::விளையாட்டு

::விளையாட்டு

இலங்கை மற்றும் சர்வதேச விளையாட்டுச் செய்திகள்.

இலங்கைக்கு இந்திய கிரிக்கெட் அணியை அனுப்ப தடை விதிக்கும் விவகாரம்: மனு தாக்கல்

indian-cricket-team.jpgஇலங் கையில் உள்ள சிங்கள அரசு தமிழர்களை துன்புறுத்தி வரும் நிலையில், இலங்கையில் நடைபெறவுள்ள முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இந்திய அணி பங்கேற்க தடை விதிக்கக் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வக்கீல்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். மதுரை லேக் ஏரியாவில் வசித்து வரும் ஏ.ஜோயல் பவுல் அந்தோணி என்ற உயர்நீதிமன்ற வழக்கறிஞர் இதுதொடர்பாக பொது நலன் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

அதில், இலங்கையில் வருகிற 8-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை முத்தரப்பு கிரிக்கெட் போட்டி நடக்க உள்ளது. இந்த போட்டியில் இந்தியாவும் கலந்து கொள்கிறது. இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்களை பல்வேறு நாடுகள் கண்டித்துள்ளன. தென் ஆப்பிரிக்காவில் நிறவெறி பிரச்சினை இருந்த போது, அங்கு நடந்த கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கலந்து கொள்ளவில்லை.

தற்போது உள்ள சூழ்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியை இலங்கைக்கு அனுப்பினால் சர்வதேச சமூகம் இந்தியாவை மதிக்காது. எனவே இந்திய கிரிக்கெட் அணியை இலங்கைக்கு அனுப்பக்கூடாது என்று மத்திய உள்துறை செயலாளருக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனுவுக்கான வக்காலத்தில் 513 வழக்கறிஞர்கள் கையெழுத்திட்டுள்ளனர். குறித்த மனு, இன்றைய தினம்,   சித்ரா வெங்கட்ராமன், துரைசாமி கொண்ட நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் குழுவினர்,  இது குறித்து மத்திய உள்துறை செயலர், வெளியுறவு செயலர், விளையாட்டு துறை செயலர், கிரிக்கெட் வாரியம் பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

96 ஓட்ட வித்தியாசத்தில் நியூசிலாந்தை வென்றது இலங்கை

srilanka0000.jpgகொழும்பில் நடைபெற்ற இலங்கை – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 96 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 2 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட இத்தொடரை 2-0 என்ற கணக்கில் இலங்கை கைப்பற்றியது.

கடந்த 26ஆம் தேதி தொடங்கிய 2ஆவது டெஸ்ட் போட்டியில் முதலில் தனது முதல் இன்னிங்சில் 416 ஓட்டங்களுக்கு இலங்கை ஆட்டமிழந்த நிலையில், நியூசிலாந்து அணியை 234 ரன்களுக்கு முதன் இன்னிங்சில் சுருட்டியது.

தொடர்ந்து 2ஆவது இன்னிங்சை ஆடிய இலங்கை 5 விக்கெட் இழப்பிற்கு 311 ஓட்டங்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது.

494 ஓட்ட வெற்றி இலக்குடன் 2ஆவது இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து அணி 397 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இலங்கை அணி 96 ஓட்டங்கள்  வித்தியாசத்தில் வென்று தொடரையும் கைப்பற்றியுள்ளது.

SRI LANKA 416 and 
311-5 dec

 NEW ZEALAND      
First Innings 234

NEW ZEALAND      
Second innings       
overnight 182-6)

T. McIntosh b Prasad      7
M. Guptill c P. Jayawardene b Herath   28
D. Flynn lbw Herath     50
R. Taylor C M Jayawardene b Herath   27
J. Ryder lbw Herath     38
B. McCullum b Muralitharan    13
J. Oram c Sangakkara b Dilshan    56
D. Vettori c Herath b Muralitharan  140
J. Patel c Kapugedera b Muralitharan   12
I. O’Brien c P. Jayawardene b Herath   12
C. Martin  not out        0

EXTRAS: (13-lb, 1-nb)     14
TOTAL: (all out, 123.5 overs)   397
FALL OF WICKETS: 1-36, 2-41, 3-97, 4-131, 5-158, 6-176,  7-300, 8-318, 9-387, 10-397
BOWLING: Paranavitana 1-0-2-0, Thushara 23.3-1-78-0 (1-nb),
 Prasad 15-1-56-1, Herath 48-9-139-5, Muralitharan 28.2-2-85-3,
 Dilshan 6-0-15-1, Kapugedera 2-0-9-0

Result: Sri Lanka won by 96 runs to seal a 2-0 series
victory.
 

டெஸ்ட் கிரிக்கெட் போட்டி – இன்று 5வது நாளாகும். வெற்றியை நோக்கி இலங்கை அணி

srilanka0000.jpgகொழும் பில் நடைபெறும் இலங்கை – நியூஸீலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இன்று 5வது நாளாகும்.

நேற்றைய தினம் நியூஸீலாந்து அணி தனது இரண்டாவது இனிங்சில் 6. விக்கட் இழப்புக்கு 182 ஓட்டங்கள் எடுத்திருந்தது. தோல்வியில் இருந்து தப்புவதற்கு நியூஸீலாந்து அணி மேலும் 312 ஓட்டங்கள் பெறவேண்டும்.

SRI LANKA – 1ST INNINGS – 416
NEW ZEALAND – 1ST INNINGS – 234

SRI LANKA – 2ND INNINGS    (overnight 157-2)
T. Dilshan c Guptill b Patel     33
T. Paranavitana c McCullum b Vettori   34
K. Sangakkara c Taylor b Patel   109
M. Jayawardene c Taylor b O’Brien   96
T. Samaraweera lbw b Vettori    25
C. Kapugedera not out    07
Extras (lb1, w2, nb4)     07
Total (for 5 wkts decl)   311

Fall of wickets: 1-56 (Dilshan), 2-89 (Paranavitana), 3-262. (Sangakkara), 4-301 (Samaraweera), 5-311 (Jayawardene).

Bowling: Vettori 24-4-62-2, O’Brien 15.2-1-77-1 (nb3, w1), Martin
  9-0-34-0 (w1), Patel 34-2-122-2, Ryder 3-0-15-0 (nb1).

NEW ZEALAND – 2ND INNINGS
T. McIntosh b Prasad     07
M. Guptill c P. Jayawardene b Herath   28
D. Flynn lbw b Herath     50
R. Taylor c M. Jayawardene b Herath   27
J. Ryder lbw b Herath     38
B. McCullum b Muralitharan    13
J. Oram not out     07
D. Vettori not out     05
Extras (lb6, nb1)     07
Total (for 6 wkts)    182

Fall of wickets: 1-36 (McIntosh), 2-41 (Guptill), 3-97 (Taylor), 4-131
  (Flynn), 5-158 (McCullum), 6-176 (Ryder).

Bowling: Paranavitana 1-0-2-0, Thushara 14-1-39-0 (nb1), Prasad
  7-1-21-1, Herath 21-5-73-4, Muralitharan 12-0-39-1, Dilshan 1-0-2-0.

கிரிக்கெட் உலக கிண்ண பிரச்னைக்கு தீர்வு – ஐ.சி.சி. – பாகிஸ்தான் சமரசம்

icc_dd.jpgபாகிஸ் தானில் அடுத்த உலகக் கிண்ண கிரிக்கடெ; போட்டிகள் சிலவற்றை நடத்தும் வாய்ப்பு மறுக்கப்பட்டமை தொடர்பான பிரச்னைக்கு சுமுக தீர்வு காணப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சார்பில் பாகிஸ்தானுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படவுள்ளதோடு ஐ.சி.சி. க்கெதிரான சட்டபூர்வ நடவடிக்கையை கைவிட பாகிஸ்தான் தீர்மாணித்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும்; 2011ஆம் ஆண்டு உலக கிண்ண கிரிக்கடெ; தொடர் இந்திய துணை கண்டத்தில் நடக்க உள்ளது. இதில், பாகிஸ்தானில் போட்டிகளை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தானில் விளையாட அவுஸ்திரேலியாää நியூசிலாந்து உள்ளிட்ட பெரும்பாலான அணிகள் மறுத்தன. இந்தச் சுழலில் லாகூரில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த, பிரச்னை பெரிதானது.

