Villiers  c Jayawardene b Malinga  24 
 JP Duminy  b Mendis  0
 MV Boucher†  lbw b Mathews  26 
 JA Morkel  not out  29  
 J Botha  c Mathews b Malinga  21
 RE van der Merwe  not out  3
 Extras (w 2) 2     
      
 Total (7 wickets; 37.4 overs) 206 (5.46 runs per over)
Did not bat DW Steyn, WD Parnell 
Fall of wickets1-9 (Amla, 2.6 ov), 2-90 (Smith, 14.1 ov), 3-113 (Kallis, 20.3 ov), 4-113 (Duminy, 20.4 ov), 5-142 (de Villiers, 26.2 ov), 6-163 (Boucher, 31.2 ov), 7-198 (Botha, 35.6 ov) 
        
 Bowling
 SL Malinga 7.4 0 43 2
 KMDN Kulasekara 7 0 44 0
  AD Mathews 8 1 43 2
 M Muralitharan 8 0 46 0  
 BAW Mendis 7 0 30 3

  • Rain: South Africa – 206/7 in 37.4 overs (JA Morkel 29, RE van der Merwe 3)
  • Points Sri Lanka 2, South Africa 0
     
    Player of the match TM Dilshan (Sri Lanka)

    வட மாகாண மாவட்ட போட்டிகள் நிறைவு – யாழ் மாவட்டம் முதலாம் இடம்

    northa-pro-spo.jpgவட மாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் வட மாகாண மாவட்டங்களுக்கு இடையே நடத்தப்பட்ட விளையாட்டு விழா நேற்று இரவு நிறைவு பெற்றது. கடந்த மூன்று நாட்களாக யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் இடம் பெற்ற இந்தப் போட்டிகளில் யாழ் மாவட்டம் வவுனியா மாவட்டம் மன்னார் மாவட்டம் கிளிநொச்சி மாவட்டம் முல்லைத்தீவு மாவட்ட அணிகள் கலந்து கொண்டன.

    இறுதி நாள் நிகழ்வுகள் வட மாகாண கல்வி விளையாட்டு அமைச்சின் செயலாளர் எல். இளங்கோவன் தலைமையில் இடம் பெற்றன. இந் நிகழ்வில் பிரதம விருந்தினாகளாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வட மாகாண ஆளுனர்  ஜீ.எ.சந்தரஸ்ரீ ஆகியோர் கலநது கொணடு பரிசில்களை வழங்கி கௌரவித்தார்கள். 151 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தை யாழ் மாவட்டமும் 114 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தை வவுனியர் மாவட்டமும் 94 புள்ளகளைப் பெற்று மன்னார் மாவட்டம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டது.

    அடுத்தாண்டு வட மாகாண விளையாட்டுப் பேர்டிகள் கிளிநோச்சி மாவட்டத்தில் நடைபெறும் என வட மாகாண விளையாட்டுத் தினைகக்ளத்தின் உதவிப் பணிப்பாளர் என் அண்ணாத்துரை அறிவித்துள்ளார் .

    கடல் உள்வாங்கி சேற்றில் சிக்கி இறந்த மீன்கள்

    தூத்துக்குடி கடல் பகுதியில் திடீரென கடல் உள்வாங்கியதால் ஆயிரக்கணக்கான மீ்ன்கள் கடலோரத்தில் உள்ள சேற்றில் சிக்கி இறந்தன. இந்த மீன்களை மீனவர்கள் அள்ளிச் சென்றனர். தூத்துக்குடி பீச்ரோட்டில் உள்ள கடல் பகுதியில் நேற்று காலை கடல்நீர் திடீரென உள்வாங்கியது. நீண்ட தூரத்துக்கு கடல் உள்வாங்கி காணப்பட்டதால் அந்த பகுதி, வற்றிய குளம் போல காட்சி அளித்தது.

    பச்சை வயல்வெளி போல காணப்பட்டது. சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு தண்ணீர் இல்லாததால் ஏராளமான மீன்கள் சகதியில் சிக்கி கிடந்தன. இதனை கொத்த பறவைகள் குவிந்தன. சகதிக்குள் பாம்புகளும், மீன்களும் அதிக அளவில் சிக்கியிருந்தன. இதைத்தொடர்ந்து பொது மக்கள் சகதியில் சிக்கி கிடந்த மீன்களை சேகரித்தனர். ஏராளமான மீன்களை மீனவர்களும் எடுத்துச் சென்றனர்.

    செமென்யா விவகாரம் ஐ.நா.விடம் கொண்டு செல்லப்பட்டது

    caster_semenya_testosterona.jpgபெர்லினில் நடைபெற்ற உலக தடகள 800மீ. ஓட்டத்தில் முதலிடம் வந்து தங்கம் வென்ற தென் ஆப்பிரிக்க வீராங்கனை கேஸ்டர் செமென்யாவின் உடலமைப்பில் கோளாறு உள்ளது, அவர் ஆணா பெண்ணா என்று தெரியவில்லை என்று கூறி அவர் மீது பாலின பரிசோதனை நடத்தப்பட்டது. இதனையடுத்து ஏமாற்றமடைந்த தென் ஆப்பிரிக்க அரசு இந்த விவகாரத்தில் நீதி வழங்குமாறு ஐ. நா.விடம் முறையிட்டுள்ளது.

