ஜெயபாலன் த

ஜெயபாலன் த

ஆர் பிரதீபனின் ‘சடோஸ் ஒப் சைலன்ஸ்’ – சர்வதேச பாராட்டைப் பெறும் புலம்பெயர் படைப்பு!

Piradeepan_Rபிரான்ஸில் புலம்பெயர்ந்து வாழும் ஆர் பிரதீபனின் ‘சடோஸ் ஒப் சைலன்ஸ்’ புலம்பெயர் தமிழர்களின் வாழ்வியல் நெருக்கடிகளை பதிவு செய்யும் குறும்படமாக வெளிவந்தள்ளது. பாராட்டுக்குரிய ‘என் வீட்டு முற்றத்தில் ஒரு மாமரம்’ ( மரணித்த இரண்டு முற்றத்து மாமரங்கள் : யமுனா ராஜேந்திரன் ) என்ற குறும்படத்தை படைத்த இவரின் ‘சடோஸ் ஒப் சைலன்ஸ்’ உம் பல பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.

பிரான்ஸ் ஹான்ஸ் மற்றும் அமெரிக்கத் திரைப்பட விழா ஒன்றிலும் திரையிடப்பட்ட இப்படம் லண்டனில் நடைபெறவுள்ள ரெயின் டான்ஸ் திரைப்பட விழாவில் இன்று (ஒக்ரோபர் 08 2010) காண்பிக்கப்பட இருக்கிறது.

காட்சிப் படிமங்களில் ஆர்வத்துடன் ஈடுபட்டுவரும் ஆர் பிரதீபன் புகைப்படத்துறையில் இருந்து திரைப்படத்துறைக்கு மிக நிதானமாகவே அடி எடுத்து வைக்கின்றார். லண்டனில் புதியவன் சுவிஸில் அஜீவன் டென்மார்க் சுபாஸ் நோர்வேயில் தமயந்தி கனடாவில் சுமதி ரூபன் போன்ற சில குறும்பட ஆர்வலர்கள் வரிசையில் பிரான்ஸில் ஆர் பிரதீபனின் வருகை ஆரோக்கியமானதாகவே உள்ளது.

._._._._._.

Shadows of Silence-Movie by Pradeepam Raveendran beats 20 Indian film, goes to Cannes Film Fest

Mumbai, April 22 (Calcutta Tube)

Paris-based Sri Lankan director Pradeepan Raveendran‘s film ‘Shadows of Silence‘, listed as a French entry, will be presented in the Directors’ Fortnight section at the 63rd Cannes Film Festival May 12-23. Based in Paris, Raveendran makes films in Tamil and Sinhala and his ‘Shadows of Silence’ has beaten 20 Indian films — none of which were selected — to the Directors’ Fortnight.

‘Shadows of Silence’ is described as being about the ‘nightmares and realities of a depressed person in exile’. He has directed, produced and written this 11-minute fiction film himself.

Raveendran’s earlier film ‘A Mango Tree in the Front Yard’, also a French entry, was selected by the Berlin Film Festival in 2009, and nominated for a Golden Bear for best short film. It has been screened around the world, including the International Film Festival of Los Angeles and the Museum of Modern Art (MOMA), New York.

Set in war-ravaged Sri Lanka, ‘A Mango Tree in the Front Yard’ focuses on three children for whom even walking home from school proves dangerous. The MOMA described the film as ‘spare and haunting’. A film in Tamil, it credits the Association of French Tamil Exiles as co-producer.

Born in Jaffna, Raveendran, 29, left the island in 2004 because of the ethnic conflict, and was granted political refugee status in France in 2007. He is active with the Tamil diaspora community in Europe. He is on the editorial board of Uyirnizhal (Shadow of the Soul), a political-literary Tamil diaspora quarterly magazine.

He organised two photography exhibitions in Paris and Berlin on the theme of life in exile. His photographs highlight the lives of immigrants who struggle to survive in Paris without valid permission, avoiding attention and detention.

As for India, the Cannes festival has two official invitations. The first is for Shekhar Kapur, who has been selected on the Feature Film Jury.

The other is for director Vikramaditya Motwane, whose film ‘Udaan’ has been chosen in the official selection of the festival. Motwane’s debut feature will be screened in the Un Certain Regard (A Certain Look) section of the festival.

(Meenakshi Shedde is India Consultant to the Berlin Film Festival and curator to international festivals worldwide.)

Exile and ‘Shadow of Silence’
Film review by Charles Sarvan, Sunday Island, Colombo, August 29, 2010

”Shaving, he looks at himself in the mirror but not self-admiringly, as young Narcissus did by the pool. Rather, he seems not to look at the mirror but to search deep in it for answers to existential questions: What is this life? Who am I? That the day has no structure for him suggests he’s unemployed. The last scene is of a snow-covered landscape, and the spread-eagled body of the man: a dark figure; white snow, and the red of seeping, spreading, blood.” 

[I have] watched the smoke that rises from the pipes
Of lonely men in shirt-sleeves, leaning out of windows
(T. S. Eliot)     

Many Sri Lankan artists (“artists” in a wider sense) who settle abroad continue to base their work on the Island, and so it was with Pradeepan Raveendran (b. 1981) in his earlier, much-acclaimed,  ‘A mango tree in my front yard’. But ‘Shadows of Silence’, set in France where the producer now lives, has to do with exile. It is remarkable that so much can be contained within a time-frame of, approximately, ten minutes. A restrained, suggestive work, relying on symbolism, capable of different “readings” (the title, ‘Shadows of Silence’, included), it stands comparison with the best of such films.

The film commences with a desolate winter scene of snow-covered ground, and high-rise flats without any sign of human habitation. Are the adults at work, and the children in school? A few crows, traditional harbingers of misfortune, fly around, cawing jarringly. The film then “cuts” to the celebration of a little girl’s birthday.  A picture is duly taken of father, mother and the three children, but the father seems detached, withdrawn into his own world. The mother looks distracted (worried about the mental and emotional state of her husband?) but tries to present a face appropriate to the party. (One thinks of Virginia Woolf’s novel, ‘Mrs Dalloway’, and foreign Lucrezia, helpless, unable to stop her husband retreating into mental and emotional regions where he can no longer be reached.) The next scene is of the father who has “succeeded” in committing suicide. A mat on the floor is his makeshift bier. He is mourned by his family and aged parents. The children are sad and solemn, uncomprehending and bewildered.

In a time-shift, we see the man about to cut his wrist, but “recalled” to life and duty by his little son “calling” for him. Shaving, he looks at himself in the mirror but not self-admiringly, as young Narcissus did by the pool. Rather, he seems not to look at the mirror but to search deep in it for answers to existential questions: What is this life? Who am I? That the day has no structure for him suggests he’s unemployed. The last scene is of a snow-covered landscape, and the spread-eagled body of the man: a dark figure; white snow, and the red of seeping, spreading, blood.  A mobile-telephone rings in the silence of snow and death. Is it a failed attempt to reach out and connect; to comfort and encourage? Was it his worried wife? Perhaps, she has succeeded in finding employment of a kind, and therefore must be absent? Earlier too, the phone had rung but the man had switched it off, wanting only to be left alone. Much credit goes to the main actor, Krishna Subramania, who suggests strength and isolation and, while being vulnerable, is never pathetic. It is a powerful performance, all the more so for its restraint.

As he dreams (or is it fantasy, a “dream” while not asleep?) that a python is winding itself round his naked body, the man makes sensuous sounds. An interpretation suggests itself: the python kills by strangulation; exile-life is suffocating, and death the much longed for orgasm of release. Repeatedly, the man sees himself dead: in Freudian terms, it’s “wish fulfilment”. Freud, in ‘Beyond the Pleasure Principle’, theorised that we are driven by two major instinctual drives: the sexual (associated with life and self-preservation), and its opposite, the death-wish (thanatos), that is, a seeking to return to an earlier state, to the quiet of non-existence. In some individuals and / or in certain circumstances, thanatos triumphs over the drive to live. In Dr Johnson’s ‘The History of Rasselas’ (Chapter 43) it is observed that the worst possible misfortune which can befall a human being is the loss of reason. Depression, as in this film, overcomes reason, erases the victim’s sense of balance, proportion and perspective and, with those gone, her or his sanguinity. Freud drew a distinction between “melancholy” (generalised and vague) and “mourning” or sorrow which is specific: similarly, a “pain” can be located, identified and, often, treated while an “ache” is more difficult to cure or alleviate, being diffused.

Banishment and exile are as old as human history. In the Western tradition, the Trojans, their city captured and sacked, are carried away into exile. At the beginning of the Common Era, Ovid wrote his ‘Sorrows Of An Exile’. In Richard II (Act 1, Sc. iii), Norfolk, sent into exile, laments the loss of his “native English”. (Norfolk feels he is too old to master, and feel comfortable in, a new “tongue”. By depriving him of his language, he has been sentenced to “speechlessness”, which is a form of death.)  Among other events closer in time are the ‘Partition’ of India, the expulsion of Asians from Uganda, and “ethnic cleansing” in the Balkans. Some Sri Lankan Tamils (such as the producer’s parents?), feeling oppressed in the present, despairing of the future at “home”, undertake costly, arduous and hazardous journeys into exile. 

As already mentioned, many writers have dealt with the theme of exile. At random, Salman Rushdie, Caryl Phillips and Edward Said come to mind. It is very much a modern phenomenon and condition. However, Ian Buruma (2001) and others have warned that exile has become “fashionable”: the focus tends to be on writers and intellectuals, and those of the middle-class, rather than on those who do not “make it”, those who eke a difficult, if not despairing, existence on the margins of their new country. These remain, forever, foreigners. To them, to be a stranger and feel strange is everyday and normal. In the film, a broken branch, black on the white snow, lies by the path, severed and  “out of place”.

We are social beings, and to life in society and community, language is normal and expected. A silent person can cause unease. In ‘Julius Caesar’, Cassius makes Caesar uncomfortable because he (Cassius) reads, observes and thinks – three activities which imply silence. Of course, there are many kinds of silence, such as the silence of the dead, which we expect and accept. Silence can also mean harmony: “A friend is someone with whom one can be silent” (L.S.). In a structural dichotomy, silence is the absence of sound, even as darkness is the absence of light, but in drama and film, we depend not on narration but presentation, presentation through action and language, the last being mainly dialogue, that is, speech. So silence in a film draws attention to itself, becomes significant. Paradoxically, the absence (of sound) becomes a presence. 

Shadows reflect mutely; are silent. The silence here seems to signify the sense of utter alienation and loneliness that the central character experiences, despite his family, relations and friends. As the film proceeds, this silence intensifies and becomes almost palpable. ‘Shadows of Silence’ is a silent scream for help from one who is no longer accessible and, therefore, beyond help.  “I was much too far out all my life / And not waving but drowning” (Stevie Smith). That the man has no name makes him anonymous and, at the same time, representative of the many unnoticed, “unsung” casualties of exile – irrespective of time, place and ethnic origin. (Of course, in as much as some living in their own homeland also fall victim to depression, by no means do all exiles succumb to it: others at the birthday party are happy.)

We remember the children. Their home will be France; their attitudes, expectations and experiences different – and, hopefully, so too their lives. The date on the child’s birthday cake is January 2010. The month explains the snow, but also marks the start of a New Year and beginning. Foreign countries, sometimes, kindly gift what “home” unkindly denied.

Only one solace:
there have been
others too,
lingering in that twilight,
who shed
home and country…

(‘Leaving the Country’, Bahadur Tejani)

Charles Ponnuthurai Sarvan
Germany                                                   

(As often, with thanks to Liebetraut Sarvan)

தோழர் சிவம்: தோழமையின் தடம்

தோழர் கணேசமூர்த்தி சிவகுமாரன் (நெல்லியடி சிவம்) நினைவுப்பேருரை ஒக்ரோபர் 2ல் ஸ்காபறோவில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கனடாவில் பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்து வருகின்ற தேடகம் (தமிழர் வகைதுறைவள நிலையம்) இந்நிகழ்வையும் ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்வு தோழமையின் தடம் என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இந்நிகழ்வுக்கு புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சியின் பொதுச்செயலாளர் சி கா செந்திவேல் வரவழைக்கப்பட்டு உள்ளதுடன் இவரே தோழர் சிவம் பற்றிய நினைவுப் பேருரையையும் வழங்க உள்ளார்.

தோழர் சிவம் பற்றி தேடகம் வெளியிட்டுள்ள நினைவுக் குறிப்பில் ”சமூக ஒடுக்குமுறைக்கு எதிராய் போராளியாய் எழுந்து தன் வாழ்நாள் முழுவதும் தன் மானிடத்திற்காய் உழைத்தவர்” எனக் குறிப்பிட்டு உள்ளது.

நிகழ்ச்சி விபரம்:

Saturday, October 2nd, 2010 @ 5:00 P.M
Scarborough Village RC
3600, Kingston Road (@ Markham)
M1M 1R9

தமிழர் தகவல் நடுவம் திறந்த கொள்கையையும் வெளிப்படைத் தன்மையையும் கடைப்பிடிக்க வேண்டும்! : த ஜெயபாலன்

Varathakumar_V_TICtic_logoஎனது மனதின் வேதனை ஒன்றை இங்கு நான் கூறியாக வேண்டும். இது எனது வேதனை மட்டுமல்ல இலங்கை வாழ்மக்களின்பால் மானசீகமாகவே அக்கறை கொண்டவர்களின் வேதனையும் தான். கடந்த 30 ஆண்டுகளின் அவலங்களுக்கும் தேக்கத்திற்கும் பின்னரும் எந்த அரசியல் நடவடிக்கைகள் இந்த இழிநிலைக்கு எமது நாட்டை இட்டுச் சென்றனவோ, அதே பாதையில்த்தான் இப்போதும் செல்வதுபோல் தெரிகிறது. அதே ஓட்டை விழுந்த கப்பலில்தான் அரசியல் பயணங்கள் தொடர்வதுபோல் தெரிகிறது. அப்படியானால் எம் இனிய மக்களுக்கு என்றுமே விமோசனம் இல்லையா? என கேட்கத் தோன்றுகிறது? இந்த நிலைமையை இந்த நிகழ்ச்சி (சுவிஸில் இடம்பெற்ற தமிழ் பேசும் கட்சிகளின் மாநாடு.) ஓரளவாவது மாற்றியமைக்க வேண்டும். வாயளவில் அல்லாது செயலளவில் ஒற்றுமையும் புரிந்துணர்வும் வேண்டும். ஒரு புதிய பரிணாமம், ஒரு புதிய பாதை திறக்கப்பட வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாகும். போர் முடிவுற்ற சூழ்நிலையில் நாம் சரியாகப் பயணிக்க வேண்டும் என்பதே இலங்கை மக்கள் அனைவரது சுபீட்சத்திலும் அக்கறை கொண்டவர்களின் ஆதங்கமாகும்.

வரதகுமார் – நிறைவேற்று செயலர். தமிழர் தகவல் நடுவம் மீட்சி: இதழ் 13, நவம்பர் 2009

”Role of Diaspora in renewing hope and rebuilding lives of the war affected communities in Sri Lanka: Some thoughts and Action. – இலங்கையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களின் வாழ்வை மீள்கட்டமைப்பதிலும், மீள நம்பிக்கையூட்டுவதிலும் புலம்பெயர்ந்தவர்களின் பாத்திரம்: சில சிந்தனைகளும் செயற்பாடுகளும்” என்ற தலைப்பிலான சந்திப்பு ஒன்றினை தமிழர் தகவல் நடுவம் ஒக்ரோபர் 02 2010ல் ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்வில் இலங்கையில் இருந்து தமிழ், முஸ்லீம், மலையகத் தமிழ் சமூகங்களைச் சேர்ந்த கல்வியியலாளர்களும் மனித உரிமைவாதிகளும் கலந்துகொள்கின்றனர். இவர்கள் செப்ரம்பர் 25 2010 முதல் ”Post-war challenges facing Tamil speaking peoples of Sri Lanka. – இலங்கைத் தமிழ் பேசும் மக்கள் போருக்குப் பின் எதிர்கொள்ளும் சவால்கள்” என்ற தலைப்பில் பலசுற்று கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட தகவலுடன் இந்த அழைப்பை விடுத்துள்ள தமிழர் தகவல் நடுவம் இதனை தாங்கள் மேற்கொள்ளளும் பல்வேறு முன்முயற்சிகளில் ஒன்று என்று மட்டும் குறிப்பிட்டு உள்ளது. தமிழர் தகவல் நடுவம் கடந்த காலங்களில் பல்வேறு அரசியல் சந்திப்புக்களையும் கலந்துரையாடல்களையும் மேற்கொண்டு வந்தபோதும் மே 18 2009ற்குப் பின் முரண்பட்ட அரசியல் சக்திகளையும் உள்வாங்கி செயற்பட வேண்டியதன் தேவையை வலியுறுத்தி வருகின்றது. இதுவிடயத்தில் பல்வேறு முன்முயற்சிகள் எடுக்கப்பட்ட போதும் அவை காத்திரமான பலனை அளிக்கவில்லை என்பதே உண்மை. ஆனாலும் உரையாடுவதும் விவாதிப்பதும் ஆரோக்கியமானதே. அதற்கான தளத்தை தமிழர் தகவல் நடுவம் பேணி வருகின்றது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலத்தில் இருந்து தமிழர் தகவல் நடுவம் அதனுடன் தன்னையும் பின்னிப் பிணைத்து வந்துள்ளது. அதனால் தமிழர் தகவல் நடுவம் பற்றிய ஆய்வும் மதிப்பீடும் அவசியமானது. ஆனால் இக்கட்டுரையானது தமிழர் தகவல் நடுவத்தின் அண்மைக் காலத்தைய சில நடவடிக்கைகளை மட்டுமே கவனத்திற்கொள்கிறது.

செப்ரம்பர் 25, 2010 முதல் நடாதத்தப்படுகின்ற சந்திப்பு தமிழர் தகவல் நடுவத்தின் பல்வேறு முன்முயற்சிகளில் ஒன்றல்ல. இது குறிப்பாக சூரிச் இல் 2009 நவம்பர் 19 முதல் 22 வரை நடைபெற்ற தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் சந்திப்பின் தொடர்ச்சியே. அக்கூட்டத்தின் மறைமுகமான நிகழ்ச்சி நிரல் மேற்கத்தைய அரசுகளின் ‘ரெஜீம் சேன்ஜ்’யை மையப்படுத்தியே இருந்தது. ராஜபக்ச சகோதரர்களின் ஆட்சியை மாற்றியமைப்பதன் பின்னணியில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுக்காக தமிழ்பேசும் சமூகங்களை ஒருகட்டமைப்பினுள் கொண்டு வந்து ஜனாதிபதித் தேர்தலில் ஆளும் ராஜபக்ச ஆட்சிக்கு எதிராக நிறுத்த முற்பட்டனர். ஆனால் தமிழ்பேசும் சமூகங்களின் பிரதிநிதிகளை குறைந்தபட்ச புரிந்துணர்வு ஒன்றுக்கு கொண்டு வந்து அரசியல் தீர்வுக்கு அழுத்தம் கொடுப்பது என்பது வெளிப்படையான நிகழ்ச்சி நிரலாக தமிழர் தகவல் நடுவத்தினால் முன்வைக்கப்பட்டது.

இந்த மாநாட்டுக்கு ஏற்பட்ட 100 000 பவுண் வரையான செலவையும் – ”இதனை நடாத்துவதற்கான பெரும்பாலான செலவினை சுவிஸ் அரசாங்கமும், IWGயும், Essex பல்கலைக்கழகத்தின் மனித உரிமை மையமும் பகிர்ந்து கொண்டன” என வி வரதகுமார் தங்கள் உத்தியோகபூர்வ ஏடான மீட்சியில் தெரிவித்து இருந்தார். International Working Group on Sri Lanka என்ற அமைப்பே இம்மாநாட்டை ஒழுங்கு செய்வதாகவும்  Initative on Conflict Prevention through Quiet Diplomacy, தமிழர் தகவல் நடுவம் ஆகியனவே இம்மாநாட்டின் ஏற்பாடுகளைச் செய்வதாக அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

சூரிச் மாநாடு மாநாடு பற்றிய மேலதிக வாசிப்பிற்கு:

லண்டனில்? சூரிச்சில்? இரகசிய மாநாடு??

தமிழ் பேசும் கட்சிகளின் மாநாட்டின் திரைக்குப் பின்னால்: த ஜெயபாலன்

தமிழ் பேசும் கட்சிகளின் திசைமாறிய மாநாடு : த ஜெயபாலன்

நடந்தது என்ன? சூரிச் மாநாடும் எழுந்த விமர்சனங்களும்! : மீட்சி

கடந்த ஆண்டு நவம்பர் 19 முதல் 22 வரை நடைபெற்ற சூரிச் மாநாடு பற்றி வி வரதகுமார் வருமாறு தெரிவித்து இருந்தார். ”பங்குபெற்றோர் யாவரும் ஒரு நியாயமான, நிரந்தரமான அரசியல் தீர்வு ஒன்றிக்காக ஒற்றுமையுடனும், ஒன்றுபட்ட நோக்குடனும் உழைப்பது என உறுதி பூண்டனர். தம்மிடையே பேசி முக்கியமான விளக்கங்களைப் பெற்று ஒரு பொது நோக்கத்தை ஏற்படுத்திக் கொண்டனர். அத்துடன் தமிழ் பேசும் மக்கள் ஒரு சமாதானமான செழிப்பான சமூகமாக உருவாவதற்குத் தேவையான அவர்களது உரிமைகளை பெறவதற்காகத் தொடர்ந்தும் இப்டியான கலந்துரையாடலில் பங்கெடுத்துக் கொள்வதெனத் தீர்மானம் எடுத்துக் கொண்டனர்.”

ஆனால் அடுத்த ஒரு ஆண்டுக்குள் அவ்வாறான ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்துள்ள தமிழர் தகவல் நடுவம் முன்னைய சந்திப்பில் கலந்து கொண்ட தமிழ்பேசும் சமூகங்களைச் சேர்ந்த அரசியல் கட்சிகளுக்கு இவ்வாறான ஒரு கலந்துரையாடல் இடம்பெறுவதை அறிவிக்கவில்லை. இதுதொடர்பாக இலங்கையில் உள்ள தமிழ்பேசும் சமூகங்களின் அரசியல் கட்சிகளோடு தேசம்நெற் தொடர்புகொண்ட போது அவர்கள் இதுபற்றி எதுவும் அறிந்திருக்கவில்லை.

இப்போதைய கலந்துரையாடல் ‘Post-war challenges facing Tamil speaking peoples of Sri Lanka.-  இலங்கைத் தமிழ்பேசும் மக்கள் போருக்குப் பின் எதிர்கொள்ளும் சவால்கள்’ என்ற அடிப்படையில் இடம்பெற்றுள்ளது. இக்கலந்துரையாடலுக்கு இலங்கையில் இருந்தும் இலங்கைக்கு வெளியே இருந்தும் கல்வியியலாளர்களும் மனித உரிமைவாதிகளும் அழைக்கப்பட்டு உள்ளனர். சந்திரஹாசன், பாக்கியசோதி சரவணமுத்து, சீலன் கதிர்காமர், ராஜன் பிலிப்ஸ், பேராசிரியர் சிற்றம்பலம் உட்பட இன்னும் சிலரும் இந்நிகழ்வில் கலந்துகொள்ள வந்துள்ளர். இவர்கள் பெரும்பாலும் மனித உரிமைகள் அமைப்புகள் உட்பட்ட அரசுசாரா பொது அமைப்புகளைச் சேர்ந்தவர்கள். இக்கலந்துரையாடலும் முன்னைய சூரிச் மாநாடு போன்று பெரும் நிதிப் பங்களிப்பின்றி மேற்கொண்டிருக்க முடியாதாகையால் தமிழர் தகவல் நடுவம் இச்சந்திப்பின் பின்னணியில் உள்ளவர்களை வெளிப்படுத்துவதன் மூலம் மட்டுமே இச்சந்திப்புக்களின் உண்மையான நோக்கங்களை தமிழ் மக்கள் அறிந்துகொள்ள முடியும்.

தமிழர் தகவல் நடுவம் எப்போதும் அரசு மற்றும் கட்சிகள் பொது அமைப்புகளிடம் திறந்த கொள்கையையும் வெளிப்படைத் தன்மையையும் வலியுறுத்தி வருகின்றது. ஆனால் இவற்றை தமிழர் தகவல் நடுவம் கடைப்பிடிப்பதில் எப்போதும் தயக்கம் காட்டியே வந்துள்ளது. சூரிச் மாநாட்டிலும் அதில் கலந்துகொண்ட கட்சிகள் தேசம்நெற் இணையத்தைப் பாரத்தே அம்மாநாடு பற்றிய உள் தகவல்களைத் தெரிந்துகொள்ள வேண்டி இருந்தது.

புலம்பெயர்ந்த மக்கள் இலங்கையின் அரசியல் நடவடிக்கைகளில் எழுந்தமானமாக நேரடியாக ஈடுபடுவதை எப்போதும் விமர்சிக்கும் தமிழர் தகவல் நடுவம், அங்குள்ள தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடாகவே புலம்பெயர்ந்த தமிழர்கள் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி வந்துள்ளது. புலம்பெயர்ந்த தமிழர்கள் நேரடியாக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது தமிழ் அரசியல் பிரதிநிதிகளை கீழ்மைப்படுத்தும் என்றும் தமிழர் தகவல் நடுவம் தெரிவித்து வந்துள்ளது. ஆனால் இலங்கைத் தமிழர்கள் தொடர்பில் முக்கிய சந்திப்பு ஒன்றினை மேற்கொள்ளும் தமிழர் தகவல் நடுவம் அது பற்றி எவ்விதமான விடயத்தையும் இதுதொடர்பாக மாநாட்டை மேற்கொண்ட தமிழ் கட்சிகளுக்கு அறிவிக்கவில்லை.

தமிழர் தகவல் நடுவம் பற்றிய சந்தேகப் பார்வையும் நம்பிக்கையின்மையும் ஏற்படுவதற்கு இவ்வாறான இறுக்கமான மூடிய வெளிப்படையற்ற நகர்வுகளே காரணமாக இருந்துள்ளது. அதனாலேயே சூரிச் மாநாட்டில் தமிழர் தகவல் நடுவத்தினால் குறிப்பாக எதனையும் சாதிக்க முடியவில்லை. இப்போது சூரிச் மாநாடு கிடப்பில் போடப்பட்டு லண்டன் மாநாடு. இதுவே கடந்த காலங்களில் தமிழர் தகவல் நடுவத்தின் செயற்பாட்டு போக்காக இருந்து வருகின்றது.

2009 மே 18க்குப் பின் தமிழர் தகவல் நடுவம் வேறு வேறு முயற்சிகளில் இறங்கியது. அதற்காக வேறு வேறு சந்திப்புக்களையும் ஏற்பாடு செய்தது. இந்த சந்திப்புக்களின் நோக்கங்களில் அரசியல் ரீதியான முரண்பட்ட நலன்களும் இருந்தது. அப்படி இருக்கையில் ஒரே குழுவில் செயற்பட்டவர்களுக்கு இடையேயே ஒளிவுமறைவுகள் மலிந்து காணப்பட்டது. அதனால் தமிழர் தகவல் நடுவத்தினை எல்லோரும் சந்தேகப் பார்வையுடன் பார்க்கின்ற நிலை உருவானது.

தமிழ் மக்களிடையே புரிந்தணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அரசியல் ரீதியாக முரண்பட்டவர்கள் அனைவரையும் அழைத்து ஒரு சந்திப்பு நடந்து கொண்டு இருக்கும்; அதே நேரம் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களை மட்டும் அழைத்து மற்றும்மொரு சந்திப்பு தனியாக நடைபெறும். பின்னர் இவர்கள் அனைவருக்கும் எதுவும் தெரியாத வகையில் அரசசார்பற்ற அமைப்புகளை வரவழைத்து மற்றுமொரு சந்திப்பு நடைபெறும். தமிழர் தகவல் நடுவம் தன்னுடைய தேவைக்கும் வசதிக்கும் ஏற்ப தமிழ் அரசியல் ஆர்வலர்களை பிரித்தாளுகின்ற தந்திரத்தை நீண்ட நாட்களாகவே கொண்டுள்ளது. தமிழர் தகவல் நடுவத்தின் சில கூட்டங்களுக்கு தொடர்ச்சியாகச் செல்லும் ஒருவர் இதனை மிக இலகுவில் கண்டுகொள்ள முடியும். இது தமிழர் தகவல் நடுவத்தின் மிகப் பெரும் பலவீனமாகவும் தமிழர் தகவல் நடுவத்தினால் எதனையும் முழுமையாகச் சாதிக்க முடியாமல் போவதற்கான காரணமாகவும் உள்ளது.

இக்கட்டுரையில் ஆரம்பத்திலேயே வி வரதகுமாருடைய குறிப்பில் உள்ள ”கடந்த 30 ஆண்டுகளின் அவலங்களுக்கும் தேக்கத்திற்கும் பின்னரும் எந்த அரசியல் நடவடிக்கைகள் இந்த இழிநிலைக்கு எமது நாட்டை இட்டுச் சென்றனவோ, அதே பாதையில்த்தான் இப்போதும் செல்வதுபோல் தெரிகிறது. அதே ஓட்டை விழுந்த கப்பலில்தான் அரசியல் பயணங்கள் தொடர்வதுபோல் தெரிகிறது.” என்ற குறிப்பு தமிழர் தகவல் நடுவத்திற்கும் மிகப் பொருத்தமானதே. இந்த ஓட்டை வீழ்ந்த கப்பலில் சூரிச் என்றும் லண்டன் என்றும் வி வரதகுமார் நீண்ட காலம் பயணிக்க முடியாது. இந்தக் கப்பலை நம்பியே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் உட்பட முக்கிய போராளிகள் காத்திருந்ததாக தன்னை வெளிப்படுத்த விரும்பாத முக்கிய அரசியல்வாதி ஒருவர் சூரிச் மாநாட்டில் சந்தித்த போது தேசம்நெற்க்கு தெரிவித்து இருந்தார். ஆகவே தமிழர் தகவல் நடுவத்தின் கடந்த 30 ஆண்டுகால அரசியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அதில் உள்ள ஓட்டைகள் அடைக்க முடிந்தால் அடைக்கப்பட வேண்டும். முடியாத நிலையில் அக்கப்பல் மூழ்குவது தவிர்க்க முடியாதது.

‘Tamillain-Barre’ Syndrome’ மும் தமிழ் சமூகத்திற்கான புதிய அரசியல் கலாச்சாரத்தின் அவசியமும் : த ஜெயபாலன்

Aru_ThirumuruganPon_Balasundarampillai_UoJShanmugalingam_N_UoJGanesh_K_GA_Jaffna‘Guillain-Barre’ Syndrome’ என்பது மனிதனின் நரம்புத் தொகுதியின் முடிவுப் புள்ளிகளைத் தாக்குகின்ற ஒருவகை நோயின் அறிகுறி. இது ஆரம்பத்தில் பலவீனத்தை ஏற்படுத்தி கால் கைகளில் ஆரம்பித்து உடலை முற்று முழுதாகச் செயலிழக்கச் செய்து மரணத்தையும் விளைவிக்கும். இதன் தாக்கம் வேகமானது. இது மருத்துவரீதியில் உடனடிச் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட வேண்டியது. இந்நோயின் ஆபத்து என்னவெனில், உடலை நோய்க்கிருமிகளிடம் இருந்து பாதுகாக்கின்ற நீர்ப்பீடனத் தொகுதியே (Immune System) உடலின் நரம்புத் தொகுதியைத் (Nerve System) தாக்குகின்றது. இது ‘Guillain-Barre’ Syndrome’ பற்றிய மருத்துவக் கட்டுரை அல்ல. இது

‘Tamillain-Barre’ Syndrome’:

தமிழ் சமூகத்தினை பாதுகாக்க வேண்டிய அதன் அறிவியல் கட்டமைப்புகளில் உள்ளவர்கள் அச்சமூகத்தின் சிந்தனைத் திறனைத் தாக்கி ஒட்டுமொத்த சமூகத்தையுமே சீரழிக்கின்ற ‘Tamillain-Barre’ Syndrome’ பற்றியது.

