உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

ஜனாதிபதி அனுர குமாரவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் – எச்சரிக்கிறது புலனாய்வு !

ஜனாதிபதி அனுர குமாரவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் – எச்சரிக்கிறது புலனாய்வு !

 

பல்வேறு பேரணிகளின் போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பொது இடங்களில் தோன்றுவது அவரது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அரச புலனாய்வு அமைப்புகள் அடையாளம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இது குறித்து ஜனாதிபதிக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அறியப்படுகிறது.

குறிப்பாக, நாட்டில் தற்போது நடைபெற்று வரும் பாதாள உலக நடவடிக்கைகள் உட்பட சில நடவடிக்கைகள் படிப்படியாக அதிகரித்து வருவதாகவும், அந்த பாதாள உலக நடவடிக்கைகளுக்குப் பின்னால் வேறு ஏதேனும் செல்வாக்கு உள்ளதா என்ற சந்தேகம் பாதுகாப்புப் படையினருக்கு இருப்பதாகவும் அறியப்படுகிறது.

இதன் விளைவாக, தொடர்புடைய பாதாள உலக நடவடிக்கைகளுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து புலனாய்வு அமைப்புகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாம் ஒரு புற்றுநோய் என கூறிய இனவாதியான ஞானசார தேரர் விடுதலை !

இஸ்லாம் ஒரு புற்றுநோய் என கூறிய இனவாதியான ஞானசார தேரர் விடுதலை !

 

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு, மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இஸ்லாம் மதத்திற்கு எதிரான அவதூறான கருத்துக்களை வெளியிட்ட குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு 9 மாத சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. இதற்கு எதிராக ஞானசார தேரரின் சட்டத்தரணிகள் தாக்கல் செய்திருந்த மனுவை பரிசீலித்து, வழக்கு தொடர்பான மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை, இறுதித் தீர்ப்பு அறிவிக்கும் வரை குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு பிணை வழங்குமாறு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

கலகொட அத்தே ஞானசார தேரர் 2016 ஜூலை 16 ஆம் திகதி கொழும்பு, கிருலப்பனை பிரதேசத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, ​​“இஸ்லாம் ஒரு புற்றுநோய்.. அதனை ஒழிக்க வேண்டும்” என குறிப்பிட்டு இன நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலான கருத்தை வெளியிட்டமைக்காக அவருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டு வழக்கும் பதிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழினியின் மரணத்தில் சந்தேகம் ! விசாரணையைக் கோரி பொலிஸில் முறைப்பாடு ! பிரித்தானிய தொழிற்கட்சி உறுப்பினர் 

தமிழினியின் மரணத்தில் சந்தேகம் ! விசாரணையைக் கோரி பொலிஸில் முறைப்பாடு ! பிரித்தானிய தொழிற்கட்சி உறுப்பினர்

 

கடந்த பெப்ரவர் 10 திகதி யாழ் தென்மராட்சி சாவகச்சேரி பிரதேசசெயலக உதவி பிரதேசசெயலாளர் தமிழினி சதீஸ் தீயில் எரிந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆறு மாதக் கர்ப்பிணியான அவர் சிகிச்சை பலனின்றி பெப்ரவரி 16 இல் உயிரிழந்தார். ஆரம்பத்தில் கணவருடனான மோதலே இந்த சம்பவத்திற்கு காரணம் எனப் பத்திரிகைகளில் தகவல் வெளியாகியிருந்தது.

எனினும் தமிழினி இறக்க முன்னர் கொடுத்த வாக்குமூலம் வேறு மாதிரி அமைந்திருந்தது. படுக்கையறையில் வைக்கப்பட்ட நுளம்புத்திரி தவறுதலாக படுக்கையில் பட்டு தீப்பற்றியமையால் ஏற்பட்ட விபத்தே இதற்கு காரணம் என கூறப்பட்டுள்ளது. அதேநேரம் தீக்காயங்களுக்குள்ளான தமிழினியை காப்பற்ற முற்பட்ட அவரது கணவருக்கும் சிறியளவில் தீக்காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தமிழினியின் கணவர் அசோகதாஸன் சதீஸ் கோப்பாய் பட்டமேனியில் கிராம சேவகராக பணிபுரிகிறார். இறந்த உதவி பிரதேச செயலாளர் தமிழினிக்கு ஆறு வயதில் இன்னொரு பெண் குழந்தையும் உள்ளது.

