::விளையாட்டு

::விளையாட்டு

இலங்கை மற்றும் சர்வதேச விளையாட்டுச் செய்திகள்.

ஜிம்பாப்வேயை வங்கதேசம் வீழ்த்தியது

cricket1.jpg
ஜிம்பாப்வேயில் உள்ள பலவாயோ மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற வங்கதேச-ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அஷ்ரஃபுல் 103 ரன்கள் எடுத்து வங்கதேச அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்தார்.

வெற்றி பெறத் தேவையான 208 ரன்களை எடுக்க களமிறங்கிய வங்கதேசம் தமீம் இக்பால், சித்திக் மூலம் 4 ஓவர்களில் 30 ரன்கள் என்ற அதிரடித் துவக்கத்தை பெற்றது. சித்திக் 12 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ஆனால் அதன் பிறகு ஜோடி சேர்ந்த அஷ்ரஃபுல்-தமீம் இணை 22 ஓவர்களில் 137 ரன்களைச் சேர்த்தனர். தமீம் இக்பால் 68 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தபோது வங்கதேசம் 25.4 ஓவர்களில் 167 ரன்கள் எடுத்து வெற்றிக்கு அருகில் வந்தது.

மொகமது அஷ்ரஃபுல் 102 பந்துகளில் 12 பவுண்டரிகள் 2 சிக்சர் சகிதம் தன் சதத்தை எட்டினார். மறு முனையில் ராகிபுல் ஹஸன் 11 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். வங்கதேசம் 34.3 ஓவர்களில் 211/2 என்று அபார வெற்றி பெற்றது. 5 போட்டிகள் கொண்ட இந்த ஒரு நாள் தொடரில் வங்கதேசம் 1- 0 என்று முன்னிலை பெற்றுள்ளது.

இங்கிலாந்து இன்னிங்ஸ் தோல்வி; டெஸ்ட் தொடர் சமநிலை

cricket.jpgஹெடிங் லேயில் நடைபெற்ற ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் 4-வது போட்டியில் முதல் இன்னிங்ஸில் 343 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்ட்ரேலியா இங்கிலாந்து அணியை இரண்டாவது இன்னிக்ஸில் 263 ரன்களுக்கு சுருட்டி, 80 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. மிட்செல் ஜான்சன் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதன் மூலம் 5 டெஸ்ட்கள் கொண்ட இத்தொடர் தற்போது 1- 1 என்று சம நிலை எய்தியுள்ளது. 82/5 என்று துவங்கிய இங்கிலாந்து 3-வது நாள் ஆட்டம் உணவு இடைவேளைக்கு சற்று பிறகு 263 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படு தோல்வி தழுவியது.

82/5 என்று துவங்கிய இங்கிலாந்து உணவு இடைவேளையின் போது 250 ரன்களை எட்டியது. அதாவது 168 ரன்களை அந்த இரண்டு மணி நேர ஆட்டத்தில் குவித்தது இங்கிலாந்து.

8-வது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த கிரகாம் ஸ்வானும், ஸ்டூவர்ட் பிராடும் 12.3 ஓவர்களில் 108 ரன்களை மின்னல் வேக அதிரடியில் குவித்தனர். எந்த ஒரு விக்கெட்டுக்கும் இடையிலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த வேகத்தில் ரன் குவித்திருப்பது இதுவே இரண்டாவது அதிகபட்சமாகும். முதலில் நேதன் ஆஸ்ட்லேயும், கிறிஸ் கெய்ன்சும் ஜோடி சேர்ந்து இதைவிட வேகத்தில் ரன் குவித்ததாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

ஆஸ்டிலும், கெய்ன்ஸும் 10-வது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்து இங்கிலாந்துக்கு எதிராக 65 பந்துகளில் 118 ரன்களைக் குவித்துள்ளனர். இதுதான் அதிகபட்சம். தற்போது பிராட், ஸ்வான் பார்ட்னர்ஷிப் 8.64 என்ற ரன் விகிதத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

இவர்கள் அதிரடியில் சிக்கியவர் ஸ்டூவர்ட் கிளார்க் இவர் 11 ஓவர்களில் 74 ரன்கள் கொடுத்து விக்கெட்டுகள் எதையும் கைப்பற்றவில்லை. நேற்று முதலில் ஜேம்ஸ் ஆன்டர்சன் வந்தவுடனேயே ஹில்ஃபென் ஹாஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.

