குகநாதன் கைது – கடத்தலில் அருள் சகோதரர்களுடன் கைகோர்த்த தமிழ்தேசியம் – டான் ரிவி உரிமையாளர் குகநாதன் கடத்தல் – கைது விவகாரம் : த ஜெயபாலன்

குகநாதன் கைது – கடத்தல் விவகாரம் அரசியல் பின்னணியுடன் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவருகின்றது. தமிழகத்தில் உள்ள தமிழ் தேசியவாதிகளினது செல்வாக்குடன் எஸ் எஸ் குகநாதனை தடுத்து வைத்து அவரிடம் இருந்து பணம் பறிக்கப்பட்டு உள்ளது. இக்கைது கடத்தல் நாடகத்தில் வை கோ வினதும் நெடுமாறனினதும் நெருக்கமான சட்டத்தரணிகள் ஈடுபட்டு இருந்துள்ளனர். அருள் சகோதரர்களின் ஊரவரும் நண்பரும் பல்லாயிரம் ஈரோக்கள் காணமல் போய்விட்டது என்று கணக்குக் காட்டியவருமான கஸ்பாரும் இச்சம்பவத்தடன் தொடர்புபட்டிருந்ததாக எஸ் எஸ் குகநாதன் தேசம்நெற்க்கு தெரிவித்தார்.

குகநாதனை விடுவிக்க 20000 பவுண்ட் (15 லட்சம் இந்திய ரூபாய்) வழங்கப்பட்டது. இலங்கையில் இருந்து உண்டியல் செய்யும் ஒரு வர்த்தகர் மூலம் அனுப்பப்பட்ட பெரும்பகுதி பணத்தை கடன்பட்டு இப்போது செலுத்தி வருவதாக குகநாதன் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

எஸ் எஸ் குகநாதன் பல்வேறு வர்த்தக நடவடிக்கைகளிலும் பணப் பரிமாற்றத்திலும் ஈடுபட்டு இருந்த போதும் ‘அவரின் குடும்பத்தாரிடம் அவருடைய குறைந்தபட்ச தேவைகளை நிறைவேற்றவே நிதி இருந்ததில்லை’ என எஸ் எஸ் குகுகநாதனின் நண்பரும் அவருடைய விவகாரத்தை சுமூகமாக தீர்க்க முற்பட்ட ஒருவர் தெரிவித்து இருந்தார். எஸ் எஸ் குகநாதன் மீது பல்வேறு பணப் பரிமாறல் குற்றச்சாட்டுகள் இருந்தபோதும் அவர் இலங்கை அரசுக்கு ஆதரவாக செயற்பட்டு பணம் புரட்டுகிறார் எனக் கூறப்பட்ட போதும் அவரிடம் பணப் புழக்கம் இருக்கவில்லையென குகநாதனை விடுவிக்க 500 பவுண்களை தனது பங்காக செலுத்திய நண்பர் ஒருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

குகநாதனை விடுவிக்க செலுத்திய இத்தொகையை கட்டி முடிக்க சில ஆண்டுகள் ஆகலாம் என திருமதி குகநாதன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். ஏற்கனவே ஏற்பட்ட இழப்புகளால் இருக்கும் கடன்சுமையை இது மேலும் அதிகரித்துள்ளதாகவும் அவர் தனது வேதனையைத் தெரிவித்தார்.

குகநாதனை விடுவிப்பது தொடர்பாக புலம்பெயர் குழுவில் சென்ற சிலர் தமிழக முதல்வரின் மகள் கனிமொழி உடன் நெருக்கமானவர்கள் மூலம் முயற்சி செய்ததாகவும் தற்போது தெரியவருகிறது. ஆனால் குகநாதன் விவகாரத்திற்கு பின்னால் இருந்தவர்களின் பலத்தை இவர்களால் மேவ முடியாததால் இம்முயற்சி கைவிடப்பட்டது. அதனால் பணத்தைக் கொடுத்துவிட்டு வெளியேறுவதே பாதுகாப்பானது என இவர்கள் குகநாதனின் மனைவிக்கு தெரிவித்துள்ளனர்.

அதேசமயம் இவ்விவகாரம் இலங்கை அரசின் உயர்மட்டத்திற்கு  தெரியப்படுத்தப்பட்டதையடுத்து இலங்கை அரசு டெல்லியில் உள்ள தனது தூதராலயம் ஊடாக அழுத்தங்களை வழங்க ஆரம்பித்தது. ஆரம்பத்தில் குகநாதன் தங்களிடம் இல்லையென்றே தமிழக பொலிஸில் இருந்து தகவல் வழங்கப்பட்டதாக தெரியவருகின்றது. அச்சமயத்தில் குகநாதனின் உயிருக்கு ஆபத்து நேர்ந்து இருக்கலாம் அல்லது உயிராபத்து நேரலாம் என்ற அச்சம் டெல்லி – கொழும்பு உயர் மட்டங்களில் இருந்துள்ளது.

2008 மார்ச் இறுதிப் பகுதியில் இலங்கைத் திரைப்பட இயக்குநர் துசார பீரிஸ் தமிழத்தில் உள்ள தமிழ் தேசியவாதிகளால் கடுமையாகத் தாக்கப்பட்டு பொலிஸாரின் தலையீட்டின் பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டமை தெரிந்ததே.

எஸ் எஸ் குகநாதன் விவகாரத்திலும் ‘இலங்கை அரச ஆதரவாளர் ஒருவரைப் பிடித்துவிட்டோம் என்ற மகிழ்ச்சியிலேயே அவர்கள் இருக்கின்றனர்’ எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது. தனிப்பட்ட விடயத்தையும் அரசியலுடன் இணைத்து அதனை நியாயப்படுத்துவதற்கான காரணங்களையும் அருள் சகோதரர்கள் மேற்கொண்டு உள்ளனர்.

அவர்களின் உரையாடல்களில் ‘அரச உளவாளியைக் கைதுசெய்துள்ளோம் என்று ஒரு இணையத்தைத் திறந்து விட்டால் புலம்பெயர்ந்த தமிழர்கள் இதிலும் பார்க்க பல லட்சங்களைத் தருவார்கள்’ என்றெல்லாம் உரையாடப்பட்டு உள்ளதாக எஸ் எஸ் குகநாதன் தேசம்நெற்க்கு தெரிவித்தார். ’20 000 பவுண்களை வெஸ்ற்றன் யூனியன் ஊடாக அனுப்புகிறோம். இவனை விட வேண்டாம் என்றெல்லாம் தொலைபேசிகள் வந்தது’ என்றும் எஸ் எஸ் குகநாதன் தெரிவித்தார்.

‘அவர்களிடம் உள்ள விடியோவை அவர்கள் உண்மையானவர்கள் என்றால் வெட்டிக்கொத்தாமல் வெளியில் விட்டால் உண்மைகள் பெரும்பாலும் தானே வெளிவரும்’ என்று தெரிவித்த குகநாதன் தமிழக கொமிஸ்னர் அலுவலகத்திற்கு முன்னுள்ள ஹொட்டலில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் ரூம் எடுத்து தங்கி இருந்ததாகவும் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக திருமதி குகநாதனின் ஒலிப்பதிவு ஒன்றை இனியொரு இணையத்தளம் வெளியிட்டு இருந்தது. இதன் ஊடக நியாயம் பற்றி தேசம்நெற் இல் கேள்வி எழுப்பி இருந்தோம். அதற்கு இனியொரு ஆசிரியர் சபாநாவலன் திருமதி குகநாதனின் அனுமதியுடனேயே அதனை வெளியிட்டதாகக் கூறியிருந்தார்.

ஆனால் அதனை திருமதி குகநாதன் முற்றாக மறுத்துள்ளார். தன்னிடம் இனியொரு ஆசிரியர் அவ்வாறு எந்த அனுமதியையும் பெறவில்லை என்றும் இது பதிவு செய்யப்படுவது தெரிந்திருந்தால் தான் அவருடன் பேசியிருக்கவே மாட்டேன் என்றும் தெரிவித்தார். தன்னை நடுஇரவு தூக்கத்தில் எழுப்பி அதனைப் பதிவு செய்து தனது அனுமதியின்றியே அவர் அதனைப் பிரசுரித்து உள்ளதாகவும் திருமதி குகநாதன் குற்றம்சாட்டினார்.

தான் எந்த விவகாரத்திலும் முன்னிலைக்கு வரவிரும்புவதில்லை எனக் குறிப்பிட்ட அவர் இவ்விவகாரத்தில் தன்னையும் தங்களது நோக்கங்களுக்காக பயன்படுத்துவதாக வேதனைப்பட்டார்.

இச்சம்பவம் தமிழ் தேசியத்திற்கு எதிரானவர்கள் புலிகள் மீது விமர்சனம் உடையவர்களை தமிழகத்தில் ஆதிக்கம் பெற்றுள்ள தமிழ் தேசியவாத சக்திகள் தங்கள் சுயலாபங்களுக்கு பயன்படுத்தலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அரசுக்கு ஆதரவானவர்களுக்கு எதிராக செயற்படுகிறோம் என்ற அரசியல் மூலம் தமிழக மார்க்ஸிய அமைப்புகளிடையே செல்வாக்குப் பெறவும் இதனைச் சிலர் பயன்படுத்தலாம் என்ற நிலையும் இப்போது ஏற்பட்டு உள்ளது.

._._._._._.

டான் ரிவி உரிமையாளர் குகநாதன் – அருள்சகோதரர்கள்: கடத்தல் – கைது விவகாரம்: ‘இது ஒரு சட்டபூர்வமான கடத்தல்’ எஸ் எஸ் குகநாதன்

Kuganathan_S_S_Dan_TV‘மாற்று அரசியலுக்கான உரையாடல் வெளி!’ ஏன்று ஆரம்பித்த இனியொரு இணையம் தற்போது டான் தொலைக்காட்சி ஊடக உரிமையாளரும் வர்த்தகருமான எஸ் எஸ் குகநாதன் கைது செய்யப்பட்டாரா? அல்லது கடத்தப்பட்டாரா?: என்ற விவாதத்திற்கான வெளியாகி நிற்கின்றது. தான் கைது செய்யப்பட்டதாகவும் சொல்ல முடியாது, கடத்தப்பட்டதாகவும் சொல்லிவிட முடியாது. இது கைது பாதி, கடத்தல் பாதி இரண்டும் சேர்ந்து ‘சட்டப்படி கடத்தப்பட்டேன்’ என்று தெரிவிக்கிறார். மேற்படி கைதை அல்லது கடத்தலை முன்னின்று மேற்கொண்ட அருள் சகோதரர்கள் (அருள்செழியன் – அருள்எழிலன்) இது முற்றிலும் சட்டப்படி மேற்கொண்ட நடவடிக்கை என்றும் எஸ் எஸ் குகநாதன் தங்களால் இந்தியாவுக்கு வரவழைக்கப்பட்டு பொலிஸாரினால் சட்டப்படி கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.

இவ்விவகாரம் தொடர்பாக அருள் சகோதரர்கள் சபாநாவலன் ஆகியோரின் பதிவுகளை முழுமையாகக் காண:

“Fake Encounter ரயாகரன்” – எமது சமூகத்தின் புரையோடிப்போன புண்கள் : சபா நாவலன் inioru.com/?p=16707

குகநாதன் – நடந்தது என்ன..? : குகநாதன் – நடந்தது என்ன..? inioru.com/?p=16752

இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் அனைவரும் ஊடகவியலாளர்கள்.  எஸ் எஸ் குகநாதனால் குற்றம்சாட்டப்படும் அருள் சகோதரர்களில் ஒருவரான அருள்எழிலன் மற்றும் சபாநாவலன் ஆகியோர் இனியொரு இணையத்தளதின் முக்கியஸ்தர்கள். முன்னையவர் இனியொரு தளத்தின் முக்கிய கட்டுரையாளர். பின்ணையவர் இனியொருவின் ஆசிரியர். இவர் பிரித்தானியாவில் உருவாக்கப்பட்ட புதிய திசைகள் அமைப்பினதும் முக்கிய உறுப்பினர். சம்பந்தப்பட்டவர்களின் அரசியல் பின்னணி காரணமாகவும் பெரும்தொகை (15 லட்சம் இந்திய ரூபாய்கள்) கைமாறப்பட்டு உள்ளதாலும் இவ்விடயம் அரசியல் முக்கியத்துவம் உடையதாகவும் மாறி உள்ளது. மேலும் அருள் சகோதரர்களில் மற்றையவர் அருள்செழியன் தமிழகத்தின் முன்னணி ஊடகங்களில் பணியாற்றியவர். தமிழீழ விடுதலைப் புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கத்தை நேர்காணுவதற்காக லண்டன் வந்திருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குகநாதன் தனக்குத் தரவேண்டிய வஞ்சகச் சூழ்ச்சியால் ஏமாற்றிய பலலட்சம் ரூபாய்களை அவரிடம் இருந்து பெறவும் அவருக்கு சட்டப்படி தண்டனை வாங்கிக் கொடுக்கவுமே தான் சட்டப்படி குகநாதனைக் கைது செய்யும் சட்ட நடவடிக்கையில் ஈடுபட்டதாக அருள்செழியன் தெரிவித்திருந்தார். இக்கைது விவகாரத்தின் பிரதான கதாநாயகனும் இவர்தான். ‘’வாழ்வின் ஒட்டு மொத்த சேமிப்புகளையும் குகநாதனிடம் இழந்த ஒருவரான அருள்செழியன் அவரது தனிப்பட்ட திட்டங்களினாலும் சட்ட ரீதியான போராட்டங்களினாலும் மட்டுமே குகநாதனைப் பிடித்தார். இதற்கும் வேறு எவர் ஒருவருக்கும் எந்த தொடர்புகளும் இல்லை.’’ என்கிறார் அருள்எழிலன்

தன்மீதான இக்குற்றச்சாட்டுக்களை முற்றாக மறுத்துள்ள குகநாதன் தேசம்நெற் க்கு வழங்கிய நேர்காணலில் அருள்சகோதரர்களின் அரசியல் செல்வாக்கு அதன் மூலமான அதிகார துஸ்பிரயோகம் ஆகியவற்றினைப்  பயன்படுத்தி அந்நிய மண்ணில் தன்னை சட்டப்படி கடத்திச் சென்றதாகத் தெரிவிக்கின்றார். இக்கடத்தல் சம்பவம் பற்றி இனியொரு இணையத்தள ஆசிரியர் சபாநாவலன் எழுதிய பதிவு ‘அப்பட்டமான பொய்’ என்றும் தெரிவிக்கின்றார். ‘’குகநாதன் தான் பெருந்தொகையான பணம் கொடுக்க வேண்டியிருப்பதாகவும் ஆனால் அதனைக் கொடுப்பதற்கு தன்னிடம் போதிய வசதிகள் இல்லை என்றும் என்னை அவர்களை சமாதானப்படுத்துமாறும் கேட்டுக்கொண்டார்’’ அதனாலேயே தான் இவ்விவகாரத்தில் தலையிடவேண்டி ஏற்பட்டதாக இனியொரு ஆசிரியர் சபாநாவலன் தனது இணையத்தில் பதிவுசெய்து உள்ளார். எதேச்சையாக அருள்எழிலனுக்கு போன் செய்தபோது அவர் குகநாதனிடம் தொலைபேசியைக் கொடுத்து கதைக்கச் சொன்னபோதே இத்தொடர்பு ஏற்பட்டதாகவும் சபாநாவலன் எழுதியுள்ளார்.

ஆனால் எஸ் எஸ் குகநாதனின் வாக்கு மூலம் அதற்கு முற்றிலும் முரணாக உள்ளது. சட்டப்படி கடத்தி வைக்கப்பட்ட தன்னிடம் கேட்கும் பணத்தைக் கொடுத்துவிட்டு தப்பிக்கொள்ளுங்கள் என சபாநாவலன் கூறியதாக எஸ் எஸ் குகநாதன் தெரிவிக்கின்றார். எஸ் எஸ் குகநாதனின் இந்த சட்டப்படியான கடத்தலுடன் சபாநாவலனும் தொடர்புபட்டதாகவும் சட்டப்படி கடத்தியவர்கள் பணத்தைப் பெறுவதற்கு ஏதுவாக பொறுப்பு நிற்கக் கூடியவர்களை சபாநாவலனே முன்மொழிந்ததாகவும் குகநாதன் குற்றம்சாட்டுகின்றார்.

இவ்விவகாரம் இவ்வாறான வாதப் பிரதிவாதத்தில் நிற்க அருள் சகோதரர்கள் இவ்விடயத்தை நாவலாக வெளியிடப் போவதாக அறிவித்தனர். தற்போதே தங்களுக்கு நாவலின் பிரதிகளுக்கான கட்டளைகள் ஆயிரக்கணக்கில் வந்து குவிவதாகவும் அறிவித்துள்ளனர். ‘நாவல் ஒன்றுக்கு நான் கருப்பொருளானதில் மகிழ்ச்சியே’ என்று தெரிவித்துள்ள எஸ் எஸ் குகநாதன் அடுத்த ‘புக்கர் பிரைஸிற்கான’ ஆன நாவலாக இது இருந்தால் மேலும் சந்தோசப்படுவேன் என்ற வகையில் கருத்துத் தெரிவித்தார்.

._._._._._.
குகநாதன் – அருள்சகோதரர்கள் : கடத்தல் – கைது விவகாரத்தை அடுத்து குகநாதன் குறிப்பிட்ட சட்டப்படியான கடத்தலுடன் தொடர்புடைய அருள்சகோதரர்கள் சபாநாவலன் ஆகியோர் தங்கள் கருத்துக்களை இனியொரு இணையத்தில் வெளியிட்டு உள்ளனர். இவ்விவகாரம் தொடர்பாக முதற் தடவையாக எஸ் எஸ் குகநாதன் தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்துகொள்கிறார்.

சட்டப்படி கைது செய்யப்பட்ட அல்லது சட்டப்படி கடத்தப்பட்ட எஸ் எஸ் குகநாதன் உடன் நேர்காணல்:

தேசம்: நீங்கள் தமிழ்நாட்டில் சட்டப்படி கைது செய்யப்பட்டீர்களா அல்லது சட்டவிரோதமாக கடத்தப்பட்டீர்களா?

குகநாதன்: அருட்செழியன் என்பவர் கொடுத்ததாகக் கூறப்பட்ட புகாரின்பேரில் விசாரணைக்காக அழைத்துச் செல்வதாகக் கூறிய பொலிசார், சென்னை பொலிஸ் ஆணையாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவரது புகார் பிரதியை எனது சட்டத்தரணி கேட்டபோது கூட காட்டத் தயாராக அவர்கள் இருக்கவில்லை. சட்டப்படி கைது செய்திருந்தால் 24 மணி நேரத்தில் என்னை நீதிமன்று ஒன்றில் ஆஜர்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யப்படவில்லை. அதிலிருந்து  நடந்தது என்ன என்பதை புரிந்துகொள்ளலாம். இது ஒரு சட்டபூர்வமான கடத்தல் என்றும் செல்லலாம்.

தேசம்: இச்சம்பவத்தின் பின்னணி என்ன?

குகநாதன்: ரிஆர்ரி தொடங்கிய (1997) காலத்திலிருந்து அருட்செழியன் எமக்காக சென்னையில் பணியாற்றியவர். நான்   ரிஆர்ரியிலிருந்து திட்டமிட்டு வெளியேற்றப்பட்டு பின்னர் டான் தொலைக்காட்சியை நடாத்திக் கொண்டிருந்தபோதும் எனக்கு சென்னையில் நிகழ்ச்சிகளைப் பெறுவதற்கு உதவியவர். 2003ம் ஆண்டு நாம் 6 தொலைக்காட்சி சேவைகளை ஆரம்பித்தபோது வேறு ஒரு நிறுவனத்தில் பணியாற்றியவாறு எமக்கும் பணியாற்றினார். அவ்வாறு பணியாற்றிய காலத்தில் எம்மிடமிருந்து அவருக்கு இந்திய ரூபாய் 55 லட்சம் செலுத்தப்பட்டது. அதிலிருந்து அவர் எமக்கான சேவையை செய்து கொண்டிருந்தார். 18 மாதங்களின் பின்னர் சில கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் வெளியேற வேண்டியேற்பட்டது. இதனையடுத்து எமக்கு சொந்தமான உபகரணங்களை நான் புதிதாக நியமித்தவரிடம் கொடுக்குமாறு கேட்டபோது அவர் அதற்கு மறுப்புத் தெரிவித்தார். அதனையடுத்து அந்த உபகரணங்களை அவரிடமிருந்து சட்டபூர்வமாகப் பெறுவதற்காக நான் அண்ணா சக்தி என்ற ஒருபத்திரிகையாளருக்கு அட்டோனி பவர் கொடுத்தேன். அவர் பொலிசில் இதுகுறித்து முறைப்பாடு செய்ததன்பேரில் அவர் அனைத்து உபகரணங்களையும் 3 லட்சம் ரூபா பணத்தினையும் அவரிடம் வழங்கியிருந்தார். இவை நடைபெற்றது 2005ம் ஆண்டில். அண்ணா சக்தி என்ற அந்தப் பத்திரிகையாளரைக் கூட எனக்கு அறிமுகம்செய்து வைத்தவர் வேறுயாருமல்ல, அருட்செழியனால் எனக்கு அறிமுகம் செய்துவைக்கப்பட்ட அவரது நெருங்கிய உறவினரான ஒரு சட்டத்தரணிதான்.

இப்போது அவர் வழங்கியதாகக் குறிப்பிடப்படும் புகாரில், நான் அவருக்கு வழங்கிய 55 லட்சம் ரூபாவும் எனக்கு செலவிடப்பட்டதாகவும், அதனுடன் மேலதிகமாக 6 லட்சம் ரூபாவை தான் தனது சொந்தப்பணத்தில் செலவிட்டதாகவும், அதுதவிர தனக்கு 18 மாதம் சம்பளம் தரப்படவில்லை என்றும் தனக்கு மாதம் 50 ஆயிரம் சம்பளமாக நான் தருவதாக கூறியதாகவும் அதன்படி 9 லட்சம் சம்பளம் தரப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருப்பதாக பொலிசார் என்னிடம் தெரிவித்தனர். அண்ணா சக்தி என்பவர் பொலிசாரின் துணையுடன் தன்னை கட்டப்பஞ்சாயத்து நடத்தியே தன்னிடமிருந்து பணத்தையும் உபகரணங்களையும் பெற்றுக்கொண்டதாகவும் அவர் அந்தப் புகாரில் தெரிவித்ததாகவும் எனக்கு தெரிவிக்கப்பட்டது.

சில ஆயிரம் ரூபாக்கள் சம்பளத்தில் ஏற்கனவே வேறு நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டே எனக்கும் பணியாற்றிய அருட்செழியன் என்னிடம் எவ்வாறு 50 ஆயிரம் சம்பளம் கேட்டார் என்பது மற்றுமொரு தனிக்கதை. அவர் லண்டன் வர விரும்பியபோது, அவர் விசா பெறுவதற்காக அவர் எமது நிறுவனத்தில் வேலை செய்வதாகவும் அவருக்கு 50 ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கப்படுவதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன். அதனையே அவர் பொலிசாரிடம் கொடுத்து 9 லட்சம் ரூபா சம்பளம் கோரியிருந்தார்.
தனக்கு 15 லட்சம் ரூபா நான் தரவேண்டும் என்பதும் ஆனால் சமாதானமாக பேசுவதென்றால் 25 லட்சம் தரவேண்டும் என்றும் அவர் பேரம்பேசத் தொடங்கினார்.

தேசம்: இச்சம்பவம் எப்போது நடந்தது? எப்படி முடிவுக்கு வந்தது?

குகநாதன்: ஆகஸ்ட் 2ம் திகதி பிற்பகல் 3 மணியளவில் பொலிசார் என்னை அழைத்துச் சென்றனர். 3ம் திகதி இரவு 10 மணியளவில் வீடுசெல்ல அனுமதித்தனர். 5ம் திகதி கொழும்பு திரும்பினேன். அவர் நான் தரவேண்டும் என்று கூறியிருந்த 15 லட்சம் ரூபா வழங்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தப் பிரச்சினை (மன்னிக்கவும் கைது அல்ல கடத்தல் விவகாரம்) முடிவுக்கு வந்தது.

தேசம்:அருள்செழியன் நீங்கள் தன்னை வஞ்சகமாக ஏமாற்றியதாகக் குற்றம்சாட்டி உள்ளார்? இதன் பின்னணி என்ன?

குகநாதன்: வஞ்சகம் என்பதற்கு தமிழ்நாட்டில் என்ன அர்த்தம் என்பது எனக்கு சரியாகத் தெரியவில்லை. அதனால் நான் அவரை வஞ்சகமாக ஏமாற்றியதாகவே வைத்துக்கொள்வோம். அப்படி நான் அவரை ஏமாற்றியிருந்தால், அவர் இது தொடர்பாக 2005 முதல் 2006 கடைசிவரை சென்னையில் அசோக் நகரில் அலுவலகத்தை வைத்து நான் அங்கேயே தங்கியிருந்து டான் தொலைக்காட்சியை நடாத்திய காலத்தில் அவர் ஏன் என்மீது இந்தப் புகாரைத் தெரிவிக்கவில்லை. அல்லது தெரிவித்திருந்தால் பொலிசார் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. 5 வருடங்கள் கழித்து நடவடிக்கை எடுக்க என்ன காரணம். நான் வஞ்சகம் செய்தது 5 வருடங்களின் பின்னர் தான் அவருக்கு தெரியவந்ததா?.

தேசம்: உங்களை சுவாரஸ்யமான நாடகம் ஒன்றை அரங்கேற்றி உங்கள் செலவிலேயே சென்னைக்கு வரவழைத்ததாகக் அருள்செழியன் குறிப்பிடுகின்றார்?

குகநாதன்: சென்னைக்கு நான் சென்றிருந்தது எனது சொந்த விடயமாக. நான் இப்போது மட்டுமல்ல, இந்த வருடத்தில் மாத்திரம் 6 தடவைகள் சென்னை சென்று வந்திருக்கின்றேன். அவர் என்ன நாடகம் நடத்தினார் என்பது எனக்கு தெரியவில்லை. நான் சென்னை செல்வது எனது செலவிலேயே தவிர வேறு யாருடையை செலவிலும் அல்ல.

தேசம்: இச்சம்பவத்தை நாவலாக எழுதவுள்ளதாக அருள்செழியன் தெரிவித்துள்ளார்?

குகநாதன்: நாவல் ஒன்றுக்கு நான் கருப்பொருளானதில் மகிழ்ச்சியே.

தேசம்: ”அரை லட்சம் மனிதர்களைக் கொலைசெய்த இலங்கை அரசிற்கு ஆதரவாக கொழும்பிலிருந்து தொலைக்காட்சி நடத்தும் குகநாதன் என்னிடம் உதவி கேட்பதற்கு எந்தத் தார்மீக நியாயமும் இல்லை” என சபாநாவலன் எழுதியுள்ள குறிப்பில் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்திற்கும் சபாநாவலனிற்கும் என்ன சம்பந்தம்?

குகநாதன்: எனக்கு அருட்செழியனைவிட சபா நாவலனின் எழுத்து மீதே வெறுப்பு ஏற்படுகின்றது. அவர் தனது இனியொரு இணையத்தளத்தில் எழுதியிருப்பது அப்பட்டமான பொய். நான் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட சில நிமிடங்களில் அருள்செழியனின் சகோதரர் அருள்எழிலன் தனது தொலைபேசியை என்னிடம் கொண்டுவந்து தந்தார். எனக்கு தெரிந்த ஒருவர் பேசவேண்டுமாம் என்றே அவர் தனது கைத் தொலைபேசியை என்னிடம் தந்தார். நான் ஹலோ என்றதும் அவர் தன்னை சபா நாவலன் என்று அறிமுகம் செய்துகொண்டார். (அது சபா நாவலன் தானா அல்லது வேறுயாருமா என்பது கூட எனக்கு தெரியாது. ஏனெனில் அதற்கு முன்னர் அவர் குரலை நான் அறிந்திருக்கவில்லை) அப்போது நான் அவரை அறிந்திருக்கின்றேன் ஆனால் நேரில் கண்டதில்லை என்று ஆரம்பித்ததும், அவர் கூறியது இதுதான்:

‘அரசாங்கத்தின் ஆதரவாளர் ஒருவரை கைதுசெய்துவிட்டோம் என்றுதான் அவரது (செழியனின்) சட்டத்தரணிகள் மகிழ்ச்சியுடன் இருப்பதாகத் தெரிகின்றது. நீங்கள் ஏதாவது கொடுத்துவிட்டு தப்பிக்கப் பாருங்கள்”.

எனக்கு முன் பின் தெரியாத ஒருவரிடம் எதுவும் விவாதிக்கவோ அல்லது கருத்துக்கூறவோ அப்போது முடியாததால், ‘நானும் அப்படித்தான் யோசிக்கின்றேன்” என்று அவரிடம் பதிலளித்தேன்.

பின்னர் அவர், ‘பாரிசில் சுபாசிடம் கதைத்தீர்களா?” என்று கேட்டார். எனக்கு சுபாசை தெரிந்திருந்தாலும் அவரிடம் அப்போது கதைக்க வேண்டிய தேவை எனக்கு இருக்கவில்லை.

நான் கதைக்கவில்லை. உதயகுமாருடன்  மட்டுமே நான் பேசியதாக நான் கூறியபோது, அவராகவே சுபாஸ் பொறுப்பு நின்றால் நான் அவர்களிடம் சொல்கின்றேன் என்றார். நான் அதற்கு தேவைப்பட்டால் கேட்கின்றேன் என்று கூறிவிட்டு தொலைபேசியை எழிலனிடம் கொடுத்துவிட்டேன்.

இப்படி நடக்கவில்லை என்றால், நான் சொல்வது பொய்யா அல்லது சபா நாவலன் சொல்வது பொய்யா என்பதை அருட்செழியனிடமுள்ள வீடியோ வெளிவருகின்றபோது தெரிந்துகொள்ளலாம்.

குகநாதன் அவரிடம் உதவி கேட்பதற்கு தார்மீக உரிமை இல்லாமல் இருக்கலாம். ஆனால் குகநாதன் கேட்காமலே உதவுவதற்கு சபா நாவலன் முன்வந்தார் என்பதை நிரூபிக்க சட்டப்படி கடத்தப்பட்ட என்னிடம் எதுவும் இல்லை.

என்னுடன் இவ்வாறு பேசியவர், அப்போது அங்கே இருந்த இலங்கையைச் சேர்ந்த ஊடகவியலாளரும், டான் தொலைக்காட்சியின் தலைமை நிர்வாகியுமான திரு. சல்தான் அவர்களிடமும் பேசியதாக பின்னர் அறிந்துகொண்டேன். அவருக்கு அவர் கூறியது இதுதான்:
‘நீங்கள் தான் மகிந்த அரசு எல்லாம் நல்லாக செய்கிறது என்று கூறுகின்றீர்களே ராஜபக்சவிடம் வாங்கிக் கொடுக்கலாம் தானே.”

அருள்செழியன் கேட்பது நியாயமானதுதானா? என்பதை அறியாமல் அவருக்கு பணத்தைக் கொடுங்கள் என்று சொல்வதற்கு சபா நாவலனுக்கு எந்த அருகதையும் இல்லை. 

தேசம்: ”குகநாதனிடம் அவர் இலங்கை அரசின் ஊதுகுழல் என்பதால் இச் சம்பவத்தில் தலையிட விரும்பவில்லை என்பதைக் கூறியிருந்தேன். இலங்கை அரசின் பாசிசத்திற்கு எதிராக எழுதும் நான் இலங்கை செல்ல முற்பட்டால் குகநாதன் இன் வாக்குமூலங்களோடு இலங்கை அரச படைகள் என்னைக் கைது செய்யலாம்.” என சபாநாவலன் குற்றம்சாட்டுகிறார். இச்சம்பவங்களில் சம்பந்தப்பட்டு உள்ள அனைவருமே ஏதோ ஒருவகையில் ஊடகத்துறையுடன் சம்பந்தப்பட்டவர்கள். அப்படி இருக்கையில் இவ்வாறான ஒரு மோசமான சூழல் தேவையானதா?

குகநாதன்: அருள்செழியனின் என்மீதான புகார் தவறானது என்பதை நான் நிரூபிப்பது பெரிய விடயமல்ல. ஆனால் நான் அதனை சட்டரீதியாக எதிர்கொள்வதெனில் பொலிசார் என்னை நீதிமன்றில் ஆஜர்படுத்த வேண்டும். அப்படி ஆஜர்படுத்தினால் நீதிமன்றம் எனது பாஸ்போட்டை தன்வசப்படுத்தும், நான் பிணையில் வந்தாலும் அந்த வழக்கு முடியும்வரை இந்தியாவில் நின்றிருக்க வேண்டி வரும். இவற்றைத் தவிர்க்குமாறு எனக்கு வேண்டிய சிலர் ஆலோசனை கூறினார்கள். நான் ஒரு வாரம் இந்தியாவில் நின்றிருந்தாலும் கொழும்பில் எனது நிறுவனத்தின் செயற்பாடுகளுக்கு பல நெருக்கடிகள் ஏற்பட்டுவிடும். அதனால் அவர் கோரிய பணத்தை கொடுத்துவிட்டு பிரச்னையிலிருந்து விடுபடுவது என்று முடிவெடுத்தேன்.

அருள்செழியன் கோரிய 15 லட்சம் ரூபாவையும் ஒரேநாளில் செலுத்துவது சிரமமானதாக இருந்ததால், உடனே 10 லட்சமும் மிகுதி 5 லட்சத்தையும் ஒருமாதத்தில் செலுத்துவதாகவும் முடிவானது. அந்த 5 லட்சத்தை ஒரு மாதத்தில் பெறுவதற்கு யாரேனும் ஒருவரை ஐரோப்பாவில் பொறுப்பு நிற்கச் சொல்லுங்கள் என்று அவர்கள் கேட்டபோது, முதல்நாள் சபா நாவலன் கூறியது எனது ஞாபகத்திற்கு வந்தது. இதனால் மனைவியிடம் கூறி முதலில் சுபாஸ் பொறுப்பு நிற்பாரா என்று கேட்கச் சொன்னேன். (ஏனெனில் என்னுடன் தொலைபேசியில் எனது மனைவி மட்டுமே கதைக்க அனுமதிக்கப்பட்டிருந்தார். பிரெஞ்சு பொலிசார் மட்டுமன்றி பிரான்ஸ் லியொன் நகரில் தலைமையகத்தைக் கொண்டிருக்கும் இன்ரர்போல் பொலிசார் கூட என்னுடன் கதைக்க சென்னை பொலிசார் அனுமதி வழங்கவில்லை.). தான் பொறுப்பு நின்றால் சபா நாவலன் பொறுப்பு நிற்பார் என்றால் அதற்கு நான் தயார் என்று சுபாஸ் கூறியதும் சபா நாவலனிடம் எனது மனைவி தொடர்புகொண்டார்.

மறுநாள் 10 லட்சம் ரூபா பணத்தைக் கொடுத்து மிகுதி பற்றி கதைத்தபோது சபா நாவலன் தான் பொறுப்புநிற்க மறுத்துவிட்டதாகவும், பிரான்சிலிருந்து அசோக் பொறுப்பு நின்றால் தங்களுக்கு சரி என்றும் அவர்கள் கூறினார்கள்.

குகநாதனுக்கு பிரான்சில் எப்படி செல்வாக்கு இருக்கிறது என்று பார்ப்போம். எங்கே அசோக்கிடம் கதைத்து அவரை எமக்கு கதைக்கச் சொல்லுங்கள் என்றார்கள்.

அசோக் இது போன்ற விடயங்களுக்கு பொறுப்புக்கு நிற்கமாட்டார் என்பதை அவர்கள் மட்டுமல்ல, நானும் நன்றாக அறிவேன். இருந்தாலும் கேட்டுப்பார்ப்பதில் தவறில்லை என்பதால் மனைவியிடம் அசோக்கிடம் கதைக்குமாறு கூறினேன்.

ஆச்சரியமாக இருந்தது. கூடவே மகிழ்ச்சியாகவும் இருந்தது. அசோக் தான் உடனே எழிலனுடன் கதைப்பதாக கூறினார்.

அப்போது எழிலன் அங்கிருக்கவில்லை. சில நிமிடங்களில் அருள்செழியனுடன் தொடர்புகொண்ட எழிலன், அசோக்கிடமிருந்து அழைப்பு வந்ததாகவும் தன்னை இந்த விடயத்திற்குள் இழுக்க வேண்டாம் என்று கூறிவிட்டு தொடர்பைத் துண்டித்து விட்டதாக எழிலன் கூறியதாக செழியன் கூறினார்.

ஆனால் அசோக் எம்மிடம் கூறியது, தான் தொலைபேசி எடுத்ததும் எழிலன் தன்னிடம் கூறினாராம், இந்த விடயத்தில் நீங்கள் தலையிட வேண்டாம் என்று. எழிலன் பொய் கூறினார் என்றே நான் நிச்சயமாக நம்புகின்றேன்.

தேசம்: இச்சம்பவத்தினுடைய பின்னணியில் அரசியல் செல்வாக்கு அல்லது அதிகார துஸ்பிரயோகம் என்பன பயன்படுத்தப்பட்டதாக நீங்கள் கருதுகிறீர்களா?

குகநாதன்: நிச்சயமாக. அதுகுறித்து நேரம் வரும்போது பேசுவேன்.

தேசம்: நீங்கள் கடத்தப்பட்ட சூழலில் அல்லது கைது செய்யப்பட்ட சூழலில் உளவியல் ரீதியாகவோ உடலியல் ரீதியாகவோ துன்புறுத்தப்பட்டீர்களா?

குகநாதன்: உடல்ரீதியாக அல்ல. ஆனால் உள ரீதியாக.

அப்போது எனக்கு ஞாபகம் வந்ததெல்லாம், முதன்முதலில் அருள்செழியனை ஐரோப்பா அழைத்துவந்தபோது காரில் பிரான்சிலிருந்து ஜெர்மனிக்கு அழைத்துச் சென்றிருந்தேன். அப்போது விரைவு பாதையில் உள்ள தரிப்பிடம் ஒன்றில் தரித்து நின்றபோது அவர், என் முன்னே மண்டியிட்டு ‘’அண்ணே….. இப்படியெல்லாம் பார்ப்பேன் என்று கனவிலும் நினைத்திருந்தவனல்ல. இவற்றைக் காட்டிய உங்களை……’’ என்று இவர் மனமுருகிய காட்சி தான் எனக்கு ஞாபகம் வந்தது.

நான் பொலிஸ் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டதும் பொலிசார் முதல்முதலில் செய்தது பத்திரிகைக்கு செய்தி எழுதியதுதான். நான் மண்டியிட்டு மன்றாடியதாக அருட்செழியன் ஒரு தளத்தில் எழுதியிருக்கிறார். கூடவே தன்னிடம் வீடியோ பதிவும் இருக்கிறது என்கிறார். அதனை பார்க்க நான் ஆவலாக இருக்கின்றேன். நண்பர்கள் சிலர் பணத்தைக் கொடுத்துவிட்டு வெளியேறுங்கள் என்று ஆலோசனை கூறியிருக்காவிட்டால் நிச்சயமாக சட்டரீதியாகவே எதிர்கொண்டிருப்பேன். அப்படியிருக்கையில் மன்றாட வேண்டிய தேவை எனக்கு இல்லை.

சம்பவம் நடைபெறுவதற்கு முன்னரும் பின்னரும் யார் யாரெல்லாம் செழியன், எழிலன் ஆகியோரின் கைத் தொலைபேசிகளுக்கு கதைத்தார்கள் என்ற விபரமும் தற்போது என்னிடம் இருக்கின்றது. இதுபற்றி பின்னர் எழுதுவேன்.

._._._._._.

குகநாதன் – அருள்சகோதரர்கள் : கடத்தல் – கைது விவகாரம் தொடர்பில் சில குறிப்புகள்

1. இச்சம்பவம் முற்றிலும் அருள்செழியன் – எஸ் எஸ் குகநாதன் சம்பந்தப்பட்ட நிதிக் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விடயம். இவர்களில் எவரும் புரட்சிகரமான நிறுவனங்களுக்கு பணிபுரிந்தவர்கள் அல்ல. இருவருமே ஒன்றாக இணைந்து வர்த்தக கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டவர்கள். தற்போது அது தொடர்பான சர்ச்சையில் இறங்கி உள்ளனர். இவர்கள் ஆளுக்கு ஆள் வைக்கும் குற்றச்சாட்டுக்கள் சம்பந்தப்பட்ட நாட்டின் சட்டவரம்பிற்கு உள்ளேயே தீர்க்கப்பட வேண்டும்.

2. ‘மாற்று அரசியலுக்கான உரையாடல் வெளி!’ என்ற இலக்கு நோக்கிச் செயற்படும் இனியொரு இணையம், புதிய திசைகள் அமைப்பு (அவர்களும் ஒரு இணையத்தை குரல்வெப் என்ற பெயரில் செயற்படுத்துகின்றனர். சன்றைஸில் வானொலி நிகழ்ச்சி ஒன்றையும் நடத்துகின்றனர்.) இச்சம்பவத்துடன் எவ்வித தொடர்பும் அற்றதாக இருந்திருந்தால் இவ்விடயத்தை உடனடியாக வெளிக்கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால் இச்சம்பவம் இடம்பெற்றது ஓகஸ்ட்  02 2010ல். இச்சம்பவத்தை தமிழ்அரங்கம் வெளிக்கொண்டுவந்தது சரியாக ஒரு மாதத்தின் பின்னர் செப்ரம்பர் 02 2010ல். நிர்ப்பந்தத்தின் பெயரில் இனியொரு ஆசிரியர் சபாநாவலன் பதில் எழுதியது செப்ரம்பர் 08 2010ல். ஒரு வகையில் தமிழ் அரங்கம் இந்நிகழ்வை வெளிக்கொணராது இருந்திருந்தால் இப்படி ஒரு சம்பவம் இடம்பெற்றதோ பணப் பரிமாற்றம் இடம்பெற்றதோ வெளியே வந்திருக்க வாய்ப்பில்லை. இருந்தாலும் தமிழரங்கம் 6000 மைல்களுக்கு அப்பால் நடந்த ஒரு சம்பவத்தை சரியான முறையிலோ அல்லது தவறான முறையிலோ வெளிக்கொண்டுவந்துள்ளது. இந்தியப் பொலிஸ்சுடன் கூட்டுச் சேர்ந்து கட்டைப் பஞ்சாயத்து நடத்திய சபா நாவலன், குகநாதனிடம் 30 இலட்சம் கோரினார்!

