உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

கடந்த ஐந்து மாதங்களில் என்பிபி என்னத்தைக் கிழித்தது ?

கடந்த ஐந்து மாதங்களில் என்பிபி என்னத்தைக் கிழித்தது ?

வடக்கு மாகாண ஆளுநரின் ஆலோசணைக் குழு உறுப்பினர், மயில்வாகனம் சூரியசேகரம் உடன் ஒரு கலந்துரையாடல்

 

இந்திய சண்டியனை வைத்து இலங்கையை மிரட்டும் சமன்பாடு இனியும் வேலை செய்யுமா..? –

இந்திய சண்டியனை வைத்து இலங்கையை மிரட்டும் சமன்பாடு இனியும் வேலை செய்யுமா..?

மோடியின் இலங்கை வருகையின் பின்னணி என்ன..?

முன்னாள் இராஜதந்திரி தர்மகுலசிங்கம் ஐயம்பிள்ளையுடனான நேர்காணல்

 

“தையிட்டி விகாரை விவகாரம் அகில இலங்கை ரீதியில் தீர்க்க வேண்டிய பிரச்சினை, ஒருங்கிணைப்பு கூட்டம் பிரதேச அபிவிருத்திக்கானது” எம்பி சிறீபவானந்தராஜா !

“தையிட்டி விகாரை விவகாரம் அகில இலங்கை ரீதியில் தீர்க்க வேண்டிய பிரச்சினை, ஒருங்கிணைப்பு கூட்டம் பிரதேச அபிவிருத்திக்கானது” எம்பி சிறீபவானந்தராஜா !

 

அண்மையில் தெல்லிப்பழை பிரதேச சபை அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலா நிதி ஸ்ரீ பவானந்தராஜா தலமையில் இடம்பெற்ற போது தையிட்டி விகாரை விவகாரம் பெரும் பேசுபொருளாக மாறியிருந்ததது.

இக் கூட்டத்தில் கலந்து கொண்ட காணி உரிமையாளர்களில் ஒருவரான சுகுமாரி சாருஜன் தையிட்டி விகாரை கட்டப்பட்டுள்ள தங்களுடைய காணிகள் விடுவிப்பு தொடர்பில் கேள்வி எழுப்பியிருந்தார்.

காணி உரிமையாளரின் கேள்விக்கு பதிலளித்திருந்த எம்பி ஸ்ரீ பவானந்தராஜா இந்த விடயத்தை அகில இலங்கை ரீதியிலேயே தீர்க்க வேண்டும் என்று பின்வருமாறு பதிலழித்தார்.

எம்பி ஸ்ரீ பவானந்தராஜாவின் பதிலால் திருப்தியடையாத காணி உரிமையாளர்கள் எங்களுக்கு சட்டத்தின் மீது நம்பிக்கை இல்லை. முடிந்தால் பௌத்த பிக்குமார் தரப்பிலிருந்து வழக்கைத் தொடருமாறு சவால் விட்டார்கள். இந்த தையிட்டி விகாரை விவகாரத்தில் நீதிமன்றத்தின் மீது நம்பிக்கையற்ற காணி உரிமையாளர்கள் வேறு எந்தப் பிணக்கிற்கும் கூட நீதிமன்றத்தை நாட மாட்டார்களோ என்று அவதானிகள் கேள்வி எழுப்புகின்றனர். நாட்டின் அதியுயர் துறையான நீதிமன்றத்தையே புறக்கணிப்பவர்கள் கட்சி அரசியலூடாக அரசாங்கத்தை அமைக்கும் அரசியல்வாதிகள் பிரச்சினைகளைப் தீர்ப்பார்கள் என்று கோரிக்கை விடுக்கின்றனர். முட்டாள்த்தனமான வாதம். சகல ஆவணங்களும் இருக்கும் போது காணி உரிமையாளர்கள் இந்தப் பிரச்சனையில் குளிர்காயும் சட்டத்தரணி அரசியல்வாதிகளின் உதவியுடன் நீதிமன்றத்தைத் தான் நாட வேண்டும்.

வடக்கில் தொடர்ச்சியாக பிடிபடும் கேரளா கஞ்சா பொதிகள் !

வடக்கில் தொடர்ச்சியாக பிடிபடும் கேரளா கஞ்சா பொதிகள் !

