உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

தலைவர் சீமானை அழைத்தது எங்களுக்காக பிரச்சாரம் செய்ய ! ஆனால் சீமான் இப்ப RAW வுக்கு வேலை செய்கிறார் போல் தெரிகிறது

தலைவர் சீமானை அழைத்தது எங்களுக்காக பிரச்சாரம் செய்ய ! ஆனால் சீமான் இப்ப RAW வுக்கு வேலை செய்கிறார் போல் தெரிகிறது ! தவிபு தலைவரின் வேர்கள் புலனாய்வுப் பிரிவின் பகுப்பாய்வாளர் முல்லை மதி உடன் நேர்காணல்

மூன்று லட்சம் ரூபா நிலுவைத்தொகையை செலுத்தாத மகிந்த ராஜபக்ச..? 

மூன்று லட்சம் ரூபா நிலுவைத்தொகையை செலுத்தாத மகிந்த ராஜபக்ச..?

300,000 ரூபாய் நிலுவைத் தொகை செலுத்தப்படாததால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்தில் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் வெளியிட்ட எந்த தகவலும் உண்மையானது இல்லை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் அறிக்கை ஒன்றை நேற்றைய தினம் வெளியிட்ட நீர் வழங்கல் சபை, முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்திற்கு நீர் விநியோகத்தில் எந்த தடங்கலும் இல்லை என்று தெரிவித்துள்ளது. எனினும், மகிந்தவின் வீட்டிற்கு அருகில் உள்ள முன்னாள் பாதுகாப்பு வீரர்கள் வசித்து வந்த பகுதியொன்றில் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக சபை தெரிவித்துள்ளது.

இதனிடையே செய்திகளின் உண்மைத்தன்மை – அதனுடைய பின்னணி எதனையும் நோக்காது தென்னிலங்கை மற்றும் வடக்கு இலங்கை ஊடகங்கள் பலவும் மகிந்த ராஜபக்ச தொடர்பான போலியான தகவல்களை பகிர்ந்திருந்த நிலையிலேயே தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

பரீட்சை பாஸ் பண்ணாட்டிலும் தற்கொலை : காதலி பார்க்க வராவிட்டாலும் தற்கொலை’ – சவால்களை எதிர்கொள்ள திணறும் இளைஞர்கள் !

‘பரீட்சை பாஸ் பண்ணாட்டிலும் தற்கொலை : காதலி பார்க்க வராவிட்டாலும் தற்கொலை’ – சவால்களை எதிர்கொள்ள திணறும் இளைஞர்கள் !

 

யாழில் காதலர் தினத்தை கொண்டாட காதலி மறுத்ததால் கிளிநொச்சியை சேர்ந்த இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், காதலர் தினத்தை கொண்டாட யாழ்ப்பாணம் செல்ல குறித்த இளைஞர் அழைத்துள்ளார். இதற்கு காதலி மறுப்பு தெரிவித்ததன் காரணமாக இளைஞர் கிணற்றில் குதித்து உயிரைமாய்த்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதையடுத்து தர்மபுரம் காவல்துறையினர் கிணற்றிலிருந்து இளைஞனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சடலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அண்மைய காலங்களில் வடக்கு மாகாணத்தில் தற்கொலைகள் மலிந்து செல்வதை அவதானிக்க முடிகிறது. போதைப்பொருள் பாவனைக்காக பணம் இல்லை, பரீட்சை பெறுபேறுகளில் திருப்தி இல்லை, பெற்றோர் பைக் வாங்கி தரவில்லை போன்ற சாதாரண காரணங்களுக்கு கூட இளைஞர்கள் தற்கொலை செய்வதை அவதானிக்க முடிகிறது

பயனற்ற தன்மை காரணமாக இலங்கையில் நிறுத்தப்பட்ட எலன்மஸ்கின் திட்டங்கள் !

பயனற்ற தன்மை காரணமாக இலங்கையில் நிறுத்தப்பட்ட எலன்மஸ்கின் திட்டங்கள் !

 

‘ஸ்பேஸ் எக்ஸ்’ உரிமையாளர் எலொன் மஸ்க்கின் ஆளுகைக்கு உட்பட்ட அமெரிக்க அரசாங்க செயற்திறன் திணைக்களத்தால் பயனற்றதாகக் கருதி நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் திட்டங்களில் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவந்த இரண்டு திட்டங்கள் உள்ளடங்கியுள்ளன.

அமெரிக்காவின் அரசாங்க செயற்திறன் திணைக்களத்தின் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் பட்டியலின் பிரகாரம், பயனற்ற செயற்திட்டங்களாகக் கருதப்பட்டு 199 திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

சுமார் 35 முகவரமைப்புக்களின் ஒத்துழைப்புடன் கடந்த இரு தினங்களாக பரந்துபட்ட ரீதியில் ஆராயப்பட்டு இந்த 199 திட்டங்களும் நிறுத்தப்பட்டிருப்பதாக அமெரிக்க அரசாங்க செயற்திறன் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் காலநிலை மாற்ற சவால்களை சீராகக் கையாள்வதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்பட்டுவந்த ஆசிய பசுபிக் – இலங்கை காலநிலை மாற்ற சவால்களை இழிவளவாக்கல் செயற்திட்டம் மற்றும் கலாசாரங்களுக்கு இடையிலான தொடர்பாடல் வலையமைப்பு தொடர்பான பயிற்சிப்பட்டறைகளை நடாத்தல் ஆகிய இரண்டும் நிறுத்தப்பட்டுள்ளன.

அதானி குழுமம் காற்றாலை மின் திட்டத்திலிருந்து வெளியேறியது ! அனுரவின் கிளீன் சிறிலங்காவின் எதிரொலியா?

அதானி குழுமம் காற்றாலை மின் திட்டத்திலிருந்து வெளியேறியது ! அனுரவின் கிளீன் சிறிலங்காவின் எதிரொலியா?

 

இலங்கையில் திட்டமிடப்பட்ட 1 பில்லியன் டொலர் காற்றாலை மின் திட்டத்திலிருந்து அதானி கிரீன் எனர்ஜி விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விடயம் குறித்து அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் தற்போது இலங்கை முதலீட்டு சபைக்கு அறிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த திட்டத்தைத் தொடங்குவதற்குத் தேவையான பெரும்பாலான அனுமதிகளைப் பெற்ற போதிலும், தீர்க்கப்படாத சுற்றுச்சூழல் அனுமதிகள் மற்றும் உயர் நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு தாமதங்களைக் காரணம் காட்டி, இன்றுவரை இந்தத் திட்டத்தைச் செயற்படுத்த முடியவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் இது ஒரு “மரியாதைக்குரிய விலகல்” என்றும், இலங்கையில் எதிர்கால திட்டங்களுக்கு தங்கள் நிறுவனம் திறந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு புதிய குழு நிபந்தனைகளை மறுபரிசீலனை செய்ய உள்ளதாகவும், அதானி குழுமம் மற்றும் இலங்கை அதிகாரிகளின் அதிகாரபூர்வ அறிக்கைகள் இன்னும் நிலுவையில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதானி முழுமத்தின் திட்டங்கள் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் சமூக மட்டங்களில் எழுந்திருந்தன. கடந்த 2022ம் ஆண்டு கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த போது மன்னாரில் தொடங்கப்பட இருந்த காற்றாலை திட்டம், எந்த விதமான போட்டியாளரும் இன்றி அதானி நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வந்த ரணில் விக்ரமசிங்கே அரசும் அந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தை முன்னெடுத்தது.

இதனிடையே, இலங்கையின் எரிசக்தி துறைக்குள் அதானி நிறுவனம் பின்வாசல் வழியாக நுழைந்து விட்டது என்று அன்றைய எதிர்த்கட்சிகள் குற்றஞ்சாடின. அதேபோல் மன்னார் பகுதிவாசிகள் மற்றும் செயற்பாட்டாளர்கள், முக்கியமான பறவைகள் சரணாலயம் உயிர்பல்வகைமைக்கான பாதிப்பு மற்றும் பிற சுற்றுச்சூழல் இடர்பாடுகளை சுட்டிக்காட்டி, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தை நாடியிருந்தன.