இலங்கையில் இருந்து ஐரோப்பாவரை ஒளிபரப்பாகின்ற ஒரு தொலைக்காட்சியின் உரிமையாளர் தமிழ்நாட்டில் சட்டப்படி கைது செய்யப்பட்டமை மிக முக்கியமான செய்தி. அது இருட்டடிப்புச் செய்யப்பட்டதன் நோக்கம் கேள்விக்குரியது.

3. இச்செய்தியை இருட்டடிப்புச் செய்ததுமல்லாமல் இச்செய்தி வெளியே வந்ததும் அதுவரை மௌனம் காத்த இனியொரு இணையத்தளம் ‘’ அரை லட்சம் மனிதர்களைக் கொலைசெய்த இலங்கை அரசிற்கு ஆதரவாக கொழும்பிலிருந்து தொலைக்காட்சி நடத்தும் குகநாதன்’’ என்றும்  ‘’குகநாதன் போன்ற இலங்கை அரச ஊதுகுழல்’’ என்றும் குற்றம்சாட்டுகிறது. இது ஏதோ ஒருவகையில் அருள்சகோதரர்களின் செயலை நியாயப்படுத்த முயற்சித்து இருப்பதையே காட்டிநிற்கின்றது. வர்த்தகத்தில் ஈடுபட்ட இருவருக்கு இடையேயான பிரச்சினையில் அரசியல் தூய்மைவாதம் பேசுகின்ற நாவலன் ஒருபக்கம்சார்ந்து நிற்பது அவர்களுக்கு இருந்த நலன்களின் முரணையே காட்டி நிற்கின்றது. இது நாவலன் இச்சம்பவத்தில் தொடர்பட்டு இருந்தார் என்ற சந்தேகத்தை மேலும் வலுவாக்குகின்றது.

4. பிரித்தானியாவில் இடம்பெற்ற 20க்கும் மேற்பட்ட தமிழர்களிடையேயான படுகொலைகளில் கணிசமானவை பொருளாதாரக் கொடுக்கல் வாங்கல் தொடர்பானவை. வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களிடையே இவ்வாறான கொடுக்கல் வாங்கல்களுக்கு எல்லையே இல்லை. இவற்றுக்கு அரசியல் முலாம்பூசி ஒரு தரப்பின் செயற்பாட்டை அரசியல் மூலம் நியாயப்படுத்துவது  நீண்ட அரசியல் செயற்பாடுகளுக்கு ஆரோக்கியமாக அமையாது.

5. இலங்கையில் விடுதலையின் பெயரில் இயங்கிய விடுதலை இயக்கங்கள் தங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு சார்ந்து மேற்கொண்ட நடிவடிக்கைகள் இன்னமும் எம்மனக் கண் முன்நிற்கின்றது. விசாரணையின்றியே தண்டனை. தண்டனைக்குப் பின் காரணங்களைத் தேடுவதும் தீர்ப்பு வழங்குவதும். எஸ் எஸ் குகநாதன் மீதான காலம் தாழ்த்திய வருகின்ற குற்றச்சாட்டுக்கள் இதனையே காட்டுகின்றன.

6. இலங்கை இந்தியா போன்ற மூன்றாம் உலகநாடுகளின் பொலிஸ்படைகள் பற்றி யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. ஒரு விவாதத்திற்காக ‘இனியொரு ஆசிரியர் சபாநாவலன் அருள்எழிலனுக்கு சம்பளம் கொடுக்கவில்லை என்றால் தமிகத்தின் பிரபல ஊடகங்களில் பிணியாற்றி செல்வாக்குள்ள அருள்எழிலனுக்கு சபாநாவலனை தமிழகம் வரச்செய்து அவரைக் கைது செய்து பணம்தரும்படி மிரட்டுவது ஒன்றும் கடியமான விடயம் அல்லவே.’ இனியொருவின் கூற்றுப்படி இலங்கை அரசின் ஊதுகுழல் ஊடகம் ஒன்றின் உரிமையாளரை அந்த அரசுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கும் தமிழக அரசின் பொலிஸ்படையைக் கொண்டு சட்டப்படி கைது செய்து நீதிமன்றம் செல்லாமலேயே 15 லட்சம் ரூபாய் பணத்தை அவரிடம் வாங்கிக் கொண்டு விடமுடியும் என்றால் எதுவும் சாத்தியம் அல்லவா?

7. இங்குள்ள ஆபத்து என்னவென்றால் இது இவ்வாறான செயல்களுக்கு ஒரு முன்ணுதாரணமாக அமைந்து உள்ளது. இலங்கைத் தமிழர்களுடன் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் தமிழக காவல்துறையை வைத்து மிரட்டி அவர்களிடம் இருந்து பணத்தைப் பெற முடியும் என்பதனை இச்சம்பவம் நடைமுறையில் நிரூபித்து உள்ளது. ஏற்கனவே இவ்வாறான கசப்பான சம்பவங்கள் சில இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்பட்டு உள்ளது. அவ்வாறான சம்பவங்களை நானே செய்தியாக வெளியிட்டும் உள்ளேன். இச்சம்பவம் இவ்வாறானவர்கள் தங்கள் செயல்களை நியாயப்படுத்துவதற்கு வழிகோலி உள்ளது.

8. கைது செய்யப்பட்ட நிலையிலோ அல்லது கடத்தப்பட்ட நிலையிலோ மிரட்டலுக்கு உள்ளாக்கப்பட்ட ஒருவர் வழங்கும் வாக்குமூலத்தையோ அல்லது அவருடைய துணைவி வழங்கும் வாக்குமூலத்தையோ உண்மையானதாக எவரும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பது சாதாரணர்களும் அறிந்த விடயம். அதனால் தான் சட்டத்தை அமுல்படுத்துபவர்களிடம் இருந்து நீதித்துறை சுயாதீனமாக செயற்பட வேண்டும் என்று கோரப்படுகிறது. தன்னை விடுவிப்பது அல்லது தனது துணைவரை விடுவிப்பதே அவருடைய அல்லது அவருடைய துணைவருடைய நோக்கமாக இருக்கும். அதனால் கைது செய்யப்பட்ட அல்லது கடத்தப்பட்ட நிலையில் பதிவு செய்யப்பட்ட விடயங்கள் சுயாதீனமான நிலையில் ஏற்றுக்கொள்ளப்படாதவரை அர்த்தமற்றவை. இருந்தாலும் எஸ் எஸ் குகநாதன் அப்பதிவுகளையும் மாற்றம் செய்யாது வெளியிடும்படி சவால்விட்டுள்ளார்.

9. அருள்சகோதரர்கள் குடும்பத்தினர் எஸ் எஸ் குகநாதனிடம் நிதியை இழந்தது உண்மையா இருந்தால் அவர்கள் குறைந்தபட்சம் நீதிமன்றத்தினூடாகவே அதனைப் பெற முயற்சித்து இருக்க வேண்டும். சமூகப் பொறுப்புடையவர்கள் இவ்வாறான வழிகளில் தங்கள் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வது பிறழ்வான சமூகப் போக்கிற்கு முன்னுதாரணமாக அமையும்.

10. ஏற்கனவே எழுந்துள்ள அரசியல் நிலையினால் தமிழகத் தமிழர்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்குமான உறவு பலவீனமானதாகவே உள்ளது. இவ்வாறான தனிப்பட்ட சம்பவங்கள் இவ்வுறவை மேலும் மோசமாக்காமல் இருக்க சம்பந்தப்பட்ட அனைவரும் முயற்சிக்க வேண்டும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

111 Comments

  • மாயா
    மாயா

    ஐரொப்பாவில் புலிகளது வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருந்தவர் இந்த குகநாதன். இதில் யாரிடமும் மாற்றுக் கருத்து வராது என நினைக்கிறேன். தன்னையும் தனது தமிழ் ஒளி வானோலி – தொலைக்காட்சி எனும் ஊடகங்களை பயன்படுத்தி புலிகளுக்கு விளம்பரமாக நடந்து கொண்டதற்கு பின்னணி , குகநான் பிழைப்புக்காகவேயாகும். ஐரோப்பாவில் சும்மாயிருந்தோரையும் புலியாக்கிய கொடுமையை செய்தவர் இதே குகநாதன்தான் மற்றும் அவரது குழுவினர்தான். இங்கே தர்சன் என்பவரும் அடக்கம். என்னதான் புலியாக குகநாதன் நடித்தாலும் , அவர் உள்ளே புலி எதிர்ப்பாளராகவே இருந்தார் என்பது உண்மை. புலிகளின் பெயரை வைத்து வாழ்கிறார் எனும் பிரச்சனையே , அந்த ஊடகத்தை புலிகள் கைப்பற்ற காரணமாக அமைந்தது.

    அடுத்து குகநாதன் சொல்வது அனைத்தும் உண்மையுமில்லை, அருள் சகோதரர்கள் சொல்வது அனைத்தும் உண்மையுமில்லை. இவர்கள் பெரிய உண்மைகளை மறைத்து பொய் கதைக்கிறார்கள். அதாவது தமக்கு சாதகமாக வார்த்தைகளால் விளையாடுகிறார்கள். குகநாதனின் கடத்தல் , கைது இல்லை. இங்கே போலீசாரோடு , தமிழக அரசியலும் விளையாடியிருக்கிறது. குகநாதன் , எந்த இடத்திலும் சமாளித்து தப்பும் திறமைசாலி. ஐரோப்பாவில் இவரது ஊடகத்தில் பங்குதாரராக இணைந்தவர்கள் நிலை? தலையில் துண்டு.6 செனல்களை தொடங்கிய போது , ஜெயலலிதா தொலைக் காட்சி உட்பட அரபு சேக்குக்கும் துண்டு. இலங்கையில் பல ஊடகங்களுக்கு சற்லைட் இணைப்பு கொடுத்து , அவர்களது தலையிலும் துண்டு. இவை தொடரும்…….. இது இவரது குணாதிசயம். வழக்கமான செயல்பாடு.

    குகநாதன் 6 முறை சென்னை சென்றதாக சொல்வதில் , எவ்வளவு தூரம் உண்மை என்பது தெரியவில்லை. அது சாத்தியமானதாக இல்லை. குகநாதன் , சென்னைக்கு தனிப்பட்ட காரணங்களுக்காகா சென்னைக்கு சென்றிருக்க மாட்டார். அவர் அப்படிச் சென்றிருந்தால் , அவர் தனது ஊடகத் தொடர்பு வேலைகளுக்காகவேதான் சென்றிருப்பார். அது அவர் வந்துள்ளார் என்பதை காட்டியிருக்கும். டான் தொலைக் காட்சி தொடர்பாக , அருட்செழியனுடன் பணத் தகராறு இருந்து வந்தது. இங்கே எவருடனாவது ஒரு பேச்சு வார்த்தையின் பின்னேதான் குகநாதன் சென்னை சென்றிருக்க வேண்டும். அது அருட்செழியன் சார்ந்தோரிடமாக இருக்கலாம். அதைத்தான் திட்டம் போட்டு வரவழைத்தாக சொல்கிறார்கள். அதனால்தான் அருட்செழியன் குழுவினரால் இவரை போலீசின் உதவியுடன் கடத்த முடிந்திருக்கிறது.

    குகநாதன் வழக்கென்று போவது குறித்து இப்போது கதைக்கிறார். ஆனால் , அவர் பணத்தைக் கொடுத்து தப்பி வந்தது அவரது சமயோசிதம். அதை விடுத்து வழக்கு என போயிருந்தால் , வழக்கு முடியும் வரை அவரால் இந்தியாவை விட்டு நேர்மையாக வெளியேற முடியாமல் போயிருக்கும். வேறுவிதமாக வெளியேறியிருக்கலாம்.?? அதுவும் அவரால் முடியும்.

    Reply
  • palli
    palli

    எனக்கு குகநாதனை தெரியும், பலதடவை இதேதளத்தில் அவரது குறைபாடுகளையும் சொல்லியுள்ளேன்; ஆனால் அவர் ஒரு விளம்பரபிரியர் என்பது உன்மைதான், ஆனால் இந்த கடத்தல் சமாசாரத்தில் குகநாதன் தவறு விட்டாலும் அவரை கடத்திய பிரமுகர்கள் முக்கியமாக செழியன் சகோதரர்கள். சபா நாவலன் ஆகியோர் அடிக்கடி மனிதனேயம் பற்றி பீலா விடுபவர்கள். உன்மையில் இவர்கள் குகநாதன் சொல்லுவது போல் நடந்திருந்தால் சமூகத்தின் முன் மிகபெரிய குற்றவாளிகள் மட்டுமல்ல கேவலமானவர்கள்? இவர்களை இனம்காட்ட வேண்டியது ஊடகங்களின் கடமை; கண்டிப்பாக இதில் பல்லியின் எழுத்து சிலரை திக்குமுக்காட வைக்கும்;

    எனது கேள்வி ?
    அசோக்; சுபாஸ்; உரித்திரகுமார்; இவர்கள் மூலம் சபாநாவலன் எப்படி பணம் பெறமுடியும், அப்படியானால் ஏன் இவர்களை பொறுப்புக்கு சிபார்சு செய்தார்?? ஆக செழியனிடம் குகநாதன் கொடுக்கும் பணத்தில் இனியொருவுக்கும் பங்கு உண்டோ?? என்ன கொடுமை இது தவறுகளை சுட்டிகாட்டி சமூகத்தை விழிக்க செய்ய வேண்டிய ஊடகவியாளர்களே இப்படி கேவலமான கடத்தல் தொழிலில் ஈடுபடுவதும் பணம் பறிப்பதும் கவலைக்கு உரியதே, இதனால் பல்லி குகநாதனுக்கு வக்காளத்து வாங்குவதாக சிலர் எண்ணலாம்; எனது நோக்கம் குகநாதனை காப்பதோ அல்லது அவரது நியாயங்களை சொல்லுவதோ அல்ல, இன்னும் சிலர் ஊடகம் என்னும் போர்வைக்குள் இருந்துகொண்டு அராசகம் செய்வது அவர்கள் கடந்த காலங்களில் இயக்க செயல்பாட்டில் இருந்து செய்த காரியங்கள் காலம் கடந்து தொடர்கிறது போல்தான் தெரிகிறது; இந்த சம்பவம் உன்மையாயின் பல்லியின் கண்டனங்களை இது சார்ந்தவர்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்;

    Reply
  • T Constantine
    T Constantine

    Alternative Politics

    Reply
  • sangar
    sangar

    மிகவும் பொறுப்புணர்வோடு மிகவும் சரியான கண்ணோட்டத்தில் எழுதப்பட்டுள்ளது.தேசம் ஆசிரியர் ஜெயபாலன் பணி உண்மையிலே பாராட்டப்படவேண்டியது. அவர் தனக்கே உரியபாணியில் உண்மைகளை வெளிக்கொனர்ந்துள்ளார்.

    “புதிய திசைகள்” என்றால் ஏதோ உண்மையிலே புதிய திசை காட்டப்போகிறார்கள் என நம்பிய பலருள் நானும் ஒருவன்.ஆனால் அந்த புதிய திசை என்பது “கடத்தல் கப்பம் என்ற வியாபார திசையையே” அவர்கள் கூறியிருக்கிறார்கள் போலும் என்பதை இந்த கட்டுரையை படித்த பின்பு நினைக்கத் தோன்றுகிறது.பாவம் தமிழ் மக்கள்.பனையால விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாக ஏற்கனவே புலிகளின் போராட்டத்தால பல இழப்புகளை சந்தித்து விரக்தியில் இருக்கும் மக்களை இப்படி புதிய சிசைகள் என்று மேலும் ஏமாற்றுவது நல்லது அல்ல.

    Reply
  • kunaratam
    kunaratam

    அருட்செழியன் என்பவர் பாலசிங்கத்தை பேட்டி காண லண்டன் வந்திருந்தார் என தேசம் ஆசிரியர் ஜெயபாலன் சுட்டிக்காட்டுகிறார். புலிகளை “பாசிசவாதிகள்” என சொல்லும் நாவலன் எப்படி இந்த புலிக் கோஸ்டிகளுடன் உறவு வைத்திருக்கிறார் என்று புரிந்து கொள்ளமுடியவில்லை. அதைவிட ஆச்சரியம் என்னவெனில் இந்த புலிக் கோஸ்டிகள் எப்படி கருனாநிதி அரசில் செல்வாக்கு படைத்தவர்களாக விளங்குகின்றனர்? ஏனெனில் பிரெஞ்சு குடியுரிமை பெற்ற செல்வாக்கு மிக்க பிரமுகரான குகநாதனை ஒரு சாதாரண பொலிஸ் அதிகாரி கைது செய்ய துணியமாட்டார். மாறாக கருனாநிதி குடும்பத்தில் இருந்தோ அல்லது யாராவது ஒரு அமைச்சர் மட்டத்தில் இருந்து சொல்லப்பட்டாலே இப்படி செய்யமுடியும். பொலிஸ் கமிஸனர் அலுவலகத்தில் பிடித்துவைத்து பலருடனும் தொலைபேசியில் கதைக்கவைத்தது மட்டுமல்ல யாவும் வீடியோவாக படம் பிடிக்கப்பட்டதாகவும் கூறுகின்றனர். பொலிஸ் கமிஸனர் அலுவலகம் எப்படி இப்படி ஸ்டுடியோவாக மாற்றப்பட்டது? அதற்கு பயன்பட்ட உயர்மட்ட செல்வாக்கு யாருடையது? ஒரு புறத்தில் முள்ளிவாயக்கால் படுகொலைகள் பற்றி இனியொருவில் பக்கம் பக்கமாக எழுத்து. இன்னொரு புறத்தில் அந்த முள்ளிவாயக்கால் படுகொலைக்கு உதவிபுரிந்த கருனாநிதி அரசுடன் இரகசிய உறவு. இரட்டை வேடம் பொடுவதற்கு ஒரு அளவு வேண்டாமா? இந்த அநியாயத்தை தட்டிக் கேட்க யாரும் இல்லையா?

    Reply
  • மாயா
    மாயா

    குகநாதன், இலங்கையிலுள்ள ஒரு சிங்கள தொலைக் காட்சிக்கே 15 மிலியன் ருபாய்ககு நாமம் போட்டுள்ளார் என தெரிய வருகிறது.

    இலங்கையிலும் குகநாதன், மாட்டிக் கொள்ளும் தூரம் தொலைவில் இல்லை. இலங்கையின் ஏனைய நிறுவன சுத்துமாத்து விடயங்கள் வேறு…..??

    Reply
  • மாயா
    மாயா

    //பிரெஞ்சு குடியுரிமை பெற்ற செல்வாக்கு மிக்க பிரமுகரான குகநாதனை ஒரு சாதாரண பொலிஸ் அதிகாரி கைது செய்ய துணியமாட்டார்.மாறாக கருனாநிதி குடும்பத்தில் இருந்தோ அல்லது யாராவது ஒரு அமைச்சர் மட்டத்தில் இருந்து சொல்லப்பட்டாலே இப்படி செய்யமுடியும். பொலிஸ் கமிஸனர் அலுவலகத்தில் பிடித்துவைத்து பலருடனும் தொலைபேசியில் கதைக்கவைத்தது மட்டுமல்ல யாவும் வீடியோவாக படம் பிடிக்கப்பட்டதாகவும் கூறுகின்றனர். பொலிஸ் கமிஸனர் அலுவலகம் எப்படி இப்படி ஸ்டுடியோவாக மாற்றப்பட்டது? அதற்கு பயன்பட்ட உயர்மட்ட செல்வாக்கு யாருடையது? – kunaratam //

    குகநாதன் செல்வாக்கு பெற்ற பிரமுகர் என்பது சற்று ஓவர். அவரை இந்த முட்டாள் தமிழர் மட்டுமே அறிவர். புலத்தில் வாழும் நாட்டு குடியுரிமை : கடவுச் சீட்டு பெற்றோரெல்லாம் ( இந்தியர்கள் , சாதாரணமாகவே ஆவென்று வாய் பிளப்பவர்கள்) பெற்றவர்கள் அனைவரும் அந்த நாட்டு செல்வாக்கு பெற்றவர்கள் அல்ல.

    பாவம், அடிமட்ட மக்கள் ,…….? இந்த வானோலி , தொலைக் காட்சி , ஊடகவாதிகள் ஆகியோரை, எல்லாம் தெரிந்தவர்களாக நம்புகிறார்கள். இவர்கள் அனைவரும் அடுத்தவரை வறுகவே ஊடகங்களை நடத்துகிறார்கள். பொதுநல நோக்கம் எத்தனை வீதம் என்று கேட்டால் , 0.

    சண் தொலைக் காட்சியை ஐரோப்பாவுக்குள் கொண்டு வந்தவர் இந்த குகநாதன்தான். கடைசியில் சண் தொலைக் புரோகிராம்களை காசு கொடுத்து வாங்காமல் , அதையும் அருள்எழிலன் போன்றோரை வைத்து , தமிழ் நாட்டில் தொலைக் காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை , களவாக ஒளிப்பதிவு செய்து ஐரொப்பாவில் போட்டு , இறுதியில் , TRTயில் இருந்தவர்களாலேயே ரெக்கோட் பண்ணி சண் குழுமத்துக்கு அனுப்பப்பட்டது. அதனால் சண் , தமது நிகழ்ச்சிகளை நிறுத்திக் கொண்டு , நிகழ்ச்சிகளை , தீபம் தொலைக் காட்சிக்கு விற்றது. அதுவும் நிறுத்தப்பட்டு , இன்று நேரடியாக சண் தொலைக் காட்சி ஐரோப்பாவில் ஒளிபரப்பை தொடர்கிறது. எனவே இந்த கடத்தல் கைதில் சண் குழுமம் நேரடியாக ஈடுபட்டுள்ளது. அதற்கான வாய்ப்பு , அருள்எழிலன் இப்போது சண் தொலைக் காட்சியில் பணிபுரிவதால் ஏற்பட்டுள்ளதாக கருதலாம். எனவே அன்று எதுவும் செய்ய முடியாத அருள் எழிலனால் இன்று எப்படி இவற்றை செய்ய முடிகிறது?…………………..?

    அடுத்து குகநாதன் , தற்போது இரண்டு கடவுச் சீட்டுகளை வைத்துள்ளார். அதில் ஒன்று பிரெஞ்சு, அடுத்தது இலங்கைக்கானது. அதாவது டுவல் சிட்டிசன். அதை வைத்தே குகநாதன் சென்னை வந்து சென்றுள்ளார் எனும் தகவல் சென்னையிலிருந்தும் , இலங்கையிலிருந்தும் கிடைத்தது. குகநாதன் , யாழ்பாணத்திலிருந்து , டக்ளசின் துணையோடு தொலைக் காட்சியை நடத்தி வருவது அனைவருக்கும் தெரிந்தது என நம்புகிறேன். இலங்கை அரசுக்கு இவரது தொலைக் காட்சி தொடர்பான விடயங்கள் பெரிதாகத் தெரியாது. ஐரோப்பாவில் அனைத்து தமிழர்களும் இவரது தொலைக் காட்சியை பார்க்கிறார்கள் எனும் பில்டப்பை குகநாதன் கொடுத்துள்ளார். இவை குகநாதனுக்கு கைவந்த கலை. ஐரோப்பிய சிங்களவர்களுக்கு இவை தெரியாது.

    இதற்கெல்லாம் மேலே , புலிகளும் , புலி எதிர்ப்பாளர்களும் , குகநாதன் விடயத்தில் எப்படியெல்லாம் இணைந்து செயல்பட்டிருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும் போது , இவர்களது தளங்களை வாசிக்கும் வாசகர்களை எந்தளவு முட்டாள் ஆக்குகிறார்கள் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். இனியாவது விழிப்பார்களா?

    Reply
  • aras
    aras

    கதை கட்ட ஒருவர் (ஜெயபாலனும்) இருந்து விட்டால் கண்ணகி (நாவலன்)வாழ்விலும் களங்கமுண்டு. காப்பாற்ற சில(பின்னூட்டகாரர் )பேர் இருந்து விட்டால் கள்வனின் வாழ்விலும் நியாயம் உண்டு. அலை ஓங்கி அடிக்கிறது. எல்லோரும் சேர்ந்து (ஜெயபாலனும்) சேறடிப்பை நிகழ்த்துங்கள். இனியொரு, நாவலன் மீதான பலரினதும் “ஆர்வங்களை” பின்னூட்டங்களும் கட்டுரையும் புட்டு வைக்கின்றது.

    Reply
  • P.V.Sri Rangan
    P.V.Sri Rangan

    இரயாகரன்-நாவலன்,இடையில் நாம்…

    நாவலன்,வணக்கம்! தங்கள் மீதான இந்த விஷயங்களை மறுத்துரைக்கும் உங்களை நம்புகிறோம். நாம் இதைச் சொல்லித்தாம் உங்களுக்கு “நன் நடத்தை”முத்திரை தரவேண்டுமென்பதில்லை! ஜெயபாலன், இராஜாகரன், ஸ்ரீரங்கன் சுமத்தும் “பழி-அல்லது அவதூறு” நீங்கள் உண்மையாக இருக்கும்போது பலமற்ற பொய்களே!

    உங்கள்மீது தவறாக நாம் அவதூறு செய்யுமிடத்து, அதற்கு மான நஷ்டவீடு செய்து வழக்குத் தொடங்க முடியுதானே?-அதைச் செய்யுங்கள்.

    எனக்கு, இராஜகரனும், ஜெயபாலனும், நீங்களும் என்னைப் போன்ற சக தோழர்களே-மக்களது பக்கஞ் சார்ந்திருக்கும்போது. இது, என்னைக் குறித்தும் உங்களுக்கும் அப்படியே!

    உங்களது நேர்மையின்மீது அவசியமற்று இரஜாகரன்-ஸ்ரீரங்கன் அல்லது வேறொருவர் பழி சுமத்துவதாக நீங்கள் உணர்ந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுங்கள். அது உங்கள் மானப் பிரச்சனை-மனிதவுரிமைக்குட்பட்ட உரிமை!

    நான், உங்களது கருத்துக்களை, நீங்கள் உங்கள்மீது சுமத்தப்பட்ட பழிகளை மறுக்கும்போது, அதை வரவேற்கிறேன்-நம்புகிறேன்.

    இரஜாகரன் மீது மீள மீளக்கருத்துகள் கூறாது, அவர் கூறியதன் “உண்மை-பொய்மை”த் தனத்தை நிரூபியுங்கள். அல்லது, அவரே அதை நிரூபிக்கட்டும். தவறாக மற்றவர்கள் மீது இரயா கருத்துக்கட்டினால் அதை நானே எதிர்ப்பவன்.

    இன்று, இரயாவைப் புலிப்பினாமி-இன்போமர் எனச் சொன்னவனும் நான்தான். அதே இடத்தில் தோழனெக் கொண்டாடுபவனும் நானே!

    கடந்த கால் நூற்றாண்டில் இரயாகரன் முன் வைத்த அரசியல்சார் கருத்துக்கள் அசைக்க முடியாதவை. அவை குறித்து நீண்ட ஆய்வுகளுக்கூடாக என்னால் “சரியானதென” நிறுவ முடியும். இது நிற்க.

    தற்போது, இராயாவினது “பழி” சுமத்தலிலிருந்து நீங்கள் கருத்துக்களை முன்வைப்பது நாணயமானது. அதைச் செய்யும்போது இடையில் சகுனி வேலை செய்யும் “கொட்டைகள்-மசாலா” வென்றவர்களையெண்ணிக் கவலையாக இருக்கிறது.

    நாம், இராயாவைச் சந்தேகிக்கலாம். ஆனால்,அவர் கூறிய அல்லது ஆய்வுக்குட்பட்ட அவரது கருத்துக்களை நீர்த்துப்போக வைப்பதை நான் வன்மையாக எதிர்க்கிறேன். அதுபோல நியாயமின்றி இரயாகரன் மற்றவர்கள்மீது “பழி” சுமத்தினால் அதை வன்மையாகக் கண்டிக்கிறேன். அது, இரயாவாக இருந்தாலென்ன அல்லது ஸ்ரீரங்கன், நாவலன் இதையுங்கடந்து கடவுளாகவிருந்தாலென்ன!

    அடுத்து, குகநாதன் எனது ஊரவன். எனக்குத் தெரியும் அவரது நாணயம். இன்று, புலம் பெயர் வர்த்தகர்களில் நாணயமற்றவர் எவரென உதராணம் தேடினால், அது முதலில் குகநாதனையே குறித்துரைக்கும். எனவே, குகநாதன் தரும் சாட்சியம் எப்பவும் போலவே சதி நிரம்பியது. இரயாகரன் குகநாதனை நம்பிக் கருத்துக் கூறியிருக்க முடியாது!

    குகநாதனது திருகுதாளங்களை இரயா அறிந்தவரே. எனினும், எதிரிகளென எவரையும் கொள்வதற்கில்லை. குகநாதனது உளவியல் சார்ந்தவொழுக்கம் இந்த முதலாளியச் சமூகத்தின் அறுவடை. அதுபேலவே “நமது”அணுகு முறையும் இந்த ஈழப்போராட்ட இயக்கவாத அணுகுமுறையின் தொடர்ச்சியே!

    உண்மையும், நேர்மையான அணுகுமுறையுமுள்ள எந்த மனிதரையும் எந்தக் கொம்பரும் அசைக்க முடியாது. அந்த நம்பிக்கையோடுதாம் நான் இதுவரை சமகாலப் போராட்டங்குறித்து விமர்சித்து வருகிறேன். உண்மையோடு இருக்கும் நீங்கள், இதையிட்டு அலட்டத் தேவையில்லை!

    அதேபோல், இரயாகரன் தானே “பழி”சுமத்தும் கட்டுரையை உங்களை நோக்கி எழுதியதால், அதன், நியாயத் தன்மையை நிலை நாட்டவேண்டும். அவர் அதைச் செய்யாதுபோனால் நாம் அவரது கருத்துக்களையும் “பழி”சுமத்தல்களையும் இன்னும் வலுவாக அம்பலப்படுத்துவோம்.

    இரயாகரன் தமிழ்ச் சூழலில் அரசியலைத் துறக்கும்படியான முறைமையில் செயல்முனையை விரிவாக்குவோம். அவ்வண்ணமே, இது எனக்கும்-உங்களுக்கும் பொருந்தும்!

    நன்றி

    ப.வி.ஸ்ரீரங்கன்
    ஜேர்மனி
    12.09.2010

    Reply
  • தமிழ்வாதம்
    தமிழ்வாதம்

    மாற்றுக் கூடாரங்களும், கொடி பிடிப்புகளும். சரியான போட்டி. போராட்டங்களும்,புதுசு புதுசான இணயங்களும் இதற்குத்தானா?

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    திரு.ஜெயபாலன் சில பொறுப்புகளுடன் தன் எழுத்துக்களை முன் வைப்பதாக தரவு கூறலாம்!.
    புலம்பெயர்ந்த இலங்கைத்தமிழர்கள், முதலில் கொழும்பில் தங்களுடைய அனுபவத்தைக் கொண்டு, “தமிழ்நாடு விஷயத்தில்” விஷப்பரிட்சைகளை தவிர்க்க வேண்டும். நீண்ட கால அனுபவங்கள்
    /10. ஏற்கனவே எழுந்துள்ள அரசியல் நிலையினால் தமிழகத் தமிழர்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்குமான உறவு பலவீனமானதாகவே உள்ளது. இவ்வாறான தனிப்பட்ட சம்பவங்கள் இவ்வுறவை மேலும் மோசமாக்காமல் இருக்க சம்பந்தப்பட்ட அனைவரும் முயற்சிக்க வேண்டும்./- இதற்கு அழைத்துச் சென்றால் அதற்கு கீழ்கண்டவைகளே பொறுப்பு!.

    /‘அரசாங்கத்தின் ஆதரவாளர் ஒருவரை கைதுசெய்துவிட்டோம் என்றுதான் அவரது (செழியனின்) சட்டத்தரணிகள் மகிழ்ச்சியுடன் இருப்பதாகத் தெரிகின்றது. நீங்கள் ஏதாவது கொடுத்துவிட்டு தப்பிக்கப் பாருங்கள்”./- எஸ்.எஸ்.குகநாதன்.
    “தேசம் நெட்” கூட இலங்கை அரசாங்க சார்பாக எழுதுகிறது,ஆனால் இது போன்ற வியாபார அசிங்கங்களுக்காக அல்ல!.
    /குகநாதன் செல்வாக்கு பெற்ற பிரமுகர் என்பது சற்று ஓவர். அவரை இந்த முட்டாள் தமிழர் மட்டுமே அறிவர். புலத்தில் வாழும் நாட்டு குடியுரிமை : கடவுச் சீட்டு பெற்றோரெல்லாம் ( இந்தியர்கள் , சாதாரணமாகவே ஆவென்று வாய் பிளப்பவர்கள்) பெற்றவர்கள் அனைவரும் அந்த நாட்டு செல்வாக்கு பெற்றவர்கள் அல்ல. /– மாயா.

    /அப்போது எனக்கு ஞாபகம் வந்ததெல்லாம், முதன்முதலில் அருள்செழியனை ஐரோப்பா அழைத்துவந்தபோது காரில் பிரான்சிலிருந்து ஜெர்மனிக்கு அழைத்துச் சென்றிருந்தேன். அப்போது விரைவு பாதையில் உள்ள தரிப்பிடம் ஒன்றில் தரித்து நின்றபோது அவர், என் முன்னே மண்டியிட்டு ‘’அண்ணே….. இப்படியெல்லாம் பார்ப்பேன் என்று கனவிலும் நினைத்திருந்தவனல்ல. இவற்றைக் காட்டிய உங்களை……’’ என்று இவர் மனமுருகிய காட்சி தான் எனக்கு ஞாபகம் வந்தது./– குகநாதன்.
    நகைப்பிற்குறியது, இந்தியா என்றால் தமிழ்நாடு அல்ல!. தமிழ்நாட்டின் குக்கிராமங்களிலிருந்து, ஆராய்ச்சிபட்ட படிப்பிற்கு தற்போது ஐரோப்பாவிற்கு வருகை தந்திருக்கும் மணவர்களின் எண்ணிக்கை மட்டும் இலங்கைத் தமிழரது அளவுக்கு உள்ளது!.

    /‘அரசாங்கத்தின் ஆதரவாளர் ஒருவரை கைதுசெய்துவிட்டோம் என்றுதான் அவரது (செழியனின்) சட்டத்தரணிகள் மகிழ்ச்சியுடன் இருப்பதாகத் தெரிகின்றது. நீங்கள் ஏதாவது கொடுத்துவிட்டு தப்பிக்கப் பாருங்கள்”./– சபாநாவலன் கூறியதாக குகநாதன்.குகநாதனின் இலங்கை அரச ஆதரவு தம்பட்டமும்,சபாநாவலனின் “மாவோயிஸ்டுகள்,நேபாள பூச்சாண்டி” ஆதரவு தம்பட்டமும்,கவனிக்கப்பட வேண்டியவை.
    இலங்கை அரசாங்கத்திற்கும், தமிழகத்திற்கு இடையேயான “ஆப்பு” வைக்கும் வேலையை சில இலங்கைத் தமிழர்களும்?,”இலங்கையைச் சேர்ந்த ஊடகவியலாளரும், டான் தொலைக்காட்சியின் தலைமை நிர்வாகியுமான திரு. சல்தான்” போன்ற முஸ்லீம்களும் கைங்கரியமாக செய்வது, ஒரு வேளை ஆப்பிழுத்த குரங்கின் கதையாக முடியலாம்!.

    Reply
  • P.V.Sri Rangan
    P.V.Sri Rangan

    ஏன் ஜெயபாலன் நேர்மையாகப் பக்கஞ்சாராது எழுதினால் அது பின்னூட்டாக இருக்கதோ?சந்தர்ப்பம் பார்த்துக் கட்சி கட்டுவதா ஜேர்னசிசத்தில் நீங்கள் கற்றது?

    Reply
  • kalai
    kalai

    மதுரைக்கு வந்த சோதனையா என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன் மாக்சியவாதிக்கு வந்த ………………..

    Reply
  • Thenee
    Thenee

    என்னைப்பற்றிய அவதூறுகளுக்குப்பதில்: எஸ்.எஸ்.குகநாதன்

    கடந்த சில நாட்களாக என்னைப்பற்றியும் டான் தொலைக்காட்சி பற்றியும் உண்மைக்குப்புறம்பான செய்திகளை சில இணையத்தளங்கள் வெளியிட்டுவருகின்றன. தமிழகத்தில் எமது டான் தொலைக்காட்சி தமிழகத்திலுள்ள தொலைக்காட்சி விநியோகஸ்தர்களை மோசடி செய்துவிட்டது போலவும் அதற்காக எனது பெயரைக் குறிப்பிட்டு குகநாதனின் மோசடி என்றும் அந்த இணையத்தளங்கள் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

    முதலில் டான் தொலைக்காட்சி எனக்கு மாத்திரம் சொந்தமானதல்ல என்பதும், குறிப்பாக இந்தியாவில் டான் தொலைக்காட்சியை ஒளிபரப்பிவரும் டான் ரெலிவிசன் நிறுவனத்தில் நான் 30 சதவீத பங்குகளை மாத்திரமே கொண்டிருக்கின்றேன் என்பதையும் மிகுதி 70 வீத பங்குகளுக்கு இந்தியாவில் வசிக்கும் இந்தியர்களே சொந்தக்காரர்கள் என்பதையும் இந்த இணையத்தளங்கள் மிக இலகுவாக மறந்துவிடுகின்றன.
    தமிழகத்தில் 2 லட்சம் ரூபாவை மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு நடிகர் பாண்டியனைக் கைதுசெய்கின்ற பொலிசார் பல லட்சங்களை மோசடி செய்திருந்தால் அந்த இந்தியர்களை விட்டுவைப்பார்களா என்பதை யாரும் சிந்திப்பதாகத் தெரியவில்லை.

    டான் தொலைக்காட்சியின் விநியோகஸ்தர்களாக அவர்களே விரும்பி அதற்காக முறைப்படி ஒப்பந்தம் செய்துகொண்டு விநியோகஸ்தர்களாகினார்கள். அதற்காக முற்பணமும் அந்த நிறுவனத்தின் பெயரில் அதன் வங்கிக் கணக்கிற்குத்தான் செலுத்தினார்கள். அவர்களை டான் நிறுவனம் ஏமாற்றியதென்றால் அந்த நிறுவனத்தின் மீதுதான் அவர்கள் புகார் கூறலாம். அந்தப் பணத்தை நான் தனிப்பட்ட முறையில் மோசடி செய்திருந்தால் அந்த நிறுவனத்தின் மற்றைய பங்குதாரர்கள் தான் என்மீது தனிப்பட்ட முறையில் குற்றம் சுமத்தலாம்.அதுதவிர, மூன்று தொலைக்கட்சி சேவைகளை தமிழிலும் ஐரோப்பாவின் பிரபல தொலைக்காட்சிகளான ய+ரோ நிய+ஸ(Euro news) ரேஸ்ரிவி (Trace TV) என்ற மிய+சிக் செனல் ஆகியவற்றையும் இந்தியாவில் ஒளிபரப்பி வந்தது வருகின்றது டான் ரெலிவிசன் நிறுவனம். இந்த ஐந்து தொலைக்காட்சிகளையும் 2005 ஆகஸ்ட் மாதத்திலிருந்து ஒளிபரப்புவதற்கு அந்த நிறுவனம் எத்தனை கோடிகளை முதலிட்டிருக்கும் என்பதையும் இந்த இணையத்தளங்கள் மறந்துவிடுகின்றன.

    டான் தமிழ்ஒளி தொலைக்காட்சி இன்றும் இந்தியாவில் ஒளிபரப்பாகி வருகின்றது என்பது மாத்திரமல்ல ஐரோப்பாவின் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றான ய+ரோ நிய+ஸ் தொலைக்காட்சியை இந்தியாவில் மறுஒளிபரப்புச் செய்துவருவதும் டான் ரெலிவிசன் நிறுவனம்தான் என்பதும் பலருக்குத் தெரியாவிட்டாலும் அந்த விநியோகஸ்தர்களுக்குத் தெரியும். டான் ரிவி தமிழகத்தில் ஒளிபரப்பைத் தொடங்கியபோது அதனை தமிழகத்தில் சன்ரிவிக்குச் சொந்தமான எஸ்.சி.வி. என்ற கேபிள் இணைப்பு வழங்கும் நிறுவனம் தவிர்ந்த ஏனைய அனைத்து கேபிள் ரிவி ஆப்பரேட்டர்களும் போட்டிபோட்டுக்கொண்டு ஒளிபரப்பினார்கள் என்பதையும் சில அதிகாரத்திலுள்ளவர்களின் நெருக்கடிகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் மத்தியிலும் அந்த கேபிள்டிவி ஆப்பரேட்டர்கள் ஒளிபரப்பியதையும் ஏன் இந்த இணையத்தளங்கள் குறிப்பிட மறந்துவிட்டன என்பதும் தெரியவில்லை.

    ஒரு ஈழத்தமிழனின் தொலைக்காட்சியைக் கண்டு அந்த ஜாம்பவான்களே பயந்தார்கள் என்றால் அதைக்கண்டு உண்மையான ஈழத்தமிழன் மகிழ்ச்சியே அடைந்திருப்பான். ய+ரோ நிய+ஸ் தொலைக்காட்சி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் கூட்டில் ஒளிபரப்பாகும் ஒரு மிகப்பெரிய நிறுவனம். அந்த நிறுவனத்தின் தொலைக்காட்சியை இந்தியாவில் ஒளிபரப்புவதற்கு ஒரு ஈழத்தமிழன் அனுமதியைப் பெற்றிருக்கின்றான். இது என்னைப்பொறுத்தவரை பெருமைக்குரியவையே எம்மை ஒழிப்பதற்காக என்றே சிலர் எடுத்த நடவடிக்கையின் விளைவாக நாம் எமது செயற்பாடுகளை சென்னையில் தற்காலிகமாக நிறுத்திவைத்திருக்கின்றோமே தவிர, எமது செயற்பாடுகளை முற்றாக நிறுத்திவிடவில்லை.ய+ரோ நிய+ஸ், ரேஸ்ரிவி என்பன இன்றும் இந்தியா எங்கும் ஒளிபரப்பாகிவருவதுடன், இந்தியாவின் முன்னணி டிரிஎச் சேவையான டிஷ் ரிவியிலும் இன்றும் ஒளிபரப்பாகிவருகின்றது. டான் ரெலிவிசன் நிறுவனம் பாண்டிச்சேரியில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனம், அதன் பதிவுசெய்யப்பட்ட அலுவலகம் அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரின் இல்லத்திலேயே இயங்கிவருகின்றது. சென்னை கலையகம் மாத்திரமே தற்காலிகமாக மூடப்படிருக்கின்றது. நான் இந்தியாவுக்கு செல்ல முடியாத நிலையில் இருப்பதாகவும் அந்த இணையத்தளங்கள் குறிப்பிட்டுவருகின்றன. நான் கடந்த வாரமும் அங்குதான் இருந்தேன் என்பதை எமது நண்பர்கள் அறிவார்கள்.

    அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் சேர்ந்து தொலைக்காட்சியைத் தொடங்க வேண்டும் என்றாலும் அதற்காக கோவை நந்தனை அனுப்பி அந்த ஏற்பாடுகளைச் செய்கின்ற அளவிற்கு ஒன்றும் விபரம் தெரியாதவன் நானல்ல. தொலைக்காட்சி நடாத்துவது என்பது இணையத்தளங்களை நடாத்துவது போன்ற ஒன்று என்று கருதுபவர்கள் தான் கோவை நந்தனை அனுப்பி அந்த பணிகளை செய்ய முயலலாம்.என்னைத் தனிப்பட்ட வகையில் கேவலப்படுத்துவதற்காக சில இணையத்தளங்களும் சில தனிப்பட்டவர்களும் செய்துவருகின்ற விசமப்பிரச்சாரமே இது என்பதை எமது ஊடகப்பணியை நேசிக்கும் அன்பர்களுக்கு தெரிவிக்க விரும்புகின்றோம்.அண்மையில் பாரிஸ் நகரில் வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரம் ஒன்றில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாரிஸ் வந்தபோது நானே கூட்டத்திற்கு இடம் ஏற்பாடுசெய்ததாகவும் புதிய கதை ஒன்று சோடிக்கப்பட்டிருந்தது.

    ஒரு அமைச்சரின் வருகைக்காக கூட்டத்தை தமது அலுவலகத்திலேயே சிறிலங்கா தூதரகம் ஏற்பாடுசெய்திருந்தது. இதற்கு குகநாதனின் உதவி எதற்காக பயன்பட்டது என்பது தெரியவில்லை. அதுமாத்திரமல்ல, அவர் வருகையின்போது நான் இந்தியாவில் இருந்தேன்.ஓராண்டிற்கு முன்பு பிரான்சிலிருந்து ஒளிபரப்பான குகநாதனின் தமிழ்ஒளி என்கின்ற தொலைக்காட்சி இப்போது இருந்த இடமே தெரியாமல் போய்விட்டது என்று மிகச் சாதாரணமாக இந்த இணையத்தளங்கள் தெரிவிக்கின்றன. ஓராண்டிற்கு முன்பு மாத்திரமல்ல, பத்து ஆண்டுகளாக தமிழ்ஒளி ஐரோப்பிய மண்ணில் வந்துகொண்டிருக்கின்றது என்பதும் சில வாரங்களாக மாத்திரம் காணாமல்போன அந்த தொலைக்காட்சி இவ்வாரம் முதல் மீண்டும் வந்திருக்கின்றது என்பதையும் இந்த இணையத்தளங்கள் வேண்டும்என்றே மறைத்துவிட்டன. தமிழ்ஒளி என்ற அந்த தொல்லைக்காட்சி தான் இன்று ரிரிஎன் என்ற பெயரில் தேசியத்தொலைக்காட்சியாக மாற்றப்பட்டது என்பதையும் இன்று புதிதாக இணையத்தளம் மூலம் ஊடகத்துறைக்கு வந்த இளசுகளுக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால் இனியாவது தெரிந்துகொள்வது நல்லது.

    நான் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் முதன் முதலில் நண்பர்கள் சிலருடன் இணைந்து தொலைக்காட்சியை ஆரம்பித்தபோது என்னை நம்பி நிதி உதவி செய்துவிட்டு இன்றுவரை அது கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கும் நண்பர்கள் – இன்று வரை என்னுடன் கைகோர்த்து நிற்கும் பணியாளர்கள் வேண்டுமானால் என்னை நோக்கி தங்கள் சுட்டுவிரல்களை நீட்டலாம். வேறு எவருக்கும் என்னை நோக்கி சுட்டுவிரல்களை மாத்திரமல்ல கண்பார்வையைக் கூடத் திருப்பும் தகுதியோ அருகதையோ இல்லை.

    தேனியீலிருநது…

    Reply
  • karn
    karn

    ஆதாரம் இல்லாமல் ராயாகரன் தன்மீது அவதூறு பொழிந்துவிட்டதாக நாவலன் கூறுகிறார். ஆனால் இதே நாவலன்தான் “லிட்டில்எயிட்” இலங்கை அரச பணத்தில் இயங்குகிறது என்று தன் இனியொரு தளத்தில் இந்த அருள்எழிலன் மூலம் குற்றம் சாட்டினார். ஆனால் அதற்குரிய ஆதாரத்தை இதுவரை இந்த அருள்எழிலனோ அல்லது நாவலனோ முன்வைக்கவில்லை. இப்போது எந்த முகத்தோடு தன்மீதான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரம் கேட்கிறார் ?

    Reply
  • BC
    BC

    ஜெயபாலன் நேர்மையை பாராட்டுவோம்.
    இந்த புரட்சி போராட்டம் செய்ய போவதாக சொல்வோரிடம் எச்சரிக்கையாக இருப்போம்.

    Reply
  • தமிழ்வாதம்
    தமிழ்வாதம்

    //….நான் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் முதன் முதலில் நண்பர்கள் சிலருடன் இணைந்து தொலைக்காட்சியை ஆரம்பித்தபோது என்னை நம்பி நிதி உதவி செய்துவிட்டு இன்றுவரை அது கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கும் நண்பர்கள் – இன்று வரை என்னுடன் கைகோர்த்து நிற்கும் பணியாளர்கள் வேண்டுமானால் என்னை நோக்கி தங்கள் சுட்டுவிரல்களை நீட்டலாம். வேறு எவருக்கும் என்னை நோக்கி சுட்டுவிரல்களை மாத்திரமல்ல கண்பார்வையைக் கூடத் திருப்பும் தகுதியோ அருகதையோ இல்லை..// Thenee
    அடப் பாவமே! ..அது(?) கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கும் நண்பர்கள் – இன்றுவரை அவருடன் கைகோர்த்து நிற்கும் பணியாளர்களுக்கு மட்டுமே தொலைக்காட்சி நடத்தியவரா இவர்? வேறு எவரும் தகுதியும் அருகதையும் இல்லாதவர்கள்), சுட்டுவிரல் காட்டுவதையோ, முண்டு கொடுப்பதையோ உடனே நிறுத்தி விடுங்களல்லது மீண்டும் அராஜகக் கருத்துகளைத் தேனியில் அள்ளிவிடுவார்.

    Reply
  • மாயா
    மாயா

    // தமிழகத்தில் 2 லட்சம் ரூபாவை மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு நடிகர் பாண்டியனைக் கைதுசெய்கின்ற பொலிசார் பல லட்சங்களை மோசடி செய்திருந்தால் அந்த இந்தியர்களை விட்டுவைப்பார்களா என்பதை யாரும் சிந்திப்பதாகத் தெரியவில்லை. – குகநாதன் //

    பாண்டியன் சம்பந்தப்பட்டது செக் மோசடி. குகநாதனான, நீங்கள் செய்திருப்பது பத்திர மோசடி. நீங்களும் காசோலை ஒன்றைக் கொடுத்திருந்தால் உள்ளே தள்ள முடியும். இது வேறு விதம்? கோடு என்று போனால், நீங்கள் வழக்கு முடியும் வரை இந்தியாவிலேயே இருக்க வேண்டிவரும். வழக்கு… எப்ப தொடங்கி.. எப்ப முடியுறது?… அவங்க எப்ப பணம் வாங்கிறது.?

    குகநாதன், உங்கள் கடந்த கால சுத்துமாத்துகள், எவரும் பெருமை கொள்கிற மாதிரி இல்லை. தேசம்நெற் உண்மைகளை கொண்டு வந்தமைக்கு நன்றி. இல்லாவிட்டால், குகநாதன், இன்னொரு அரச புலியாக மாறி, அடுத்த புலம்பெயர் மக்களையும் சுரண்டி விடுவார்? முன்னர் புலியாக வெள்ள நிவாரணம், புலிகளுக்கு காசு என வறுகினார். முள்ளாலக்கடி பாதர் கெஸ்பாருக்கு கொடுத்த காசையும் கொள்ளையடித்தவர் இந்த குகநாதன். எனக்கு, மகிந்தர் சகோதரன் போல. நான் எல்லாம் செய்து தருகிறேன் என புருடா விட்டு, மொட்டை அடிப்பார். இவர்களைப் போன்றவர்களை மக்கள் இனம் காணுங்கள்.

    குகநாதனோடு பங்களாகிளான அனைவரும் இன்று காசு கிடைக்காமல் காசிக்கு போய்க் கொண்டிருக்கிறார்கள். உபயம்: பாசல் மூர்த்தி வாத்தி , சுவிசின் பேரின்பம் கடை ……. இவர்கள் உயிரோடிருக்கிறார்கள்? கேட்டால் எத்தனை லட்சம் என சொல்வார்கள். பிரான்சில் குமார் கடை…….

    Reply
  • muththu
    muththu

    இந்த விஷயத்தை நேர்மையாக அணுக வேண்டும். குகநாதன் பற்றி விசாரித்தால் எங்குமே அவருக்கு நல்ல பெயர் இல்லை. தமிழகத்தில் மட்டும் அவர் மீதும் டான் தொலைக்காட்சி உரிமையாளர்கள் மீதும் மூன்று வழக்குகள் உள்ளன. இது போக செழியனின் வழக்கு. ஆனால் செழியன் குகநாதன் ஒரு மோசடியான ஆள் என்று தெரிந்தே பழகியிருப்பாரோ என்பதுதான் இங்கு கேள்வி… விசாரித்தால் பலவாராகவும் சொல்கிறார்கள். குகநாதனுக்கு பெரிய பெரிய மனிதர்களை தமிழகத்தில் அறிமுகம் செய்து வைத்ததே செழியந்தானாம். அவரது மேல்மட்டத் தொடர்புகளூடாகவே அவர் குகநாதன் என்ன பெயரில் எங்கெங்கு வந்து போகிறார் என்ற விபரங்களை எடுத்திருக்கிறார். தவிறவும் குகநாதன் மனம் திறந்து பல உண்மைகளைப் பேச முன்வரவேண்டும். இம்மாதிரியான போக்குகள் இனி நடைபெறக்கூடாது நான் விசாரித்தவரையில் அருள் செழியன் கடந்த பல ஆண்டுகளாகவே குகநாதனைப் பிடிக்க முயன்று…. கொழும்பில் இருந்து வரவழைத்தே பிடித்திருக்கிறார். இதில் ஏமாந்தவர் டான் டிவியின் தலைமை நிர்வாகி அவர்தான் இவரை சென்னை அழைத்துச் சென்றதாம்…..இறுதியாக, “ அருள்சகோதரர்கள் குடும்பத்தினர் எஸ் எஸ் குகநாதனிடம் நிதியை இழந்தது உண்மையா இருந்தால் அவர்கள் குறைந்தபட்சம் நீதிமன்றத்தினூடாகவே அதனைப் பெற முயற்சித்து இருக்க வேண்டும். ” என்ற உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் இதே வழிமுறையை செழியனிடமும் குகநாதன் கடைபிடித்திருகக்லாமே? அவரை மட்டும் ஏன் வீட்டில் சென்று அதிகாலை அண்ணா சக்தி மூலம் கடத்த வேண்டும். இருவர் கையாண்டதும் தவறான் வழிமுறை.

    Reply
  • Jegan
    Jegan

    நாவலனிற்காக வக்காளத்து வாங்கும் பின்னூட்டம் விடுவோரே!

    நீங்கள் எல்லோரும் இந்த பிரச்சினையினை திசைதிருப்புகின்றீர்கள் என்பது எனது தாழ்மையான கருத்து.

    குகநாதன் என்னும் வியாபாரி பற்றி எல்லோருக்கும் மிக நன்றாகவே தொpயும். தன் சுயநலத்திற்காக எந்தகைய இழி செயலையும் செய்யக் கூடியவர். அன்று புலிவாலில் தொங்கினார் இன்று மகிந்த வாலிலும் டக்ளஸ் வாலிலும் தொங்கி நாலு காசு பண்ணப் பார்கின்றார்.

    இங்கே எமக்கெல்லாம் இவையனைத்தும் நன்றாகவே விளங்கும். புரிதலுமுண்டு.

    மாக்சியம் என ழூச்சிற்கு ழூச்சு இழுத்து விடும் நாவலன் இந்த கடத்தல் (கைது) சம்பவத்தில் ஈடுபட்டுள்ளாரா? இல்லையா?
    அண்மையில் இனியொரு மற்றும் தேசம் நெற்றில் வந்துள்ள கட்டுரைகள் பேட்டிகள் என்பன நாவலன் ஏதோ வகையில் சில அளவுகளில் ஈடபடடுள்ளார் என்பதனை உறுதி செய்கின்றன.

    நாவலன் பேசுகின்ற மாக்சியம் புரட்சி மக்கள் போராட்டம் எல்லாமே இங்கு கேள்விக் குறியாகியுள்ளனவே!

    Reply
  • aras
    aras

    “டான் டிவியின் யாழ் செய்தியாசிரியராக புலிகளின் ஊடகப் பேச்சாளர்
    குகநாதன், ஜெயபாலன், ரயாகரன் ஆகியோரின் இனியொரு இணையம் மீதான குற்றச்சாட்டுக்கள் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில் டான் டிவியின் யாழ் செய்தியாசிரியராக புலிகளின் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் நியமிக்கப்பட்டுள்ளார்.
    டான் டிவியின் தலைவர் குகநாதன் எனபதும் புலம்பெயர் நாடுகள் முழுவதும் இலங்கை அரச சார்பு கருத்துக்களை டான் டிவி பிரச்சாரம் செய்து வருவதையும் இங்கு குறிப்பிடத்தக்கது”

    Reply
  • samy
    samy

    ஐரோப்பாவில் சும்மாயிருந்தவர்களையெல்லாம் புலியாக்கிய பெருமையை செய்தவர்கள் குகநாதன் தர்சன் போன்றவர்கள் என்று எழுதியுள்ளார் மாயா. குகநாதன் வெளியில் புலியாகவும் உள்ளே புலியெதிர்ப்பாளராகவும் இருந்தார் என்றும் மாயா குறிப்பிட்டுள்ளார். இதில் தர்சன் முக்கியமானவர் என்று மாயாக குறிப்பிடுகின்றார். தர்சன் குகநாதன் போன்றோர் ரிஆர்ரியிலிருந்து வெளியேறி புதிய வானொலி தொடங்கியபோது தர்சன் அதிலிருந்து கொண்டு வெளிநாட்டு புலிக்கு எதிராகவும் வன்னிப்புலிக்கு ஆதரவாகவும் இரட்டை நிலை எடுத்து செயற்பட்டதன் மூலம் குகநாதனுக்கு பெரும் சிக்கல்களை கொடுத்து அன்றைய பிரான்ஸ் புலிகளின் பொறுப்பாளர் வேலும் மயிலும் மனோகரனுக்கும் குகநாதனுக்கும் முரண்பாடு வரக் காரணமானவரும் இதே தர்சன் தான். தன்னை புலிகளின் தீவிர ஆதரவாளராகவும் தமிழ் தேசிய ஆதரவாளவராகவும் காட்டிக்கொண்டு ரிஆர்ரி தமிழ் ஒலி வானொலியை ஆரம்பித்து குகநாதனிடமிருந்த அனைத்து அறிவிப்பாளரையும் தன்னுடன் அழைத்து வந்து புலியாதரவு நிலையெடுத்துவிட்டு தனது தம்பியை அழைத்து வருவதற்கு இலங்கை உளவுத்துறையுடன் தொடர்புடைய ஏசியன் ரிபியுன் மூலம் இலங்கை சென்று தனது தம்பியை பாதுகாப்பாக பிரான்சுக்கு அழைத்து வைத்துக் கொண்டு மற்றவர்களை இலங்கைக்கு செல்லவேண்டாம் என்று தனது வானொலியில் நிகழச்சி நடத்தும் அரசியல் விபச்சாரத்தை செய்யும் தர்சன் புலியாதரவாளராக இருந்து அரச ஆதரவாளராக மாறியிருக்கும் குகநாதனின் பணத்தில் தான் தர்சன் புதுவானொலி நடத்துகின்றார் என ஈழநாடு பாலச்சந்திரன் அண்மையில் செய்தி வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது. குகநாதனும் தர்சனும் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள் தான் என்பதை மாயா புரிந்து கொள்ளவேண்டும்.
    மாயா சில விடயங்களை அறிந்து கொள்ளாமலே எழுதுகின்றார்.
    குகநாதனுடன் ரிஆர்ரி யின் பங்காளிகளில் தர்சனும் ஒருவர். ரிஆர்ரி புலிக்கு விற்கப்பட்டு ரிரிஎன் ஆக மாற்றப்பட்டபோது அதிலிருந்து வெளியேறியவர்கள் குகநாதனும் தர்சனும் தான்.
    புலிகளோடு தங்களது பங்குகளை சேர்ததுக் கொண்டவர்கள் தான் பாசல் மூர்த்தி வாத்தி பிரான்ஸ குமார் சந்திரன்……. அவர்களது பங்குப்பணம் ரிரிஎன்னிலேயே இருந்தது. குகநாதன் தர்சனின் பங்குப்பணம் தான் இழக்கப்பட்டது. தகவல்களை சரியாக சொல்லுங்கள் மாயா. இறுதி வரை அவர்கள் பணம் புலிகளுடன் இருந்தது. பங்குகள் தொடர்பாக குகநாதன் சுத்துமாத்து செய்யவில்லை. புலிகளுடன் இருந்த பங்காளர்கள் தான் குகநாதன் தர்சனுக்கு நாமம் போட்டார்கள். புலிகளுடன் சேர்ந்திருந்த பங்காளர்கள் வன்னிக்கும் சென்று வந்தது மாயாவுக்கு தெரியவில்லை போலும்.
    மாயா குற்றச்சாட்டுக்களை வைப்பதற்கு முன்னர் விடயங்களைத் தெரிந்து கொண்டு எழுதுங்கள்

    Reply
  • kuna
    kuna

    அண்மையில் அருள் எழிலன் என்பவர் தழிழீழத்திற்காக தொடர்ந்து போராட வேண்டும் என ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.தமிழ்நாட்டில் தமிழ் மக்களின் தனிநாட்டுப்போராட்டத்தில் எவ்வித பங்களிப்பும் செய்யாமல் இலங்கைத் தமிழர்களை எதற்காக இவர் போராடும்படி கூறுகிறார் என நான் குழம்பினேன்.ஆனால் இன்று தேசம்நெற்றில் வெளியான இந்த கட்டுரையைப் படித்தபின்பு நாம்போராடினால்தான் இவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது என்பதைப் புரிந்து கொண்டேன்.இலங்கைத் தமிழர்களின் அழிவில் நாலு காசு சம்பாதிக்கும் இந்த அருட்செழியன் எழிலன் வியாபாரக் கூட்டத்தை இலங்கைத் தமிழர்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள்.என்ன செய்வது? இலங்கைத் தமிழர்களுக்காக தன்னையே எரித்த முத்துக்குமார் பிறந்த மண்ணில் இப்படி இலங்கைத் தமிழர்களின் ரத்தத்தில் வயிறு வளர்க்கவும் ஒரு கூட்டம் இருப்பதை எண்ணும்பொது மிகவும் கவலையாக இருக்கிறது.

    ஆயிரக்கணக்கில் சம்பளம்.லட்சக்கணக்கில் முதலீடு.தமிழ்நாட்டு ஊடகவியலாளரின் வியாபாரம் கேட்டு ஒரு கணம் அதிர்ச்சியுற்றேன். அதைவிட ஆச்சரியம் என்னவெனில் ஒருபுறம் குகநாதனுடன் வியாபாரம். மறுபுறம் பாலசிங்கத்துடன் பேட்டி. எப்படி எல்லாம் ஏமாற்றி பிழைக்கின்றனர்.அட இது கூடப்பரவாயில்லை.எல்லாவற்றையும்விட ஆச்சரியம் என்னவெனில் ஒருபுறம் முள்ளிவாயக்கால் படுகொலை குறித்து எழுதுகின்றனர்.இன்னொருபுறம் அதே முள்ளிவாயக்கால் படுகொலையின் பங்காளியான கருனாநிதி அரசுடன் இரகசிய உறவுவைத்து ஆட் கடத்தல்.இதற்கு பொலிஸ் துணை வேற.எப்படி எல்லாம் தமிழன் தலையில் மிளகாய் அரைக்கின்றனர்? இதில இந்த கதை எழுதி இலங்கைத் தமிழனுக்கே விற்கப் போகிறார்களாம். என்ன தைரியம்? இலங்கைத்தமிழன் என்ன அந்தளவுக்கு இளிச்சவாயனா?

    Reply
  • Thalaphathy
    Thalaphathy

    //இலங்கை அரசுக்கு இவரது தொலைக் காட்சி தொடர்பான விடயங்கள் பெரிதாகத் தெரியாது. ஐரோப்பாவில் அனைத்து தமிழர்களும் இவரது தொலைக் காட்சியை பார்க்கிறார்கள் எனும் பில்டப்பை குகநாதன் கொடுத்துள்ளார். இவை குகநாதனுக்கு கைவந்த கலை. ஐரோப்பிய சிங்களவர்களுக்கு இவை தெரியாது.// மாயா on September 12, 2010 11:32 am

    மாயா, இலங்கை அரச தொலைக்காட்சி நிறுவனத்திற்கும் திரு. குகநாதனுக்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் இருப்பதாக நான் ஊகிக்கின்றேன், ஏனனில் இது சம்பந்தமான ஆரம்ப விடயங்கள், புலம்பெயர்ந்த இலங்கையருக்கும் – இலங்கை அரசுக்குமிடையிலான சந்திப்பின் போது (அதில் அவரும் கலந்துகொண்டிருந்தார்) அவர் அந்தச் சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்திக்கொண்டார். பின்நாளில் ரூபவாகினியின் செய்திகளும் வேறுசில நிகழ்ச்சிகளும் உலகம்முழுவதும் DAN தமிழ்ஒளியின் ஊடாக மறுஒளிபரப்பு செய்யப்பட்டன. ஆகையால் இலங்கைஅரசுக்கு ஒன்றும் தெரியாது என்று நீங்கள் எழுதியது தவறான கருத்து. மேலும் நீங்கள் எல்லாவிடயமும் தெரிந்தவர் மாதிரியும் எல்லா விடயங்களிலும் பங்குகொண்டவர் மாதிரியும் நீங்கள் உங்களைக் காட்டிக்கொள்ள முற்படுவது உங்களுக்கே சற்று ஓவராக தெரியவில்லையா?

    Reply
  • thambi
    thambi

    இந்திய -தமிழ்நாட்டு பொலீசாரின் கியூ பிரிவினர் கருத்துக்கள் விசாரணைகள் நடாத்துமா? அல்லது வழமைபோல இந்திய பொலீசாரின் ஊழல்களில் முடிந்துவிடுமா?

    Reply
  • singaravelan
    singaravelan

    இந்த விடயம் லண்டன் பிரான்ஸ் பொலிசாரின் கவனத்திற்கு செல்லும் நிலை காணப்படுகிறது.அவ்வாறு செல்லும் பட்சத்தில் இதில் சம்பந்தப்பட்ட பலரின் தொலைபேசி உரையாடல்களே அவர்களை மாட்டிவிடும் ஆபத்து தோன்றியுள்ளது. கினறு வெட்ட பூதம் வெளிகிட்ட கதையாக சிலர் கம்பி எண்ணவேண்டி ஏற்படும் என ஒரு சட்ட வல்லுனர் காதைக் கடிக்கிறார்.

    Reply
  • மாயா
    மாயா

    // குகநாதன் தர்சனின் பங்குப்பணம் தான் இழக்கப்பட்டது. தகவல்களை சரியாக சொல்லுங்கள் மாயா. இறுதி வரை அவர்கள் பணம் புலிகளுடன் இருந்தது. பங்குகள் தொடர்பாக குகநாதன் சுத்துமாத்து செய்யவில்லை. புலிகளுடன் இருந்த பங்காளர்கள் தான் குகநாதன் தர்சனுக்கு நாமம் போட்டார்கள். புலிகளுடன் சேர்ந்திருந்த பங்காளர்கள் வன்னிக்கும் சென்று வந்தது மாயாவுக்கு தெரியவில்லை போலும்.
    மாயா குற்றச்சாட்டுக்களை வைப்பதற்கு முன்னர் விடயங்களைத் தெரிந்து கொண்டு எழுதுங்கள் – samy//

    தர்சனோ , குகநாதனோ , இந்த ஊடகத்துக்கு போட்ட பணத்தை விட அதிகமாக எடுத்துக் கொண்டார்கள். அது நேர் வழியாக அல்ல. அத்தோடு தர்சன் , குகனாதன் போன்றவர்கள் தனிபட்ட ரீதியாக பலரிடம் பணம் பெற்றும் உள்ளனர். இவற்றிற்கான ரசீதுகள் யாரிடமும் கிடையாது. தொலைக் காட்சி நடத்தும் காலத்தில் , ஐரோப்பாவில் வீடு வீடாக தொலைபேசி உரையாடல்கள் மூலம் உறவை வளர்த்துக் கொண்டு நாசுக்காக பணம் பெற்றார்கள். இது குறித்து தமிழ் ஒளி நேயர்களை கேட்டால் சொல்வார்கள். இவை எதுவும் பங்குதாரர்களது கவனத்துக்கு வரவில்லை.

    டீடீஎன் என புலிகளால் டீஆர்டி கைப்பற்றப்பட்ட பின் குகநாதனிடம் பங்குதாரர்கள் தமது பணத்தைக் கேட்க , குகநாதன் புலிகளிடம் வாங்கிக் கொள்ளும்படி சொல்லி விட்டார். அதன் பின்னரே அவர்கள் பிரபாகரனை சந்திக்க சமாதான காலத்தில் வன்னிக்கு சென்றனர். அங்கே பிரபாகரனை அவர்களால் சந்திக்க முடியவில்லை. அதற்கு பதிலாக சந்தித்த நபர் டீடீஎன்னோடு இணைந்திருந்து , வளரும் போது வாங்கிக் கொள்ளுங்கள் என பிரபாகரன் சொன்னதாக சொல்ல போனவர்கள் திரும்பி வந்தார்கள். பணம் கிடைக்கவே இல்லை. கணக்கு காட்டாத காட்கள் மற்றும் விளம்பரங்கள் மூலம் குகநாதனும் , தர்சனும் அடித்த பணம், மற்றும் கடத்தல் ஆகின பலரும் அறிந்ததே. பிரான்சின் புலிகள் அமைப்பில் இருந்தவரே இந்த தர்சன். இவரது சகோதரன் (இவரது பெயர்தான் தர்சன் எனச் சொல்கிறார்கள்) பிரபாகரனோடு மிக நெருக்கமாக இருந்தவர் என வன்னித் தகவல்கள் மூலம் அப்போது சொல்லப்பட்டது. இவர் திலகரின் நெருக்கமான நண்பர். இவர் பிரான்சிலிருந்தே வன்னி சென்றிருந்தார். வானோலி நடத்தும் தர்சனுக்கு (ரங்கன்) புலிகளின் பிரான்சு கிளை சில பிரச்சனைகளைக் கொடுத்ததால் , அதிலிருந்து வெளியேறி குகநாதனுடன் வானோலியையும் , தொலைக் காட்சியையும் நடத்தினார். ரங்கன் குகநாதனோடு இணையு முன் புலிகளது வானோலி ஒன்றை நடத்தினார். இவர் குகநாதனின் ஈழநாடு காரியாலத்தை எரித்த சம்பவத்திலும் ஈடுபட்ட ஒருவராக குகநாதனாலேயே கருதப்பட்டார்.

    //புலம்பெயர்ந்த இலங்கையருக்கும் – இலங்கை அரசுக்குமிடையிலான சந்திப்பின் போது (அதில் அவரும் கலந்துகொண்டிருந்தார்) அவர் அந்தச் சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்திக்கொண்டார். பின்நாளில் ரூபவாகினியின் செய்திகளும் வேறுசில நிகழ்ச்சிகளும் உலகம்முழுவதும் DAN தமிழ்ஒளியின் ஊடாக மறுஒளிபரப்பு செய்யப்பட்டன. ஆகையால் இலங்கைஅரசுக்கு ஒன்றும் தெரியாது என்று நீங்கள் எழுதியது தவறான கருத்து. மேலும் நீங்கள் எல்லாவிடயமும் தெரிந்தவர் மாதிரியும் எல்லா விடயங்களிலும் பங்குகொண்டவர் மாதிரியும் நீங்கள் உங்களைக் காட்டிக்கொள்ள முற்படுவது உங்களுக்கே சற்று ஓவராக தெரியவில்லையா? – Thalaphathy //

    அரசுக்கு , குகநாதன் புலம் பெயர் நாட்டுக்கான தொலைக் காட்சி ஒன்றைச் செய்பவராகத் தெரியும். இவர் நடத்திய தொலைக் காட்சியை புலிகள் பறித்துக் கொண்டார்கள் எனத் தெரியும். அதை வைத்தே காய் நகர்த்தியுள்ளார். ஆனால் இவர் புலி ஆதரவு தொலைக் காட்சியாக நடத்தினார் என்பது தெரியாது. அவரது நடத்தை குறித்தும் பெரிதாக தெரியாது. இரத்மலானையிலிருந்து இயங்கிய டான் மூலம், அரசு சார்பான செய்திகள் சென்று கொண்டிருப்பதால், குகநாதனை போர் காலத்தில் பயன்படுத்திக் கொண்டார்கள். இப்போதும் அதுவே தொடர்கிறது. அவர் சிங்கள தொலைக் காட்சிகளுக்கு குறைந்த விலையில் செற்லைட் தொடர்புகளை பெற்றுத் தருவதாக வாங்கிய பணம் பல மிலியன் ருபாய்கள். அவை விரைவில் வெளிவரும். அப்போது சக்வித்தி எனும் பேர்வழிகள் போல இவரும் இலங்கையில் கம்பி எண்ண வேண்டி வரும். போர் காலத்தில் மட்டுமல்ல இப்போதும் வெளிநாடுகளில் வாழும் இலங்கைரை மகிந்த சந்திக்கிறார். வெளிநாட்டு புலி முகவர்களையே சந்திக்கும் போது இவரும் போவது பெரிய விடயமல்ல. பணத்தை வாங்கிய குகநாதன் இணைப்புகளை சரியாக செய்து கொடுக்கவில்லை. இவரது இணைப்பு ஊடாகவே அதைக் கொடுத்து , அவை நின்று போயுள்ளன. அதன் பின்னர் அவர்களுக்கும் நாமம் போட்டுள்ளார். குகநாதன் அரசோடு இருப்பதாக காட்டிக் கொண்டு பலரை ஏமாற்றி வருகிறார். இவை விரைவில் மகிந்த வரை செல்ல இருக்கின்றன. பல நாள் திருடன் ஒருநாள் மாட்டுவான்.

    அருள்எழிலன் நேர்மையானவர் அல்ல, அவர்தான் ஆரம்ப காலத்தில் குகநாதனோடு சேர்ந்து அங்கு ஒளிபரப்பான தொலைக் காட்சி நிகழ்வுகளை திருட்டுத் தனமாக இவருக்கு வழங்கியவர். குகநாதனை மாட்டி விட்ட சல்தான்(ர்) தீபம் தொலைக் காட்சியில் பணிபுரிந்தும் உள்ளார்.இவரே குகநாதனுக்கு எமனாக வரலாம்.?

    Reply
  • sankaran
    sankaran

    ” தான் கைது செய்யப்பட்டதாகவும் சொல்ல முடியாது கடத்தப்பட்டதாகவும் சொல்லிவிட முடியாது. ” ஆபத்து தோன்றியுள்ளது.

    Reply
  • samy
    samy

    மாயா திரும்பத் திரும்ப தனக்குத் தெரியாத விடயங்களை தளபதி சொல்வது போல தெரிந்ததாகவே எழுதுகின்றார். ரிஆர்ரியை புலிகள் பறித்தெடுத்துக் கொண்டபோது குமார் சந்திரனுக்கு ஒரு தொகைப் பணத்தைக் கொடுத்து மற்றைய பங்குதாரர்களை சமாளித்து குகநாதனதும் தர்சனதும் பங்குப் பணத்தை புலிகளுடன் இணைந்து இருக்க சம்மதித்தவர்கள் வாங்கித் தருவதாக அந்த சமயத்தில் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டே ரிரிஎன் ஆக மாற்றிக் கொண்டனர். அதன் பின்னரே தர்சனும் குகநாதனும் வெளியேறினர்.தங்களது பங்குப்பணத்தையே புலிகளுக்கு தாரைவார்த்துவிட்டுத் தான் அவர்கள் வெளியேறினார்கள். மீண்டும் வானொலி ஆரம்பிக்க நேயர்களே முன் வந்து நிதியுதவி செய்தார்கள். இதில் தர்சனோ குகநாதனோ எதனையும் சுருட்டிக் கொள்ளவில்லை. புலிகள் ரிஆர்ரி யை கையகப்படுத்தியபோது சமூக அக்கறை கொண்ட உங்களைப் போன்றவர்கள் எங்கே போனீர்கள். இப்போது தெரியாத விடயங்களிலெல்லாம் கருத்துக்களை வெளியிடுவது தளபதி குறிப்பிட்டது போல உங்களுக்கு ஓவராகத் தெரியவில்லைப் போலும்

    Reply
  • aras
    aras

    இந்த விடயம் லண்டன் பிரான்ஸ் பொலிசாரின் கவனத்திற்கு செல்லும் நிலை காணப்படுகிறது.அவ்வாறு செல்லும் பட்சத்தில் இதில் சம்பந்தப்பட்ட பலரின் தொலைபேசி உரையாடல்களே அவர்களை மாட்டிவிடும் ஆபத்து தோன்றியுள்ளது. கினறு வெட்ட பூதம் வெளிகிட்ட கதையாக சிலர் கம்பி எண்ணவேண்டி ஏற்படும் என ஒரு சட்ட வல்லுனர் காதைக் கடிக்கிறார்.”

    சபாலிங்கம் கொலையே கிடப்பில் போய் விட்டது. இதையா பொலிஸ் காவிப்பிடிக்கப் போகிறது?

    Reply
  • மகுடி
    மகுடி

    அரச ஆதரவு தொலைக்காட்சி சேவையில் செய்திப் பணிப்பாளராக தயா மாஸ்ரர்!  (News)

    தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஊடகத்துறைப் பொறுப்பாளராக இருந்த தயா மாஸ்ரர் தற்போது அரச ஆதரவுத் தொலைக்காட்சி ஒன்றின் செய்திச் சேவைப் பணிப்பாளராக யாழ்ப்பாணம்- பருத்தித்துறையில் கடமையாற்றி வருகின்றார் என்று தகவல்கள் கசிந்துள்ளன.

    ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு மிகவும் நெருக்கமான தொலைக்காட்சிச் சேவை என்று நம்பப்படும் டான் ரி.வியின் செய்திச் சேவைப் பணிப்பாளராகவே இவர் செயற்பட்டு வருகின்றார்.

    யாழ்ப்பாணத்தில் இருந்து முன்பு வெளியான ஈழநாடு பத்திரிகையின் ஊடகவியலாளராக இருந்த ஒருவர் பிரான்ஸில் இருந்து இத்தொலைக்காட்சிச் சேவையை நடத்துகின்றார்.

    தயா மாஸ்ரர், புலிகளின் மொழிபெயர்ப்பாளராக செயற்பட்ட ஜோர்ஜ் மாஸ்ரர் ஆகியோர் இறுதிக்கட்ட யுத்தம் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது அரச படையினரிடம் சரண் அடைந்திருந்தார்கள்.

    தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரனின் சடலத்தை அடையாளம் காட்டியவர்களில் தயா மாஸ்ரரும் ஒருவர். பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

    இதய நோயாளியான தயா மாஸ்ரர் முன்பு கொழும்பில் அப்பலோ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றிருந்தார். தற்போது பருத்தித்துறை அரச வைத்தியசாலையில் அவ்வப்போது மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றார்.

    இவர் ஐந்து மில்லியன் ரூபாய் செலவில் பருத்தித்துறையில் வீடு ஒன்றைக் கட்டி வருகின்றார் என்று சண்டே லீடர் பத்திரிகை செய்தி பிரசுரித்துள்ளது. இவர் புலிகள் இயக்கத்தில் இணைகின்றமைக்கு முன் அரச பாடசாலை ஒன்றில் ஆங்கில பாட ஆசிரியராக கடமையாற்றி இருந்தார்.

    ஆயினும் இவரின் மனைவி பருத்தித்துறையில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் தற்போதும் ஆசிரியராகக் கடமையாற்றி வருகின்றார்.

    ——————-
    Daya Master Making Millions While On Bail

    Daya Master, the LTTE’s Media Spokesman and Principal Liaison Officer, is in the money – so to speak. Ever since he surrendered to the Sri Lanka Army – he walked out along with scores of bona fide civilians fleeing the war zone – Daya Master’s fortunes have been on the up and up.
    The Sunday Leader can reveal that the former English tuition master turned LTTE media-supremo, has made millions after his ‘arrest.’ In Point Pedro, about 34 km out of Central Jaffna, Daya Master is in the final stages of building his new house. The cost? An estimated Rs. 5 million – not much by Colombo standards, but an awful lot in Point Pedro. Daya Master was quick to point out that the legal ownership of the house now being rebuilt is in fact vested in his sister’s name.
    Serious questions are being asked not only in Sri Lanka but internationally, as to exactly what happened to the funds that were in the coffers of the LTTE at the end of the war. The return of ‘KP’ — Prabhakaran’s successor — to Sri Lanka only fanned the flames of speculation with charges abounding that ‘KP’ had struck a deal with the government. In various interviews, ‘KP’ has maintained that no such deal was struck and he has no knowledge of the LTTE arsenal of funds and assets.
    Velayutham Thayanidhi – Daya Master’s real name – told us that he lives quietly in Point Pedro, in a house that is owned by his wife. Mrs Thayanidhi is a school teacher, working locally – teaching at the Vada Hindu College – where the local gossip maintains that Mrs. Thayanidhi, who is a graduate teacher, is angling to be appointed the popular schools’ principal; using her husbands’ close links to the Rajapaksa regime as her qualification.
    While ‘KP’ told us that he “feels” for and indeed was moved to tears, when he saw for himself the plight of innocent civilians housed at Menik Farm, Daya Master appears to have forged a whole new life with all the comforts to boot. His unfortunate brethren, still languishing in the heat, misery and squalor of temporary homes within the IDP camps, all but forgotten.
    Politics they say makes for strange bedfellows. In the hay days of the LTTE, when they virtually ruled the northern peninsula of Sri Lanka and when they perpetrated absolute terror on the lives of all Sri Lankans, one of the prime targets was MP Douglas Devananda. No less than four attempts were made to assassinate him, including sending a suicide bomber to his office in Colpetty.
    Today, in the new Sri Lanka of a post-war era and a liberated northern peninsula – albeit under heavy armed forces occupation – Daya Master has, ironically found employment with DAN TV, a Tamil language satellite based TV channel, for long and popularly associated with Devananda’s EPDP. Daya Master works out of the TV channels’ regional studio in Jaffna, as a news compiler. DAN TV has its origins in Paris, France and was the first channel to broadcast focused on the Tamil speaking viewer. It claims to be available to viewers not only by satellite direct-to-home (DTH) transmission, but also terrestrially in Jaffna and Vavuniya.
    Daya Master underwent surgery for a heart ailment in Colombo and in his post-war retirement, obtains regular treatment at the Point Pedro Hospital. He claims to rarely visit Colombo, citing a lack of time. He told The Sunday Leader that “life is good now” and that he is very happy; his mother, he said also lives nearby, completing the cosy family life for him.
    Medical treatment for his heart condition is available at the Point Pedro Hospital he told us, meaning there was no need to travel to Colombo regularly. As in all wars, the civilians who played no direct role in the conflict other than to stand-by and be used and abused by both factions, are all but forgotten and indeed ignored by their LTTE masters. To a large extent, also ignored by their political masters in Colombo, who recognise that unlike ‘KP’, Daya Master and other prominent LTTE members, civilians have no real benefit to give the South.
    Their needs therefore come in a poor last in terms of facilities and benefits. Reliable sources told us that Daya Master is one of the most prominent and emerging power brokers in Jaffna and predicted that with the emergence of ‘KP’, Daya Master too will be a serious force to be reckoned with in the immediate term.

    http://www.thesundayleader.lk/2010/09/12/daya-master-making-millions-while-on-bail/

    Reply
  • Naadoode
    Naadoode

    புலம் பெயர் தேசங்களில் வருமானம் தரக்கூடிய எல்லாவற்றையும் (கோவில்களிலிருந்து சில்லறை வியாபாரம் வரை) புலிகள் தங்கள் கையகப்படுத்தி வந்த காலத்தில் தான் ரி.ஆர்.ரி வானொலி மற்றும் தொலைக்காட்சியும் வருமானம் தரும் ஒன்றாகக் கருதி கையகப்படுத்தும் முயற்சிகளில் இறங்கினார்கள்.