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் அரசியல் தலைமைகள் இச்சமூக நோயை எவ்வாறு கையாளப் போகின்றன என்பது முக்கியமானது. குறிப்பாக வடக்கு – கிழக்கு மாகாணங்களில் அதிகாரத்தைக் கொண்டுள்ள தமிழ் அரசியல் தலைமைகளுக்கு கூடுதல் பொறுப்பு உண்டு. இக்கட்டுரையானது குறிப்பாக யாழ் மாவட்டத்தை மையப்படுத்தியே எழுதப்பட்ட போதும் ஏனைய மாவட்டங்களிலும் தமிழ் சமூகத்தின் நிலையில் பாரிய மாற்றங்கள் இல்லையென்றே கருதலாம்.

தமிழ் சமூகத்தின் இயக்கத்தை அதன் உள்ளிருந்தே அழிக்கின்ற ‘Tamillain-Barre’ Syndrome’ உடனடியாக அடையாளம் காணப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். அல்லது இந்நோய் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் செயலிழக்கச் (Paralysed) செய்துவிடும்.

கடந்த பல ஆண்டுகளாக ஆட்கடத்தல் கொலை என்பன நாளாந்த வாழ்வின் ஒரு அங்கமாக, ஊடகங்களில் வெறும் சிறு செய்தியாக இருந்த நிலை போய், இப்போது அவ்வாறான சம்பவங்கள் நடக்கின்றதா என்பதை ஊடகங்கள் கண்ணில் எண்ணை விட்டு தேடிக்கொண்டிருக்கின்றன. இவ்வாறான வெளிப்படையான குற்றச்செயல்களும் அரசியல் சலசலப்புகளும் ஏற்படுத்துகின்ற பரபரப்பிலும் ஆர்வத்திலும் சமூகத்தை மெல்ல மெல்ல சிதைக்கின்ற விடயங்கள் அடிபட்டுச் செல்கின்றது.

இன்று வடக்கு கிழக்கில் தமிழ் சமூகத்தை நிர்வகிக்கின்ற கட்டமைப்புகள் மிகமோசமான நிலையை அடைந்துள்ளன. கிராம சேவகர்கள் பற்றி மாதத்திற்கு 1500 (நாளொன்றுக்கு 50) முறைப்பாடுகள் வருவதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் இவ்வாரம் தெரிவித்துள்ளார். இதில் தங்கள் கடமைகளை சரிவரச் செய்யாமை, லஞ்சம், ஊழல், மதுபோதைக்கு அடிமையாதல் போன்ற முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இம்முறைப்பாடுகள் கிராம சேவகர்களிடம் மட்டுமல்ல ஏனைய துறைகளிலும் பரவலாக உள்ளது. ஆனால் இவற்றை எதிர்கொள்ள அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமாருக்கு உள்ள துணிச்சலும் நேர்மையும் ஏனைய துறைசார்ந்த பொறுப்பில் உள்ளவர்களிடம் பெரும்பாலும் இல்லை.

Imelda_Sugumar_GA_JaffnaCharles_Mrs_GA_VavuniyaRubavathy_Ketheeswaran_GAஇமெல்டா சுகுமாரைப் போன்றே வவுனியா அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ், கிளிநொச்சி அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன், யாழ் மாநகர மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பதில் நூலகர் ஸ்ரீகாந்தலட்சுமி போன்றவர்கள் குறிப்பாக பெண்கள் தங்கள் கடமைகளைப் பொறுப்புடன் மேற்கொள்வதாக சுட்டிக்காட்டப்படுகின்றது. ஸ்ரீகாந்தலட்சுமி, இமெல்டா சுகுமார், ரூபாவதி கேதீஸ்வரன் ஆகியோர் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலும் தங்கள் கடமையை மேற்கொண்டவர்கள்.

இலங்கையில் காலம் காலமாக ஆட்சிக்கு வந்த அரசு தமிழ் மக்களின் நலன்களுக்கு எதிரானது என்ற உணர்வு நிலையில் உள்ள தமிழ் சமூகம் அதன் நிர்வாகத்தை தம் கைகளில் கொண்டுள்ளவர்கள், தமக்கு கிடைத்துள்ள மட்டுப்படுத்தப்பட்ட வளங்களைக் கொண்டு தமிழ் மக்களின் நலன்சார்ந்து செயற்பட வேண்டும் என்ற எண்ணப்பாடு மிகக் குறைவாகவே உள்ளது. இவர்கள் தமிழ் மக்களின் நலனுக்கு எதிராக தங்கள் சொந்த நலன்சார்ந்து செயற்படுகின்ற போக்கே இங்கு குறிப்பிடப்படும் ‘Tamillain-Barre’ Syndrome’ க்கு தற்போது காரணமாக உள்ளது.

இது விடயத்தில் 1994 முதல் யாழ் மாவட்டத்தின் அதிகாரத் தலைமையைக் கொண்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் எதிர்கால அரசியல் முன்னெடுப்புகள் மிக முக்கியமானது. வடக்கின் குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தின் பொறுப்பான பதவிகளை நிரப்புகின்ற விடயத்தில் அமைச்சர் தேவானந்தா அதிகாரத்தைக் கொண்டுள்ளார். அதனால் எவ்வாறான சமூக உருவாக்கத்தில் அவர் தன்னை ஈடுபடுத்த முனைகிறார் என்பதனை போரிற்குப் பின்னான அடுத்த சில ஆண்டுகள் நிரூபிக்கும். இதற்கிடையே இன்னும் சில வாரங்களில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் தேவானந்தாவிற்கு கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேசம்நெற் க்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘Tamillain-Barre’ Syndrome’ இன் சில குணம்குறிகள்:

முன்னாள் யாழ் அரசாங்க அதிபர் கெ கணேஸ்:

Ganesh_GA_Jaffnaயாழ்ப்பாண அரசாங்க அதிபராக இருந்த கே கணேஸ், இவர் முன்னர் வவுனியா அரசாங்க அதிபராகவும் இருந்தவர். இவர் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜென்ரல் ஜி ஏ சந்திரசிறியின் பாதங்களில் வீழ்ந்து ஆசீர்வாதம் வாங்கினார் என்பது அவர் எப்படிப்பட்ட ஆளுமை உடையவர் என்பதை வெளிப்படுத்தி உள்ளது. ஒரு மாவட்டத்தினுடைய அரசாங்க அதிபர் என்பது இலங்கை ஜனாதிபதியின் நேரடிப் பிரதிநிதி. அவ்வாறான ஒருவர் இராணுவ அதிகாரியின் பாதங்களில் வீழ்வது அவருடைய பதவியையும் அவமானப்படுத்துகின்ற ஒரு செயலே. அவர் அவ்வாறு இராணுவ அதிகாரியின் பாதங்களில் வீழ்ந்தமைக்குக் காரணம் தன்னுடைய பதவிக் காலத்தை ஆறுமாத காலத்திற்கு நீடிப்பதற்கே எனச் செய்திகள் தெரிவிக்கின்றது. இலங்கையில் ஓய்வுபெறுவதற்கான வயதெல்லை 65 வயதாக இருந்த போதும் இவர் எப்படியோ தனது பதவிக்காலத்தை 69 வயதுவரை தக்க வைத்து அதன்பின்பும் இன்னும் சிறிது காலம் வரை அதனை நீடித்துக் கொள்ள முற்பட்டு உள்ளார்.

அவர் தனது பதவிக் காலத்தை நீடித்துக்கொண்டது தமிழ் மக்களுக்கோ யாழ் மக்களுக்கோ தனது சேவையை வழங்குவதற்காகவா என்பது சந்தேகத்திற்குரியது. இவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்த போதும் அரசாங்க அதிபராகப் பணியாற்றியவர். பகைமுரண் கொண்ட அரசியல் அந்தங்களிடையே பணியாற்றுவது என்பது இலகுவான விடயமல்ல. இந்த இந்நிலையில் மக்களின் நலன்கள் என்பதிலும் பார்க்க இந்த அரசியல் அந்தங்களில் உள்ளவர்களின் நலன்களையே இவர்கள் திருப்திப்படுத்த வேண்டி இருந்தது. இன்று அவ்வாறான நெருக்குவாரம் இல்லாத போதும் அவர்கள் மக்கள் நலன் சார்ந்து இயங்குகின்ற உணர்வு நிலையை மீளப் பெறமுடியாத (irreversible) வகையில் இழந்துபோய்விட்டனர்.

வன்னி யுத்தத்தின் முடிவில் நூற்றுக் கணக்காண சிறார்கள் அனாதரவாக்கப்பட்டனர். போரினால் பாதிக்கப்பட்ட இச்சிறார்களைப் பொறுப்பேற்று பராமரிக்க லண்டனில் உள்ள ஒரு ஆலயம் முன் வந்தது. அவர்களுக்கு இலங்கையில் பதிவு செய்யப்பட்ட பொது ஸ்தாபனம் ஒன்றும் உள்ளது. அப்பிள்ளைகளை ஒரு ஸ்தாபனம் பெறுப்பேற்கும் பட்சத்தில் அரசாங்க அதிபர் அதற்கான அனுமதியை வழங்க வேண்டும். அப்போது அரசாங்க அதிபராக இருந்த கே கணேஸிடம் 2010 ஏப்ரல் வரை இது தொடர்பாக பல தடவை முயற்சித்தும், அவர் அதனைத் தட்டிக்கழித்து வந்துள்ளார். முதற்தடவை இவ்விடயமாக பேசுவதற்கு லண்டன் ஆலயத்தின் – இலங்கையில் உள்ள ஸ்தாபனத்தின் முக்கியஸ்தர் சென்றிருந்தார். அவர் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவர்கள் பல முயற்சிகள் எடுத்தும் அது பலனளிக்கவில்லை. அதன் பின் லண்டனில் இருந்து நேரடியாகத் தொடர்பு கொண்ட போது, ‘முதல் கோணல் முற்றும் கோணல் மாதிரி நீங்கள் மட்டகளப்பாள் ஒருத்தரையா அனுப்பி உள்ளீர்கள்’ என்று அரசாங்க அதிபர் கணேஸின் அலுவலகத்தில் இருந்து பதிலளிக்கப்பட்டது.

இது விடயமாக தேசம்நெற் உடன் தொடர்புகொண்ட அவ்வாலயம் அவர் ‘சம்திங்’ எதிர்பார்க்கிறார் என்று தாங்கள் சந்தேகப்படுவதாகவும் தெரிவித்தனர்.

கே கணேஸ் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜென்ரல் ஜி ஏ சந்திரசிறியின் பாதங்களில் வீழ்ந்து ஆசீர்வாதம் வாங்கிய போதும் யூலை 01 2010ல் அவருக்கு வழங்கப்பட்ட பதவி நீடிப்பு யூலை 10 2010ல் முடிவுக்கு வந்தது.

இவ்வாறான ஒருவருக்கு யாழ் பல்கலைக்கழகம் கௌரவப் பட்டம் வழங்கி கௌரவிக்க இருப்பதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. யாழ் கிராம சேவகர்களுக்கு எதிராக மாதம் 1500 குற்றச்சாட்டுகள் வருவதை மூன்று மாதங்களே அரசாங்க அதிபராகக் கடமையாற்றிய அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் கவனத்திற்கு எடுத்துள்ளார். ஆனால் இதுவரை அப்பொறுப்பில் இருந்த முன்னாள் அரசாங்க அதிபர் கே கணேஸ் அவ்வாறானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதைத் தவிர்த்துள்ளார். அல்லது நடவடிக்கை எடுக்க முடியாத நிலையில் இருந்துள்ளார்.  இவ்வாறானவர்களை கௌரவிப்பதன் மூலம் யாழ் பல்கலைக்கழகம் எவ்வாறானவர்களை முன்னுதாரணமாக சமூகத்தின் வரும்கால சந்ததியினருக்கு காட்ட முற்படுகிறது என்பதை இது வெளிப்படுத்துகின்றது.

சைவத் தமிழ் சொற்பொழிவாளர் ஆறு திருமுருகன்:

Aru_Thirumuruganஆறு திருமுருகன் இலங்கைத் தமிழ் மக்கள் மத்தியில் தன் பேச்சாற்றலால் பிரபல்யம் அடைந்தவர். தன் பேச்சாற்றலுக்காக ‘செஞ்சொற்செல்வர்’ என்ற பட்டத்தைக் கொண்டவர். இவர் யாழ்ப்பாணத்தில் பல பொது ஸ்தாபனங்களிலும் பல்வேறு பொறுப்புகளில் உள்ளவர். ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தில் தலைவராக உள்ளார். சிவபூமி அறக்கட்டளையிலும் தலைவராக உள்ளார். பெரும்பாலும் விழாக்களில் கலந்துகொண்டு கௌரவத்தை ஏற்றுக்கொள்வதுடன் இவர் தனது சமூகக் கடமையை முடித்துக் கொள்கின்றார். இவர் அனாதரவானவர்களை பராமரிக்கின்ற முயற்சியில் கூடிய கரிசனையைக் காட்டி வருவதை அவதானிக்க முடிகிறது.

ஆயினும் இவர் மீதான முழுமையான மதிப்பீடு சர்ச்சைக்குரியதாகவே உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக யாழ் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியில் அதிபராக இருக்கும் ஆறு திருமுருகன் மீது தற்போது வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு உள்ளதாகத் தெரியவருகின்றது.

1894ல் ஆரம்பிக்கப்பட்ட யாழ் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி ஒறேற்றர் சுப்பிரமணியம் அதிபராக இருந்த 1961 ஆம் ஆண்டில் 50 மாணவர்களை பல்கலைகழகம் அனுப்பியது. அன்றைய காலகட்டத்தில் ஒரே பாடசாலையில் அதிக மாணவர்கள் பல்கலைகழகம் சென்றமையால் யாழ் ஸ்கந்தாவரோதயாக் கல்லூரி அகில இலங்கை ரீதியில் 3 ஆவது இடமும் யாழ்ப்பாணத்தில் 1 ஆவது இடமும் பெற்று தரத்தின் உச்சியில் இருந்தது. இது ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் பொற்காலமாக இருந்தது. கல்வித் தரத்தில் குறைந்த மாணவர்களையும் வயது கூடிய மாணவர்களையும் ஏனைய பாடசாலைகள் ஏற்க மறுப்பவர்களையும் கூட இக்கல்லூரி ஏற்றுக் கொண்டது. இது பற்றி அப்போதைய அதிபர் ஓறேற்றர் சுப்பிரமணியம் கருத்துத் தெரிவித்து இருந்த போது “இத்தகைய மாணவர்களால் இக் கல்லூரியை மட்டுமே சிலவேளை சீர்குலைக்க முடியும். அனால் இவர்களை வெளியே விட்டால் சமுதாயமல்லவா அழிந்துவிடும்” என்று பதிலளித்து இருந்தார். ஏனைய பாடசாலைகளில் நிராகரிக்கப்பட்ட மாணவர்களையும் உள்வாங்கியே அவ்வதிபர் தனது சாதனையை நிகழ்த்தி உள்ளார்.

ஆனால் ஆறு திருமுருகன் அதிபராக வந்ததன் பின்னர் யாழ் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் சராசரி வளர்ச்சி பாதிக்கப்பட்டு உள்ளதாக பரவலான குற்றச்சாட்டுகள் உள்ளது. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில மாணவர்கள் காலத்திற்குக் காலம் திறமையான சித்திகளைப் பெற்றுக் கொள்கின்றார்கள் என்பது உண்மையானாலும் சராசரியாக பாடசாலையின் கல்வித்தரம் வீழ்ச்சி அடைந்து உள்ளதாகக் குற்றம்சாட்டப்படுகின்றது.

பல்வேறு பொது அமைப்புகளிலும் தன்னை முன்னிலைப்படுத்துகின்ற ஆறு திருமுருகன் பாடசாலையில் கவனம் கொள்ளவில்லையென பாடசாலை மாணவர்களின் பெற்றோர் கருதுகின்றனர். ஆறு திருமுருகன் மீது வழக்குத் தொடுத்துள்ளவரும் இப்பாடசாலை சார்ந்த பெற்றோரில் ஒருவரே.

இதில் முக்கிய விடயம் என்னவெனில் முன்னணிப் பாடசாலைகளில் ஒன்றான ஸ்கந்தவரோதயாக் கல்லூரிக்கு அதிபராக வருபவர் அதிபர்களுக்கான தரப் பரீட்சையில் சித்தியடைந்து இருக்க வேண்டும். ஆனால் ஆறு திருமுருகன் தனது சேவைக்கால அடிப்படையில் தனக்கு இருந்த சமூக அந்தஸ்தைக் கொண்டு அரசியல் செல்வாக்குடன் அப்பதவியைப் பெற்றுள்ளார். அப்பதவியை ஏற்ற  பின்னும் இவர் அதிபர் பதவிக்கான பரீட்சையை எடுக்கவில்லை. அதனால் அதிபர்கள் மட்டத்தில் இவர் அதிபராகக் கணிக்கப்படுவதில்லை. இதனால் பதவியேற்றது முதல் பாடசாலை அதிபர்களுக்காக வைக்கப்படுகின்ற கூட்டங்கள், கருத்தரங்குகள், கலந்துரையாடல்களில் இவர் கலந்துகொள்வதில்லை. அதனால் பாடசாலை வளர்ச்சி, நிர்வாகம் போன்ற விடயங்களில் இவர் பின்தங்கியுள்ளார். ஒரு பாடசாலையை தரமான பாடசாலையாகக் கொண்டுவருவதற்கு அதிபருடைய பிரசித்தி மட்டும் போதாது என்பதனை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதில்லை.

இவ்விடயம் சம்பந்தமாக தேசம்நெற் பல்வேறு பிரிவினர்களிடமும் விசாரித்ததில் இவ்வாறான அதிபர் நியமனங்கள் யாழ் மாவட்டத்தில் பொதுவாக இருப்பதனையும் யாழ்ப்பாணத்தின் முக்கிய பாடசாலைகளிலேயே இவ்வாறான அதிபர்கள் நியமிக்கப்பட்டு இருந்ததையும் அறிய முடிந்தது. அதேசமயம் அதிபருக்கான பரீட்சை எடுக்காமல் கூடிய சேவைக்காலத்தைக் கொண்டு அதிபரான சிலர் தங்கள் பாடசாலையை உயர்வான நிலைக்கு கொண்டுவந்தமையும் கவனத்திற் கொள்ளப்படுதல் வேண்டும். அதனால் பரீட்சைகளிலும் பார்க்க அவர்கள் தங்கள் பதவியைக் கொண்டு எதனைச் சாதித்தனர் என்பது முக்கியமானது. ஆனால் அறு திருமுருகனின் நிலை இரண்டும் கெட்டானாகி உள்ளது.

மேலும் ஆறு திருமுருகனின் சர்ச்சை அதிபர் பதவியுடன் நிற்கவில்லை. ஆறு திருமுருகன் கதாப்பிரசங்கம் செய்வதற்கு யாழ் பல்கலைக்கழகம் ஒன்றும் சைவக் கோயிலும் அல்ல, யாழ் பல்கலைக்கழக கவுன்சில் கோவில் நிர்வாக சபையும் அல்ல. ஆனாலும் தனது அதிபர் பதவிக்கு தகமை பெறாத ஆறு திருமுருகன் யாழ் பல்கலைக்கழகத்தின் கவுன்சிலின் உறுப்பினராகவும் ஆக்கப்பட்டு உள்ளார். ஆலயத்தின் அறங்காவல் தலைவர் என்ற அடிப்படையில் இந்நியமனம் மேற்கொள்ளப்பட்டு இருக்கலாம் என்று இதனை எடுத்துக் கொள்ளலாம்.

உள்ளடக்கம் பற்றி மாறுப்பட்ட கருத்து இருக்கலாம், ஆனால் ஆறு திருமுருகன் ‘செஞ்சொற்செல்வர்’ சிறந்த சொற்பொழிவாளர். சிறந்த தமிழ் ஆசிரியராகவோ சைவசமய பாடத்திற்கான ஆசிரியராகவோ இருக்கலாம். அவை மட்டும் அவருடைய ஏனைய பொறுப்புகளுக்கான இலவச அனுமதியாக முடியாது. சமூகப் பொறுப்பில் உள்ளவர்கள் ‘அகலக் கால் வைக்காமல்’ தங்கள் பலத்தையும் பலவீனத்தையும் மதிப்பீடு செய்து ஏற்கும் பொறுப்புக்களை பொறுப்புடன் திறம்படச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்ய முடியாதபட்சத்தில் அதிலிருந்து வெளியேற வேண்டும்.

‘உண்மையே உயர் அறம்’ என்ற யாழ் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் மகுட வாசகத்திற்கு ஒரு அதிபர் என்றளவில் மதிப்பளிக்க வேண்டும்.

யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் என் சண்முகலிங்கம்:

Shanmugalingam_N_UoJProf. N. Shanmugalingam B.Ed.(Colombo), M.A.(Jaffna), Ph.D.(Jaffna) – யாழ் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக 2006 பிற்பகுதியில் நியமனம் பெற்ற இவர் இப்பல்கலைக்கழகத்தில் இதுவரை துணைவேந்தர்களாக இருந்தவர்களில் மிகக் குறைந்த அறிவியல் தரத்தைக் கொண்டிருப்பவராக உள்ளார். மேலும் நிர்வாகத் திறனும் செயற்திறனும் குறைந்த உபவேந்தராகவும் இவர் கணிக்கப்படுகின்றார். இவருடைய நடவடிக்கைகள் சர்ச்சைக்குரியதாகவே இருந்து வருகின்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ பட்டம் பெற்ற இவர், தனது கலாநிதிப் பட்டப் படிப்பிற்காக பிலிப்பைன்ஸிற்குச் சென்றிருந்தார். அங்கு ஒருதலைக் காதலில் மனமுடைந்து மேற்கொண்டு படிப்பைத் தொடர முடியாத நிலையில் மீண்டும் யாழ்ப்பாணம் அனுப்பி வைக்கப்பட்டார். இவர் பின்னர் யாழ்ப்பாணத்தில் தன் கலாநிதிப் பட்டப்படிப்பை முடித்து பேராசிரியர் ஆனார்.

தனிமனித பலவீனங்களை ஒருவருக்கு எதிராகப் பயன்படுத்துவது ஆரோக்கியமல்ல. ஆனால் அதனையே சமூகத்தின் உயர்பொறுப்புகளில் உள்ளவர்கள் தங்களுக்கான மறைவிடமாக பயன்படுத்த முனையும் போது அப்பலவீனங்களை அம்பலத்திற்கு கொண்டு வருவது தவிர்க்க முடியாதது. ஏனைய பல்கலைக்கழகங்களிலும் பாலியல் சுரண்டல்கள் காணப்பட்ட போதும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இதில் முன்நிற்கின்றது.

Sri_Pirasanthan_UoSJதற்போது ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இருக்கும் ஸ்ரீ பிரசாந்தன் 2003ல் ஞர்னம் சஞ்சிகையில் எழுதிய கவிதையில் விரிவுரையாளரின் பலவீனத்தை விரிவாகவே விபரிக்கிறார் அவர்.

ஆற்றல் விளைச்சல் ‘அறுப்பத’ற்கென்றே
அரியணை
வீற்றிருக்கின்ற விரிவுரையாளரே!

நேற்றொரு பரீட்சை நடந்தது.
நெளிந்த ‘பின்னலி’
கூற்றை ரெண்டு விழிகளில் கொண்டவள்
காற்று வாங்கும் சாட்டையொடு
உம்மிடம் கண்வீச்சு
நீட்டினாள்.
சொல்லுக, நீர் விழவில்லையா?

நேற்றொரு பரீட்சை நடந்தது.
எமக்கும்,
உம் மாற்றம் உறுகிற
மனச்சாட்சிக்குமே
நேற்றொரு பரீட்சை நடந்தது.

நீர் ஒடிந்த மனதினுள்
ஓங்கி வளர்கிற ஓர்மத்தில்
பிடித்த கூரிய பேனை இருந்தது.
நானும்,
பரீட்சை எழுதினேன், விரிவுரையாளரே!

இக்கவிதைக்கு ஸ்ரீ பிரசாந்தன் கொடுத்த விலை பெரியது. யாழ் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் பதவிக்கு விண்ணப்பித்த போது, அங்கு தேர்ந்தெடுக்கப்பட்டவரிலும் அதிக திறமை இருந்தும் ஸ்ரீ பிரசாந்தின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. ஆனால் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம் ‘இவ்வளவு திறமையுள்ள உங்களை ஏன் தமிழ் பல்கலைக்கழகங்கள் நிராகரித்தனர்?’ என்ற ஆச்சரியக் கேள்வியுடன் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டது.

இவ்வாறான யாழ் பல்கலைக்கழகச் சூழலில் கற்பித்த என் சண்முகலிங்கம் இந்த ‘லீலைகளில்’ முன்னின்றார்.

அப்போது 2005 அக்காலப்பகுதி. பிரித்தானியாவில் வாழும் யாழ் பல்கலைக்கழகத்துடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டிருந்த ஒருவரும் யாழ் சென்றிருந்தார். (தேசம்நெற் க்கு தகவல் அளித்த அவர் தனது பெயரை வெளியிட விரும்பவில்லை.) அவர் பல்கலைக்கழகம் சென்று பலரையும் சந்தித்து வந்தார். அவர் ‘பொங்கு தமிழ்’ கணேசலிங்கத்தின் பாலியல் வல்லுறவு பற்றிய செய்தியை விசாரித்த போது ‘அது பழைய செய்தி. இப்ப நடந்த கூத்தைக் கேளுங்கள்’ என்று சொல்லி பல்கலைக்கழக விரிவுரையாளர்களால் கூறப்பட்டவையே இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அப்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் புதிய கட்டிடங்கள் அமைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஓகஸ்ட் மாதம் நடுப்பகுதியில் ஒருநாள் என் சண்முகலிங்கம் மாணவி ஒருத்தியை அழைத்துக் கொண்டு கட்டிமுடிக்கப்படாத கட்டிடத்தின் உச்சிக்குச் சென்றிருக்கிறார். அதற்கு அருகில் உள்ள கட்டிடத்தில் தனது வேலையில் விட்டுவந்த ஏதோ ஒன்றை எடுக்கச் சென்ற கட்டிடத் தொளிலாழி இவர்களைப் பார்த்தவுடன் சந்தேகம் கொண்டு தானும் மேலேறி என்ன நடைபெறுகிறது என்று அருகில் இருந்த கட்டிடத்தில் இருந்து பார்த்திருக்கிறார். அவர்கள் உறவில் ஈடுபட்டதையும் கண்டு கொண்டார். ஓடிச்சென்று பல்கலைக்கழகத்தின் அப்போதைய துணைவேந்தர் எஸ் மோகனதாஸிடம் முறையிட்டார். அவர் அதனை வேறு காரணங்களுக்காக மூடிமறைத்தார். ஆனாலும் அச்சம்பவம் பரகசியமானது.

இன்னுமொரு சம்பவத்தில் வெளிநாட்டுப் பெண் ஆய்வாளருடன் தகாதமுறையில் நடந்துகொள்ள முற்பட்ட போது அப்பெண் என் சண்முகலிங்கத்தை அறைந்துள்ளார். பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து சமூக ஆய்வு ஒன்றுக்காக இப்பெண் யாழ் பல்கலைக்கழகம் அனுப்பப்பட்டார். இப்பெண் ஆய்வாளரை என் சண்முகலிங்கம் சமூகவியல்துறை சார்ந்தவர் என்பதால் பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை அவரிடம் அனுப்பி வைத்தார். அப்பெண்ணை என் சண்முகலிங்கம் அணைக்க முற்பட்ட போது அப்பெண் சண்முகலிங்கத்தை அறைந்தே விட்டார். தன்னை அவரிடம் அனுப்பிய பாலசுந்தரம்பிள்ளையிடம் முறையிட்டு உள்ளார். எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் அப்பெண் ஆய்வாளர் தனக்கு ஆபத்து நிகழலாம் என்ற அச்சத்தில் ஆய்வை மேற்கொள்ளாமலேயே யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறினார்.

இவ்விரு சம்பவங்களுமே என் சண்முகலிங்கம் யாழ் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக வருவதற்கு முன்னர் இடம்பெற்றது. இவை தெரிந்து இருந்தும் என் சண்முகலிங்கம் யாழ்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் ஆக்கப்பட்டார். இதனால் அவர் உபவேந்தர் ஆனதன் பின்னர் பெண்கள் மீதான சுரண்டலுக்கும் நிர்வாகச் சீர்கேடுகளுக்கும் இலவச அனுமதி வழங்கப்பட்ட நிலை உருவானது.

இந்த நிலையிலேயே சில மாதங்களுக்கு முன் பல்கலைக்கழக மாணவர்கள் சில விரிவுரையாளர்களின் பெயர்களைப் பட்டியலிட்டு மொட்டைப் பிரசுரம் ஒன்றை வெளியிட்டனர். அதில் குற்றம்சாட்டப்பட்ட விரிவுரையாளர்(கள்) பொன் பாலசுந்தரம்பிள்ளை, எஸ் மோகனதாஸ், என் சண்முகலிங்கம் ஆகியோரால் உருவாக்கப்பட்டவர்கள். பல்கலைக்கழகத்தின் பாலியல் துஸ்பிரயோகம் எவ்வளவுக்கு ஸ்தாபனமயப்பட்டு உள்ளது என்பதனை இது வெளிப்படுத்துகிறது.

Kampavaruthy_Jeyarajஅதற்கும் முன்னதாக கம்பவாரிதி ஜெயராஜ் தனது பொன் விழா நூலிலும் யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மீதான குற்றச்சாட்டை வைத்திருந்தார். அவர் வருமாறு குறிப்பிடுகிறார்

‘‘மாதுக் கோளாறுகளும் இருக்கவே செய்தன.
தம் கல்வி அதிகாரத்தைப் பயன்படுத்தி,
பட்டங்களுக்குப் பரிசாக,
மாணவிகளின் பண்பினை விலைபேசிய,
அவ் அழுக்குகளை,
இப்போதைக்கு இங்கு எழுதவிரும்பவில்லை.

ஒழுக்கநிலை இதுவென்றால்,
அறிவுநிலையைப் பொறுத்தவரை, …
தம் வெற்றிக்காய் ஒரு இனத்தின் புலமையைப் பலியிட்ட,
அவர்தம் வஞ்சனைச் செயல்கள்,
இன்றும் எம் கல்வியுலகைப் பாதித்து நிற்கின்றன.

ஜெயராஜ்ஜியம் – பல்கலைக்கழகத் தமிழ்துறையினருக்கு பகிரங்கக் கடிதம் – 1 : கம்பவாருதி ஜெயராஜ்

இத்தோடு இவை நிற்கவில்லை. அண்மையில் தமிழ் தேசியத்தை ஆதரிக்கும் இணையம் ‘விரிவுரையாளர்களினால் விபச்சாரவிடுதியாக மாறும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தட்டிக் கேட்பது யார்?’ தலைப்பிட்டு கட்டுரையை வெளியிட்டு உள்ளது. நவம்பர் 18 2009ல் பதிவு செய்யப்பட்ட இக்கட்டுரை துருவியன் என்பவரால் எழுதப்பட்டு உள்ளது. அதில் இருந்து ஒரு பகுதி,

‘‘மிகச் சில விரிவுரையாளர்கள் மட்டும் தம்மிடம் பாடரீதியாகச் சந்தேகங்களைத் தீர்க்க வரும் மாணவிகளைத் தனியேதான் வரவேண்டும் என்ற எழுதப்படாத சட்டத்தைக் கடைப்பிடிக்கின்றனர். அவ்வாறு தனியே செல்லாமல் குழுவாகச் சென்றால் அவர்களைக் கண்டபடி திட்டுவதோடு பரீட்சைப் பெறுபேற்றின்போது அவர்கள் கவலைப்பட நேரிடுமென்று மறைமுக மிரட்டலையும் விடுத்துள்ளனர்.

இதனால் வேறுவழியின்றிக் குறித்த விரிவுரையாளரை இன்னமும் தனியே சென்றுதான் மாணவிகள் சந்தித்து வருகின்றனர். இதுபற்றி உரியவர்களிடம் முறையிட்டால் இன்னமும் தாங்கள் பழி வாங்கப்பட்டு விடுவோமோ? தம்முடைய பல்கலைக்கழக வாழ்க்கை இதனால் தடைப்பட்டு விடுமோ? என்ற பயத்தில் பல மாணவிகள் வாய்பேசா ஊமைகளாகி விடுகின்றனர். எனினும் நிலைமையின் உக்கிரம் தாங்க முடியாத சில மாணவிகள் வீடுகளில் தமது பெற்றோரிடம் இத்தகைய இழிவான செயலைச் சொல்லி அழுகின்றனர். பெற்றோரும் ஏதும் செய்ய முடியாத ஏதிலிகளாக அவர்களுக்கு ஆறுதல் சொல்வதைத் தவிர வேறேதும் செய்ய முடியாத கையறு நிலையிலேயே உள்ளனர்.’’

பெண்கள் மீதான என் சண்முகலிங்கத்தின் இப்போக்கினால் இவருக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ‘’உம்மா (முத்தம்) சண்முகலிங்கம்” என்ற பட்டப் பெயரை வைத்துள்ளனர். ‘பெண் விரிவுரையாளர்களே தனியாக இவருடைய அறைக்குச் செல்ல அச்சப்படுகின்றனர்’ என தேசம்நெற் உடன் யாழில் இருந்து தொடர்பு கொண்ட பெயர் குறிப்பிட விரும்பாத மாணவர் சிலர் தெரிவித்தனர்.

யாழ் பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக தனது மூன்றாண்டு கால ‘சேவை’யை இவ்வாண்டு டிசம்பருடன் நிறைவு செய்யும் பேராசிரியர் என் சண்முகலிங்கம் மற்றுமொரு மூன்றாண்டுக்கு தன் ‘சேவை’யை யாழ் பல்கலைக்கழகத்திற்கு வழங்கத் தயாராகி வருகின்றார்.

யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உப வேந்தர் பாலசுந்தரம்பிள்ளை:

Pon_Balasundarampillai_UoJபேராசிரியர் பொன் பாலசுந்தரம்பிள்ளை 1997 பெப்ரவரி முதல் 2003 ஏப்ரல் வரை யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தவர். இன்றும் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார். யாழ் பல்கலைக்கழகம் இன்றுள்ள கீழ்நிலைக்கு திடீரென வரவில்லை. காலம்காலமாக அப்பல்கலைக்கழகத்தை நிர்வகித்தவர்களின் பொறுப்பின்மையே அதனை இந்நிலைக்கு கொண்டு வந்தள்ளது. அதில் பொன் பாலசுந்தரம்பிள்ளையின் பொறுப்பற்ற செயற்பாடுகளும் மிக முக்கியமானது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகச் சீர்கேடுகளும் பாலியல் துஸ்பிரயோகங்களும் ஸ்தாபனமயப்பட்டது இவரது காலத்திலேயே. இவருக்குப் பின் வந்த உபவேந்தர்களான எஸ் மோகனதாஸ் என் சண்முகலிங்கம் ஆகியோருடன் ஒப்பிடுகையில் இவருக்கு ஆங்கிலப் புலமை இருந்த போதும் இவர் தனது அறிவுத்தரத்தால் அறியப்பட்ட ஒரு உபவேந்தரல்ல.

தற்போது லண்டனில் வாழ்கின்ற, பொன் பாலசுந்தரம்பிள்ளையின் காலத்தில் அங்கு கற்று துணை விரிவுரையாளராகவும் கடமையாற்றிய விரிவுரையாளர் ஒருவர் தேசம்நெற் உடன் இதுதொடர்பாக தொடர்பு கொண்டார். அவர் தகவல் தருகையில் ‘பொன் பாலசுந்தரம்பிள்ளை விரும்பாதவர்கள், அவர்கள் எவ்வளவு திறமையானவர்களாக இருந்தாலும், எவ்விதத்திலும் அவர்களுக்கு பதவி கிடைக்காமல் செய்துவிடுவார்’ என்கிறார். ‘தனக்கு உதவி விரிவுரையாளர் பதவியை வழங்காமல் தடுக்க எல்லா வழிகளையும் பயன்படுத்தினார்’ என்றார் அம்முன்னாள் விரிவுரையாளர். ‘ஆனால் ஒரு கட்டத்தில் யாழ்ப்பாண இடப்பெயர்வின் பின் அத்துறையை கற்பிக்க விரிவுரையாளர்களே இல்லையென்ற போது என்னையும் என் போன்ற சிலரையும் உள்ளெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது’ என்றார் அவர். ‘யாழ் பல்கலைக்கழக பேராசிரியர்களால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கதையே தனிக்கதை’ என்றார் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாத அம்முன்னாள் உதவி விரிவுரையாளர்.

கம்பவாருதி ஜெயராஜ் தனது கம்பன் கழக இளைஞர்கள் யாழ் பல்கலைக்கழகத்தினால் எவ்வாறு பழிவாங்கப்பட்டனர் என்பதனை ‘பல்கலைக்கழகத் தமிழ்துறையினருக்கு பகிரங்கக் கடிதம் – 3’ என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில் குறிப்பிட்டு உள்ளார். இக்கட்டுரை ‘ஜெயராஜ்ஜியம்’ என்ற கம்பவாருதியின் பொன்விழா மலரில் பிரசுரிக்கப்பட்டு இருந்தது.

‘எங்களைப் (கம்பன் கழகத்தை) பிடிக்காத அவர்களுக்கு (யாழ் பல்கலைக்கழகத் தமிழ்துறைக்கு)
கழகத்தில் வளர்ந்த இளைஞர்கள் எவரையும் பிடிக்கவில்லை.
என்னென்னவோ காரணம் சொல்லி,
அறிவுலகில் புகாமல் அவர்களைத் தடுத்தார்கள்.
பொய், என்றேனும் உண்மையை வெல்லுமா?
கழகத்தில் வளர்ந்த
க இரகுபரன், ஸ்ரீ பிரசாந்தன், ச முகுந்தன், த ஜெயசீலன், த சிவசஞ்கர் ஆகியோர்,
ஏதோ விதத்தில்,
தமிழுழகில் இன்று தம் பெயர் பதித்து நிற்கின்றனர்.’

கம்பவாருதி ஜெயராஜ் முன்வைக்கும் மற்றுமொரு குற்றச்சாட்டையும் இங்கு பதிவு செய்வது பொருத்தமானது என நினைக்கிறேன்.

‘எங்கள் பல்கலைக்கழகங்களுக்குள்,
பகிரங்கமாய் பிரதேசவாதம் பேசப்படுகின்றது.
யாழ் பல்கலைக்கழகத்திற்குள்,
தீவு, வடமராட்சி என இருபெரும் பிரிவுகள்.
மாணவர்களுக்குள் அல்ல,
விரிவுரையாளர்களுக்குள்.
இப்பிரிவுகள் பற்றியே,
பெரும் பதவிகள் தீர்மானிக்கப்படுகின்றனவாம்.
நம் இனமே தலைகுனிய வேண்டிய வெட்கக்கேடு.
தீவுப் பேராசிரியரின் துறைக்குள்,
தீவு மாணவர்கள் தலைதூக்குவதும்,
வடமராட்சிப் பேராசிரியரின் துறைக்குள்,
அவ்வூர் மாணவர்கள் தலைதூக்குவதும்,
யாழ் பல்கலைக்கழகத்துள் ஏற்றுக்கொள்ளப்பட்ட,
நியதியாய்ச் சொல்லப்படுகிறது..
கெட்டித்தனமாய்,
பேராசிரியர்களைத் தம் வலைக்குள் வீழ்த்தக்கூடிய,
ஒரு சில வேற்றூர் மாணவர்களும் வெல்வாராம்.
பல்கலைக்கழகத்தில்
அனைவருக்கும் பகிரங்கமாய்த் தெரிந்த இரகசியம் இது.
என்னே இழிவு.’

ஜெயராஜ்ஜியம் – பல்கலைக்கழகத் தமிழ்துறையினருக்கு பகிரங்கக் கடிதம் – 3 : கம்பவாருதி ஜெயராஜ்

யாழ் பல்கலைக்கழகம் மீதான இக்குற்றச்சாட்டுகளை அது தொடர்பாக யாழ் பத்திரிகைகளில் வெளியான சில செய்திக் கட்டுரைகளும் உறுதிப்படுத்தி இருந்தன.

விரிவுரையாளரிடம் கேள்வி கேட்டால் அல்லது அவருடன் விவாதித்தால் ‘கையில் தருவினம்’ (ஃபெயில்ஆக்குவீனம்) – மாணவர்கள் ஒரு அரங்க ஆய்வு ‘உதயன்’ யூன் 13 2004

‘பாகுபாடு பார்த்து புள்ளி போடுறது. மாக்ஸ் வெட்டுறது எல்லாம் ஒட்டுமொத்தமாகவே இங்கை இருக்குதெண்டு இப்பதான் தெரியுது.’ – மாணவர்கள் ஒரு அரங்க ஆய்வு ‘உதயன்’ யூன் 11 2004

‘விரிவுரையாளர்களைத் தட்டிக்கேட்கும் மாணவர்கள் பழிவாங்கப்படுகின்றனர்.’ – வலம்புரி மே 27 2004

தங்களை வரும்பாதவர்களை பழிவாங்க முற்படும் இப்பேராசிரியர்களும் விரிவுரையாளர்களும் தங்களுக்கு வேண்டியவர்களை இப்படியும் கவனிக்கிறார்கள். பொன் பாலசுந்தரம்பிள்ளையின் இயல்பை வெளிப்படுத்தும் ஒரு சம்பவம் இவ்வாண்டு ஜனவரியில் யாழ் பல்கலைக்கழகத்தில் நடந்தது. தமிழ் பிரதேசங்களின் மீள்புனரமைப்பு முன்னேற்றம் தொடர்பாக புலம்பெயர்ந்த தமிழர்களின் பங்களிப்புப் பற்றிய ஒரு மாநாடு ஜனவரி 12 2010ல் இடம்பெற்றது. இதில் லண்டனில் இருந்து கலந்துகொண்ட ஒருவரை பொன் பாலசுந்தரம்பிள்ளை அணுகி தன்னை அறிமுகப்படுத்தி உள்ளார். லண்டனில் இருந்து சென்றவர் தன்னை அவருக்கு அறிமுகப்படுத்த முற்பட பாலசுந்தரம்பிள்ளை ‘உம்மைப் பற்றிய விபரம் எல்லாம் நான் ஒன்லைனில் செக் பண்ணிணனான்’ என்றார். அவர் தொடர்ந்து கூறுகையில் ‘என்னுடைய மகனும் லண்டனில் பினர் (ஒரு இடம்)இல் இருக்கிறார். நீர் அவரை கவனித்துக் கொள்ளும், நான் உம்மை யாழ்பாணத்தில் ராசா ஆக்குகிறன்’ என்று கூறி உள்ளார். யாழ்ப்பாணக் கல்விச் சமூகத்தின் உச்சத்தில் உள்ள ஒருவர் முன் அறிமுகமில்லாத ‘ஒன்லைனில்” மட்டும் தகவல் அறிந்த ஒருவருடன் மேற்கொண்ட உரையாடல் இது. ‘‘பேராசிரியர் ஒன்லைனில் சரியாக ‘’செக் பண்ணி’ இருந்தால் எனக்குக் கிட்டக்கூட வந்திருக்க மாட்டார். என்னுடைய ஒரு பக்கத்தை மட்டும்தான் அவர் ஒன்லைனில் பார்த்திருக்கிறார்’’ என தேசம்நெற்க்குத் தெரிவித்த அவர், ‘‘இப்போதைக்குத் தன்னை வெளிப்படுத்த விரும்பவில்லை’’ எனத் தெரிவித்தார்.

ஊடகங்களின் அச்சமும் மௌனமும்:

உபவேந்தர் என் சண்முகலிங்கம் உட்பட ஏனையவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் மிக மோசமானவையாக இருந்த போதும் ஒரு மிகப்பலமான நிறுவனத்தின் அதிகாரம் இவர்களது கையில் இருப்பதும் அல்லது அதிகாரத்தில் உள்ளவர்களின் தயவு இவர்களுக்கு உள்ளதும் பாதிக்கப்பட்டவர்களை அச்சமூட்டுகின்றன. முதாலாளித்துவ சமூகமுறைக்கே வளர்ச்சியடையாத ஆண் ஆதிக்க சமூகம் ஒன்றில் பெண்கள் மீதான பாலியல் துஸ்பிரயோகங்கள் முன்வைக்கப்படும் போது அது அப்பெண்ணின் மீதே திருப்பப்படுகின்றது. அதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்கள் மீதான பாலியல் அதிகார துஸ்பிரயோகங்களை வெளிக்கொண்டு வர தயங்குகின்றனர்.

பாதிக்கப்பட்டவர்கள் யாரும் இக்குற்றச்சாட்டுக்களை வெளிக்கொணராத போது அதனை வெளிக்கொண்டு வர வேண்டிய ஊடகங்களும் எழுதப்படாத சமூக, அரசியல், சட்டக் காரணங்களுக்காக அவற்றை சுயதணிக்கை செய்கின்றன. அதனால் குற்றங்களை இழைப்பவர்கள் இப்போதும் சமூகத்தில் பெரிய மனிதர்களாக நடமாட முடிகின்றது.

அதுமட்டுமல்ல இலங்கைத் தமிழ் சமூகத்தின் மத்தியில் இருந்த சமூக பாதுகாப்பிற்கான விழுமியங்கள் துர்ந்து போய் பிறழ்வான நடத்தைகளையும் பிறழ்வான மனிதர்களையும் அணுசரித்துப் போகின்ற சகிப்புத்தன்மை மேலோங்கி உள்ளது. மேலும் இப்படியானவர்கள் கல்வி, பதவி, நிதி வளம் ஆகியவற்றைக் கொண்டு தங்கள் சுயரூபத்தை திரையிட்டு மறைக்கக் கூடியதாகவும் உள்ளது. மேலும் தமிழ் சமூகம் மிக இறுக்கமான மூடிய சமூகமாக இருப்பதும் இவ்வாறானவர்கள் தங்களை வளர்த்துக் கொள்வதற்கு தகுந்த சூழலை ஏற்படுத்திக் கொடுத்து உள்ளது.

சண்முகலிங்கம் – பாலசுந்தரம்பிள்ளை – ஆறுதிருமுருகன் : கூட்டும் கூத்தும்:

Balasundarampillai_Aruthirumurugan_Shanmugalingam_Friendshipஇது தமிழ் கல்விச் சமூகத்தின் மிக ஆபத்தான கூட்டு. இனவாரியான தரப்படுத்தல் ஓரிரு ஆண்டுகளிலேயே கைவிடப்பட்டது. அதனை அடுத்து பிரதேச ரீதியிலான தரப்படுத்தல் வந்தது. அதனையும் தமிழ் மக்களுக்கு  எதிரானது என்று முழங்கி ஆயுதம் ஏந்துவதற்கு வித்திட்ட காரணிகளில் இந்தப் பிரதேச ரீதியான தரப்படுத்தலும் ஒன்றானது. (ஆனால் உண்மையில் நூற்றுக்கும் குறைவான யாழப்பான மாணவர்களே இத்தரப்படுத்தலால் பாதிக்கப்பட்டனர். ஆனால் யாழ் தவிர்ந்த ஏனைய மாவட்ட மாணர்களுக்கு பல்கலைக்கழகம் செல்லும் சந்தர்ப்பத்தை இது வழங்கி இருந்தது.)

ஆனால் அவ்வாறு கல்வித் தரத்தின் உச்சியில் இருந்த யாழ் மாவட்டம் அந்தத் தரப்படுத்தலை எதிர்த்து ஆயுதம் தாங்கிய மாணவர் சமூகம் கால்நூற்றாண்டுக்குப் பின் அதே தரப்படுத்தலினால் நன்மை பெறுகின்றது. இவ்வீழ்ச்சிக்கு தனியான ஒரு காரணத்தை சுட்டிக்காட்ட முடியாது. பல்வேறு அம்சங்கள் காரணமாக இருந்துள்ளது. ஆனால் ஏனைய தமிழ் மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் யாழ் மாவட்டத்தின் கல்வி வீழ்ச்சி கணிசமானது. சண்முகலிங்கம் – பாலசுந்தரம்பிள்ளை – ஆறுதிருமுருகன் போன்றவர்கள் கூட்டாக யாழ் கல்விச் சமூகத்தை வழிநடத்தும் போது இவ்வாறான கணிசமான வீழ்ச்சியில் மேற்குறிப்பிட்டவர்கள் போன்றோரின் பங்கினை நிராகரிக்க முடியாது.

சண்முகலிங்கம் – பாலசுந்தரம்பிள்ளை – ஆறுதிருமுருகன் இடையே உள்ள இந்த நட்பு சாதாரண நட்புஅல்ல. விசுவாசம், நன்றிக் கடனுடன் கூடிய நட்பு. யாழ்ப்பாணத்தில் குறிப்பிடக் கூடிய விழாக்களில் இம்மூவரையும் காணலாம். ‘buy one get two free – பை வன் கெற் ரூ பிறி’ என்ற வகையில் ஒருவரை அழைத்தால் மூவரும் வந்து சேர்வார்கள்.

இந்த நட்பின் பின்னணி முக்கியமானது. கலாநிதிப் பட்டம் பெற வெளிநாடு சென்வர் வெறும்கையோடு வந்தார். அவர் ஆறு திருமுருகன் நெருக்கமாக இருந்த தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயத்தை மையப்படுத்தி ‘சமய சமூகவியல் ஆய்வு’ ஒன்றைச் செய்தார். அந்த ஆய்வு அவ்வாலய மலரில் பிரசுரிக்கவும்பட்டது. இவ்வாறு அன்றைய யாழ் பல்கலைக்கழகத்தின் உபவேந்தரான பொன் பாலசுந்தரம்பிள்ளையால் பேராசிரியராக்கப்பட்டவர் தான் இன்றைய உபவேந்தர் என் சண்முகலிங்கம். சண்முகலிங்கத்திற்கு முன் உபவேந்தராக இருந்த எஸ் மோகனதாசும் பொன் பாலசுந்தரம்பிள்ளையால் உருவாக்கப்பட்டவரே.

இன்றைய இந்த உபவேந்தர் மீண்டும் உபவேந்தர் ஆக்கப்பட வேண்டும் என்பதில் தீவரமாக உள்ளவரும் பொன் பாலசுந்தரம்பிள்ளையே. ‘ஏன் பொன் பாலசுந்தரம்பிள்ளை என் சண்முகலிங்கத்தை உபவேந்தராக ஆக்க விரும்பிகிறார்?’ என்பதற்கான விடையை அவேரே அண்மையில் இடம்பெற்ற விழா ஒன்றின் போது தனக்கு நெருக்கமான ஒருவருக்குக் கூறியுள்ளார். ‘சண்முகலிங்கம் இருக்கிற வரைக்கும் நான் தான் விசி’ என்று பொன் பாலசுந்தரம்பிள்ளை தெரிவித்து உள்ளார். காரணம் எஸ் மோகனதாஸ், என் சண்முகலிங்கம் ஆகியோர் செயற்திறன் அற்றவர்கள். முடிவெடுக்கும் ஆளுமையற்றவர்கள். வடக்குக்கு வெளியே இருந்து வருகின்ற ஆங்கிலக் கடிதங்களுக்கு பதிலளிக்க முடியாதவர். இவற்றுக்கெல்லாம் இவர்களுக்கு பொன் பாலசுந்தரம்பிள்ளை தேவை. குருவை மீஞ்ச முடியாத சிஸ்யர்கள். இவர்களின் இக்குறைபாடுகளால் இவர்களுக்கு பின்னால் சிலர் பலமானவர்களாக உள்ளனர். இவர்களது பலவீனங்கள் இவர்களுக்குப் பின்னால் உள்ளவர்களின் நிர்வாகச் சீர்கேடுகளுக்கு தக்க சூழலை வழங்குகிறது.

இந்த விசுவாசத்திற்கு மற்றுமொரு காரணம் பொன் பாலசுந்தரம்பிள்ளை பிலிப்பைன்ஸ் மாணவியின் விடயத்தில் என் சண்முகலிங்கத்தை கண்டும் காணாமல் விட்டது. அந்த நன்றிக்கடனும் என் சண்முகலிங்கத்திற்கு உண்டு.

Putin_Medvedev_Relationshipரஸ்ய ஆட்சித் தலைவர் (ஜனாதிபதி) டமிர்ரி மெட்வெடெவ் க்கும் ரஸ்யாவின் முன்னாள் ஆட்சித் தலைவர் விளாடிமீர் புட்டீனுக்கும் உள்ள உறவு உலகறிந்தது. அதுவே யாழ் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் என் சண்முகலிங்கம் அவர்களுக்கும் முன்னாள் உபவேந்தர் பொன் பாலசுந்தரம்பிள்ளைக்கும் உள்ள உறவு. என் சண்முகலிங்கத்தை யாழ்ப்பாணக் கல்விச் சமூகத்தின் அரசனாக பொன் பாலசுந்தரம்பிள்ளை ஆக்கி உள்ளார். ஆட்டுவிக்கிறார்.

இப்போது ஆறு திருமுருகன் தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலயத்தின் தலைவர் மட்டுமல்ல யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கவுன்சில் உறுப்பினரும் கூட. என் சண்முகலிங்கம் மீண்டும் யாழ் பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் ஆவதற்கு பொன் பாலசுந்தரம்பிள்ளை மட்டும் போதாது, ஆறு திருமுருகன் அருள்பாலிக்க வேண்டும்.

சண்முகலிங்கம் – பாலசுந்தரம்பிள்ளை – அறுதிருமுருகன் கூட்டினால் மட்டும் தமிழ் மக்களின் குறிப்பாக யாழ் கல்விச் சமூகத்தின் அறிவு மையமான யாழ் பல்கலைக்கழத்தை தம் வயப்படுத்த முடியாது. பல்கலைக்கழகத்தின் கவுன்சிலினால் தெரிவு செய்யப்படும் மூவரில் ஒருவராக இருக்க வேண்டும். பின் அந்த மூவரில் ஒருவராக என் சண்முகலிங்கம் வருவதற்கு அரசியல் செல்வாக்கு வேண்டும். அதற்கு விரிக்கப்பட்ட வலை,

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு கலாநிதிப் பட்டம்:

Douglas_DevanandaGraduation_Logoஓகஸ்ட் 6 2010ல் நடைபெற இருக்கும் யாழ் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் ஓய்வுபெற்ற யாழ் அரசாங்க அதிபர் கெ கணேஸிற்கும் கலாநிதிப் பட்டங்களை வழங்க தற்போதைய யாழ் பல்கலைக்கழக உபவேந்தர் என் சண்முகலிங்கம் திட்டமிட்டுள்ளதாக தேசம்நெற் க்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய உபவேந்தர் என் சண்முகலிங்கத்தின் பதவிக்காலம் இவ்வாண்டு டிசம்பருடன் முடிவுக்கு வருவதால் ஒக்ரோபரில் இப்பதவிக்கான தேர்தலுக்கான விண்ணப்பம் கவுன்சிலால் கோரப்பட இருக்கின்றது. தேர்தல்கள் இன்னும் சில வாரங்களில் நடைபெற உள்ளது. அத்தேர்தலில் தெரிவு செய்யப்படுகின்ற மூவரில் ஒருவரை (வாக்குகளின் எண்ணிக்கை அடிப்படையில் அல்ல) ஜனாதிபதி யாழ் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராகத் தெரிவு செய்வார்.

யாழ் பல்கலைக்கழக கவுன்சிலில் உள்ள 25 உறுப்பினர்களே இத்தேர்தலில் வாக்களிக்கத் தகுதி உடையவர்கள். இவர்களில் 12 பேர் யாழ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள். 13 பேர் பல்கலைக்கழகத்திற்கு வெளியே இருந்து யுனிவர்சிற்றி கிரான்ட் கொமிஸனால் நியமிக்கப்பட்டவர்கள். இது யாழ் பல்கலைக்கழகமாதலால் இந்த நியமனங்களில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சம்மதம் இருந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. கவுன்சிலின் பல்கலைக்கழக அங்கத்தவர்களும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சமிஞ்சைக்கு கட்டுப்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனாலும் மீறிச் செயற்படுவார்கள் என்றில்லை.

அவர்கள் சமிஞ்சையை மீறமாட்டார்கள் என்பது அவர்கள் கடத்தப்படுவார்கள் கொலை செய்யப்படுவார்கள் என்ற அச்சத்தில் அல்ல. அவ்வாறான ஒரு அச்சம் இல்லையென்பதும் செனட்சபை உறுப்பினர்களுக்கு மிகத்தெளிவாகவே தெரியும். கடத்தல், கொலை என்ற கதைகள் தங்களை நியாயப்படுத்தவும் மக்களை ஏமாற்றவும் மட்டுமே. அப்படி என்றால் எதற்காக அவர்கள் அமைச்சரின் சமிஞ்சையை மீறமாட்டார்கள் என்பதற்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற ஒரு நிகழ்வே சாட்சி. யாழ் மாநகரசபைத் தேர்தலுக்கு முன்பாக பல்கலைக்கழகத்தில் அமைச்சர் தேவானந்தா ஒரு சந்திப்பை ஏற்பபாடு செய்திருந்தார். அப்போது ஒரு சந்தர்ப்பத்தில் அமைச்சர் தேவானந்தா ‘என்னிடம் உதவிக்கு வராதவர்கள், உதவி பெறாதவர்கள் இருக்கிறீர்களா?’ எனக் கேட்டார். அங்கிருந்தவர்களில் அப்படி யாரும் இருக்கவில்லை. இதுவே அவர்கள் அமைச்சரின் சமிஞ்சைக்கு கட்டுப்பட வேண்டி இருப்பதற்குக் காரணம்.

இதே துருப்புச் சீட்டையே தற்போதைய உபவேந்தர் என் சண்முகலிங்கம் அமைச்சர் தேவானந்தாவில் பயன்படுத்த முற்படுகிறார். அமைச்சருக்கு கலாநிதிப் பட்டத்தைக் கொடுத்து மீண்டும் தன்னை யாழ் பல்கலைக்கழகத்திற்கு உபவேந்தராக்கும்படி கேட்கின்றார். இன்று அமைச்சர் முன்னுள்ள கேள்வி, அவர் இந்த வலையில் வீழ்வாரா? பட்டத்தைப் பெற்றதால் நா இழப்பாரா?

அமைச்சர் டக்ளஸ் தேவானந்த ஒரு பார்வை

Douglas_Devanandaஅமைச்சர் டக்ளஸ் தேவானந்த கம்யூனிஸ்ட் கட்சியின் சிவப்பு நாடா பத்திரிகையின் ஆசிரியரான தோழர் கதிரவேலு – யாழ் மத்திய கல்லூரி ஆசிரியை மகேஸ்வரியின் நான்கு ஆண் பிள்ளைகளில் இரண்டாமவர். தனது ஆறு வயதிலேயே தாயை இழந்த இவர், உறவினரும் தொழிற்சங்கவாதியுமான கெ சி நித்தியானந்த வின் அரசியல் சிந்தனையில் வளர்ந்தவர். தந்தையினதும் தன்னை வழிநடத்திய தந்தையைப் போன்றவரினதும் வழியைத் தனயன் பின்பற்றி ஒடுக்குமுறைகளுக்கு எதிராக தனது 13வாது வயதிலேயே குரல்கொடுக்க ஆரம்பித்தார்.

ஆரம்பத்தில் ஈழ விடுதலை இயக்கத்தில் இணைந்தவர், ஈழமாணவர் பொது மன்றத்திலும் அங்கம் வகித்தவர். 1975ல் தனது 18வது வயதில் ஈழப் புரட்சிகர அமைப்பை (ஈரோஸ்) உருவாக்கியவர்களில் ஒருவர். இவ்வமைப்பின் இராணுவப் பயிற்சிக்காக 1978ல் பாலஸ்தீனம் சென்று பாலஸ்தீன விடுதலை இயக்கங்களில் ஒன்றான அல் பற்றா அமைப்பில் பயிற்சி எடுத்தவர். அதன் பின் ஈரோஸ் பிளவுபட ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியை (ஈபிஆர்எல்எப்) பத்மநாபாவுடன் இணைந்து உருவாக்கினார். அதில் ஏற்பட்ட பிளவில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்)இல் இருந்து பிரிந்து வந்த பரந்தன் ராஜனுடன் இணைந்து ஈழம் தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈஎன்டிஎல்எப்)யை உருவாக்கினார். இறுதியாக 1987ல் இப்போதுள்ள ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈபிடிபி) உருவாக்கப்பட்டது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டமைக்காக இலங்கையின் பிரபல்யமான சிறைக்கூடங்களில் எல்லாம் அடைக்கப்பட்ட இவர் 1983 யூலை 25 – 27 வெலிக்கடைச் சிறைப் படுகொலைகளில் உயிர் தப்பியவர். ஆனால் டக்ளஸ் தேவானந்தாவின் சகோதரருக்கு அவ்வாறு உயிர்தப்பிக்க முடியவில்லை. 1990களின் முற்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைது செய்யப்பட்ட டக்ளஸ் தேவானந்தவின் சகோதரர் பிரோமானந்தா மிகுந்த சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இவரும் ஈபிடிபி உறுப்பினரே.

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை அடுத்து அரசியல் நீரோட்டத்திற்கு வந்த ஈபிடிபி 1994 முதல் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் வகித்து வருகின்றது. 2000 ஆண்டு முதல் பெரும்பாலும் அமைச்சுப் பதவியில் இருந்து வருகின்றார் அமைச்சர் தேவானந்தா. இவ்வாண்டு ஏப்ரலில் இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்தார் இவர்.

தமிழீழ விடுதலைப் போராட்டமே தடம்புரண்ட போது அமைச்சர் தேவானந்தாவால் தன் தந்தை வழியைத் தொடர முடியவில்லை. அனைத்து இயக்கங்களிலும் இடம்பெற்ற ஆயுதக்கலாச்சாரத்தின் தாக்கமும் அதன் விளைவுகளும் அவர் தலைமைதாங்கிய ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினையும் பாதிக்கவே செய்தது.

