வறுமைக்கோட்டு மட்டம் உயர்த்தப்பட்டு உள்ளது !

வறுமைக்கோட்டு மட்டம் உயர்த்தப்பட்டு உள்ளது !

 

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறையின் உத்தியோக பூர்வ அறிவிப்பானது வறுமைக்கோடு மட்டம் தொடர்பில் வெளியாகியுள்ளது. மேலும் இந்த திணைக்களம் டிசம்பர் 2024க்கான இலங்கையின் அதிகாரப்பூர்வ வறுமைக் கோட்டை ரூ. 16,191 ஆக நிர்ணயித்துள்ளது. நவம்பர் 2024 இல் ரூ. 16,017 ஆகவும், அக்டோபர் 2024 இல் ரூ. 15,994 இந்த மட்டம் இருந்ததாக கூறப்படுகிறது.

வறுமைக்கோட்டு மட்டம் வரம்பு எனப்படுவது ஒரு தனிநபர் தனது மாதாந்த அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தேவையான குறைந்தபட்ச மாதாந்த தொகையைக் குறிக்கிறது. அந்தவகையில் மாதாந்தம் ரூ 16,191 விட குறைவான வருமானத்தையுடையோரை வறுமையில் வாடுபவர்கள் என குறிப்பிடலாம்.

டிசம்பர் மாதத்தைப் பொறுத்தவரை தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டில் (NCPI) சரிவு இருந்தபோதிலும் வறுமைக் கோட்டில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு வறுமைக் கோட்டு வரம்பு நிலையாக உயர்ந்து செல்வதற்கு , இலங்கை மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியும் , பணவீக்கமும், வேலையில் நிலவும் ஏற்ற மற்றும் இறக்க தளம்பல்கள் காரணங்களாக காணப்படுகின்றன. மேலும் வாழ்க்கைச் செலவில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும் இந்நிலமைக்கு காரணமாக கூறப்படுகின்றது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *