உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

இந்தியாவின் அனைத்து முதலீடுகளையும் இழக்கும் நிலையில் இலங்கை – எச்சரிக்கிறார் ரணில் விக்கிரமசிங்க !

இந்தியாவின் அனைத்து முதலீடுகளையும் இழக்கும் நிலையில் இலங்கை – எச்சரிக்கிறார் ரணில் விக்கிரமசிங்க !

 

இந்திய கூட்டு நிறுவனமான அதானியுடன் மன்னாரில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தை முன்னெடுக்க ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் தவறியதை இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விமர்சித்துள்ளார்.

இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்புக்கான பல வழிகளை நான் ஆராய்ந்தேன். துரதிர்ஷ்டவசமாக, தற்போதைய அரசாங்கம் மன்னாரில் அதானி புதுப்பிக்கத்தக்க திட்டத்தைத் தொடரத் தவறிவிட்டது என ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார். அதானி பசுமை எரிசக்தித் திட்டத்தை மீண்டும் தொடங்க பேச்சுவார்த்தை நடத்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எந்த முயற்சியும் எடுப்பதாக தெரியவில்லை என்றார். இந்தப் போக்கு அனைத்து இந்திய முதலீடுகளையும் மோசமாக பாதிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

தமிழரசுக் கட்சியின் உள்ளுராட்சி வேட்பாளர் ஆசிரியரை மண்வெட்டியால் தாக்கியுள்ளார் !

தமிழரசுக் கட்சியின் உள்ளுராட்சி வேட்பாளர் ஆசிரியரை மண்வெட்டியால் தாக்கியுள்ளார் !

யாழ்ப்பாணத்தில் அச்சுவேலி பகுதியில் தனியார் நிதி நிறுவனத்தின் முகாமையாளராக கடமையாற்றும் இ. தனுசன் என்பவர் அயல் வீட்டில் உள்ள ஆசிரியரை மண்வெட்டியால் தாக்கிய சம்பவம் தொடர்பான காணொலி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. தாக்குதலில் காயமடைந்த ஆசிரியர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதலுக்குள்ளான ஆசிரியர் அச்சுவேலி பொலிஸில் முறைப்பாடு வழங்கியிருந்தார். முறைப்பாட்டுக்கு அமைவாக தாக்குதலை மேற்கொண்ட இ. தனுசன் என்ற முகாமையாளருக்கு துணைபோன தாயார் மற்றும் இரண்டு சகோதரிகள் நேற்றைய தினம் அச்சுவேலி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

கைதான மூவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர். இதேவேளை தாக்குதலை மேற்கொண்ட இ. தனுசன் தலைமறைவாகியுள்ளார். நீதிமன்றில் நேற்றைய தினம் முன்னிலையாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் 2023 ஆம் ஆண்டு நடைபெற இருந்த உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட இருந்ததாகவும் கூறப்படுகிறது.

 

தையிட்டியை வைத்து இனக்கலவரத்தை ஏற்படுத்த சிங்கள – தமிழ் அரசியல் தலைமைகள் தீவிர முயற்சி !

தையிட்டியை வைத்து இனக்கலவரத்தை ஏற்படுத்த சிங்கள – தமிழ் அரசியல் தலைமைகள் தீவிர முயற்சி !

 

சிங்கள பௌத்த நாட்டில் தையிட்டி திஸ்ஸ பௌத்த விகாரையின் பூஜை வழிபாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இனவாதிகளுக்கு அரசாங்கம் அடிபணிந்து செயற்படுகிறது. இது அரசாங்கத்தின் கோழைத்தன்மையை வெளிப்படுத்துகிறது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த சரத் வீரசேகர, தையிட்டி திஸ்ஸ விகாரையில் மத வழிபாடுகளுக்கு இடையூறு விளைவிப்பது ஒட்டுமொத்த சிங்கள பௌத்தர்களின் மனங்களையும் பாதித்துள்ளது. வடக்கில் பௌத்த மத உரிமைகள் மறுக்கப்படுகிறது. வடக்கு மாகாணத்தை இனவாதிகளுக்கு அரசாங்கம் வழங்கி விட்டதா ? என்று எண்ணத்தோன்றுகிறது. இதனை மறைப்பதற்காகவா, தலதா மாளிகை உற்சவம் நடத்தப்படுகிறது . அரசியலமைப்பின் 9 ஆவது உறுப்புரையில் பௌத்த மதம் போதிக்கப்பட வேண்டும், பாதுகாக்கப்பட வேண்டும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் பௌத்த மதத்துக்கு எதிரான செயற்பாடுகளுக்கு ஜனாதிபதி ஒத்துழைப்பு வழங்குவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என தெரிவித்தார்.

தையிட்டி விகாரை அமைக்கப்பட்டது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்காத தமிழ் தேசிய சட்டத்தரணிகளின் கட்சிகள் தேர்தல் காலங்கள் என்றவுடன் தையிட்டியையும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களையும் அரசியலாக்கி வருகின்றனர். இதன் வெளிப்பாடாக ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் 23 இல் தையிட்டி விகாரை முன்பாக ஒரு போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது தெரிந்ததே. இலங்கையின் அரசியல் கலாச்சாரத்தில் இனவாத அரசியல் நீக்கம் செய்யப்பட்டு வருவதை விரும்பாத சிங்கள – தமிழ் இனவாத சக்திகள் தங்கள் வாக்கு வங்கிக்காக ஒரு இனக்கலவரத்தையும் சில உயிர்ப்பலிகளையும் எதிர்பார்த்து தவம் கிடக்கின்றனர்.

கருணா அம்மான் இலங்கை போர்க்குற்றவாளிகள் நான்கு பேருக்கு பிரித்தானியா தடை !

கருணா அம்மான் இலங்கை போர்க்குற்றவாளிகள் நான்கு பேருக்கு பிரித்தானியா தடை !

 

2009 ஆம் ஆண்டு முடிவடைந்த இலங்கை உள்நாட்டுப் போரின் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கையின் முன்னாள் மூத்த இராணுவத் தளபதிகள் மூவருக்கும் மற்றும் ஒரு முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளிலிருந்து பிரிந்து சென்ற தளபதி ஒருவர் மீதும் என பிரித்தானியா நேற்று திங்கட்கிழமை 24 ஆம் திகதி மார்ச் தடைகளை விதித்துள்ளது.

அந்த வகையில் தடை செய்யப்பட்ட நால்வரும் பிரித்தானியாவுக்கு பயணம் செய்வதற்கான தடைகள் மற்றும் சொத்து முடக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி சவேந்திர சில்வா, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகோடா மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜெயசூர்யா ஆகியோர் மீது இத்தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கும் இத்தடை போடப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளிற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் பேச்சு வார்த்தைகள் இடம்பெற்ற வேளையில் கருணா விடுதலைப் புலிகளில் அமைப்பிலிருந்து பிரிந்து சென்றிருந்தார். பின்னர் போர் இடம்பெற்றுக் கொண்டிருந்த காலத்தில் கருணா இலங்கை இராணுவத்திற்காகப் பணியாற்றும் ஒரு துணை ராணுவக் குழுவை வழிநடத்தினார்.

அரசாங்கப் படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் போராளிகளுக்கும் இடையிலான 26 ஆண்டுகாலப் போரில் 80,000 – 100,000 பேர் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிட்டுள்ளது. ஆனால் போரில் கொல்லப்பட்ட போராளிகள் உட்பட மக்களின் எண்ணிக்கை அதிகம் என கூறப்படுகிறது.