2024 அக்டோபரில், புதிதாக அமைக்கப்பட்ட அரசாங்கம் காற்றாலை மின் திட்டத்திற்கு அதானி கிரீன் எனர்ஜிக்கு வழங்கப்பட்ட ஒப்புதல்களை மறுபரிசீலனை செய்யும் என்று அட்டர்னி ஜெனரல் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார். இந்த முடிவு அக்டோபர் 7, 2024 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது எடுக்கப்பட்டது. நவம்பர் 14 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்ட பிறகு ஒரு முடிவு எடுக்கப்படும் என்று சுட்டிக்காட்டி, அரசாங்கம் தனது நிலைப்பாட்டை இறுதி செய்ய கூடுதல் அவகாசம் கோரியது.

கடந்த ஆண்டு இறுதியில் அமெரிக்காவில் அதானி குழுமம் மீது முன்வைக்கப்ப்பட்ட ஊழல் குற்றச்சாட்டையடுத்து அனுர அரசு ஜனவரியில் மன்னார் மற்றும் பூநகரியில் அதானி குழுமத்தின் காற்றாலை மின்சார திட்டத்திற்கான விலைக் குறித்த ஒப்பந்தத்தை ரத்து செய்து மீளாய்வு செய்ய குழுவொன்றை அமைத்தது. இந்தப் பின்னணியிலேயே அதானி குழுமம் குறித்த திட்டத்திலிருந்து பின்வாங்கியுள்ளது

கைமாறும் தையிட்டி விகாரை: இராணுவத்திடமிருந்து பௌத்த சாசன அமைச்சுக்கு !

கைமாறும் தையிட்டி விகாரை: இராணுவத்திடமிருந்து பௌத்த சாசன அமைச்சுக்கு !

யாழ். தையிட்டியில் தனியார் காணியொன்றில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரை விவகாரம் தேசிய ஐக்கியம் தொடர்பில் உணர்வுபூர்வமானதாக காணப்படுவதை கருத்தில் கொண்டு, இது தொடர்பில் காணப்படும் குழப்பங்களுக்கு தீர்வை காண்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக பௌத்தசாசன அமைச்சின் செயலாளர் ஏ.எம்.பி.எம்.பி.அத்தபத்து குறிப்பிட்டுள்ளார். இதன்படி குறித்த விகாரை தொடர்பில் இராணுவத்தினருடனும் சம்பந்தப்பட்ட அமைச்சுகளுடனும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அத்தபத்து, இராணுவம் தற்போது அந்த விகாரையை நிர்வகித்துவந்தாலும் அரசாங்கம் பௌத்த விவகாரங்களுக்கான ஆணையாளர் அலுவலகத்தின் கீழ் இந்த விகாரையை பதிவு செய்யவுள்ளது. பாதுகாப்பு அமைச்சு தன்னால் அதனை தொடர்ந்து நிர்வகிக்க முடியாது பௌத்த விவகாரங்களுக்கான ஆணையாளர் அலுவலகத்தின் கீழ் இந்த விகாரையை பதிவு செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.

அத்துடன், இந்த பெயரில் விகாரை ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அங்கு நிலம் மட்டுமே உள்ளது. மேலும் இராணுவத்தினரும் கடற்படையினரும் இரண்டு பௌத்த விகாரைகளை நிர்வகிக்கின்றனர். இது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இராணுவத்தால் அதனை நிர்வகிக்க முடியாவிட்டால் அதற்கு தீர்வை காண்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

தையிட்டி எதிரொலி ! யாழில் 5 கிராமங்களில் பௌத்த பாடசாலைகள் உருவாக்கப்பட்டது ஏன்..? விகாரை கட்டப்பட்டது ஏன்..?

தையிட்டி எதிரொலி !

யாழில் 5 கிராமங்களில் பௌத்த பாடசாலைகள் உருவாக்கப்பட்டது ஏன்..? விகாரை கட்டப்பட்டது ஏன்..?

டென்மார்க் சமூக ஜனநாயகக் கட்சியின் பிரமுகர் தர்மு தர்மலிங்கத்துடன் ஒரு நேர்காணல் !

 

வறுமைக்கோட்டு மட்டம் உயர்த்தப்பட்டு உள்ளது !

வறுமைக்கோட்டு மட்டம் உயர்த்தப்பட்டு உள்ளது !