வீரர்களுக்கு பாதுகாப்பு இல்லாததால் பாகிஸ்தானில் 2011ல் உலக கோப்பை போட்டிகளை நடத்த ஐ.சி.சி,  உரிமை மறுத்தது. இங்கு நடக்க இருந்த 14 போட்டிகள் இந்தியா,  இலங்கை,  வங்கதேசத்தில் நடக்கும் என அறிவித்தது. தவிர உலக கோப்பை தலைமையகத்தை லாகூரில் இருந்து மும்பைக்கு மாற்றியது. இதனால் ஆத்திரமடைந்த பாகிஸ்தான் சட்டப்படி நடவடிக்கை எடுத்தது. லாகூர் கோர்ட்டில் ஐ.சி.சி.,  மீது வழக்கு தொடுத்தது. பின்னர் பிரச்னைக்கு கோர்ட்டுக்கு வெளியே தீர்வு காண முடிவு செய்தது.

இது தொடர்பாக துபாயில் நேற்று ஐ.சி.சி,  தலைவர் டேவிட் மோர்கன் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (பி.சி.பி.) தலைவர் இஜாஸ் பட் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமுக உடன்பாடு ஏற்பட்டது.  இதன்படி போட்டியை நடத்துவதற்கான உரிமை தொகை சுமார் ரூ. 50 கோடி பாகிஸ்தானுக்கு வழங்கப்படும். தவிர பாகிஸ்தான் மண்ணில் போட்டியை நடத்தாததால் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட போதுமான தொகையை அளிக்க ஐ.சி.சி. முன்வந்தது. இதை ஏற்றுக் கொண்ட பாகிஸ்தான், ஐ.சி.சி. மீது தொடுத்துள்ள வழக்குகளை வாபஸ் பெறுவதற் சம்மதம் தெரிவித்தது.

இந்த ஒப்பந்தத்ததில் ஐ.சி.சி. மற்றும் பி.சி.பி. அதிகாரிகள் கைகெயழுத்திடுகின்றனர். இதன் மூலம் உலக கிண்ண தொடரை நடத்துவதில் இருந்த சிக்கல் முழுமையாக தீர்ந்துள்ளது. 

வெற்றியை நோக்கி இலங்கை அணி

srilanka0000.jpgகொழும் பில் நடைபெறும் இலங்கை – நியூஸீலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 4ஆம் நாளான இன்று இலங்கை அணி தன் 2-வது இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

இன்று 157/2 என்று துவங்கிய இலங்கை அணியில் சங்கக்காராவும்,  ஜெயவர்தனேயும் மேலும் 105 ஓட்டங்களைச் சேர்த்தனர். ஓட்ட எண்ணிக்கை 262ஆக உயர்ந்தபோது இலங்கை கேப்டன் சங்கக்காரா 109 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்ததாக முதல் இன்னிங்ஸில் சதம் எடுத்த சமரவீரா 25 ஓட்டங்கள் எடுத்து வெட்டோரி பந்தில் ஆட்டமிழந்தார். 96 ஓட்டங்கள் எடுத்திருந்த ஜெயவர்தனே,  ஓ’பிரையன் பந்தில் ஆட்டமிழந்தபோது சங்கக்காரா இன்னிங்ஸை முடித்துக் கொள்வதாக அறிவித்தார். நியூஸீலாந்து அணியில் வெட்டோரி, படேல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்கள்.

இன்றைய தினம் நியூஸீலாந்து அணி தனது இரண்டாவது இனிங்சில் 6.
விக்கட் இழப்புக்கு 182 ஓட்டங்கள் எடுத்திருந்தது.  நாளை ஆட்டத்தின் 5-வது நாள்.

யு.எஸ்.ஓபன்: சானியா-கோவர்ட்சோவா மோதுகின்றனர்

sania-mirza.jpgவரும் திங்களன்று அமெரிக்காவில் துவங்கும் யு.எஸ்.ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டத்தில் பெலாரஸ் வீராங்கனை ஆல்கா கோவர்ட்சோவாவுடன், சானியா மிர்சா மோதுகிறார்.

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் 2-வது சுற்றுக்கு மேல் முன்னேற கடுமையாக திணறி வரும் சானியா மிர்சா தற்போது 71-வது தர நிலையில் உள்ளார், கோவர்ட்சோவா 64-வது தர நிலையில் உள்ளார்.

இருவரும் ஒருவரையொருவர் எதிர்த்து 2 முறை விளையாடியுள்ளனர். இருவரும் ஒரு போட்டியில் ஒருவரையொருவர் வீழ்த்தியுள்ளனர்.