போர் முடிவடைந்து நீண்ட காலத்திற்குப் பிறகும், இலங்கையின் இராணுவம் மற்றும் பாதுகாப்புப் படைகள் மீது நீதிக்கு புறம்பான கொலைகள், சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறை உள்ளிட்ட போர்க்குற்றங்கள், வலிந்து காணாமல் ஆக்குதல், கடத்தல்கள் மற்றும் சித்திரவதைகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அதேநேரம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம் போரில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீதும் போர்க்குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளது.

இலங்கை அரசு தொடர்ந்தும் போர்க்குற்றச்சாட்டுக்களை மறுத்து வருகிறது. தமிழ் மக்களின் நீண்டகால கோரிக்கையான சர்வதேச விசாரணைக்கும் ஒத்துழைப்பை வழங்க இலங்கை தயாராக இல்லை. அதேநேரம் இலங்கை அரசு இவ் விவகாரத்தில் உள்நாட்டு பொறிமுறைக்குள் விசாரணை நடத்த தயாராக உள்ளதாக கூறி வருகிறது. தமிழ்மக்களைப் பொறுத்தவரை உள்ளக விசாரணையில் தமக்கு நம்பிக்கை இல்லை என்று சர்வதேச விசாரணையையே கோருகிறார்கள்.

பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் டேவிட் லாம்மி ஒரு அறிக்கையில், “இலங்கையில் மனித உரிமைகளுக்கு இங்கிலாந்து அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது, உள்நாட்டுப் போரின் போது நடந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு பொறுப்புக்கூறலைக் கோருவது உட்பட, அவை இன்றும் சமூகங்களில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன” என்று கூறியுள்ளார்.

பிரித்தானியா இலங்கையில் உள்நாட்டுப் போரில் போர்க் குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு தடை விதித்ததை தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என 15 வருடங்களாக போராடியவர்களுக்கு கிடைத்த வெற்றியாக கொண்டாடுகிறார்கள். மறுபக்கம் என்பிபி அரசாங்கம் தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

தமிழரசுக் கட்சியும் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியும் ஒப்பந்தம் !

தமிழரசுக் கட்சியும் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியும் ஒப்பந்தம் !

 

தேசிய மக்கள் சக்தியை தனித்து நின்று வென்றுவிட முடியாது என்பதில் நாட்டின் அனைத்துப் பகுதியில் உள்ள எதிர்க்கட்சிகளும் ஒரு தெளிவான முடிவுக்கு வந்துள்ளன. அதனால் பல்வேறு கூட்டணிகளையும் அமைப்பதில் அவர்கள் மிகத் தீவிரமாக உள்ளனர். ஆனால் கூட்டணி அமைத்தாலும் மக்கள் இவர்களை நம்புவார்களா என்ற சந்தேகத்தை பலரும் எழுப்பி வருகின்றனர்.

இப்பின்னணியில் இலங்கைத் தமிழரசுக் கட்சியும், சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியும் ஒரு புரிந்தணர்வு உடன்பாட்டை எட்டியுள்ளனர். ஜனாதிபதி சட்டத்தரணிகளான கட்சியின் செயலாளர்கள் எம் ஏ சுமந்திரனும் நிசான் காரியப்பரும் இவ்வுடன்படிக்கையில் கைச்சாத்திடுள்ளனர். வடக்கில் முஸ்லீம் காங்கிரஸ் வெற்றிபெறும் பிரிவுகளில் தமிழரசுக் கட்சி ஆட்சி அமைப்பதற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதாக உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் கிழக்கு மாகாணத்திலும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் விந்தணு வங்கி !

இலங்கையில் விந்தணு வங்கி !

 

இலங்கையில் முதலாவது விந்தணு வங்கி கொழும்பில் உள்ள காசல் மகப்பேற்று மருத்துவமனையில் நிறுவப்பட்டதாக மருத்துவமனையின் இயக்குநர் வைத்தியர் அஜித் தண்டநாராயணா தெரிவித்துள்ளார்.

