தமிழரசுக் கட்சியும் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியும் ஒப்பந்தம் !

தமிழரசுக் கட்சியும் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியும் ஒப்பந்தம் !

 

தேசிய மக்கள் சக்தியை தனித்து நின்று வென்றுவிட முடியாது என்பதில் நாட்டின் அனைத்துப் பகுதியில் உள்ள எதிர்க்கட்சிகளும் ஒரு தெளிவான முடிவுக்கு வந்துள்ளன. அதனால் பல்வேறு கூட்டணிகளையும் அமைப்பதில் அவர்கள் மிகத் தீவிரமாக உள்ளனர். ஆனால் கூட்டணி அமைத்தாலும் மக்கள் இவர்களை நம்புவார்களா என்ற சந்தேகத்தை பலரும் எழுப்பி வருகின்றனர்.

இப்பின்னணியில் இலங்கைத் தமிழரசுக் கட்சியும், சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியும் ஒரு புரிந்தணர்வு உடன்பாட்டை எட்டியுள்ளனர். ஜனாதிபதி சட்டத்தரணிகளான கட்சியின் செயலாளர்கள் எம் ஏ சுமந்திரனும் நிசான் காரியப்பரும் இவ்வுடன்படிக்கையில் கைச்சாத்திடுள்ளனர். வடக்கில் முஸ்லீம் காங்கிரஸ் வெற்றிபெறும் பிரிவுகளில் தமிழரசுக் கட்சி ஆட்சி அமைப்பதற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதாக உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் கிழக்கு மாகாணத்திலும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *