செய்திகள்

செய்திகள்

செய்திகள்

பொன்சேகா மீண்டும் தேர்தல் களம் இறங்குகிறார்

sarath.jpgபாராளு மன்றத் தேர்தலில் யானைச் சின்னத்திலேயே ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி போட்டியிடவுள்ளது. அதேசமயம், ஜெனரல் பொன்சேகா தேர்தலில் போட்டியிடுவதையும் ஐ.தே.மு. எதிர்க்கவில்லை.

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் திங்கட்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கண்டி மாவட்ட ஐ.தே.க. எம்.பி. லக்ஷ்மன் கிரியல்ல இந்தத் தகவலைத் தெரிவித்தார்.இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது; ஜனாதிபதித் தேர்தல் நிறைவுபெற்ற தினத்திலிருந்து தேர்தல் முடிவுகள் தொடர்பாக மக்கள் மத்தியில் திருப்தியற்ற நிலைமை காணப்படுகின்றது. இதே நிலைமையே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் மத்தியிலும் காணப்படுகிறது. தேர்தல் ஆணையாளரின் அறிக்கையில் வாக்குப்பெட்டியொன்றைக் கூடப் பாதுகாத்துக்கொள்ள முடியாமல் போய்விட்டது என்று தெரிவித்ததே இதற்குக் காரணமாகும்.

தேர்தல் வாக்குப் பெட்டியைப் பாதுகாக்க முடியாது போனால் அதிலுள்ள வாக்குகளில் முடிவினை எப்படி ஏற்பதென மக்கள் கேட்கின்றனர். தேர்தல் காலத்தில் அரச ஊடகங்கள் நீதிக்குப் புறம்பாக ஒருபக்கம் சார்ந்து செயற்பட்டது. நீதிமன்ற உத்தரவினை மீறியும் தேர்தல் ஆணையாளரின் கடிதங்கள் மூலமான வேண்டுகோளையும் மீறி அவை செயற்பட்டன. இவ்வாறு அரசாங்கம் தேர்தல் சட்டவிதிகளை மீறிச் செயற்பட்டது. எனவே, தேர்தல் ஆணையாளரின் கூற்றுப்படி பார்க்கும்போது தேர்தல் முடிவில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதென்பது புலனாகின்றது.

தேர்தலுக்குப் பின்னர் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா சுற்றிவளைக்கப்பட்டது போன்றவாறான நிலைமையேற்பட்டுள்ளது என எண்ணத் தோன்றுகின்றது. இதற்கு முன்னர் நடைபெற்று முடிந்த தேர்தலின் முடிவுகள் தேர்தல் ஆணையாளரின் கையொப்பத்துடனே வெளிவந்துள்ளது. ஆனால், இம்முறை அவரது கையொப்பம் இல்லாது முடிவுகள் மின்னஞ்சல் மூலம் வெளியானது.

இந்த முடிவு தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கு ஆராய்ந்துவரும் அதேநேரம், இது குறித்த சாட்சியங்களைப் பெற்று வருகின்றோம். இது தொடர்பான ஆதாரங்களை,சாட்சியங்களை அறிவிக்குமாறு முகவர்களிடம் கட்சித் தலைவர் கோரியுள்ளார். எதிர்வரும் 10 தினங்களுக்குள் சட்டநடவடிக்கை எடுப்பது சாத்தியமாகுமென நம்புகின்றேன்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் யானைச் சின்னத்தில் போட்டியிடவுள்ளோம். இதற்கான முடிவு ஐக்கிய தேசியக் கட்சியின் மாவட்ட மட்டத் தலைவர்களின் கூட்டத்தின்போது எடுக்கப்பட்டுள்ளது. யானைச் சின்னத்தில் போட்டியிடுவது ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் உடன்பட்டுள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தலில் பொது அபேட்சகருக்கு ஆதரவளிப்பதென்றும் இதன் பின்னர் தனித் தனியாகப் போட்டியிடுவதெனவும் தேர்தலுக்கு முன்னரே தீர்மானித்திருந்தோம். இதன் பிரகாரம் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடவுள்ளோம். எமது முன்னணியில் உள்ள தலைவர்கள் ஜெனரல் பொன்சேகா போட்டியிடுவதை எதிர்க்கவில்லையெனவும் தெரிவித்தார்.