தமிழினி சதீஸ் அகாலமரணம் தொடர்பில் பல்வேறு சந்தேகங்களும் சர்ச்சைகளும் சமூக ஊடகங்களில் தொடர்ந்து பரவி வருகின்றன. தமிழினியின் மரணத்தின் பின்னணியில் அவரது கணவர் சதீஸ் இருப்பதாக கூறப்படுகிறது. தமிழினி மற்றும் சதீஸ் இருவரும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கலைப்பீடத்தில் ஒன்றாக படித்து பட்டம் பெற்றுள்ளனர். பல்கலைக்கழக காதலே திருமணத்தில் முடிந்ததாகவும் கூறப்படுகிறது. வவுனியா செட்டிக்குளத்தைச் சேர்ந்தவர் தமிழினி. திருமணத்தின் பின் நீர்வேலியில் கணவருடன் வாழ்ந்து வந்துள்ளார்.

தமிழினியை திட்டமிட்டு சதீஸ் தீயிட்டிருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. சதீஸ் மது போதைக்கு அடிமையானவர் என கூறப்படுகிறது. பெண்களுடன் தவறான உறவில் சதீஸ் இருந்தாகவும் கூறப்படுகிறது. பல பெண்கள் இவரால் பாதிக்கப்பட்டுள்ளனர். சதீஸின் நடத்தையால் தமிழினி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார் என்றும் கூறப்படுகிறது.

தீ விபத்து நடந்த அன்று தமிழினிக்கும் கணவர் சதீஸ்க்கும் இடையே சண்டை நடந்ததாகவும் கூறப்படுகிறது. தீயில் எரிந்த தமிழினிக்கு உடைமாற்றி அதிகாலை கோப்பாய் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார் கணவர் சதீஸ். கோப்பாயிலிருந்து யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு மாற்பட்டார் தமிழினி. தமிழினியின் சகோதரியின் வாக்குமூலப்படி தமிழினியின் முகமும் முன்பக்கமும் தீயினால் கடுமையாக எரிந்துள்ளது. வைத்தியர்களின் கூற்றுப்படி நுரையிரல் கிட்டத்தட்ட முற்றாகவே சிதைந்து போயுள்ளது .

தமிழினியை வைத்தியசாலையில் அனுமதித்த போது கணவர் சதீஸ் மதுபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. யாழ் அரசாங்க அதிபர் நான்காம் நாள் தமிழினியை வைத்தியசாலையில் சந்தித்துள்ளார். எப்படியாயினும் நுளம்புக்கு கொழுத்திய திரியால் தீ விபத்து ஏற்பட்டு மரணம் சம்பவிப்பது மிக அரிதான விசித்திரமான நிகழ்வு. வெளிநாடுகளில் கட்டிடங்கள் எரியக்கூடிய மூலப்பொருட்களைக்கொண்டே கட்டப்படுவதால் தீ விபத்துக்கள் உயிராபத்தானவையாக இருப்பது இயல்பு. ஆனால் இலங்கையில் அவ்வாறான நிலையில்லை. அதுவும் நுளம்புத் திரியால் வந்த நெருப்பு உடலை எரிப்பது ஆச்சரியமானதே.

ஆனால் சில மாதங்களுக்கு முன் திருகோணமலையில் ஒரு பெண் குடிகார கணவனுக்கு பாடம் கற்பிக்க மண்ணெண்ணையை ஊற்றி மிலட்ட எடுத்த முயற்சி மரணத்தில் முடிந்ததை தேசம்நெற் வெளியிட்டு இருந்தமை தெரிந்ததே.

இப்படியான சந்தேக அகாலமரணங்கள் மிகவும் உண்ணிப்பாக விசாரிக்கப்பட வேண்டும். வீட்டு வன்முறைகளின் உச்சகட்டமாக பெண்கள் பரிதாபமாக கொலை செய்யப்படுவது தினந்தோறும் நடக்கும் சம்பவங்கள் ஆகிவிட்டன. இறந்தவர் உயர் பதவி வகித்த உதவிப் பிரதேச செயலாளர். குற்றம்சாட்டப்படும் கணவர் கிராமத்தையே பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்க கிராம சேவகர்.

பெண்களுக்கு எதிரான வீட்டு வன்முறைகள் மலிந்து போயுள்ள சமூகத்தில் இவ்வாறன மரண தீர விசாரிக்க வேண்டியது பொலிஸார் கடமை. வைத்தியசாலை நிர்வாகமும் பொறுப்புணர்வோடு நடக்க வேண்டும். பெண்கள் உரிமைகளுக்காக போராடுகிறோம் என கூறிக் கொள்ளும் பெண்ணியவாதிகளும் பெண் அரசியல்வாதிகளும் கூட பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் வீட்டு வன்முறைகள் தொடர்பில் காத்திரமான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

தமிழினிக்கு நீதி கேட்டு முகநூலில் “ஊழல் ஒழிப்பு அணி வன்னி’’ என்ற முகநூல் கணக்கினூடாகவே முதன் முதலில் தொடர்ச்சியாக பதிவுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால் தற்சமயம் இந்த விடயத்தில் தமிழினியின் தந்தை சண்முகராசா பொலிஸ் திணைக்களத்திற்கு முறைப்பாடு கொடுத்துள்ளார். ஏற்கனவே கோப்பாய் பொலிஸில் உள்ள முறைப்பாடு தொடர்பில் அவர் விளக்கங்களை கேட்டுள்ளார்.

அதுமட்டுமன்றி பிரித்தானியா வாழ் தொழிற்கட்சி உறுப்பினர் துஷாகரன் அமிர்தலிங்கமும் தமிழினியின் மரணத்திற்கு நீதி கேட்டு இலங்கை அரசின் பல்வேறு பிரிவுகளுக்கும் முறைப்பாடு செய்துள்ளார்.

தமிழினியின் கணவர் சதீஸ் மீதான குற்றச்சாட்டுக்களின் உண்மைத்தன்மையை, தமிழினியின் அகாலமரணம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகளை பொலிஸாரும் அரசாங்க அதிபருமே தெளிவுபடுத்த வேண்டும். தமிழினி எரிக்கப்பட்டாரா? என்பதை வீட்டுவன்முறைச் சட்டத்தின் கீழ் சந்தேக மரணமாக எடுத்து சுயாதீன விசாரணைகளுக்கு உத்தரவிட வேண்டும். தமிழினி கணவர் ஏன் இதுவரை கைது செய்யப்படவில்லை? ஏதும் அரசியல் செல்வாக்கு விசாரணைகளை திசை திருப்புகின்றதா? என்பது தொடர்பிலும் ஆராய வேண்டும். தமிழினியின் மரணத்தில் எழுந்த சந்தேகங்கள் தெளிவுபடுத்தப்பட வேண்டும்.

கணவனின் அரசியல் தஞ்சத்திற்கு கடிதம் கேட்ட பெண்ணை படுக்கைக்கு அழைத்த எம்பி சிறிதரனின் வலதுகரம் வேழமாலிதன்