    அது தொடர்பாகக் குகனாதனோடு நடந்த பேச்சுவார்த்தையில் அதற்குக் குகநாதன் மறுத்துவிட அவர்கள் தமது வழமையான சதி வேலையை ஆரம்பித்தார்கள். ரிஆர்ரியின் பங்காளர்களிடம் இரகசியப் பேச்சு நடாத்தி தாம் ஒரு தொலைக்காட்சி ஆரம்பிக்கப் போகிறோம் என்றும் ரிஆர்ரியின் முதலிட்ட பணத்தை மீளப்பெற்று தமது தொலைக்காட்சியில் முதலிடுமாறும் முதலிடும் தொகையின் இரண்டு மடங்கை பங்காகத் தருவதாகவும் சொல்லி கொடுத்த நெருக்கடியில் இவர்கள் பங்குகளை மீளப் பெற்றார்கள்.

    இதனால் குகநாதனால் தொடர்ந்து தொலைக்காட்சியை நடாத்த முடியாது போக புலிகளுக்கு விற்க வேண்டியதாயிற்று. அடிமாட்டு விலைக்கு.

    இதன் பின்னர் புலிகளுடைய ரி.ரிஎன்இல் பணம் போட்ட அந்தப் பங்குதாரர்களுக்கு புலிகள் நாமம் போட்டிருக்கலாம். இவர்களும் வன்னி வரை சென்றிருக்கலாம். அவர்களும் கூடவே இருந்து இலாபம் வரும் போது பெற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்லி அனுப்பியிருக்கலாம்.

    இன்னொரு தகவலும் கூடவே: ஜெயா ரிவியை குகநாதன் புலம் பெயர் தேசங்களில் ஒளிபரப்பிய போது குகநாதனை றோ என்று தமது ஊடகங்களில் பிரச்சாரம் செய்து வந்த புலிகள் அதே ஜெயா ரிவியை ஒளிபரப்ப தமக்கு ஐரோப்பிய உரிமம் கேட்டும் ஜெயலலிதாவைப் புகழ்ந்தும் ஜெயா நிர்வாகத்திற்கு எழுதிய கடிதத்தை தான் பார்த்ததாக எனது தமிழ்நாட்டு நண்பர் ஒருவர் தெரிவித்திருந்தார் பல வருடங்கள் முன்பாக.

    குகநாதன் நியாயமானவரா இல்லையா என்பதல்ல இங்கு விடயம். ரி.ஆர்.ரி காலத்தில் குகநாதன் கண்மூடித்தனமான புலி ஆதரவுடன் தான் வானொலி மற்றும் தொலைக்காட்சியை நடாத்தினார் என்பதை நாம் மறந்துவிட முடியாது.

    அதேபோல் இப்போது அதே கண்மூடித்தனமான புலி எதிர்ப்புடன் அரச ஆதரவுடன் நடாத்துகிறார்.

    எப்போதுமே பிரதான ஊடகமுதலாளிகள் அதிகாரத்திலிருப்பவர்களைப் பகைத்துக் கொள்ள விரும்புவதில்லை. அதிகாரத்தில் யார் இருக்கிறார்களோ யாருடைய கைக்கு அதிகாரம் கைமாறப் போகிறதோ அவர்களுடைய பிரச்சாரக்குரலாக மாறி அவர்களுடன் கை கோர்த்துக் கொள்வார்கள்.

    இதில் எழிலன் பணியாளராக மட்டுமல்லாமல் பங்குதாரராகவும் இருந்திருக்கிறார். இது பங்காளிகளிடையேயான வியாபாரப் பிரச்சினை.

    இரண்டு தரப்புமே தத்தமது அரசியல் செல்வாக்கை தேவையான இடங்களில் பாவித்திருக்கிறது.

    நாவலனுக்கும் ரயாவுக்குமான மோதலில் ரயா இதனை நாவலனுக்கு எதிராகப் பாவித்திருக்கிறார்.

    நாவலன் ரயாவின் கட்சியில் இணைந்திருந்திருந்தால் நிலைமை இவ்வளவு மோசமாகி இருக்காது.

    அதையும்விட ரயாவின் அரசியல் பங்காளியான தமிழகத்து மகஇகவை ரயாகரனிடமிருந்து பிரித்து இனியொரு எடுத்துக் கொண்டது. இது ரயாவுக்கு ஆறாத கோபத்தை இனியொருவில் ஏற்படுத்தி இருந்தது. அதன் விளை முரண்பாட்டால் அசோக்கிற்கு எதிராக தொடர்கட்டுரையை எழுதியிருந்தார் ரயா.

    ரயா எழுதிய இவ்வளவு பிரச்சினையும் அசோக்குடன் முரண்பாடு ஏற்படுவதற்கு முதல் ரயாவின் மார்க்சியப் பார்வைக்குத் தெரிந்திருக்கவில்லை. இது ரயாவின் வழமை.

    நாவலன் அசோக் உருவாக்கிய இனியொருவை கையகப்படுத்தி தமிழ்நாட்டில் மகஇகவையும் இலங்கையில் புதிய ஜனநாயகக் கட்சியையும் இணைத்துக் கொண்டு தனக்கு சிவப்புச்சாயம் பூசி புரட்சியளராகப் பார்த்தார். புரட்சி மொத்தத்தையுமே குத்தகைக்கு எடுத்த ரயா விடுவாரா சரியான நேரத்தில் ஆப்பு வைத்தார்.

    ரயா வைத்த ஆப்பை விட சரியான ஆப்பை இப்போது தேசம் செருகியிருக்கிறது.

    அட ஆளை விடுங்கப்பா!

    Reply
  • மகுடி
    மகுடி

    samy , உங்களுக்குத் தெரிந்ததை நீங்கள் எழுதுங்கள். எனக்கு தெரிந்ததை நான் எழுதுகிறேன் என்று எழுங்கள். எது ஓவர் , எது ஓவர் இல்லை என்பதை வாசகர்கள் தீர்மானிக்கட்டும். உங்கள் தகவல்களும் உண்மையானவை. புலிகள் தொலைக் காட்சியை பறித்த போது , அதில் தொடர்ந்தும் குகநாதனுக்கும் , தர்சனுக்கும் பணியாற்றச் சொன்னார்கள். அவர்களோ சிலரை விட்டு விட்டு தாம் வெளியேறுவதாக வெளியேறினார்கள். அவர்கள் விட்டுச் சென்றோர் , தொலைக் காட்சியின் ஆவணங்களையும் , பல உபகரணங்களையும் எடுத்துச் செல்லவே விட்டுச் சென்றார்கள்? ஓமோ, இல்லையோ? நீங்கள் ஒரு மோசடி பேர்வழிக்காக பேசுகிறீர்கள் என்பது மட்டும் தெளிவாகிறது. உங்களை விட குகநாதன் குறித்து அதிகம் தெரியும். இந்த கருத்துகள் எமது அப்பாவி தமிழர் இவர்களைப் போன்ற மோசடி பேர்வழிகளை நம்பி ஏமாற வேண்டாம் எனும் நோக்கம் கொண்டதேயாகும். நீங்கள் அவர்கள் நல்லவர்கள் என வாதாடுகிறீர்கள். தவறுகளாக இருந்தால் சரி செய்து கொள்ளலாம். இதற்காகத்தானே எழுதுகிறோம்? தொடர்ந்து எழுதுங்கள். அனைவர் குறித்த தகவல்களும் வெளி வரட்டும். நன்றி.

    Reply
  • palli
    palli

    //. ரிஆர்ரியை புலிகள் பறித்தெடுத்துக் கொண்டபோது குமார் சந்திரனுக்கு ஒரு தொகைப் பணத்தைக் கொடுத்து மற்றைய பங்குதாரர்களை சமாளித்து குகநாதனதும் தர்சனதும் பங்குப் பணத்தை புலிகளுடன் இணைந்து இருக்க சம்மதித்தவர்கள் வாங்கித் தருவதாக அந்த சமயத்தில் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டே ரிரிஎன் ஆக மாற்றிக் கொண்டனர்//
    இது தவறான தகவல் குமார் சோப் சந்திரனே புலிகளை (பரம்) பேரம் பேசி ரி ஆர் ரி யை புலிகளுக்கு ஒப்படைத்தார், இதில் ஈழனாடு பாலசந்திரனும் புலிகளுக்காக செயல்பட்டார், இதில் குகநாதனின் பங்கு வழக்குகள் ஓரு தடவை ரி ஆர் ரிவியில் எதிர்கண்ணோட்டம் என நினைக்கிறேன் (நிகழ்ச்சியின் தலைப்பு தவறாயின் மன்னிக்கவும் திருத்தவும்) நேரடியாகவே தனது பங்கு சம்பளம் இப்படி பலதை சொன்னார், அவரைடம் கொடுக்கபட்ட ரேடியோவை(ரி ஆர் ரி) கோவை நந்தனிடம் கொடுத்து விட்டு பல மாதகாலம் மறு ரி வியை தொடங்க முடியாமல் குகநாதன் பிலிப்தேவா உதயகுமார் கே எஸ் ராஜா இன்னும் சிலர் அவதிபட்டதை நானும் அறிவேன்; இதில் புலிகள் பண மோசடி செய்தது குமார் சோப் சந்திரனுக்கே, மிக பெரிய வர்த்தகர் இன்று மிக தாழ்வான நிலையில் இருப்பதுக்கு காரனம் அவரது புலி சகவாசம் என லண்டனில் இருக்கும் அவரது சகோதரர்கள் முணுமுணுப்பு; இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த தமிழக ரவுடிதனத்தை கடத்தல் கப்பம் பொலிஸ் உதவி நடிகநடிகையர் தொடர்பு இப்படி பலதை வினியோகம் செய்த பெருமையும் இந்த குமார் சோப் சகோதரர்களுக்கே சாரும்; இவர்களில் ஒருவரான உருத்திரா என்பவர் ஜெயலலிதாவின் பினாமி என கோடுவரை சென்றுவந்தவர் என்பதனை இங்கே பார்க்கவேண்டும், ஆகவே அவர் இறந்தபின் அவர் வாரிசுகளாக பலர் இப்படி தமிழகத்தில் அங்குள்ள மாவட்ட வட்ட செயலாளர்களுடன் கூடி கும்மாளம் குடும்பகட்டுபாடு என செயல்பட்டதும் பலர் அறிந்ததுதான்; இதில் புலம் பெயர் தேசத்துக்கு ஆட்களை அனுப்பும் முகவர்களிடமே இவர்களது பண பறிப்பு மிக மோசமாக சில தரம்கெட்ட பொலிஸ்சின் உதவியுடன் நடக்கிறது; இவை அனைத்தும் வெளிவர இந்த விடயத்தை தமிழக முக்கிய ஊடகங்களுக்கு கொடுப்பது நல்லது, இவர்கள் மட்டுமல்ல இதில் சம்பந்தபட்ட சில பொலிஸ்சார் உட்பட தமிழக அரசியல்வாதிகளும் தண்டனை கிடைக்காவிட்டாலும் அம்பலபட போவது உன்மை நிஜம் நிஜம்; குகநாதன் கெட்டவர்தான் என்பது உலகதமிழர் அறிந்த ஒன்றுதான்; ஆனால் அவரை விடவும் கெட்டவர்கள் இருப்பதை நாம் அறிய வேண்டாமா??

    Reply
  • P.V.Sri Rangan
    P.V.Sri Rangan

    பு(எ)லிகளது ஊடகப் பொறுப்பாளர் தயா மாஸ்டர் வீடு கட்கிறார்.கநாதன் கோடிக் கணக்கில் தொலைக்காட்சி வர்த்தகஞ் செய்கிறார். கே.பி.புனர்வாழ்வு அ(ழி)ளிக்கிறார். எல்லாம் மக்களுக்கு. உருத்திர குமார் தேசங்கடந்து தமிழீழம் புரட்டி வைத்துக் கூத்தாடுகிறார். நெடியவன் புலம்பெயர்ந்து பெரும் நிதிநிதியந் திறுந்து நடாத்துகிறார். புரட்சிக்கான குத்தகையை எனக்குத் தரமாட்டீர்களா- ஜெயபாலன்? அதையாவது மட்டும் என்னிடம் விட்டுவிடுகளேன். வயதாகிறது. அதிலிருந்துகொண்டாவது நாலு பேரைச் சேர்த்துக் கொடுத்தாலாவது எனக்குப் படியளக்கக் காத்திருப்பவர்கள் கவனமாக என்னைக் கையாளுவினம். எல்லாத்துக்கும் நீங்கள் ஆப்பு வைப்பதாகத் தேசம் வாசகர்கள் பூரிப்படைகின்றனர். இது, ஆப்பா அல்லது எவருக்குமான காப்பா என்று காலம் பதிலுரைக்கும்.

    அதுவரையும், மீண்டும், மீண்டும் யோசித்துப் பார்க்கிறேன். முடியவில்லை!

    புலிகளும், தமிழ்த் தேசியம் பேசியவர்களும், அனைவரையும்,அவர்களது இன்றைய நிதி மோசடிகள்-அரசியல் நகர்வைக் குறித்து யோசிக்க முடியவில்லை!இவ்வளவு கொடியவர்களா இவர்கள்?ஒரு மக்கள் கூட்டத்தைக் கொன்று குவித்த கையோடு தமது நல்வாழ்வுக்காக அவர்களது கண்ணீரில் காசு பார்க்கும் இவ்வளவு கேடுள்ளவர்களா நாம்?

    ஒரு பக்கம்வானொலி, தொலைக்காட்சி, ஊடகமெனத் தமிழ்பேசும் மக்களை “உறவுகள்-சொந்தகள்” என்று மொட்டையடிக்கும் கூட்டம், மறுபுறம் தமிழீழம்-உரிமை, தமிழ்-தேசியம் என்று மொட்டையடிக்கும் கூட்டம். இடையினில் புரட்சி என்று நடுரோட்டில் அடிபடும் நாம். இங்கே, மக்களுக்கு எதைத்தாம் ஒழுங்காகச் செய்தோம்? அல்லது, அந்த மக்களுந்தாம் தமக்கேற்பட்ட அழிவுகள் குறித்துச் சிந்திக்கிறார்களா?

    நல்லூர் கந்தனுக்குத் தெருவெல்லாந் தோரணங்கட்டித் தேரிழுக்கும் தமிழர்களுக்கு வீடு கட்டுவதும், காணி வேண்டுவதும் அவசியந்தாம். குடியிருக்க அது அவசியம்தாம். ஆனால், முன்னாள் புலிகள் மில்லியன் கணக்கில் வீடுகள் வேண்டவும், கட்டவும் முடியுமானால் அவர்களது போராட்டத்தால் அழிவுக்குள்ளான மக்களுக்கு எவர், எந்த நஷ்ட ஈடு வழங்கினர்?

    “எல்லோரும் போராட வாங்கோ” என்று ஏ.கே.47 ஐ பிடரியில் வைத்து அழைத்தவர்கள் புலிகள், அவர்களே இப்போது தமது வாரீசுகளுக்காகத் தமிழீழத்தைக் குத்தகைக்குவிட்டுப் பிழைக்கின்றபோது, இந்தக் குகநாதன்(டான் தொலைக்காட்சி அதிபர்) அவர்களும் கொஞ்சம் பணம் சம்பாதிக்கலாம்தானே? அவருக்கும் வாரீசுகள் இருக்கின்றது. வாழும்-வளரும் பிள்ளைகள் பிழைச்சுப் போகட்டுமே!என்னத்தைப் பெரிதாகச் செய்தார்கள்-ஒரு இரண்டு இலட்சம் மக்களைப் புலிகள் அழிக்கத் தோதாகக் கருத்தைக்கட்டியதைத் தவிர வேறென்ன செய்தார்கள்? இரண்டு இலட்சம் உயிர்கள்தானே-போனற் போகட்டும்! அவர்களாவது தமது பிள்ளை குட்டிகளுடன் சந்தோஷமாக வாழட்டும். அதுக்காகவாது படுகொலை செய்யப்பட்ட இரண்டு இலட்சம் மக்களது அழிவு பயன்படட்டும்!

    இப்போதெல்லாம், தமிழ்பேசும் மக்களுக்கான நீதிக்கான குரல்கள் மெல்ல ஓய்ந்துபோக, பணப்பசையுடையவர்களது முரண்பாடுகள், கடத்தல், கப்பம், என்று தொடரும்போது அதற்காகவே பேட்டியெடுத்து, அவர்களது நியாயத்துக்காக நாம் பேச வெளிக்கிடுவது புரட்சி, ஈழுவிடுதலையின் அடுத்த பரிணாமமாகிறது. இது, நல்ல முன்னேற்றந்தாம். எதுவெப்படியோ நாம் குகநாதனுக்கான நீதிக்காகக் குரல் கொடுக்க வேண்டும். அப்படிக் கொடுப்பது அவசியம் ஆகும்!

    ஜனநாயகத்தைத் தூக்கி நிறுத்துக்கும் நீதிக்கான ஊடகவியலாளர் டான் தொலைக்காட்சி அதிபர் குகநாதன். அன்னாருக்கு நிகழ்ந்த பாதகங்கள் குறித்து அவரது பேட்டியைச் சூட்டோடு சூடாகத் தேசம் வாசகர்களுக்கு வழங்கியதென்பது ஒரு பெரும் சமூகக் கடமையானதென நம்பலாம்.

    டக்ளஸ் தேவனந்தா அமைச்சராக இருந்து சாதிப்பதுபோன்று இன்றைக்குத் தமிழ்பேசும் மக்களுக்காக இந்தவூடகவியலாளர்கள், குறைந்தபட்சமாவது ஐ.பி.சீ. வானொலியில் 12 மணிக்கு ஓலமிடும்யசோதா மித்திரதாஸ்போன்று ஒப்பாரியாவது வைத்துத் “தமிழர்கள் வெட்டுண்டு துண்டுகளானார்கள்” என்று சொல்லிச் சொல்லியே தமிழர்களது ஈரற் குலையைப் பிடுங்குவதுபோன்று எல்லோருஞ் செய்தேயாக வேண்டும். இல்லையென்றால், நமது”கல் தோன்றி மான் தோன்றாக் காலத்து வாளொடு முன் தோன்றிய” வரலாறு என்னவாகும்? எல்லோரும் வாங்கோ-வந்து குகநாதனுக்கேற்பட்ட வரலாற்றுக் கொடுமைக்கெதிராக வழக்காடு மன்றைத் திறவுங்கள்! ஜெயபாலன் மிகச் சிறப்பாகப் பேட்டி கண்டதன் பயன் எத்தனையோ முறைகளில் பயன்படுவதையிட்டுப் புரட்சிக் கொடி வானுயரக் கோட்டையில் பறக்கிறதே, அதுவொன்று போதாதா-என்ன?

    இருந்தும், படிப்படியாக மக்களுக்கு உண்மையை உரைப்பதற்காகவேதாம் நாம்பொதுச் சமூகச் சூழலுக்கு வெளியில் தனிநபர்களது அநுபவத்தைப் பிரித்துப் பார்பதில்லை! அது, தப்புத்தப்பாகப் புரியிறபோதுதாம் பிரிப்பது-பறிப்பது…

    வாழ்நிலைதான் சமூக உணர்வைத் தீர்மானிப்பதாக வரலாற்று ஆசான்கள் சொல்வதால், உங்களுக்கென்ற எந்தத் தனிப்பட்ட துரும்பும் இருக்கப்படாது. அனைத்தும் கட்சிக்கும், புரட்சிகர நிலைவரத்துக்கும் உட்பட்டதே! இந்த விஷயத்தாற்றாம் குகநாதனது நீலிக் கண்ணீர் :

    “நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான் பெற்ற
    நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு-மேலைத்
    தவத்தளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்
    குலத்தளவே ஆகும் குணம்.”

    என்று அவ்வயையுந் தாண்டித் தேசம் நெற் நெற்றியடி ஆப்பாக வைத்ததாகரெவரெவெரோ கூத்தாடிக்கொண்டிருக்க நாமும் தாந்தோன்றித்தனமாகக் கலையெடுத்துக் கருக்கலைப்பதென்று இதுவரை முக்கி,முக்கி தட்டித் தாலாட்டிக்கொள்கிறோம்.

    ப.வி.ஸ்ரீரங்கன்
    13.09.2010

    Reply
  • naanee
    naanee

    எல்லாமே சரியான சின்ன பிள்ளை தனமாக இருக்கின்றது

    Reply
  • Thalaphathy
    Thalaphathy

    பல்லியிடம் ஒரு கேள்வி!

    நீங்கள் இங்கு எழுதிய பின்னூட்டத்தினூடாக, நீங்கள் குமார் & Brothers ஐப் பற்றியும், குறிப்பாக உருத்திரனைப் பற்றியும் நன்கு தெரிந்துவைத்துள்ளீர்களென்பது எனக்கு விளங்குகின்றது. உங்களுக்கு எப்படி இவர்களைத் தெரியும் – இந்தியாவிலா அல்லது இலங்கையிலா?

    Reply
  • palli
    palli

    //. உங்களுக்கு எப்படி இவர்களைத் தெரியும் – இந்தியாவிலா அல்லது இலங்கையிலா//
    இரண்டிலுமே;; இலங்கையில்; ஊரவனாய், இந்தியாவில் வியாபாரிகளாய்??

    Reply
  • palli
    palli

    நண்பர்களே இந்த தர்சன் என்பவரை இதில் கொண்டு வருவது தவறு; அவர் புலி மட்டுமல்ல தான் பொட்டரின் எடுபிடி என தமிழ் ஒலி ரேடியோவில் சொல்லிய ஒரு புலி, அவரது புலிதனத்தை அவரது ரேடியோவை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். திலகர் இருந்து கஜன் நாதன் சபாலிங்கம் என இவரது உளவு மிக பெரியது அதை காலபோக்கில் பார்க்கலாம்; இவர் ரிஆர்ரியில் நுழைந்ததே ஒரு கிருமியாய்தான், இவர்மூலம்தான் பரா குமார்சோப்புக்கு தம்மிடம் உங்கள் பங்கை தரும்படி புள்ளிவைத்தது; அதில் போவது போல் வெளியேறி ரி ரி என்னின் இரகசிய ஆலோசகராக இவர் கடமையில் இருந்தத்தும் பலர் அறிந்தத்தே, ஆனால் குகநாதன் திருவிளையாடல் தனது ரி வியை அல்லோலயாவுக்கு (கத்தோலிக்க) குத்தகைக்கு விட்டுவிட்டு ரேடியோவை மட்டும் தனது சகாக்களிடம் கொடுத்துவிட்டு இவர் இலங்கை இந்தியா என (புலிகளால் தனக்கு மரணதண்டனை விதிக்கபட்டு விட்டது என சொல்லி) சுத்தியபோதுதான் தர்சனின் கவனம் ரேடியோவில் வேலை செய்யும் பளய தனது சகாக்கள் மீதுவிளுந்தது, அத்துடன் நிறுத்தாமல் உடனடியாக தனது உளவு வேலையிலும் இறங்கி அதில் வெற்றியும் கண்டார் இதில் பல புலி எதிர்பாளர்கள் இரவு பகலாய் வேலை செய்தது தமிழ்ஒலியை கேட்போருக்கு தெரியும்; இவரது முழு நோக்கமும் ரிபிசி ; ரி ஆர்ரி; இரண்டு ரேடியோவிலும் நடக்கும் அரசியல் விவாதம் தடைபடவேண்டும் என்பதே, அதில் அவர் சிறிது வெற்றியும் கண்டார்; ஆனால் அந்த நேரம் பார்த்து முள்ளிவாய்க்கால் முற்றுகைஇட செய்வதறியாது தற்போது புலியில் இருந்து இன்று அரசிடம் கைமாறும் முக்கியஸ்த்தர்களுக்கு இரவுபகலாய் திட்டி தீர்க்கும் நிகழ்ச்சி நடத்துகிறார், இவர் ஓயாது சொல்லும் வார்த்தை ஒட்டுகுழு இப்போதாவது தர்சன் வழி தனிவழி என்பது புரிகிறதா??

    Reply
  • santhanam
    santhanam

    புலிகள் எதையும் சொந்தமாகவளத்தது கிடையாது அடுத்தவன் வளர்க்க அதைஉட்புகுந்து உடைத்து எடுப்பதுதான் வழக்கம் ரி.ஆர்.ரிக்கும் அதே கெதிதான் குகாவும் தர்சனும் வளர்த்துவிட வக்கில்லா சருகுபுலிகள் உட்புகுந்து எடுத்து தமிழ்செல்வனிடம் சிக்னலைபெற்றது. மிகவும் கேவலமான ஊடகவியலாளர்கள் புலிக்குள்தான் இருந்தார்கள்.

    Reply
  • Naadoode
    Naadoode

    //பு(எ)லிகளது ஊடகப் பொறுப்பாளர் தயா மாஸ்டர் வீடு கட்கிறார்.// சிறிரங்கன் அண்ணை நானும் தான் பார்க்கிறன். தயா மாஸ்டர் ஐந்து மில்லியனில் வீடு கட்டுவது இடது மற்றும் முற்போக்கு இணைய உலகில் பெரும் செய்தியாகியிருக்கிறது.

    ஐந்து மில்லியன் என்பது ஐம்பது இலட்சம் அண்ணை. இன்றைக்கு இலங்கையில இருக்கிற பணவீக்க மற்றும் பொருளாதார நிலைமையிலை ஒரு வீடுகட்டி பூர்த்தியாக்க ஐம்பது இலட்சம் தேவை என்பது சாதாரணமாக எல்லாரும் அறிந்தது. கொழும்பிலை ஒரு மூன்றரை வீடு கிட்டத்தகட்ட ஒரு கோடி வரை போகும். அவர் தன்ரை ஊரிலை ஐம்பது இலட்சத்துக்கு ஒரு வீடு கட்டுறார். இதிலை என்ன தான் பிரச்சினை இருக்கு.

    சீனி 72 சதமும் பாண் ஒரு ரூபாயும் விற்கேக்க பிளைட் ஏறினவை இப்பவும் அந்த விலை தான் என்று நினைக்கிறது தான் பிரச்சினை போலை கிடக்கு. நேற்றிரவு பாண் 3 ருபாயாலை உயர்ந்து இப்ப 93 ரூபாயாயிட்டுது.

    இந்த நிலையிலை ஐம்பது இலட்சம் என்றது என்ன பெரிய காசே.

    டக்ளஸ் லெயார்ட்ஸ் ரோட்டிலை வாங்கின – அதை பறிச்சது எண்டும் சொல்லாம் வீட்டின்ரை விலை என்ன தெரியுமோ 9 கோடி. இது 90களின் விலை. பம்பலப்பிட்டியிலை இப்பிடி என்டால் கொள்ளுப்பிட்டியிலை வீடு வைச்சிருக்கிற இடதுசாரி சிவசேகரத்தின் வீட்டின் விலை என்னவாக இருக்கும் என்று நாவலன் கேட்டுச் சொல்வாரா?

    அது சரியண்ணை சிறிரங்கன். உங்கடை ஜேர்மனி வீடு எவ்வளவு வரும். ஒரு மூன்று இலட்சம் யூரோ? ஜெயபாலன் நீங்களாவது சொல்லுங்கோ லண்டனிலை உங்கடை வீடு ஒரு இரண்டரை இலட்சம் பவுண் வருமே?

    இப்ப சொல்லுங்கோ தயாவாத்தி ஐம்பது இலட்சத்திலை வீடு கட்டினா என்ன தான் பிரச்சினை.

    Reply
  • peter
    peter

    நாம் இங்கு தடுமாறிக் கொண்டிருப்பது, இலங்கை பத்திரிகையாளர்களுக்கோ, இந்த நாடகத்தின் நாயகன் சர்தாருக்கோ (அப்துல் ஜமீல் முகம்மது சர்தார்) இன்னும் போய்ச் சேரவில்லை.

    இங்கிலாந்தில் தீபம் ரிவியில் வேலை செய்த சர்தார், விசா முடிவடைந்ததும், இலங்கை சென்று, அங்குள்ள சில விளம்பர கம்பனிகளில், கமிஷன் அடிப்படையில் வேலை செய்து கொண்டிருந்தார். பின்னர் குகநாதனுடன் இணைந்து தொழிலை தொடங்கினார்.

    சென்ற மாதம், டாண் டிவிக்காக சென்னை சென்ற இவர், சில இந்திய ட்ராமாக்களை விலை பேசுவதற்காக எழிலனையும் சந்தித்துள்ளார். எழிலனுடன் பேசிக்கொண்டிருக்கும் போது, குகநாதன் எங்கே என எழிலன், சர்தாரிடம் வினவியுள்ளார். இந்த உள் வீட்டுப்பிரச்சனை புரியாத சர்தார், காசுவலாக குகநாதனும் சென்னையில்தான் நிற்கின்றார் என்று கூறியுள்ளார். அதன் பின் காய்கள் மிக வேகமாக நகர்த்தப்பட்டு, குகநாதனை சர்தார், தமது இருப்பிடத்துக்கு அழைத்துள்ளார். அங்கு வந்த பின்னர்தான், தான் வரக் கூடாத இடத்துக்கு வந்துள்ள விடயம் குகநாதனுக்கு தெரிய வந்துள்ளது.

    அப்புறம், சென்னை கமிஷனர் அலுவலகத்தில், கைதும் அல்லாமல், கடத்தலும் அல்லாமல் ஒரு கட்டப் பஞ்சாயத்து நடந்துள்ளது. அதிசயம் என்ன என்றால், அந்த கட்டப் பஞ்சாயத்துக்கு, வைகோவின் ஆதரவாளர்களும், நெடுமாறனின் ஆதரவாளர்களுமே தலைமை தாங்கியுள்ளனர்.

    சென்னை கமிஷனர்கள் சாதாரணமாக முதலமைச்சர்களுக்கே வேலை செய்வார்கள். ஆனால் இங்கு எதிர்க்கட்சி ஆதரவாளர்களே ஆதிக்கம் செலுத்தியுள்ளார்கள். இதில் உள்ள மர்மம் என்ன. அரசியலா அல்லது எச்சரிக்கையா.

    தயா வாத்தி 50 லட்சத்துக்கு வீடு கட்டுவது பற்றி கவலைப்படுகின்றீர்கள், இங்கிலாந்தின் ஒரு முக்கிய பகுதிக்கு, புலிக்கு பணம் சேர்த்த ஒருவர், போன மாதம் சிறிலங்கா போய், பத்து நாள் தங்கியிருந்து, திருகோணமலையில், சிவன் கோவிலுக்கு அருகில், இரண்டு கடை அறைகளுடன், வீடு, காணி என, ஒரு கோடி எண்பத்தெட்டு லட்ச ரூபாவுக்கு வாங்கியுள்ளார். அவரது சொந்த ஊர் புதுக்குடியிருப்பு. இங்கிலாந்தில் சொந்த கடை, இரண்டு சொந்த வீடு.டோல் மணியும் எடுக்கின்றார். வாழ்க நமது ஜனநாயகம்.

    Reply
  • P.V.Sri Rangan
    P.V.Sri Rangan

    நாடோடீ,உங்கள் பணவீக்கங் குறித்த பார்வை-விளக்கத்துக்கு நன்றி. உண்மையில் நான் பாண்-சீனி ,72 சதம்-1 ரூபா நிலையில்தாம் இருக்கிறேன். அந்த வகையில் 50 இலட்சம் பெரிய தொகைதாம். இப்போது தயா மாஸ்ரர் வீடு கட்டவதென்ற கூற்றை ஏன் பெரிதாக்கிறேன்?

    புலியிலிருந்து எத்தனையோ ஆயிரம் போராளிகளைப் பலியெடுத்த இயக்கத்தின் முக்கியஸ்த்தர். இப்படி மறுவாழ்வு அமைக்கும்போது, சாதரணப் புலிகள் பூண்டோடு அழிக்கப்பட்டனர். ஆயுதம் ஏந்திய எந்தப் புலியும் (ஈழத்துக்கு விசுவாசமான)உயிருடன் அழிக்கப்பட்டனர். அதையெல்லாம் ஒப்பேற்றியவர்கள் இப்போது மறுவாழ்வென அரங்குக் வருகினம். இவர்கள் இலங்கையின் உண்மையான முகத்தைப்பேசாது, தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அப்பாவி இளைஞர்களைப் புலிப் போராளியாகவும்-மறுவாழ்வாகவும் நாடகமாடும் இலங்கைக்கு வக்காலத்து வாங்குவதில் முனைப்பாகி வருகினம். மறுவாழ்வு நாடகத்துக்காகப் புலிகளது முன்னாள் தலைவர்களில் சிலரை வைத்தபடி அப்பாவி இளைஞர்களைப் புலியெனப் படம்போட இவர்களே காரணமானவர்கள்.

    எத்தனையோ போராளிகள் , ஆயுதப் பயற்சியுடையவர்கள் என்பதற்காக இவர்கள் மூலம் அறியப்பட்டுத் தலையில் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள். இதையெல்லாம் மறுத்துவிட்டு தயாநிதிக் நியாயம் உரைக்க வேண்டாம்.

    இலங்கை அரசு சிறைகளில் அடைத்து வைத்திருக்கும் எந்த இளைஞர்களும் உண்மையான போராளிகளல்ல!அவர்களைப் போராளிகளாக்கும் தயா மாஸ்ட்டர், குமரன் பத்மநாதன், தமிழினி இன்னும் எத்தனையோ புலிகளது மேல்மட்டம் இலங்கை அரசுக்குக் காவடி தூக்குகிறது. இதைக் குறித்தே அவரது 50 இலட்ச வீடு குறியீடாகிறது. ஏனெனில் இவர்கள் புலியாகி இருந்தபோது தேசமெனும் பொய்க்கதைக்காக எத்தனைபேரைப் பலியெடுத்தனர். எத்தனை பேரைத் துரோகி சொல்லிப் போட்டனர்?

    இதையெல்லாம் மிக இலகுவில மறக்க வேண்டாம்.

    அடுத்து, எனது வீடு ஒரு இரண்டு இலட்சம் யுரோ தேறும்.

    நான் இருக்கும் தொடர் மாடி வீட்டில் ஏழு வீடுகள் இருக்கு. அதன் விலை கிட்டதட்ட 1.5 மில்லியன்கள் யூரோ. இதைப் போன ஆண்டுதாம் சொந்தமாக வேண்டினேன்.
    முழுக்கமுழுக்க நான் இயகத்துக்காகச் சேர்த்த காசிலும், தூள் கடத்திய பணத்திலுமே வேண்டியவன். வட்டிக்கு வட்டியும் அதில் ஒருபகுதிக்கு உதவினது. எனவே, உங்களுக்குச் சந்தேகம் வேண்டாம்.
    எனது ஆளுமையே தூள் கடத்துவதில்தாம் தங்கியிருந்தது. டெல்லியிருந்து பதினாறு தடவைகள் ரொக்கட் அடிச்சவன். அதனாலேயே மலவாசலும் பிரிஞ்சு போச்சு. பிறகு ஏசியன் கடை செஞ்சேன், மரக்கறி இலங்கையில் இருந்து இறுக்கினேன். நான்காம் குறுக்குத் தெருவிலிருந்து வி.ஆர்.எம். முதலாளி மரக்கறிக்குள் வைத்து… அனுப்பினார். இது, 90 களின் மத்தியில். இன்று எனது சொத்து மதிப்பு அண்ணளவாக 6 மில்லியன்கள் யுரோவாகும். ஆருக்கும் பயப்பட மாட்டேன். ஏனெனில், இது எனது சொந்த முயற்சி.
    இலண்டனிலும், பாரிசிலும் எனது வியாபார நிறுவனங்கள் ஓகவெனவோடும்போது, நான் பகிடிக்குச் சோசலிசம் பேசுகிறேன். இந்த இலட்சணத்தில் தயா மாஸ்டரை அம்பலப்படுத்தி என்னை மறைத்துவிடுதல் சாத்தியமாகுமென்ற நப்பாசை. அதைப் புட்டுவைக்கிறதிலேயே உங்கள் வெற்றி தங்கினது. நாடோடி நீங்க என்னைப் புரட்டிப்போட்டீங்க!
    எனவே, சுயவிமர்சனஞ் செஞ்சு, உண்மையைச் சொல்லி விட்டேன்.

    Reply
  • babu
    babu

    இக்கடத்தல் விடயமானது ஒன்றும் நாவலனினதோ, அல்லது அசோக்கினதோ தனிப்பட்ட உள்வீட்டு பிரச்சனையோ அல்லது அவர்களது தனிப்பட்ட உடல் நலம் சார்ந்ததோ அல்ல. அரசியல் சார்ந்து ஊடகத்தொழில் செய்யும் இலங்கைத் தமிழன் ஒருவன், இந்தியப் போலிசின் உதவியுடன், கடத்தப்பட்டுள்ளார். போலிசின் உதவியுடன் இது நடந்திருந்தாலும், இது ஒரு வகை கட்டைப்பஞ்சாயத்து ஆகும். மேலும் இதில் ஈடுபட்ட நபர்கள், கடத்தப்பட்டவர் அனைவரும் ஊடக உலகத்தை சேர்ந்தவர்கள். சமுதாயம் எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்கிறது, என்ன நடக்கிறது, யார் யார் சமுகத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றார்கள் என சமுகத்தின் வெட்டுமுகத்தை வெளிப்படையாக காட்டுவதே ஊடகங்களின் தலையாய கடமை. ஆதிக்க சக்திகள், அதிகார மையங்கள் அதிகாரத்தை தவறாக பாவிக்கும்போது, அதை அம்பலப்படுத்துதன் மூலம் ஜனநாயகத்தின் அடிப்படையை பாதுகாப்பதனாலேயே, ஊடகங்களை முதலாளித்துவ ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்பார்கள். இதன் அடிப்படையில் சமூகத்தின் சீரழிவுகள், தனிமனிதர்களால் அல்லது குழுசார்ந்த இலாபத்திற்காக நடாத்தப்படும் போது அதை வெளிக்கொண்டு வருவது ஊடகங்களின் கடமை. ஆகவே குறைந்தபட்சம் முதலாளித்துவ ஜனநாயகத்திற்கு வெளியில் மாபியாத் தனமாக, ஊடகம் சார்ந்தோரால் நடாத்தப்பட்ட இந்தக் கடத்தல் எப்படி நாவலனினதும்,அசோக்கினதும் தனிப்பட்ட விடயமாகும்?

    சில வேளைகளில் நான் மேல் கூறிய ஊடகங்களின் சமூகப் பொறுப்பு சம்பந்தமான வரையறை மேற்கத்தைய ஊடகங்களுக்கு மட்டுமே பொருந்துமென நாவலனின் பாதுகாவலர்கள் நினைக்கிறார்கள் போலும்.

    நாவலனின் முன்னாள் நண்பர் தேசம் ஜெயபாலன் கூறுவது போல், நாவலன் குழுவினர் இக்கடத்தல் விவகாரம் தெரிந்தவுடன், தமக்கு எதுவும் நேரடியான பங்கு ஏதும் இல்லாவிடில், கடத்தப்பட்ட குகநாதனின் உயிருக்கு பங்கம் ஏற்படாத நிலையில் கடத்தலை அம்பலப்படுத்தியிருக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் தமது இனியொரு குழுவில் உள்ள அருள் எழிலனை ஆசிரியர் குழுவிலிருந்தும் வெளியேற்றி இருக்க வேண்டும். இதை நாவலன் குழுவினர் செய்திருந்தால் பிரச்சனை இந்த மட்டும் வந்திருக்க முடியாது. இதைச் செய்யாமல் எல்லாத் தவறுக்கும் காரணம் ரயாகரனும் தமிழரங்கமுமே என இப்போது அவதூறு பரப்புவது எந்தவித தர்மத்துக்கும் ஒவ்வாத விடயம். மேலும் ரயாகரனும் தமிழ் அரங்கமுமே இவ் விடயத்தில் ஊடக தர்மத்தை நிலை நாட்டியுள்ளனர்.

    அடுத்து ஊடக தர்மம் கதைக்கும் இவர்களுக்கு, நாவலன் வெளியிட்டுள்ள குகநாதனின் மனைவியுடனான தொலைபேசி சம்பாசனை, ஊடக தர்மத்தை சேற்றில் போட்டு மிதிக்கும் செயலாகப்படவில்லையா? ஜரோப்பிய நாடுகளின் சட்டத்தின்படி நாவலன் செய்தது தவறல்ல. அதாவது ஒருவர் மற்றொருவருடன் உரையாடும் போது அதை பதிவு செய்ய முழு உரிமையும் உண்டு. ஆனால் அதை ஊடகத்தில் தனது எதிராளியின் குரலுடன் வெளியிட பதிந்தவர் எதிராளியின் அனுமதி பெற வேண்டும். இதற்கப்பால் சர்வதேச ஊடகதர்ம விதிகளின்படி இப்படியான பதிவுகள் சமூகரீதியான அழிவுகளையும், அதிகார துஷ்பிரயோகங்களையும் தடுப்பதற்காக, கடைசி ஆயுதமாக பாவிக்கப்பட வேண்டும் என்பதே முறைமையாகும். ஆனால் நாவலன் குழுவினர் அப்பெண்ணுடனான உரையாடலை வெளியிட்டுள்ளது எந்த சமுதாய அழிவை தடுத்து நிறுத்துவதற்காக? மேலும் அப் பெண்மணி இச்சம்பவத்தில் மூன்றாவது நபர். அவர் செய்த ஒரே தவறு உலக மகா பொருளாதார-கிரிமினல் குகநாதனை கணவராக ஏற்றுக் கொண்டது தான். மேலும் அவர் நாவலன், அசோக் குழுவிடம் உதவி கேட்டிருந்தால் அது பற்றி வேறுவிதமாக நாவலன் வெளிப்படுத்தியிருக்க வேண்டுமே ஒழிய, அரை நித்திரையில் இருப்பவருடனான உரையாடல் மூலமல்ல.

    மேலும் அப்பெண்ணை ஆணாதிக்கத்தனத்தில் நின்று நாவலன் “…..குகநாதனின் மனைவியிடம் இரண்டு தடவைகள் உரையாடினேன். அந்த உரையாடல்களை தவிர்க்க முடியாமல் பதிவுசெய்துள்ளேன். அப்பாவியான அந்தப் பெண்ணின் வாக்குமூலம் இங்கே பதிவிடப்படுகிறது….” என தனது பதிவில் எழுதுகிறார். ஒருவரை அப்பாவி என விளிப்பது எனக்கு தெரிந்த தமிழின்படி ஒன்றும் தெரியாத வஞ்சகமற்ற, மனிதம் அல்லது அறிவு வளர்ச்சி குறைந்த மனிதம். இன்றைய நவீன உலகில் இப்படியான வார்த்தைப் பிரயோகங்கள் தவிர்க்கப்பட வேண்டுமென்பது பல்கலைக்கழகத்தில் தத்துவம் படித்த நாவலனுக்கு தெரியாதா?