தலைமன்னார் கடற்பரப்பில் மிதந்து வந்த சுமார் 49 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சா பொதிகள் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. தலைமன்னார் மணல் திட்டு 1 மற்றும் 2 க்கு இடைப்பட்ட கடற் பகுதியில் கடற்படையினர் கடந்த மார்ச் மார்ச் மாதம் 28 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த கடல் பகுதியில் மிதந்து கொண்டிருந்த சந்தேகத்திற்கிடமான பொதிகளை அவதானித்து சோதனை செய்தபோது, அந்தப் பொதிகளில் பொதிச் செய்யப்பட்டிருந்த சுமார் 124 கிலோகிராம் மற்றும் 392 கிராம் கேரள கஞ்சாவை (ஈரமான எடையுடைய) கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். இவை 46 பொதிகளாக கட்டப்பட்டிருந்தாக கூறப்படுகிறது. இதன் மதிப்பு 49 மில்லியன் ரூபாய்க்கும் மேல் இருக்கும் என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

உடுவில் பிரதேச சபை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பங்கேற்காத எதிர்க்கட்சி யாழ்.பா.உக்கள் !

உடுவில் பிரதேச சபை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பங்கேற்காத எதிர்க்கட்சி யாழ்.பா.உக்கள் !

 

யாழ். உடுவில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம், தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஶ்ரீ பவானந்தராஜா தலைமையில் இடம்பெற்றது. பிரதேசம் சார்ந்த பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்ட குறித்த கூட்டத்தில் யாழ் மற்றும் கிளிநொச்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் பங்கேற்கவில்லை.

வழக்கம் போலவே நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வடமாகாண அவைத்தலைவருக்கான ஆசனங்கள் முன் வரிசையில் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அக்கதிரைகள் கூட்டம் முடியும் வரை காலியாகவே இருந்தன.

இவ்விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஶ்ரீ பவானந்தராஜா, “அனைத்துப் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் முறையான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, தான் கலந்து கொள்ள முடியாமை தொடர்பாக முற்கூட்டியே அறிவித்தலை வழங்கியிருந்தார். ஏனைய எவரும் முன்கூட்டியே அறிவித்திருக்கவும் இல்லை கலந்துகொள்ளவும் இல்லை” எனத் தெரிவித்திருந்தார்.

பாலஸ்தீனர்களுக்கு எதிரான இனப்படுகொலையை நிறுத்தக் கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

பாலஸ்தீனர்களுக்கு எதிரான இனப்படுகொலையை நிறுத்தக் கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

பாலஸ்தீன மக்களுக்கு அவர்களின் சுதந்திர நாட்டை விடுவிக்குமாறும் அந்நாட்டில் நடைபெறும் கொலைகளை நிறுத்துமாறும் கோரி இஸ்ரேலுக்கு எதிராக கொழும்பு தெவட்டகஹ ஜும்ஆப் பள்ளிவாசல் அருகில் அமைதியான ஆர்ப்பாட்டமொன்று கொழும்பில் இடம்பெற்றது.

 

8.2 இந்நிகழ்வில் பிரதி சபாநாயகர் வைத்தியர் றிஸ்வி சாலிஹ் கலந்து கொண்டிருந்தார். அங்கு அவர் கருத்து தெரிவிக்கையில், பாலஸ்தீன மக்களின் குழந்தைகளை தாய்மார்களை கொன்று குவிப்பதை தடுத்து நிறுத்தல் வேண்டும். இதற்காக இலங்கை உட்பட உலக நாடுகள் ஒன்றுபட்டு ஐ.நா. ஊடாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுத்தல் வேண்டும். இந்த நோன்பு மாதத்தில் அவர்கள் செய்யும் கொலைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்தை பாலஸ்தீன சுதந்திர இயக்கம் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மோடார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி! 

மோடார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஏழாலை தெற்கை சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மற்றுமொரு இளைஞன் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

கந்தரோடை பகுதியில் வேகமாக பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த காலங்களில் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுதலை செய்யப்பட்ட அரசியல்வாதிகள் மீள் விசாரணைக்குட்படுவர் :பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர !

கடந்த காலங்களில் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுதலை செய்யப்பட்ட அரசியல்வாதிகள் மீள் விசாரணைக்குட்படுவர் :பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர !

 

கடந்த காலங்களில் சரியான வகையில் விசாரணைகளை மேற்கொள்ளாமல் விடுதலை செய்யப்பட்ட அரசியல்வாதிகளுக்கும் மற்றும் கிழக்கு மாகாணத்தில் இருக்கும் சில நபர்களுக்கு எதிராகவும் மிகவிரைவில் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக பிரதியமைச்சர் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார் . அவர் மேலும் இந்த நாட்டில் இடம்பெற்ற எல்லாவிதமான குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார்.

இதனை அவர் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி தொடர்பான விசேட கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு தெரிவித்தார். பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர மேலும் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில். நாங்கள் யாரையும் அரசியல் ரீதியாக பழிவாங்கவில்லை இதற்கு முதலிலே அரசியல் ரீதியாக பல்வேறுபட்ட அரசியல்வாதிகள் பழிவாங்கப்பட்ட வரலாறு இருக்கின்றது. 1977 ம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் பொலிஸ் திணைக்களத்துக்கு ஒரு விடுமுறையை வழங்கி மக்களுக்கும் எதிர்கட்சிக்கும் சிறுபான்மைக்கும் எதிராக வன்முறையை கட்டவிழ்த்துவிட்டது அப்படிப்பட்ட நாட்டிலே நாங்கள் வாழுகின்றோம் என்றார்.

அரசாங்கத்தை பொறுப்பெடுக்கும் போது உண்மையை அறியும் ஆணைக்குழுவை நியமித்து இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளுவோம் என தெரிவித்தோம் . அதற்காக மக்கள் 5 வருடத்துக்கு ஆட்சியை தந்துள்ளனர். எனவே இந்த நாட்டில் இடம்பெற்ற எல்லாவிதமான குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்படும். அதே ரீதியில் நாட்டில் ஒரு குரோதத்தை வளர இடமளியோம். அந்த வகையில் எல்லோரும் வாழக்கூடிய நாட்டை உருவாக்குவோம் என்றார்.

வடக்கில் அத்துமீறும் பொலிஸாருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்போம் எம்பி சிறீபவானந்தராஜா காட்டம் !

வடக்கில் அத்துமீறும் பொலிஸாருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்போம் எம்பி சிறீபவானந்தராஜா காட்டம் !

 

பொலிஸாரின் அடாவடித்தனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீ பவானந்தராஜா தெரிவித்துள்ளார்.

நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சங்கானை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் பின் ஊடகவியலாளர் ஒருவர் “அண்மைக் காலமாக பொலிஸாரின் அடாவடிகள் அதிகரித்துள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூட பொலிஸார் நெல்லியடியில் ஒரு வீட்டுக்குள் சென்று அடாவடியில் ஈடுபடுகின்ற காணொளி வெளியாகி இருந்தது. இதற்கு நீங்கள் என்ன நடவடிக்கை எடுக்கின்றீர்கள்” என கேள்வி எழுப்பியவேளை அவர் இவ்வாறு பதிலளித்தார்.

அங்கு மேலும் பேசிய எம்.பி சிறீ பவானந்தராஜா மேலும் தெரிவிக்கையில், பொலிஸாருக்கு போதிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இருந்தாலும் பொலிஸார் சில இடங்களில் தாங்கள் நினைத்தபடிதான் நடக்கின்றனர். அவர்களது செயற்பாடுகள் பிழையாக இருந்தால் அந்த பொலிஸாருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்போம் என்றார்.

 

மாகாண சபை பற்றி மோடியிடம் கோள் மூட்டுவோம் என பூச்சாண்டி காட்டும் சீ.வி.கே !

மாகாண சபை பற்றி மோடியிடம் கோள் மூட்டுவோம் என பூச்சாண்டி காட்டும் சீ.வி.கே !

 

மாகாண சபைகளின் அதிகாரங்கள் தொடர்ச்சியாக பறிக்கப்பட்டு வருகின்றமை தொடர்பில் இந்தியப் பிரதமர் மோடியின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த சிவஞானம், “எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியளவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். அவருடனான சந்திப்பில் முக்கியமாக இப்போதிருக்கக்கூடிய எங்களுடைய மாகாண சபை முறைமை தொடர்பாக அதில் இருக்கும் அதிகாரங்கள் படிப்படியாக பறிக்கப்பட்டுவருவது தொடர்பாகவும் அதனுடன் இணைந்த பல விடயங்கள் தொடர்பாகவும் அவரின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளோம்” என அவர் தெரிவித்துள்ளார்.