கணவனின் அரசியல் தஞ்சத்திற்கு கடிதம் கேட்ட பெண்ணை படுக்கைக்கு அழைத்த எம்பி சிறிதரனின் வலதுகரம் வேழமாலிதன்
தமிழ்த்தேசிய அரசியலின் புதிய காவலனான எம்பி சிறிதரனின் அலுவலகம் மற்றும் கையாட்களின் காமக்களியாட்டங்களால் சமூக ஊடகங்கள் பரபரப்பாகியுள்ளன. சிறிதரனின் அரசியல் பிரவேசத்திற்கு பின்னணியில் இருந்து செயற்பட்ட வேழமாலிகிதனின் லீலைகளால் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என அடுக்கடுக்காக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
வெளிநாட்டில் வாழும் கணவரின் அரசியல் தஞ்சத்திற்கு உதவியாக, கடிதம் கேட்டுச் சென்ற பெண்ணிடம் சில்மிஷத்தில் வேழமாலிகிதன் ஈடுபட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து தனது பிரத்யேக கைத்தொலைபேசியிலிருந்து வட்ஸ்அப் ஊடாக படுக்கைக்கு அழைத்துள்ளார். வேழமாலிதனின் காம உரையாடல்கள் முகநூலில் வெளியாகியுள்ளன. இதனால் ஆத்திரம் அடைந்த வேழமாலிகிதன். அடியாட்களுடன் அப்பெண்ணின் வீட்டுக்கு சென்று அஸிட் ஊற்றப்போவதாக மிரட்டியுள்ளார். சிறிதரன் எம்பியும் இந்த விடயத்தை வெளியே சொல்லக்கூடாது என அப்பெண்ணை மிரட்டியுள்ளார்.
வேழமாலிதனின் கிளிநொச்சி பசுமைப் பூங்கா நிதி மோசடி, காணி அகரிப்பு, பாலியல் இலஞ்சம், கட்டப்பஞ்சாயத்து எனப் பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன. ‘ஊழல் ஒழிப்பு வன்னி அணி’ என்ற முகநூல் கணக்கில் புகைப்பட ஆதாரங்களுடன் தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பந்தப்பட்ட முகநூலை நடத்துவோரை தொடர்பு கொண்ட வேழமாலிதன். தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் செய்திகளை நீக்கும்படி கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
வேழமாலிதனால் ஒரு பெண் தீக்குளித்து இறந்துள்ளார் என்றும் அந்தக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. தேசம் இவ் விடயம் தொடர்பில் ஆராய்ந்த போது மக்கள் வேழமாலிதன் பெண் பித்தர் என குறிப்பிடுகிறார்கள். ஊழல் ஒழிப்பு அணி வன்னி முகநூலில் வேழமாலிதனும் அவரது கையாளும் மது போதையில் கைது செய்யப்பட்டு விடுதலையானதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதனை வேழமாலிதன் மறுக்கிறார். சிறிதரனின் அரசியலுக்கு வேழமாலிதனால் அஸ்தமனம் ஆரம்பமாகிவிட்டதாக சிறிதரன் ஆதரவாளர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
பா உ சிறிதரன் தன்னை தேசியத் தலைவரின் நிலையில் வைத்து தமிழ் தேசிய அரசியலை முன்னெடுக்கின்றார். இவர் போர்த்தியுள்ள புலித்தோல் போர்த்த தேசியத்திற்குப் பின்னால் கள்ள மண் அகழ்வு, கள்ள மரம் கடத்துவது, கசிப்பு, வட்டிக்கு பணம் கொடுத்தல் போன்ற முடிச்சவிக்கிகள் மொள்ளமாரிகள் எல்லோரும் கூட்டிணைந்துள்ளனர். மாவீரர் துயிலும் இல்லங்களை அதனை பராமரிக்கும் அமைப்புகளிடம் கொடுக்காமல் தனது கட்டுப்பாட்டில் வைத்து நிதி மற்றும் அரசியல் வியாபாரம் செய்வது போன்ற பல குற்றச்சாட்டுக்கள் பா உ சிறிதரன் மீது வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் சிறிதரன் தனக்கு எதிரானவர்களுக்குத் துரோகிப்பட்டம் கட்டி தனது தமிழ் தேசிய அரசியலை முன்னெடுக்கின்றார். அண்மையில் உண்ணாவிரதம் இருந்த வனகுலராசாவை றோ ஏஜென்ட் என சிறிதரனின் ஊடகவியலாளர் பிரச்சாரம் செய்திருந்தமை தெரிந்ததே.
ஆனாலும் தற்போது முதற்தடவையாக சிறிதரனின் கிளிநொச்சி தமிழரசுக் கட்சிக் காரியாலயமும் ஒரு அந்தப்புரமாக மாறுகிறதா என்ற சந்தேகத்தை தற்போது அம்பலமாகியுள்ள செய்திகள் தெரிவிக்கின்றன
https://www.facebook.com/share/v/12G4evzFruv/

மனித உரிமைச் செயற்பாட்டாளர் பொஸ்கோ ஆட்கத்தினாரா ? வந்தவர்கள் தஞ்சம் கேட்டால் அது யார் தவறு ? 

மனித உரிமைச் செயற்பாட்டாளர் பொஸ்கோ ஆட்கத்தினாரா ? வந்தவர்கள் தஞ்சம் கேட்டால் அது யார் தவறு ?