    சரி, அப்படித்தான் அவர் அப்பாவியாக இருந்தால் ஒரு “அப்பாவி” உடனான உரையாடலை வெளியிடுவதும், ரயாகரனுக்கு எதிரான சாட்சியாக உபயோகிப்பதுவும் எந்த வகையில் நியாயம்?? இங்கு ரயாவை பொய்யன் ஆக்குவதற்கும், பழிவாங்குவதற்குமான முயற்சியில் நாவலன் குழுவின் சிந்தனைத் திறன் மழுங்கி விட்டதா ?

    பாலியல்தொழில் செய்யும் பெண்களின் தனிமனித உரிமை அடிப்படையில் அவர்களை தொழிலாளர்களாக கருத வேண்டுமெனக் கோரும் பெண்ணியவாதிகளுக்கு ஏன் நாவலன் குழுவினரின் இந்த அசிங்கமான நடவடிக்கை, அப் பெண்ணின் தனிமனித உரிமை மீதான அத்துமீறலாகப்படவில்லை?

    தனிமனித நலன்களை அல்லது ஒரு குழுவின் நலனை பூர்த்தி செய்ய, சமுதாயத்தின் பெயரால், சமூகமாற்றத்தின் பெயரால், மார்க்சியத்தின் பெயரால் ஒருவர் அல்லது ஒரு குழு தமது செயல்பாடுகளை முன்னெடுக்கும்போது அதை தடுத்து நிறுத்தி மக்கள் அரங்கில் அம்பலப்படுத்துவது ஒரு இடதுசாரியின் முக்கியமான கடமை. அதை தான் ரயாவும் தமிழ் அரங்கமும் செய்துள்ளனர். அதன் அடிப்படையில் தூற்றுவார் தூற்றலும், போற்றுவார் போற்றலும் ரயாவையோ, தமிழ் அரங்கத்தையோ எதுவும் செய்து விடப்போவதில்லை. ஆகவே, நாவலனும் குழுவினரும் பகிரங்க சுயவிமர்சனத்தை முன் வைத்துவிட்டு அரசியலில் ஈடுபடுவதே எதிர்கால தமிழ் இடதுசாரி அரசியல் வளர்ச்சிக்கு நல்லதாகும்.

    மா.நீனாhttp://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7461:2010-09-13-18-58-00&catid=337:2010-04-06-19-21-55

    Reply
  • மாயா
    மாயா

    //இங்கிலாந்தில் தீபம் ரிவியில் வேலை செய்த சர்தார், விசா முடிவடைந்ததும், இலங்கை சென்று, அங்குள்ள சில விளம்பர கம்பனிகளில், கமிஷன் அடிப்படையில் வேலை செய்து கொண்டிருந்தார். பின்னர் குகநாதனுடன் இணைந்து தொழிலை தொடங்கினார் .

    சென்ற மாதம், டாண் டிவிக்காக சென்னை சென்ற இவர், சில இந்திய ட்ராமாக்களை விலை பேசுவதற்காக எழிலனையும் சந்தித்துள்ளார். எழிலனுடன் பேசிக்கொண்டிருக்கும் போது, குகநாதன் எங்கே என எழிலன், சர்தாரிடம் வினவியுள்ளார். இந்த உள் வீட்டுப்பிரச்சனை புரியாத சர்தார், காசுவலாக குகநாதனும் சென்னையில்தான் நிற்கின்றார் என்று கூறியுள்ளார். அதன் பின் காய்கள் மிக வேகமாக நகர்த்தப்பட்டு, குகநாதனை சர்தார், தமது இருப்பிடத்துக்கு அழைத்துள்ளார். அங்கு வந்த பின்னர்தான், தான் வரக் கூடாத இடத்துக்கு வந்துள்ள விடயம் குகநாதனுக்கு தெரிய வந்துள்ளது.- peter//

    சர்தாருக்கு , குகநாதனுடைய அனைத்து சுத்துமாத்தும் தெரியும். இங்கே சர்தார் அதை தெரியாமல் செய்தார் என்பதை நம்பத்தான் வேண்டும் பீற்றர்?? எழிலனுடைய பிரச்சனை , இந்தியாவில் குகநாதனின் பிரச்சனை அனைத்தும் தெரியும். சர்தார் சொந்தமாக ஒரு தொலைக் காட்சியை உருவாக்க பங்குதாரர்களைத் தேடிக் கொண்டிருந்தார்? பல வருடங்களாக இவர் , சென்னை தொலைக் காட்சித் தொடர்களை வாங்கி விற்பவராக இருக்கிறார். விரைவில் சர்தார் தனித் தொலைக் காட்சி ஒன்றைத் தொடங்கலாம். இலங்கையில் பல தனியார் தொலைக் காட்சிகள் இருக்கின்றன. ஆனால் அவை வெளிநாடுகளுக்கு செய்மதியுடாக நிகழ்ச்சிகளை கொண்டு செல்வதில்லை. சர்தாருக்கு எப்போது , எதைச் செய்ய வேண்டும் என்பது தெரியும். இவர் ராமராசனின் டீபீசியிலும் வானோலியிலும் பணியாற்றினார்.

    Reply
  • சுதாங்கன்
    சுதாங்கன்

    இங்கு “peter on September 14, 2010 1:24 am” எழுதியிருப்பது
    “சன் டிவி” யின் பின்னணியை மறைப்பதற்கு, இவ்வாறு புகைமூட்டம் இடப்படுகிறது. வியாபாரமில்லாத அரசியல் தெளிவு தேவை!.

    Reply
  • thamilmaran
    thamilmaran

    முதலில் இரண்டு ஊடகவியலாளர் மற்றும் வியாபாரிகளூக்கு இடையிலான இந்த இலங்கை, இந்தியா என மாற்றாது நோக்கினால் பணம் செட்டில் செய்யப்படாது பல காலமாய் கிடப்பில் இருந்திருக்கிறது, குகநாதனும் ஜேர்மனி காட்டினேன் பிரான்ஸ் காட்டினேன் என காலம் கடத்தி வந்திருக்கிறார் சம்பந்தப்பட்டவரும் வர வேண்டிய காசை ஒரு புரிந்துணர்வுடன் விட்டிருக்கிறார் பின்னர் குகநாதன் இலங்கை அரசுடன் இருந்து நல்லாக சம்பாதிக்கிறார் ஏன் வரவேண்டிய காசை விட வேண்டும் எனத் தோன்றி இருக்க வேண்டும் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தனக்கு வரவேண்டிய பணத்தை வசூலித்திருக்கிறார். இதில் இது இரண்டு நபர்களுக்கான கொடுக்கல் வாங்கல் பிரச்சனையாகப் பார்ப்பதே நல்லது

    Reply
  • palli
    palli

    இங்கே நாவலன் பதிவு செய்த ஒலி நாடாதான் நாவலன் குழு (இனிஒரு) இந்த கடத்தல் நாடகத்தில் பங்கு கொண்டனர் என்பதுக்கு ஆதாரம்; நாவலனுக்கும் ரயாகரனுக்கும் ஆயிரம் பிரச்சனைகள் இருக்கலாம்; ஆனால் இன்று ரயாகரன் சொல்லுவதில் தவறுகள் இருப்பதாக படவில்லை, அதையும் விட குகநாதனை மிக மோசமாக விமர்சனம் செய்பவர்களில் ரயாகரனே முன்னிலையில் உள்ளார், அப்படி இருக்கும் போது நாவலனை எதிர்ப்பதுக்காய் குகநாதனுடன் கூட்டு சேரும் ரகமல்ல ரயாகரன்,

    முடிந்தால் நாவலன் தேசத்தில் வந்து (சேதுபோல்) உங்கள் சார்ந்த தகவல்களை சொல்லலாம்: அப்போது நாம் அறிந்த தெரிந்த விடயங்களை சொல்வோம்; அதைவிட்டு தேசம் அவதூறு செய்கிறது என பேசுவதால் நிறுத்தபடும் விடயமல்ல இது; நீங்கள் அமைதியாகும் பட்சத்தில் உங்கள் நண்பர் ரயாகரன் கடந்த காலத்தில் உங்களைபற்றி எழுதியவைகளை நாம் ஆய்வு செய்யவேண்டி இருக்கும்; இதை தாங்கள் எச்சரிக்கையாககூட எடுக்கலாம்; ஒரு தனிமனிதன் தவறுக்கும் ஊடகவியலாளன் தவறுக்கும் உள்ள வேறுபாடு உங்களைபோல் நாமும் அறிவோம்; கண்டிப்பாக இந்த தகவலை சரியான ஆதாரங்கள் கிடைக்கும் போது மிக மோசமாக தமிழகத்தில் அனைத்து ஊடகங்களிலும் நித்தியானந்தா சுவாமிகள் வழக்கு போல் பல பிரச்சனைகளுடன் வெளியாகும்;

    Reply
  • palli
    palli

    //நபர்களுக்கான கொடுக்கல் வாங்கல் பிரச்சனையாகப் பார்ப்பதே நல்லது// thamilmaran
    சரி பார்த்திடுவோம். நாமும் அவர் இவருக்கு என்ன கொடுக்க வேண்டும் எப்படி கொடுக்க வேண்டும் என்னும் விசாரனையில் இல்லையே, கடத்தல் இது ஒரு ஊடகவியலாளனின் செயலா?? இந்த செழியன் போய் கேட்டஉடன் வந்து குகநாதனை கூட்டி சென்று(கடத்தி) பணம் பட்டுவாடா செய்யும் அளவுக்கு தமிழக பொலிசாருடன் உள்ள நட்பு என்ன?? அப்படியாயின் இவர் இதுக்கு முன்பும் இந்த கேவலமான விடயத்தில் இலங்கை தமிழர் பணத்தை இந்த பொலிசாருக்கு வேண்டி கொடுக்கும் புறோக்கராகவோ அல்லது காட்டி கொடுக்கும் மாமாவாகவோ இருந்திருக்க வேண்டும், அல்லது அப்படியான ஒருவர் இவரது நண்பராக இருக்க வேண்டும், அப்படியாயின் அந்த நண்பர் யார்??

    1982ல் இருந்து 2010வரை தமிழக பொலிசார், அரசியல் வட்டங்கள் என இலங்கைதமிழரின் ஏலாமையையும் அவர்களது நிலமையையும் அறிந்து றித்த பணம் எண்ணிக்கை அற்றவை; ஆனால் அத்தனைக்கும் காரணம் அன்றிருந்து இன்றுவரை யாரோ ஒருசில இலங்கை தமிழரே, அந்த ஒரு சிலரில் எழிலன் இருக்கிறாரா என்பதே என் கேள்வி, தொடரும்போது பல மர்மங்கள் வெளிச்சத்துக்கு வரும்,

    Reply
  • nesan
    nesan

    தமிழ்நாட்டில் இன்று பல ஊடகவியலாளர்களிடம் தேசம்நெற்றின் போட்டோகொப்பி பிரதி கைமாறுகிறது. எல்லோரும் இது பற்றியே பேசுகின்றனர். “அருள்”சகோதரர்களை அம்பலப்படுத்தியதில் தேசம்நெட் பணி மகத்தானது. இவ்வாறு பல மட்டங்களில் புகைய ஆரம்பித்திருக்கும் இவ்விடயம் மிகவிரைவில் பெரிய அளவில் வெடிக்கும்போல் தெரிகிறது. அவ்வாறு வெடிக்குமாயின் அருள் சகோதர்கள் மட்டுமல்ல அவருடன் கூட இருந்து துணைநின்றவர்களும் மாட்டுப்படுவார்கள் என்றே இந்திய ஊடகவியலாளர் கருதுகின்றனர்.

    Reply
  • nesan
    nesan

    ஈழத்தமிழர்களுக்காக பாடுபடுவதாக கூறும் ஒரு கோஸ்டி பொலிஸ் உதவியுடன் ஒரு வியாபாரியை கடத்துகிறது. அதற்கு புரட்சிக்கு புதியதிசை காட்டுவதாக கூறிய இன்னொரு கோஸ்டி ஒத்துழைக்கிறது. இந்த செய்தி பல நாட்களின் பின் ஒரு தளத்தில் பிரசுரம் செய்யப்பட்ட நிலையில் அது பற்றிய உண்மைகளை ஆராய்ந்து ஒரு ஊடகவியலாளன் என்ற அளவில் தேசம் ஆசிரியர் ஜெயபாலன் அவர்கள் வெளிப்படுத்தினார். இதில் ஏன் ஜெயபாலன் மீது கோபப்பட வேண்டும்? எதற்காக ஜெயபாலன் அரச கைக்கூலி என முத்திரை குத்த வேண்டும்? ஜெயபாலனை அரச கைக்கூலி என்றும் ஜெயபாலன் ரயாகரன் குகநாதன் கூட்டு தனக்கு எதிராக சதி செய்கிறது என்று கூறுவது பொருத்தமான பதில் அல்லவே. முடிந்தால் ஆதாரங்களுடன் மறுக்க வேண்டும். அல்லது உண்மைகளை ஒத்துக்கொண்டு தமிழ்மக்கள் முன்னிலையில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். அதைவிடுத்து சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என மிரட்டுவது ஒரு நல்ல போராளிக்கு அழகல்லவே

    “குகநாதனை மாக்சிய இயக்கம் கடத்தியதாலே தான் தலையிட வேண்டியேற்பட்டதாக நாவலன் புதியசிசைகள் நண்பர்களிடம் கூறியதாக” தமிழ்அரங்கம் கூறியுள்ளது. இது உண்மையாயின் “அருள்” சகோதரர்கள் எப்போது மாக்சிய இயக்கமானார்கள்? மாக்சிய இயக்கம் எப்படி குகநாதனுடன் பிசினஸ் செய்தது? மாக்சிய இயக்கம் எப்படி கருனாநிதி கும்பலுடன் சேர்ந்து பொலிஸ் உதவியுடன் கடத்தல் செய்கிறது?யாராவது மாக்சிய நண்பர்கள் இது பற்றி விளக்கம் தருவார்களா?

    Reply
  • தாசன்
    தாசன்

    //தமிழகத்தில் அனைத்து ஊடகங்களிலும் நித்தியானந்தா சுவாமிகள் வழக்கு போல் பல பிரச்சனைகளுடன் வெளியாகும்//;பல்லி,

    எமக்கு பூச்சாட்டி காட்ட வேண்டாம். உம்மையும் உமது எழுத்துகளையும் நாம் அறிவோம். சவால் விடுகிறோம். குகநாதன் விடயத்தில் தோழர் நாவலன் அல்லது தோழர் அசோக் சம்பந்தப்பட்டார்கள் என்பதை பல்லி ஆதாரத்துடன் முதலில் தேசத்தில் முன்வைக்கவும்.

    அதற்கு பதில் தேவையாயின் எமது தரப்பால் தேசத்துக்கு பதில் அனுப்பி வைக்கப்படும்.

    Reply
  • BC
    BC

    //தமக்கு(நாவலன் குழுவினர்) எதுவும் நேரடியான பங்கு ஏதும் இல்லாவிடில், கடத்தப்பட்ட குகநாதனின் உயிருக்கு பங்கம் ஏற்படாத நிலையில் கடத்தலை அம்பலப்படுத்தியிருக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் தமது இனியொரு குழுவில் உள்ள அருள் எழிலனை ஆசிரியர் குழுவிலிருந்தும் வெளியேற்றி இருக்க வேண்டும்.
    எல்லாத் தவறுக்கும் காரணம் ரயாகரனும் தமிழரங்கமுமே என இப்போது அவதூறு பரப்புவது எந்தவித தர்மத்துக்கும் ஒவ்வாத விடயம். மேலும் ரயாகரனும் தமிழ் அரங்கமுமே இவ் விடயத்தில் ஊடக தர்மத்தை நிலை நாட்டியுள்ளனர். //
    நீனா கூறியது நியாயமானது.

    //நேசன்- அருள் சகோதரர்களை அம்பலப்படுத்தியதில் தேசம்நெட் பணி மகத்தானது. //
    வாசகர் ஆகிய எங்களுக்கும் பெருமை.
    நாடோடி நல்ல தகவல்கள் எல்லாம் தருகிறார். பீற்றர் சொன்ன இங்கிலாந்தின் ஒரு முக்கிய பகுதிக்கு புலிக்கு பணம் சேர்த்த ஒருவர் செய்யும் செயல் மாதிரி, அல்லது அது மாதிரி செயல்களே புலிக்கு பணம் சேர்த்தவர்களால் மற்றய இடங்களிலும் நடக்கிறது. பீற்றர் ஏன் வாழ்க நமது ஜனநாயகம் என்று எழுதினார்? வாழ்க நமது தமிழீழ விடுதலை போராட்டம் என்பதே சரியானது.

    Reply
  • Naadoode
    Naadoode

    இலங்கையின் 18வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்ததற்கு வாசுதேவா திஸ்ஸவிதாரண டியூகுணசேகரா ‘இடதுசாரி விளக்கம்’ கொடுத்தது மாதிரி நாடோடிக்குப் பதில் சொல்லியிருக்கிறார் சிறிரங்கன் அண்ணை.

    அவற்றை வீட்டின்ரை விலையைக் கேட்டவுடன் அவருக்கு கோபம் சுள்ளென்று ஏறியிருக்கிறது பதிலில் தெரிகிறது.

    புலிகளையோ தயா மாஸ்டரையோ நியாயப்படுத்த வேண்டிய தேவை எதுவும் நாடோடிக்கு இல்லை. (எனது முன்னைய பின்னூட்டங்களைக் கவனிக்க)

    நான் அறிந்தவரையில் தயா மாஸ்டர் ஜோர்ஜ் ஆகியோர் புலிகளின் முடிவெடுக்கும் தலைமைத்துவத்தில் இருந்தவர்கள் அல்ல. முன்னவர் தொடர்பாளராகவும் பின்னவர்மொழி பெயர்ப்பாளராகவும் இருந்துள்ளனர்.

    அவர்கள் நம்பிய அரசியலும் இயக்கமும் தோல்வியடைந்து சரணடைய நேரிட்டது. அது தனியே அவர்களின் தவறல்ல.

    கைது செய்யப்பட்ட பிறகு ‘ரஜாகரன் போல் வீரம் பேச’ அவர்களால் முடியாது போயிருக்கலாம்.

    தனிப்பட்ட வாழ்க்கைக்குத் திரும்பவிரும்பி இருக்கலாம். தயாவாத்தியுடைய மனைவி ஆசிரியை. அரசாங்க உத்தியோகத்திலுள்ள ஆசிரியைக்கு இன்று யாழ்ப்பாணத்தில் வங்கிகள் கடைவிரித்துள்ள நிலையில் வங்கிக் கடன் எடுப்பது ஒன்றும் கடினமான காரியமல்ல. இவை மிகச் சாதாரணமானவை.

    இலங்கையில் இடதுகளின் போராட்டம் பின்னடைவு கண்டதுக்கு இந்தவாலை விட்டு தும்பைப் பிடிக்கிற காரணங்கள் தான் பிரதானமானவை.

    அண்ணை நீங்க தும்பையே பிடிச்சுக் கொண்டிருங்கோ… இன்னும் 20 வருசத்திற்குப் பிறகும் இப்பிடியே இருப்பியள்.

    மார்க்சியம் ஒரு சமூக மாற்றத்திற்கான தத்துவம் என்று தான் நான் அறிஞ்சிருக்கிறன்.

    ஆனா நாவலனிலிருந்து சிறிரங்கன் அண்ணை வரை கதைக்கிற மார்க்சியத்தைப் பார்த்தால் அது அவரவர் இருப்புக்கான வியாக்கியானம் என்று தான் விளங்குது. அதிலை வெறுப்பும் வந்திடும் போல கிடக்குது.

    Reply
  • Sudha
    Sudha

    இந்த விவகாரத்தில் மகஇக தோழர்களின் நிலைப்பாடு என்ன? அருள் எழிலனையும் நாவலனையும் ஆதரிக்கிறார்களா? அல்லது கண்டிக்கிறார்களா?

    Reply
  • BC
    BC

    //சுதா- மகஇக தோழர்களின் நிலைப்பாடு என்ன? //
    வைகோ, நெடுமாறன் ஆதரவாளர்களை தம் பககம் கவருவதற்காக கனடாவில் உள்ள புலி ஆதரவாளரை கொண்டு தொடர் கட்டுரை எல்லாம் எழுதி முயற்சித்த மக்கள் கலை இலக்கியக் கழகம்(?) என்கின்ற வினவு கூட்டத்தை தானே கேட்கிறீர்கள்? இரண்டும் ஒன்று தான். டெமோகிறசிக்குதான் அதிகம் தெரியும்.

    Reply
  • palli
    palli

    //எமக்கு பூச்சாட்டி காட்ட வேண்டாம். //தாசன்
    எமக்கு என்றால் யாருக்கு?? நீங்கள் என்ன அமைப்பா அல்லது ரவுடிகளா?? எதையுமே சொல்லாமல் இப்படி சொன்னால் எப்படி??

    // உம்மையும் உமது எழுத்துகளையும் நாம் அறிவோம். // ஆக பல்லியின் எழுத்தை வாசிக்கிறியள்? அப்போ நீங்கள் பல்லியின் வாசகனா,? அல்லது விமர்சகரா??

    //குகநாதன் விடயத்தில் தோழர் நாவலன் அல்லது தோழர் அசோக் சம்பந்தப்பட்டார்கள் என்பதை பல்லி ஆதாரத்துடன் முதலில் தேசத்தில் முன்வைக்கவும்.// கண்டிப்பாக வைப்பேன் நாவலனோ அல்லது அசோக்கோ பல்லியிடம் கேட்டால், அவர்களது வகிதா வக்கிலான
    உங்களிடம் என்னால் வைக்க முடியாது, அதுசரி இவர்கள் எப்போ தோழர்கள் ஆனார்கள்,,?? தோழர் எனில் அர்த்தம்தான் என்ன,?

    //அதற்கு பதில் தேவையாயின் எமது தரப்பால் தேசத்துக்கு பதில் அனுப்பி வைக்கப்படும்.//
    அதுதான் கேக்கிறேன் உங்கள் தரப்பு யார் யார்? இதில் எழிலன் உள்ளடக்கமா??

    தாசன் உங்கள் பேருக்கேற்ற கோபம் உண்டு; அதேபோல் பல்லிக்கு கோபம் வராது ஆனால் எழுதுவேன் தவறானவர்கள் தவறை உணரும் வரை; இதுக்கெல்லாம் சவால் தேவையில்லை சாதாரனமாயே நடக்கும் சம்பந்தபட்டவர்கள் பதில் வராத பட்சத்தில்;

    Reply
  • suba
    suba

    குகநாதன் முதன்முதலில் ஜரோப்பாவில் பத்திரிகையும் 18 பங்காளிகளுடன் தொலைக்காட்சியும் ஆரம்பித்தது உண்மை. உள்ளுக்குள் அவர் புலி எதிர்ப்பாளராக இருந்தும் வியாபார நோக்கமாய் புலியை ஆதரித்து எழுதியதும் உண்மை. இவரிடமிருந்து ரிஆர்ரியை புலிகள் பிடுங்கியதும் உண்மை. இதற்கு அவருடைய பங்காளிகளையே புலிகள் பாவித்து கச்சிதமாக காய் நகர்த்தினார்கள். பின்பு இந்த பங்குதாரர்கள் ஏமாந்த நிலையில் புலிக்கு எதிராகவோ, குகநாதனுக்கு எதிராகவோ போர்க்கொடி தூக்கவில்லை. புலிகள் ஓகோ என்று இருந்த நிலையில் இவர்கள் மெளனம் காத்தார்கள்.

    இப்போ குகநாதன் என்ற எல்லைக்குள் குடுக்கல் வாங்கல் விடயத்திற்குள் நாவலன், கஸ்பார், வைகோ, நெடுமாறன், கனிமொழி இப்படி பட்டியல் நீண்டுகொண்டே போகின்றது.

    இப்போ என்னவென்றால் அரசில் இருப்பவர்கள் மோசடி செய்வது, பாதாளக் கோஷ்டிகளில் இருப்பவர்கள் ஆட்களை கடத்துவது, துரோகிகள் காட்டிக் கொடுப்பது, இது நாம் பழகிப்போன விடயம். மாக்சிசம் கதைத்தும், எழுதிக் கொண்டும் இருக்கிற நாவலன் அதில் பங்கு என்றால் இது புதுவிதமான ஒரு தத்துவம். மார்க்சிசம் பற்றி எழுதுவதற்கு முன், புரையோடிப்போன புண்கள் பற்றி எழுதுவதற்கு முன், புண்கள் யாரிடம் உள்ளது என்பதை புரிந்துகொண்டு எழுத வேண்டும்.

    எந்தப் பெண்ணும் தனது கணவன் ஆபத்தான நிலையில் இருக்கும்போது அவரைக் காப்பாற்றுவதற்கு எதற்கும் தயங்காதது ஒரு புதிய விடயமல்ல. இந்த ஒலிப்பதிவு நாடாவையே அனுமதியின்றி போட்ட நாவலன் எந்த வரிசையில் சேர்க்கப்பட வேண்டியவர். புரட்சியும் மார்க்சிசமும் எழுதும் இவர்கள் இப்போ புதிதாகக் கண்டுபிடித்த முறை அன்றைய புலி அராஜகத்திற்கு எந்த அளவிலும் குறைவில்லை.

    மார்க்சியத் தோழர்களே பார்த்தீர்களா? மார்க்ஸ் இதையா எழுதி வைத்துவிட்டு போய்விட்டார். தொடரட்டும் உங்கள் சுரண்டல் முறை.

    Reply
  • மாயா
    மாயா

    //suba on September 14, 2010 9:44 pm
    குகநாதன் முதன்முதலில் ஜரோப்பாவில் பத்திரிகையும் 18 பங்காளிகளுடன் தொலைக்காட்சியும் ஆரம்பித்தது உண்மை. உள்ளுக்குள் அவர் புலி எதிர்ப்பாளராக இருந்தும் வியாபார நோக்கமாய் புலியை ஆதரித்து எழுதியதும் உண்மை. ,,,,,,,,,,,

    இப்போ குகநாதன் என்ற எல்லைக்குள் குடுக்கல் வாங்கல் விடயத்திற்குள் நாவலன், கஸ்பார், வைகோ, நெடுமாறன், கனிமொழி இப்படி பட்டியல் நீண்டுகொண்டே போகின்றது.//

    குகநாதன் , புலி எதிர்ப்பாளராக இருந்திருக்கலாம் , புலி ஆதரவாளர்களை ஐரோப்பாவில் உருவாக்கி தன்னை வளர்க்க முற்பட்டவர் குகநாதன். குகநாதன்தான் புலிகளுக்கு கஸ்பார் மற்றும் கவிஞர் அறிவுமதி ஆகியோரை அறிமுகம் செய்து வைத்தார். கஸ்பாரை தொலைக் காட்சியில் காட்சிப் பொருளாக்கி மக்களிடம் நிதி என்ற பெயரில் , மக்களை மொட்டை அடித்தார். கடைசியில் குகநாதன் குழு , கஸ்பாருக்கும் திருப்பதி ஏறாமலே மொட்டை போட்டது.

    Reply
  • proffessor
    proffessor

    இக்கைது கடத்தல் நாடகத்தில் வை கோ வினதும் நெடுமாறனினதும் நெருக்கமான சட்டத்தரணிகள் ஈடுபட்டு இருந்துள்ளனர். அருள் சகோதரர்களின் ஊரவரும் நண்பரும் பல்லாயிரம் ஈரோக்கள் காணமல் போய்விட்டது என்று கணக்குக் காட்டியவருமான கஸ்பாரும் இச்சம்பவத்தடன் தொடர்புபட்டிருந்ததாக எஸ் எஸ் குகநாதன் தேசம்நெற்க்கு தெரிவித்தார்.

    ஜெயபாலன் இந்த விடயம் உண்மையானதா? என்பது உறுத்துகிறது. இன்றைய பொழுதில் கஸ்பாருக்கு எதிரான சக்திகளாக வைகோவும் நெடுமாறனும் உள்ள நிலையில் இந்த பந்தி மொட்டம்தலைக்கும் முழங்காளுக்கும் முடிச்சு போடுவதாக தெரிகிறது. இதை குகநாதனே வேண்டுமென்று சொல்லியிருக்க வாய்ப்பே அதிகம்.

    கஸ்பார் சம்பந்தப்பட்டிருந்தால் கனிமொழியால் பிரச்சனையை தீர்க்கமுடியாமல் போனது எப்படி?

    குகனாதனின் வாக்குமூலத்தை மட்டும் நம்ப வேண்டாம்

    Reply
  • Sudha
    Sudha

    //கனடாவில் உள்ள புலி ஆதரவாளரை கொண்டு தொடர் கட்டுரை எல்லாம் எழுதி முயற்சித்த மக்கள் கலை இலக்கியக் கழகம்(?) என்கின்ற வினவு கூட்டத்தை தானே கேட்கிறீர்கள்?// BC

    இது என்ன புதுக்கதை ஆதராம் உண்டா?

    Reply
  • muththu
    muththu

    முதல் கேள்விக்கு பதிலளிக்கும் குகநாதன் இப்படிச் சொல்கிறார்…

    //தேசம்: நீங்கள் தமிழ்நாட்டில் சட்டப்படி கைது செய்யப்பட்டீர்களா அல்லது சட்டவிரோதமாக கடத்தப்பட்டீர்களா?

    குகநாதன்: அருட்செழியன் என்பவர் கொடுத்ததாகக் கூறப்பட்ட புகாரின்பேரில் விசாரணைக்காக அழைத்துச் செல்வதாகக் கூறிய பொலிசார், சென்னை பொலிஸ் ஆணையாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவரது புகார் பிரதியை எனது சட்டத்தரணி கேட்டபோது கூட காட்டத் தயாராக அவர்கள் இருக்கவில்லை. சட்டப்படி கைது செய்திருந்தால் 24 மணி நேரத்தில் என்னை நீதிமன்று ஒன்றில் ஆஜர்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யப்படவில்லை. அதிலிருந்து நடந்தது என்ன என்பதை புரிந்துகொள்ளலாம். இது ஒரு சட்டபூர்வமான கடத்தல் என்றும் செல்லலாம்.//

    அதாவது தன்னை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தாமல் போலீஸ் நிலையத்திலேயே வைத்திருந்தார்கள் என்பதால் இது சட்டபூர்வமான கடத்தல் என்கிறார்.
    இன்னொரு கேள்விக்கு இப்படி பதில் சொல்கிறார் குகநாதன்.

    //தேசம்- குகநாதனிடம் அவர் இலங்கை அரசின் ஊதுகுழல் என்பதால் இச் சம்பவத்தில் தலையிட விரும்பவில்லை என்பதைக் கூறியிருந்தேன். இலங்கை அரசின் பாசிசத்திற்கு எதிராக எழுதும் நான் இலங்கை செல்ல முற்பட்டால் குகநாதன் இன் வாக்குமூலங்களோடு இலங்கை அரச படைகள் என்னைக் கைது செய்யலாம்.” என சபாநாவலன் குற்றம்சாட்டுகிறார். இச்சம்பவங்களில் சம்பந்தப்பட்டு உள்ள அனைவருமே ஏதோ ஒருவகையில் ஊடகத்துறையுடன் சம்பந்தப்பட்டவர்கள். அப்படி இருக்கையில் இவ்வாறான ஒரு மோசமான சூழல் தேவையானதா?
    குகநாதன்: அருள்செழியனின் என்மீதான புகார் தவறானது என்பதை நான் நிரூபிப்பது பெரிய விடயமல்ல. ஆனால் நான் அதனை சட்டரீதியாக எதிர்கொள்வதெனில் பொலிசார் என்னை நீதிமன்றில் ஆஜர்படுத்த வேண்டும். அப்படி ஆஜர்படுத்தினால் நீதிமன்றம் எனது பாஸ்போட்டை தன்வசப்படுத்தும், நான் பிணையில் வந்தாலும் அந்த வழக்கு முடியும்வரை இந்தியாவில் நின்றிருக்க வேண்டி வரும். இவற்றைத் தவிர்க்குமாறு எனக்கு வேண்டிய சிலர் ஆலோசனை கூறினார்கள். நான் ஒரு வாரம் இந்தியாவில் நின்றிருந்தாலும் கொழும்பில் எனது நிறுவனத்தின் செயற்பாடுகளுக்கு பல நெருக்கடிகள் ஏற்பட்டுவிடும். அதனால் அவர் கோரிய பணத்தை கொடுத்துவிட்டு பிரச்னையிலிருந்து விடுபடுவது என்று முடிவெடுத்தேன்.//

    ஆக நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து வழக்கை எதிர்கொள்ள, கதை எதிர்கொள்ள பயந்து தவிர்த்தது குகநாதந்தான். என்பதை அவரே ஒத்துக் கொள்கிறார். ஆனால் இது கட்டப்பஞ்சாயத்து என்றும் சொல்கிறார். இவரது வக்குமூலங்களே குழப்பமாக இருக்கிரதே? தேசம் நெட்டோ, குகநாதனோ இதை விளக்குவார்களா?

    Reply
  • palli
    palli

    நண்பர் முத்து உங்கள் வாதம் சரியானதா??
    எந்த ஒரு நாட்டிலும் பொலிஸ்சாருக்கு தீர்ப்பு வழங்கும் அதிகாரம் கொடுக்கபடவில்லை என நினைக்கிறேன்; அப்படி இருக்கும் போது குகநாதனை கைதுசெய்த பொலிஸார் இவர்மீது வழக்கு தாக்கல் செய்யாமல் எப்படி பல லட்சம்ரூபா பணத்தை பட்டுவாடா செய்தார்கள். குகநாதனின் பேச்சை விட்டாலும் நாவலன் தரப்புபடி பார்த்தாலும் குகநாதன் கைது செய்யபட்டது உன்மை, அவர் நீதிமன்றம் கொண்டுபோகபடவில்லை என்பதும் உன்மை; பணம் குகநாதன் மணைவிமூலம் பெற்று கொண்டது உன்மை; எழிலன் குகநாதன் மீது பொலிஸாரிடம் வழக்கு தாக்கல் செய்தாரா? என்பது தெரியவில்லை, அப்படி அவர் வழக்கு தாக்கல் செய்திருந்தால் எப்போது செய்தார், அதை ஏன் பொலிஸார் குகநாதனுக்கு இதுவரை அறிவிக்கவில்லை, இப்படி எந்த வழியில் பார்த்தாலும் குகநாதன் எழிலன் சகோதரர்களின் தமிழக செல்வாக்கால் குகநாதன் கடத்தபட்டார் என்பதில் சந்தேகமே இல்லை;

    இரண்டாவது குகநாதன் சொல்லியது போல் அவரது பாஸ்போட் பொலிஸார் பறிமுதல் செய்தால் அந்த வழக்கு முடியும்வரை கொடுக்கமாட்டார்கள் என்பதுகூடவா குகநாதனுக்கு தெரியாது, எந்த வழியாக பார்த்தாலும் இதில் குகநாதன் பக்கமே நியாயம் இருக்கிறது? அடுத்து எழிலனுக்கும் குகநாதனுக்கும் கொடுக்கல் வாங்கல் இடையில் நாவலன் எப்படி போனார்?? அவர் குகநாதனின் மனைவியுடன் எப்படி பேரம் பேசினார்? குகநாதனிடம் அவர்கள் கேப்பதை கொடுத்துவிட்டு போகும்படி சொல்ல இவர் என்ன இருட்டில் வாழும் மாவியாவா?? என்றாவது இந்த கொடுக்கல் வாங்கல் பற்றி நாவலன் குகநாதனுடன் பேசினாரா?

    எல்லாதுக்கும் மேலாக தூக்குதண்டனை கைதிக்குகூட ஒரு காலம் கொடுப்பார்கள்? இங்கே இருட்டிலேயே இந்த வழக்கு முடிந்திருக்கு; இதில் குகநாதனின் மனைவி மனநிலையை இவர்கள் துன்புறுத்தி இருக்கிறார்கள்? இதில் அரசியல்(தமிழக) கட்சிகள் தி மு க அல்லது அதிமுக இரண்டில் ஒன்று சம்பந்தபட்டிருக்க வேண்டும்; இதை குகநாதன் சரியான முறையில் கையாளுவாரேயானால் கண்டிப்பாக இந்த பிரச்சனை தமிழக சட்டசபை மட்டும் போகும், அத்துடன் குகநாதனின் மனைவி சரியான தகவலை கொடுக்கும் பட்சத்தில் நாவலனை இங்கே உள்ள நீதிமன்றத்தில் நிறுத்தலாம், நான் குறிப்பிட்ட இரண்டு விடயத்துக்கும் என்னால் சிறிதேனும் உதவமுடியும்,

    Reply
  • muththu
    muththu

    தமிழகச் சூழல் தெரியமல் எழுதியிருக்கிறீர்கள். ஒரு பத்தாயிரம் பேர் இரண்டு மூன்று இணைய தளங்கள். என அதையே படித்து வாழும் புலத்து மக்களில் ஒரு சிறு பிரினருக்கு வேண்டுமென்றால் இது முக்கியச் செய்தியாக இருகலாம். தமிழகத்தில் சட்டமன்றம் வரை ஒலிக்கும் என்கிறீர்களே? முதலில் இது லோக்கல் பஞ்சாயத்து அலுவலகத்தில் ஒலிக்கட்டும் அப்புறம் பார்ப்போம் சட்டமன்றமா? நாடாளுமன்றமா? என்று தவிறவும். இந்த இணையம் ரயா இதை எல்லாம் பார்க்கும் போது உங்களுக்கு அருள்செழியனோ, எழிலனோ பிரச்சனையில்லை என்று தெரிகிறது உங்கள் பிரச்சனை நாவலனும் இனியொருவும்தான். உங்களுக்குள் ஒரு கோஷ்டி மோதல் இருக்கிறது. அதுதான் இப்படி நாவலனை இழுகிறது. குகநாதன் விஷயத்தில் சென்னையில் நடந்தது எல்லாமே சட்ட பூர்வமானது என்றுதான் தெரிகிறது. ஒரு வேளை இது சட்டத்திற்கு புற்மாபனது என்றால் 2005- ல் அருள் செழியனை இது போல வீட்டில் சென்று பிடித்து போலீஸ் நிலையத்தில் வைத்து பணம் பறித்ததை நீங்கள் என்ன பெயரிட்டு அழைப்பீர்கள். கட்டப்பஞ்சாயத்தா? அல்லது சட்ட பூர்வமான நடவடிக்கையா? குழப்பமான குகநாதனின் வக்குமூலங்களைப் பார்க்கும் போது அவரே இதை எதிர்கொள்ளத் தயாரில்லை காரணம் அவர் மீது மூன்று வழக்குகள் சென்னையில் நிலுவையில் உள்ளது உங்களுகுத் தெரியுமா?

    Reply
  • muththu
    muththu

    சென்னை அசோக் நகர் 4-வது அவென்யுவில் டான் தமிழ் ஒலி டி.வி. செயல்பட்டு வந்தது. இதன் உரிமையாளர் குலாம் உசேன். மலேசியாவை சேர்ந்தவர். இதன் இயக்குனர்களாக பிரான்சு நாட்டைச் சேர்ந்த குகநாதன், மணிவேல் மெல்லோன் மற்றும் பாண்டிச்சேரியை சேர்ந்த அருள்குமரன், ஆனந்த் கணேஷ் ஆகியோர் உள்ளனர்.

    டான் டெலிவிஷன் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களிலும் வெளிநாடுகளிலும் டி.வி. நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது. இதில், உரிமம் இல்லாத சினிமா படங்கள் ஒளிபரப்பப்படுவதாக சி.பி.சி.ஐ.டி., டி.ஐ.ஜி., ராஜேந்திரனுக்கு புகார் வந்தது. அவரின் உத்தரவின் பேரில் திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனை நடத்தினார்கள்.

    டான் டெலிவிஷன் நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில், உரிமம் இல்லாத சினிமா படங்களை இந்தியாவுக்குள் ஒளிபரப்பவில்லை. வெளிநாடுகளில்தான் ஒளிபரப்பினோம் என்று கூறினார்கள்.

    அதனையடுத்து, டான் டெலிவிஷனுக்கு போலீசார் சீல் வைத்தனர். அதன் உரிமையாளர் குலாம் உசேனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனை அறிந்த இயக்குனர்கள் குகநாதன், மணிவேல் மெல்லோன், அருள் குமரன், ஆனந்த் கணேஷ், நிர்வாகி கபிலன் ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். அவர்களை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

    Reply
  • மாயா
    மாயா

    // குகநாதன் விஷயத்தில் சென்னையில் நடந்தது எல்லாமே சட்ட பூர்வமானது என்றுதான் தெரிகிறது. ஒரு வேளை இது சட்டத்திற்கு புற்மாபனது என்றால் 2005- ல் அருள் செழியனை இது போல வீட்டில் சென்று பிடித்து போலீஸ் நிலையத்தில் வைத்து பணம் பறித்ததை நீங்கள் என்ன பெயரிட்டு அழைப்பீர்கள். கட்டப்பஞ்சாயத்தா? அல்லது சட்ட பூர்வமான நடவடிக்கையா?//

    என்னைப் பொறுத்தவரையில் இவை இரண்டும் சட்டத்துக்கு புறம்பானவை. இப்படியான நிகழ்வுகள் தமிழகத்தில் சர்வ சாதாரணமானவை. இது ஒன்றும் புதிய விடயமில்லை. சில விடயங்கள் சட்டப்படி கோட்டுக்கு போனால் , அது சிவில் வழக்காக எத்தனை வருடம் போய் முடியுமோ சொல்ல முடியாது. இப்படியான நேரங்களில் போலீசாரின் அனுசரனையோடு கட்டப் பஞ்சாயத்து போன்ற நடவடிக்கைகள் நடைபெறுகின்றன. அம்மாவின் ஆட்சியில் ஒழிக்கப்பட்ட கட்டப் பஞ்சாயத்து சாம்ராச்சியம் கலைஞர் ஆட்சியில் தளிர் விட்டிருப்பது அனைவரும் அறிந்த விடயமே. எனவே இதுவும் ஒரு வித கட்டப் பஞ்சாயத்துதான்.