‘‘ஒரு காலத்தில் ஆயுதம் ஏந்திய ஒரு சுதந்திரப் போராட்ட இயக்கத்தை வழி நடத்திச் சென்ற ஆரம்பகால தலைவர்களில் நானும் ஒருவன். அன்றைய தவிர்க்க முடியாத காலச்சூழலே நாம் ஆயதம் ஏந்திப் போராட வேண்டிய கட்டாய கட்டளைகளை எம்மீது பிறப்பித்திருந்தது.

எமது சமகால இருப்பை நியாயப்படுத்துவதற்காக எமது கடந்தகால வரலாற்றை கொச்சைப்படுத்த நான் விரும்பவில்லை ….

….. தமிழ் மக்கள் இன்றுவரை தாங்கி வந்துள்ள துயரங்களுக்கும், அவலங்களுக்குமான பொறுப்பை வேலுப்பிள்ளை பிரபாகரன் மீது மட்டும் சுமத்தி விட்டு சம்பந்தப்பட்ட ஏனைய தமிழ் தலைமைகள் அதற்கான பொறுப்பில் இருந்து விலகிவிட முடியாது.

சம்பந்தப்பட்ட அனைத்து தமிழ்த் தலைமைகளும் அதற்றான தார்மீகப் பொறுப்பை ஏற்கவேண்டும். ஆயுதப்போராட்டத்தை ஆரம்பங்களில் வழி நடத்திச் சென்றவர்களில் நானும் ஒருவன் என்ற வகையில் தமிழ் மக்கள் சுமந்து வந்த அவலங்களுக்கான தார்மீகப் பொறுப்பை நானும் பகிரங்கமாகவே ஏற்றுக்கொள்கின்றேன்.’’ எனக் கூறி அமைச்சர் தேவானந்த கடந்த காலங்களில் இடம்பெற்ற தவறுகளுக்கான பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார்.
(‘’கற்றுக் கொண்ட அனுபவங்கள் புதிய வரலாற்றைப் பெற்றுத் தரும்!” என்று அமைச்சர் தேவானந்தா கற்றறிந்த பாடங்கள் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழுவின் முன் செப்ரம்பர் 03 2010ல் அளித்த சாட்சியத்தில் இருந்து.)

அனைத்து ஆயுத அமைப்புகள் மீதும் அதன் தலைமைகள் மீதும் உள்ள குற்றச்சாட்டுகள் ஈபிடிபி கட்சிக்கும் அதன் தலைமைக்கும் உண்டு. அதே போன்று ஆயுதம் ஏந்தாத அமைப்புகளும் இந்த ஆயுதக் கலாச்சாரத்தை ஆதரித்து, ஆயுத அமைப்புகள் மேற்கொண்ட அதே தவறை அவர்களும் செய்துள்ளனர். ஆனாலும் என்றுமே தங்கள் அரசியல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பேற்க முன்வராத பல தமிழ் அரசியல் தலைமைகள் மத்தியில் அமைச்சர் தேவானந்தாவின் சாட்சியம் வரவேற்பைப் பெற்றமைக்குக் காரணம் அவர் தன்னுடைய அரசியலுக்கு பகிரங்கமாக பொறுப்பெற்றுக் கொண்டது.

மே 18 2009ற்கு முன் மிகக் கூடுதலான தடவைகள் (13 தடவைகள்) தமிழீழ விடுதலைப் புலிகளால் குறிவைக்கப்பட்ட போதும் உயிர் தப்பிய தலைவர் என்ற பெருமை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவிற்கு உரியது. ஆனால் அவருடைய நூற்றுக் கணக்கான தோழர்களுக்கு அவ்வாறு உயிர் தப்பிக்கும் வாய்ப்பு எட்டவல்லை. அதனால் மே 18 2009ற்கு முன்பாக ஈபிடிபி கட்சிக்கு ஆயுதம் ஏந்துவதற்கான – வன்முறையைப் பயன்படுத்தவதற்கான (அவை தவறாகவும் பயன்படுத்தப்பட்டு இருந்தன.) காரணங்கள் – தேவை இருந்ததுள்ளது. ஆனால் மே 18 2009ற்குப் பின்பாக அதற்கான அவசியம் இல்லாத சூழல் ஏற்பட்டு உள்ளது.

Douglas_in_IndianBusஇன்றைய இந்த அரசியல் மாற்றத்தை ஈபிடிபி யும் அதன் தலைமையும் விளங்கிக் கொண்டு புதிய அரசியல் கலாச்சாரம் ஒன்றை உருவாக்க வேண்டியது அவசியம். அன்று தொடர முடியாது போன தந்தையின் வழித் தடங்களை தனயன் மீள்மதிப்பீடு செய்வதற்கான நேரம் இது. அன்றைய பல கொம்யூனிஸ்ட் தோழர்கள் மக்களுக்காக உழைத்து பென்சனும் இல்லாத நிலையில் இருந்த போது அமைச்சர் தேவானந்தாவின் உதவிக்கரம் அவர்களுக்கு வாழ்வழித்தது. இன்னும் அவ்வாறன சிலருக்கு வாழ்வழிப்பதாக தெரிகிறது.

இன்றும் இவர் மீதுள்ள நம்பிக்கைக்குக் காரணம் எளிமை, எப்போதும் மக்களால் அணுகக் கூடியவராக இருப்பது, எப்போதும் எந்நேரத்திலும், விவாதிக்க தயாராக இருப்பது, மற்றையவர்கள் கருத்தையும் ஏற்று பரசீலிக்கும் பண்பு.

பல்வேறு விமர்சனங்கள் இருந்த போதும் இன்றுள்ள தமிழ் அரசியல் தலைமைகளிடையே ஆளுமையுள்ள ஒரு அரசியல் தலைவராக இருப்பவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. அதிகப்படியான விருப்பு வாக்குகளை அவர் பெற்றுக் கொண்டமைக்கும் இதுவே காரணமாக அமைந்திருக்கலாம். ‘கற்றுக் கொண்ட பாடங்கள் புதிய வரலாற்றைப் பெற்றுத்தரும்!” என்ற ஃபிடல் கஸ்ரோவின் வாக்கியத்தை அமைச்சர் தேவானந்தா நம்பினால் முன்னைய அரசியல் கலச்சாரத்தில் இருந்து தன்னையும் கட்சியையும் விடுவித்துக்கொள்ள வேண்டும். (பஸ் வண்டிகளையல்ல) தமிழ் சமூகத்தை புதிய அரசியல் கலாச்சாரம் நோக்கி ஓட்டிச் செல்கின்ற சாரதியாக அமைச்சர் தேவானந்த தன்னை மறுசீரமைக்க வேண்டும்.

வாங்காதே வாங்கவல்லாய்:

முன்னைய அரசியல் கலாச்சாரத்தில் இருந்து விடுவித்துக்கொள்வதும் ஒருவகைப் போராட்டமே. இன்று அமைச்சர் தேவானந்தாவைச் சுற்றி வருபவர்கள் (கட்சித் தோழர்கள் அல்ல) தம் தேவைக்காக தங்களை கட்சியில் இணைத்துக் கொண்டவர்கள். சுயலாபம் கருதிச் செயற்படுகின்றவர்கள். 13 தடவைகள் புலிகளின் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் இருந்து தப்பிய ஒருவருக்கு, இவர்களை இனம்காண்பதில் எவ்வித கஸ்டமும் இருக்காது. ஒருவருடைய நுண்ணிய அசைவுகளையும் கணித்து மதிப்பீடு செய்கின்ற ஆற்றல் அவருக்கு உண்டு. அதுவே அவரது உயிரையும் அரசியலையும் காப்பாற்றி வந்துள்ளது.

அதனாலேயே எதிர்காலத்தில் தம் வாழ்வை உய்விக்க வேண்டும் என்ற விருப்பில் ஆயிரம் ஆயிரம் விருப்பு வாக்குகளைத் தந்த மக்களுக்காக, கலாநிதி விருது ‘வாங்காதே வாங்கவல்லாய்’ என்று கூற வேண்டியுள்ளது. ‘கோயிற் சுண்டல் போல் பட்டங்களை அளிக்கொடுக்கின்றனர்’ என யாழ்பாணப் பல்கலைக்கழகம் மீது குற்றச்சாட்டு உள்ளது. இது போன்ற காரணங்களாலேயே மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அளித்த பட்டத்தை நிராகரித்தார். பல்கலைக்கழகம் ஒன்று கலாநிதிப் பட்டம் வழங்குதற்கான ஆளுமையும் தகமையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு உண்டு. ஆனால் உபவேந்தர் என் சண்முகலிங்கம் ஏன் இந்தப் பட்டத்தை வழங்குகிறார் என்று கணக்குப் பார்க்க ‘கல்குலேற்றர்’ தேவையில்லை.

இக்கலாநிதிப் பட்டத்தை அமைச்சர் தேவானந்தா ஏற்றுக் கொள்வாரானால் அது அவரையும் கேவலப்படுத்தி, யாழ்பாணப் பல்கலைக்கழகத்தின் எதிர்காலத்தையும் கேவலப்படுத்துவதாக அமையும். அதனால் மக்கள் தலைவனாக மக்கள் தந்த கௌரவத்தை ஏற்று யாழ் பல்கலைக்கழகம் வழங்க முன்வரும் கலாநிதிப் பட்டத்தை அமைச்சர் தேவானந்த நிராகரிப்பதன் மூலம் இவ்வாறான சுயலாப கொடுக்கல் வாங்கல் அரசியல் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

‘Tamillain-Barre’ Syndrom’ ற்கு அவசர சிகிச்சை அவசியம்:

தமிழ் சமூகத்தினை பாதுகாக்க வேண்டிய அதன் அறிவியல் கட்டமைப்புகளில் உள்ளவர்கள் அச்சமூகத்தின் சிந்தனைத் திறனைத் தாக்கி ஒட்டுமொத்த சமூகத்தையுமே சீரழிக்கின்ற ‘Tamillain-Barre’ Syndrome’ இங்கு தெளிவாகவே அடையாளம் காணப்பட்டு உள்ளது.

இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ஓய்வுபெற்ற அரசாங்க அதிபர் கெ கணேஸ், ஸ்கந்தவரோதயாக் கல்லூரி அதிபர் ஆறு திருமுருகன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் என் சண்முகலிங்கம், முன்னாள் உபவேந்தர் பொன் பாலசுந்தரம்பிள்ளை ஆகியோரின் நியமனங்களில் அமைச்சர் தேவானந்தாவின் சம்மதம் இருந்துள்ளது.

ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் அரச நியமனங்களுக்கு தம் அதிகாரத்தை பயன்படுத்துகின்ற முறை இலங்கை போன்ற நாடுகளில் வழமையாகி உள்ளது. ஆனால் அந்த நியமனங்களுக்கு நியமிக்கப்படுபவர்கள் அதற்கான தகுதியைக் கொண்டிருக்க வேண்டும் என்பதும் குறிப்பாக மக்களின் அறிவியல் மையமான பல்கலைக்கழகத்திற்கு நியமிக்கப்படுபவர் தகுதியுடன் பொறுப்புணர்வு உடையவராக இருக்க வேண்டியதும் அவசியமானது. ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் எதிர்காலத்தையே சீரழிக்கக் கூடியவர்களை சமூகப் பொறுப்பற்றவர்களை, ஆளுமையற்றவர்களை பொறுப்பான பதவிகளில் நியமிப்பதன் மூலம் தமிழ் சமூகத்திற்கு ‘தனது அரசியல் வாழ்வில் அமைச்சர் தேவானந்த எதனை விட்டுச் செல்ல விரும்புகின்றார்?’ என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாதது.

அண்மைக் காலங்களில் சமூகரீதியில் ஒடுக்கப்பட்டவர்கள் உட்பட பலருக்கும் பெரும்பாலும் அவர்களின் தகுதியின் அடிப்படையில் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு உள்ளமை வரவேற்கப்பட வேண்டியது. இவ்வாறு வேலை வாய்ப்புப் பெற்றவர்கள் பலர் சமூகப் பொறுப்புணர்வோடு தங்கள் கடமையைச் செய்கின்றனர். ஈபிடிபி கட்சிக்கு நெருக்கமான ஒரு அதிபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்ட போது பொறுப்புணர்வற்றவர்கள் சார்பில் தாங்கள் தலையிடப் போவதில்லை என்று அமைச்சர் தேவானந்தா தெரிவித்துள்ளார். அப்பொறுப்பற்ற அதிபர் சட்டப்படி அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

பொறுப்புள்ளவர்கள் தங்கள் கடமையைச் செய்ய அமைச்சர் தேவானந்த தடைவிதிப்பதில்லை என்பதனை யாழ்ப்பாணத்தின் காட்சியகமாகப் பேணப்பட்ட தொழில்நுட்ப பூங்காவிற்கு பொறுப்பாக இருந்த தற்போது லண்டனில் வாழும் எஸ் பாலச்சந்திரன் அப்போது தேசம் சஞ்சிகைக்குத் தெரிவித்து இருந்தார். ஈபிடிபி கட்சியுடன் கருத்து வேறுபாடுகளைக் கொண்டிருந்த மார்க்ஸிய கருத்துடைய இவர் தொழில்நுட்ப பூங்காவின் இயக்கத்தில் முக்கிய பங்கேற்று இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகவே அமைச்சர் தேவானந்த தனது அரசியல் வாழ்வில் குறைந்தபட்சம் நம்பிக்கையான எதிர்காலத்தை தமிழ் மக்களுக்கு விட்டுச் செல்லக் கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பலமாகவே உள்ளது. அதனால் விமர்சனங்கள் தவிர்க்க முடியாதது.

தகுதியற்ற, பொறுப்பற்ற, ஆளுமையற்றவர்கள் ‘கலாநிதிப் பட்டம் தந்தும்’, ‘நண்டுக் கறி தந்தும்’, ‘காலில் வீழ்ந்து ஆசீர்வாதம்’ பெற்றும் தம் காரியத்தைச் சாதிக்க முயல்வார்கள். ஆனால் அமைச்சர் தேவானந்தாவுக்கு விருப்பு வாக்கும் கட்சிக்கு வாக்கும் அளித்த அந்த மக்களை இவர்கள் மிதிக்கின்றனர். இவர்கள் மக்களுக்கு மட்டுமல்ல அமைச்சருக்குமே விசுவாசமற்றவர்கள்.

கடந்த ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவுக்கும் அமைச்சர் தேவானந்தாவும் அழைக்கப்பட்டு இருந்தார். வந்திருந்தார். அவரின் பாதுகாப்பிற்காக சில தோழர்களும் வந்திருந்தனர். இவர்கள் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவிற்கு அணிந்துவந்த ஆடைகளும் நடந்துகொண்ட முறைகளும் பலருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தி இருந்ததாக தேசம்நெற் தொடர்புகொண்ட சிலர் சுட்டிக்காட்டி இருந்தனர். தங்கள் காரியத்தை சாதிக்க முற்படுபவர்கள் இவ்வாறன குறைகளைக் கண்டிக்கவோ எடுத்துச் சொல்லவோ முன்வருவதில்லை. ஆனால் வெளியே புறமுதுகில் குற்றம் சொல்லவும் தயங்குவதில்லை. அண்மையில் சில வாரங்களுக்கு முன் நடைபெற்ற ஒரு திறப்பு விழாவிற்கு அமைச்சரையும் அழையுங்கள் என்று கேட்கப்பட்ட போது சண்முகலிங்கம் – பாலசுந்தரம்பிள்ளை – ஆறுதிருமுருகன் கூட்டு அதனை தடுத்து நிறுத்தியது. இவர்கள் பின் கதவால் செய்கின்ற நேர்மையற்ற அரசியல் மிக ஆபத்தானது. இது அமைச்சர் தேவானந்தாவுக்கு ஒரு அரசியல் முள்ளிவாய்க்காலுக்கே கொண்டு செல்லும்.

இலங்கையில் குறிப்பாக தேசிய சிறுபான்மை சமூகங்கள் இரட்டிப்பு ஒடுக்குமுறையை எதிர்கொள்கின்றன. தேசிய சிறுபான்மை சமூகங்களில் குறிப்பாக தமிழ் சமூகம் இலங்கை அரசை எதிர்நிலை அரசாக உணர்ந்து ஆயுதப் போராட்டத்தையும் முன்னெடுத்து இருந்தது. அதற்கு நியாயமான காரணங்களும் இருந்தது. இன்று யுத்தம் முடிவடைந்த போதும் தமிழ் மக்களின் உணர்வுநிலையில் இலங்கை அரசு எதிர்நிலையான அரசு என்பதிலும் அது சிங்கள அரசு என்பதிலும் பாரிய மாற்றங்கள் ஏதும் ஏற்படவில்லை. அதற்கான சூழலையும் ஆட்சியாளர்கள் ஏற்படுத்தவில்லை. அவ்வாறான சூழல் ஏற்படுத்தப்படும் என்பதற்கான அறிகுறிகளும் குறிப்பிடப்படும்படியாக இல்லை. ஆனால் 30 ஆண்டுகால யுத்தம் முடிவடைந்து 30 மாதங்களும் ஆகாத நிலையில் உடனடியாக மாற்றங்களை எதிர்பார்க்க முடியாது என்ற வாதத்தையும் முற்று முழுதாக நிராகரிக்க முடியாது.

இன்றுள்ள சூழலில் தமிழ் சமூகம் தன்னைத் தானே மீள்கட்டமைக்க வேண்டியுள்ளது. அதற்கு தமிழ் சமூகத்தின் நிர்வாகத்தில் இருக்கின்ற குறிப்பாக தமிழர்கள் சுயநல, சுயலாப நோக்கங்களைக் கைவிட்டு சமூக சிந்தனையோடு செயற்பட வேண்டும் அவ்வாறு இல்லாதவர்களை அம்பலப்படுத்தப்படுவது தவிர்க்க முடியாதது. இது தமிழ் சமூகத்தின் நலன்சார்ந்தவர்களது கடமையும் ஆகும்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்பான முன்னைய பதிவுகளைப் பார்க்க:

முருகையன் (1935-2009) – நகலும் நாடகமும் : நட்சத்திரன் செவ்விந்தியன்

சமூகமாற்றத்தை ஏற்படுத்தாமல் சமூகத்தைப் பிரதிபலித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பல்கலைக்கழகமல்ல பெரிய பள்ளிக்கூடமே! : த ஜெயபாலன்

‘‘எல்லாம் அல்லது பூச்சியம் என்ற கொள்கை எம்மைக் கைவிட்டது! ஆராய்ச்சியாளராகிய நாம் உண்மைக்கு மட்டுமே அடிபணிய கடமைப்பட்டு உள்ளோம்.’’ பேராசிரியர் ரட்னஜீவன் ஃகூல் உடனான நேர்காணல்

பல்கலைக்கழகங்கள் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. யாழ் பல்கலைக் கழகத்திடமும் சமூக மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது: நிஸ்தார் எஸ் ஆர் மொகமட்

இன்று Aug 29 -வடக்கு – கிழக்கு – மலையக தமிழ் பேசும் மக்களின் கல்வியின் எதிர்காலம் – பேராசிரியர் ரட்ண ஜீவன் ஃகூல் உடன் சந்திப்பும் கலந்துரையாடலும்

மாற்றத்திற்கான நம்பிக்கையுடன் பேராசிரியர் ஹூல் யாழ் செல்கின்றார்! : த ஜெயபாலன்

முன்னாள் புலிகள் விபத்தில் குண்டுவெடிப்பில் இறந்த செய்தியை பொலிஸார் மறுத்துள்ளனர். : மட்டக்களப்பு வெடிகுண்டு விபத்து

batti222.jpgகரடியனாறு வெடிவிபத்தில் முன்னாள் புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக வெளியான செய்தியை பொலிஸ் தரப்பு மறுத்துள்ளது.

கரடியனாறு குண்டுவெடிப்பில் புனர்வாழ்வு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த முன்னாள் போராளிகளும் உயிரிழந்துள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வமான இணையத்தளம் என்று அறியப்பட்ட தமிழ்நெற் இணையத்தளத்தில் வெளியான செய்தியை பொலிஸ் மறுத்துள்ளது.

மட்டக்களப்பு கரடியனாறு குண்டுவெடிப்புச் சம்பவத்தில் முன்னாள் புலிப்போராளிகள் பலியாகியிருக்க சாத்தியமில்லை எனவும், இது குறித்து தமக்கு எவ்வித தகவலோ அறிக்கையோ கிடைக்கவில்லை எனவும் பொலிஸ் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரசாந்த ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.

புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் புலிப்போராளிகள் சீன நிறுவனத்தால் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்தனர் என்றும், குறித்த குண்டு வெடிப்புச் சம்பவத்தில் அவர்களும் பலியாகினர் என்றும் தமிழ்நெற் இணையத்தளம் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இக்குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டவர்களின் தொகை 60 என சம்பவம் நடைபெற்றவுடன் முதலில் வெளியான செய்திகள் தெரிவித்திருந்தன. பின்னர் கொல்லப்பட்டவர்களின் தொகை 26 என பொலிஸார் தெரிவித்திருந்தனர். பொலிஸ்மாஅதிபர் மகிந்த பாலசூரிய வெளியட்டிருந்த அறிக்கையில் கொல்லப்பட்டவர்கள் 19 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாறுபட்ட தகவல்கள் குறித்து சந்தேகங்கள் தோன்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 பொலிஸ் குழுக்கள், புலனாய்வு பிரிவு தீவிர விசாரணை

மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் நிலையத்திற்கு வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டைனமைற் நிரப்பிய கொள்கலன் வெடிப்புக்கு திடீர் விபத்தே காரணம்; நாசவேலை காரணமல்ல என்று பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய நேற்றுத் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இச் சம்பவம் தொடர்பாக அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளரும், குற்ற புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளும் நடாத்திய புலன் விசாரணைகளில் இந்த விடயம் உறுதிப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.

கரடியனாறு பொலிஸ் நிலையத்திற்கு வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டைனமைற் வெடி மருந்து நிரப்பிய இரு கொள்கலன்கள் நேற்று முன்தினம் வெடித்துச் சிதறிய சம்பவத்தைக் கேள்வியுற்றதும் நேரில் சென்று திரும்பிய பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய நேற்று விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கின்றார்.

இச் சம்பவத்தில் 12 பொலிஸாரும், 07 பொது மக்களும், 02 சீன பிரஜைகளுமாக 21 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரம் இச் சம்பவத்தில் 19 பொலிஸாரும் 21 பொது மக்களும் காயமடைந்துள்ளனர். இவர்கள் உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பொலிஸாரில் நால்வர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டனர். இவர்களில் இருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்து சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் நேற்று கூறின.

இதேவேளை மட்டக்களப்பு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்களில் எவரும் தீவிர சிகிச்சைபிரிவில் அனுமதிக்கப்படவில்லை. இச் சம்பவத்தில் காயமடைந்து எமது ஆஸ்பத்திரியில் தங்கியிருந்து சிகிச்சை பெறுபவர்களின் உடல் நிலை தேறிவருவதாக ஆஸ்பத்திரி பணிப்பாளர் டொக்டர் கந்தசாமி முருகானந்தம் கூறினார். சிகிச்சை பெற்று வருபவர்களில் ஒரு தொகுதியினர் இன்று அல்லது நாளை வீடு திரும்ப முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

துக்கம் அனுஸ்டிப்பு

கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற வெடி விபத்தில் பலியானவர்களுக்காக இன்று மட்டக்களப்பில் துக்கம் அனுஸ்டிக்கப்பட்டுகிறது. மட்டக்களப்பு நகரின் பிரதான மணிக்கூட்டுக் கோபுரம், அரசடி ஆஞ்சநேயர் மணிக்கூட்டுக்கோபுரம், மற்றும் பிரதான வீதிகள் , ஏனைய பிரதேசங்களிலும் வெள்ளைக்கொடிகள் கட்டப்பட்டு துக்கம் அனுஷ்டிக்கப்பட்டது.

மட்டக்களப்பு கரடியானாறு வெடிவிபத்து குறித்து சீனத்தூதரகம் விசாரணை நடத்துகிறது.

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் நிலைய வளாகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வெடிவிபத்து தொடர்பாக விசாரணை நடத்த கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இக்குண்டு வெடிப்பு நடைபெற்ற கரடியனாறு பகுதிக்கு சீனத்தூதரகம் குழுவொன்றை அனுப்பிவைத்துள்ளது.

கிழக்கில் பல்வேறு அபிவிருத்திப்பணிகளில் ஈடுபட்டு வரும் சீன நிறுவனம் ஒன்றிற்கு சொந்தமான கொள்கலனிலிருந்த வெடிப்பொருட்களே நேற்று வெடித்து பெரும் உயிர்ச்சேதங்களை ஏற்படுத்திருந்தது. இதில் இரு சீனப்பிரஜைகளும் உயிரிழந்தனர்.  இவ்வெடிவிபத்து எவ்வாறு எற்பட்டது என்பது தொடர்பாக முழுமையான விசாரணைகளை சீனத்தூதரக அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, இவ்விபத்து தொடர்பான விசாரணைகளை உடனடியாக நடத்துமாறு தற்போது அமெரிக்கால் தங்கியுள்ள ஜனாதிபதி மகந்த ராஜபக்ச அங்கிருந்து பாதுகாப்புத்தரப்பிற்கு  உத்தரவிட்டுள்ளார்.

 மட்டக்களப்பில் இடம்பெற்ற பாரிய குண்டு விபத்தில் 25 பேர்வரை மரணம்

மட்டக்களப்பில கரடியனாறு பகுதியில் கட்டிட வேலைக்கு பயன்படுத்த வழங்கப்பட்ட வெடிபொருட்கள் வெடித்ததில் 25 பேர் கொல்லப்பட்டதாகத் தெரியவருகின்றது. இச்சம்பவத்தில் 60 ற்கு மேற்பட்டோர் பலியானதாகத் தகவல்கள் வெளிவந்த போதும் பாதுகாப்புத் தரப்புகளிலிருந்து கிடைத்த செய்திகளின் படி 25 பேரின் மரணமே உறுதிப்படுத்தப்பட்டன. 52 பேர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளனர். பலியானவர்களில் இருவர் சீன பிரஜைகளாவர். காயமடைந்தவர்களில் 24 பேர் பொலிஸார் எனவும் 28 பேர் சிவிலியன்கள் எனவும் பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவித்தன.

 கட்டிட வேலைகளுக்கு வெடிபொருட்களை வழங்க நிறுத்தப்பட்ட வாகனம் அப்பகுதியில் இருந்த பொலிஸ் வெடிபொருள் சேமிப்புக் கிடங்கிற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்துள்ளது. அதனைத் தொடர்ந்து பொலிஸ் வெடிபொருள் சேமிப்புக் கிடங்கும் வெடிப்புக்கு உள்ளாகியதால் பாரிய உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளது.

பாரிய சத்தத்துடன் இடம்பெற்ற இந்த வெடிவிபத்து வேலைநேரத்தில் இடம்பெற்ற விபத்து என பொலிஸார் தெரிவிக்கின்றனர். மே 18இன் பின் ஏற்பட்ட மிகப்பெரும் குண்டு வெடிப்பு இதுவாகும். இலங்கையில் அண்மைக் காலத்தில் நிகழ்ந்த பாரிய விபத்து மரணமாகவும் உள்ளது. வெடிபொருட்களைப் பயன்படுத்தம் போது உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமையினாலேயே இப்பாரிய அழிவு இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

batti222.jpgஇவ்விபத்தில் அருகில் இருந்த பொலிஸ் நிலையம் முற்றாக அழிக்கப்பட்டு உள்ளது. கொல்லப்பட்டவர்கள் பெரும்பாலும் பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் பணியாளர்களும் எனத் தெரியவருகின்றது. கொல்லப்பட்டவர்களில் சீனப் பணியாளர்கள் இருவரும் அடங்குவதாகத் தெரியவருகிறது.

இதுபற்றி தேசம்நெற் இணையத்திற்கு தகவல் அளித்த வி மகேந்திரன் கூட்டம் ஒன்றை நடாத்திக் கொண்டிருக்கும் போது இவ்வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றதாகத் தெரிவித்தார். இலங்கை நேரம் காலை 10:40 க்கு நிகழ்ந்த இப் பாரிய குண்டுவெடிப்பு 20 நிமிடங்கள் வரை நீடித்ததாகவும் தெரிவித்தார்.

கொழும்பு  – மட்டக்களப்பு பாதையை திருத்தி அமைக்கும் சீன நிறுவனம் புல்லுமலையில் உள்ள குன்றுகளைத் தகர்ப்பதற்கு பெருமளவு டைனமைட் வெடிபொருட்களை அப்பகுதிக்கு கொண்டு வந்துள்ளது. மேலும் இவ்வெடிபொருட்கள் கரடியனாறு பொலிஸ் ஆயுதக்கிடங்கிலும் சேகரிக்கப்ட்டு இருந்து. இந்த டைனமைட்டை கையாளும் போதே இந்த வெடிவிபத்து நிகழ்ந்து பொலிஸ் ஆயுதக் கிடங்கிலும் விபத்தை ஏற்படுத்தி உள்ளது என வி மகேந்திரன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

இந்பாரிய விபத்தால் பொலிஸ் நிலையம் முற்றாக அழிக்கப்பட்டதாகவும் அப்பகுதி மருத்துவமனையும் அப்பகுதியால் சென்று கொண்டிருந்த பேருந்தும் பாதிக்கப்பட்டு உள்ளதாக தாங்கள் அறிவதாகவும் வி மகேந்திரன் தெரிவித்தார். மேலும் பொலிஸ் நிலையத்திற்கு தங்கள் முறைப்பாடுகள் மற்றும் காரணங்களுக்காகச் சென்ற சிலரும் கொல்லப்பட்டு இருக்கலாம் என அவர் தெரிவித்தார்.

இப்பகுதி முற்றாக பொதுமக்களுக்கு தடுக்கப்பட்டு இருப்பதாகவும் வி மகேந்திரன் கூறினார்.

பாதுகாப்பு அமைச்சு தகவல்

batti17.jpgகரடியனாறு வெடிப்புச் சம்பவத்தில் 10 பொலிஸார், 2 சீன நாட்டவர்கள் மற்றும் 7 பொதுமக்கள் உட்பட 19 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 52 பேர் காயமுற்றவர்கள் எனவும் பாதுகாப்பு அமைச்சு தகவல் தெரிவித்துள்ளது.

இதேவேளை 44 பேர் காயமுற்ற நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களில் 4 பொலிஸ் உத்தியோகத்தரகள் கொழும்பு தேசிய வைத்தியசாலையிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய 40 பேரில் 21 பொதுமக்களும் 19 பொலிஸார்கள் உள்ளடங்குவதாகவும் மட்டு.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் முருகானந்தன் தெரிவித்துள்ளார்.