    தென் ஆப்பிரிக்க அமைச்சர் நொலுதாண்டொ மெயெந்தே சிபியா ஐ. நா.விடம் இது குறித்து புகார் செய்துள்ளார். 800மீ ஓட்டத்தில் முதலிடம் பெற்ற செமென்யாவை தென் ஆப்பிரிக்கா முழுதும் மக்களும், அரசியல் தலைவர்களும் போற்றிப் புகழ்ந்து, கொண்டாடி வருகின்றனர். நெல்சன் மன்டேலாவையும் அவர் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் செமென்யா மீது நடத்தப்பட்ட பாலின சோதனை பெண்ணினத்துக்கு எதிரானது என்றும்,  நிறவெறித்தனமானது என்றும் சாடியுள்ளது. சோதனை முடிவுகளை ஐ.ஏ.ஏ.எஃப். இன்னமும் வெளியிடவில்லை. ஆனால் முடிவுகள் செமென்யாவிற்கு சாதகமாக வராவிட்டாலும் அவரது சாதனையை திரும்பப் பெறப்போவதில்லை என்று ஐ.ஏ.ஏ.எஃப். தெரிவித்துள்ளது. ஆனால் அவர் வேறு எந்த ஓட்டப்பந்தயங்களிலும் கலந்து கொள்ள முடியாது.

    இதற்கிடையே அவருக்கு ஆணுறுப்பு, பெண்ணுறுப்பு இரண்டுமே இருப்பதாக ஆஸ்ட்ரேலிய பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளதும் இந்த விவகாரத்தை சர்ச்சைக்குரியதாக்கியது. இந்த நிலையில்தான் தென் ஆப்பிரிக்க அரசு ஐ. நா.விடம் தீர்வு கோரியுள்ளது.

    கிழக்கு இலக்கிய பெருவிழா 24, 25 ம் திகதிகளில்

    கிழக்கு மாகாண இலக்கியப் பெருவிழா எதிர்வரும் 24 ம், 25 ம், திகதிகளில் அம்பாறை டீ. எஸ். சேனநாயக்கா கல்லூரியில் இடம் பெறவுள்ளது. கிழக்கு மாகாண கல்வித் திணைக்களமும், கல்விப் பண்பாட்டலுவல்கள் அமைச்சும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளனர். இந்த இலக்கிய விழாவையொட்டிய ஆய்வரங்கு நிகழ்வு அக்கரைப்பற்று அல்ஸிராஜ் மகா வித்தியாலயத்தில் எதிர்வரும் 24 ஆம் திகதி (24/9/2009) இடம் பெறவுள்ளதாக கலாசார உத்தியோகத்தர் க. அன்பழகன் தெரிவித்தார்.

    இந்த ஆய்வரங்கில் “கிழக்கிலங்கையின் நாட்டார் நம்பிக்கைகள்” எனும் தலைப்பில் எம். எஸ். அபுல்ஹஸனும், “கிழக்கிலங்கையின் கூத்து மரபு” எனும் தலைப்பில் நடராஜரத்தினமும், “கிழக்கிலங்கையின் நாட்டார் பாடல்கள்” எனும் தலைப்பில் ரமீஸ் அப்துல்லாவும், “கிழக்கிலங்கையின் நாட்டார் பட்டப் பெயர்கள்” – எனும் தலைப்பில் த. மலர்ச் செல்வனும், “கிழக்கிலங்கையின் நாட்டாரியல் பழமொழிகள்” – எனும் தலைப்பில் எஸ்.  முத்துமீரானும், “கிழக்கிலங்கையின் நாட்டார் ஆய்வுகள் அன்றும் இன்றும்” எனும் தலைப்பில் கலாநிதி. செ. யோகராசாவும், “கிழக்கிலங்கையின் இடப்பெயர்கள்” எனும் தலைப்பில் ஜலீலும், “கிழக்கிலங்கையின் நாட்டாரியல் வாய்மொழி மொழிகள் எனும் தலைப்பில் பேராசிரியர் சண்முகதாஸ¤ம், “கிழக்கிலங்கை மக்களின் வாழ்வும் வளமும்” எனும் தலைப்பில் எம். ஏ. மஜீத்தும், “கிழக்கிலங்கையின் நாட்டார் அறிவியல் எனும் தலைப்பில் தேனூரானும், “கிழக்கிலங்கையின் கிராமிய சிறு தெய்வ சடங்கு” எனும் தலைப்பில் முருகேசு தயாநிதியும் கட்டுரைகளைச் சமர்ப்பிக்கவுள்ளனர்.

    இவ்வாண்டுக்கான கிழக்கு மாகாண இலக்கியப் பெருவிழாவில் நாடகம், நாட்டு கூத்து வளர்ச்சிக்காக காத்திரமான பணியாற்றிவரும் பேராசிரியர் சி. மெளனகுரு தேசிய விருது வழங்கி கெளரவிக்கப்படவுள்ளார்.

    இவ்விழாவில் இவ்வாண்டுக்கான கிழக்கு மாகாண முதலமைச்சர் விருது பெரும் கலைஞர்களின் விபரம் வருமாறு, அக்கரை மாணிக்கம் (வ. ஞானமாணிக்கம்)  த. தில்லைமுகிலன், ஆ. சிங்கராயர், செல்வி மணிமேகலா கார்த்திகேசு, இராமன் பிச்சை, ஏ. ஆர். ஏ. பிஷ்றுல்ஹாபி, என். மணிவாசகன், ஏ. முஸம்மில் இ. அரசகேசரி, க. தருமரெத்தினம், மா. செல்வராசா, க. செல்வத்தம்பி, பாவலர் சாந்திமுகைதீன் ஆகியோர் நாடகம், நாட்டுக் கூத்து, கவிதை, இலக்கியம், உயர் கல்வி, கைவினை, எழுத்து ஆகிய துறைகளுக்காக தெரிவு செய்யப்பட்டு கெளரவிக்கப்படுகின்றனர்.