மனித உரிமைச் செயற்பாட்டாளர் பெண்ணியவாதி நளினி ரட்ணராஜாவுடன் நேர்காணல்

 

வடக்குக்கு ஹெலிகாப்டரில் பயணியுங்கள் – ரவி கருணாநாயக்க மீண்டும் அட்வைஸ்

வடக்குக்கு ஹெலிகாப்டரில் பயணியுங்கள் – ரவி கருணாநாயக்க மீண்டும் அட்வைஸ்

 

நாடு முழுவதும் பயணம் செய்யும் போது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்த வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க நாடாளுமன்றத்தில் நேற்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

 

“அவர் வடக்கு நோக்கி சாலை வழியாக குறைந்தது ஏழு மணிநேரம் பயணம் செய்கிறார். வடக்குக்கு சாலை வழியாக பயணம் செய்வதன் மூலம் முக்கியமான முடிவுகளை எடுக்க அவர் செலவிடக்கூடிய மதிப்புமிக்க நேரத்தை வீணாக்குகிறார். ஹெலிகாப்டரில் பயணம் செய்தால் ஜனாதிபதி முக்கியமான முடிவுகளை எடுக்க அதிக நேரம் கிடைக்கும்,” என்று கருணாநாயக்க நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்தின் போது பேசினார்.

ஜனாதிபதியும் அரசாங்கமும் எம்.பி.க்களுக்கு உரிமையுள்ள சலுகைகளை விட்டுக்கொடுக்கும் முடிவுகளிலிருந்து இலங்கை விரும்பிய நன்மைகளைப் பெறத் தவறிவிட்டது என்று அவர் கூறினார்.

“சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லம் எனது இல்லத்திற்கு அடுத்ததாக அமைந்துள்ளது. அது தற்போது மூடப்பட்டுள்ளது, உத்தியோகபூர்வ இல்லத்தை மூடி வைத்திருப்பதன் மூலம் நாடு என்ன நன்மையை அனுபவிக்க முடியும்? அவற்றை மூடி வைத்திருப்பதன் மூலம் நீங்கள் சில மில்லியன்களை மட்டுமே சேமிக்க முடியும்,” என்று அவர் வலியுறுத்தினார்.

வட்டுக்கோட்டையிலிருந்து வந்த வாகனத்தில் கேரளா கஞ்சா வடமராட்சியிலிருந்து கிளிக்கு கடத்தல் பரந்தனில் கைது !

வட்டுக்கோட்டையிலிருந்து வந்த வாகனத்தில் கேரளா கஞ்சா வடமராட்சியிலிருந்து கிளிக்கு கடத்தல் பரந்தனில் கைது !

வடமராட்சி பகுதியிலிருந்து கொண்டு செல்லப்பட்ட 400 கிலோகிராமுக்கும் அதிக பெருமளவு கேரள கஞ்சா பொதிகள் கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் வைத்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

நேற்று அதிகாலை வடமராட்சிப் பகுதியில் இருந்து கூலர் ரக வாகனத்தில் கேரள கஞ்சா கடத்தப்படுவதாக இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதையடுத்து குறித்த வாகனம் கிளிநொச்சி ஏ9 வீதி பரந்தன் பகுதியில் இடை மறிக்கப்பட்டு சோதனையிடப்பட்ட போது லொறியின் அடிப் பகுதியில் சூட்சுமமாக தயாரிக்கப்பட்ட தொட்டியிலிருந்து 182 கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

இதன்போது 34, 40 வயதுடைய கிளிநொச்சி பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் இருந்து வாகனம் வந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

எல்லை தாண்டிவரும் இந்திய மீனவர்கள் வடகல் எல்லையில் எம்முடைய கடல் வளத்தை அழிப்பதுடன் இந்த போதைப் பொருட்களை யாழுக்கு கடத்தி வந்து தமிழ் இளைஞர்களை கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கின்றனர். இது தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இந்திய அரசை வற்புறுத்தும் செயற்பாட்டை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மட்டும் மேற்கொண்டு வருகிறார். ஏனைய தமிழ் எதிர்த்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பில் மௌனம் காக்கின்றனர். எம் தமிழ் இளைஞர்களுக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை ஆனால் இந்தியத் தூவரை மனம்நோகச் செய்யக் கூடாது என்ற பாணியில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் செயற்படுகின்றனர்.

மட்டு பள்ளி மைதானத்தில் கொலைவெறி வாள்வெட்டு – சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் !