சமூகபொருளாதார உரிமைகளை நிலைநாட்ட இலங்கை அரசியலில் இடம்கோரும் மலே சமூகத்தவர்

இலங்கையின் சிறுபான்மை இனங்களுள் ஒரு பிரிவான மலே சமூகத்தவர்கள் தமது சமூகபொருளாதார உரிமைகளுக்கு குரல் கொடுக்க ஏற்ற வகையில் அரசியலில் மேலும் இடந்தேடி வருகின்றனர்.இந்நாட்டிலுள்ள 20 மில்லியன் சனத்தொகையில் இந்தோனேசிய தீவுகள் மற்றும் தென் மலேசிய வம்சாவளி மலாயர்கள் சுமார் 50,000 பேர் உள்ளனர்.

தற்போது யுத்தம் நிறைவுக்கு வந்துள்ள சூழ்நிலையில் சரியான தலைமைத்துவமின்றியுள்ள மலாயர் சமூகம் அடக்குமுறைக்குள்ளாகக் கூடிய நிலை ஏற்படக் கூடுமெனவும் பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ளமை குறித்தும் அவர்கள் வருத்தந் தெரிவித்துள்ளனர். இங்குள்ள மலாயர்களில் சுமார் 30 சதவீதமானவர்கள் நடுத்தர வர்க்கத்திலும் 60 சதவீதமானவர்கள் வறுமைக்கோட்டிற்கு கீழும் உள்ளதாகக் கூறப்படுகின்றது.

இந்நாட்டின் சனத்தொகையில் ஒரு சதவீதத்துக்கும் குறைவாகவேயுள்ள மலாயர்களுக்கு நிரந்தர வருமானமோ வாழ்விடங்களோ பல்கலைக்கழக வசதிகளோ அரசாங்க வேலைகளோ இல்லையென இலங்கை மலாயர் சங்கத்தின் தலைவர் இக்ரம் குட்டிலன் தெரிவித்துள்ளார்.

இம்மலாயர்கள் டச்சு காலத்தில் கி.பி. 1600 களின் பிற்பகுதியில் படைவீரர்களாக இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.இவர்கள் மலாயை தாய் மொழியாகவும் இஸ்லாத்தை மார்க்கமாகவும் கொண்டு மூதாதையரின் கலாசாரத்தைப் பின்பற்றுகின்றனர்.தற்போது இச்சமூகம் இலங்கையிலுள்ள ஏனைய சமூகங்களுடனான சம பிரதிநிதித்துவத்தை எதிர்பார்த்துள்ளது.மலே சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை நியமிக்க வேண்டுமெனவும் சிறுபான்மையினரின் உரிமைகளை தற்போது தெளிவுபடுத்த வேண்டுமெனவும் இக்ரம் தெரிவித்துள்ளார்.

26 இலட்சம் டொலர் பெறுமதியான கூரைத் தகடுகள் இந்தியா கையளிப்பு

வடக்கின் வசந்தம் அபிவிருத்தித் திட்டத்திற்கென இந்திய அரசாங்கம் 2,644,200 டொலர் பெறுமதியான கல்வனைஸ் கூரைத் தகடுகளை வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளதுடன் அதன் முதற் தொகுதி இன்று கையளிக்கப்படவுள்ளது.

இன்று காலை இவ்வைபவம் கொழும்பு காலி முகத்திடலில் நடைபெறவுள்ளதுடன் இந்திய அரசாங்கத்தின் சார்பில் இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் காந்த் ஜனாதிபதியின் ஆலோசகரும் வடக்கின் வசந்தம் அபிவிருத்திச் செயலணியின் தலைவருமான பசில் ராஜபக்ஷவிடம் தகடுகளைக் கையளிக்கவுள்ளதாக தேச நிர்மாண அமைச்சு தெரிவித்தது.

இன்றைய இவ்வைபவத்தின் போது 500 மெற்றிக்தொன் கல்வனைஸ் தகடுகளைக் கொண்ட 19 கொள்கலன்களை இந்திய உயர்ஸ்தானிகரிடமிருந்து பசில் ராஜபக்ஷ எம்.பி. பெற்றுக்கொள்ளவுள்ளார். இதன் பெறுமதி 50,8347.45 அமெரிக்க டொலராகுமென மேற்படி அமைச்சு தெரிவித்தது.

இன்று மௌனம் கலைக்கிறார் தேர்தல் ஆணையாளர்

ஜனாதிபதித் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட ஒருவார காலத்தின் பின்னர் தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க இன்று தனது மௌனத்தைக் கலைத்து ஊடகவியலாளர்களைச் சந்திக்கவிருக்கிறார். ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் கடுமையாகச் செயற்படப்போவதாக அறிவித்திருந்த தேர்தல்கள் ஆணையாளர் இறுதித் தேர்தல் முடிவை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அவர் தெரிவித்த கருத்துகள் மக்கள் மத்தியில் சந்தேகத்தையும்மனக் குழப்பத்தையும் ஏற்படுத்தியிருந்தது.

ஜனவரி 27 ஆம் திகதி மாலை செய்தியாளர் மாநாட்டில் முடிவுகளை அறிவித்த பின்னர் ஒருவார காலமாக எங்கிருக்கிறார் என்று அறியமுடியாதிருந்த தேர்தல் ஆணையாளர் இன்று புதன்கிழமை ஊடகவியலாளர் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்தச் செய்தியாளர் மாநாட்டில் அவர் முக்கிய விடயங்களைத் தெளிவுபடுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனாதிபதித் தேர்தல் முடிவுற்றதும் தான் உடனடியாகவே பதவிதுறக்க இருப்பதாக தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

மீள்குடியேற்றப் பணிகள் மீண்டும் ஆரம்பம்: பூநகரி பகுதியில் நேற்று 1000 பேர் மீள்குடியமர்வு – 5ம் திகதி மாந்தையில்; 7ம் திகதி முல்லைத்தீவில்

இடம்பெயர்ந்த மக்களை மீள் குடியேற்றும் பணிகள் நேற்று (2) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதாக மீள் குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சின் செயலாளர் யு. எல். எம். ஹால்தீன் தெரிவித்தார்.

முதற்கட்டமாக கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேசத்தில் ஆயிரம் பேர் தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்பட்டனர். இவர்கள் பஸ்களில் ஏற்றப்பட்டு நேற்று பிற்பகல் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் ஐந்தாம் திகதி மற்றொரு பகுதியினர் மாந்தை கிழக்கு பகுதியில் மீளக்குடியேற்ற திட்டமிட்டுள்ளதாக கூறிய அவர், மீள்குடியேற்றப்பட உள்ள குடும்பங்கள் அடையாளங் காணப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். எதிர்வரும் ஏழாம் திகதி முல்லைத்தீவு பகுதியில் மீள் குடியேற்ற பணிகளை முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

கண்ணி வெடிகள் அகற்றும் பணிகளில் ஏற்பட்ட தாமதம், ஜனாதிபதித் தேர்தல் ஆகியவற்றினால் மீள்குடியேற்றச் செயற்பாடுகள் சிலவாரங்கள் தாமதமாகின. ஜனவரி 31 ஆம் திகதியுடன் மீள்குடியேற்றப் பணிகளை பூர்த்தி செய்ய திட்டமிடப்பட்டபோதும் மேற்படி காரணங்களினால் இந்தப் பணிகள் சற்று தாமதமடைந்தன.

மோதல் காரணமாக வடக்கு, கிழக்கை சேர்ந்த சுமார் 4 இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்தனர். இவர்களில் பெரும்பாலான மக்கள் ஏற்கெனவே மீள் குடியேற்றப்பட்டுள்ளதோடு ஒரு இலட்சத்துக்கும் குறைவானவர்களே வவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

எஞ்சிய மக்களை மீள்குடியேற்றுவதற்காக கண்ணி வெடிகளை அகற்றும் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கண்ணிவெடிகள் அகற்றப்படுவதற்கு ஏற்ப மக்கள் அந்தப் பிரதேசங்களில் மீள்குடியேற்றப்படுவர் எனவும் ஹால்தீன் கூறினார்.

மீள்குடியேற்றப்படும் மக்களுக்கு 6 மாதத்துக்குத் தேவையான உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருவதோடு விவசாயம், மீன்பிடித்துறை என்பவற்றை முன்னெடுக்க உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றது. வடக்கில் மீள்குடியேற்றம் நடைபெறும் பிரதேசங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளும் துரிதமாக இடம்பெற்று வருகின்றன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எரிக் சொல்ஹெய்ம் வாழ்த்து

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
2006ம் ஆண்டு வரையில் நோர்வேயின் இலங்கைக்கான விசேட சமாதானப் பிரதிநிதியாக எரிக் சொல்ஹெய்ம் கடமையாற்றினார்.

மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்பட்டமை தொடர்பில் தமது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்த நோர்வே தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

கனடாவில் திரைப்படக் காட்சியும் கலந்துரையாடலும் : தேடகம்

Lumumba_posterலுமூம்பா Lumumba (2000)
இயக்குநர்: Raoul Peck

06-02-2010  அன்று தேடகத்தினால்    லுமூம்பா  திரைப்படமும்    கலந்துரையாடலும்  ஒழுங்குசெய்யபட்டுள்ளது. அனைவரையும்  அழைக்கின்றோம். 