    //அதனையடுத்து, டான் டெலிவிஷனுக்கு போலீசார் சீல் வைத்தனர். அதன் உரிமையாளர் குலாம் உசேனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனை அறிந்த இயக்குனர்கள் குகநாதன், மணிவேல் மெல்லோன், அருள் குமரன், ஆனந்த் கணேஷ், நிர்வாகி கபிலன் ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். அவர்களை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். – muththu//

    முத்து, நீங்கள் சொல்லும் தனிப் பொலீசாருக்கு அல்லது படைக்கு குகநாதன் சட்ட ரீதியாக பிடிபட்டது தெரியாதா? ஏனையவர்களோடு சேர்ந்து தேடும் தனிப்படை போலீசார் தமிழக போலீசாரா அல்லது வெளிநாட்டு போலீசாரா? சற்று விளக்குவீர்களா?

    Reply
  • ganesh
    ganesh

    தன்னை ஒரு மாக்ஸீயவாதியாக அடையாளம் காட்டியிருந்தவர் புலிகளை பாசிஸ்ட்டுக்கள் என விமர்சித்தவர் எப்படி இந்தமாதிரியாக ஒரு பெண்ணை நடு இரவில் அழைத்து காசு பேரம் பேசுவார் நாவலன் கடந்தகாலத்தில் பேசிய பெண்ணியம் பற்றியது ஒரு பம்மாத்தாகும்.

    நாலன் மாக்சீயக்கட்சியின் அடிப்படைகள் நாவலனின் இந்த செயல்களுக்கு எவ்வளவு உடந்தையாக இருக்கும். நாவலனால் மேற்கொள்ளப்பட்டதும் பயங்கரவாத இயக்க நடவடிக்கைகளுக்கும் பொருத்தமாகவே உள்ளது

    நாவலன் அரச ஆதரவாளர்கள் அரச உளவாளிகள் என்றெல்லாம் மற்றவர்களை பேசி எழுதுவதில் அர்த்தம் இருப்பதில்லை.

    Reply
  • rasa
    rasa

    முத்து எமக்கு இனிமேல் புலிகள் போன்ற இயக்கம் பயங்கரவாதம் அதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகள் நாம் எதிர்க்கிறோம் ஆனால் இது போன்ற பல நடவடிக்கைகளின் நாயகர்களாக இன்றும் உலகின் முன்ணணியில் இந்தியா இருப்பது எமக்கு தெரியும் அதிலும் இந்த குகநாதன் போன்றோரின் கடத்தல் முழு விபரமும் அருள் சகோதரர்களும் நாவலனும் இலங்கைத்தமிழ் மக்களுக்கு முழுமையாக முன்வைக்க வேண்டும் நாவலன் சொன்னது போன்று அருள் சொன்னது போன்று பதிவு செய்யப்பட்டவைகள் வெளியிடப்படல் வேண்டும் இதில் உள்ள சட்டத்தவறுகள் ஊழல்கள் ஜனநாயக விரோத நடவடிக்கைகள் மக்களுக்கு முழுமையாக வெளிப்படுத்தப்படல் வேண்டும்.

    சிலவேளை முத்து நீங்கள் சொல்லுது போன்று எதுவுமே நடக்காது போகலாம் காரணம் இந்தியா தமிழ் நாட்டில் இது சாதாரணவிடயம் ஆனால் புலம்பெயர் நாட்டில் இனிமேல் நாவலன் தனக்கு ஒரு அரசியல் இருப்பதாக எழுத பேச முடியாது.

    முத்து நீங்கள் சொல்லுவது போன்று ரயாவின் இணையத்தளம் பத்து பேர் மட்டும் பார்ப்பதாக இருந்தாலும் பரவாயில்லை பத்திரிகை தர்மத்தை நிலை நிறுத்தினால் போதும் தமிழகத்தில் எத்தனையோ பத்திரிகைகள் முற்போக்கு சங்கங்கள் உண்டு ஆனாலும் இன்னும் எத்தனையோ நூறு வருடங்களாக எப்படி சாதிய கேவலம் உண்டு ஆகவே தமிழக பத்திரிகைகளால் பிரயோசனம் இல்லை என்றாகிவிடுமா?

    உங்களுக்கு ஞாபகம் இருக்கா புலிகள் ஆட்சிக்காலத்தில் ஆனந்த விகடன் குமுதம் போன்ற பத்திரிகைகள் உட்பட பல்வேறு தமிழக பத்திரிகைகள் தமிழ்ப்பிரதேசத்தில் தடைசெய்யப்பட்டது இதற்கு பல தமிழர்கள் ஆதரவளித்தனர் என்பதும் உண்மையானதே!

    முத்து நீங்கள் சொல்வது போன்று நாவலனது பிரச்சினை ஒரு முக்கியமானது காரணம் இவர் மாக்சிட் கடத்தலில் பணவிடயத்தில் தொடர்பபட்டுள்ளார் புதிய திசைகள் என்ற அமைப்பை இவர் முன்னின்று நடாத்தியவர். அடுத்து குகநாதனுக்கு ஒரு பத்திரையாளனுக்கு சட்டவிரோதமாக கடத்தப்பட்டது தவறு. முத்து இந்தியாவில் பலர் இலங்கை தமிழர் போராட்டத்தில் பணம்பெறும் ஆதரவாகவே இருந்ததும் எமக்கு தெரியும். எல்லா கடத்தலும் சட்டபூர்வமானது என்றால் எல்லாவற்றையும் எல்லா பதிவுகளையும் மக்கள் முன்வைக்க கோருங்கள்

    Reply
  • palli
    palli

    //முத்து, நீங்கள் சொல்லும் தனிப் பொலீசாருக்கு அல்லது படைக்கு குகநாதன் சட்ட ரீதியாக பிடிபட்டது தெரியாதா? ஏனையவர்களோடு சேர்ந்து தேடும் தனிப்படை போலீசார் தமிழக போலீசாரா அல்லது வெளிநாட்டு போலீசாரா? சற்று விளக்குவீர்களா?//

    முத்து இதைதான் நானும் சொல்லுகிறேன் இந்த பிரச்சனையை சட்டசபைவரை கொண்டு செல்வோம்;
    யார் யார் குற்றவாளிகளோ அவர்கள் யாவரும்(குகநாதன் உட்பட) சட்டத்தை சந்திக்கட்டும்; அதைவிட்டு ரயாகரன் மீதும் ஜெயபாலன் மீதும் குற்றம் என சொல்லி மாவியாக்கள் ஊடகவியாளர்கள் திரிவதையோ அல்லது செயல்படுவதையோ ஏற்றுகொள்ள முடியாது என்பதே என் வாதம்;

    Reply
  • palli
    palli

    //தமிழகச் சூழல் தெரியமல் எழுதியிருக்கிறீர்கள். ஒரு பத்தாயிரம் பேர் இரண்டு மூன்று இணைய தளங்கள். என அதையே படித்து வாழும் புலத்து மக்களில் ஒரு சிறு பிரினருக்கு வேண்டுமென்றால் இது முக்கியச் செய்தியாக இருகலாம். தமிழகத்தில் சட்டமன்றம் வரை ஒலிக்கும் என்கிறீர்களே? முதலில் இது லோக்கல் பஞ்சாயத்து அலுவலகத்தில் ஒலிக்கட்டும் அப்புறம் பார்ப்போம் //
    அப்படியா?? என்னால் ஸ்ராலினில் இருந்து பன்னீர்செல்வம் வரை பேசமுடியும் என்பதை வரும்காலத்தில் நிருபிக்கிறேன், அது முடியாத பட்சத்தில் பல்லி மரணித்து விட்டதாகவே எண்ணுங்கள்? நானும் சிலகாலமாவது உருத்திரனுடன் தமிழகத்தில் இருந்தேன் என்பதை வெட்கத்துடன் இங்கு பதிவு செய்கிறேன்;

    Reply
  • palli
    palli

    //சட்டத்திற்கு புற்மாபனது என்றால் 2005- ல் அருள் செழியனை இது போல வீட்டில் சென்று பிடித்து போலீஸ் நிலையத்தில் வைத்து பணம் பறித்ததை நீங்கள் என்ன பெயரிட்டு அழைப்பீர்கள். // இது குடும்ப விவகாரம்(தமிழ்நாடு)

    மற்றயது தெரு பிரச்சனை. தமிழக ஈழதமிழர் எனவும் எடுத்துக்கலாம்;

    Reply
  • BC
    BC

    //சுதா-இது என்ன புதுக்கதை//
    இது புதுக்கதையல்ல. ஒன்று, இரண்டு வருடத்துக்கு முன்பு நடந்த கதை. இரயாகரனும் வேறு இலங்கையர்களும் அதை கண்டித்து நீண்ட பின்னோட்டம் எழுதினார்கள். அதை அறிந்து தான் நானும் பார்த்தேன்.

    Reply
  • mukilan
    mukilan

    அருள் சகோதர்கள் மற்றும் நாவலன் ஆகியோர் தவறு இழைத்துவிட்டனர் என்பதற்காக தயவு செய்து யாரும் மாக்சியவாதிகள் மீது சந்தேகம் கொள்ள வேண்டாம். குறிப்பாக இங்கு ஓரிருவர் ம.க.இ;க பற்றி கேட்டிருந்தனர். அவர்கள் இன்னும் இந்த விடயம் பற்றி கருத்து கூறவில்லை என்பது உண்மைதான். ஆனால் அதற்காக அவர்களும் இதற்கு உடந்தையாவார்கள் என்று கருதவேண்டாம். ஏனெனில் கலையரசன் என்.ஜி.ஓ க்களுடன் தொடர்பு கொண்டவர் என குற்றம்சாட்டி நாவலன் அவரது கட்டுரைகள் இனியொருவில் பிரசுரம் செய்யப்படாது என்றார். ஆனால் வினவு பக்கத்தில் தொடர்ந்தும் கலையரசன் கட்டுரைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இது நாவலன் கருத்தை ம.க.இ.க ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை காட்டுகிறது அல்லவா. அதுபோன்று ரயாகரன் விமர்சித்தபோதும் கனடாநாட்டு புலி ஆதரவாளர் ஒருவரின் கட்டுரையை வினவு பிரசுரித்தது. இது நாவலன் ரயாகரன் ஆகியோருடன் ம.க.இ.க தொடர்புர்களை பேணிவரும் அதேவேளை ஒவ்வொருவிடயத்திலும் அவர்கள் தங்கள் சொந்த முடிவுகளை மேற்கொள்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. எனவே இந்த கடத்தல் விவகாரத்திலும் நிச்சயம் அவர்கள் பாரபட்சமின்றி தமது சொந்த முடிவை மேற்கொள்வார்கள் என நான் நம்புகிறேன்.

    இங்கு குகநாதனை யாரும் நல்லவர் என்றோ அல்லது அவருக்கு ஆதரவாகவோ வக்காலத்து வாங்கவில்லை. மாறாக புதிய திசைகள் காட்டுவதாக கூறிய நாவலனின் தவறுகளே பிரதானமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தேசம் ஆசிரியர் ஜெயபாலன் அவர்கள் நடுநிலையாக உண்மைகளை வெளிக்கொணர்ந்ததோடு நாவலனின் தவறுகளையும் சுட்டிக்காட்டியுள்ளார். உண்மையில் நாவலன் தான் தவறு செய்யவில்லை எனக் கருதுவாரேயானால் இதற்கு பதில் அளிக்க வேண்டியது அவரது கடமையாகும். தேசம் ஆசிரியர் அரசின் கைக்கூலி என்றும் ஜெயபாலன் ரயாகரன் குகநாதன் கூட்டாக சதி செய்கின்றனர் என்றும் எழுதுவது எவ்விதத்திலும் பொருத்தமான பதிலாக அமையாது. ராயாகரன் விடயத்தை வெளிப்படுத்தியவுடன் பாய்ந்து சென்று கருத்து எழுதிய அருள்செழியன் ஏன் தேசம்நெற்றில் வந்து எழுதவில்லை? அத்துடன் தன்னுடன் யாரும் தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என தைரியமாக நம்பர் கொடுத்தவர் ஆனால் தொடர்பு கொண்டால் பதில் தருகிறார் இல்லை. ரயாகரன் கேட்டால் தனது முழுநேர வீடியோவைக் கொடுக்க தயார் என்றவர் ரயாகரன் அதைத் தரும்படி கேட்டும் கொடுக்கிறார் இல்லை. அதுமட்டுமல்லாமல் முடிந்தால் அந்த வீடியோவை வெளியிடட்டும் என்று குகநாதனே சவால் விட்ட பின்பும் செழியன் ஏன் இன்னும் அதை வெளியிடாமல் தவிர்க்கிறார்? இது பற்றியெல்லாம் கருத்து கூறமுடியாத நாவலன் தொடர்ந்தும் அரசியல் செய்ய எந்த தகுதியும் அற்றவராக எனக்கு தோன்றுகிறார். ஆனால் நாவலன் ஒரு விடயத்தை நன்கு புரிந்து கொள்ள வேண்டும் மக்களை தொடர்ந்து ஏமாற்ற முடியாது என்பதே அது.

    Reply
  • rani
    rani

    முகிலன் குறிப்பிட்டது போல் நானும் ம.க.இ.க மீது மிகவும் மதிப்பும் மரியாதையும் கொண்டிருக்கிறேன். ஆனால் சென்னையில் இருக்கும் நண்பர்கள் சிலர் இந்த விடயத்தில் ம.க.இ.க வானது கருத்து சொல்லாமல் மெளனம் சாதிக்கும் என்றே சொல்கிறார்கள். ஏனெனில் ம.க.இ.க வின் செயலர் மருதையன் அவர்களின் பேட்டி ஜீனியர்விகடனில் வருவதற்கு இந்த அருள் சகோதரர்களே காரணம் என்றும் அந்த நன்றிக்காக இந்த விடயத்தில் அவர்கள் கருத்து தெரிவிக்காமல் மெளனம் சாதிப்பார்கள் என்றுசொல்கிறார்கள். எனவே இது குறித்து ம.க.இ.க வின் கருத்துக்கள் வெளிவருவது நல்லது என்றே நான் கருதுகிறேன். மேலும் இது பற்றி முகிலன் அவர்கள் ஏதாவது தெரிவிக்க முடியுமாயின் அது பற்றி அறிந்து கொள்ள நான் ஆவலாகவே இருக்கிறேன்.

    அத்துடன் “தேசம்” செய்திகள் தமிழ்நாட்டில் மிகவும் தாக்கத்தை கொடுத்து வருவதால் இதனை தணிக்கும்பொருட்டு லண்டனில் வசிக்கும் ஒரு மதிப்புக்குரிய தோழரை அணுகியதாகவும் ஆனால் அவர் இந்த விடயத்தில் தலையிட மறுத்துவிட்டதாகவும் உறுதிப்படுத்தாத தகவல் ஒன்று சென்னையில் உலாவுகிறது.

    Reply
  • BC
    BC

    ராணியின் மிகவும் மதிப்பும் மரியாதை உரியவர்கள் மெளனம் சாதிப்பார்கள் என்பது ஆச்சரியமாக உள்ளது.
    //தேசம் செய்திகள் தமிழ்நாட்டில் மிகவும் தாக்கத்தை கொடுத்து வருவதால்..//
    நடுநிலமையான செய்திகள் கூட தமிழ்நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்துகிறதே! நாம் நினைத்தோம் விகடன், குமுதம், நக்கீரன் மாதிரி இருந்தால் தான் அங்கே பிடிக்கும் என்று.

    Reply
  • Sudha
    Sudha

    அருள்எழிலன் வினவுவில் கட்டுரை எழுதி வருபவர். நாவலனுடைய புதிய திசைகள் வானொலி நிகழ்ச்சியில் மருதையன் கலந்துகொண்டார். எனவே குகநாதன் கடத்தல் சம்பவத்தில் வினவு கருத்து தெரிவிக்கவேண்டியது அவசியம் என நினைக்கிறேன். அவர்களின் மெளனம் சந்தேகப்பட வேண்டியது. பொலிஸ் அடாவடிக்கு மகஇக உடந்தைதானா?

    Reply
  • mukilan
    mukilan

    ராணி குறிப்பிட்டது போன்று ஆனந்தவிகடனில் தோழர் மருதையன் அவர்களின் பேட்டி வந்தது உண்மைதான். ஆனால் அதற்கு “அருள்” சகோதரர்கள்தான் காரணமா என்பது தெரியவில்லை. ஒருவேளை அவர்கள்தான் காரணம் என்றாலும் கூட அதற்காக இந்தப் பிரச்சனையில் ம.க.இ.க வானது “அருள்”சகோதர்களுக்காக மௌனம் சாதிக்கும் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஏனெனில் லண்டன் வானொலியில் தோழர் மருதையனை பேட்டி எடுத்து ஒலிபரப்பியவர் நாவலன். ஆனால் நாவலன் கலையரசனை என்.ஜி.ஓவென முத்திரை குத்தி ஒதுக்கியபோது அதனை ம.க.இ.க ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக தமது வினவு தளத்தில் தொடர்ந்தும் கலையரசன் கட்டுரைகளை வெளியிட்டு வருகின்றனர். அதேபோல் பல வருடங்களாக ம.க.இ.க வின் செய்திகளை தனது தளத்தில் வெளியிட்டு ஆதரவு தெரிவித்து வருபவர் ரயாகரன். ஆனால் இதே ரயாகரன் கனடா நாட்டில் உள்ள ஒரு புலி ஆதரவாளரின் கட்டுரை வினவில் வெளியிட்டமைக்கு தனது ஆட்சேபங்களை வெளியிட்டபோது வினவில் ரயாகரன் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். எனவே இதில் இருந்து தெரியவருவது என்னவெனில் ரேடியோவில் பேட்டி போட்ட நாவலனுக்காகவோ அல்லது ஆனந்தவிகடனில் பேட்டி போட்ட அருள் சகோதர்களுக்காகவோ ம.க.இ.க வானது தனது கருத்துக்களை தெரிவிக்காமல் மௌனம் சாதிக்கும் என்று கூறுவது தவறானதாகும். மாறாக அது தனது சொந்த முடிவில் தனது கருத்துக்களை நிச்சயம் வெளிப்படுத்தும்.

    இங்கு ஆச்சரியம் என்னவெனில் ம.க.இ.க போன்ற புரட்சிகர அமைப்புகளுடன் தொடர்புகளை பேணி தன்னையும் ஒரு புரட்சிவாதியாக காட்டும் நாவலன் புலி ஆதரவாளர்கள் என்று அறியப்படும் இந்த “அருள்” சகோதரர்களுடன் எப்படி உறவு வைத்திருந்தார் என்பதே. அதைவிட இந்த “அருள்” சகோதரர்களில் ஒருவர் இனியொருவின் ஆசிரியர்களில் ஒருவர் என்றுவேற ரயாகரன் குற்றம் சுமத்தியுள்ளார். அது உண்மையாயின் புலி ஆதரவாளரை ஆசிரியராக வைத்துக்கொண்டு புரட்சி பேசுவதும் மாற்று அரசியல் பேசுவதும் வேடிக்கையாகவே இருக்கிறது. இது அப்பட்டமான ஒரு ஏமாற்றாகவே இருக்கிறது. இது குறித்து இனியும் மௌனம் சாதிக்காமல் உண்மைகளை நாவலன் வெளிப்படுத்த வேண்டும். இல்லையேல் இனி இவரை எந்தவொரு புரட்சிவாதியும் நம்பமுடியாத நிலை ஏற்படுவதை தவிர்க்க முடியாது.

    Reply
  • kunaratam
    kunaratam

    தமிழ்நாட்டு பொலிஸ் கருனாநிதி அரசின் அடியாளாக வேலை செய்கிறது என கடந்த சில மாதங்களாக ஜெயலலிதா குற்றம்சாட்டி வருகிறார். அவரின் இந்த குற்றச்சாட்டுக்கு நல்ல ஆதாரமாக இந்த “அருள்”; சகோதரர்களின் கடத்தல் அமைந்துள்ளது. எனவே இதனை அறிந்த அ.தி.மு.க தலைமை இந்த கடத்தல் நாடகத்தின் வீடியோவைக் கைப்பற்றி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய முயற்சி செய்கிறது. இதனை அறிந்த கருனாநிதி அரசு வீடியோவை அமுக்கிவிட்டதாக கதை அடிபடுகிறது. இனிமேல் இந்தக் கடத்தல் பற்றி “அருள்” சகோதரர்களோ அல்லது “இனியொரு”வோ வாய் திறக்காது மௌனம் சாதிப்பார்கள் எனக் கூறுகிறார்கள். இது எந்தளவுக்கு உண்மையான செய்தி என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. எவ்வாறாயினும் அருள்செழியன் தனது தொலை பேசி இலக்கத்தை தமிழ்அரங்கத்தில் எழுதியுள்ளார். எனவே அவ் இலக்கத்தில் தொடர்புகொண்டு அருள்செழியனிடம் இருக்கும் வீடியோவை பெற்று வாசகர்களுக்கு அளிக்க “தேசம்”; ஆசிரியர் ஜெயபாலன் அவர்கள் முன்வரவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    அதேபோன்று இங்கு பின்னூட்டம் இட்ட சில வாசகர்கள் ம.க.இ.க வானது தனது கருத்தை தெரிவிக்க வேண்டும் எனக் கோரியுள்ளனர். எனவே அவர்களுக்காக ம.க.இ.க வினது மட்டுமல்ல புதியதிசைகளினதும் கருத்துக்களையும் பெற்று வெளியிட “தேசம்” ஆசிரியர் ஜெயபாலன் அவர்கள் முயற்சிகள் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். நிச்சயம் அவை தேசம் வாசகர்களுக்கு மட்டுமல்ல இந்த கடத்தல் சம்பவம் குறித்து உண்மைகளை அறிய வேண்டும் என விரும்பும் அனைவருக்கும் மிக்க பயன் உள்ளவையாக அமையும் என நம்புகிறேன்.

    ஒருவேளை சம்பந்தப்பட்டவர்கள் தேசத்திற்கு பதில் அளிக்க மறுத்தாலும் கூட இவ்வாறு முயற்சி செய்து அதனை வாசகர்களுக்கு தெரிவிப்பதன் மூலம் சம்பந்தப்பட்டவர்களுக்கு தேசம் வாய்ப்பு அளித்த விடயமும் அவர்கள் பதில் அளிக்கவில்லை என்ற விடயமும் வாசகர்களுக்கு கிடைக்கும் அல்லவா! அதற்காகவேனும் தேசம் ஆசிரியர் இந்த முயற்சியை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

    எல்லாவற்றுக்கும் மேலாக இப்போது இந்த கடத்தல் நாடகத்தில் உண்மைகளை அறிவதற்கு எல்லோரும் பார்ப்பது தேசம்நெற்றை மட்டுமே. எனவே அவர்களுக்கு ஏமாற்றம் அளிக்காமல் தொடர்ந்தும் இதன் செய்திகளை தேசம்நெற் தொடர்ந்து வழங்கி வர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

    Reply
  • Sudha
    Sudha

    மகஇகவுக்கு அரசியல் நடத்த நாவலனும் தேவை ரயாகரனும் தேவை அருள்எழிலனும் தேவை என்பதால் யாரையும் நோகாமல் அரசியல் செய்யப் பார்க்கிறார்களா? ஒரு உதாரணத்துக்கு இந்தியா சென்றிருந்த நாவலனையோ ரயாகரனையோ பொலிசார் கடத்தியிருந்தால் மகஇக மெளனம் சாதித்திருக்குமா? இலங்கை சென்ற அருள் எழிலனை பொலிஸ் கடத்தியிருந்தால் மகஇக மெளனம் சாதித்திருக்குமா??

    //நாவலனுக்காகவோ அல்லது ஆனந்தவிகடனில் பேட்டி போட்ட அருள் சகோதர்களுக்காகவோ ம.க.இ.க வானது தனது கருத்துக்களை தெரிவிக்காமல் மௌனம் சாதிக்கும் என்று கூறுவது தவறானதாகும்.// முகிலன்.

    மகஇக மெளனம் சாதிக்கும்வரை மகஇக வை நோக்கி கேள்விகள் எழுவது தவிர்க்கப்பட முடியாதது. இதுவரை எல்லாப் பிரச்சினைகளிலும் தடாலடி அடித்த மகஇக இப்போது வாயையே திறவாமலிருப்பதுதான் சந்தேகத்துக்குரியது. நாவலன் சரி என்றால் சரி என்றும் நாவலன் பிழை என்றால் பிழை என்றும் சொல்லிவிட்டுப்போவதில் அவர்களுக்கு என்ன பிரச்சினை? ஏன் தயங்குகிறார்கள்: இந்தத் தயக்கம் சந்கேத்திற்குரியது.

    Reply
  • KUHANATHAN SS
    KUHANATHAN SS

    அண்மைக்காலத்தில் தேசம் தளத்தில் அதிக பின்னுட்டங்களைக் கண்ட செய்தியாக இந்தச் செய்தி தொடர்ந்து செல்வதால் இதனை எழுதவேண்டி ஏற்பட்டுவிட்டது.
    முதலில் என்னை ஒரு மகா மோசடிக்காரனாகவே தொடர்ந்து எல்லோரும் திரும்பத்திரும்ப எழுதிவருகின்றீர்கள். இவ்வாறு எழுதுவதற்கு முதலில் உங்கள் உங்கள் சொந்தப் பெயர்களில் எழுதுங்கள். அப்படி எழுதாமல், அதற்கு துணிவில்லாமல் இருந்துகொண்டு இன்னுமொருவன்மீது குற்றம்சாட்டுவது நான் செய்ததாக நீங்கள் குறிப்பிடும் மோசடியைவிட பெரியது என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். அல்லது உங்கள் பெயர்களை குறிப்பிட்டால் நீங்கள் செய்த மோசடிகளை நாங்கள் பின்னுட்டங்களாக பார்க்க முடிந்திருக்கும். அதற்காக நான் அனைவரையும் குறிப்பிடுகின்றேன் என்பதல்ல. அல்லது என்னால் மோசடிக்குள்ளானவர்கள் தங்கள் பெயர்களில் மோசடி பற்றி எழுதுங்கள்.

    நான் குடும்பத்துடன் தற்கொலை செய்யவதைவிட வேறு வழியில்லை என்று தன்னிடம் மண்டியிட்டதாலேயே எனக்கு தான் உதவ முன்வந்ததாக ஆரம்பத்தில் எழுதுவதிலேயே அருட்செழியன் பொய் பேசத் தொடங்கிவிட்டார் என்பதை என்னை அறிந்தவர்கள் உணர்ந்திருப்பார்கள்.
    பலநூறு யூரோக்கள் முதலிட்டு தொலைக்காட்சி தொடங்கவேண்டிய நிலையில் இருந்த நான் ஒரு பத்தாயிரம் ரூபா சம்பளத்திற்கு வேலை செய்துகொண்டிருந்த அருட்செழியனிடம் உதவி கேட்டேன், அவர் நான் தற்கொலை செய்யும் நிலையை தீர்த்துவைத்தார் என்றால் அதனை எப்படி சொல்வது என்று தெரியவில்லை.
    அதைவிட அவர் எனக்காக பணியாற்றிக்கொண்டிருந்த 18 மாதங்களில் 55 லட்சம் ரூபாவை அவருக்கு அனுப்பியதை உறுதிசெய்கின்றார். அப்படியெனில் அந்தப் பணத்தை வைத்து செலவிட்ட அவர் ஏன் தனது சம்பளத்தை அவ்வப்போது எடுக்கவில்லை என்பதையும் அவரிடம் கேட்பார் இல்லை.

    அருட்செழியன் என்னிடமிருந்து வரவேண்டியதாகக் கூறும் பணத்திற்காகத்தான் இந்த புகார் செய்யப்பட்டது என்றால் அது கிடைத்த பின்னர் அவர் அமைதியடைந்திருக்க வேண்டும். ஆனால் என்னோடோ அல்லது அந்த விவகாரத்தோடு எந்த வகையிலும் சம்பந்தப்படாத அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு தொலைபேசி எடுத்து அரைமணிநேரம் இந்த விடயம் குறித்து அவர் பேசவேண்டிய தேவை என்ன இருக்கின்றது.

    டான் தமிழ்ஒளி தொலைக்காட்சியைப் பற்றியும் இங்கே பலரும் தத்தமது கருத்துக்களை பதிவுசெய்துள்ளனர். அந்தத் தொலைக்காட்சியை நான் டக்ளஸ் தேவானந்தாவின் நிதி உதவியுடனேயே நடாத்திவருவதாக பல்வேறு இணையத்தளங்களும் (குறிப்பாக புலி ஆதரவு தளங்கள்) தொடர்ந்து எழுதிவருகின்றன. என்னைப்பற்றி அவரிடம் தவறான அபிப்பிராயத்தை தோற்றுவிப்பதால் அவரிடமிருந்து எனக்கு கிடைப்பதாக அவர்கள் நம்பும் உதவியை தடுத்துவிடலாம் என்று இவரை இயக்கியவர்கள் கணக்குப் போட்டிருக்கின்றார்கள். அதனால்தான் அமைச்சர் தேவானந்தாவிடம் தொலைபேசியில் என்னை ஒரு மோசடிக்காரனாக காட்ட முனைந்தார்கள். அதன்மூலம் அவர்களது உண்மையான இலக்கு என்ன என்பதை புரிந்துகொள்ளலாம்.
    அதன்மூலம் சிலவேளை நான் எதிர்காலத்தில் ஈபிடிபியில் சேர நினைத்தால் என்னன தேவானந்தா ஏற்றுக்கொள்ளாமல் விடலாம். ஆனால் டான் தமிழ்ஒளிக்கு இவ்வாறான புகார்களால் எந்தப் பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. டான் தமிழ்ஒளிக்கு அமைச்சரிடமிருந்து சிறிய உதவியாவது கிடைத்தால் எனது சிரமம் கொஞ்சமாவது குறைந்திருக்கும்.

    எனக்கு எதிராக நடாத்தப்பட்ட இந்த நாடகத்தில் பங்குகொண்டவர்கள் பல்வேறு தரப்பினர். அவர்களில் சிலர் அருட்செழியன் என்னால் ஏமாற்றப்பட்டிருக்கிறார் அவருக்கு உதவவேண்டும் என்று வந்தவர்கள். சிலர் அரச ஆதரவாளர் ஒருவரை சிறையில் அடைக்கவேண்டும் என்பதற்காக அவருடன் சேர்ந்தவர்கள். வேறு சிலர் அவருக்கு என்னிடமிருந்து பணம் கிடைத்தால் அதில் தங்களுக்கும் கமிஷன் கிடைக்கும் என்பதற்காக இணைந்தவர்கள். எனவே அவர்கள் அனைவரிடமும் ஒரே கருத்து இருக்கவேண்டும் என்பதில்லை.

    என்னை இருபத்திநான்கு மணிநேரத்தில் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிசார் தவறினர் என்பதால் இது ஒரு சட்டபூர்வமான கடத்தல் என்று குறிப்பட்ட நான், பின்னர் நீதிமன்று சென்றால் நீண்டகாலம் இந்தியா தங்கவேண்டிவரும் என்பதாலேயே பணத்தைக் கொடுக்க முடிவெடுத்ததாக குறிப்பிட்டதையும் ஒருவர் முரண்பாடான தகவல் என்று பின்னூட்டம் விடுகின்றார். அதில் என்ன முரண்பாட்டை அவர் கண்டார் என்பது தெரியவில்லை.
    என்னை 24 மணிநேரத்தில் நீதிமன்றில் ஆஜர்படுத்தவேண்டும் என்பது சட்டம். ஆனால் நான் நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்வதைத் தவிர்ப்பதற்காக பணம்தருவதாக கூறியதும் அவர்கள் 24 மணி நேரத்திற்கும் மேலாக பொலிஸ் நிலையத்தில் வைத்திருக்கின்றார்கள் என்றால் அங்கே சட்டம் எதுவும் பின்பற்றப்படவில்லை என்பதை இலகுவாகப் புரிந்துகொள்ளலாம்.

    இங்கே எமது குடுக்கல்வாங்கல் பற்றிய பிரச்னையை விட, சபாநாவலனின் பாத்திரம் பற்றியதாகவே பலரும் கருத்துக்களை வெளியிட்டுவருகின்றனர்.
    சபா நாவலனின் நேர்மை குறித்தும், அவர்பற்றியும் அவர் பிரான்சில் வாழ்ந்த காலத்தில் அவரது சகாக்களாக இருந்தவர்களிடம் கேட்டால் என்னைவிட அதிகம் சொல்வார்கள்.

    முதல்நாள் பாதி கட்டுரைய எழிலன் அனுப்பியிருந்ததாகவும் மிகுதிக்கட்டுரையைக் கேட்டு போன் செய்ததாகவும் சபா நாவலன் கூறியிருப்பதே ஒரு பொய்யைச் சொல்வதற்காக இன்னுமொரு பொய்யைச் சொல்கிறார் என்பது புரியும். நான்கு பக்க கட்டுரையை அனுப்புகின்ற எழிலன் அதில் இரண்டு முதல்நாளும் மற்றயதை இவர் தொலைபேசியில் தொடர்புகொண்ட பின்னும்தான் அனுப்புவார் என்றால் யாருக்கு காதுகுத்துகின்றார் சபா நாவலன்?

    அவர் என்னுடன் பேசியதும் என்ன கூறினார் என்பதை முன்னரே கூறியிருந்தேன். அவர் என்னுடன் கதைத்தபோது அருட்செழியன் என்னிடம் சமாதானமாகப் போவதென்றால் 30 லட்சம் தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில்தான் சபா நாவலன் என்னிடம் அவர்கள் கேட்பதைக் கொடுத்து தப்பிக்கப்பாருங்கள் என்கிறார். ஆனால் எனது தரப்பிலிருந்தும் வந்த நெருக்குதல்களால் முதலில் நான் தரவேண்டும் என்று அவர்கள் கோரிய 15 லட்சத்தை வாங்கவேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கு ஏற்பட்டது. இங்கே சபா நாவலனின் பங்கு என்ன என்பதை நீங்களே அறிந்துகொள்ளலாம்.

    சபா நாவலன் முன்னையை காலங்களில் எப்படியெல்லாம் எழுதினார் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் நீண்டகாலம் ஐரோப்பிய நாடுகளில் வாழ்பவர். அவருக்கு சாதாரண சட்டங்களாவது நிச்சயம் தெரிந்திருக்கும்.

    ஒருவரது தொலைபேசி உரையாடலையோ அல்லது ஒருவரை வீடியோவில் படம் பிடிப்பதற்போ அவரின் அனுமதியைப் பெறவேண்டும். சாதாரணமாக கடைகளில் திருடர்களைப் பிடிப்பதற்கு வைக்கப்பட்டிருக்கும் கமராக்களை கூட, அப்படி கமராக்கள் வைக்கப்பட்டிருக்கின்றது என்பதை கடைக்கு முன்னால் அறிவித்துவிட்டுத்தான் கமராவில் படம் பிடிக்கலாம். அப்படியிருக்கும்போது ஒருவரின் தொலைபேசி உரையாடலை பதிவுசெய்தது தவறு. அதைவிட தவறானது அதனை பகிரங்கமாக ஒரு இணையத்தளத்தில் பதிவுசெய்தது. இந்த அத்துமீறலுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க புறப்பட்டால் அருட்செழியனிடம் இழந்ததை விட அதிகம் பெற்றுவிடலாம். ஆனால் அதற்காக நீதிமன்றம், சட்டத்தரணி என்று பணத்தை இப்போது செலவிடும் நிலையில் நாம் இல்லை.

    நான் ஜெயா ரிவியை ஒளிபரப்பத் தொடங்கியதும் ஜெயலலிதா தமிழீழத்திற்கு எதிரானவர். அவர் குகநாதனுக்கு பணம் கொடுக்கிறார் என்று எழுதியவர்களே, பின்னர் நான் ஜெயா ரிவியை நிறுத்தியதும் குகநாதன் ஜெயா ரிவிக்கு காசு கட்டவில்லை அதுதான் நிறுத்தி விட்டார்கள் என்று எழுதினார்கள்.

    நான் தொலைக்காட்சியையும் வானொலியையும் பல்வேறு நெருக்கடிகளுடன் நடாத்திக் கொண்டிருந்தபோது, சில சந்தர்ப்பங்களில் தொலைபேசி கட்டணத்தை செலுத்துவதற்கு சிரமப்பட்டதுண்டு. அவ்வேளையில் அங்கு பணியாற்றிய அறிவிப்பாளர்களிடம் பத்து இருபது என்று வாங்கிக் கட்டியதுண்டு. அதுபோன்ற சம்பவங்களில்கூட ஒரு சதம்கூட உதவிசெய்யாத அறிவிப்பாளர் ஒருவர், பிற்காலத்தில் அவரை எம்முடனிருந்து வெளியேற்றவேண்டி வந்தபோது, தான் எனக்கு 20 ஆயிரம் யூரோக்களை கடனாக வழங்கியிருந்ததாகவும் அதனை தான் என்னிடம் கேட்டதால் நான் தன்னை நீக்கிவிட்டதாகவும் கூறித்திரிந்த துரோகங்களையும் சந்தித்தவன் நான். இப்போது சந்தித்திருப்பதும் அதுபோன்ற ஒன்றுதான்.

    ரிஆர்ரி யிலிருந்து வெளியேறிய கதையையும் ஒவ்வொருவரும் தத்தமது கற்பனைகளுடன் எழுதிக் கொண்டிருக்கின்றனர். அதுவேறு கதை.
    ஆனால் நான் மீண்டும் புதிதாக தொலைக்காட்சியை தொடங்கியபோது கட்டணத் தொலைக்காட்சியாகவே தொடங்கினேன். எம்மிடம் காட் பெற்றவர்கள் 300 பேர். அவர்களில் அரைவாசிப்பேர் 150 யூரோக்களை செலுத்தி காட் எடுத்தபோது 50 யூரோக்கள் பெறுமதியான டெக்கேடர்களை இலவசமாக வழங்கினோம். இந்த 300 பேரும் வருட காட்தான் எடுத்தார்கள். அவர்கள் 300 பேரிடமிருந்து மொத்தமாக கிடைத்தது 30 ஆயிரத்திற்கும் குறைவான தொகைதான். ஆனால் நாம் மாதம் ஒன்றுக்கு சட்டலைற்றுக்கு கொடுத்தது 27 ஆயிரம் யூரோக்கள். 6 மாதங்களின் பின்னர் சிலகாலம் தடைப்பட்டபோது, எம்மிடம் காட் பெற்றவர்களையெல்லாம் ஏமாற்றி மோசடி செய்துவிட்டதாக புலிகள் எழுதித்தள்ளினார்கள்.
    இப்படித்தான் குகநாதன் ஒரு மோசடிக்காரனாக தொடர்ந்து காட்டப்பட்டு வருகின்றான்.

    அதற்காக அந்த முன்னூறு பேரையும் நஷ்டமடையவைத்தேன் என்பதை மறுக்கவில்லை. அது நான் தெரிந்துகொண்டு செய்த மோசடி அல்ல. அவ்வாறு ஒவ்வொரு மாதமும் குறைந்தது 300 பேராவது புதிதுபுதிதாக சேருவார்கள் என்று நம்பி தொடங்கினோம். நடக்கவில்லை. இப்படி ஒவ்வொன்றாக சொல்லிக்கொண்டே போகலாம்.

    இனியும் இதனை தொடர்ந்துகொண்டிருப்பது அவசியம்தானா என்று இங்கே பின்னூட்டம் விடுபவர்கள் ஒவ்வொருவரும் சிந்தியுங்கள்.
    இனியும் அவசியம் என்றால் தாராளமாக எழுதிக்கொண்டே இருங்கள்…

    Reply
  • ganesh
    ganesh

    குகநாதன் – //குகநாதனுக்கு பிரான்சில் எப்படி செல்வாக்கு இருக்கிறது என்று பார்ப்போம். எங்கே அசோக்கிடம் கதைத்து அவரை எமக்கு கதைக்கச் சொல்லுங்கள் என்றார்கள்.

    அசோக் இது போன்ற விடயங்களுக்கு பொறுப்புக்கு நிற்கமாட்டார் என்பதை அவர்கள் மட்டுமல்ல, நானும் நன்றாக அறிவேன். இருந்தாலும் கேட்டுப்பார்ப்பதில் தவறில்லை என்பதால் மனைவியிடம் அசோக்கிடம் கதைக்குமாறு கூறினேன்.

    ஆச்சரியமாக இருந்தது. கூடவே மகிழ்ச்சியாகவும் இருந்தது. அசோக் தான் உடனே எழிலனுடன் கதைப்பதாக கூறினார்.//

    திருமதி குகநாதன் – //திருமதி குகநாதனின் ஒலிப்பதிவு ஒன்றை இனியொரு இணையத்தளம் வெளியிட்டு இருந்தது. இதன் ஊடக நியாயம் பற்றி தேசம்நெற் இல் கேள்வி எழுப்பி இருந்தோம். அதற்கு இனியொரு ஆசிரியர் சபாநாவலன் திருமதி குகநாதனின் அனுமதியுடனேயே அதனை வெளியிட்டதாகக் கூறியிருந்தார்.

    ஆனால் அதனை திருமதி குகநாதன் முற்றாக மறுத்துள்ளார். தன்னிடம் இனியொரு ஆசிரியர் அவ்வாறு எந்த அனுமதியையும் பெறவில்லை என்றும் இது பதிவு செய்யப்படுவது தெரிந்திருந்தால் தான் அவருடன் பேசியிருக்கவே மாட்டேன் என்றும் தெரிவித்தார். தன்னை நடுஇரவு தூக்கத்தில் எழுப்பி அதனைப் பதிவு செய்து தனது அனுமதியின்றியே அவர் அதனைப் பிரசுரித்து உள்ளதாகவும் திருமதி குகநாதன் குற்றம்சாட்டினார்.//

    குகநாதன் அசோக்கில் நம்பிக்கை வைத்துள்ளார். அதனால் அவரின் மனைவியும் அசோக்கின் நண்பர் நாவலன் சடுநிசியில் போன் செய்த போது கதைத்து உள்ளார். அதனை வெளியிடுவதற்கு அசோக் எப்படி உடன்பட்டார்.

    அசோக்கின் மெளனம் யாருக்குச் சம்மதம்?