அதன் பிறகு ஸ்கோர் 120 ரன்களாக இருந்தபோது மேட் பிரையர் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். 120/7 என்று ஆனபோது ஸ்வானும், பிராடும் இணைந்தனர். முதலில் ஸ்வான் திணறினார். அதிர்ஷ்டவசமாக இரண்டு பவுண்டரிஅகளை அடித்தார். ஆனால் ஸ்டூவர்ட் கிளார்க் பந்தில் பிராட் அடுத்தடுத்து 4 பவுண்டரிகளை ஒரே ஓவரில் அடித்தார்.

அடுத்ததாக இரண்டு 5 ரன்கள் வைடு பால் வீசிய சிடில் அதே ஓவரில் 17 ரன்களை கொடுத்தார். பிராட் அரை சதம் நோக்கி முன்னேறினார். மீண்டும் ஸ்டூவர்ட் கிளார்க் ஓவரில் 16 ரன்கள் இந்த முறை அவரை விளாசியது கிரகாம் ஸ்வான்.

அதன் பிறகு 49 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 61 ரன்களை விளாசிய பிராட், பீட்டர் சிடில் பந்தில் ஆட்டமிழந்தார்.72 பந்துகளில் 7 பவுண்டரிகள் ஒரு சிக்சர் சகிதம் 62 ரன்கள் எடுத்து ஸ்வான் ஆட்டமிழந்தார். ஹார்மிசன் களமிறங்கி 4 பவுண்டரிகளை விளாசி 19 ரன்கள் எடுத்து ஜான்சனிடம் ஆட்டமிழந்தார். கடைசியாக இன்னிங்ஸின் 62-வது ஓவரின் 3-வது பந்தில் கிரகாம் ஆனியன்ஸின் ஸ்டம்ப்களை ஜான்சன் பெயர்க்க பாண்டிங் பின்பு கூறிய “நம்பமுடியாத” வெற்றியை ஆஸ்ட்ரேலியா 3 நாட்களுக்குள் பெற்றது.

ஆட்ட நாயகனாக சதம் எடுத்த ஆஸ்ட்ரேலிய வீரர் மார்கஸ் நார்த் தேர்வு செய்யப்பட்டார்.ஆஸ்ட்ரேலிய அணியில் ஜான்சன் 5 விக்கெட்டுகளையும் ஹில்ஃபென் ஹாஸ் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.

கனடா வீராங்கனையிடம் சானியா இறுதிப் போட்டியில் தோல்வி

sania-mirza.jpgகனடா நாட்டில் நடைபெற்ற வான்கூவர் ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் கனடா வீராங்கனை ஸ்டெஃபானி டுபாய்ஸிடம் சானியா மிர்சா 6- 1, 4- 6, 4- 6 என்ற செட் கணக்கில் இறுதிவரை கடுமையாக போராடி தோல்வி தழுவினார். இதனால் டுபாய்ஸ் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.

முதல் செட்டில் 6- 1 என்று ஸ்டெஃபானியை ஊதித் தள்ளினார் சானியா. ஆனால் உள் நாட்டு ரசிகர்களின் பலத்த ஆதரவுடன் விளையாடிய ஸ்டெஃபானி தன் ஆட்டத்தை பல்வேறு விதங்களில் மேம்படுத்த சானியா மிர்சா நிறைய தவறுகளிழைக்கத் தொடங்கினார்.

குறிப்பாக தனது சர்வை வெற்றி பெறுவதில் சானியா தடுமாறினார். கடந்த வாரம் லெக்சின்டனில் சாம்பியன் பட்டம் வென்ற சானியா, இந்த முறை வென்று தொடர்ச்சியாக இரண்டு சர்வதேச டென்னிஸ் பட்டங்களை வெல்லலாம் என்ற கனவில் இருந்தார். ஆனால் அந்த கனவு தகர்ந்தது. ரன்னராக வந்த சானியாவிற்கு 6,080 அமெரிக்க டாலர்கள் பரிசுத் தொகையாக கிடைத்தது.