ஆனால் இந்த முறை முதல் சுற்றே சற்று கடினமாக அமைந்திருக்கும் வேளையில் போராடி சானியா வெற்றி பெற்றாலும் இரண்டாவது சுற்றில் சமீப காலமாக நட்சத்திர வீராங்கனைகளை வீழ்த்தி விரைவில் நட்சத்திர தகுதியை நோக்கி முன்னேறி கொண்ரிருக்கும் 10-வது தர நிலையில் உள்ள இத்தாலி வீராங்கனை ஃபிளாவியா பன்னெட்டாவை சந்திக்க நேரிடும்.

எனவே இந்த முறையும் இரண்டாவது சுற்றில் அவர் வெளியேறவே அதிக வாய்ப்பு உள்ளது. ஆனால் அன்றைய தினத்தில் சானியாவின் ஆட்டம் பன் மடங்கு உயர்ந்தால் பன்னெட்டாவை அவர் வீழ்த்தலாம்.

இலங்கை 339 ஓட்டங்கள் முன்னிலை

2nd-test.jpgகொழும்பில் நடைபெறும் இலங்கை – நியூஸீலாந்து அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் 3ஆம் நாளான இன்று இலங்கை அணி தன் இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 157 ஓட்டங்கள் எடுத்து ஒட்டு மொத்தமாக 339 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது.

முன்னதாக நியூஸீலாந்து 234 ஓட்டங்களுக்கு வீழ்ந்தது. இலங்கை முதல் இன்னிங்ஸில் நியூஸீலாந்து  ஓட்டஎண்ணிக்கையைக் காட்டிலும் 182 ஓட்டங்கள் கூடுதலாகப் பெற்றிருந்தது.

இரண்டாவது இன்னிங்ஸில் 42 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 33 ஓட்டங்கள்  எடுத்த தில்ஷான், படேல் பந்தை மேலேறி வந்து தூக்கி அடிக்க முயல பந்து மட்டையின் விளிம்பில் பட்டு மேலே எழுந்தது. அதனை குப்டில் முன்னால் ஓடி வந்து கீழே விழுவதற்கு சற்று முன் பந்தை பிடி ஆக மாற்றினார்.

மற்றொரு துவக்க வீரர் பரனவிதனா 34 ஓட்டங்கள்  எடுத்து மெக்கல்லமிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். ஆனால் இவர் அவுட் சந்தேகத்திற்கிடமாக அமைந்தது. தற்போது சங்கக்காரா 64 ஓட்டங்களுடனும், ஜெயவர்தனே 23 ஓட்டங்களுடனும் விளையாடி வருகின்றனர்.

‘ஐ.சீ.சீ. சம்பியன்ஸ் கிண்ணம்’ செப்டம்பா; 22 இல் தென்னாபிரிக்காவில் ஆரம்பம்

eng0000.jpgஐ.சீ.சீ. சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் சுற்றுத் தொடர் அடுத்த மாதம் 22ஆம் திகதி தென்னாபிரிக்காவில் ஆரம்பமாகிறது. உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு அடுத்தபடியாக இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வரும் சம்பியன்ஸ் கிண்ண சுற்றுத் தொடர் கடந்த வருடம் பாகிஸ்தானில் நடைபெறவிருந்தது.

எனினும் பாகிஸ்தானில் அப்போது ஏற்பட்ட உள்நாட்டு மோதல்கள் காரணமாக பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கருத்திற்கொண்டு இத்தொடர் ஒத்தி வைக்கப்பட்டதோடு அதனை தென்னாபிரிக்காவில் நடத்த சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் (ஐ.சீ.சீ.) தீர்மானித்தது. இதன்படி 14 நாட்களுக்குத் தொடராக நடைபெறவுள்ள இச்சுற்றுத் தொடர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி இடம்பெறவுள்ள இறுதி ஆட்டத்துடன் முடிவடையவுள்ளது.

மினி உலகக் கிண்ணம் எனக் கருதப்படும் இத்தொடரில் 8 நாடுகளின் அணிகள் பங்குபற்றவுள்ளதோடு அவை ஏ மற்றும் பி  என இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஏ குழுவில் அவுஸ்திரேலியா,  இந்தியா,  பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய அணிகளும் பி குழுவில் தென்னாபிரிக்கா,  இலங்கை, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளும் அடங்குகின்றன. அடுத்த மாதம் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இத்தொடரின் முதல் ஆட்டத்தில் இலங்கை அணி தென்னாபிரிக்க அணியை எதிர்த்தாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இத்தொடரில் பங்குபற்றவுள்ள 15 பேரடங்கிய இலங்கை அணி வீரர்களின் விபரம் வருமாறு:- குமார் சங்கக்கார (தலைவர்), முத்தையா முரளிதரன் (உப தலைவர்), சனத் ஜயசூரிய, மஹேல ஜயவர்தன, திலகரத்ன டில்ஷான்,  சாமர கபுகெதர,  எஞ்சலோ மெத்திவ்ஸ்,  திலிண கண்டம்பி,  நுவன் குலசேகர,  திலிண துஷார,  அஜந்த மெண்டிஸ், லசித் மாலிங்க, திலான் சமரவீ, உபுல் தரங்க மற்றும் தம்மிக பிரசாத்.

ஐ.பி.எல்.அணி வாங்கும் பொலிவூட் நாயகன் சல்மான் கான்

salman_khan.pngஐ.பி.எல்., அணியை வாங்க பொலிவுட் நாயகன் சல்மான் கான் ஆர்வமாக உள்ளார். இதையடுத்து சல்மான், ஷாருக்கான் அணிகளின் மோதலை ரசிகர்கள் காணலாம

ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்ற 8 அணிகளும் ஏலம் மூலமாக கோடிகள் கொடுத்து வாங்கப்பட்டன. பாலிவுட் நட்சத்திரங்களான ஷாருக்கான் மற்றும் ஜுஹி சாவ்லா இணைந்து கொலகாத்தா நைட் ரைடர்ஸ் அணியை வாங்கினர்.  நடிகை பிரித்தா ஜிந்தா (கிங்ஸ் இலவன் பஞ்சாப்), ஷில்பா ஷெட்டி(ராஜஸ்தான் ரோயல்ஸ்) என்ற வகையில் அணிகளை வாங்கினர்.

இவர்கள் வரிசையில் சல்மான் கானும் சேருகிறார். முதலாவது ஐ.பி.எல்.,  தொடரின் நிறைவு விழாவில் நடனம் ஆடி இரசிகர்களை கிறங்கடித்த இவர், சொந்தமாக ஒரு அணியை வாங்க முடிவு செய்துள்ளார்.

வரும் 2011ல் நடக்க உள்ள நான்காவது ஐ.பி.எல்., தொடரில் கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்பட உள்ளன. இவற்றில் ஒன்றை வாங்க திட்டமிட்டுள்ளார். இது குறித்து ஐ.பி.எல்., தலைவர் லலித் மோடியை நேற்று மும்பையில் சந்தித்து பேசியுள்ளார்;.

2011ல் நடக்க உள்ள ஐ.பி.எல்., தொடரில் 2 அணிகளை அறிமுகப்படுத்த உளளதாகவும். அதற்கான ஏலம் 2010,  ஜனவரியில் நடக்க உள்ளது எனவும்  ஒரு அணியின் விலை  1000 கோடி ரூபா முதல் ஆயிரத்து 500 கோடி வரை இருக்கலாம என்றும் லலித் மோடி கூறியுள்ளார்.

விக்டோரியா அணியில் முரளி

murali.jpgஅவுஸ் திரேலிய முதல்தர இருபது20 தொடரில் விளையாடுவதற்காக இலங்கை நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் விக்டோரியா அணியில் ஒப்பந்தமாகியுள்ளார்.

இதன்படி முரளி 2009-10 ஆம் ஆண்டுக்கான அவுஸ்திரேலியாவின் பிக் பாஷ் இருபது20 தொடரில் விக்டோரியா அணிக்காக விளையாடவுள்ளார். ஏற்கனவே விக்டோரியா அணியில் மேற்கிந்திய சகலதுறை ஆட்டக்காரர் ட்வாயன் பிராவோ ஒப்பந்தமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தவிர, இலங்கை அணியின் மற்றுமொரு சுழற்பந்து வீச்சாளர் அஜந்த மெண்டிஸ் இந்த தொடரில் தெற்கு அவுஸ்திரேலிய அணியில் விளையாடுவதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இதனிடையே விக்டேõரியா அணியில் இணைக்கப்பட்டது தனக்கு கிடைத்த கௌரவம் என்று முத்தையா முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.