மேலும் 6 பொதுமக்கள், 2 பொலிஸார், 2 சீனநாட்டவர்கள் உட்பட 10 பேரின் சடலங்கள் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

‘‘தடுத்துவைக்கப்பட்டு உள்ள எல்ரிரிஈ போராளிகள் இவ்வாண்டு இறுதிக்குள் விடுவிக்கப்படுவார்கள்’’ பேராசிரியர் ரஜீவ விஜயசிங்க – நேர்காணல் : த ஜெயபாலன்

rajiva_wijesinha_prof‘‘தடுத்துவைக்கப்பட்டு உள்ள எல்ரிரிஈ போராளிகள் இவ்வாண்டு இறுதிக்குள் விடுவிக்கப்படுவார்கள்’’ என இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஜீவ விஜயசிங்க இன்று (செப்ரம்பர் 18, 2010) தேசம்நெற் இணையத்திற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்தார். 2010இல் ‘’சிறிலங்கா வளம்கொளிக்கும் நாடாக இருக்கும். அனைத்து சமூகங்களிடையேயும் நல்லிணக்கம் காணப்படும்’’ என்றும் பேராசிரியர் ரஜீவ விஜயசிங்க நம்பிக்கை வெளியிட்டார். ‘இலங்கை யுத்தத்திற்கு பின்னான எதிர்காலம்’ என்ற தலைப்பில் பேராசிரியர் ரஜீவ விஜயசிங்க றோயல் கொமன்வெல்த் சொசைடியில் நேற்று (செப்ரம்பர் 17 2010) உரையாற்றினார்.

அவர் தனது உரையில், ‘‘யுத்தத்திற்குப் பின் சிறிலங்கா விரைவாக வழமைக்குத் திரும்பிக் கொண்டு உள்ளது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் கிராமப் புறங்கள் முன்னுரிமை வழங்கப்பட்டு அபிவிருத்தி மேற்கொள்ளப்படுகிறது. சுயாதீனமாக எங்கும் சென்றுவரக் கூடிய சூழல் உருவாக்கப்பட்டு உள்ளது. அவசரகாலச் சட்ட விதிகள் தளர்த்தப்பட்டு உள்ளது. 5000 தமிழ் பொலிஸாரை பொலிஸ் பிரிவில் சேர்த்துக் கொள்வதற்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது’’ என்ற விடயங்களை சுட்டிக்காட்டினார்.

பேராசிரியர் ரஜீவ விஜயசிங்கவின் அரைமணி நேர உரையின் பின் சபையில் இருந்தவர்கள் மத்தியில் இருந்து கேள்விகளுக்கு நேரம் கொடுக்கப்பட்டது. பெரும்பாலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பாரம்பரிய ஆதரவாளர்களால் நிறைந்திருந்த மண்டபத்தில் இலங்கை தொடர்பான விடயங்களில் ஈடுபாடுடையவர்கள் சிலரும் கலந்துகொண்டனர். கேள்வி நேரத்தில் பேராசிரியர் ரஜீவ விஜயசிங்க மீதும் இலங்கை அரசு மீதும் கடுமையான கண்டனங்கள் வைக்கப்பட்டன. இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள், குடும்பக் கட்டுக்குள் அதிகாரங்களைக் குவிப்பது, பிறள்வான ஆட்சிமுறை போன்ற வழமையான கேள்விகள் முன்வைக்கப்பட்டன. 

இவற்றுக்குப் பதிலளித்த பேராசிரியர் ரஜீவ விஜயசிங்க, ‘‘தமிழ் மக்களுக்கு கடந்த கதலங்களில் அநீதி இழைக்கப்பட்டது. அதனால் தமிழ் மக்களின் உணர்வுகளை எனக்கு புரிந்துகொள்ள முடிகிறது. அவர்களுடன் நானும் கவலைகொள்கிறேன். ஆனால் இன்று அரசாங்கம் அநீதி இழைக்கப்பட்ட சூழ்நிலையை மாற்றி அமைக்கின்ற செயன்முறையில் தன்னை ஈடுபடுத்தி உள்ளது. 1987ல் எல்ரிரிஈ மட்டும் ஆயுதங்களை ஒப்படைக்காமல் தொடர்ந்தும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டது. இன்று யுத்தம் வெல்லப்பட்டு சமாதனச் சூழல் ஏற்பட்டு உள்ளது. நீங்கள் உங்கள் சிந்தனைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். எப்போதும் எதிர்மறையாக செயற்படுவதால் எவ்வித பலனும் இல்லை’’ எனத் தெரிவித்தார்

சர்வதேச நாடுகளின் மனித உரிமைக் குற்றச்சாட்டுகள் பற்றிக் குறிப்பிடுகையில், ’’பனிப்போருக்குப் பின் தேவைகளைப் பொறுத்து மேற்குநாடுகள் மனித உரிமைகளை உயர்த்திப் பிடிக்கின்றனர்’’ என தெரிவித்தார். கனடாவைச் சேர்ந்த வெள்ளை இனத்தவர் ஒருவர், ‘‘கனடாவில் உள்ள பொருளாதார அகதிகளை திருப்பி அனுப்ப முடியாதுள்ளது. ஏனெனில் இலங்கையில் அவர்கள் சித்திரவதைக்கு உள்ளாகலாம் என தஞ்ச வழக்குகளின் நீதிபதிகள் கருதுகின்றனர். ஆகவே எப்போது அவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப முடியும்’’ எனக் கேள்வி அனுப்பினார். அதற்குப் பதிலளித்த பேராசிரியர் ரஜீவ விஜயசிங்க, ‘‘கனடா ஏன் அவர்களை மனித வளமாகக் கருதவில்லை. அவர்களை தங்களின் பொருளாதார வளர்ச்சிக்குப் பயன்படுத்தலாமே”” எனப் பதில் கேள்வி எழுப்பினார். அவர் தொடர்ந்தம் பதிலளிக்கையில்,’’கனடாவில் உள்ள 50 வீதமான தமிழர்களும் விடுமுறைக்கு இலங்கை வந்து செல்கின்றனர். அதனால் இலங்கையில் சித்திரவதைக்கு உள்ளாகிறார்கள் என்பதெல்லாம் ஆதாரமற்ற கதைகள். கனடாவில் வசதி வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் செழிப்பான இடங்களுக்கு மக்கள் கவரப்படுவது இயல்பானது. இலங்கைக்கு யாரும் திரும்பி வருவதில் எந்தத்தடையும் இல்லை’’ என்றார் பேராசிரியர் ரஜீவ விஜயசிங்க.

இன்று (செப்ரம்பர் 18 2010) காலை லண்டனைவிட்டு புறப்படுமுன் பேராசிரியர் ரஜீவ விஜயசிங்க தேசம்நெற் க்கு வழங்கிய நேர்காணல்.

தேசம்: தடுத்து வைக்கப்பட்டு உள்ள முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளை விடுவிப்பதற்கு அரசாங்கம் காலவரையறையை குறித்துள்ளதா?

பா உ ரஜீவ: யுத்தத்தின் முடிவில் 10 000 வரையான எல்ரிரிஈ உறுப்பினர்கள் சரணடைந்தனர். இன்னும் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் முகாம்களில் உள்ளவர்களால் அடையாளம் காணப்பட்டனர். இவர்கள் எல்ரிரிஈ இல் என்ன ஈடுபாட்டைக் கொண்டிருந்தார்கள் என்ற வகையில் A, B, C, D, E, F, G என வகைப்படுத்தப்பட்டு இருந்தனர். இவர்களில் A, B, C பிரிவுகளில் ஆயிரத்திற்கும் அதிகமானவர்களும் ஏனையவர்கள் 10,000 பேரும் உள்ளனர். இந்தப் 10 000 பேரும் இந்த வருட இறுதிக்குள் விடுவிக்கப்பட்டு விடுவார்கள். ஏற்கனவே சில ஆயிரம் பேரை அரசாங்கம் விடுவித்து உள்ளது. தற்போது 7,000 பேர் வரையிலேயே உள்ளனர். இவர்களில் இன்னும் 1400 பேர் விரைவில் விடுவிக்கப்பட உள்ளனர். மாதத்திற்கு 1,000 பேரை விடுவிப்பது என்ற அடிப்படையில் அரசாங்கம் செயற்படுகிறது.

A, B, C பிரிவுகளில் உள்ள ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் எல்ரிரிஈ இன் முக்கிய உறுப்பினர்கள். இவர்களில் சிலர் விடுவிக்கப்பட்டு உள்ளனர். ஏனையவர்களுக்கு ஆதாரங்கள் இருக்கும்பட்சத்தில் அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்கும். ஏனையவர்கள் ஒரு சில வருடங்களுக்குள் விடுவிக்கப்படுவார்கள்.

இவர்களுக்கு தொழில் பயிற்சி உளவியல் ஆலோசணைகள் வழங்கப்பட்டு வருகின்றது. அரசாங்கம் திருமணங்கள் கூட செய்து வைத்துள்ளது.

தேசம்: அரசாங்கத்தை ஆதரிக்கும் அரசியல் கட்சிகள் மத்தியிலேயே தற்போது அதிருப்தி நிலவுகின்றது. வடக்கு கிழக்கு அபிவிருத்தியில் இருந்து தாங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அவர்கள் உணர்கிறார்கள். வட மாகாண அபிவிருத்தியை முன்னெடுக்க அமைக்கப்பட்ட குழுவில் வடமாகாணத்தைச் சேர்ந்த யாரும் இல்லை.

பா உ ரஜீவ: அபிவிருத்தி விடயங்களை துரிதமாக முன்னெடுக்க அமைச்சர் பசில் ராஜபக்ச சில துரித விடயங்களை மேற்கொள்கிறார். அப்பகுதிப் பாராளுமன்ற உறுப்பினரான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றார். ரிஎன்ஏ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு அதித முன்னுரிமை வழங்கப்படுவதாக பல சமயங்களிலும் குற்றம்சாட்டி வருகின்றது. மற்றைய தமிழ் கட்சிகளும் அப்போது பிளவுபட்டு நின்றன. அபிவிருத்தி துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதனாலேயே கட்சிகள் அக்குழுவில் இடம்பெறவில்லை என நினைக்கிறேன்.

தேசம்: வடக்கு – கிழக்கு மாகாணத்தின் குடிபரம்பலை மாற்றி அமைக்கின்ற நிகழ்ச்சி நிரல் ஒன்று அரசாங்கத்திடம் உள்ளதா? அரசாங்கத்தை ஆதரிக்கின்ற கட்சிகளே அவ்வாறான திட்டம் ஒன்று அரசாங்கத்திடம் இருப்பதாக நம்புகின்றன.

பா உ ரஜீவ: இவ்வாறான செய்திகள் சென்ற ஆண்டில் பரப்பப்பட்டு இருந்தது. அதில் எவ்வித உண்மையும் இல்லை என்பதை இப்போது ஒரு வருடம் ஆன பின் அறிந்திருப்பீர்கள். எண்பதுக்களில் இடம்பெயர்ந்த சிறிய தொகையான சிங்கள கிராமவாசிகள் தங்கள் நிலங்களுக்கு திரும்பியதைத் தவிர அங்கு வேறு குடியேற்றங்கள் எதுவும் நடைபெறவில்லை.

வடக்கு கிழக்கின் குடிப்பரம்பலை மாற்றி அமைக்கின்ற எந்தத் திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை என்பதை நான் நிச்சயமாகத் தெரிவிக்க முடியும். ஆனால் உங்களுக்கு விளங்க வேண்டும் வடக்கில் சில இராணுவ முகாம்கள் அமைக்கப்பட வேண்டிய தேவையுள்ளது. அதையொட்டி சிறிய அளவில் இராணுவக் குடும்பங்கள் குடிஇருப்பார்கள்.

இது பற்றி அமைச்சர் கருணாவும் கூட அரசாங்கத்திற்கு வலியுறுத்தி உள்ளார். இக்குடியிருப்புகள் சிறய அளவுக்குள்ளாக இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுள்ளார். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இராணுவ முகாம்களுடன் இராணுவக் குடியிருப்புகள் உள்ளது. அவ்வாறு சிறிய குடியிருப்புகள் வடக்கு கிழக்கில் இராணுவ முகாம்களுடன் அமைக்கப்படும் இது வடக்கு கிழக்கின் குடிபரம்பலை மாற்றி அமைக்கும் நோக்குடன் செய்யப்படவில்லை. அவ்வாறான நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை.

தேசம்: இலங்கையில் இனப் பதட்டத்தை தீர்ப்பதற்கு அதனை ஏற்படுத்திய சூழலை மாற்றி அமைக்க வேண்டும் என நேற்று றோயல் கொமன்வெல்த் சொசைட்டியில் இடம்பெற்ற உரையில் குறிப்பிட்டு இருந்தீர்கள். இனப்பதட்டமற்ற சூழலை உருவாக்க அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கைகளைக் கொண்டுள்ளது.

பா உ ரஜீவ: இந்த இனப்பதட்டத்தை உருவாக்கியதில் மொழி முக்கியமானது. ‘சிங்களம் மட்டும்’ சட்டம் கொண்டுவரப்பட்டது மடமைத்தனமானது. அதனைப் பின்னர் மாற்றி அமைத்த போதும் அதனை ஆட்சிக்கு வந்தவர்கள் சரிவர அமுல்படுத்தவில்லை. ஆனால் நாம் இன்று அதனை அமுல்படுத்துகின்றோம். இளையவர் மட்டத்தில் தமிழ் கற்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள். தமிழ் தெரியாமல் பொதுப்பணித்துறையில் வேலைவாய்ப்பில்லை. ஏற்கனவே அரசதுறைகளில் உள்ளவர்களை வேலைநீக்கம் செய்ய முடியாது. ஆனால் அவர்களையும் தமிழ் கற்கத் தூண்டுகிறோம்.  

பல்கலைக்கழக அனுமதியில் இனரீதியிலான தரப்படுத்தலைக் கொண்டு வந்தது தவறு. அது பிரதேச ரீதியான தரப்படுத்தல் ஆன போது கொழும்பும் பாதிக்கப்பட்டது. ஆனால் அங்கு வேறு கல்வி வாய்ப்புகளும் தனியார்துறை வேலை வாய்ப்புகளும் இருந்தபடியால் அங்கு குறிப்பிடத்தக்க தாக்கம் ஏற்படவில்லை. ஆனால் யாழ்ப்பாணத்தில் அரசதுறை மட்டுமே இருந்ததாலும் வேறு கல்வி வாய்ப்புகள் இல்லாததாலும் அவர்களை பிரதேச ரீதியான தரப்படுத்தலும் கடுமையாகப் பாதித்தது. இன்று யாழப்பாணத்திற்கு இத்தரப்படுத்தல் உதவுகின்றது.

எதிர்காலத்தில் எமது கல்விக் கொள்கைகள் மாற்றி அமைக்கப்பட வேண்டும். கல்விக் கட்டமைப்பை மாற்றி அமைக்க வேண்டும். இதற்கான ஆலோசணைக் குழுக்கள் பாராளுமன்றதில் உள்ளது. தமிழ் கட்சிகள் இவற்றில் கணிசமான பங்களிப்பை வழங்குகின்றனர். ரிஎன்ஏ யும் கலந்துகொண்டு கருத்துக்களை முன்வைக்கின்றனர். முன்னைய அரசாங்கங்களில் எல்லோரும் அமைச்சர்களாக இருந்த நிலை இப்போது இல்லை. பின்வாங்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். பாராளுமன்றக் குழுக்கள் விவாதங்களையும் ஆலோசணைகளையும் வழங்குகின்றன.

நாட்டினுடைய சட்டம் சமத்துவமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். பொலிஸ் படைகளில் தமிழ் பொலிசார் இணைக்கப்படுகின்றனர். இராணுவப் படையணியிலும் 25 வீதமானவர்கள் சிறுபான்மையினராக இருக்க வேண்டும். ஆரம்பத்தில் 10 வீதமானவர்கள் என்றாலும் இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும்.

எல்ரிரிஈ இன் ஊடுருவல் இருக்கலாம் என்பதால் படையணியில் இன்னமும் தமிழர்கள் சேர்க்கப்படவில்லை என பாதுகாப்பு அமைச்சர் என்னிடம் குறிப்பிட்டதாக ஞாபகம். ஆனால் இராணுவ அலுவலர்களாக தமிழர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

நாட்டினுடைய கட்டுமானங்கள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். மக்களிடையேயும் பிரதேசங்களிடையேயும் தொடர்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும். மன்னாரில் உள்ளவர்களுக்கும் திருகோணமலையில் உள்ளவர்களுக்கும் இடையிலேயே தொடர்புகள் இல்லை.

மனிதவளங்கள் விருத்தி செய்யப்பட வேண்டும். பொதுத் துறைகளில் உள்ளோர் கண்ணியமாக உரையாட வேண்டும். கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும்.

தேசம்: நேற்று உங்களது உரையில் நீங்கள் பிரதேசங்களுக்கு அதிகாரங்களைப் பரவலாக்குவதை வரவேற்பதாகக் கூறி இருந்தீர்கள்.

பா உ ரஜீவ: நிச்சயமாக.

தேசம்: ஆனால் நீங்கள் அங்கம் வகிக்கின்ற அரசாங்கம் அதிகாரங்களைப் பரவலாக்குவதில் எவ்வித ஆர்வத்தையும் காட்டவில்லை. ஏற்கனவே அரசியல் அமைப்பில் உள்ளடக்கப்பட்ட 13வது திருத்தச் சட்டத்தையே அமுல்படுத்த அரசு முன்வரவில்லை.

பா உ ரஜீவ: 13வது திருத்தத்தில் சில பிரச்சினைகள் உள்ளது. வரதராஜப் பெருமாள் புலிகளின் நெருக்கடியால் தமிழீழத்தை பிரகடனப்படுத்தியது 13வது திருத்தச்சட்டம் தொடர்பாக சிக்கல்களையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தியது. ஆனால் பொலிஸ் காணி அதிகாரங்கள் தவிர்ந்த ஏனைய விடயங்களில் பெரிய முரண்பாடுகள் இல்லை. பொலிஸ் அதிகாரத்தை வடக்குக்கு கையளிப்பது ஒரு பிரச்சினையல்ல. ஆனால் அதனை தென் மாகாணங்களுக்கு கையளிப்பதில் சிக்கல்கள் எழும்.

மேலும் அரசுக்கும் மாகாணத்துக்குமாக வரையறுக்கப்பட்ட கொன்கறன்ட் லிஸ்ட்டில் உள்ள வரையறைகள் தெளிவுபடுத்தப்பட வேண்டி உள்ளது.

ஆனால் கிழக்கில் மகாணசபையில் உள்ளவர்களிடம் அதனை நடாத்துகின்ற திறன் குறைவாகவே உள்ளது. கல்வி, சுகாதாரம் போன்ற விடயங்களில் எல்லாம் அவர்கள் தங்கள் எண்ணப்படி செயற்பட முடியும். ஆனால் அவர்கள் இதைக்கேட்கலாமா அரசு அனுமதிக்குமா என்றெல்லாம் யோசிக்கிறார்கள்.

தேசம்: பொலிஸ், காணி தவிர்ந்த விடயங்களில் மாகாணசபை தன் எண்ணப்படி செயற்படலாம் என்கிறீர்கள் ஆனால் கிழக்கு மாகாணத்து பாடசாலைக்கு ஒரு ஆசிரியரையோ அல்லது அங்கு ஓடுகின்ற ஒரு பஸ் வண்டிக்கு ஒரு சாரதியையோ நியமிக்கின்ற அதிகாரம் முதலமைச்சருக்கு இல்லை என கிழக்கு மாகாண முதலமைச்சர் nதிரிவிக்கின்றாரே.

பா உ ரஜீவ: வடக்கு கிழக்கில் ஆளுனர் ஆட்சியே நீண்டகாலமாக இருந்தது. அதனால் ஆளுனரே முடிவுகளை எடுத்து வந்தார். இப்போது முதலமைச்சர் பதவிக்கு வந்ததும் ஒரு அதிகாரப் போட்டி நிலையுள்ளது. முதலமைச்சருக்கு ஆலோசணை வழங்குபவர்கள் தங்கள் அதிகார மேலாண்மையை நிறுவவும் பார்க்கிறார்கள். இதில் முதலமைச்சரும் ஆளுனரும் ஒத்துழைத்துப் பணியாற்றினால் பலவிடயங்களைச் சர்ச்சையின்றிச் செய்ய முடியும். கிழக்கு மாகாணத்தில் முதலமைச்சரும் ஆளுனரும் ஒத்துழைத்து பல விடயங்களைச் செய்கின்றனர். கிழக்கில் நிலைமைகள் பெருமளவு முன்னேற்றமாகவே உள்ளது. அதிகார குழப்பங்கள் இல்லாமல் செய்யப்பட வேண்டும்.

தேசம்: கிழக்கு மாகாணம் மாகாண சபையூடாக இயக்கப்படுகிறது. வடமாகாணத்திற்கான தேர்தல் எப்போது நடாத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

பா உ ரஜிவ: அடுத்த ஆண்டில் வடமாகாண சபைத் தேர்தலை நாடாத்தப்படும் என நினைக்கிறேன். தமிழ் கட்சிகளிடையே ஒரு உடன்பாடில்லை. வீ ஆனந்தசங்கரி, டக்ளஸ் தேவானந்தா இருவரும் உறுதியான அரசியல் உடையவர்கள். அவர்களில் எனக்கு மதிப்பும் மரியாதையும் உண்டு. ஆனால் அவர்கள் ஒருவரோடு ஒருவர் பேசுவதே இல்லை. இதனால் தான் வவுனியா நகரசபையை ரிஎன்ஏ கைப்பற்றியது. அவ்வாறான ஒரு நிலை வடமாகாண சபைக்கு ஏற்படக் கூடாது. (இப்போது ரிஎன்ஏ இன் வவுனியா நகரசபை இயங்காதது போல வடமாகாணசபைக்கு அந்நிலை ஏற்பட்டுவிடக்கூடாது.)

இப்போது நிலைமை மாறியுள்ளது. அவர்கள் இனைந்து செயற்படுகின்றனர். டக்ளஸ் தேவானந்த சூழலைப் புரிந்துசெயற்படுகின்ற ஒருவர். அவர் பல விடயங்களைச் சாதித்து உள்ளார். அப்போதெல்லாம் எல்ரிரிஈ உடன் தனித்து நின்று போராடியவர். அவருடைய தைரியத்தை மதிக்கிறேன்.

தேசம்: நேற்றைய உரையில் தமிழ் மக்களுடைய உணர்வுகளை மதிப்பதாகக் கூறியிருந்தீர்கள். மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசுகள் இந்த இனப்பிரச்சினையை தீர்க்கத் தவறிவிட்டதாகவும் குற்றம்சாட்டி இருந்தீர்கள்.

பா உ ரஜீவ: சிறிய திருத்தம், ஆட்சிக்கு வந்தவர்கள் இனப்பிரச்சினையைத் தீர்க்கத் தவறிவிட்டனர் என்பதல்ல அவர்களே இனப்பிரச்சிiனைக்கு காரணமாகிவிட்டனர். ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்த போது ஜேஆர் அரசு மேற்கொண்ட இனக்கலவரங்களே தமிழ் இளைஞர்களை ஆயுதம் ஏந்த வைத்தது. அந்த வகையில் டக்ளஸ் தேவானந்தா, தர்மலிங்கம் சித்தார்த்தன் போன்றவர்களுடன் அன்று எனக்கு அனுதாபம் இருந்தது. 1987ல் அவர்கள் ஆயுதங்களைக் கைவிட்டு அரசியலுக்கு வந்த துணிவைப் பாராட்டுகிறேன். பல வருடங்களாக எல்ரிரிஈ யை எதிர்த்து அவர்கள் அரசியல் செய்துள்ளனர். அந்த தைரியத்தை நான் மதிக்கிறேன்.

தேசம்: இந்த யுத்தம் முடிவுக்கு வந்தது ஒரு நல்ல விடயம்!

பா உ ரஜீவ: நிச்சயமாக! நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் மக்கள் எவ்வளவு நிம்மதியாக வாழ்கின்றனர். தங்கள் நாளாந்த வேலைகளைச் செய்கின்றனர். அபிவிருத்தி முன்னெடுக்கப்படுகின்றது.

தேசம்: இந்த யுத்தம் முடிவுக்கு வந்தது ஒரு நல்ல விடயம்! ஆனால் அது முடிவுக்கு வந்த முறை தமிழ் மக்களது உள்ளங்களை மிகக் காயப்படுத்தி உள்ளது. இந்த யுத்தத்தை வேறுவிதமாக முடிவுக்குக் கொண்டு வந்திருக்கலாம் என்று நீங்கள் நினைக்கவில்லையா?

பா உ ரஜீவ: 1987 முதல் எல்ரிரிஈ அனைத்து பேச்சுவார்த்தைகளையும் குழப்பி யுத்தத்தில் தீவிரமாக நின்றது. இந்த யுத்தத்தில் 2009 முற்பகுதிவரை பெரும் இழப்புகள் ஏற்படவில்லை. அதன்பின் எல்ரிரிஈ இழப்புகளை பலமடங்கு பெருப்பித்தது. அதுமட்டுமா மக்கள் மீதே எல்ரிரிஈ துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டது. இதனை ஐக்கிய நாடுகள் அறிக்கையே தெரிவிக்கின்றது. எல்ரிரிஈ மக்களை மனிதக் கேடயங்களாக பாவித்து இருக்காவிட்டால் இவ்வளவு இழப்பு ஏற்பட்டு இருக்காது. எல்ரிரிஈ மக்களை விடுவிக்க வேண்டும் என்று உலகமே கேட்ட போதும் ரிஎன்ஏ அப்படி ஒரு கோரிக்கையை விடவே இல்லையே.

எல்ரிரிஈ போன்ற கொடிய அமைப்புடன் வேறொரு முறையில் அதனைச் செய்திருக்கலாம் என்று நான் நினைக்கவில்லை. மக்களை மனிதக் கேடயங்களாக்கி அம்மக்கள் மீதே துப்பாக்கிப் பிரயோகமும் செல்வீச்சும் நடாத்தி பழியை எதிர்தரப்பில் போடும் அமைப்புடன் வேறுவிதமாக இந்த யுத்தத்தை முடித்திருக்க முடியாது.

தேசம்: புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

பா உ ரஜீவ: அவர்களிடம் இருந்து வடக்கு கிழக்கை விருத்தியடையச் செய்வதற்கான உதவிகளை எதிர்பார்க்கிறோம். புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கும் அரசாங்கத்திறகும் இடையே வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதில் நிச்சயமாக ஒரு 10வீத முரண்பாடுகள் உண்டு. அதே சமயம் வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு செய்யப்பட வேண்டிய விடயங்களில் அரசாங்கத்துக்கும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கும் 90 வீதமான விடயங்களில் உடன்பாடுகள் உண்டு.

அவர்கள் உடன்படாத விடயங்களில் உதவ வேண்டியதில்லை. ஆனால் தனியார் தொழில்நுட்பக் கல்லூரிகளை அமைப்பது போன்ற விடயங்களில் அவர்களும் ஈடுபட முடியுமே. மாணவர்களுக்குப் புலமைப் பரிசில்களை வழங்கலாம். அதனை அவர்கள் அரசாங்கத்தின் மூலம் செய்ய வேண்டியதில்லையே நேரடியாகவே செய்யலாமே. இவ்வாறு பலவாறாக அவர்கள் தங்களுக்கு உதவலாம் அதற்கு உதவ முன்வர வேண்டும். அதற்கு அரசாங்கம் தடையாக இருக்காது.

தேசம்: 2020இல் யுத்தம் முடிவடைந்து பத்து ஆண்டுகளில் இலங்கை எவ்வாறு இருக்கும் என நினைக்கிறீர்கள்?

பா உ ரஜீவ: சிறிலங்கா வளம்கொளிக்கும் நாடாக இருக்கும். விவசாயமும் ஏனைய துறைகளும் நவீன தொழில்நுட்பத்துடன் சிறந்து விளங்கும். கல்வித்துறையும் புதிய கல்விக் கொள்கையையும் புதிய கட்டமைப்புகளையும் கொண்டு சிறந்து விளங்கும். இலங்கையில் உள்ள அனைத்து சமூகங்களிடையேயும் நல்லிணக்கம் காணப்படும்.

”எமது கழகத்தில் நிதிநெருக்கடி உள்ளது. ஆனால் எமது முன்னேற்றத்தை விரும்பாதவர்கள் இதனைப் பெரிது படுத்துகின்றனர்!!!” வசந்தன் கிருஸ்ணன் (பிரித்தானிய தமிழர் விளையாட்டுக் கழகம்)

BTSL_Logoலண்டனில் தமிழ் விளையாட்டுக் கழகங்கள் லாபத்துடன் இயங்கி வருகின்றன. அப்படி இருக்கையில் மிகவும் வெறிறிகரமாகச் செயற்பட்ட பிரித்தானிய தமிழர் விளையாட்டுக் கழகம் (British Tamils Spoerts League – BTSL) தற்போது நிதி நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளதாக அக்கழகத்தில் அங்கம் வகிக்கும் விளையாட்டுக் கழகங்கள் தெரிவிக்கின்றன. பந்துகள் வாங்குவதும் நடுவருக்கு கட்டணம் செலுத்துவதுமே பிரச்சினையானதாக மாறியுள்ளது எனவும் தெரியவருகின்றது.

பிரித்தானிய விளையாட்டுக் கழகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக அதன் பொறுப்பாளர் வசந்தன் கிருஸ்ணனை பிரித்தானியாவின் மிச்சம் பகுதியில் உள்ள அவர்களின் அலுவலகத்தில் சந்தித்து உரையாடினோம். அவர்களுடைய விளையாட்டுக்குழுவின் சந்திப்பின் பின்னதாக எமது சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. காலம்சென்ற போராளி கேணல் கிட்டுவின் பெரிய படத்துடன் இருந்த அந்தச் சந்திப்பு அறையிலேயே இச்சந்திப்பு நடைபெற்றது. தேசம்நெற் சார்பில் நானும் நண்பர் த சோதிலிங்கமும் தமிழர் விளையாட்டுக் கழகம் சார்பில் அதன் பொறுப்பாளர் வசந்தன் கிருஸ்ணன் வணங்கா மண் கப்பலில் பயணம் செய்த ஊடகவியலாளர் உதயணன் மற்றும் இரு உறுப்பினர்களும் இருந்தனர். பிரித்தானிய தமிழ் விளையாட்டுக் கழகத்தின் பொறுப்பாளர் என்ற வகையில் வசந்தன் கிருஸ்ணனின் கருத்துக்கள் மட்டுமே இங்கு பதிவு செய்யப்படுகிறது.

எமது கேள்விகள் பெரும்பாலும் பிரித்தானிய விளையாட்டுக் கழகம் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள், அதன் அதன் நிதி நிர்வாகம், பிரித்ததானிய விளையாட்டுக் கழகத்தின் எதிர்காலம் பற்றியதாகவே இருந்தது.

இவற்றுக்குப் பதிலளித்த வசந்தன் கிருஸ்ணன் விளையாட்டுக் கழகம் சிறிய அளவில் நிதிநெருக்கடியை சந்தித்து உள்ளதாகவும் ஆனால் அது தங்கள் முன்னேற்றத்தை விரும்பாதவர்களால் பெரிதுபடுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

‘பந்துகள் வாங்குவதற்கு பணம் வழங்கப்படுவதில்லை என்பதெல்லாம் உண்மையல்ல’ எனக் குறிப்பிட்ட அவர் ‘கிரிக்கட் விளையாட்டுக்கள் லண்டனின் பல்வேறு பாகங்களிலும் இடம்பெறுவதால் வாங்கிய பந்துகளை குறித்த நேரத்தில் விநியோகிக்க முடிவதில்லை’ எனத் தெரிவித்தார். இதற்கான மாற்று வழியாக விளையாட்டுக் கழகங்களே பந்துகளை வாங்கவும் நடுவருக்கான பணத்தைச் செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும் வசந்தன் கிருஸ்ணன் தெரிவித்தார். ‘அதற்கான செலவை தாங்கள் அவர்களுடைய கட்டணத்தில் இருந்து குறைத்துக் கொள்வோம்’ எனவும் வசந்தன் சுட்டிக்காட்டினார்.