சானியா பற்றி குறிப்பிட்ட ஸ்டெஃபானி, மற்ற ஆட்டங்களில் மற்ற கனடா வீராங்கனைகள் சானியாவை சற்றே களைப்பாக்கிவிட்டனர் இதனால் அவர் இந்த இறுதியில் சற்றே களைப்படைந்து விட்டார் என்றார்.

5-வது ஒரு நாள்: பாகிஸ்தான் வெற்றி

kumar.jpgஇலங்கை- பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி கொழும்பில் நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 279 ரன்கள் குவித்தது. இலக்கை துரத்திய இலங்கை 147 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. இதனால் இலங்கை தொடரை 3- 2 என்று கைப்பற்றியது.

பாகிஸ்தான் அணியில் கேப்டன் யூனிஸ்கான் 74 ரன்களும், மிஸ்பா உல்-ஹக் 73 ரன்களும் முகமது யூசுப் 43 ரன்களும், நவீத் உல்-ஹசன் 33 ரன்களும் எடுத்தனர்.

தொடர்ந்து ஆடிய இலங்கை அணிக்கு முதல் ஓவரிலேயே விக்கெட் சரிவு ஆரம்பமானது. அதன் பிறகு மளமளவென விக்கெட்டுகள் விழுந்தன. ஒரு கட்டத்தில் 74 ரன்களுக்குள் 8 பேர் வெளியேற்றப்பட்டனர். ஆமீரும், நவேது உல் ஹஸனும் முறையே 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதன் பிறகு கண்டம்பி (42 ரன்), பண்டாரா (31 ரன்) ஆகியோர் தாக்குப்பிடித்து ஆடியதால் இலங்கை அணியால் மூன்று இலக்க ஸ்கோரை தாண்ட முடிந்தது. முடிவில் 34.2 ஓவர்களில் இலங்கை அணி 147 ரன்களில் ஆட்டமிழந்து தோல்வி தழுவியது.

132 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. பாகிஸ்தான் தரப்பில் முகமது ஆமீர், நவீத் உல்-ஹசன் தலா 4 விக்கெட்டுகளும், அப்ரிடி 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர். பாகிஸ்தானுக்கு தொடர்ந்து கிடைத்த 2-வது வெற்றி இதுவாகும்.

பாகிஸ்தான் வீரர் நவீத் உல்-ஹசன் ஆட்டநாயகன் விருதினையும், இலங்கை வேகப்பந்து வீச்சாளர் துஷாரா (தொடரில் 9 விக்கெட் எடுத்துள்ளார்) தொடர்நாயகன் விருதினையும் பெற்றனர். அடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 12-ந்தேதி நடக்கிறது.

இலங்கையுடனான 4வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி இலகு வெற்றி

cricket1.jpgஇலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 4வது ஒருநாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 321 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கை – பாகிஸ்தான் அணிகள் மோதிய 4 வது போட்டி நேற்று கொழும்பு ஆர். பிரேமதாஸ விளையாட்டு மைதானத்தில் பகல் – இரவுப் போட்டியாக ஆரம்பமானது.

இப்போட்டியில் பாகிஸ்தான் அணித் தலைவர் யூனுஸ்கான் நாணயச் சுழற்சியில் வெற்றியீட்டி தனது அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதாக அறிவித்தார்.

அதன் அடிப்படையில் பாகிஸ்தான் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய விக்கெட் காப்பாளர் கம்ரன் அக்மல் மற்றும் இந்தியன் கிரிக்கெட் லீக்கில் விளையாடி விலக்கப்பட்டிருந்த இம்ரான் நமர் மீண்டும் பாகிஸ்தான் அணிக்காக அழைக்கப்பட்டு விளையாடினார். இம்ரான் நமர் 29 பந்துகளை எதிர்கொண்டு 4 பவுண்டரி உட்பட 23 ஓட்டங்கள் பெற்றிருந்த போது துஷாரவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்து சென்றார்.

மற்றொரு ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான கம்ரான் அக்மல் 64 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டரி உட்பட 57 ஓட்டங்கள் பெற்றிருந்த போது மாலிங்க பண்டாரவின் பந்து வீச்சுக்கு ஆட்டமிழந்து சென்றார். பின்னர் வந்த முகம்மது யூசுப் 12 பந்துகளை எதிர்கொண்டு 6 ஓட்டங்களைப் பெற்று இருந்தபோது மென்டிஸின் பந்து வீச்சில் ஜயவர்த்தனவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்து சென்றார். இப்போட்டியில் உமர் அக்மால் ஆட்டமிழக்காமல் 102 ஓட்டங்களைப் பெற்றதன் மூலம் தனது கன்னி சதத்தைப் பெற்றமை விசேட அம்சமாகும்.

322 வெற்றி இழக்கை நோக்கி தனது துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இலங்கை அணி  36.1 ஓவரில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 175 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. தரங்க 80 ஓட்டங்களையும், சங்கக்கார  39 ஓட்டங்களையும் பெற்றனர்.

PAKISTAN
Kamran Akmal b Bandara     57
Imran Nazir b Thushara    23
Younus Khan c Kapugedera b Thushara                  89
Mohammad Yousuf c Jayawardene b Mendis   6
Misbah-ul Haq lbw b Bandara                    9
Umar Akmal not out                  102
Shahid Afridi not out                     2
Extras: (b4, w29)                    33
Total (for 5 wkts, 50 overs)                  321

Did not bat: Rana Naved, Mohammad Aamer, Rao Iftikhar, Saeed Ajmal.
Fall of wickets: 1-61 (Nazir), 2-106 (Kamran Akmal), 3-115 (Yousuf),
4-130 (Misbah), 5-306 (Younus).

Bowling: Malinga 10-0-79-0 (w22), Thushara 10-0-74-2 (w7), Mathews 8-0-48-0,
Bandara 10-0-44-2, Mendis 10-0-56-1, Kandamby 2-0-16-0.

SRI LANKA
U. Tharanga c Kamran b Iftikhar                  80
M. Jayawardene c Aamer b Naved     19
K. Sangakkara c Nazir b Iftikhar                 39
T. Kandamby c Younus b Ajmal     15
C. Kapugedera c Naved b Ajmal     8
T. Samaraweera c Kamran b Iftikhar    2
A. Mathews st Kamran b Afrid   8
M. Bandara c Misbah b Afridi    0
T. Thushara b Iftikhar    0
L. Malinga c Misbah b Iftikhar   0
A. Mendis not out     0
Extras: (lb1, w3)    4
Total(all out, 36.1 overs)  175

Fall of wickets: 1-36 (Jayawardene), 2-101 (Sangakkara), 3-130 (Kandamby),
4-157 (Kapugedera), 5-159 (Samaraweera), 6-166 (Tharanga),
7-167 (Bandara), 8-171 (Thushara), 9-175 (Mathews), 10-175 (Malinga).

Bowling: Aamer 5-0-34-0 (w1), Naved 7-0-46-1, Iftikhar 8.1-0-30-5,
Afridi 9-0-40-2 (w1), Ajmal 7-0-24-2 (w1).

இலங்கை-பாகிஸ்தான் மோதும் 4வது போட்டி இன்று கொழும்பில்

0308mahela.jpgஇலங்கை- பாகிஸ்தான் அணிகள் மோதும் 4வது ஒருநாள் சர்வதேசப் போட்டி இன்று கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டு மைதானத்தில் பகல்-இரவுப் போட்டியாக நடைபெறுகிறது.

இரண்டு அணிகளும் மோதிய மூன்று போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி தோல்வியைத் தழுவியது. இலங்கை அணி மூன்று போட்டிகளிலும் வெற்றியீட்டி தொடரைக் கைப்பற்றியது. எனவே இன்று நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றால் முதல் வெற்றியைப் பதிவாக்கும்.

தோல்வியடையும் பட்சத்தில் இலங்கை அணி 4 போட்டிகளிலும் வென்று சாதனை படைக்கும். இரு அணிகளும் வெற்றிபெறும் முனைப்பில் களத்தில் குதிக்கும் என எதிர்பார்க்கலாம்.

டெஸ்ட் தரவரிசைகளில் இலங்கை மூன்றாமிடத்தில் இந்தியா நாலாமிடத்திற்கு தள்ளப்பட்டது

0308mahela.jpgசர்வதேச டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில், இலங்கை அணி மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இந்திய அணி ஒரு இடம் பின்தங்கி நான்காவது இடத்தை பெற்றுள்ளது.  சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி.) டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது. இதில், மூன்றாவது இடத்திலிருந்த இந்திய கிரிக்கெட் அணி (119 புள்ளிகள்) ஒரு இடம் பின்தங்கி 4 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை சமீபத்தில் கைப்பற்றி அசத்திய இலங்கை அணி, 119 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இந்தியா,இலங்கை அணிகள் ஒரே புள்ளிகள் பெற்றிருப்பினும், 0.01 “டெசிமல் ரேட்டிங்’ வேறுபாட்டில் இலங்கை அணி முன்னேற்றம் கண்டுள்ளது.

அவுஸ்திரேலிய அணி (124 புள்ளிகள்) முதலிடத்திலும், தென்னாபிரிக்கா (122 புள்ளிகள்) இரண்டாவது இடத்திலுமுள்ளன.  ஆஷஸ் தொடரின் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில், அவுஸ்திரேலிய அணி கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நிலையில் உள்ளது. தோற்கும் பட்சத்தில் 2003 ஆம் ஆண்டு முதல், முதலிடத்தில் இருந்துவரும் அவுஸ்திரேலியா தனது பெருமையை இழக்க நேரிடும்.

பாகிஸ்தான் அணி தோற்றதற்கு சூதாட்டமே காரணம் – காதிர்

cricket1.jpgஇலங்கை அணியுடனான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டித் தொடர்களில் பாகிஸ்தான் அணி தோற்றதற்கு கிரிக்கெட் சூதாட்டமே காரணமென்று முன்னாள் வீரர் அப்துல் காதிர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

“ருவென்ரி20′ உலகக் கிண்ணத்தை வென்ற அணி இவ்வளவு மோசமாக விளையாடுவதை நம்ப முடியவில்லை. இதன் பின்னணியில் கிரிக்கெட் சூதாட்டம் இருக்குமோ என சந்தேகிக்கிறேன்.  இத்தொடரின் போது, பாகிஸ்தான் வீரர்களை சூதாட்ட முகவர்கள் தொடர்பு கொண்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

பாகிஸ்தான் அணிக்கு இலங்கைத் தொடர் மிக மோசமாக அமைந்துவிட்டது. சில வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டுள்ளது. தொடர் முடிந்த பின்பு உயர்மட்ட அளவில் குழு அமைத்து முழு அளவில் விசாரிக்க வேண்டுமென்றார்.

‘வாடா’ விதிமுறைகள் – ஏற்குமாறு கிரிக்கெட் வீரர்களுக்கு சானியா கோரிக்கை

sania-mirza.jpgஉலக ஊக்க மருந்து தடுப்பு ஏஜென்சியின் (வாடா) புதிய விதிமுறையை ஏற்க இந்திய கிரிக்கெட் வீரர்கள் முன்வர வேண்டும் என டென்னிஸ் நட்சத்திரங்களான சானியா மிர்ஸாவும், மகேஷ் பூபதியும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாடா அமைப்பின் புதிய விதிமுறைக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் இதுதொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட அவர்கள் மறுத்து வருகின்றனர்.

இதுதொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியமும், வீர்ரகளுக்கு ஆதரவான நிலையை எடுத்துள்ளது. இதையடுத்து இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கும், ஐசிசிக்கும் இடையே மோதல் மூளும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், சானியாவும், மகேஷ் பூபதியும், இந்திய வீரர்களுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். அதில், வாடா அமைப்பின் நடவடிக்கையால், விளையாட்டுத் துறையிலிருந்து ஊக்க மருந்து பிரச்சினை அறவே ஒழிக்கப்படும் நிலை உருவாகும்.

ஊக்க மருந்து இல்லாத விளையாட்டு உலகை உருவாக்க வேண்டியது விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளின் கடமையாகும்.

