இலங்கையில் விந்தணு வங்கி !
இலங்கையில் முதலாவது விந்தணு வங்கி கொழும்பில் உள்ள காசல் மகப்பேற்று மருத்துவமனையில் நிறுவப்பட்டதாக மருத்துவமனையின் இயக்குநர் வைத்தியர் அஜித் தண்டநாராயணா தெரிவித்துள்ளார்.
இந்த விந்தணு வங்கி மூலம், குழந்தை பேறு இல்லாத பெண்கள் குழந்தைகளைப் பெறுவதற்குத் தேவையான விந்தணுவைப் பெற முடியும். இவ் நடைமுறை மிகவும் இரகசியமாகவும் தனியுரிமையைப் பாதுகாக்கும் வகையிலும் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் வைத்தியர் அஜித் தண்டநாராயணா கூறினார்.