‘விளையாட்டுக் கழகம் கிரிக்கட் போட்டிகளை ஆரம்பித்த காலங்களில் மிகக் குறைந்த கட்டணத்தையே வசூலித்தது’ என்றும் அதனால் ஆரம்ப வருடங்களில் ஏற்பட்ட நட்டமே இப்போது நெருக்கடிக்கு உள்ளாகி இருப்பதாகவும் வசந்தன் கிருஸ்ணன் தெரிவித்தார்.

தமிழர் விளையாட்டுக் கழகம் ஆரம்பிப்பதற்கு முன்னதாக 10 வருடங்களுக்கு மேலாக யாழ் இந்தக்கல்லூரிப் பழைய மாணவர் எஸ் ஸ்கந்தமூர்த்தி என்பவர் கிரிகட் போட்டிகளை ஆண்டு தோறும் நடாத்தி வந்தார். இவருடைய லீக்கில் இருந்த விளையாட்டுக் கழகங்களைக் கவருவதற்காகவே பிரித்தானிய தமிழர் விளையாட்டுக் கழகம் மிகக் குறைந்த கட்டணத்தை அறவிட்டது. அதில் ஓரளவு வெற்றியும் கண்டது. ஆனால் அதுவே இப்போதைய நெருக்கடிக்கு காரணமாகவும் அமைந்துள்ளது என வசந்தன் கிருஸ்ணன் தெரிவிக்கின்றார்.

‘ஸ்கந்தமூர்த்தி உருவாக்கிய விளையாட்டுக் கழகத்தில் இருந்து ஆரம்பத்திலேயே வெளியேறி தங்களுடன் இணைந்தவர்கள்  அதிருப்தியடைந்து வெளியேறியவர்கள். அவர்கள் தாயகப் பற்றுடையவர்கள்’ எனக் கூறும் வசந்தன் கிருஸ்ணன் ‘இறுதியில் வெளியேறி தங்களுடன் இணைந்தவர்கள் வேறு வழியின்றியே தங்களுடன் இணைந்தனர்’ எனக் கூறினார். ‘பிரித்தானிய தமிழர் விளையாட்டுக் கழகத்துடன் பெரும்பாலான கழகங்கள் இணைந்த நிலையில் ஸ்கந்தமூர்த்தியினால் விளையாட்டுப் போட்டிகளை நடாத்த முடியாது போனமையினால் ஏனைய கழகங்கள் விரும்பமின்றி விளையாட்டுப் போட்டியில் ஈடுபட வேண்டும் என்பதற்காகவே வந்து இணைந்தனர்’ என்றும் வசந்தன் கிருஸ்ணன் விபரித்தார். இவ்வாறான விளையாட்டுக் கழகங்களே தற்போது சிறிய விவகாரங்களையும் பெரிதுபடுத்துவதாக அவர் தெரிவித்தார்.

பிரித்தானிய விளையாட்டுக் கழகம் தனது கணக்கு விபரங்களை ஏன் இதுவரை வெளியிடவில்லை எனக் கேட்கப்பட்ட போது, ‘கழகங்கள் விரும்பும்பட்சத்தில் அதனைப் பார்வையிட முடியும்’ எனத் தெரிவித்தார் வசந்தன் கிருஸ்ணன். ‘அண்மையில் ஒரு கூட்டம் கூட்டப்பட்டது அதில் கணக்கு விபரங்களை வெளியிட்டோம். ஆனால் பல கழகங்கள் அதில் சமூகமளிக்கவில்லை’ எனவும் வசந்தன் கிருஸ்ணன் தெரிவித்தார். உங்கள் விளையாட்டுக் கழகத்தில் உள்ள ஒவ்வொருவரும் உறுப்புரிமைக் கட்டணம் செலுத்தியே உறுப்பினராக உள்ளனர். ஆகவே நீங்கள் கணக்கு விபரத்தை அவர்களுக்கு மின் அஞ்சலூடாக அனுப்ப முடியும் அல்லது உங்கள் இணையத்திலேயே பிரசுரிக்க முடியுமே எனக் கேட்ட போதும் ‘நாங்கள் கணக்கு வழக்கை காட்டத தயாராக உள்ளோம். விரும்பியவர்கள் எங்களை அணுகலாம்’ எனப் பதில் தரப்பட்டது.

தங்களுக்கு உள்ள நிதிநெருக்கடிகளை தாங்கள் ஓரளவு சமாளித்து வருவதுடன் கழகங்களிடம் பெற்ற கடன்களையும் மீளச் செலுத்தி வருவதாக வசந்தன் கிருஸ்ணன் தெரிவித்தார். இன்னும் சில ஆயிரம் பவுண்களே கடன்கள் இருப்பதாகத் தெரிவித்த வசந்தன் கிருஸ்ணன் இன்றுள்ள அரசியல் சூழலால் பல்வேறு தரப்பினரும் இந்த விளையாட்டுக் கழகத்தில் ஒரு கண் வைத்துள்ளதாகவும் இதனால், தான் உள்முரண்பாடுகளுக்கும் நெருக்கடிகளுக்கும் உள்ளானதாகவும் கூறினார்.

எவ்வாறான நெருக்கடிகள் சிக்கல்கள் தோண்றிய போதும் பிரித்தானிய தமிழர் விளையாட்டுக் கழகம் தனது பயணத்தை உறுதியுடன் தொடரும் என்றும் அவர் அழுத்தமாகத் தெரிவித்தார். தற்போதுள்ள நெருக்கடியில் இருந்து பிரித்தானிய தமிழர் விளையாட்டுக் கழகம் மேவி வரும் என்ற நம்பிக்கையுடன் அவர் எமக்கு விடைதந்தார்.

._._._._._.

லண்டன் குரலில் வெளியான செய்தி:

100,000 பவுண் நிதிப்புரள்வு – 45,000 பவுண் லாபம் ஈட்டக் கூடிய அமைப்பு! 5 வருடங்களாக கணக்கு வழக்கு இல்லை! பிரித்தானிய தமிழர் விளையாட்டு கழகம் !

பிரித்தானிய தமிழர் விளையாட்டுக் கழகத்தின் எதிர் காலம் கேள்விக் குறியாகி உள்ளது. ஆண்டுக்கு 50 000 பவுண்களை வரை லாபமீட்டக் கூடிய பிரித்தானிய தமிழ் விளையாட்டுக் கழகத்தின் கணக்கு வழக்குகளில் நட்டம் காட்டப்படுவதாக குற்றம்சாட்டப்படுகின்றது.

துடுப்பாட்ட விளையாட்டுக்கான பந்துகள் வழங்கப்படவில்லை, நடுவர்களுக்கு திகதியிடப்படாமல் வழங்கப்பட்ட காசோலைகள் திரும்புகின்றன, சில போட்டிகளுக்கு மைதானமே ஏற்பாடு செய்யப்படவில்லை. சில இடங்களில் பிரித்தானிய தமிழ் விளையாட்டு கழகத்திற்கு மைதானங்களை வழங்க உரிமை நிறுவனங்கள் மறுக்கின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன் தாயகத்தில் இருந்து வந்த வசந்தன் கிருஸ்ணன் என்பவர் பிரித்தானிய தமிழ் விளையாட்டுக் கழகத்திற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டார். இவர் மட்டுமே பிரித்தானிய தமிழ் விளையாட்டு கழகத்தின் அறியப்பட்ட பொறுப்புடைய ஒருவராக உள்ளார். இவரைத்தவிர அந்த அமைப்பில் வேறு எவரையும் 1200 விளையாட்டு வீரர்களும் 60 விளையாட்டு கழகங்களும் அறிந்திருக்கவில்லை.

ஆனால் இந்த வசந்தன் என்ற பொறுப்பாளரின் பின்னால் பிரித்தானியாவில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நிதி சேகரிப்பு விடயங்களுடனும் தொடர்புடைய தனம் என்பவர் இயங்குவதாக லண்டன்குரலுக்குத் தெரியவருகிறது.

100 000 பவுண் நிதி வருமானத்தையும்  45 000 செலவு தவிர்ந்த லாபத்தையும் பெறக்கூடிய பிரித்தானிய தமிழ் விளையாட்டக் கழகம் நட்டத்தில் உள்ளதாகக் கூறி விளையாட்டுக் கழகங்களின் பல்லாயிரக் கணக்கான பணத்தை காணாமலாக்கி உள்ளது.

1200க்கு மேற்பட்ட விளையாட்டு வீரர்களிடம் இருந்து ஆண்டுக்கு 100 000 பவுண்கள் வரை நிதியைப் பெற்றுக் கொள்கின்ற பிரித்தானிய தமிழ் விளையாட்டுக் கழகம் (British Tamil Sports League) தற்போது நிதிப் பிரச்சினையில் சிக்கி உள்ளது. தங்களுடைய பொறுப்பு ”to develop such a sports organization and leagues set-up where sports and sportsmanship is truly developed and sustained at the same time”, என்று தங்கள் இணையத்தில் தெரிவித்துள்ள அமைப்பின் எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.

அண்மைக் காலமாக பிரித்தானிய தமிழ் விளையாட்டுக் கழகம் தன்னுடைய உறுப்பினர்களுக்கு வழங்கிய உறுதிமொழியில் இருந்தும் கடமையில் இருந்தும் தவறியுள்ளது. விளையாட்டு வீரர்களிடம் இருந்தும் விளையாட்டுக் கழகங்களிடம் இருந்தும் குறித்த காலத்தில் நிதியை வசூலித்த பிரித்தானிய தமிழ் விளையாட்டுக் கழகம் தான் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யத்தவறியுள்ளது.

வாரம் தோறும் விளையாட்டுக் குழுக்களிடையே நடைபெறும் போட்டிகளை ஒழுங்கமைப்பதில் பல தவறுகள் விடப்பட்டு உள்ளது. கிரிக்கட் விளையாட்டில் தேவையான பந்துகள் வழங்கப்படவில்லை. நடுவர்களுக்கு வழங்க வேண்டிய கட்டணம் வழங்கப்படாததால் நடுவர்கள் கடமைக்கு வரத் தவறியுள்ளனர். சில போட்டிகளுக்கு மைதானமே பதிவு செய்யப்படாத சம்பவங்களும் நடைபெற்றுள்ளது. இதன் காரணமாக விளையாட்டுக் கழகங்கள் விளையாட்டு வீரர்கள் வெறுப்படைந்து போயுள்ளனர்.

பிரித்தானிய தமிழ் விளையாட்டு கழகத்தில் 40 துடுப்பாட்ட கழகங்களும் 20 உதைபந்தாட்டக் கழகங்களுமாக 60 விளையாட்டுக் கழகங்கள் 1200 விளையாட்டு வீரர்கள் உள்ளனர்.
அவை ஒவ்வொன்றும் ஆண்டுக்கு பின்வரும் கட்டணங்களைச் செலுத்துகின்றனர்.
விளையாட்டு வீரரின் உறுப்புரிமைக் கட்டணம் 10.00 பவுண்
விளையாட்டுக் கழகத்தின் நுழைவுக் கட்டணம் 605.00 பவுண்
Twenty – 20 துடுப்பாட்ட போட்டிகளுக்கான நுழைவுக்கட்டனம் 170.00 பவுண்
18 துடுப்பாட்ட போட்டிகளுக்கான அம்பயருக்கான கட்டணம் 360.00 பவுண் (ஒரு போட்டிக்கு ஒரு கழகம் 20 பவுண் செலுத்த வேண்டும் 18 போட்டிகளுக்கு)
18 துடுப்பாட்ட போட்டிகளுக்கான 18 பந்துகளுக்கான கட்டணம் 180.00 பவுண் (ஒரு பந்து 10.00 பவுண்)

இவ்வாறு கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு இவற்றுடன் மைதானங்களுக்கான கட்டணமும் வசூலிக்கப்பட்டது. இவ்வாறு ஒவ்வொரு விளையாட்டுக் கழகமும் 1500 பவுண்கள் வரை கட்டணமாகச் செலுத்தி இருந்தனர்.

கட்டணங்களை ஆர்வமுடன் வசூலித்தவர்கள் அதற்கான சேவையை வழங்கவில்லை. இது பற்றி அறிய பிரித்தானிய தமிழ் விளையாட்டுக் கழகத்தின் பொறுப்பாளர் வசந்தன் கிருஸ்ணனுடன் தொடர்புகொள் முயற்சித்த போதும் அது வெற்றியளிக்கவில்லை. (லண்டன் குரல் பதிப்பிற்குச் சென்ற பின் வசந்தன் கிருஸ்ணனுடன் தொடர்புகொள்ள முடிந்தது. அதன் பின்னர் அவர்களுடைய அலுவலகம் சென்று வசந்தன் கிருஸ்ணனைச் சந்தித்தோம். அதன் விபரம் மேலுள்ளது.)

பிரித்தானிய தமிழ் விளையாட்டுக் கழகத்தின் பொறுப்பற்ற செயல் விளையாட்டு வீரர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து வசந்தன் விளையாட்டுக் கழகங்களுக்கு யூலை 10, 2010ல் ஒரு மின்அஞ்சலை அனுப்பி இருந்தார். இம்மின் அஞ்சல் லண்டன் குரலின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

அந்த மின்அஞ்சலில் பிரித்தானிய தமிழ் விளையாட்டுக் கழகம் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை ”As you all aware, we have come across with some logistical problems in our 5th year Cricket league in 2010”, என வசந்தன் குறிப்பிட்டு உள்ளார். அதற்கு தீர்வாக விளையாட்டுக் கழகங்களின் உறுப்பினர்களில் இருந்து
1.    Organisation committee
2.    Team selecting committee
3.    Decision making committee
ஆகிய மூன்று குழுக்களை உருவாக்குவதாகக் குறிப்பிட்டு உள்ளார். ஆனால் இவ்வாறான குழுக்கள் இதுவரை அமைக்கப்பட்டது பற்றி தங்களுக்குத் தெரியாது என லண்டன் குரல் தொடர்புகொண்ட விளையாட்டு கழகங்கள் தெரிவித்தன.

அம்பயர் (நடுவர்)களுக்கு வழங்கப்பட்ட காசோலைகள் வங்கிக் கணக்கில் பணம் இன்றித் திரும்பின. அதனால் நடுவர்கள் வராமல் இருப்பது ஒரு பிரச்சினையாக இருந்தது. பந்துகளும் வழங்கப்படுவதில்லை. அதனால் எதிர்காலத்தில் நடுவருக்கான கொடுப்பனவையும் பந்துகளை வாங்கும் பொறுப்பையும் கழகங்களுக்கே விட்டுவிடுவதாக வசந்தன் தன் மின் அஞ்சலில் குறிப்பிட்டு உள்ளார். கடந்த கால போட்டிகளில் நடுவருக்கான பணத்தைக் கட்டியும் நடுவர் வராது இருந்திருந்தால் அத்தொகையை அடுத்த ஆண்டு கண்டனத்தில் கழிப்பதாகவும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

இதற்கு முன்னர் இவ்வாண்டு நடுப்பகுதியில்  விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு நிதி நெருக்கடி இருப்பதாகவும் அதற்காக விளையாட்டுக் கழகங்கள் 500 முதல் 1500 பவுண் வரை முற்பணமாகச் செலுத்தினால் யூன் 20 2010 ரூனமன்ற் முடிவில் அப்பணம் கையளிக்கப்படுவதுடன் அடுத்த ஆண்டு அவர்கள் கட்ட வேண்டிய லீக் கட்டணத்தில் அவர்கள் செலுத்திய தொகை கழிக்கப்படும் எனவும் பிரித்தானிய தமிழ் விளையாட்டுக் கழகம் சார்பில் வசந்தன் கேட்டு இருந்தார்.  இதற்கு சில விளையாட்டுக் கழகங்கள் செவிசாய்த்து பணத்தைச் செலுத்தியும் இருந்தன.

இது தொடர்பாக மகாஜநாக் கல்லூரியின் விளையாட்டுக் கழகத்துடன் தொடர்பு கொண்ட போது தாங்கள் கழகமாக பணம் செலுத்தவில்லை என்றும் தங்களுடைய இரு விளையாட்டு வீரர்கள் ஆளுக்கு 750 பவுண் வழங்கி 1500 பவுண்களை பிரித்தானிய தமிழர் விளையாட்டுக் கழகத்திற்கு செலுத்தியதாக புவனேந்திரன் தெரிவித்தார். வேறு சில கழகங்களும் இவ்வாறு முற்பணத்தைச் செலுத்தி இருந்தனர். ஆனால் யூன் 20 ரூனமன்ற் நிறைவு பெற்று இரு மாதங்கள் ஓடிய நிலையிலும் இப்பணம் திருப்பி வழங்கப்படவில்லை. அதுவே வசந்தன் மின் அஞ்சல் அனுப்ப வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியது. இருந்தும் வசந்தன் இதனை நடுவர்களுக்கு கொடுக்கப்படுகின்ற ஒரு 20 பவுண் பிரச்சினையாக உண்மையை மறைத்துள்ளார்.

வசந்தனுடைய மின் அஞ்சலுக்கு கடுமையான பதில்களை சில விளையாட்டு கழகங்கள் அனுப்பி வைத்தள்ளன. அவற்றில் சில லண்டன்குரலின் கவனத்திற்கும் அனுப்பப்பட்டு இருந்தது. யூலை 12 2010ல் கோட்டைமுனை விளையாட்டுக் கழகம் சார்பாக கார்த்திக் இவ்வாறு எழுதி இருந்தார். ”Hi Vasanthan, We are also in the same position, Just give us the money back and we have no intention of playing in your league for next year”.
 
இது பற்றி RLSSC விளையாட்டுக் கழகம் சார்பில் ரஞ்சன் எழுதிய மின் அஞ்சலில் ”Hi Vasanthan, Our club not accepting all this rubbish after five years. What happened to our money we already paid to you?” எனக் கேள்வி எழுப்பி உள்ளனர்.

பிரித்தானிய தமிழ் விளையாட்டுக் கழகம் விளையாட்டுப் போட்டிகளை ஒழுங்கமைக்க லண்டனை தென்கிழக்கு, தென்மேற்கு வடகிழக்கு வடமேற்கு எனப் பிரித்து நால்வரை நியமித்துள்ளனர். அவர்கள் விபரம்
Southeast – Para (Lewshiam CC)
Southwest – Ragulan (Bloomfield CC)
Northeast – Sugumar (Five Star CC)
Northwest – Gobi (Tamil Union CC)

இவர்களில் லூசியம் விளையாட்டுக் கழகம் பரா, ஃபைவ் ஸ்ரார் விளையாட்டு கழகம் சுகுமார் ஆகியோருடன் தொடர்பு கொள்ள முடிந்தது. இவர்கள் பிரித்தானிய தமிழர் விளையாட்டு கழகம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை உறுதிப்படுத்தினர். தங்கள் பகுதிகளில் உள்ள கழகங்கள் அதிருப்தி அடைந்துள்ளதையும் தெரியப்படுத்தினர்.

கடந்த ஐந்த ஆண்டுகளில் எப்போதாவது கணக்கு விபரங்கள் விளையாட்டு கழகங்களுக்கு காட்டப்பட்டதா எனக் கேட்ட போது பராவும் சுகுமாரும் இல்லையென்றே பதிலளித்தனர்.
பரா தனது பதிலில் ‘முதல் மூன்று வருடமும் பிரச்சினைகள் எதுவும் எழவில்லை. இப்போது தான் பிரச்சினைகள் எழுந்தள்ளது’ என்றார். அவர் மேலும் கூறுகையில் ‘எனக்கும் இந்த பண நிர்வாக விடயங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. ஒரு உதவியாக போட்டிகளை ஒழுங்குபடுத்தக் கேட்டார்கள் செய்கிறேன்’ என்றார். ‘இந்த வருடமே பணக் கஸ்டம் என்றால் ஏற்கனவே சில கிளப்புகளிடம் பணம் பெற்றுள்ளதால் அடுத்த வருஸம் எப்படி இருக்குமோ தெரியாது?’ என்றும் பரா சந்தேகத்தை வெளியிட்டார்.

சுகுமார் பதிலளிக்கையில் ‘அப்போது பணம் ஊருக்கு அனுப்பப்படுவதாகச் சொன்னார்கள். நாங்களும் யாரும் கணக்கு கேட்க விரும்புவதில்லை. இப்போது அங்கு பணம் அனுப்ப இவர்களுக்கு வழியில்லை. என்ன நடக்கிறது என்று கேட்கிறார்கள். பாஸ்ட் இஸ் பாஸ். இனி சரியாகச் செய்ய வேணும் என்று கேட்கிறார்கள். சில கிளப்புகள் கடுமையாக இருக்கிறார்கள். தாங்கள் அடுத்த வருடம் விளையாட வர மாட்டார்கள் என்கிறார்கள்’ என்றார். ‘இந்த வருசம் கிளப்புகள் பணம் செலுத்திவிட்டினம். அடுத்த வருஸம் அவர்கள் குறைந்த தொகையே கட்ட வேண்டி இருக்கும். அடுத்த வருஸம் எப்படிச் சமாளிப்பார்கள் என்று தெரியாது’ என சுகுமாரும் பரா போன்றே சந்தேகம் எழுப்பினார்.

விளையாட்டுப் போட்டிக்கான செலவுகள் அனைத்தும் 60 விளையாட்டுக் கழகங்களிடம் இருந்தும் பெறும் வேறுவேறு கட்டணங்களில் இருந்து பெறப்படுகிறது. மேலும் விளையாட்டுவிழா நுழைவுக் கட்டணம் செவனியர் மூலம் திரட்டப்படும் விளம்பரப் பணம், ஸ்பொன்சேர்ஸ் என்று பன்முகப்பட்ட வருவாய்கள் பிரித்தானிய தமிழ் விளையாட்டுக் கழகத்திற்கு உண்டு. இவற்றைவிடவும் விளையாட்டுக் கழகத்தின் நுழைவுக்கும் விளையாட்டு வீரர்களின் உறுப்புரிமைக்கும் பெறப்படும் கட்டணம் 750 பவுண் பிரித்தானிய தமிழ் விளையாட்டுக் கழகத்திற்கு உரியது. அதாவது ஆண்டுக்கு 45000 பவுண் செலவு தவிர்ந்த பணம்.  இந்நிலையில் பிரித்தானிய விளையாட்டுக் கழகம் நிதிப் பிரச்சினைக்கு உள்ளானதற்கான காரணங்கள் மர்மமானதாகவே உள்ளது. அதற்கான காரணங்கள் தெரியாத நிலையிலேயே உறுப்புரிமை செலுத்திய விளையாட்டு வீரர்கள் உள்ளனர்.

லண்டனில் பிரித்தானிய தமிழ் விளையாட்டுக் கழகத்திற்கு முன்னரேயே இதில் தேர்ச்சி பெற்ற அமைப்புகள் இருந்தன. கிழக்கு லண்டனில் ஸ்கந்தமூர்த்தி கிரிக்கட் கழகங்களை இணைத்து விளையாட்டுப் போட்டிகளை பல ஆண்டுகள் வெற்றிகரமாக நடாத்தி வந்தார்.

தாயக மக்களுக்கு உதவுகின்றோம் தமிழ் கழகங்களில் வேறு இனத்தவர்கள் அனுமதிக்கப்பட முடியாது என்ற விடயங்களை முன் வைத்து பிரித்தானிய தமிழ் விளையாட்டுக் கழகம் விளையாட்டுக் கழகங்களை தன் பக்கம் வளைத்தப் போட்டது. அதன் பின்னர் தங்கள் விதிமுறைகளை தேவைக்கு ஏற்ப வளைத்தனர். தமிழ் கழகங்களில் வேறு இனத்தவர்கள் இருக்கலாம் ஆனால் குறிப்பிட்ட எண்ணிக்கையானவர்கள் என மட்டுப்படுத்தப்பட்டது. பின்னர் தாய் அல்லது தந்தை தமிழராக இருக்க வேண்டும் என்ற செருகல்கள் அனைத்தும் புகுத்தப்பட்டது. இருந்தும் தாயக மக்களுக்கு சில உதவிகள் கிடைக்கும் என பல விடயங்களும் பொறுத்துக் கொள்ளப்பட்டது. இப்போது நிலைமை முற்றாக மாறி உள்ளது.

தமிழ் பாடசாலைகள் விளையாட்டுக் கழகம் (Tamil Schools Sports Association – TSSA) கடந்த 19 ஆண்டுகளாக இயங்கி வருகின்றது. இது பற்றி அவ்வமைப்பின் தலைவர் ந கெங்காதரன் லண்டன்குரலுக்குத் தெரிவிக்கையில், ‘TSSA என்றுமே விளையாட்டு விழாக்களை போட்டிகளை நடாத்தி நட்டப்பட்டதில்லை’ எனத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் ‘ஒவ்வொரு ஆண்டும் வரவு செலவு அறிக்கை கழகங்களின் பார்வைக்கு இருக்கும். பெறப்பட்ட லாபத்தில் மூன்றில் இரு பங்கு போட்டிகளில் கலந்துகொண்ட பாடசாலைகளின் பழைய மாணவர் சங்கங்களுக்கு பிரித்து வழங்கப்படும். அதனை அவர்கள் தங்கள் பாடசாலை வளர்ச்சிக்குப் பயன்படுத்தவார்கள். மூன்றில் ஒரு பங்கு TSSA இன் வளர்ச்சிக்கு அதன் வைப்பிலிடப்படும்’ எனத் தெரிவித்தார்.

பிரித்தானிய தமிழர் விளையாட்டுக் கழகம் போட்டிகளை நடாத்திய அதே காலப்பகுதியில் தனிப் பாடசாலையாக தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி தங்கள் 150 ஆண்டு விழாவைக் குறிக்கும் விளையாட்டுப் போட்டிகளை ஏற்பாடு செய்திருந்தது. இந்த விளையாட்டுப் போட்டிகளிலும் தாங்கள் சில ஆயிரம் பவுண்களை யாவது லாபமீட்டியதாக அக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் முக்கிய உறுப்பினர் லண்டன் குரலுக்குத் தெரிவித்தார். தங்கள் வரவு செலவுக் கணக்கு வரும்போது உண்மையான தொகை தெரியவரும் எனத் தெரிவித்த அவர், பாடசாலையின் 150வது விழா என்பதால் தாங்கள் செலவுகளை சற்று அதிகமாகவே மேற்கொண்டதாவும் கூறினார்.

லண்டன்குரலுக்கு கிடைக்கின்ற தகவல்களும் ஏனைய விளையாட்டுக் கழகங்களின் அனுபவங்களும் பிரித்தானிய தமிழ் விளையாட்டுக் கழகத்தில் பாரதூரமான நிதி நிர்வாகச் சீர்கேடுகள் இடம்பெற்றிருப்பதையே காட்டி நிற்கின்றது.

ததேகூ கட்டுப்பாட்டில் உள்ள வவுனியா நகரசபை தொடர்ந்தும் ஸ்தம்பிதம் – தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உள்முரண்பாடுகளே காரணமா? : விஸ்வா & த ஜெயபாலன்

Linganathan_giving_speechவவுனியா நகரசபையின் மாதாந்த கூட்டத்தை அதன் தலைவர் தலைவர் எஸ் என் ஜி நாதன் நேற்று (14 செப்ரம்பர் 2010) செவ்வாய் கிழமை இடை நிறுத்தியதைக் கண்டித்து நகரசபை உறுப்பினர்கள் பத்துப்பேரும் இணைந்து நகரசபைத் தலைவருக்கு எதிராக போராட்டத்திலீடுபட்டனர். வவுனியா நகரசபைத் தலைவர் எஸ் என் ஜி நாதன் இன் ஜனநாயக விரோதப் போக்கைக் கண்டிப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். நகரசபை மைதானத்தில் கடும் வெயிலில் இரண்டு மணிநேரம் இப்போராட்டம் நடைபெற்றது.

வவுனியா நகரசபை தொடர்பான முன்னைய பதிவுகள்:

”ஈழம்(தமிழ்) என்ற அடையாளத்தை இல்லாமல் பண்ணவே முயற்சிக்கிறார்கள். ” ஜி ரீ லிங்கநாதன் வவுனியா நகரசபை உறுப்பினர். – நேர்காணல் : ரி சோதிலிங்கம்

”வெளியே போங்கடா சக்கிளிய நாயலே” வவுனியா நகரசபைத் தலைவரின் கூற்றும் இன்னமும் வீச்சுடன் இருக்கும் சாதிய மனோநிலையும்

ரிஎன்ஏ யின் வவுனியா நகரசபையின் தலைமை மீது ஊழல் மோசடி குற்றச்சாட்டு – எட்டு நகரசபை உறுப்பினர்கள் கையெழுத்திட்டு அறிக்கை

இது பற்றி தேசம்நெற் இணையத்திற்கு கருத்துத் தெரிவித்த நகரசபை உறுப்பினர் ஜி ரீ லிங்கநாதன் குறைந்தபட்ச ஜனநாயக நடைமுறையைக் கூடப் பின்பற்ற நகரசபைத் தலைவர் தலைவர் எஸ் என் ஜி நாதன் தவறிவிட்டதாகக் குற்றம்சாட்டினார். அவர் மேலும் தெரிவிக்கையில் விசேட நகரசபைக் கூட்டத்தை கூட்டும்படி தாங்கள் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அவர் தன்மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்டதும் கூட்டத்தை இடைநிறுத்திவிட்டு வெளியேறியதாகத் தெரிவித்தார்.

மேலும் நகரசபை உறுப்பினர்களின் கூட்டத்தைக் கூட்டிவிட்டு அதற்கு முன்னதாகவே ஆயுதம் தாங்கிய பொலிசாரையும் அங்கு வரவழைத்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒரு அங்கமாகச் செயற்படும் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த நகரசபைத் தலைவர் தலைவர் எஸ் என் ஜி நாதன் ஜனநாயக விரோதப் போக்கை கடைப்பிடிப்பதுமல்லாமல் ஆயுதம் தாங்கிய பொலிஸாரை வரவழைத்து நகரசபை உறுப்பினர்களை அச்சுறுத்தவும் முற்பட்டு உள்ளார். அதுவே நகரசபை உறுப்பினர்கள் சீற்றமடைவதற்குக் காரணமானது. இவ்வாறான ஜனநாயக விரோதப் போக்குகளைத் தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது என்பதால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நகரசபை உறுப்பினர்கள் 10 பேரும் போராட்டத்தில் குதித்தனர்.

செப்ரம்பர் 14 கூட்டத்தில் நகரசபைத் தலைவர் மீது நகரசபை உறுப்பினர்கள் வைத்த குற்றச்சாட்டுகள் பற்றி விவாதிப்பதாகவும் நகரசபைத் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவருவதாகவும் இருந்தது. தன்மீதான குற்றச்சாட்டுகளை முற்றாகப் புறக்கணித்த நகரசபைத் தலைவர் எஸ் என் ஜி நாதன் 72 நிமிடங்களாக தன்னைப் பற்றிய சுயபுராணத்தில் ஈடுபட்டதாகவும் இது கூட்டத்தைக் கூட்டுவதற்கு கோரிக்கை வைத்த நகரசபை உறுப்பினர்களை ஏமாற்றுவதாக அமைந்ததாகவும் தெரியவருகிறது.

இந்நிலையில் இடையே குறுக்கிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு நகரசபை உறுப்பினர் செ சுரேந்திரன் நகரசபைத் தலைவர் எஸ் என் ஜி நாதனுக்கு எதிராக நம்பிக்கையிலாப் பிரேரணையைக் கொண்டு வந்துள்ளார்.  இந்நம்பிக்கையில்லாப் பிரேரணையை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நகரசபை உறுப்பினர் இ சிவகுமாரன் வழிமொழிந்தார். இதனைப் பொறுக்காத நகரசபைத் தலைவர் எஸ் என் ஜி நாதன் கூட்டத்தை இடைநிறுத்திவிட்டு வெளியேறினார்.