 

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறையின் உத்தியோக பூர்வ அறிவிப்பானது வறுமைக்கோடு மட்டம் தொடர்பில் வெளியாகியுள்ளது. மேலும் இந்த திணைக்களம் டிசம்பர் 2024க்கான இலங்கையின் அதிகாரப்பூர்வ வறுமைக் கோட்டை ரூ. 16,191 ஆக நிர்ணயித்துள்ளது. நவம்பர் 2024 இல் ரூ. 16,017 ஆகவும், அக்டோபர் 2024 இல் ரூ. 15,994 இந்த மட்டம் இருந்ததாக கூறப்படுகிறது.

வறுமைக்கோட்டு மட்டம் வரம்பு எனப்படுவது ஒரு தனிநபர் தனது மாதாந்த அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தேவையான குறைந்தபட்ச மாதாந்த தொகையைக் குறிக்கிறது. அந்தவகையில் மாதாந்தம் ரூ 16,191 விட குறைவான வருமானத்தையுடையோரை வறுமையில் வாடுபவர்கள் என குறிப்பிடலாம்.

டிசம்பர் மாதத்தைப் பொறுத்தவரை தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டில் (NCPI) சரிவு இருந்தபோதிலும் வறுமைக் கோட்டில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு வறுமைக் கோட்டு வரம்பு நிலையாக உயர்ந்து செல்வதற்கு , இலங்கை மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியும் , பணவீக்கமும், வேலையில் நிலவும் ஏற்ற மற்றும் இறக்க தளம்பல்கள் காரணங்களாக காணப்படுகின்றன. மேலும் வாழ்க்கைச் செலவில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும் இந்நிலமைக்கு காரணமாக கூறப்படுகின்றது.

எமது நாட்டின் கடல் வளத்தை அழித்து விட்டு தொப்புள் கொடி உறவுகள் என்று வேறு சொல்கிறார்கள் – அமைச்சர் சந்திரசேகர் கவலை !

எமது நாட்டின் கடல் வளத்தை அழித்து விட்டு தொப்புள் கொடி உறவுகள் என்று வேறு சொல்கிறார்கள் – அமைச்சர் சந்திரசேகர் கவலை !

 

இலங்கையின் கடல் வளத்தை அழித்தொழிக்கும் நடவடிக்கையில் தமிழக கடற்றொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர் எனவும், இவ்வாறு நாசகார செயலில் ஈடுபட்டுவிட்டு செல்லும் வழியில் தொப்புள் கொடி உறவுகள் எனக் கூறுவதில் பயன் இல்லை எனவும் கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், ‘தமிழக கடற்றொழிலாளர்களின் அத்துமீறல் அதிகரித்துள்ளது. கடந்த காலங்களில் மூன்று நாட்கள் வந்தார்கள். தற்போது ஏழு நாட்களுக்கும் வருவதற்கு முற்படுகின்றார்கள். எமது நாட்டு மீன்களை பிடிப்பது மட்டுமல்ல கடல் வளத்தையே நாசம் செய்கின்றனர். இதனால் நாளைய தலைமுறையினருக்குரிய கடல் வளம் இல்லாமல் போகின்றது.

எனவே, இலங்கை எல்லைக்குள் வந்து மீன்பிடிக்க வேண்டாம் என தமிழக கடற்றொழிலாளர்களிடம் கேட்டுக்கொள்கின்றோம். அதற்கான உரிமை அவர்களுக்கு கிடையாது. எமது நாட்டு கடல் எல்லைக்குள் வந்து மீன்களை பிடித்துக்கொண்டு செல்லும் வழியில் எங்களை தொப்புள்கொடி உறவுகள் எனக்கூறுவதில் பயன் இல்லை’ எனவும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார்.

தையிட்டி விகாரை: பிச்சைக்காரன் புண்ணை குணப்படுத்த மாட்டான் பா உ அர்ச்சுனா !

தையிட்டி விகாரை: தமிழ் தலைவர்கள் சட்ட நடவடிக்கை எடுக்கத் தயக்கம் ! பிச்சைக்காரன் புண்ணை குணப்படுத்த மாட்டான் பா உ அர்ச்சுனா !

 

யாழ். தையிட்டி விகாரை இடித்து அகற்றக் கோரும் போராட்டம் சமூக வலைத்தளங்களில் செய்திகளில் பேசப்பட்ட அளவுக்கு மக்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. உடனடியாக அகற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் காணிகளை உரிமையாளர்களிடம் உடனடியாக கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தி தையிட்டியில் நேற்று புதன்கிழமை இரண்டாவது நாளாகவும் பிசுபிசுத்துப் போனதொரு கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

”பௌத்தம் உன் மதம். வழிபடு. தையிட்டி என் மண். வழி விடு !”, ”சட்டவிரோத விகாரை கட்டுமானத்தை உடனடியாக அகற்று” , ”கட்டமைக்கப்பட்ட இனவழிப்பை நிறுத்து” போன்ற பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அத்துடன் போராட்டம் இடம்பெற்ற பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர். பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையை வழமை போல் வாக்குவாதம் ஏற்பட்டு முறுகலான நிலை தோற்றுவிக்கப்பட்டது.

இதேவேளை யாழ்ப்பாணம் – தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரையை அகற்ற முடியும் என அரகலயா போராட்டத்தில் முன்னின்ற மக்கள் போராட்ட முன்னணியின் உறுப்பினர் ராஜ்குமார் ரஜீவ்காந் போராட்டத்தில் கலந்துகொண்டு தெரிவித்துள்ளார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “இந்த விகாரையின் கட்டுமானம் நிறைவடைந்துள்ளது ஆகவே இந்த விகாரையை அகற்ற முடியாது என பலரும் பல்வேறு கருத்துக்ளை முன்வைத்து வருகின்றனர். ஆனால் தென்னிலங்கையில் இருந்த பல சட்டவிரோதமான விகாரைகள் வீதி அபிவிருத்தி அதிகார சபையினுடைய வழக்கின் மூலம் வீதி அபிவிருத்திக்காக அகற்றப்பட்டிருக்கின்றது.

எனவே அவர்களுக்கு ஒரு நீதி, இங்கிருக்கின்ற மக்களுக்கு ஒரு நீதி என்றால், சிங்களப் பேரினவாதத்தினுடைய ஆக்கிரமிப்புப் போக்கும் தமிழருக்கு எந்த ஒரு இடத்தையும் விட்டுக்கொடுக்கக் கூடாது என்ற நிலைமையும், தமிழ் மக்கள் எந்தவொரு இடத்திலும் தங்களின் பூரண இனச்சுதந்திரத்துடன் வாழ முடியாத ஒரு சூழ்நிலையியை ஏற்படுத்துகின்ற சிந்தனையை இது வெளிப்படுத்துகின்றது’’ எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தையிட்டி விகாரை விவகாரத்தை முன்னிலைப்படுத்தி இனவாத கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்பி வரும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கூறி தேசப்பற்றுள்ள தேசிய அமைப்பின் உறுப்பினர் அஜித் ரணசிங்க தெரிவித்துள்ளதுடன் இதுதொடர்பாக அவர் பொலிசில் முறைப்பாடு ஒன்றினையும் பதிவு செய்துள்ளார் .

இதேவேளை நேற்றைய தினத்தில் தொடர்ந்த தையிட்டி விகாரை தொடர்பான போராட்டத்திலும் விகாரையை அகற்ற சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பில் எந்தவொரு பேச்சுக்களும் கலந்து கொண்ட தலைவர்களால் முன்னெடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த போராட்டம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பா.உ இராமநாதன் அர்ச்சுனா, பிச்சைக்காரன் காயத்தை குணப்படுத்த மாட்டான். ஏனெனில் அப்போதா தான் அதை வைத்து பிச்சை எடுக்கலாம். அந்த பிச்சைக்காரன் போலத்தான் பல அரசியல்வாதிகள் தையிட்டி பிரச்சினையை தீர்க்காமல் வைத்திருந்தால் தான் தங்களால் அரசியல் செய்ய முடியும் என்பதற்காகவே அதனை தீர்க்காது தூண்டி விடுகின்றார்கள் என குற்றஞ்சுமத்தியுள்ளார்.