    Reply
  • narayanan
    narayanan

    கிணறு வெட்ட பூதம் வந்த கதை சொல்வார்கள். ஆனால் இங்கு பல குண்டுகள் வெடித்து தேசத்தை தொடர்ந்து அதிர வைக்கின்றன. இன்று குகநாதன் “அருள்செழியன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் அரை மணி நேரத்திற்கும் அதிகமாக தொலைபேசியில் உரையாடினார்” என்று ஒரு புதுக் குண்டை போட்டுள்ளார். இந்த “அருள்” சகோதரர்கள் பலே கில்லாடிகள் போலிருக்கு. தங்கள் தேவைக்காக யார் யாரிடமோ எல்லாம் பேசி காரியம் சாதிக்கிறார்கள். ஆனால் இவர்களை ஏதோ தமிழ்தேசியவாதிகள் என்றும் மாக்சியவாதிகள் என்றும் சிலர் நியாயப்படுத்துவதைப் பார்த்தால் அழுவதா அல்லது சிரிப்பதா என்று தெரியவில்லை.

    அசோக்கின் பெயரும் இங்கு அடிபடுவதால் நியாயப்படி அவரும் தன் கருத்தை தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் அவர் இதுவரை மெளனம் சாதிப்பதால் அவர் தர்ம சங்கடமான நிலையில் இருக்கிறார் போல் தெரிகிறது. எனவே அவருக்கு சங்கடம் கொடுக்காதீர்கள்.

    Reply
  • T Constantine
    T Constantine

    //அண்மைக்காலத்தில் தேசம் தளத்தில் அதிக பின்னுட்டங்களைக் கண்ட செய்தியாக இந்தச் செய்தி தொடர்ந்து செல்வதால் இதனை எழுதவேண்டி ஏற்பட்டுவிட்டது.
    முதலில் என்னை ஒரு மகா மோசடிக்காரனாகவே தொடர்ந்து எல்லோரும் திரும்பத்திரும்ப எழுதிவருகின்றீர்கள். இவ்வாறு எழுதுவதற்கு முதலில் உங்கள் உங்கள் சொந்தப் பெயர்களில் எழுதுங்கள். அப்படி எழுதாமல், அதற்கு துணிவில்லாமல் இருந்துகொண்டு இன்னுமொருவன்மீது குற்றம்சாட்டுவது நான் செய்ததாக நீங்கள் குறிப்பிடும் மோசடியைவிட பெரியது என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். அல்லது உங்கள் பெயர்களை குறிப்பிட்டால் நீங்கள் செய்த மோசடிகளை நாங்கள் பின்னுட்டங்களாக பார்க்க முடிந்திருக்கும். அதற்காக நான் அனைவரையும் குறிப்பிடுகின்றேன் என்பதல்ல. அல்லது என்னால் மோசடிக்குள்ளானவர்கள் தங்கள் பெயர்களில் மோசடி பற்றி எழுதுங்கள்//

    Well said Mr Kuganathan

    Reply
  • kalai
    kalai

    //ஒருவரது தொலைபேசி உரையாடலையோ அல்லது ஒருவரை வீடியோவில் படம் பிடிப்பதற்போ அவரின் அனுமதியைப் பெறவேண்டும். சாதாரணமாக கடைகளில் திருடர்களைப் பிடிப்பதற்கு வைக்கப்பட்டிருக்கும் கமராக்களை கூட, அப்படி கமராக்கள் வைக்கப்பட்டிருக்கின்றது என்பதை கடைக்கு முன்னால் அறிவித்துவிட்டுத்தான் கமராவில் படம் பிடிக்கலாம். அப்படியிருக்கும்போது ஒருவரின் தொலைபேசி உரையாடலை பதிவுசெய்தது தவறு. அதைவிட தவறானது அதனை பகிரங்கமாக ஒரு இணையத்தளத்தில் பதிவுசெய்தது. இந்த அத்துமீறலுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க புறப்பட்டால் அருட்செழியனிடம் இழந்ததை விட அதிகம் பெற்றுவிடலாம். ஆனால் அதற்காக நீதிமன்றம், சட்டத்தரணி என்று பணத்தை இப்போது செலவிடும் நிலையில் நாம் இல்லை//

    ஒருவரின் தொலைபேசி உரையாடலை அவர் அனுமதியின்றி/எச்சரிக்கையின்றி பதிவுசெய்வது கிரிமினல் ஒபென்ஸ்.

    Reply
  • kalai
    kalai

    What are the rules on taping phone calls?
    WHO, WHAT, WHY?
    The Magazine answers…

    Phone tapping requires a warrant
    Britain’s top policeman is under fire for secretly taping important phone conversations. So what are the rules on recording phone conversations?
    Metropolitan Police Commissioner Sir Ian Blair is fighting to save his job after secretly taping a phone conversation with a senior minister.

    He recorded a 10-minute call with the Attorney General, Lord Goldsmith, last September without him knowing, it has emerged. Lord Goldsmith has complained to the Home Secretary Charles Clarke and Sir Ian has since apologised.

    Sir Ian has also admitted to taping calls with senior officials from the Independent Police Complaints Commission.

    So if the country’s top policeman is being criticised, what are the rules when it comes to recording phone conversations?

    Underestimated

    Sir Ian did not break the law. Under the Regulation of Investigatory Powers Act 2000 (RIPA), it is not illegal for individuals to tape conversations provided the recording is for their own use.

    WHO, WHAT, WHY?

    A regular feature in the BBC News Magazine – aiming to answer some of the questions behind the headlines
    Recording or monitoring is only prohibited where some of the contents of the communication are made available to a third party. If a person intends to make the conversation available, they must get the consent of the person being recorded.

    Journalists often record phone conversations but can only use what is said for research purposes if they have not told the person. If they want to publish quotes or broadcast what has been said they need to inform the person that the conversation is being taped.

    An exception is where there is a public interest at stake. For example, if a reporter suspects a company of giving bad advice over the phone, it would be pointless warning them that they were being taped before getting evidence.

    There are a few other examples where recording a phone call is allowed. The Telecommunications Regulations 2000 allows companies to record calls to:

    •provide evidence of a business transaction
    •ensure that a business complies with regulatory procedures
    •see quality standards or targets are being met
    •in the interests of national security
    •for the purpose of preventing or detecting crime
    •prevent or detect crime to investigate the unauthorised use of a phone network
    •secure the effective operation of the phone network.
    Business don’t have to tell people they are recording calls if it’s for any of the above reasons, but in any other case – for example, market research – they do.

    It is not, however, a criminal offence to record a conversation unlawfully – rather a civil wrong which can redressed with a claim for damages.

    RIPA also governs phone tapping, which the police and security services are can do with a warrant, signed by the home secretary.

    The number of interception warrants in force by the end of 2004 was 3,101 in England and Wales and further 266 in Scotland, according the latest Home Office and Scottish Executive statistics.

    Reply
  • BC
    BC

    முகிலன் சொல்ல வருவது இரயாகரனின் எதிர்ப்பையும் மீறி புலி ஆதரவாளரின் கட்டுரையை மகஇகழகம் வெளியிட்டது மாதிரி அருள் சகோதர்களுக்காகவோ நாவலனுக்காகவோ மௌனம் சாதிக்க மாட்டார்கள். மௌனம் சாதிக்கும் என்று கூறுவது தவறு என்று.
    எந்த புரட்சிகரநோக்கத்தில் ரஜினி ரசிகர் மாதிரி புலி ரசிகரை கொண்டு இரயாகரனின் எதிர்ப்பையும் மீறி கட்டுரையை வெளியிட்டார்கள்? தமிழ்நாட்டில் இருந்த புலி ஆதரவை தாங்கள் அறுவடை செய்வதற்காக தான். ம.க.இ.கழகம், அருள் சகோதர்கள், நாவலன் தங்களுக்கு லாபம் எதுவோ அதை செய்வார்கள் இதில் புரட்சியவது…!

    Reply
  • palli
    palli

    நன்றி குகநாதன்; காரனம் உங்கள் பல வேலைக்கு மத்தியில் தேசத்துக்கு பின்னோட்டம் எழுதியதற்கு; தாங்கள் ஒரு கைதேர்ந்த ஊடகவியாளன் என்பதை நான் அறிவேன், அதை பலமுறை பார்த்தாலும் இந்த பின்னோட்டம் அதை நிருபணம் செய்துள்ளது,

    இனி விடயத்துக்கு வருவோம்;

    //முதலில் என்னை ஒரு மகா மோசடிக்காரனாகவே தொடர்ந்து எல்லோரும் திரும்பத்திரும்ப எழுதிவருகின்றீர்கள். இவ்வாறு எழுதுவதற்கு முதலில் உங்கள் உங்கள் சொந்தப் பெயர்களில் எழுதுங்கள்.//
    அதில் எனக்கும் விருப்பம்தான்; ஆனால் சொந்த பெயரில் எழுதினால் உன்மையை எழுத முடியாது (என்ன பொறுத்த மட்டில்) காரணம் எல்லோருமே நண்பர்கள் பகமைதான் வருமே தவிர கருத்து சரியாக இருக்காது, ஆகையால் பல்லி எழுதியதில் ஏதாவது தவறுகள் இருந்தால் சுட்டி காட்டவும்;

    //அல்லது என்னால் மோசடிக்குள்ளானவர்கள் தங்கள் பெயர்களில் மோசடி பற்றி எழுதுங்கள்.//
    நான் உங்களால் மோசடி செய்யபடவில்லை, ஆனால் பல்லிக்கு உங்களோடு கருத்து முரன்பாடுகள் உண்டு; அதை முன்பும் ஒரு தடவை தேசத்தில் எழுதினேன்; (தேசத்தில் மட்டுமே பல்லி) அதை உங்களுடன் பேச இது சரியான நேரம் இல்லை என்பதால் மீண்டும் ஒருமுறை இதே தேசத்தில் வாதிப்போம்;

    //:ஒரு பத்தாயிரம் ரூபா சம்பளத்திற்கு வேலை செய்துகொண்டிருந்த அருட்செழியனிடம் உதவி கேட்டேன், //
    இந்த பத்தாயிரம் ரூபா சம்பளம் உங்களால் கொடுக்கபட்டதா அல்லது வேறு இடத்தில் வேலை செய்தாரா? நீங்கள் இவருக்கு என்ன சம்பளத்தில் வேலைக்கு அமர்த்தினீர்கள்? இவரை எப்போதிருந்து வேலைக்கு அமர்த்தினீர்கள் ? இவர் உங்களுக்காக அங்கு செய்த வேலை என்ன? இறுதியாக இவர் உங்களுடன் எந்த காலம்மட்டும் வேலை செய்தார் என்னும் தகவல்கள் தாங்கள் தந்தால் தொடர்ந்து இந்த விவாதத்துக்கு தகவல்களாக அமையும் என்பது பல்லியின் கருத்து,

    //இங்கே எமது குடுக்கல்வாங்கல் பற்றிய பிரச்னையை விட, //
    அது உங்கள் இருவரதும் தனிப்பட்ட பிரச்சனை, ஆனால் அதை சட்டமூலமோ அல்லது பேச்சுவார்த்தை மூலமோ முடித்திருந்தால்; ஆனால் இது கடத்தல் சம்பவம் அதில் ஒரு தன்னை காந்தியாக காட்டி திரிந்த ஒரு மனிதனின் மறுபக்கம் தெரிந்ததால் அவர்மீது விமர்சனங்கள் வருகிறது; அது ஒரு பக்கம் இருக்க இந்த கடத்தல் சம்பவம் இன்று அல்ல பல காலமாக ஈழதமிழரிடம் தமிழகத்தில் சர்வசாதாரணமாக நடக்கிறது இப்படி பணம் பறி கொடுத்தவர்கள் பலர்; யாருமே சட்டத்தை நாடவோ அல்லது ஊடகங்களை நாடவோ விரும்புவதில்லை; ஒன்று சட்டம் ஈழதமிழருக்காய் எப்போதும் இருக்காது; அதையும் விட எம்மவர் பணங்கள் தவறான பாதையில் தமிழகத்துக்கு வருவதும்(உண்டியல்) ஆகவேதான் தாங்கள் ஒரு உலகம் அறிந்த ஊடகவியாளன் இதை வெளிகொண்டு வரும்போது கடந்த காலங்களில் நடந்த சில விடயங்களும் வெளியில் வரும்; அத்துடன் நாவலன் போன்றவர்களும் அம்பலமாவார்கள் என்பதும் உன்மைதானே,

    //அதைவிட அவர் எனக்காக பணியாற்றிக்கொண்டிருந்த 18 மாதங்களில் 55 லட்சம் ரூபாவை அவருக்கு அனுப்பியதை உறுதிசெய்கின்றார். //
    அவர் என்ன பணியாற்றினார்?? அவர் அங்கு செய்த வேலைகளுக்கு உங்களுக்கு பற்றுசீட்டு ஏதும் கொடுத்தாரா?? அவருக்கு தாங்கள் அனுப்பிய பணம் வங்கியாலா அல்லது??

    //அந்த நேரத்தில்தான் சபா நாவலன் என்னிடம் அவர்கள் கேட்பதைக் கொடுத்து தப்பிக்கப்பாருங்கள் என்கிறார். //
    இந்த கடத்தலுக்கு முன்பு தங்களுடன் நாவலன் இந்த கொடுக்கல்வாங்கல் பற்றி பேசியதுண்டா?? உங்கள் துணைவியாருடன் நாவலன் உங்கள் அனுமதியுடன் பேசினாரா? அல்லது உங்கள் மனைவிதான் நாவலனிடம் உதவி கேட்டாரா??

    //அப்படியிருக்கும்போது ஒருவரின் தொலைபேசி உரையாடலை பதிவுசெய்தது தவறு. அதைவிட தவறானது அதனை பகிரங்கமாக ஒரு இணையத்தளத்தில் பதிவுசெய்தது. இந்த அத்துமீறலுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க புறப்பட்டால் //
    உன்மைதான் ஆனால் தாங்கள் சட்டத்தை நாட விரும்பவில்லை போல் உள்ளதே, அதுக்கான காரணம்?? இது இந்த தொல்லைபேசி மிரட்டல்காரருக்கு ஒரு பாடமாக அமையும் அல்லவா??

    //ரிஆர்ரி யிலிருந்து வெளியேறிய கதையையும் ஒவ்வொருவரும் தத்தமது கற்பனைகளுடன் எழுதிக் கொண்டிருக்கின்றனர்.//
    இதிலும் பல்லி சில விடயங்கள் எழுதியுள்ளேன், அவை தாங்களும் சந்திரனும்(குமார்சோப்) கருத்து முரன்பட்ட போது அதுக்கென ஒரு நிகழ்ச்சி செய்தீர்கள் அதில் உங்கள் சம்பளம் உட்பட பலதை சொன்னீர்கள். அதோடு உங்கள் அறிவிப்பாளர்கள் உட்பட மக்கள் தொடர்பாளர்கள் தொழில் நுட்பாளர்கள் என பலருடன் பல்லிக்கு பளக்கம் உண்டு, ஆகவே தாங்கள் அனைத்தையும் கற்பனை என சொல்லுவது சரியல்ல,

    //இனியும் இதனை தொடர்ந்துகொண்டிருப்பது அவசியம்தானா என்று இங்கே பின்னூட்டம் விடுபவர்கள் ஒவ்வொருவரும் சிந்தியுங்கள்.
    இனியும் அவசியம் என்றால் தாராளமாக எழுதிக்கொண்டே இருங்கள்…//
    கண்டிப்பாக இந்த கடத்தல் விடயம் எழுதியே ஆக வேண்டும்; இல்லையேல் இது பலபேரை தமிழக எழிலர்கள் சில நாவலர்களுடன் துணை சேர்ந்து தொடர்வார்கள்? ஆகவே தாங்களும் ஒரு ஊடகவியாளன் அதுவும் அனுபவம் வாய்ந்த ஒருவர் என்பதால் இதில் இருந்து பின் வாங்குவது சரிதானா என சிந்தியுங்கள்?
    தொடரும் பல்லி

    Reply
  • நிதிஷ்
    நிதிஷ்

    பலநூறு யூரோக்கள் முதலிட்டு தொலைக்காட்சி தொடங்கவேண்டிய நிலையில் இருந்த நான் ஒரு பத்தாயிரம் ரூபா சம்பளத்திற்கு வேலை செய்துகொண்டிருந்த அருட்செழியனிடம் உதவி கேட்டேன், அவர் நான் தற்கொலை செய்யும் நிலையை தீர்த்துவைத்தார் என்றால் அதனை எப்படி சொல்வது என்று தெரியவில்லை//.
    குகநாதன் நீர் 2002ல் சென்னைக்கு வந்தபோது உமது ஹோட்டல் பில்களை அருள்செழியன் தான் தான் கட்டினேன் என்கிறாரே..? அதற்கு என்ன சொல்கிறீர்? பத்தாயிரம் ரூபா சம்பளத்திற்கு வேலை செய்துகொண்டிருந்த அருட்செழியன் உமது ஹோட்டல் பில்களை ஏன் கட்ட வேண்டும்?
    அருள்செழியன் உமது குடும்பதிற்கு செய்த உதவிகளுக்கு நன்றி தெரிவித்து உமது மாமியார் 2004ல் எழுதிய கடிதத்தை இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறாராம். அவர் அப்படி என்ன உதவி செய்தார்?
    நான் அருள் செழியனிடம் உமது பின்னூட்டத்துக்கு விளக்கம் கேட்டேன் அவர் எல்லாம் என் FIR622/05 புத்தகத்தில் வரும் என்கிறார். அதில் எல்லாவற்றிற்கும் பதில் இருக்கிறார். குகனாதன் நீங்கள் தன்னை ஏமாற்ரிவிட்டதாக ராஜ் டிவி ராஜேந்த்திரன் பலரிடமும் சொல்லி வருகிறாரே, ஜெயா டிவி ரெங்கனாதன் உமது பிரதிநிதியாக வந்த ஒருவரிடம் ’குகநாதன் ஒரு ஃப்ராட் அந்தாளுடன் இனி டீலிங் வேண்டாம்’ என்று சொன்னது உமக்கு சொல்லப்பட்டதா. குலாம் உசேன் என்பவர் தன்னையும் குகநாதன் பத்து லட்சம் ஏமாற்றியதாக கூறி வருகிறாரே இது உமக்கு தெரியுமா?
    அருள்செழியன் மற்றும் சென்னை போலிஸ் மீது இப்போது கூட நீர் நினைத்தால் வெளிநாட்டிலிருந்தபடியே சென்னை உய்ர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாமே,
    குற்றம் நிருபிக்கப்பட்டாலோ வழக்கு தொடர்ந்தாலோ சர்ச்சைகள் வருமே? ஏன் நீங்கள் அதை செயவில்லை. அருள் சகோதரர்களை ஏதோ அம்பானி சொகோதரர்கர், ரெட்டி சகோதரர்கள் ரேஞ்சுக்கு உயர்த்தி காமடி பண்னுவதை விடுங்ள்.

    நான் கேள்விபட்டவரையில் உம்மை கைது செய்த கதை ரெம்ப சுவையாக இருக்கிறது.அதை மறக்க இந்த விவகாரத்தில் கனிமொழி, பாதிரியார் கஸ்பர், வைகோ. நெடுமாறன் என்று எல்லோரைய்ம் இதில் சம்மந்தப் படுத்த வேண்டாம்.
    குகநாதனுக்காக எந்த அழுத்தமும் எங்கிருந்தும் வந்ததாக தெரியவில்லை. காரணம் அவர் மேல் எவருக்கும் நம்பிக்கை இல்லை அதனால் அவரை நம்பி அவருக்காக பேச எவருக்கும் முன் வரவில்லை. குகநாதன் சென்னை போலிசில் பிடிபட்டிருப்பது தெரிந்திருந்தால் பலரும் அவர் மேல் வழக்குகள் கொடுக்க தயாராக இருந்தனர்.உண்மையில் அவர்கள்தான் அன்று ஏமாற்றப்பட்டார்கள்.

    குகநாதன் வந்தால் பிடித்து தருகிரேன் என்று சொல்லிக்கொண்டிருந்த அருள்செழியன் தன் பணத்தை மட்டும் மீட்டுக்கொண்டதும் திருவண்ணமலை சுனில் ராஜ் டிவி ராஜேந்திரன் உட்பட பலருக்கும் அல்வா கொடுத்து விட்டார். குகநாதன் வெளிப்படையாக சென்னைக்கு வந்து தனக்கு நேர்ந்த கொடுமையை பத்திரிகையாளர்களை சந்தித்து சொல்ல வேண்டும். (அப்படி வந்தால் வேறு வழக்குகள் பாயும் என்ற பயம் இருந்தால். நேர்மையானவரென்றால் பயம் எதற்கு! ) வெளிநாட்டிலிருதே கூட சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கை தொடரலாம். அதற்கெல்லாம்கு நேர்மை வேண்டும் அது அவரிடம் இருக்கிறதா? அதை விட்டுவிட்டு ஊரையெல்லாம் ஏமாற்றிக்கொண்டு பதுங்கித்திரியும் இந்த நபர் தன்னை மோசடிக்காரன் என்று பாதிக்கப்பட்டவர்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இந்த பின்னூட்டத்தை போட்டால் விரைவில் புலம் பெயர் நாடுகளிலும் இந்தியாவிலும் குகநாதனால் ஏமாற்றப்பட்டவர்களின் பட்டியலையும் அவர்களின் கைச்சாத்திட்ட கடிதங்களையும் தேசத்துக்கு அனுப்பித் தருகிறேன்.
    குகநாதன் எப்பேற்பட்ட ஆளென்று சர்தாரை கேட்டாலே சொல்வாரே. குகநாதனை யோக்கியனாக காட்டி தேசம் ஜெயபாலன் தன்னை நாற்றிக்கொள்ள வேண்டாம்

    Reply
  • palli
    palli

    //குகநாதனை யோக்கியனாக காட்டி தேசம் ஜெயபாலன் தன்னை நாற்றிக்கொள்ள வேண்டாம்//

    அது எங்கள் நோக்கமல்ல தமிழக கடத்தல் அதுவும் ஈழதமிழர் கடத்தல் என்பது ஒரு சாதாரனமான விடயம் போல் உள்ளது, அதுக்கான கண்டனமே இங்கு தேசத்தில் போகிறது, குகநாதனை பற்றி எமக்கு தெரியாது அவர் இந்த விடயத்தை விட்டாலும் விடுவார் ஆனால் நாம் விடுவதாயில்லை, கண்டிப்பாக இந்த கடத்தல் கச்சேரி தமிழகத்தில் ஊடகங்களுக்கு தீனிபோடும் நாள் தூரமில்லை; இப்போ எல்லாம் பெரிய இடத்து சமாசாரம் என்றால் ஊடகங்கள் சக்கை போடு போடுவது கூடவா நிதிஸ்க்கு தெரியாது?

    Reply
  • muththu
    muththu

    குகநாதன் ஏதோ யோக்கியன் மாதிரி மாதிரி தன் மீது கழிவிரக்கம் வரும்படி எழுதுகிறார். தேசம் நெட்டும் சைக்கிள் கேப்பில் தன் ஹிட்ஸ்களை ஏற்றிக் கொள்கிறது. கிடக்கட்டும். குகநாதன் நேர்மையானவர் என்றால் சென்னைக்கு வந்து வெளிப்படையாக பத்திரிகையாளர்களை சந்தித்து தனக்கு அருள் சகோதரர்களால் நேர்ந்த கட்டப்பஞ்சாயத்தை வெளிப்படையாகக் கூற வேண்டியதுதானே?.. ஒரு உண்மையை எல்லோருக்கும் சொல்கிறேன் விசாரித்த வரை குகநாதனுக்காக எவருமே வரவில்லை. ஏதோ கருணாநிதி ரேஞ்சுக்கு அவருக்காக பேசியதாக பில்டப் செய்கிரீர்களே? யார் பேசினார்கள் அதையும் சொல்ல வேண்டியதுதானே? யோக்கியன் குகநாதன் என்றால் அருள் சகோதரர்கள் மீது வழக்குத் தொடரலாமே? தமிழ்நாட்டில் சென்னையில் குகநாதன் மீது அருள் சகோதரர்கள் தொடர்ந்த வழக்கு மட்டும்தான் உள்ளதா? வேறு வழக்குகளே கிடையாதா? ஊரை ஏமாற்றி விட்டு எதற்கு இந்த நாடகம்.

    குகநாதன் சூழலைப் பயன்படுத்தி சில பொய்களை தன் மீது இரக்கம் வருகிற தொனியில் கூறுகிறார். ஜெயா டிவிக்கு குகநாதன் பணமே கொடுக்க வேண்டியதில்லையா? தென்னிந்திய தயாரிப்பாளர் சங்கம் தமிழ் திரைப்படங்களை அனுமதியின்றி ஒளிபரப்பியது தொடர்பாக சென்னை குற்றப்பிரிவில் கொடுத்த புகாரில் இன்னமும் குகநாதன் தேடப்படும் குற்றவாளி என்பதை ஒத்துக் கொள்கிறீர்களா? உங்கள் பிரச்சனை முடிந்ததும் பத்திரமாக என்னை சென்னையிலிருந்து அனுப்பி விடுவீர்களா? என்று அருள் சகோதரர்களிடம் நீங்கள் கேட்கவில்லையா? ஏன் அப்படிக் கேட்க வேண்டும் சென்னையில் உங்களுக்கு அப்படி என்னதான் பிரச்சனை உண்மையைப் பேசிப் பழகுங்கள் குகநாதன். இன்னும் பல உண்மைகளை உடைக்க வேண்டியிருக்கிறது.

    அப்புறம் பல்லி என்ற பெயரில் தேசம் நெட் ஆட்கள் அருள் சகோதரர்கள் பற்றி எழுபியிருக்க்ம் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்லுங்கள் அது காலத்தில் கட்டாயம். அப்போதுதான் நாங்களும் விசாரித்து பல உண்மைகளை எழுத வசதியாக இருக்கும்.

    //கண்டிப்பாக இந்த கடத்தல் கச்சேரி தமிழகத்தில் ஊடகங்களுக்கு தீனிபோடும் நாள் தூரமில்லை; இப்போ எல்லாம் பெரிய இடத்து சமாசாரம் என்றால் ஊடகங்கள் சக்கை போடு போடுவது கூடவா நிதிஸ்க்கு தெரியாது?//பல்லி
    என்னஇது காமெடியா இருக்கு……தமிழக ஊடகங்களின் நியூஸ் வேல்யூ…..தெரியாமல் கதைக்கிறீர்கள்.

    Reply
  • நிதிஷ்
    நிதிஷ்

    பல்லி கருத்து சரிதான் அதற்கான ஏற்பாடுகளை விரைவில் செய்தால் உண்மைகள் விரைவில் வெளிவருமே. அதைத்தான் நானும் சொல்கிறேன். நன்றி

    Reply
  • சுதாங்கன்
    சுதாங்கன்

    /நான் கேள்விபட்டவரையில் உம்மை கைது செய்த கதை ரெம்ப சுவையாக இருக்கிறது.அதை மறக்க இந்த விவகாரத்தில் கனிமொழி, பாதிரியார் கஸ்பர், வைகோ. நெடுமாறன் என்று எல்லோரைய்ம் இதில் சம்மந்தப் படுத்த வேண்டாம்./–நிதிஷ்.
    அரசியல் இல்லை என்று ஒதுக்க முடியாது.

    /Tuesday, September 14, 201.
    தமிழகத்தில் ராஜபக்சேவின் வெள்ளை வேன்!. கொடுமைகளின் சின்னமாக இலங்கையில் இன்றும் இயக்கப்பட்டு வரும் வெள்ளை வேன்களை தமிழகத்திலும் ராஜபக்சே ஆதரவாளர்கள் ஈழத் தமிழர்களுக்கு எதிராக இயக்குகிறார்கள் என பயங்கலந்த இரகசிய குரலில் சொல்கிறார்கள் தமிழகத்தில் உள்ள ஈழத் தமிழர்கள். “”நாங்கள் இந்திய உளவுத்துறையின் ஆட்கள். நாங்கள் இலங்கை ராணுவத்துடன் தொடர்பில் இருக்கிறோம். அந்த உறவினர் பற்றிய விபரங்களை இலங்கை அரசுதான் எங்களுக்குத் தந்துள்ளது. உங்களை இலங்கைக்கு நாடு கடத்த சொல்லி இந்திய அரசு உத்தரவு போட்டுள்ளது” என தங்களது பில்ட்- அப்பை அதிகரித்தனர் வந்தவர்கள். பணத்தை பறி கொடுத்தவர்கள் போலீசில் புகார் கொடுத்தால் தமிழக போலீசாரால் வேறெதாவது தொல்லை வருமோ என அஞ்சும் இவர்களது வீக்னசை பயன்படுத்தி அவர்கள் மீது தாக்குதல் நடத்தும் இந்த வெள்ளை வேன்களின் தலை வனை நாங்கள் கண்டுபிடித்து விட்டோம் என்கிறார் விடுதலைச் சிறுத்தைகளின் கட்சி மாநில நிர்வாகிகளில் ஒருவரான வன்னியரசு. “”அவன் பெயர் ரஜினிகாந்த். இவனிடம் பணத்தை பறிகொடுத்த சிவபாலன் அடையாளம் காட்டினார். சாலிக்கிராமத்தில் ஒரு பெரிய ஃபேன்சி ஸ்டோரை நடத்துகிறான் ரஜினிகாந்த். சிவபாலனிடம் பணம் பறித்ததை ஒப்புக் கொண்டான்.

    இதுபோல கடந்த ஒரு வருடத்தில் 50 சம்பவங்களில் அவன் ஈடுபட்டிருக்கிறான். இந்திய அமைதிப்படை இலங்கைக்கு சென்றதை ஆதரித்த அமைப்பான ராஜன் தலைமையிலான ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி என்ற அமைப்பைச் சேர்ந்த இவனும் மோகன் என்பவனும் சேர்ந்து தான் ராஜபக்சே ஸ்டைலில் வெள்ளை வேன்களை தமிழகத்தில் இயக்குகிறார்கள்.-பிரகாஷ் – நன்றி : நக்கீரன்.

    /- தொல்.திருமாவளவனின் வெப்சைட். -http://www.thiruma.in/2010/09/blog-post_14.html#more
    இதில் “விடுதலைச் சிறுத்தைகள்” கட்சியை சார்ந்த வன்னியரசு(திருமா), தமிழீழ மக்கள் விடுதலைக்கழக திரு.ராஜன் மீது (டி.பி.சி.ராமராஜின் கட்சியை சேர்ந்தவர்) குற்றம் சுமத்தி சாட்சி சொல்லுகிறார்!. ஆனால் “வெள்ளை வேன்” கடத்தல் நடக்கும் தமிழக அரசாங்க ஆதரவாளராக இவர் இருக்கிறார், இவருக்கு தேவையான “வியாபார புலிகளை” மட்டும் விடுதலை சிறுத்தைகள் பாதுகாக்கிறதா?. இந்த “ரியல் எஸ்டேட் மாஃபியாக்கள்”, திரைப்பட(தொலைக்காட்சி) மாஃபியாக்களின் செயல்கள் அரசியல் திரிபுபடுகின்றன?. இதில் இலங்கை இராணுவம், வி.சி., கனிமொழி, கஸ்பார், இ.என்.டி.எல்.எஃப். போன்றவர்களின் ஆர்வங்கள் வெவ்வேறானவை!.

    …..அருள் சகோதரர்கள் கவிஞர் கனிமொழியையும், ஜெகத் கஸ்பாரையும் பாதுகாக்கும் “கத்தோலிக்க சிலுவைப் போர் வாதிகளா”?!.

    Reply
  • nila
    nila

    muththu on September 17, 2010 12:34 pm
    // குகநாதன் ஏதோ யோக்கியன் மாதிரி மாதிரி தன் மீது கழிவிரக்கம் வரும்படி எழுதுகிறார். தேசம் நெட்டும் சைக்கிள் கேப்பில் தன் ஹிட்ஸ்களை ஏற்றிக் கொள்கிறது. கிடக்கட்டும். குகநாதன் நேர்மையானவர் என்றால் சென்னைக்கு வந்து வெளிப்படையாக பத்திரிகையாளர்களை சந்தித்து தனக்கு அருள் சகோதரர்களால் நேர்ந்த கட்டப்பஞ்சாயத்தை வெளிப்படையாகக் கூற வேண்டியதுதானே//

    முத்து கற்பனைக் குதிரையை நன்றாக ஓடவிட்டிருக்கின்றாரோ அல்லது அருள் செழியனின் வீடியோவை ரயாவுக்கு அனுப்புவதற்கு பதிலாக முத்துவுக்கு அனுப்பிவிட்டாரோ தெரியவில்லை. குகநாதனுக்கு பைத்தியம் பிடிக்கவேண்டும் என்று பலர் விரும்புகின்றார்கள். இதற்குத் தான் முன்னர் புலிகளும் முயன்று குகநாதனை ஈழநாடு பத்திரிகை ரிஆர்ரி தொலைக்காட்சி என்று எல்லாவற்றையும் பறித்தெடுத்தார்கள்.அருள் சகோதரர்கள் சென்னை விமானநிலையத்திற்கு என்ன செக்குரிட்டி போக்குவரத்து சேவையா செய்கிறார்கள் குகநாதனை பத்திரமாக விமான நிலையம் அனுப்புவதற்கு. யாரையோ திட்டுவதற்கு யாருக்கு வரிந்து கட்டுகின்றீர்கள்

    முத்து சொன்னபடி குகநாதன் மீது கழிவிரக்கம் வந்தால் அருள் சகோதரர்களிடம் இழந்ததை யாராவது பெற்றுத் தரவா போகின்றார்கள். உங்கள் கற்பனையை உலாவிட காசா தேவை. நன்றாக கற்பனையில் எழுதுங்கள் என்று களம்கள் பல உண்டு . எழுதுங்கள் …..பல்லியை வேறு தேசம் நெற் என்று கண்டு பிடித்த தங்கள் கண்டுபிடிப்பும் பாராட்டத்தக்கதே. பல்லியின் பல்வேறுபட்ட பின்னூட்டங்களை தேசத்தில் படித்த பின்னரும் இப்படியொரு கண்டுபிடிப்புக்கு ஒரு சபாஷ் போடத்தான் வேண்டும்.

    Reply
  • kunaratam
    kunaratam

    பொலிஸ்கமிசனரிடம் தன்னை அறிமுகம் செய்து வைத்தவர் சுதாங்கன் என்பவர் என்று அருள்செழியன் தமிழ்அரங்கத்தில் எழுதியுள்ளார்.அந்த சுதாங்கனும் இங்கு கருத்து எழுதியுள்ள சுதாங்கனும் ஒருவரா என அறிய ஆவலாக உள்ளேன்.அப்படியாயின் அவரிடம் நான் சில கேள்விகள் கேட்க விரும்புகிறேன்.
    ஜயா! தயவு செய்து இனிமேலாவது ஈழத்தமிழன் ரத்தத்தில் நீங்கள் வயிறு வளர்க்க விரும்பும் அற்ப புத்தியை விட்டுவிடுங்கள். பாவம் ஈழத்தமிழன். நன்கு நொந்துவிட்டான்.இனியாவது அவனைப் பிழைக்க விடுங்கள்.ஈழத்தமிழனுக்காக தன்னை எரித்தவன் முத்துக்குமார். அவன் போன்றவர்களால் நாம் தமிழ்நாட்டின் மீது வைத்திருக்கும் மதிப்பை உங்களைப் போன்றவர்களின் செயல்கள் குறைத்துவிடுமோ என அஞ்சுகிறோம்.

    இங்கு அருள் சகோதரருக்கு ஆதரவாக கருத்து எழுதுவோரிடம் மிகவும் தயவுடன் கேட்டுக்கொள்கிறேன்.உங்கள் அருள் சகோதரர் தவறு செய்யவில்லையாயின் ஏன் வீடியோவை வெளியிடாமல் இருக்கிறார்?அவரிடம் அதை பெற்று அனைவரும் பார்க்க வழி செய்யுங்கள். நாம் அதில் இருந்து யார் தவறு செய்தார்கள் என்பதை முடிவு செய்துகொள்கிறோம். அதை விடுத்து தேவையில்லாமல் பக்கம் பக்கமாக கருத்து எழுதுவதில் எந்தப்பயனும் இல்லை. ஏனெனில் ஈழத்தமிழர்கள் இப்போது விழிப்படைந்துவிட்டார்கள். இனி அவர்களை ஏமாற்றி அவர்கள் முதுகில் சவாரி செய்யலாம் என நினைக்கவேண்டாம்.

    Reply
  • Sudha
    Sudha

    பிரச்சினையை திசைதிருப்ப நிதிஷ் முயல்கிறார். குகநாதன் – அருள் சகோதரர்கள் இடையேயிருந்த கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் குகநாதன் பக்கமே தவறு இருந்தாலும் சட்ட விரோதமாகக் கடத்திக் காவலில் வைத்து கட்டப்பஞ்சாயத்து செய்து பணத்தைப் பெற்றுக்கொண்டதும் அதற்கு நாவலன் இடைத்தரகு செய்தார் என்பதும்தான் இங்கே விவாதிக்கப்படும் விசயம். ஒரு வியாபர நிறுவனத்தில் ஏற்பட்ட கொடுக்கல் வாங்கல் பிரச்சினையை கட்டப்பஞ்சாயத்தால் தீர்த்து வைப்பதா நேர்மையானது? அருள் சகோதரர்கள் அவ்வாறு செய்தது தவறு என்றுகூட இதுவரை நாவலன் சொல்லவில்லையே. நடுச்சாமம் குகநாதனின் மனைவியை எழுப்பி பேசவும் அதைப் பதிவு செய்யவும் தெரிந்த நாவலனுக்கு கட்டப்பஞ்சாயத்து நடத்திய அருள் சகோதரர்களை கண்டித்து ஒரு வார்த்தை சொல்ல தெரியவில்லையே. நேற்றும் கட்டப் பஞ்சாயத்துக்காரனின் கட்டுரையை போட்டிருக்கும் இனியொருவின் மெளனத்தின் பின்னணி என்ன?

    Reply
  • மாயா
    மாயா

    // உங்கள் பெயர்களை குறிப்பிட்டால் நீங்கள் செய்த மோசடிகளை நாங்கள் பின்னுட்டங்களாக பார்க்க முடிந்திருக்கும். அதற்காக நான் அனைவரையும் குறிப்பிடுகின்றேன் என்பதல்ல. அல்லது என்னால் மோசடிக்குள்ளானவர்கள் தங்கள் பெயர்களில் மோசடி பற்றி எழுதுங்கள். //

    குகநாதன், தங்களது ஈழநாடு பத்திரிகையிலும் , தமிழ் ஒலி வானோலியின் இரவு நேர நேயர் ஒலிபரப்புகளிலும் ( சுவிசு நேரம்) பலரை நடுத் தெருவுக்கு கொண்டு வந்து தூங்க விடாமல் பண்ணினீர்கள். இவர்களில் பலர் மேல் உங்களிடம் இருந்தது தனிப்பட்ட கோபங்கள். அவர்களுக்கு ஊடகம் ஒன்று இல்லாததால் அவர்களால் தமக்குள்ளும் , தமது நண்பர்களுக்குள்ளும் புலம்புவதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை. தொலைபேசியில் வராவிட்டால் நீங்களும் தர்சனும் , உங்கள் கலையகத்தில் உள்ளவர்களைக் கொண்டே நிகழ்ச்சியை தொடங்கி…….. முடித்தும் வைத்து ரசித்தீர்கள். தன் வினை தன்னைச் சுடும். எவரும் மறக்கலாகாது.

    // எனக்காக பணியாற்றிக்கொண்டிருந்த 18 மாதங்களில் 55 லட்சம் ரூபாவை அவருக்கு அனுப்பியதை உறுதிசெய்கின்றார். அப்படியெனில் அந்தப் பணத்தை வைத்து செலவிட்ட அவர் ஏன் தனது சம்பளத்தை அவ்வப்போது எடுக்கவில்லை என்பதையும் அவரிடம் கேட்பார் இல்லை.//
    சாதாரணமாக மாதம் 20 ஆயிரம் டொலர்களை , தமிழகத்தில் புரோம்களை வாங்க அனுப்ப வேண்டியுள்ளது. அதை அனுப்பாவிட்டால் சன் டீவீ புரோம்கிறாம்களை அனுப்பாது. அதனால் சில வேளைகளில் நிகழ்சிகள் தடைப்பட்டு பழைய நிகழ்சிகளையே போட வேண்டி வந்தது என நேயர்களுக்கு பதில் சொன்ன நீங்கள் , பின்னர் சண் தொலைக் காட்சி நிகழ்ச்சியான சக்தி நாடகத்தை கடைகளில் இருந்தும் பின்னர் எழிலன் போன்றோரது உதவியோடும் வாங்கியும் , களவாக ஒளிப்பதிவு செய்தும் போட்டீர்கள். நீங்கள் ஒப்பந்தமே செய்யாத பல நிகழ்ச்சிகளை களவாக போட்ட போதுதான் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என சண் குழுமம் உணர்ந்தது. நிகழ்சிகளை தராமல் விட்டனர். அதையும் வேறு விதமாக மழுப்பி நம்மவர் நிகழ்வுகளை கொண்டு வருவோம் என்று ஒரு கோசம் வைத்து மீண்டும் புலம் பெயர் தமிழரை ஏமாற்றினீர்கள். அப்படித்தானே? இதனடிப்படையில் பார்க்கும் போது அருள் எழிலன் அவரது சம்பளத்தை எடுத்திருக்க மாட்டார் என நானும் நினைக்றேன். கணக்காளர்கள் 1995 – 2002 வரையிலான அமெரிக்க டொலர் மதிப்பீடை ஒப்பீடு செய்து பார்க்கவும்……..?

