செய்திகள்

செய்திகள்

செய்திகள்

சூதாட்டத்தில் ஈடுபட்ட 19 இலங்கையர் தென் கொரியாவில் கைது

131009images.jpgசூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்ட 19 இலங்கையர்கள் தென் கொரியாவில் வைத்துக் கைது செய்யப்பட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது.

தென் கொரியாவின் வோன் கரில் உள்ள காஜா ட்ரொன் பகுதியில் வைத்து குறித்த இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களிடமிருந்து ஒரு மில்லியன் ரூபாவுக்கும் மேற்பட்ட பணம் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஆறு பேரை காவல்துறையினர் தேடி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களில் இருவர் உரிய விஸா இன்றி தென் கொரியாவில் தங்கியிருந்தவர்கள் என விசாரணைகளிலிருந்து தெரியவருகிறது.

குறித்த நபர்களை நாடு கடத்த அந்நாட்டு காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறன சம்பவங்களின் மூலம் தென்கொரியாவில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அபகீர்த்தி ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வியட்நாம் மற்றும் தாய்வான் பிரஜைகளும் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது

நாடளாவிய ரீதியில் மின் தடை : விசாரணைகள் ஆரம்பம்

நாடளாவிய ரீதியில் கடந்த வாரம் ஏற்பட்ட மின் விநியோகத் தடை தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

இலங்கை மின்சார சபையும், பொதுச் சேவைகள் ஆணைக்குழுவும் தனித் தனியாக இந்த மின் விநியோகத் தடை தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் பெர்டினாண்டோவின் கோரிக்கைக்கு ஏற்ப இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது சேவைகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ரஞ்சித் பெரேரா தெரிவித்துள்ளார்.

வேர்னன் யு. பெர்னாண்டோ உதைபந்தாட்ட மைதான தொகுதியை ஜனாதிபதி திறந்து வைப்பு

13.jpgகளுத் துறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வேர்னன் யு. பெர்னாண்டோ உதைபந்தாட்ட மைதான தொகுதியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று திறந்து வைத்தார்.

ஜனாதிபதி சம்பிரதாயபூர்வமாக கால்பந்தொன்றை உதைப்பதையும் அமைச்சர் காமினி லொகுகே, ஆசிய உதைபந்தாட்ட சம்மேளனத் தலைவர் மொஹமட் பின் ஹமாம் அல் அப்துல்லாஹ், அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன, பிரதி அமைச்சர் நிர்மல கொத்தலாவல ஆகியோரையும் காணலாம்.

பாகிஸ்தான் குண்டுத்தாக்குதலில் நாற்பதுக்கும் அதிகமானோர் பலி

தலிபான்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஒரு இராணுவ நடவடிக்கையை அடுத்து, பெரும்பாலும் கிளர்ச்சிக்காரர்கள் எவரும் இல்லாத பிராந்தியம் என்று பாகிஸ்தான் இராணுவத்தால் அறிவிக்கப்பட்ட ஸ்வாட் பள்ளத்தாக்கில் தற்கொலைக் கார் குண்டுத் தற்கொலைத் தாக்குதலில் நாற்பதுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளார்கள்.

துருப்பினரின் வாகானத் தொடரணி ஒன்று சனநெருக்கடி மிக்க சந்தைப் பகுதி ஒன்றை கடந்து சென்றபோது வெடிபொருட்களால் நிரப்பப்பட்ட ஒரு கார் அவற்றின் மீது மோதச் செய்யப்பட்டதாக இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள் என அவர்கள் கூறியுள்ளனர்.

அண்மைய நாட்களில் பாகிஸ்தானில் தொடர்ச்சியாக இத்தகைய தாக்குதல்கள் நடந்து வருகின்றன.

ஆப்கானிஸ்தான் தேர்தல் முறைகேடுகளை ஒப்பு கொண்டுள்ளார் ஐ.நா தூதர்

vote.jpgஆப்கானிஸ் தானில் செயற்படும் ஐ.நாவின் தலைவரான கேய் எய்டி, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகளின் தூதர்கள் புடை சூழ செய்தியாளர் கூட்டம் ஒன்றில் தோன்றியுள்ளார். அவருக்கு இருக்கும் சர்வதேச நாடுகளின் ஆதரவை காண்பிப்பதற்காகவே இவ்வாறு தோன்றியதாக பார்க்கப்படுகிறது.

ஆப்கானிஸ்தானில் அதிபர் தேர்தலின் போது நடைபெற்ற முறைகேடுகளை கேய் எய்டி குறைத்து காண்பித்ததாக, முன்னாள் துணை தலைவராக இருந்த பீட்டர் கால்பிரைத் குற்றம் சாட்டியிருந்தார். இந்த குற்றச்சாட்டுகளை முன் வைத்தவுடன் பீட்டர் கால்பிரைத் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.

செய்தியாளர் கூட்டத்தில் பேசிய கேய் எய்டி, தேர்தலில் பெருமளவில் முறைகேடுகள் நடைபெற்றது என்பதை ஒப்பு கொண்டுள்ளார், ஆனால் முறைகேடுகள் தொடர்பான சில தகவல்களை ஆப்கானிஸ்தான் அதிகாரிகளிடம் ஐ.நா கொடுத்து விட்டதாகவும் கேய் எய்டி கூட்டத்தில் கூறினார்.

கந்தளமவில் நேற்று ஏர்பூட்டு விழா; வயல் பிரதேசம் கோலாகலம்

தேசிய ஏர்பூட்டு விழா – 2009 நேற்று கந்தளம மேற்கு வயல் பிரதேசத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலுக்கமைய பூரண அரச அனுசரணையுடன் நடைபெற்ற இவ் ஏர்பூட்டு விழாவில் கமநல சேவை மற்றும் விவசாய அபிவிருத்தி அமைச்சர் மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு ஏர் பூட்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

நேற்றுக் காலை 10.31 சுபவேளையில் பெளத்த மத வழிபாட்டுடன் ஏர்பூட்டு வைபவம் ஆரம்பமானது. இவ்வைபவத்தையொட்டி கந்தளம குளம் மற்றும் மேற்கு வயல் பகுதிகள் விழாக்கோலம் பூண்டிருந்தன.

இழுப்பைக்குளம் நலன்புரி நிலையத்திலிருந்த 82 குடும்பங்களை சேர்ந்தவர்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர்

vau-camp-srilanka.jpgமன்னார் இழுப்பைக்குளம் நலன்புரி நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி வன்னி மக்கள் நேற்று திங்கள் அவர்களுடைய சொந்த இடங்களில் மீள் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

இழுப்பைக்குளம் நலன்புரி நிலையத்தில் 175 குடும்பங்களைச் சேர்ந்த 518 பேர் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

இவர்களில் 82 குடும்பங்களை சேர்ந்த 229 பேர் மீள குடியமர்த்தப்பட்டிருப்பப்தாக மன்னார் பிரதேச செயலாளர் திருமதி ஸ்ரான்லி டிமேல் தெரிவித்தார்..

இவர்களில் மடு பிரதேச செயலாளர் பிரிவுகுட்பட்ட பகுதியில் 34 குடும்பங்களை சேர்ந்த 91 பேரும், முசலி பிரதேச செயலாளர் பிரிவுகுட்பட்ட பகுதியில் 07 குடும்பங்களைச் சேர்ந்த 23 பேரும், மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுகுட்பட்ட பகுதியில் 38 குடும்பங்களை சேர்ந்த 106 பேரும் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர். தற்போது 93 குடும்பங்களை சேர்ந்த 389 பேர் இழுப்பைக்குளம் நலன்புரி நிலையத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

தேசிய உளவளத்துணை தின ஆரம்ப நிகழ்வு கொழும்பில்

தேசிய உளவளத்துணை தின ஆரம்ப நிகழ்வு இம்முறை சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் 15ம் திகதி கொழும்பு – 7, விஜேராம மாவத்தை இலக்கம் 144, ஹெக்டர் கொப்பேக்கடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நடைபெறும். காலை 9.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணி வரை நடைபெறும் நிகழ்வில் அனைத்து அமைச்சுக்களையும் பிரதி நிதித்துவப்படுத்தும் வகையில் முகாமைத்துவ மட்டத்தில் இருநூறு உத்தியோகத்தர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் பாதுகாப்பாகவே இருக்கிறது – பிரிட்டன் அமெரிக்கா

210909flag.jpgதலிபான் களின் அச்சுறுத்தல் இருந்தாலும், பாகிஸ்தானின் அணுஆயுதங்களின் பாதுகாப்பு குறித்து நம்பிக்கை இருப்பதாக அமெரிக்கா மற்றும் பிரிட்டன் தெரிவித்துள்ளது.

லண்டனுக்கு விஜயம் மேற்கொண்டு இருக்கும் அமெரிக்க ராஜாங்கத்துறை செயலர் ஹிலாரி கிளிண்டன், ராவல்பிண்டியில் இராணுவ தலைமையகத்தின் மீது நடத்தப்பட்டிருக்கும் தாக்குதல் ஆயுததாரிகளின் அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது என்பதை காண்பிக்கிறது என கூறினார்.

ஆனால் ஆயுததாரிகள் பாகிஸ்தானை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விடுவார்கள் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

பிரிட்டிஷ் வெளியுறவுச்செயலர் டேவிட் மிலிபேண்ட் கூறும்போது, பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் தீவிரவாதிகளின் கைகளில் சென்று சேர்ந்து விடும் என்ற பிரச்சினையே இல்லை என தெரிவித்தார்.

சிறுவர் இருதய சிகிச்சைப் பிரிவு – திறப்பு விழா

கராப்பிட்டிய பெரியாஸ்பத்திரியில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சிறுவர் இருதய சிகிச்சைப் பிரிவு பிரதமர் ரத்னசிரி விக்கிரமநாயக்கவினால் இன்று (13) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில் சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, சுகாதார உயர் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.