இந்த ஆண்டு முழுவதும் நான் (பூபதி) எங்கே இருக்கிறேன் என்பதை தொடர்ந்து வாடா அமைப்புக்கு தெரிவித்தவண்ணம் உள்ளேன். இந்த முறையால், தவறுகள் செய்வோரின் எண்ணிக்கை அறவே குறையும்.

பல டென்னிஸ் பிரபலங்களுக்கு இந்த வாடா விதிமுறை அவுசகரியமாக இருந்தாலும் கூட விளையாட்டு உலகின் நன்மையைக் கருத்தில் கொண்டு இதை ஏற்றுள்ளனர்.

அதேபோல நமது கிரிக்கெட் வீரர்களும் இந்த விதிமுறைக்குப் பயப்படாமல், தயங்காமல் அதை ஏற்றுக் கையெழுத்திட முன்வர வேண்டும் என்று கூறியுள்ளனர்.

21 ஆவது தேசிய விளையாட்டு விழா மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இரு தங்கப்பதக்கம்

basketball.jpg21 ஆவது தேசிய விளையாட்டு விழாவில் மட்டக்களப்பு மாவட்டம் சுவட்டு மைதான நிகழ்ச்சியில் இரண்டு தங்கப்பதக்கமும் ஒரு வெள்ளிப்பதக்கமும் இரண்டு வெண்கலப்பதக்கங்களையும் பெற்றுக் கொண்டதுடன், குழுப் போட்டியில் ஒரு வெள்ளிப்பதக்கத்தையும் ஒரு வெண்கலப்பதக்கத்தையும் பெற்றுள்ளது.  இளைஞர் விவகார அமைச்சு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நடத்தும் 21 ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா நேற்று நிறைவு பெற்றது.

கடந்த 31 ஆம் திகதி முதல் நேற்றுவரை பதுளை வின்சன் டைஸ் விளையாட்டு மைதானத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் நாயகம் பாஸ்வர சேனரங்க குணரத்ன தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

மட்டக்களப்பில் இருந்து கலந்துகொண்ட போட்டியாளர்களில் 21 கிலோமீற்றர் மற்றும் 20 வயதுக்குக் கீழ்ப்பட்ட பெண்களுக்கான 5000 மீற்றர் போன்றவற்றில் வவுணதீவுப் பிரதேசத்தைச் சேர்ந்த அ.யசோதா முதலிடம் பெற்று இரண்டு தங்கப் பதக்கங்களைப் பெற்றுக்கொண்டார்.

20 வயதுக்குக் கீழ்ப்பட்ட ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் களுவாஞ்சிக்குடிப் பிரதேசத்தைச் சேர்ந்த ச.ஜனகீரன் இரண்டாம் இடம்பெற்று வெள்ளிப்பதக்கத்தையும் 20 வயதுக்குக் கீழ்ப்பட்ட ஆண்களுக்கான பரிதி வீசுதல் போட்டியில் கலந்துகொண்ட களுவாஞ்சிக்குடி பிரதேசத்தைச் சேர்ந்த ஆ.கோகுலதாஸ் மூன்றாம் இடத்தினைப் பெற்று ஒரு வெண்கலப்பதக்கத்தினையும் 20 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கான குண்டெறிதல் போட்டியில் ஏறாவூர் பிரதேசத்திலிருந்து கலந்துகொண்ட ஆர்.எஸ்.எம்.கிர்ஷான் மூன்றாம் இடம்பெற்று ஒரு வெண்கலப்பதக்கத்தினையும் பெற்றுக்கொண்டார்.

அத்துடன், ஆண்களுக்கான கபடி போட்டியில் மண்முனை வடக்கு பிரதேசத்தில் இருந்து கலந்துகொண்ட அணியினர் இரண்டாம் இடத்தினைப் பெற்று வெள்ளிப்பதக்கத்தினையும் ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டியில் ஏறாவூர் பற்று பிரதேசத்திலிருந்து கலந்துகொண்ட அணியினர் மூன்றாம் இடத்தினையும் பெற்று வெண்கலப் பதக்கத்தினையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.