    //என்னை இருபத்திநான்கு மணிநேரத்தில் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிசார் தவறினர் என்பதால் இது ஒரு சட்டபூர்வமான கடத்தல் என்று குறிப்பட்ட நான்இ பின்னர் நீதிமன்று சென்றால் நீண்டகாலம் இந்தியா தங்கவேண்டிவரும் என்பதாலேயே பணத்தைக் கொடுக்க முடிவெடுத்ததாக குறிப்பிட்டதையும் ஒருவர் முரண்பாடான தகவல் என்று பின்னூட்டம் விடுகின்றார். …. ன்னை 24 மணிநேரத்தில் நீதிமன்றில் ஆஜர்படுத்தவேண்டும் என்பது சட்டம். ஆனால் நான் நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்வதைத் தவிர்ப்பதற்காக பணம்தருவதாக கூறியதும் அவர்கள் 24 மணி நேரத்திற்கும் மேலாக பொலிஸ் நிலையத்தில் வைத்திருக்கின்றார்கள் என்றால் அங்கே சட்டம் எதுவும் பின்பற்றப்படவில்லை என்பதை இலகுவாகப் புரிந்துகொள்ளலாம்.//

    அடுத்தவருக்கு ஊடகங்கள் வழி அறிவுரை சொல்லும் நீங்கள் இங்கே நேர்மையாக நடந்து கொள்ளவில்லை. அதற்கு காரணம் நீங்கள் தவறிழைத்துள்ளதே? இது தவறாக இருந்திருந்தால் , நீங்கள் பிரெஞ்சு அரசுக்கு அறிவித்து இவர்களை ஒரு வழி பண்ணியிருக்கலாம். நீங்கள் பிரெஞ்சு குடியுரிமை கொண்டு , மூத்த , எல்லாம் தெரிந்த ஊடகவியளாளர். பத்திரிகை வானோலி தொலைக் காட்சி உரிமையாளர். உதாரணத்துக்கு புலிகளால் கடத்தப்பட்ட இலங்கையர்களே பிரித்தான்ய அரசு அழுத்தங்களால் விடுவிக்கப்பட்டமை நாம் அண்மைக் காலங்களில் பார்த்தவை. நீங்கள் ஒரு பயங்கரவாத அமைப்பிடம் சிக்கவில்லை. ஒரு அரச காவல் துறையிடமே சிக்கியிருந்தீர்கள்? அப்படி நீங்கள் நடக்காத பட்சத்தில் , தமிழக மாபியாக்கள் இனி எந்த ஒரு ஈழத் தமிழனையும் இது போல கடத்துவான்? இவை தொடர உங்களைப் போன்ற திமிங்கிலங்களே அஞ்சி சாகும் போது அப்பாவி மீன் குஞ்சுகள் எம்மாத்திரம்?

    // ஒருவரது தொலைபேசி உரையாடலையோ அல்லது ஒருவரை வீடியோவில் படம் பிடிப்பதற்போ அவரின் அனுமதியைப் பெறவேண்டும். சாதாரணமாக கடைகளில் திருடர்களைப் பிடிப்பதற்கு வைக்கப்பட்டிருக்கும் கமராக்களை கூடஇ அப்படி கமராக்கள் வைக்கப்பட்டிருக்கின்றது என்பதை கடைக்கு முன்னால் அறிவித்துவிட்டுத்தான் கமராவில் படம் பிடிக்கலாம். அப்படியிருக்கும்போது ஒருவரின் தொலைபேசி உரையாடலை பதிவுசெய்தது தவறு. அதைவிட தவறானது அதனை பகிரங்கமாக ஒரு இணையத்தளத்தில் பதிவுசெய்தது. இந்த அத்துமீறலுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க புறப்பட்டால் அருட்செழியனிடம் இழந்ததை விட அதிகம் பெற்றுவிடலாம். ஆனால் அதற்காக நீதிமன்றம்இ சட்டத்தரணி என்று பணத்தை இப்போது செலவிடும் நிலையில் நாம் இல்லை.//

    இது போன்ற நிகழ்வுகள் உங்கள் ஊடகங்களில் எத்தனை முறை நடநதேறியுள்ளது. கணக்கு சொல்ல முடியாது? அதை பலரும் அறிவர். இப்போது வலிக்கிறதா? இதுபோல எத்தனை பேரை நோகடித்திருப்பீர்கள்? அதை பேச வந்த எத்தனை தொலைபேசி அழைப்புகளை நிறுத்தி , தொலைபேசி துண்டிக்கப்பட்டு விட்டது என பொய்யுரைத்திருப்பீர்கள்?இது போன்ற நிகழ்வுகள் உங்கள் ஊடகங்களில் எத்தனை முறை நடநதேறியுள்ளது. கணக்கு சொல்ல முடியாது? அதை பலரும் அறிவர். இப்போது வலிக்கிறதா? அதை எத்தனை பேர்

    // அந்த முன்னூறு பேரையும் நஷ்டமடையவைத்தேன் என்பதை மறுக்கவில்லை. அது நான் தெரிந்துகொண்டு செய்த மோசடி அல்ல. அவ்வாறு ஒவ்வொரு மாதமும் குறைந்தது 300 பேராவது புதிதுபுதிதாக சேருவார்கள் என்று நம்பி தொடங்கினோம். நடக்கவில்லை. இப்படி ஒவ்வொன்றாக சொல்லிக்கொண்டே போகலாம்.//

    தொடர்ந்தும் அதே தவறை எத்தனை முறை செய்தீர்கள்?

    Reply
  • palli
    palli

    // பாவம் ஈழத்தமிழன். நன்கு நொந்துவிட்டான். இனியாவது அவனைப் பிழைக்க விடுங்கள்//
    இதை சத்தம் போட்டு சொல்லுங்கள் யார் என்ன சொல்லுகிறார்கள் பார்க்கலாம்; குனரத்தினம் பல்லி உங்களுடன் இறுதிவரை வருவேன்;
    //நடுச்சாமம் குகநாதனின் மனைவியை எழுப்பி பேசவும் அதைப் பதிவு செய்யவும் தெரிந்த நாவலனுக்கு கட்டப்பஞ்சாயத்து நடத்திய அருள் சகோதரர்களை கண்டித்து ஒரு வார்த்தை சொல்ல தெரியவில்லையே.// sudha
    இதுவே இன்று பிரச்சனை குடுக்கல் வாங்கல் அல்ல;

    Reply
  • குமாரசுவாமி
    குமாரசுவாமி

    /அப்படியா?? என்னால் ஸ்ராலினில் இருந்து பன்னீர்செல்வம் வரை பேசமுடியும் என்பதை வரும்காலத்தில் நிருபிக்கிறேன், அது முடியாத பட்சத்தில் பல்லி மரணித்து விட்டதாகவே எண்ணுங்கள்? நானும் சிலகாலமாவது உருத்திரனுடன் தமிழகத்தில் இருந்தேன் என்பதை வெட்கத்துடன் இங்கு பதிவு செய்கிறேன்;
    /– palli on September 15, 2010 9:37 pm.
    “பல்லியின் சொல்லுக்கு நிச்சயம் பலனுண்டு,இதை பகுத்தறிவாளர் மறுப்பார்..” என்று ஒரு தி.மு.க. பிரச்சாரப்பாடல் உண்டு!. இதை எழுதியவர் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் அல்ல, அவரைப் போன்ற ஒருவர்!. இது தமிழர்களின் வாழ்வியலை மேம்படுத்த ஆரம்பகால தொண்டர்கள் எழுதிய வரிகள், “தனிப்பட்டவர்களின் பிழைப்புக்காக” எழுதப்பட்டது அல்ல. தமிழகத்தின் துணை முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தன்னுடைய கருத்துக்களை ஆமோதிப்பதாக “பல்லி” ஆரூடம் கூறுகிறார்.
    தமிழர்களின் “நல் வாழ்வியலை”, தங்களுடைய தனிப்பட்ட “பிழைப்புகளுக்காக” யார் சிதைத்து அழித்தார்கள், அழித்துக் கொண்டிருக்கிறார்கள் ,இரண்டாம் முள்ளியவாய்க்காலாக, யார் அழிக்கப் போகிறார்கள் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இதில் எந்தப்பக்கத்தை ஆமோதிக்கிறார் என்பது இன்னும் சிறிது காலத்தில் தெரிந்துவிடும்!.

    Reply
  • palli
    palli

    //தமிழகத்தின் துணை முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தன்னுடைய கருத்துக்களை ஆமோதிப்பதாக “பல்லி” ஆரூடம் கூறுகிறார்//
    கருத்தை வைத்துதான் ஒருவரை சந்திக்க வேண்டுமா?? அதையும் விட என்னாலும் பேசமுடியும் எனதானே சொன்னேன், அண்ணே குமாரசாமி ஸ்ராலினுக்கு சாராய கடை முதலாளிகூட நண்பர் தெரியுமோ; அப்படியானால் சாராயகடை முதலாளி பல்லிக்கு நட்பா என அடுத்த கேள்வி வரகூடாது,

    //பல்லியின் சொல்லுக்கு நிச்சயம் பலனுண்டு,இதை பகுத்தறிவாளர் மறுப்பார்..”//
    இது எனக்கு தெரியாது தெரிந்திருந்தால் என் பெயரை கில்லியாக வைத்திருக்கலாம்,

    //என்னைது காமெடியா இருக்கு……தமிழக ஊடகங்களின் நியூஸ் வேல்யூ…..தெரியாமல் கதைக்கிறீர்கள்.//muththu

    மூன்றெழுத்து நடிகர் இரு படத்தில் நடித்த நாயகியுடன் காரிலே வலம் வருவதால் அரசபெயரை கொண்ட இயக்குணருக்கு வருத்தமாம்; அல்லது சாமியார் பிரச்சனை தலையங்கமாக வரும் பேப்பரில் ஒரு மூலயில் கொங்கு காச்சலில் 40பேர் மரணம் என்னும் விழிப்பு செய்தி சின்னதாய் அலங்கரிக்கும் இதுதானே உங்கள் செய்தி;
    தொடரும் பல்லி;

    Reply
  • palli
    palli

    // பல்லி என்ற பெயரில் தேசம் நெட் ஆட்கள் //muththu
    இது ஒரு சரியான வாதம் அல்ல; பல்லியை பல்லியாகவே பாருங்கள். தேசம்நெற்றை பொறுத்த மட்டில் பல்லி ஒரு வாசகன், சில பின்னோட்டமும் எழுதுகிறேன் அம்முட்டுதான், தேசம் சார்பாய் எழுத பல கல்வியாளர்கள் தேசம் நிர்வாகத்தில் உள்ளனர்; தேசம் சார்பாய் பல்லி எழுத இன்னும் காலம் தேவை;ஆனால் இன்றுவரை அப்படி இல்லை; பல்லி பல்லியாகவே இருக்கிறேன், தயவுசெய்து தேச நிர்வாகத்தில் பல்லியை இனைக்கும் இப்படியான எழுத்து வரவேற்க்கதக்கதல்ல;
    பல்லி எழுதும் சரி தவறு அனைத்துக்கும் இந்த பல்லியே பொறுப்பு தேசம் அல்ல என்பதனை பல்லியாய் தெரிவித்து கொள்கிறேன்,
    உன்மையுடன் பல்லி;

    Reply
  • Sudha
    Sudha

    அருள் சகோதரர்கள் செய்தது சரியா? சரி என்கின்றது இனியொரு. இதில் புதிய திசைகள் நிலை என்ன?

    அரசியல் ரீதியாக நீர்த்து போகச் செய்ய பல தில்லுமுல்லுகள். திசை திருப்பல்கள். மக்களின் அவலத்தை பார் என்கின்றனர். குகநாதன் பற்றிக் கதை சொல்லுகின்றனர். முதலில் இதில் இரயாகரன் பற்றி சொன்னவர்கள் தான், இப்போது இப்படிக் கூறுகின்றனர்.

    இதன் மூலம் புதிதாகச் சொல்லும் அரசியல் உள்ளடக்கம் என்ன? அருள் சகோதரர்கள் செய்தது சரி என்பதே. இதனால் நாவலன்-அசோக் ஈடுபட்டதும் சரியாகிவிடுகின்றது. இதை மூடிமறைக்க, முடிவற்ற திசைதிருப்பல்கள். இதில் சம்பந்தப்பட்டவர்கள் முதல் அரசியல் பச்சோந்திகள் வரை இந்த விடையத்தை அமுக்கிவிட முனைகின்றனர்.

    இதுவா இன்று நாட்டில் பிரச்சனை என்கின்றனர்? ஏகாதிபத்திய தலையீடு முதல் தமிழ் மக்களின் அன்றாட அவலங்கள் வரை நிறைந்து போன பொதுச் சூழலில், அதைப் பற்றி கதையுங்கள் என்கின்றனர். அவற்றைவிடுத்து இதைப்பற்றி கதைக்கத் தேவையில்லை என்கின்றனர். இதனால் இது மிக முக்கியமான அரசியல் விடையமாகின்றது. இதன் மூலம் அவர்கள் என்ன சொல்ல விரும்புகின்றனர். தங்கள் அரசியல் அசிங்கங்களை மக்கள் முன் மூடிமறைத்து, மக்களை தம்முடன் அரசியல் விபச்சாரம் செய்யக் கூப்பிடுகின்றனர். மக்கள் மேல் அக்கறை இருந்தால், இதை விமர்சனம் சுயவிமர்சனம் செய்து இதை முடிவுக்கு கொண்டுவந்திருப்பார்கள். இதை அவர்கள் தவறு இல்லை என்பதால், நாம் தொடர்ந்தும் இதை அம்பலப்படுத்த வேண்டி ஏற்படுகின்றது.

    முதலில் இரயா-நாவலன் தனிப்பட்ட பிரச்சனை என்றவர்கள், தனிநபர் தவறுகளை தூக்கி விமர்சிப்பதாக கூறியவர்கள், இதை அரசியல் நீக்கம் செய்ய முனைகின்றனர். இதைக் கண்டு கொள்ளாது இருக்கும், சூழச்சியான அரசியல் திசை திருப்பல்களை செய்ய முனைகின்றனர்.

    இதில் ஒன்று குகநாதன் பற்றிய குறிப்பாக்கி, அதைப் பேச முற்படுகின்றனர். குகநாதன் பணத்தை ஏமாற்றினார் என்று மூச்சிரைக்கக் கூறும் இந்தக் கட்டைப்பஞ்சாயத்து செய்த மார்க்சிய கனவான்கள், புலிகள் அதில் பெரும் பகுதியை அபகரித்ததை வசதியாக மறந்து மறைத்துவிடுகின்றனர். எந்தத் தேசியத்தின் பெயரால் அருள் சகோதரர்கள் இந்தக் கடத்தல் கட்டைப் பஞ்சாயத்தை நடத்தினரோ, அதே தேசியத்தின் பெயரால் புலிகள் குகநாதனை மொட்டை அடித்தனர். இதனால் பணத்தை இழந்தவர்கள் பலர். இதற்கு உடந்தையாக இருந்தவர் குகநாதன் மட்டுமல்ல, நீங்களும் தான். நீங்கள் இல்லாத குகநாதனா?

    இப்படி இருக்க உங்கள் தமிழ் தேசிய அரசியல், புலித் தேசியம் போல் நீங்கள் சம்பாதிப்பதை அடிப்படையாக கொண்டது. இது எந்தக் கேள்விக்கும் அப்பாற்பட்டதாக இருந்தது. இதை முதல் நாம் எழுதிய போது, நாவலன் மார்க்சியம் பேசியபடி இதில் ஈடுபட்டதை மட்டும் மையப்படுத்தி குறிபாக்கினோம். இது நாவலன் பேசும் அரசியல் ரீதியாக தவறானது என்ற அடிப்படையில், நாம் இதை முன்வைத்தோம். இதை இரயாகரனின் தனிப்பட்ட தாக்குதல் என்றும், இதில் தான் தலையிடவில்லை என்றும் பல சுயமுரண்பாடுகளுடன் நாவலன் மறுத்தார். பொதுவில் இதை அரசியலுக்கு அப்பாற்பட்ட தனிப்பட்ட நாவலன் இரயாகரன் விவகாரமாக காட்டி தாக்குதலை நடத்தினர்.

    பல சுயமுரண்பாடுகளுடன் நாவலன் இதில் தான் தலையிடவில்லை என்று கூறியபோது, இதில் ஈடுபடுவது அரசியல் ரீதியாக தவறானது என்ற அடிப்படையில் தான் நாவலன் இதைக் கூறுகின்றார் என்று நாம் நம்பினோம். ஆனால் தேசம்நெற் இதில் தலையிட்டவுடன், அரசியல் ரீதியாக தவறு அற்றது என்ற அவர்கள் நிலையை அம்பலமாக்கியது. தேசம்நெற் தலையிட்டவுடன் இது இரயாகரனின் தனிப்பட்ட தாக்குதல் என்று கூறியும், இரயா-நாவலன் பிரச்சனை என்ற திசைதிருப்பிய கூத்து அரசியல் ரீதியாகவும் அம்பலமாகிப் போனது.

    இந்த நிலையில் இதில் அருள் சகோதரர்கள் ஈடுபட்டது சரி என்ற நிலைக்கு, இனியொரு தன் நிலையை அரசியல் ரீதியாக முன்னனெடுத்துள்ளது அம்பலமானது.

    இந்த வகையில் இந்த விவகாரத்தில்

    1. இதில் ஈடுபட்ட நாவலன் உள்ளிட்ட இனியொரு தன் தவறை ஏற்றுக்கொள்ளவில்லை.

    2. நாவலன் இது தவறான நடவடிக்கை என்று கருதினால், அதை விமர்சனம் செய்து அதை ஏற்றுக்கொள்ள மறுத்தால் அருள் சகோதரர்களை இனியொருவில் இருந்து வெளியேற்றி இருக்க வேண்டும். இதவும் நடக்கவில்லை.

    3. இவை எதையும் செய்யாத நாவலனை உறுப்பினராகக் கொண்ட புதிய திசைகள், அவரை வெளியேற்றி தங்கள் நிலைப்பாட்டை தெளிவாக்கியிருக்க வேண்டும்.

    இவை அனைத்தும் இந்த நடத்தைகளை அரசியல் ரீதியாக நியாயப்படுத்துகின்றது, அதை பாதுகாக்கின்றது. இந்த வகையில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது.

    ஏன்?

    நாளை சமூகத்தை வழிநடத்தப் போவதாக கூறும் இவர்கள் பற்றியது இது. இதில் இவர்களின் நிலைப்பாடு தவறாக இருந்தால், எதிர்காலத்தில் மக்களை வழிநடத்த இவர்கள் எந்தத் தகுதியுமற்றவர்கள். இன்று எம் மக்கள் சந்திக்கின்ற விடையங்கள் பற்றி பேசும் இவர்கள், நாளை எம் மக்களை வழிநடத்துபவர்கள். ஆனால் என்ன தான் நடக்கும்? கடந்தகால இயக்கங்கள் போல், மனித விரோதக் கும்பலாக இருப்பார்கள். கடந்தகால இயக்கங்கள் மக்களின் பொதுவான துயரங்கள் முதல் மார்க்சியம் வரை பேசித்தான், எம் இனத்தை அழித்தனர். இது முடிந்து போன, எம் கண் முன் நடந்த வரலாறு. அங்கு தலைமைக்குள் இதுபோல் இருந்ததை மூடிமறைத்தனர். அரசியல் நீக்கம் செய்தனர். அதை வெறும் தனிமனித முரண்பாடாக, தனிமனித குறைபாடாக காட்டினர். இதை பேசத் தேவையில்லாத விடையங்களாக காட்டினர். பொது முரண்பாட்டின் மேல், இந்த இயக்க வக்கிரங்களை எல்லாம் மூடிமறைத்தனர். விளைவு பொது முரண்பாட்டின் மேல், சமூகவிரோத கும்பலாகவே தலைமை வளர்ந்து மக்களை ஒடுக்கியது. இது இரத்தம் சிந்திய வரலாறு.

    இன்று அசோக் நாவலன் – அருள் சகோதரர் போன்றோர், இதில் எந்த தவறுமில்லை என்கின்றனர். யாரும் சுயவிமர்சனம் செய்யத் தேவையில்லை என்கின்றனர். அவர்கள் இந்த அரசியல் நிலைப்பாடு மூலம், பொது முரண்பாட்டின் மீதான அவர்களின் அரசியல் செயல்பாடு என்பது கடந்தகால இயக்க அரசியல் போல் மக்களுக்கு எதிரானது. தனிப்பட்ட நபர்களின் குறைபாடு, முரண்பாடு, இது அரசியலல்ல என்ற காட்டுகின்ற பித்தலாட்டம் கூட மக்களுக்கு எதிரானது.

    இதை இப்படி திசைதிருப்ப முடியாது. பொது எதிரிக்கு எதிராக நிற்பதாக காட்டுவது, இதை மூடிமறைக்க அவசரமாக அவைகளை வலிந்து எழுதிக் காட்டுவது கடைந்தெடுத்த பொறுக்கித்தனம். இது பொறுக்கித்தனத்துக்கு மாமா வேலை செய்வது.

    இதைச் செய்தபடி குகநாதனை மாபெரும் மோசடிக்காரனாகக் காட்டுவதன் மூலம், தங்கள் செயலை நியாயப்படுத்த முனைகின்றனர். சரி நீங்கள் சொல்வது போல் குகநாதன் மோசடிக்காரனாக இருக்கட்டும். அருள்செழியனுக்கு ஒரு கோடி ஏமாற்றியதாக இருக்கட்டும். அதுவல்ல, இங்கு விவாதம். விவாதம் என்ன?

    1. இப்படி ஈடுபடுவது சரியாதா?

    2. இந்த வழிமுறையை மார்க்சியம் ஏற்றுக் கொள்கின்றதா?

    3. இதில் ஈடுபட்டவர்கள் பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன? உங்கள் சகாக்கள் பற்றிய உங்கள் நிலைப்பாடு என்ன?

    4. நீங்கள் இதற்கு எதிராக என்ன செய்தீர்கள், என்ன நிலைப்பாட்டை நேர்மையாக முன்வைத்துள்ளீர்கள்?

    இது இன்றைய பொது அரசியலுக்கு என்ன செய்யும் என்பதல்ல விவாதம். அது உங்கள் முடிச்சு மாறித்தனம். இதுவும் ஒரு அரசியல்தான். எந்த மக்களை அரசியல் விழிபுணர்வு ஊட்டுவதாக கூறிக்கொண்டு, எதை தங்கள் சுயநலத்துடன் செய்கின்றனரோ அதைப் பற்றிய அரசியல் இது. மக்களை இதில் இருந்து விழிப்புற வைக்காதவரை, முன்னைநாள் மக்கள் விரோத இயக்கத்தலைவர்கள், பிரபாகரன் போன்ற மக்கள் விரோதிகள் தோன்றுவதற்கு இது காரணமாகிவிடும்.

    சம்பந்தப்பட்ட நபரான நாவலனை தங்களது அணியில் அடையாளப்படுத்தும் புதிய திசைகள் இவைபற்றி எதுவும் பேசாது மவுனித்திருப்பது சந்தர்ப்பவாதமாகும். இயக்கத்தலைமைகளின் தவறுகளை மூடிமறைத்த கடந்தகால அநுபவங்களிலிருந்து மீளவில்லை என்பதையும் காட்டுகின்றது.

    பி.இரயாகரன்
    18.09.2010

    Reply
  • kuna
    kuna

    பின்னூட்டம் 100ஜ தொட்டுவிட்டது.ஆனால் சம்பந்தப்பட்டவர்களில் ஒருவர் கூட தமது தவறுகள் குறித்து வருத்தம் தெரிவிக்கவில்லை.எந்தளவு திமிர்த்தனம்? எந்தளவு அகங்காரம் இருந்தால் இவ்வாறு நடந்து கொள்வர் என்பதை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். இதுவே கடைசியாக இருக்கட்டும்.இனி இப்படி ஒரு நிகழ்வு நடக்கா வண்ணம் யாவரும் விழிப்படைய வேண்டும். இனியும் தமிழன் பெரால் தமிழன் தலையில் மிளகாய் அரைக்க நாம் அனுமதிக்க கூடாது.

    Reply
  • Sathasivam
    Sathasivam

    எல்லோருக்கும் இத்தாழ் அறியத்தருவது என்னவென்றால்

    நாவலன் பிழை அசோக் பிழை அருள் சகோதர்கள் பிழை.

    எல்லோரும் பிழை தான்.

    ஆனால் அருள் சகோதர்கள் குகநாதனிடம் இழந்த பணத்தினை மீட்க இந்த வழி தவிர வேறு வழி என்னதானுண்டு சொல்லுங்கள் பார்ப்போமே?

    Reply
  • Sudha
    Sudha

    //அருள் சகோதர்கள் குகநாதனிடம் இழந்த பணத்தினை மீட்க இந்த வழி தவிர வேறு வழி என்னதானுண்டு சொல்லுங்கள் பார்ப்போமே?// சதாசிவம்.

    குகநாதனிடம் அருள் சகோதரர்கள் பணம் இழந்தார்களா அல்லது அருள் சகோதரர்களிடம் குகநாதன் இழந்தாரா என்பதை முடிவு செய்யத்தானே நீதிமன்றம் உள்ளது. வழக்குகளும் நிலுவையிலுள்ளன. இப்படி ஆளாளுக்கு சட்டத்தைக் கையிலெடுத்து கட்டப்பஞ்சாயத்து நடத்தினால் நாடு என்னத்துக்கு ஆகும். பொலிஸ் சப்போர்ட் உள்ளவன் சொல்வதுதான் நீதியாகப் போய்விடும். இது சரியில்ல..சதாசிவம்.

    Reply
  • palli
    palli

    //அருள் சகோதர்கள் குகநாதனிடம் இழந்த பணத்தினை மீட்க இந்த வழி தவிர வேறு வழி என்னதானுண்டு சொல்லுங்கள் பார்ப்போமே?//
    சதாசிவம் இது என்ன கூத்து இனிஒரு நாவலன் போல் நாங்கள் கடத்தல் ஜயிடியா எல்லாம் கொடுப்பதில்லை; தவறை மட்டும் சுட்டி காட்டுவோம் அல்லது போனால் கண்டனம் செய்வோம் இந்த கேடுகெட்ட செயலுக்கு ஜயிடியா நீங்கள் மீண்டும் நாவலனிடம்தான் கேக்க வேண்டும்; இதில் இவர்தான் பட்டம் பல பெற்றவர், இப்போது இழந்தவர்கள் பணத்தை மீட்டு கொடுக்கும் அமைப்பு என ஏதோ இந்திய இலங்கை கூட்டாக தொடங்க போவதாகவும் செய்திகள் இருக்கு; சதாசிவம் ஒருவிடயத்தை கவனித்தீர்களா தாங்களே அவர்கள் கடத்தியதை ஏற்று கொண்டு விட்டீர்கள்.

    // எனக்காக பணியாற்றிக்கொண்டிருந்த 18 மாதங்களில் 55 லட்சம் ரூபாவை அவருக்கு அனுப்பியதை உறுதிசெய்கின்றார்.//
    பல்லிக்கு கணக்கு வராது அதனால் சிலரிடம் இதை கேக்கிறேன்; குகநாதன் ஏற்கனவே 55லட்சம் கொடுத்துள்ளார், இப்போது நாவலன் கணக்குபடி 30லட்சம் அதில் அருள்சகோதரர் மற்றும் பாதர்;;;; ஆகியோரின் கருனை தள்ளுபடி 15 லட்சம்; ஆகமொத்தம் 70 லட்சம் பணம் மொத்தமாக அருள்&கோவுக்கு போனது உறுதியாகி விட்டது; அப்படியாயின் இந்த 70லட்சத்தில் அருள்& கோ குகனாதனுக்காக செய்த வேலை என்ன? அவை எழுத்துமூலம் உள்ளனவா? அல்லது திருட்டுதனமான வேலையா?
    அடுத்து அருள்&கோ குகநாதனுடன் எத்தனை வருடம் வேலை செய்தது?? மாத சம்பளம் என்ன?? ஒரு இடத்தில் அவர்கள் சம்பளம் மாதம் 50ஆயிரம் என சொல்லபடுகிறது? அப்படியாயின் அது எழுத்து மூலம் உள்ளதா?? இவருக்கே 50ஆயிரம் எனில் குகனாதனுக்கு என்ன சம்பளம்??
    சரி இவையாவும் உள்நாட்டு வரிதினைகளகத்துக்கு தெரியுமா?? அப்படியாயின் அருள்&கோ இந்த குகனாதனின் வேலைக்காய்(70 லட்ச்சம்) கட்டிய வரிபணம் எவ்வளவு; கடத்தல்காரரை எந்தவழியில் எல்லாம் (முள்ளிவாய்க்கால் போல்) இந்த பிரச்சனையில் வெழியில் கொண்டுவர முடியுமோ அப்படி கொண்டு வருவோம், குகநாதன் நண்பர்கள் கேப்பதை கொடுத்துவிட்டு வெளியில் வரும்படி சொல்லியது அருள்& கோவும் நாவலனும் செய்த கடத்தலை வாய்க்குள் விரலை வைத்து பார்த்துகொண்டு இருப்பதற்கல்ல;

    பேனா மூலம் எந்த அரசியல் ரவுடியையும் சந்திக்கு கொண்டுவரலாம் என்னும் நம்பிக்கையில்தான், எமது நோக்கம் குகநாதனை பாதுகாப்பதல்ல; அதை அவரே பார்த்து கொள்வார், ஆனால் மாற்றுகருத்து மாவியாக்களை முகம் காட்டுவோம்; இதில் இன்று அகப்பட்டு முழிப்பவர் நாவலனும் இன்னும் சிலருமே; இதில் வேடிக்கை இன்னும் இனிஒருவில் நடுகடலில் கப்பல் என ஒரு வீரரும் அரசின் கெடுபிடியென மற்றவரும் கட்டுரை செய்யினமாம்; அப்படியானால் இனிஒரு யாருடையது? இந்த மாவியாக்களுடையதுதானா?? அல்லது உரிமையாளர் தலைமறைவா??
    தொடருவேன் பல்லி;

    Reply
  • Sudha
    Sudha

    பல்லி,
    இனியொருவை அசோக்கிடம் இருந்து அருள் எழிலனும் நாவலனும் கைப்பற்றிவிட்டதாகவும் அசோக்குக்கும் இனியொருவுக்கும் இப்போது எந்தத் தொடர்பும் இல்லையெனவும் இப்போது ஒரு செய்தி அடிபடுகிறது. இது உண்மையாகவே இருக்கக் கூடும். அசோக் இவ்வாறான கிறிமினல் வேலைகளில் இறங்கக்கூடியவரல்ல. இந்தவேலை நாவலனுக்கு கைவந்த கலை. எனவே அந்தக் கூட்டு நிலைக்காது.

    Reply
  • palli
    palli

    இதை தமிழரங்கத்தில் இருந்து கொப்பி செய்தேன் நண்பர்களுக்காய் இங்கே பதிவு செய்கிறேன்,

    //Fஈற் ணோ:622/05 நிஜக்கதை
    பதிந்தவர் டி.அருள்செழியன், ஸெப்டெம்பெர் 03, 2010

    திரு.இராயகரன் அவர்களுக்கு,
    வணக்கம். நான் டி.அருள்செழியன் சென்னையின் வசிக்கும் ஒரு பதிரிகையாளர். கடந்த ஒரு ஆண்டுகளுக்கு மேலாக தங்கள் கட்டுரைகளை படித்து வருகிறேன். அதில் சிலவற்றில் உடன் பாடு உண்டு சிலவற்றில் மாறுபட்ட கருத்தும் உண்டு. குறிப்பாக சமிபகாலமாக காலை எழுந்ததும் நான் முதலில் தேடுவது “ வதை முகாமில் நான்” என்ற தங்களின் தொடரைத்தான். தங்களின் தன்நம்பிக்கை என்னை வியக்க வைத்தது அதே தன் நம்பிகையோடு தான் கடந்த ஆறு ஆண்டுகளாக இடை விடாது போராடித்தான் குகநாதனிடம் நான் வஞ்சகமாக இழந்ததில் பெரும் பங்கு பணத்தை மீட்டேன். இந்த நிலையில் ”இந்தியப் பொலிஸ்சுடன் கூட்டுச் சேர்ந்து கட்டைப் பஞ்சாயத்து நடத்திய சபா நாவலன், குகநாதனிடம் 30 இலட்சம் கோரினார்! .”என்ற தங்கள் கட்டுரையை இன்று பார்த்தேன். அந்த சம்பவத்தில் முக்கியமான நபர் என்ற முறையில் இதனை எழுதுகிறேன்.

    குகநாதன் விஷயயத்தில் சபா நாவலன், அசோக் போன்றவர்களிடம் குகநதனின் மனைவி அழுது கதறியதால்தான் அவர்கள் அவருக்காக என்னிடம் பேசினர். அப்போது நான் எனக்கு வரவேண்டிய பணத்திற்கு யாராவது பொறுப்பெடுத்தால் என்னை ஏமாற்றிய குகனாதனை விட்டுவிடலாம் என்றேன். அவர்கள் ஒதுங்கிக் கொண்டனர். இதுதான் நடந்தது.

    எனனைப் பொறுத்தவரையில் நான் குகநாதனை சிறையில் அடைக்கவே விரும்பினேன். சாதாரண குடும்பத்தில் பிறந்து நேர்மையாக உழைத்து சராசரி வாழ்க்கை வாழும் என்னை வஞ்சகமாய் ஏமாற்றி என்னையும் என் குடும்பத்தையும் மன வேதனையிலும் கண்ணீரிலும் தவிக்கவிட்ட குகநாதனை – என்னைப்போல நம்பிய பலரையும் ஏமாற்றிய குகநாதனை சிறையில் அடைப்பதுதான் பலருக்கும் ஆறுதலாய் அமையும் என்று கருதுனேன்.

    குகநாதனும் அவர் மனைவியும் நன்றி மறந்து கடந்த சில வருடங்களாக ஏதோ நான் அவர்களை ஏமாற்றி விட்டதாக பலரிடமும் கதைவிட்டு வந்தனர். அதெற்கெல்லாம் இதுவே பதிலாக அமையும் எனக் கருதினேன்.ஆனால் மேற்படி குகநாதனின் மனைவி என்னிடமும் போனில் கதறினார்.குகநாதன் உள்ளே போகும் பட்சத்தின்ல் அடுத்தடுது இரண்டு மூன்று வழக்குகளிலும் அவர் சிக்கி குறைந்தது இரண்டு ஆண்டுகளாவது அவர் புழலில்தான் காலம் தள்ளியிருக்க வேண்டும்.இந்த சூழலில் நண்பர்கள் பலரும் தலையிட்டதாலும் குகநாதன் கெஞ்சியாதாலுமே அவரோடு ஒரு உடன்படிக்கை செய்து நான் இழந்த பணத்தின் பெரும் பகுதியை மீட்டேன்.

    குக நாதனுக்கும் எனக்கும் என்ன தொடர்பு..?நான் அவரிடம் எப்படி ஏமாந்தேன்..?
    2005 ஆகஸ்ட்டில் அ தி மு க ஆட்சியில் இதே குகநாதன் நேரடியாக வராமல் (அ தி மு கவின் போலி பத்திரிகையாளர்) அண்ணா சக்தி என்பவர் மூலம் இதே சென்னை போலிஸில் என் மீது கொடுத்த புகார் என்ன?அதன் மூலம் நான் அடைந்த மன வேதனைகள் இழப்புகள். பண கஷ்டங்கள், பிறகு எனது போராட்டம்.1985ல் ஆனந்த விகடனில் துவங்கி 1996 வரை முக்கிய தொலைக்காட்சி ஊடகங்களிலும் வேலை பார்த்த நான் 1997 முதல் குநாதனின் டி ஆர் டி தமிழ் ஒளி தொலைக்காட்சியில் வேலை பார்க்கத் துவங்கியதிலிருத்து துவங்கி.2002 முதல் அவருக்கும் எனக்கும் ஏற்பட்ட ஆத்மார்த்தமான நட்பு. 2004 ஜனவரி முதல் அவருடன் வியாபார ரீதியான தொடர்பு.அப்போது அவருடன் இருந்தவர்களாலேயே நான் கவனமாக இருக்கவேண்டுமென்று நான் எச்சரிக்கப்பட்டதை அலட்சியம் செய்தது.ஆனால் நான்கே மாதத்தில் அவரின் மோசடித்தனங்களை புரிந்துகொண்டது. அதன் பிறகு விட்ட பணத்தை பிடிப்பதாய் நினைத்துக்கொண்டு மிச்சமிருந்த பணத்தையும் இழந்ததுடன் குகநாதனால் மோசடி புகாருக்கு ஆளானது. பின் அனைத்தையும் இழந்து வறுமையில் வீழ்ந்து மறுபடியும் 2007கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு பிறகு தமிழக ஊடகங்களிலேயே மறுபடியும் வேலைக்கு சேர்ந்தது.

    அதன் பிறகு குகநாதானை பிடிக்க பல முயற்சிகள் எடுத்தது கடைசியில் ஒரு சுவாரஸ்மான நாடகத்தை அரங்கேற்றி மேற்படியாரை சென்னைக்கு (சொந்த செலவிலே) வரவைத்து அன்நாரின் வாக்குமூலங்களை பதிவு செய்ததோடு அவரிடமிருந்து எனக்கு வரவேண்டிய பணத்தையும் நான் இழந்த மகிழ்ச்சியையும் நான் மீட்டுக்கொண்டது வரை அனைத்தையும் Fஈற் ணோ:622/05 என்ற் தலைப்பில் ஆதாரங்களுடன் ஒரு (நிஜ) நாவலாகவே எழுதி வருகிறேன். விரைவில் அந்த புத்தகம் ஒரு விழாவைத்து வெளியிடப்படும்.

    மேலும் குகநாதன் கைது செய்யப்பட்ட விதம் காவல் நிலையத்தில் அவரது கெஞ்சல், இராயகரன் குறிப்பிடும் ஆட்களுடன் அவரது பேச்சுகள் ஆகியவை என்னால் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.அதை பார்த்தால் நடந்தது கட்டபஞ்சாயாதா அல்லது குகநாதனுக்கு காட்டப்பட்டது கருணையா என்பது தெரியவரும்.இராகரன் விரும்பினால் அந்த ரகசிய வீடியோவின் 8 மணி நேரப்பதிவின் ஒரு பிரதியை அனுப்பித்தரத்தயாரா இருக்கிறேன்.

    எனது தொலைபேசி எண் +91 91766 87984 இராகரனுடன் வேண்டுமென்று சமிபகாலமாக நான் விரும்பியிருக்கிரே். இப்போது அதற்கான நேரம் வந்துவிட்டது போலும்.இராகரன் தனது தொடர்பு எண்னை எனக்கு தந்தாலும் நான் அவருடன் பேச ஆவலாய் உள்ளேன்.
    நன்றி
    அன்புடன்,
    டி.அருள்செழியன்//???

    Reply
  • Sudha
    Sudha

    //குகநாதன் கெஞ்சியாதாலுமே அவரோடு ஒரு உடன்படிக்கை செய்து நான் இழந்த பணத்தின் பெரும் பகுதியை மீட்டேன்.//டி.அருள்செழியன்

    கோயிலில் ஆட்டை வெட்டும்போது ஆட்டின் சம்மதத்தைக் கேட்பார்கள். ஆடு பரிதாபமாக நிற்கும். உடனே ஆட்டின் தலையில் தண்ணீர் ஊற்றுவார்கள். ஆடு தலையை உதறும். உடனே ஆடு தலையாட்டி சம்மதம் கொடுத்துவிட்டதாகச் சொல்லி ஆட்டை வெட்டுவார்கள். அதுபோலயிருக்கிறது அருள் சகோதரர்கள் எடுத்துவிடும் ‘உடன்படிக்கை’ கதை. நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தாமல் சட்டவிரோதமாக இரண்டு நாட்கள் ஆணையாளர் அலுவலகத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ‘ஈழத் தமிழனான’ குகநாதனுக்கு தலையை ஆட்டுவதைத் தவிர வேறு வழியில்லை. அவர் தலையாட்டியது குற்றமா? நீங்கள் கடத்தியது குற்றமா?

    Reply
  • மாயா
    மாயா

    //கோயிலில் ஆட்டை வெட்டும்போது ஆட்டின் சம்மதத்தைக் கேட்பார்கள். ஆடு பரிதாபமாக நிற்கும். உடனே ஆட்டின் தலையில் தண்ணீர் ஊற்றுவார்கள். ஆடு தலையை உதறும். உடனே ஆடு தலையாட்டி சம்மதம் கொடுத்துவிட்டதாகச் சொல்லி ஆட்டை வெட்டுவார்கள். //sudha

    “ஆடுகளைத்தான் கோயில்களில் வெட்டுவார்களே தவிர வேங்கைகளையல்ல. ஆடுகளாயிராதீர்கள் , வேங்கைகளாக இருங்கள்” என அம்பேத்கார் சொன்னார். இங்கே வேங்கைகள் ஆடுகளாகவும் , ஆடுகள் வேங்கைகளாகவும் மாறியுள்ளன.அம்பேத்கார் இருந்திருந்தால் அழுதேயிருப்பார்.

    Reply
  • palli
    palli

    அறிவுஜீவிகளின் அந்தரங்க பரிமாற்றம் என்பது போல் ஒரு முக்கோண முற்றுகை வேறு தளத்தில் பல்லி எடுத்தது. நண்பர்களுக்காய் இங்கே பதிவு செய்கிறேன்;

    //ThesamNet இல் P.V.Sri Rangan on September 12, 2010 1:05 pm
    நாவலன், தங்கள் மீதான இந்த விஷயங்களை மறுத்துரைக்கும் உங்களை நம்புகிறோம்…

    ப.வி.ஸ்ரீரங்கன்
    ஜேர்மன்//

    Reply
  • nila
    nila

    ப.வி.ஸ்ரீரங்கன் ஜேர்மன்
    உண்மையும், நேர்மையான அணுகுமுறையுமுள்ள எந்த மனிதரையும் எந்தக் கொம்பரும் அசைக்க முடியாது. அந்த நம்பிக்கையோடுதாம் நான் இதுவரை சமகாலப் போராட்டங்குறித்து விமர்சித்து வருகிறேன்.

    உண்மையோடு இருக்கும் நீங்கள், இதையிட்டு அலட்டத் தேவையில்லை//

    எதனை யாரை உண்மை என்று குறிப்பிடுகின்றீர்கள்.?
    நடுஇரவில் அறிமுகமில்லாத குகநாதனின் மனைவியை நித்திரையிலிருந்து எழுப்பி தொலைபேசியில் கதைத்து விட்டு அவருக்குத் தெரியாமலே அதனை பதிவு செய்து விட்டு அதனை வெட்டிக் கொத்தி அதாவது எடிற் பண்ணி இணையத்தளத்தில் பதிவேற்றிய நாலனின் நேர்மைக்கு நீங்கள் வக்காலத்து வாங்கும் நாகரீகம் சராசரி மக்களுக்கு புரியாதது தான். வாழ்க உங்கள் தோழர்களின் நேர்மையும் நியாயமும் சிறீரங்கன்

    Reply