நகரசபை உறுப்பினர்கள் நகரசபை மைதானத்தில் தங்க போராட்டத்தை ஆரம்பித்ததும் ஊடகங்களில் செய்தி பரவியது. தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்திஆனந்தன் வினோநோகராதலிங்கம் ஆகியோர் நகரசபை உறுப்பினர்களைச் சந்தித்து சமரசம் செய்ய முற்பட்டனர். அடுத்த ஒரு மாதத்திற்குள்ளாக தங்களது கோரிக்கைக்கு சாதகமான பதில் கிடைக்காவிட்டால் 10 நகரசபை உறுப்பினர்களுக்குப் 10 000 மக்களைக் கொண்டு வந்து போராடுவோம் என நகரசபை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

தாங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுடன் சந்தித்து இதனை ஒரு முடிவுக்குக் கொண்டுவருவதாக சிவசக்தி ஆனந்தனும் வினோதரலிங்கமும் நகரசபை உறுப்பினர்களுக்கு உறுதி அளித்துள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை ஒரு மாதத்திற்குள் அதனைச் செய்யத் தவறினால் தாங்களும் நகரசபை உறுப்பினர்களுடன் சேர்ந்து போராடுவோம் என சிவசக்திஆனந்தன் தெரிவித்ததாக ஜி ரி லிங்கநாதன் தேசம்நெற்க்கு தெரிவித்தார்.

நகரசபை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அதிகாரத்தில் உள்ளது. அதன் தலைவர் எஸ் என் ஜி நாதன் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவர். மேலும் தமிழரசுக் கட்சியின் மாவை சேனாதிராஜாவுக்கு நெருக்கமானவர். எஸ் என் ஜி நாதனை மாற்றாக இன்னுமொருவரை நியமிக்க தமிழரசுக் கட்சியின் பெயர் வரிசையில் குறிப்பிடத்தக்கவர்கள் எவரும் இல்லை. அப்பதவியை தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள ரெலோவிற்கோ ஈபிஆர்எல்எப் சுரோஸ் அணிக்கோ விட்டுக்கொடுக்கவும் தயாராக இல்லை.

வவுனியா நகரசபை கடந்த 10 மாதங்களாக செயற்படாமல் இருப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள உள்முரண்பாடுகள் காரணமா என்ற சந்தேகங்கள் எழுப்பப்பட்டு உள்ளது. அண்மைய போராட்டமும் அதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நகரசபை உறுப்பினர்களே தமது கட்சியைச் சேர்ந்த நகரசபைத் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்து போராட்டத்திலும் ஈடுபட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியா நகரசபை உறுப்பினர்கள் விபரம்:
தமிழ் தேசியக் கூட்டமைப்பு (ரிஎன்ஏ) : எஸ். என். ஜி. நாதன் (நகரசபைத் தலைவர்), மு. முகுந்தரதன் (உப தலைவர்),  இ. சிவகுமாரன் செ. சுரேந்திரன், ஐ. கனகசபை
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (எஸ்எல்எம்சி) : அப்துல் லத்தீப் முனவ்பர்
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (டிபிஎல்எப்) : ஜி.ரி.லிங்கநாதன், சு.குமாரசாமி, க.பார்த்தீபன்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி (யுபிஎப்ஏ) : எம் எஸ் அப்துல்பாரி, ஜெ.ஏ.டி லலித்ஜெயசேகர

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பியசேன வின் நேர்காணலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புப் பற்றி மிகக் காட்டமான விமர்சனத்தை வைத்திருந்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள உறுப்பினர்கள் அதிலிருந்து வெளியேறினால் அரசியல் அநாதைகளாக்கப்பட்டு விடுவார்கள் என்றும் அவர்களுக்கு என்று அரசியல் அந்தஸ்தோ கெளரவமோ இல்லையென்றும் பியசேன குற்றம்சாட்டி இருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்தக் காரணம் ஒன்றே பல்வேறு முரண்பாடுகள் இருந்த போதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை குலையாமல் வைத்துள்ளது. ஆனால் இந்த முரண்பாடுகளால் வவுனியா நகரசபை போன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு ஒரு இடைஞ்சலாகவே ஆகியுள்ளது.

குகநாதன் கைது – கடத்தலில் அருள் சகோதரர்களுடன் கைகோர்த்த தமிழ்தேசியம் – டான் ரிவி உரிமையாளர் குகநாதன் கடத்தல் – கைது விவகாரம் : த ஜெயபாலன்

குகநாதன் கைது – கடத்தல் விவகாரம் அரசியல் பின்னணியுடன் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவருகின்றது. தமிழகத்தில் உள்ள தமிழ் தேசியவாதிகளினது செல்வாக்குடன் எஸ் எஸ் குகநாதனை தடுத்து வைத்து அவரிடம் இருந்து பணம் பறிக்கப்பட்டு உள்ளது. இக்கைது கடத்தல் நாடகத்தில் வை கோ வினதும் நெடுமாறனினதும் நெருக்கமான சட்டத்தரணிகள் ஈடுபட்டு இருந்துள்ளனர். அருள் சகோதரர்களின் ஊரவரும் நண்பரும் பல்லாயிரம் ஈரோக்கள் காணமல் போய்விட்டது என்று கணக்குக் காட்டியவருமான கஸ்பாரும் இச்சம்பவத்தடன் தொடர்புபட்டிருந்ததாக எஸ் எஸ் குகநாதன் தேசம்நெற்க்கு தெரிவித்தார்.

குகநாதனை விடுவிக்க 20000 பவுண்ட் (15 லட்சம் இந்திய ரூபாய்) வழங்கப்பட்டது. இலங்கையில் இருந்து உண்டியல் செய்யும் ஒரு வர்த்தகர் மூலம் அனுப்பப்பட்ட பெரும்பகுதி பணத்தை கடன்பட்டு இப்போது செலுத்தி வருவதாக குகநாதன் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

எஸ் எஸ் குகநாதன் பல்வேறு வர்த்தக நடவடிக்கைகளிலும் பணப் பரிமாற்றத்திலும் ஈடுபட்டு இருந்த போதும் ‘அவரின் குடும்பத்தாரிடம் அவருடைய குறைந்தபட்ச தேவைகளை நிறைவேற்றவே நிதி இருந்ததில்லை’ என எஸ் எஸ் குகுகநாதனின் நண்பரும் அவருடைய விவகாரத்தை சுமூகமாக தீர்க்க முற்பட்ட ஒருவர் தெரிவித்து இருந்தார். எஸ் எஸ் குகநாதன் மீது பல்வேறு பணப் பரிமாறல் குற்றச்சாட்டுகள் இருந்தபோதும் அவர் இலங்கை அரசுக்கு ஆதரவாக செயற்பட்டு பணம் புரட்டுகிறார் எனக் கூறப்பட்ட போதும் அவரிடம் பணப் புழக்கம் இருக்கவில்லையென குகநாதனை விடுவிக்க 500 பவுண்களை தனது பங்காக செலுத்திய நண்பர் ஒருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

குகநாதனை விடுவிக்க செலுத்திய இத்தொகையை கட்டி முடிக்க சில ஆண்டுகள் ஆகலாம் என திருமதி குகநாதன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். ஏற்கனவே ஏற்பட்ட இழப்புகளால் இருக்கும் கடன்சுமையை இது மேலும் அதிகரித்துள்ளதாகவும் அவர் தனது வேதனையைத் தெரிவித்தார்.

குகநாதனை விடுவிப்பது தொடர்பாக புலம்பெயர் குழுவில் சென்ற சிலர் தமிழக முதல்வரின் மகள் கனிமொழி உடன் நெருக்கமானவர்கள் மூலம் முயற்சி செய்ததாகவும் தற்போது தெரியவருகிறது. ஆனால் குகநாதன் விவகாரத்திற்கு பின்னால் இருந்தவர்களின் பலத்தை இவர்களால் மேவ முடியாததால் இம்முயற்சி கைவிடப்பட்டது. அதனால் பணத்தைக் கொடுத்துவிட்டு வெளியேறுவதே பாதுகாப்பானது என இவர்கள் குகநாதனின் மனைவிக்கு தெரிவித்துள்ளனர்.

அதேசமயம் இவ்விவகாரம் இலங்கை அரசின் உயர்மட்டத்திற்கு  தெரியப்படுத்தப்பட்டதையடுத்து இலங்கை அரசு டெல்லியில் உள்ள தனது தூதராலயம் ஊடாக அழுத்தங்களை வழங்க ஆரம்பித்தது. ஆரம்பத்தில் குகநாதன் தங்களிடம் இல்லையென்றே தமிழக பொலிஸில் இருந்து தகவல் வழங்கப்பட்டதாக தெரியவருகின்றது. அச்சமயத்தில் குகநாதனின் உயிருக்கு ஆபத்து நேர்ந்து இருக்கலாம் அல்லது உயிராபத்து நேரலாம் என்ற அச்சம் டெல்லி – கொழும்பு உயர் மட்டங்களில் இருந்துள்ளது.

2008 மார்ச் இறுதிப் பகுதியில் இலங்கைத் திரைப்பட இயக்குநர் துசார பீரிஸ் தமிழத்தில் உள்ள தமிழ் தேசியவாதிகளால் கடுமையாகத் தாக்கப்பட்டு பொலிஸாரின் தலையீட்டின் பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டமை தெரிந்ததே.

எஸ் எஸ் குகநாதன் விவகாரத்திலும் ‘இலங்கை அரச ஆதரவாளர் ஒருவரைப் பிடித்துவிட்டோம் என்ற மகிழ்ச்சியிலேயே அவர்கள் இருக்கின்றனர்’ எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது. தனிப்பட்ட விடயத்தையும் அரசியலுடன் இணைத்து அதனை நியாயப்படுத்துவதற்கான காரணங்களையும் அருள் சகோதரர்கள் மேற்கொண்டு உள்ளனர்.

அவர்களின் உரையாடல்களில் ‘அரச உளவாளியைக் கைதுசெய்துள்ளோம் என்று ஒரு இணையத்தைத் திறந்து விட்டால் புலம்பெயர்ந்த தமிழர்கள் இதிலும் பார்க்க பல லட்சங்களைத் தருவார்கள்’ என்றெல்லாம் உரையாடப்பட்டு உள்ளதாக எஸ் எஸ் குகநாதன் தேசம்நெற்க்கு தெரிவித்தார். ’20 000 பவுண்களை வெஸ்ற்றன் யூனியன் ஊடாக அனுப்புகிறோம். இவனை விட வேண்டாம் என்றெல்லாம் தொலைபேசிகள் வந்தது’ என்றும் எஸ் எஸ் குகநாதன் தெரிவித்தார்.

‘அவர்களிடம் உள்ள விடியோவை அவர்கள் உண்மையானவர்கள் என்றால் வெட்டிக்கொத்தாமல் வெளியில் விட்டால் உண்மைகள் பெரும்பாலும் தானே வெளிவரும்’ என்று தெரிவித்த குகநாதன் தமிழக கொமிஸ்னர் அலுவலகத்திற்கு முன்னுள்ள ஹொட்டலில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் ரூம் எடுத்து தங்கி இருந்ததாகவும் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக திருமதி குகநாதனின் ஒலிப்பதிவு ஒன்றை இனியொரு இணையத்தளம் வெளியிட்டு இருந்தது. இதன் ஊடக நியாயம் பற்றி தேசம்நெற் இல் கேள்வி எழுப்பி இருந்தோம். அதற்கு இனியொரு ஆசிரியர் சபாநாவலன் திருமதி குகநாதனின் அனுமதியுடனேயே அதனை வெளியிட்டதாகக் கூறியிருந்தார்.

ஆனால் அதனை திருமதி குகநாதன் முற்றாக மறுத்துள்ளார். தன்னிடம் இனியொரு ஆசிரியர் அவ்வாறு எந்த அனுமதியையும் பெறவில்லை என்றும் இது பதிவு செய்யப்படுவது தெரிந்திருந்தால் தான் அவருடன் பேசியிருக்கவே மாட்டேன் என்றும் தெரிவித்தார். தன்னை நடுஇரவு தூக்கத்தில் எழுப்பி அதனைப் பதிவு செய்து தனது அனுமதியின்றியே அவர் அதனைப் பிரசுரித்து உள்ளதாகவும் திருமதி குகநாதன் குற்றம்சாட்டினார்.

தான் எந்த விவகாரத்திலும் முன்னிலைக்கு வரவிரும்புவதில்லை எனக் குறிப்பிட்ட அவர் இவ்விவகாரத்தில் தன்னையும் தங்களது நோக்கங்களுக்காக பயன்படுத்துவதாக வேதனைப்பட்டார்.

இச்சம்பவம் தமிழ் தேசியத்திற்கு எதிரானவர்கள் புலிகள் மீது விமர்சனம் உடையவர்களை தமிழகத்தில் ஆதிக்கம் பெற்றுள்ள தமிழ் தேசியவாத சக்திகள் தங்கள் சுயலாபங்களுக்கு பயன்படுத்தலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அரசுக்கு ஆதரவானவர்களுக்கு எதிராக செயற்படுகிறோம் என்ற அரசியல் மூலம் தமிழக மார்க்ஸிய அமைப்புகளிடையே செல்வாக்குப் பெறவும் இதனைச் சிலர் பயன்படுத்தலாம் என்ற நிலையும் இப்போது ஏற்பட்டு உள்ளது.

._._._._._.

டான் ரிவி உரிமையாளர் குகநாதன் – அருள்சகோதரர்கள்: கடத்தல் – கைது விவகாரம்: ‘இது ஒரு சட்டபூர்வமான கடத்தல்’ எஸ் எஸ் குகநாதன்

Kuganathan_S_S_Dan_TV‘மாற்று அரசியலுக்கான உரையாடல் வெளி!’ ஏன்று ஆரம்பித்த இனியொரு இணையம் தற்போது டான் தொலைக்காட்சி ஊடக உரிமையாளரும் வர்த்தகருமான எஸ் எஸ் குகநாதன் கைது செய்யப்பட்டாரா? அல்லது கடத்தப்பட்டாரா?: என்ற விவாதத்திற்கான வெளியாகி நிற்கின்றது. தான் கைது செய்யப்பட்டதாகவும் சொல்ல முடியாது, கடத்தப்பட்டதாகவும் சொல்லிவிட முடியாது. இது கைது பாதி, கடத்தல் பாதி இரண்டும் சேர்ந்து ‘சட்டப்படி கடத்தப்பட்டேன்’ என்று தெரிவிக்கிறார். மேற்படி கைதை அல்லது கடத்தலை முன்னின்று மேற்கொண்ட அருள் சகோதரர்கள் (அருள்செழியன் – அருள்எழிலன்) இது முற்றிலும் சட்டப்படி மேற்கொண்ட நடவடிக்கை என்றும் எஸ் எஸ் குகநாதன் தங்களால் இந்தியாவுக்கு வரவழைக்கப்பட்டு பொலிஸாரினால் சட்டப்படி கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.

இவ்விவகாரம் தொடர்பாக அருள் சகோதரர்கள் சபாநாவலன் ஆகியோரின் பதிவுகளை முழுமையாகக் காண:

“Fake Encounter ரயாகரன்” – எமது சமூகத்தின் புரையோடிப்போன புண்கள் : சபா நாவலன் inioru.com/?p=16707

குகநாதன் – நடந்தது என்ன..? : குகநாதன் – நடந்தது என்ன..? inioru.com/?p=16752

இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் அனைவரும் ஊடகவியலாளர்கள்.  எஸ் எஸ் குகநாதனால் குற்றம்சாட்டப்படும் அருள் சகோதரர்களில் ஒருவரான அருள்எழிலன் மற்றும் சபாநாவலன் ஆகியோர் இனியொரு இணையத்தளதின் முக்கியஸ்தர்கள். முன்னையவர் இனியொரு தளத்தின் முக்கிய கட்டுரையாளர். பின்ணையவர் இனியொருவின் ஆசிரியர். இவர் பிரித்தானியாவில் உருவாக்கப்பட்ட புதிய திசைகள் அமைப்பினதும் முக்கிய உறுப்பினர். சம்பந்தப்பட்டவர்களின் அரசியல் பின்னணி காரணமாகவும் பெரும்தொகை (15 லட்சம் இந்திய ரூபாய்கள்) கைமாறப்பட்டு உள்ளதாலும் இவ்விடயம் அரசியல் முக்கியத்துவம் உடையதாகவும் மாறி உள்ளது. மேலும் அருள் சகோதரர்களில் மற்றையவர் அருள்செழியன் தமிழகத்தின் முன்னணி ஊடகங்களில் பணியாற்றியவர். தமிழீழ விடுதலைப் புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கத்தை நேர்காணுவதற்காக லண்டன் வந்திருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குகநாதன் தனக்குத் தரவேண்டிய வஞ்சகச் சூழ்ச்சியால் ஏமாற்றிய பலலட்சம் ரூபாய்களை அவரிடம் இருந்து பெறவும் அவருக்கு சட்டப்படி தண்டனை வாங்கிக் கொடுக்கவுமே தான் சட்டப்படி குகநாதனைக் கைது செய்யும் சட்ட நடவடிக்கையில் ஈடுபட்டதாக அருள்செழியன் தெரிவித்திருந்தார். இக்கைது விவகாரத்தின் பிரதான கதாநாயகனும் இவர்தான். ‘’வாழ்வின் ஒட்டு மொத்த சேமிப்புகளையும் குகநாதனிடம் இழந்த ஒருவரான அருள்செழியன் அவரது தனிப்பட்ட திட்டங்களினாலும் சட்ட ரீதியான போராட்டங்களினாலும் மட்டுமே குகநாதனைப் பிடித்தார். இதற்கும் வேறு எவர் ஒருவருக்கும் எந்த தொடர்புகளும் இல்லை.’’ என்கிறார் அருள்எழிலன்

தன்மீதான இக்குற்றச்சாட்டுக்களை முற்றாக மறுத்துள்ள குகநாதன் தேசம்நெற் க்கு வழங்கிய நேர்காணலில் அருள்சகோதரர்களின் அரசியல் செல்வாக்கு அதன் மூலமான அதிகார துஸ்பிரயோகம் ஆகியவற்றினைப்  பயன்படுத்தி அந்நிய மண்ணில் தன்னை சட்டப்படி கடத்திச் சென்றதாகத் தெரிவிக்கின்றார். இக்கடத்தல் சம்பவம் பற்றி இனியொரு இணையத்தள ஆசிரியர் சபாநாவலன் எழுதிய பதிவு ‘அப்பட்டமான பொய்’ என்றும் தெரிவிக்கின்றார். ‘’குகநாதன் தான் பெருந்தொகையான பணம் கொடுக்க வேண்டியிருப்பதாகவும் ஆனால் அதனைக் கொடுப்பதற்கு தன்னிடம் போதிய வசதிகள் இல்லை என்றும் என்னை அவர்களை சமாதானப்படுத்துமாறும் கேட்டுக்கொண்டார்’’ அதனாலேயே தான் இவ்விவகாரத்தில் தலையிடவேண்டி ஏற்பட்டதாக இனியொரு ஆசிரியர் சபாநாவலன் தனது இணையத்தில் பதிவுசெய்து உள்ளார். எதேச்சையாக அருள்எழிலனுக்கு போன் செய்தபோது அவர் குகநாதனிடம் தொலைபேசியைக் கொடுத்து கதைக்கச் சொன்னபோதே இத்தொடர்பு ஏற்பட்டதாகவும் சபாநாவலன் எழுதியுள்ளார்.

ஆனால் எஸ் எஸ் குகநாதனின் வாக்கு மூலம் அதற்கு முற்றிலும் முரணாக உள்ளது. சட்டப்படி கடத்தி வைக்கப்பட்ட தன்னிடம் கேட்கும் பணத்தைக் கொடுத்துவிட்டு தப்பிக்கொள்ளுங்கள் என சபாநாவலன் கூறியதாக எஸ் எஸ் குகநாதன் தெரிவிக்கின்றார். எஸ் எஸ் குகநாதனின் இந்த சட்டப்படியான கடத்தலுடன் சபாநாவலனும் தொடர்புபட்டதாகவும் சட்டப்படி கடத்தியவர்கள் பணத்தைப் பெறுவதற்கு ஏதுவாக பொறுப்பு நிற்கக் கூடியவர்களை சபாநாவலனே முன்மொழிந்ததாகவும் குகநாதன் குற்றம்சாட்டுகின்றார்.

இவ்விவகாரம் இவ்வாறான வாதப் பிரதிவாதத்தில் நிற்க அருள் சகோதரர்கள் இவ்விடயத்தை நாவலாக வெளியிடப் போவதாக அறிவித்தனர். தற்போதே தங்களுக்கு நாவலின் பிரதிகளுக்கான கட்டளைகள் ஆயிரக்கணக்கில் வந்து குவிவதாகவும் அறிவித்துள்ளனர். ‘நாவல் ஒன்றுக்கு நான் கருப்பொருளானதில் மகிழ்ச்சியே’ என்று தெரிவித்துள்ள எஸ் எஸ் குகநாதன் அடுத்த ‘புக்கர் பிரைஸிற்கான’ ஆன நாவலாக இது இருந்தால் மேலும் சந்தோசப்படுவேன் என்ற வகையில் கருத்துத் தெரிவித்தார்.

._._._._._.
குகநாதன் – அருள்சகோதரர்கள் : கடத்தல் – கைது விவகாரத்தை அடுத்து குகநாதன் குறிப்பிட்ட சட்டப்படியான கடத்தலுடன் தொடர்புடைய அருள்சகோதரர்கள் சபாநாவலன் ஆகியோர் தங்கள் கருத்துக்களை இனியொரு இணையத்தில் வெளியிட்டு உள்ளனர். இவ்விவகாரம் தொடர்பாக முதற் தடவையாக எஸ் எஸ் குகநாதன் தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்துகொள்கிறார்.

சட்டப்படி கைது செய்யப்பட்ட அல்லது சட்டப்படி கடத்தப்பட்ட எஸ் எஸ் குகநாதன் உடன் நேர்காணல்:

தேசம்: நீங்கள் தமிழ்நாட்டில் சட்டப்படி கைது செய்யப்பட்டீர்களா அல்லது சட்டவிரோதமாக கடத்தப்பட்டீர்களா?

குகநாதன்: அருட்செழியன் என்பவர் கொடுத்ததாகக் கூறப்பட்ட புகாரின்பேரில் விசாரணைக்காக அழைத்துச் செல்வதாகக் கூறிய பொலிசார், சென்னை பொலிஸ் ஆணையாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவரது புகார் பிரதியை எனது சட்டத்தரணி கேட்டபோது கூட காட்டத் தயாராக அவர்கள் இருக்கவில்லை. சட்டப்படி கைது செய்திருந்தால் 24 மணி நேரத்தில் என்னை நீதிமன்று ஒன்றில் ஆஜர்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யப்படவில்லை. அதிலிருந்து  நடந்தது என்ன என்பதை புரிந்துகொள்ளலாம். இது ஒரு சட்டபூர்வமான கடத்தல் என்றும் செல்லலாம்.

தேசம்: இச்சம்பவத்தின் பின்னணி என்ன?

குகநாதன்: ரிஆர்ரி தொடங்கிய (1997) காலத்திலிருந்து அருட்செழியன் எமக்காக சென்னையில் பணியாற்றியவர். நான்   ரிஆர்ரியிலிருந்து திட்டமிட்டு வெளியேற்றப்பட்டு பின்னர் டான் தொலைக்காட்சியை நடாத்திக் கொண்டிருந்தபோதும் எனக்கு சென்னையில் நிகழ்ச்சிகளைப் பெறுவதற்கு உதவியவர். 2003ம் ஆண்டு நாம் 6 தொலைக்காட்சி சேவைகளை ஆரம்பித்தபோது வேறு ஒரு நிறுவனத்தில் பணியாற்றியவாறு எமக்கும் பணியாற்றினார். அவ்வாறு பணியாற்றிய காலத்தில் எம்மிடமிருந்து அவருக்கு இந்திய ரூபாய் 55 லட்சம் செலுத்தப்பட்டது. அதிலிருந்து அவர் எமக்கான சேவையை செய்து கொண்டிருந்தார். 18 மாதங்களின் பின்னர் சில கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் வெளியேற வேண்டியேற்பட்டது. இதனையடுத்து எமக்கு சொந்தமான உபகரணங்களை நான் புதிதாக நியமித்தவரிடம் கொடுக்குமாறு கேட்டபோது அவர் அதற்கு மறுப்புத் தெரிவித்தார். அதனையடுத்து அந்த உபகரணங்களை அவரிடமிருந்து சட்டபூர்வமாகப் பெறுவதற்காக நான் அண்ணா சக்தி என்ற ஒருபத்திரிகையாளருக்கு அட்டோனி பவர் கொடுத்தேன். அவர் பொலிசில் இதுகுறித்து முறைப்பாடு செய்ததன்பேரில் அவர் அனைத்து உபகரணங்களையும் 3 லட்சம் ரூபா பணத்தினையும் அவரிடம் வழங்கியிருந்தார். இவை நடைபெற்றது 2005ம் ஆண்டில். அண்ணா சக்தி என்ற அந்தப் பத்திரிகையாளரைக் கூட எனக்கு அறிமுகம்செய்து வைத்தவர் வேறுயாருமல்ல, அருட்செழியனால் எனக்கு அறிமுகம் செய்துவைக்கப்பட்ட அவரது நெருங்கிய உறவினரான ஒரு சட்டத்தரணிதான்.

இப்போது அவர் வழங்கியதாகக் குறிப்பிடப்படும் புகாரில், நான் அவருக்கு வழங்கிய 55 லட்சம் ரூபாவும் எனக்கு செலவிடப்பட்டதாகவும், அதனுடன் மேலதிகமாக 6 லட்சம் ரூபாவை தான் தனது சொந்தப்பணத்தில் செலவிட்டதாகவும், அதுதவிர தனக்கு 18 மாதம் சம்பளம் தரப்படவில்லை என்றும் தனக்கு மாதம் 50 ஆயிரம் சம்பளமாக நான் தருவதாக கூறியதாகவும் அதன்படி 9 லட்சம் சம்பளம் தரப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருப்பதாக பொலிசார் என்னிடம் தெரிவித்தனர். அண்ணா சக்தி என்பவர் பொலிசாரின் துணையுடன் தன்னை கட்டப்பஞ்சாயத்து நடத்தியே தன்னிடமிருந்து பணத்தையும் உபகரணங்களையும் பெற்றுக்கொண்டதாகவும் அவர் அந்தப் புகாரில் தெரிவித்ததாகவும் எனக்கு தெரிவிக்கப்பட்டது.

சில ஆயிரம் ரூபாக்கள் சம்பளத்தில் ஏற்கனவே வேறு நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டே எனக்கும் பணியாற்றிய அருட்செழியன் என்னிடம் எவ்வாறு 50 ஆயிரம் சம்பளம் கேட்டார் என்பது மற்றுமொரு தனிக்கதை. அவர் லண்டன் வர விரும்பியபோது, அவர் விசா பெறுவதற்காக அவர் எமது நிறுவனத்தில் வேலை செய்வதாகவும் அவருக்கு 50 ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கப்படுவதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன். அதனையே அவர் பொலிசாரிடம் கொடுத்து 9 லட்சம் ரூபா சம்பளம் கோரியிருந்தார்.
தனக்கு 15 லட்சம் ரூபா நான் தரவேண்டும் என்பதும் ஆனால் சமாதானமாக பேசுவதென்றால் 25 லட்சம் தரவேண்டும் என்றும் அவர் பேரம்பேசத் தொடங்கினார்.

தேசம்: இச்சம்பவம் எப்போது நடந்தது? எப்படி முடிவுக்கு வந்தது?

குகநாதன்: ஆகஸ்ட் 2ம் திகதி பிற்பகல் 3 மணியளவில் பொலிசார் என்னை அழைத்துச் சென்றனர். 3ம் திகதி இரவு 10 மணியளவில் வீடுசெல்ல அனுமதித்தனர். 5ம் திகதி கொழும்பு திரும்பினேன். அவர் நான் தரவேண்டும் என்று கூறியிருந்த 15 லட்சம் ரூபா வழங்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தப் பிரச்சினை (மன்னிக்கவும் கைது அல்ல கடத்தல் விவகாரம்) முடிவுக்கு வந்தது.

தேசம்:அருள்செழியன் நீங்கள் தன்னை வஞ்சகமாக ஏமாற்றியதாகக் குற்றம்சாட்டி உள்ளார்? இதன் பின்னணி என்ன?

குகநாதன்: வஞ்சகம் என்பதற்கு தமிழ்நாட்டில் என்ன அர்த்தம் என்பது எனக்கு சரியாகத் தெரியவில்லை. அதனால் நான் அவரை வஞ்சகமாக ஏமாற்றியதாகவே வைத்துக்கொள்வோம். அப்படி நான் அவரை ஏமாற்றியிருந்தால், அவர் இது தொடர்பாக 2005 முதல் 2006 கடைசிவரை சென்னையில் அசோக் நகரில் அலுவலகத்தை வைத்து நான் அங்கேயே தங்கியிருந்து டான் தொலைக்காட்சியை நடாத்திய காலத்தில் அவர் ஏன் என்மீது இந்தப் புகாரைத் தெரிவிக்கவில்லை. அல்லது தெரிவித்திருந்தால் பொலிசார் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. 5 வருடங்கள் கழித்து நடவடிக்கை எடுக்க என்ன காரணம். நான் வஞ்சகம் செய்தது 5 வருடங்களின் பின்னர் தான் அவருக்கு தெரியவந்ததா?.

தேசம்: உங்களை சுவாரஸ்யமான நாடகம் ஒன்றை அரங்கேற்றி உங்கள் செலவிலேயே சென்னைக்கு வரவழைத்ததாகக் அருள்செழியன் குறிப்பிடுகின்றார்?

குகநாதன்: சென்னைக்கு நான் சென்றிருந்தது எனது சொந்த விடயமாக. நான் இப்போது மட்டுமல்ல, இந்த வருடத்தில் மாத்திரம் 6 தடவைகள் சென்னை சென்று வந்திருக்கின்றேன். அவர் என்ன நாடகம் நடத்தினார் என்பது எனக்கு தெரியவில்லை. நான் சென்னை செல்வது எனது செலவிலேயே தவிர வேறு யாருடையை செலவிலும் அல்ல.

தேசம்: இச்சம்பவத்தை நாவலாக எழுதவுள்ளதாக அருள்செழியன் தெரிவித்துள்ளார்?

குகநாதன்: நாவல் ஒன்றுக்கு நான் கருப்பொருளானதில் மகிழ்ச்சியே.

தேசம்: ”அரை லட்சம் மனிதர்களைக் கொலைசெய்த இலங்கை அரசிற்கு ஆதரவாக கொழும்பிலிருந்து தொலைக்காட்சி நடத்தும் குகநாதன் என்னிடம் உதவி கேட்பதற்கு எந்தத் தார்மீக நியாயமும் இல்லை” என சபாநாவலன் எழுதியுள்ள குறிப்பில் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்திற்கும் சபாநாவலனிற்கும் என்ன சம்பந்தம்?

