பங்களாதேஷில் நடைபெறவுள்ள தெற்காசிய நாடுகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியின் போது முதற் தடவையாக பெண்களுக்கான உதை பந்தாட்ட நிகழ்ச்சியை நடத்துவதற்கு தீர்மானிக் கப்பட்டுள்ளது.
தெற்காசிய நாடுகளுக்கிடையிலான விளையாட்டு விழாவில் பெண்களுக்கான உதைபந்தாட்டத்தையும் சேர்த்துக் கொள்ளுமாறு பங்களாதேஷ் வேண்டுகோள் விடுத்திருந்தது. அதனை தொடர்ந்து ஆரம்பத்தில் 23 வயதுக்குட்பட்ட குழுக்களை உள்வாங்குவாக தீர்மானிக்கப்பட்ட போதிலும் பின்னர் வயது கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது.
இப்போட்டியில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், மாலைதீவு மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் பங்கேற்கவுள்ளன. இப் போட்டியில் கலந்து கொள்ளும் இலங்கை அணியை தெரிவு செய்வதற்கான தெரிவு போட்டிகள் இம் மாதம் 29 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொழும்பு சீ. ஆர். சி. மைதானத்தில் நடைபெறவுள்ளன.