இந்த விந்தணு வங்கி மூலம், குழந்தை பேறு இல்லாத பெண்கள் குழந்தைகளைப் பெறுவதற்குத் தேவையான விந்தணுவைப் பெற முடியும். இவ் நடைமுறை மிகவும் இரகசியமாகவும் தனியுரிமையைப் பாதுகாக்கும் வகையிலும் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் வைத்தியர் அஜித் தண்டநாராயணா கூறினார்.

அதிகரிக்கும் போதையுடன் கூடிய முகநூல் களியாட்ட விருந்துகள் !

அதிகரிக்கும் போதையுடன் கூடிய முகநூல் களியாட்ட விருந்துகள் !

சீதுவ பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட கிடிகொட பெல்லானவத்த பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் இரவு நடைபெற்ற பேஸ்புக் விருந்து சுற்றி வளைக்கப்பட்டு, 15 யுவதிகள் உட்பட 76 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் இருந்து ஐஸ், கேரளா கஞ்சா ஆகிய போதைப்பொருட்கள் மற்றும் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் இந்த களியாட்ட நிகழ்வில் கலந்து கொண்ட 12 சிறுமிகள் மற்றும் 47 இளைஞர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

தமிழ் தேசிய பிற்போக்குவாதிகள் தமிழ் அரசியல் பரப்பிலிருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும் !

தமிழ் தேசிய பிற்போக்குவாதிகள் தமிழ் அரசியல் பரப்பிலிருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும் !

மூத்த ஆய்வாளர் வி சிவலிங்கம் அவர்களுடனான உரையாடல்

ஆபத்து வரும் போது மீட்பராக ரணில் வருவார் !

ஆபத்து வரும் போது மீட்பராக ரணில் வருவார் !

நாட்டுக்கு ஆபத்து ஏற்படும் பட்சத்தில் எவ்வித நிபந்தனையும் இன்றி தேவையான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தயாராகவே இருக்கின்றார் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

வஜிர அபேவர்தன மேலும் கருத்து தெரிவிக்கையில், 1994ஆம் ஆண்டு எதிர்க்கட்சி தலைவரானதிலிருந்தே ரணில் விக்கிரமசிங்க இலக்கு வைக்கப்பட்டிருக்கின்றார். எனவே தற்போது தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என அவ்வாறானவர்களிடம் கேட்டுக் கொள்கின்றோம். பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை சமூகத்தில் எந்தவொரு சமூகத்தினருக்கும் தாக்கத்தை ஏற்படுத்தப் போவதில்லை. எனவே முதலில் இந்த அறிக்கையை முழுமையாக வாசிக்குமாறு சகலரையும் வலியுறுத்துகின்றோம் என்றார்.

 ‘கொலைகாரனால் நீதி வழங்க முடியுமா?” என்போர் பாலஸ்தீனியர்களைக் கொல்பவர்களிடம் நீதி கேட்கின்றனர் !

‘கொலைகாரனால் நீதி வழங்க முடியுமா?” என்போர் பாலஸ்தீனியர்களைக் கொல்பவர்களிடம் நீதி கேட்கின்றனர் !

 

யாழ்ப்பாணத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நீதியையும் பொறுப்புக் கூறலையும் வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று யாழ். மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தினரால் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொலைகாரனால் நீதி வழங்க முடியுமா? கொடுப்பனவை கொடுப்போம் என சொல்வது கொலையை மறைக்கவே, சர்வதேச நீதி கிடைக்குமா உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹாசாவில் கண் முன்னால் நடந்து கொண்டிருக்கின்ற இனப்படுகொலையை நிறுத்த முடியாத மற்றும் பாலஸ்தீன படுகொலை பங்காளர்களாகிய சர்வதேசத்திடம் ஈழத்தமிழர்கள் நீதி பெற்றுத் தரும்படி கோருவது அறிவீனம் என அவதானிகள் கூறுகின்றனர்.