குகநாதன்: எனக்கு அருட்செழியனைவிட சபா நாவலனின் எழுத்து மீதே வெறுப்பு ஏற்படுகின்றது. அவர் தனது இனியொரு இணையத்தளத்தில் எழுதியிருப்பது அப்பட்டமான பொய். நான் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட சில நிமிடங்களில் அருள்செழியனின் சகோதரர் அருள்எழிலன் தனது தொலைபேசியை என்னிடம் கொண்டுவந்து தந்தார். எனக்கு தெரிந்த ஒருவர் பேசவேண்டுமாம் என்றே அவர் தனது கைத் தொலைபேசியை என்னிடம் தந்தார். நான் ஹலோ என்றதும் அவர் தன்னை சபா நாவலன் என்று அறிமுகம் செய்துகொண்டார். (அது சபா நாவலன் தானா அல்லது வேறுயாருமா என்பது கூட எனக்கு தெரியாது. ஏனெனில் அதற்கு முன்னர் அவர் குரலை நான் அறிந்திருக்கவில்லை) அப்போது நான் அவரை அறிந்திருக்கின்றேன் ஆனால் நேரில் கண்டதில்லை என்று ஆரம்பித்ததும், அவர் கூறியது இதுதான்:

‘அரசாங்கத்தின் ஆதரவாளர் ஒருவரை கைதுசெய்துவிட்டோம் என்றுதான் அவரது (செழியனின்) சட்டத்தரணிகள் மகிழ்ச்சியுடன் இருப்பதாகத் தெரிகின்றது. நீங்கள் ஏதாவது கொடுத்துவிட்டு தப்பிக்கப் பாருங்கள்”.

எனக்கு முன் பின் தெரியாத ஒருவரிடம் எதுவும் விவாதிக்கவோ அல்லது கருத்துக்கூறவோ அப்போது முடியாததால், ‘நானும் அப்படித்தான் யோசிக்கின்றேன்” என்று அவரிடம் பதிலளித்தேன்.

பின்னர் அவர், ‘பாரிசில் சுபாசிடம் கதைத்தீர்களா?” என்று கேட்டார். எனக்கு சுபாசை தெரிந்திருந்தாலும் அவரிடம் அப்போது கதைக்க வேண்டிய தேவை எனக்கு இருக்கவில்லை.

நான் கதைக்கவில்லை. உதயகுமாருடன்  மட்டுமே நான் பேசியதாக நான் கூறியபோது, அவராகவே சுபாஸ் பொறுப்பு நின்றால் நான் அவர்களிடம் சொல்கின்றேன் என்றார். நான் அதற்கு தேவைப்பட்டால் கேட்கின்றேன் என்று கூறிவிட்டு தொலைபேசியை எழிலனிடம் கொடுத்துவிட்டேன்.

இப்படி நடக்கவில்லை என்றால், நான் சொல்வது பொய்யா அல்லது சபா நாவலன் சொல்வது பொய்யா என்பதை அருட்செழியனிடமுள்ள வீடியோ வெளிவருகின்றபோது தெரிந்துகொள்ளலாம்.

குகநாதன் அவரிடம் உதவி கேட்பதற்கு தார்மீக உரிமை இல்லாமல் இருக்கலாம். ஆனால் குகநாதன் கேட்காமலே உதவுவதற்கு சபா நாவலன் முன்வந்தார் என்பதை நிரூபிக்க சட்டப்படி கடத்தப்பட்ட என்னிடம் எதுவும் இல்லை.

என்னுடன் இவ்வாறு பேசியவர், அப்போது அங்கே இருந்த இலங்கையைச் சேர்ந்த ஊடகவியலாளரும், டான் தொலைக்காட்சியின் தலைமை நிர்வாகியுமான திரு. சல்தான் அவர்களிடமும் பேசியதாக பின்னர் அறிந்துகொண்டேன். அவருக்கு அவர் கூறியது இதுதான்:
‘நீங்கள் தான் மகிந்த அரசு எல்லாம் நல்லாக செய்கிறது என்று கூறுகின்றீர்களே ராஜபக்சவிடம் வாங்கிக் கொடுக்கலாம் தானே.”

அருள்செழியன் கேட்பது நியாயமானதுதானா? என்பதை அறியாமல் அவருக்கு பணத்தைக் கொடுங்கள் என்று சொல்வதற்கு சபா நாவலனுக்கு எந்த அருகதையும் இல்லை. 

தேசம்: ”குகநாதனிடம் அவர் இலங்கை அரசின் ஊதுகுழல் என்பதால் இச் சம்பவத்தில் தலையிட விரும்பவில்லை என்பதைக் கூறியிருந்தேன். இலங்கை அரசின் பாசிசத்திற்கு எதிராக எழுதும் நான் இலங்கை செல்ல முற்பட்டால் குகநாதன் இன் வாக்குமூலங்களோடு இலங்கை அரச படைகள் என்னைக் கைது செய்யலாம்.” என சபாநாவலன் குற்றம்சாட்டுகிறார். இச்சம்பவங்களில் சம்பந்தப்பட்டு உள்ள அனைவருமே ஏதோ ஒருவகையில் ஊடகத்துறையுடன் சம்பந்தப்பட்டவர்கள். அப்படி இருக்கையில் இவ்வாறான ஒரு மோசமான சூழல் தேவையானதா?

குகநாதன்: அருள்செழியனின் என்மீதான புகார் தவறானது என்பதை நான் நிரூபிப்பது பெரிய விடயமல்ல. ஆனால் நான் அதனை சட்டரீதியாக எதிர்கொள்வதெனில் பொலிசார் என்னை நீதிமன்றில் ஆஜர்படுத்த வேண்டும். அப்படி ஆஜர்படுத்தினால் நீதிமன்றம் எனது பாஸ்போட்டை தன்வசப்படுத்தும், நான் பிணையில் வந்தாலும் அந்த வழக்கு முடியும்வரை இந்தியாவில் நின்றிருக்க வேண்டி வரும். இவற்றைத் தவிர்க்குமாறு எனக்கு வேண்டிய சிலர் ஆலோசனை கூறினார்கள். நான் ஒரு வாரம் இந்தியாவில் நின்றிருந்தாலும் கொழும்பில் எனது நிறுவனத்தின் செயற்பாடுகளுக்கு பல நெருக்கடிகள் ஏற்பட்டுவிடும். அதனால் அவர் கோரிய பணத்தை கொடுத்துவிட்டு பிரச்னையிலிருந்து விடுபடுவது என்று முடிவெடுத்தேன்.

அருள்செழியன் கோரிய 15 லட்சம் ரூபாவையும் ஒரேநாளில் செலுத்துவது சிரமமானதாக இருந்ததால், உடனே 10 லட்சமும் மிகுதி 5 லட்சத்தையும் ஒருமாதத்தில் செலுத்துவதாகவும் முடிவானது. அந்த 5 லட்சத்தை ஒரு மாதத்தில் பெறுவதற்கு யாரேனும் ஒருவரை ஐரோப்பாவில் பொறுப்பு நிற்கச் சொல்லுங்கள் என்று அவர்கள் கேட்டபோது, முதல்நாள் சபா நாவலன் கூறியது எனது ஞாபகத்திற்கு வந்தது. இதனால் மனைவியிடம் கூறி முதலில் சுபாஸ் பொறுப்பு நிற்பாரா என்று கேட்கச் சொன்னேன். (ஏனெனில் என்னுடன் தொலைபேசியில் எனது மனைவி மட்டுமே கதைக்க அனுமதிக்கப்பட்டிருந்தார். பிரெஞ்சு பொலிசார் மட்டுமன்றி பிரான்ஸ் லியொன் நகரில் தலைமையகத்தைக் கொண்டிருக்கும் இன்ரர்போல் பொலிசார் கூட என்னுடன் கதைக்க சென்னை பொலிசார் அனுமதி வழங்கவில்லை.). தான் பொறுப்பு நின்றால் சபா நாவலன் பொறுப்பு நிற்பார் என்றால் அதற்கு நான் தயார் என்று சுபாஸ் கூறியதும் சபா நாவலனிடம் எனது மனைவி தொடர்புகொண்டார்.

மறுநாள் 10 லட்சம் ரூபா பணத்தைக் கொடுத்து மிகுதி பற்றி கதைத்தபோது சபா நாவலன் தான் பொறுப்புநிற்க மறுத்துவிட்டதாகவும், பிரான்சிலிருந்து அசோக் பொறுப்பு நின்றால் தங்களுக்கு சரி என்றும் அவர்கள் கூறினார்கள்.

குகநாதனுக்கு பிரான்சில் எப்படி செல்வாக்கு இருக்கிறது என்று பார்ப்போம். எங்கே அசோக்கிடம் கதைத்து அவரை எமக்கு கதைக்கச் சொல்லுங்கள் என்றார்கள்.

அசோக் இது போன்ற விடயங்களுக்கு பொறுப்புக்கு நிற்கமாட்டார் என்பதை அவர்கள் மட்டுமல்ல, நானும் நன்றாக அறிவேன். இருந்தாலும் கேட்டுப்பார்ப்பதில் தவறில்லை என்பதால் மனைவியிடம் அசோக்கிடம் கதைக்குமாறு கூறினேன்.

ஆச்சரியமாக இருந்தது. கூடவே மகிழ்ச்சியாகவும் இருந்தது. அசோக் தான் உடனே எழிலனுடன் கதைப்பதாக கூறினார்.

அப்போது எழிலன் அங்கிருக்கவில்லை. சில நிமிடங்களில் அருள்செழியனுடன் தொடர்புகொண்ட எழிலன், அசோக்கிடமிருந்து அழைப்பு வந்ததாகவும் தன்னை இந்த விடயத்திற்குள் இழுக்க வேண்டாம் என்று கூறிவிட்டு தொடர்பைத் துண்டித்து விட்டதாக எழிலன் கூறியதாக செழியன் கூறினார்.

ஆனால் அசோக் எம்மிடம் கூறியது, தான் தொலைபேசி எடுத்ததும் எழிலன் தன்னிடம் கூறினாராம், இந்த விடயத்தில் நீங்கள் தலையிட வேண்டாம் என்று. எழிலன் பொய் கூறினார் என்றே நான் நிச்சயமாக நம்புகின்றேன்.

தேசம்: இச்சம்பவத்தினுடைய பின்னணியில் அரசியல் செல்வாக்கு அல்லது அதிகார துஸ்பிரயோகம் என்பன பயன்படுத்தப்பட்டதாக நீங்கள் கருதுகிறீர்களா?

குகநாதன்: நிச்சயமாக. அதுகுறித்து நேரம் வரும்போது பேசுவேன்.

தேசம்: நீங்கள் கடத்தப்பட்ட சூழலில் அல்லது கைது செய்யப்பட்ட சூழலில் உளவியல் ரீதியாகவோ உடலியல் ரீதியாகவோ துன்புறுத்தப்பட்டீர்களா?

குகநாதன்: உடல்ரீதியாக அல்ல. ஆனால் உள ரீதியாக.

அப்போது எனக்கு ஞாபகம் வந்ததெல்லாம், முதன்முதலில் அருள்செழியனை ஐரோப்பா அழைத்துவந்தபோது காரில் பிரான்சிலிருந்து ஜெர்மனிக்கு அழைத்துச் சென்றிருந்தேன். அப்போது விரைவு பாதையில் உள்ள தரிப்பிடம் ஒன்றில் தரித்து நின்றபோது அவர், என் முன்னே மண்டியிட்டு ‘’அண்ணே….. இப்படியெல்லாம் பார்ப்பேன் என்று கனவிலும் நினைத்திருந்தவனல்ல. இவற்றைக் காட்டிய உங்களை……’’ என்று இவர் மனமுருகிய காட்சி தான் எனக்கு ஞாபகம் வந்தது.

நான் பொலிஸ் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டதும் பொலிசார் முதல்முதலில் செய்தது பத்திரிகைக்கு செய்தி எழுதியதுதான். நான் மண்டியிட்டு மன்றாடியதாக அருட்செழியன் ஒரு தளத்தில் எழுதியிருக்கிறார். கூடவே தன்னிடம் வீடியோ பதிவும் இருக்கிறது என்கிறார். அதனை பார்க்க நான் ஆவலாக இருக்கின்றேன். நண்பர்கள் சிலர் பணத்தைக் கொடுத்துவிட்டு வெளியேறுங்கள் என்று ஆலோசனை கூறியிருக்காவிட்டால் நிச்சயமாக சட்டரீதியாகவே எதிர்கொண்டிருப்பேன். அப்படியிருக்கையில் மன்றாட வேண்டிய தேவை எனக்கு இல்லை.

சம்பவம் நடைபெறுவதற்கு முன்னரும் பின்னரும் யார் யாரெல்லாம் செழியன், எழிலன் ஆகியோரின் கைத் தொலைபேசிகளுக்கு கதைத்தார்கள் என்ற விபரமும் தற்போது என்னிடம் இருக்கின்றது. இதுபற்றி பின்னர் எழுதுவேன்.

._._._._._.

குகநாதன் – அருள்சகோதரர்கள் : கடத்தல் – கைது விவகாரம் தொடர்பில் சில குறிப்புகள்

1. இச்சம்பவம் முற்றிலும் அருள்செழியன் – எஸ் எஸ் குகநாதன் சம்பந்தப்பட்ட நிதிக் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விடயம். இவர்களில் எவரும் புரட்சிகரமான நிறுவனங்களுக்கு பணிபுரிந்தவர்கள் அல்ல. இருவருமே ஒன்றாக இணைந்து வர்த்தக கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டவர்கள். தற்போது அது தொடர்பான சர்ச்சையில் இறங்கி உள்ளனர். இவர்கள் ஆளுக்கு ஆள் வைக்கும் குற்றச்சாட்டுக்கள் சம்பந்தப்பட்ட நாட்டின் சட்டவரம்பிற்கு உள்ளேயே தீர்க்கப்பட வேண்டும்.

2. ‘மாற்று அரசியலுக்கான உரையாடல் வெளி!’ என்ற இலக்கு நோக்கிச் செயற்படும் இனியொரு இணையம், புதிய திசைகள் அமைப்பு (அவர்களும் ஒரு இணையத்தை குரல்வெப் என்ற பெயரில் செயற்படுத்துகின்றனர். சன்றைஸில் வானொலி நிகழ்ச்சி ஒன்றையும் நடத்துகின்றனர்.) இச்சம்பவத்துடன் எவ்வித தொடர்பும் அற்றதாக இருந்திருந்தால் இவ்விடயத்தை உடனடியாக வெளிக்கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால் இச்சம்பவம் இடம்பெற்றது ஓகஸ்ட்  02 2010ல். இச்சம்பவத்தை தமிழ்அரங்கம் வெளிக்கொண்டுவந்தது சரியாக ஒரு மாதத்தின் பின்னர் செப்ரம்பர் 02 2010ல். நிர்ப்பந்தத்தின் பெயரில் இனியொரு ஆசிரியர் சபாநாவலன் பதில் எழுதியது செப்ரம்பர் 08 2010ல். ஒரு வகையில் தமிழ் அரங்கம் இந்நிகழ்வை வெளிக்கொணராது இருந்திருந்தால் இப்படி ஒரு சம்பவம் இடம்பெற்றதோ பணப் பரிமாற்றம் இடம்பெற்றதோ வெளியே வந்திருக்க வாய்ப்பில்லை. இருந்தாலும் தமிழரங்கம் 6000 மைல்களுக்கு அப்பால் நடந்த ஒரு சம்பவத்தை சரியான முறையிலோ அல்லது தவறான முறையிலோ வெளிக்கொண்டுவந்துள்ளது. இந்தியப் பொலிஸ்சுடன் கூட்டுச் சேர்ந்து கட்டைப் பஞ்சாயத்து நடத்திய சபா நாவலன், குகநாதனிடம் 30 இலட்சம் கோரினார்!

இலங்கையில் இருந்து ஐரோப்பாவரை ஒளிபரப்பாகின்ற ஒரு தொலைக்காட்சியின் உரிமையாளர் தமிழ்நாட்டில் சட்டப்படி கைது செய்யப்பட்டமை மிக முக்கியமான செய்தி. அது இருட்டடிப்புச் செய்யப்பட்டதன் நோக்கம் கேள்விக்குரியது.

3. இச்செய்தியை இருட்டடிப்புச் செய்ததுமல்லாமல் இச்செய்தி வெளியே வந்ததும் அதுவரை மௌனம் காத்த இனியொரு இணையத்தளம் ‘’ அரை லட்சம் மனிதர்களைக் கொலைசெய்த இலங்கை அரசிற்கு ஆதரவாக கொழும்பிலிருந்து தொலைக்காட்சி நடத்தும் குகநாதன்’’ என்றும்  ‘’குகநாதன் போன்ற இலங்கை அரச ஊதுகுழல்’’ என்றும் குற்றம்சாட்டுகிறது. இது ஏதோ ஒருவகையில் அருள்சகோதரர்களின் செயலை நியாயப்படுத்த முயற்சித்து இருப்பதையே காட்டிநிற்கின்றது. வர்த்தகத்தில் ஈடுபட்ட இருவருக்கு இடையேயான பிரச்சினையில் அரசியல் தூய்மைவாதம் பேசுகின்ற நாவலன் ஒருபக்கம்சார்ந்து நிற்பது அவர்களுக்கு இருந்த நலன்களின் முரணையே காட்டி நிற்கின்றது. இது நாவலன் இச்சம்பவத்தில் தொடர்பட்டு இருந்தார் என்ற சந்தேகத்தை மேலும் வலுவாக்குகின்றது.

4. பிரித்தானியாவில் இடம்பெற்ற 20க்கும் மேற்பட்ட தமிழர்களிடையேயான படுகொலைகளில் கணிசமானவை பொருளாதாரக் கொடுக்கல் வாங்கல் தொடர்பானவை. வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களிடையே இவ்வாறான கொடுக்கல் வாங்கல்களுக்கு எல்லையே இல்லை. இவற்றுக்கு அரசியல் முலாம்பூசி ஒரு தரப்பின் செயற்பாட்டை அரசியல் மூலம் நியாயப்படுத்துவது  நீண்ட அரசியல் செயற்பாடுகளுக்கு ஆரோக்கியமாக அமையாது.

5. இலங்கையில் விடுதலையின் பெயரில் இயங்கிய விடுதலை இயக்கங்கள் தங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு சார்ந்து மேற்கொண்ட நடிவடிக்கைகள் இன்னமும் எம்மனக் கண் முன்நிற்கின்றது. விசாரணையின்றியே தண்டனை. தண்டனைக்குப் பின் காரணங்களைத் தேடுவதும் தீர்ப்பு வழங்குவதும். எஸ் எஸ் குகநாதன் மீதான காலம் தாழ்த்திய வருகின்ற குற்றச்சாட்டுக்கள் இதனையே காட்டுகின்றன.

6. இலங்கை இந்தியா போன்ற மூன்றாம் உலகநாடுகளின் பொலிஸ்படைகள் பற்றி யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. ஒரு விவாதத்திற்காக ‘இனியொரு ஆசிரியர் சபாநாவலன் அருள்எழிலனுக்கு சம்பளம் கொடுக்கவில்லை என்றால் தமிகத்தின் பிரபல ஊடகங்களில் பிணியாற்றி செல்வாக்குள்ள அருள்எழிலனுக்கு சபாநாவலனை தமிழகம் வரச்செய்து அவரைக் கைது செய்து பணம்தரும்படி மிரட்டுவது ஒன்றும் கடியமான விடயம் அல்லவே.’ இனியொருவின் கூற்றுப்படி இலங்கை அரசின் ஊதுகுழல் ஊடகம் ஒன்றின் உரிமையாளரை அந்த அரசுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கும் தமிழக அரசின் பொலிஸ்படையைக் கொண்டு சட்டப்படி கைது செய்து நீதிமன்றம் செல்லாமலேயே 15 லட்சம் ரூபாய் பணத்தை அவரிடம் வாங்கிக் கொண்டு விடமுடியும் என்றால் எதுவும் சாத்தியம் அல்லவா?

7. இங்குள்ள ஆபத்து என்னவென்றால் இது இவ்வாறான செயல்களுக்கு ஒரு முன்ணுதாரணமாக அமைந்து உள்ளது. இலங்கைத் தமிழர்களுடன் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் தமிழக காவல்துறையை வைத்து மிரட்டி அவர்களிடம் இருந்து பணத்தைப் பெற முடியும் என்பதனை இச்சம்பவம் நடைமுறையில் நிரூபித்து உள்ளது. ஏற்கனவே இவ்வாறான கசப்பான சம்பவங்கள் சில இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்பட்டு உள்ளது. அவ்வாறான சம்பவங்களை நானே செய்தியாக வெளியிட்டும் உள்ளேன். இச்சம்பவம் இவ்வாறானவர்கள் தங்கள் செயல்களை நியாயப்படுத்துவதற்கு வழிகோலி உள்ளது.

8. கைது செய்யப்பட்ட நிலையிலோ அல்லது கடத்தப்பட்ட நிலையிலோ மிரட்டலுக்கு உள்ளாக்கப்பட்ட ஒருவர் வழங்கும் வாக்குமூலத்தையோ அல்லது அவருடைய துணைவி வழங்கும் வாக்குமூலத்தையோ உண்மையானதாக எவரும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பது சாதாரணர்களும் அறிந்த விடயம். அதனால் தான் சட்டத்தை அமுல்படுத்துபவர்களிடம் இருந்து நீதித்துறை சுயாதீனமாக செயற்பட வேண்டும் என்று கோரப்படுகிறது. தன்னை விடுவிப்பது அல்லது தனது துணைவரை விடுவிப்பதே அவருடைய அல்லது அவருடைய துணைவருடைய நோக்கமாக இருக்கும். அதனால் கைது செய்யப்பட்ட அல்லது கடத்தப்பட்ட நிலையில் பதிவு செய்யப்பட்ட விடயங்கள் சுயாதீனமான நிலையில் ஏற்றுக்கொள்ளப்படாதவரை அர்த்தமற்றவை. இருந்தாலும் எஸ் எஸ் குகநாதன் அப்பதிவுகளையும் மாற்றம் செய்யாது வெளியிடும்படி சவால்விட்டுள்ளார்.

9. அருள்சகோதரர்கள் குடும்பத்தினர் எஸ் எஸ் குகநாதனிடம் நிதியை இழந்தது உண்மையா இருந்தால் அவர்கள் குறைந்தபட்சம் நீதிமன்றத்தினூடாகவே அதனைப் பெற முயற்சித்து இருக்க வேண்டும். சமூகப் பொறுப்புடையவர்கள் இவ்வாறான வழிகளில் தங்கள் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வது பிறழ்வான சமூகப் போக்கிற்கு முன்னுதாரணமாக அமையும்.

10. ஏற்கனவே எழுந்துள்ள அரசியல் நிலையினால் தமிழகத் தமிழர்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்குமான உறவு பலவீனமானதாகவே உள்ளது. இவ்வாறான தனிப்பட்ட சம்பவங்கள் இவ்வுறவை மேலும் மோசமாக்காமல் இருக்க சம்பந்தப்பட்ட அனைவரும் முயற்சிக்க வேண்டும்.

Operation Loan Shark கிழக்கு லண்டன் ஈஸ்ற்ஹாமில் தமிழர் சிலர் கைது!!!

Operation_Loan_Shark‘ஒப்ரேசன் லோன் சார்க்’ பொலிஸ் நடவடிக்கையின் கீழ்  ஈஸ்ற்ஹாமில் சில தமிழர்களும் கைது செய்யப்பட்டு உள்ளனர். பொருளாதார ரீதியில் பலவீனமான நிலையில் பொருளாதார அறிவு குறைந்தும் வேறு வழிகளில் பொருளாதார உதவியைப் பெற முடியாதவர்கள் சில தனிப்பட்டவர்களிடம் இருந்து கடன் (லோன்) பெறுகின்றனர். வங்கிகள் போன்ற நிறுவனங்களிலும் பார்க்க அதிகப்படியான வட்டிக்கு கடன்பெறுகின்ற இவர்கள் இக்கடனை மீளச் செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

தங்கள் கடன் அதற்கான வட்டி மாதாந்தம் கிடைக்கத் தவறும் பட்சத்தில் கடன் வழங்கியவர் பல்வேறு அழுத்தங்களையும் மிரட்டல்களையும் கடன் வாங்கியவர்கள் மீது செலுத்துகின்றனர். இதற்கு வன்முறையும் பயன்படுத்தப்படுகின்றது. இந்தக் கடன் மற்றும் அதனுடன் தொடர்பான பிரச்சினைகளை பொலிஸ் பிரிவின் ‘ஒப்பிரேசன் லோன் சார்க்’ கையாண்டு வருகின்றது.

சில மாதங்களாக லண்டனில் தமிழர்கள் செறிந்து வாழ்கின்ற ஈஸ்ற்ஹாம் பகுதியில் ஒப்பிரேசன் லோன் சார்க் நடவடிக்கையில் சில தமிழர்களும் வர்த்தக நிறுவனங்களும் மாட்டியுள்ளனர். வட்டி மகேஸ், கணக்காளர் தர்மலிங்கம் போன்றவர்கள் இந்த ஒப்ரேசன் லோன் சார்க் நடவடிக்கையில் சில மாதங்களுக்கு முன்பாக மாட்டிக் கொண்டனர். இவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டனர். இவர்களுக்கு எதிரான வழக்குகள் தொடரப்பட்டு உள்ளது.

இந்தப் பொலிஸ் நடவடிக்கையின் உதவியால் நாடு முழுவதும் 13500 பேரின் 25 மில்லியன் பவுண்கள் பெறுமதியான சட்ட விரோதமான கடன்கள் இல்லாமற் செய்யப்பட்டு உள்ளது என இந்நடவடிக்கைக்குப் பொறுப்பான பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.

லண்டன் குரலில் இச்செய்தி வெளியான பின் லண்டன்குரல் உடன் தொடர்பு கொண்ட திருமதி தர்மலிங்கம் தனது கணவர் தவறான தகவல்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டதாகவும் தற்போது அவர் மீது எவ்வித வழக்குகளும் பதிவு செய்யப்படவில்லை என்றும் தெரிவித்தார். தனது கணவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தவறானவை எனக் காணப்பட்டு அவரூடைய பெயர் மீது இருந்த களங்கம் நீக்கப்பட்டதாகவும் திருமதி தர்மலிங்கம் தெரிவித்தார். தனது கணவர் தற்போது தொடர்ந்தும் கணக்காளராகப் பணியாற்றி வருவதாகவும் அவர் லண்டன் குரலுக்குத் தெரிவித்தார்.

ஈஸ்ற்ஹாமில் இது தொடர்பான மற்றுமொரு வழக்கு தற்போது நடந்து கொண்டுள்ளது. இவ்விசாரணை வழக்கு இன்னும் சில வாரங்களில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈஸ்ஹாமில் வதியும் யாழ்ப்பாணம் கரவெட்டியைச் சேர்ந்த நடராஜா என்பவர் மீதே ஒப்ரேசன் லோன் சார்க் பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர். நாடராஜா வட்டிக்குப் பணம் கொடுத்ததாகவும் அது பற்றி கடன் பெற்ற ஒருவர் கொடுத்த புகாரைத் தொடர்ந்து நடராஜா ஏப்ரல் 2010ல் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட பின் மறுநாளே விடுவிக்கப்பட்டு உள்ளார். தற்போது அவர் மீது வழக்குத் தொடரப்பட்டு உள்ளது.

இவர் தீபம் தொலைக்காட்சி சித்திரா நாடகம் மூலம் அறியப்பட்டவர். இந்நாடகத்தில் இவரது மனைவியும் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இப்போது இவர்கள் இவ்வழக்குத் தொடர்பான காரணங்களுக்காக பரவலாக அறியப்பட்டுள்ளனர்.

இவ்விவகாரம் பற்றித் தெரியவருவதாவது புகார் வழங்கியவர் நிதி நெருக்கடியில் இருந்த போது தனது இரண்டாவது வீட்டை  வாடகைக்கு வழங்கி முகாமைத்துவம் செய்ய அதனை செலெக்ற் புரொப்பற்டீக்கு வழங்கி உள்ளார். அதன் மூலம் ஏற்பட்ட நட்பினால் தனது நிதி நெருக்கடிக்கு செலக்ற் புரப்பற்டீயின் உரிமையாளர் வி ஜே போஸை அணுகியுள்ளர். அதற்கு முன்னர் சிறு சிறு உதவிகளைச் செய்துவந்த போஸ் தற்போது கேட்ட 5000 பவுண் உதவியை வழங்க முடியாதுள்ள நிலையை விளக்கி உள்ளார். ஆனால் தனது நிதிநெருக்கடியை வலியுறுத்தி வற்புறுத்திக் கேட்கவே வி ஜே போஸ் நடராஜாவை அறிமுகப்படுத்தினார்.

நிதி நெருக்கடியில் இருந்தவர் நடராஜாவுக்கு அறிமுகமில்லாதவராகையால் நடராஜா ஆரம்பத்தில் பணத்தை வழங்கத் தயங்கினார். பின்னர் நகைகயை பொறுப்பு வைத்து 5000 பவுண்களைப் பெற்றுக்கொண்டார். இப்பரிமாற்றம் இடம்பெற்றது 2007ல்.

இந்தப் பரிமாற்றத்தில் நடராஜா கைது செய்யப்படுவதற்கு அண்மை வரை கடனைப் பெற்றுக் கொண்டவருக்கு வழங்க வேண்டிய வீட்டு வாடகையில் இருந்து 150 பவுண்களை செலக்ற் புரப்பற்டீஸ் கழித்து வந்துள்ளது.

மாதங்கள் ஓடியது. தவணைகள் ஒன்றன் பின் ஒன்றாக கடந்தது. இந்நிலையில் கடனைப் பெற்றுக் கொண்டவர் செலக்ற் புரப்பற்டீஸிடம் வாடகை முகாமைத்துவத்திற்கு வழங்கிய வீட்டை அவர்களிடம் இருந்து மீளப் பெற்றுக்கொண்டார். மாதாந்தம் வழங்கிய 150 பவுண்கள் நடராஜாவுக்கு செல்வது தடைப்பட்டது. கடனை மீளளிக்காத பட்சத்தில் நகைகள் விற்கப்படும் என கடன் பெற்றவருக்கு அறிவுறுத்தப்பட்டது. இறுதித் தவணையும் வழங்கப்பட்டது.

இறுதித் தவணை வழங்கப்பட்ட அன்று ஏப்ரல் 2010ல் ஹைஸ்ரீற் நோத்தில் உள்ள செலக்ற் புரப்பற்டீஸ், லக்ஸ்மி ஜிவலர்ஸ், மற்றும் நடராஜா வீடு ஆகிய இடங்களை ஒரே நேரத்தில் முற்றுகையிட்ட ஒப்ரேசன் லோன் சார்க் பொலிஸார் அங்கிருந்த ஆவணங்கள் பதிவேடுகள் சிலவற்றை குற்றப் புலனாய்வு விசாரணைகளுக்காக எடுத்துச் சென்றனர். நடராஜாவும் கைது செய்யப்பட்டார்.

இவ்வட்டிக்கடன் விவகாரத்தில் கடன் பெற்றவரிடம் பொறுப்பாகப் பெற்றுக்கொண்ட நகைகள்  லக்ஸ்மி ஜீவலர்ஸில் விற்கப்பட்டதாக புகார் செய்யப்பட்டு இருந்ததாகவும் அதனாலேயே லக்ஸ்மி ஜீவலர்ஸ் இவ்விவகாரத்தில் தொடர்புபட்டதாகவும் தெரிய வருகின்றது.

இப்பின்னணியில் வழக்குத் தொடர்கின்றது.