மட்டு பள்ளி மைதானத்தில் கொலைவெறி வாள்வெட்டு – சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் !

 

மட்டக்களப்பு ஆரையம்பதி மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தவர்கள் மீது 6 பேர் கொண்ட கும்பல் அண்மையில் வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள நால்வரை எதிர்வரும் மார்ச் மாதம் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும், ஏனைய இருவரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறும் நேற்று உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் ஆரையம்பதி மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் மின்னொளியில் இளைஞர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர். இதன்போது அங்கு வாள்களுடன் நுழைந்த இந்த கும்பல் விளையாடிக்கொண்டிருந்த சிலரை துரத்தி துரத்தி வாளால் வெட்டித் தாக்கியுள்ளனர்.

தையிட்டி விகாரை பிரச்சினையை ஆறு மாதத்தில் தீர்ப்பார்களாம் – சிவசேனை சவால் !

தையிட்டி விகாரை பிரச்சினையை ஆறு மாதத்தில் தீர்ப்பார்களாம் – சிவசேனை சவால் !

தையிட்டி விகாரை பிரச்சினையை நாங்கள் ஆறு மாத காலத்துக்குள் தீர்த்து வைப்போம் என சிவசேனை அமைப்பினர் உறுதி அளித்துள்ளனர். யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தனர்.

இது தொடர்பாக அவர்கள் மேலும் கூறுகையில், மக்களின் காணி மக்களுக்கே என்பதில் நாமும் உறுதியாக இருக்கிறோம். தையிட்டி விகாரை அமையப்பெற்றுள்ள காணி உரிமையாளர்களுடன் பேசிய பின்னர் விகாராதிபதியுடனும் பௌத்த மத தலைவர்களுடனும் பேசி, இந்தப் பிரச்சினையை முடிவுறுத்துவோம். அதற்கு எமக்கு குறைந்தது ஆறு மாத காலமாவது தேவை. அதற்குள் அரசியல் செய்ய முயன்று யாரும் குழப்ப வேண்டாம் என கோருகிறோம் என்றனர்.

தொடரும் துப்பாக்கி சூடுகள் – இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களை கைது செய்ய உத்தரவு !

தொடரும் துப்பாக்கி சூடுகள் – இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களை கைது செய்ய உத்தரவு !

 

முப்படைகளில் இருந்து தப்பியோடிய அனைத்து வீரர்களையும் உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டுள்ளதாக, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, முழு சேவைக் காலத்தையும் முடிப்பதற்கு முன்னர் சட்டவிரோதமாக இராணுவத்தை விட்டு வெளியேறிய இராணுவ வீரர்கள் பாதாள உலகத்துடன் தொடர்பு கொண்டுள்ள அதிக சம்பவங்கள் பதிவாகியுள்ளமை விசாரணையின் மூலம் உறுதிப்படுத்திப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆயுதப் பயிற்சி பெற்று ஒரு வருடம் அல்லது இரண்டு வருடங்கள் போன்ற குறுகிய காலத்திற்குள் வெளியேறுபவர்கள், பாதாள உலகத்துடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு அதிகமாக உள்ளமை நிகழ்வுகளின் மூலம் தெரிய வந்துள்ளது. கணிசமான எண்ணிக்கையிலான இராணுவ வீரர்கள் சேவையை விட்டு வெளியேறியுள்ளனர். இது ஒரு சமூகப் பிரச்சினையாக மாறியுள்ளது.

தற்போது பாதாள உலக நடவடிக்கைகளுக்கு எவ்விதமான அரசியல் பாதுகாப்பும் இல்லை. அரசாங்க துப்பாக்கிகள் தொடர்பான கணக்காய்வு முன்னெடுக்கப்பட்டு, கணிசமான அளவு பாதுகாப்பு அமைச்சின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன – என்றார்.

இதேவேளை, வீட்டில் கசிப்பு வகை போதைப்பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த கடற்படை அதிகாரி ஒருவர் பதுளையில் நேற்று கைதாகியுள்ளார். அத்துடன் பேருந்துக்குள் பயணப் பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 123 துப்பாக்கி ரவைகள் பண்டாரவளையில் நேற்று மீட்கப்பட்டுள்ளது.