இத் திரைப்படம் 1960களில் பெல்ஜியத்திலிருந்து விடுதலைபெற்ற கொங்கோவின் முதல் பிரதமர் பற்றீசியா லுமும்பாவின் இறுதி நாட்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கிறது. விடுதலை பெற்ற கொங்கோ, இரு மாதங்களுக்குள் அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளின் துணையுடன் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, லுமும்பா உள்ளிட்ட தலைவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டு பின்னர் கொல்லப்பட்டார்கள்.

இத் திரைப்படம் France, Belgium, Germany,Haiti கலைஞர்களால் இணைந்து எடுக்கப்பட்ட போதும், கொங்கோவின் அரசியல் நெருக்கடிகளால் இது Zimbabwe, Beira, Mozambique போன்ற நாடுகளிலேயே எடுக்கப்பட்டது.

…வரலாறு ஒருநாளில் தனது தீர்ப்பை எழுதும். இந்த வரலாறு ஐ.நா.விலோ வாசிங்டனிலோ பரிசிலோ பூருலசிலோ கற்பிக்கப்படும் வரலாறாக இருக்காது. மாறாக, காலனி ஆதிக்கத்திடமிருந்தும் அதன் கைப்பாவைகளிடமிருந்தும் விடுதலை பெற்ற நாடுகளில் கற்பிக்கப்படும் வரலாறாக இருக்கும். ஆபிரிக்கா தனது சொந்த வரலாற்றைத் தானே எழுதும். அது சகானா பாலைவனத்திற்கு வடக்கிலும் தெற்கிலும் பேரின்பமும் கண்ணியமும் நிறைந்திருப்பதைச் சொல்லும் வரலாறாக இருக்கும்.
(லுமூம்பா தனது மனைவிக்கு சிறையிலிருந்து எழுதிய கடிதத்தில் இருந்து)

“லுமூம்பா: இறுதி நாட்கள்” (மொழிபெயர்ப்பு: எஸ். பாலச்சந்திரன். விடியல் பதிப்பகம்)

Lumumba_Poster
 
தொடர்புகட்கு   thedakam@gmail.com

தேடகம்.

அரசியலமைப்பும் பாராளுமன்றத் தேர்தலும்

ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் அரசியல் அமைப்புச் சபை ஒன்றை உருவாக்குவதற்கான ஆணையை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கோருவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த அரசியல் அமைப்புச் சபை தற்போது நடைமுறையில் உள்ள அரசியலமைப்பை மாற்றியமைத்து புதிய அரசியல் அமைப்பை உருவாக்கும். இதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டு ஆட்சியமைப்பதன் மூலமே சாத்தியம் ஏற்படும். அந்த ஆணையையே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இம்முறை கோரவுள்ளார்.

தற்போது நடைமுறையில் உள்ள தேர்தல் முறையின்படி எந்தவொரு கட்சியும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது. அதற்கு தேர்தல் முறையை மாற்றி அமைக்க வேண்டும். அதனாலேயே 17வது திருத்தச் சட்டதுக்கு ஆளும்கட்சி அழுத்தம் கொடுத்து வருகின்றது. அதனை நிறைவேற்றவும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அரசுக்கு தேவையாக உள்ளது.

இந்தப் பெரும்பான்மையைப் பெற்று தேர்தல் முறையை மாற்றி அமைக்க குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் சிலரையாவது வாங்க அரசு முயற்சிக்கலாம்.

இவ்வாறான மாற்றங்களுக்கு ஊடாக அரசியல் அமைப்பை அரசு மாற்றி அமைத்தாலும் அது இலங்கையில் உள்ள சிறுபான்மை இனங்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உதவும் வகையில் மாற்றி அமைக்கப்படுமா என்பது சந்தேகத்திற்கு உரியதே. இது பற்றிய தெளிவான அறிவிப்பு எதனையும் ஜனாதிபதி வெளியிடவில்லை.

ரிஎன்ஏ உட்பட தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்துமே அடுத்த நான்கு வருடத்தில் தங்கள் அரசியல் எதிர்காலத்தை எவ்வாறு தக்க வைத்துக் கொள்ளலாம் என்பதையொட்டியே தங்கள் காய்களை நகர்த்துவர். தமிழ் மக்களின் எதிர்காலம் பற்றிய அக்கறை பெரும்பாலும் தமிழ் அரசியல் கட்சிகளால் வெளிப்படுத்தப்படவில்லை. இனிமேலாவது அவ்வாறு வெளிப்படும் என்று எதிர்பார்ப்பதும் தவறு.

முடுக்கிவிடப்பட்டுள்ள இலங்கை அரசின் ஊடகங்களுக்கு எதிரான நடவடிக்கை

மீண்டும் பதவிக்கு வந்துள்ள மகிந்த ராஜபக்ச சகோதரர்களின் அரசு திட்டமிட்ட முறையில் ஊடகங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளதாக சர்வதேச உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டி உள்ளன. அது தொடர்பான விரிவான கட்டுரை பிரித்தானியாவின் தேசிய நாளிதழான தி இன்டிபென்டனில் இன்று வெளியாகி உள்ளது.

._._._._._.

Sri Lankan government ‘settling scores’ in media crackdown : By Andrew Buncombe in Colombo

The newly re-elected government of Mahinda Rajapaksa has been accused of orchestrating a fresh crackdown on the media after a series of websites were blocked and at least one reporter detained after raising questions about the conduct of the election. One journalist is missing, one has been assaulted and others have received death threats.

In what campaigners claimed was a “settling of scores”, around half-a-dozen websites has been blocked and the offices of one of them sealed. A foreign journalist who had been ordered from the country after asking a question about the president’s brother was subsequently told she could stay after her case received international attention.

“Now that the president has been re-elected, there appears to be a settling of scores with critics of the government,” said Brad Adams, Asia director at Human Rights Watch (HRW). “Just days after the election, some officials seem to be on a campaign to abuse their power.”

While the Sri Lankan authorities have previously been accused of intimidating journalists, many observers have been surprised at the government’s actions following an election it won by 17 points. In the aftermath of his victory, Mr Rajapaksa vowed to reach out to all sections of Sri Lankan society and work for reconciliation in a country where the traumas of a three-decade long civil war remain fresh.

The government insists it is not attacking the media, only preventing the spread of what it termed defamatory rumours. A senior spokesman said: “Which country allows absolute freedom to websites or any arm of the media which gives publicity to socially corrosive and personally defamatory rumours that can also tend to destabilise the state.”

But HRW said it had detected a pattern of harassment. Five online media organisations have been blocked since the day before the election on January 26, while two days later, a group of armed men surrounded the offices of one of the outlets, Lanka e News, and sealed them. A regular contributor to the website, Prageeth Eknalogoda, who has a wife and child, has been missing since two days before the election.

A member of staff at Lanka e News said after their offices were sealed, staff received up to 40 phone calls in a hour “threatening us with death if we did not stop what we were doing”.

The previous day detectives arrested and questioned Chandana Sirimalwatte, editor of the Iridia Lanka newspaper. He has been detained, reportedly because of an article published on election day about a senior government official.

State media workers have also suffered. Ravi Abeywickrama, an employee at Sri Lanka Rupavahini Corporation, was attacked after signing a joint statement with 60 other employees that raised questions about the misuse of state media by Mr Rajapaksa’s campaign, an issue that was also raised by the country’s independent election commissioner, Dayananda Dissanayake, who said it had been overwhelming biased in favour of the president.

“This wave of post-election violence could cast a lasting stain on the start of President Rajapaksa’s second term and bodes ill for the political climate during the coming years,” said the media freedom group, Reporters Without Borders. “It is quite normal for journalists and privately-owned media to side with a candidate before and during a democratic election but it is unacceptable for them to the victims of reprisals once the elections are over.”

While it is Sri Lankan journalists who suffer the gravest dangers, international correspondents have also been harassed. Karin Wenger, a reporter with the Swiss Broadcasting Corporation (SBC) was ordered to leave the country after she asked a question about the role of Mr Rajapaksa’s brother, Basil Rajapaksa, in the campaign. This order was subsequently revoked and Ms Wenger informed there had been “a huge blunder”. Many foreign journalists were refused visas to cover the election.

Campaigners say in recent years at least 14 media workers have been killed and dozens more forced into exile. Among the most high profile cases was that of Lasantha Wickremetunge, editor of the Sunday Leader newspaper, which often criticised the government and who was murdered a year ago. No-one has been charged over his death. The government has denied any involvement in attacks on journalists.

Bob Dietz, of the Committee to Protect Journalists, based in New York, said: “Given the ugly history of attacks on journalists in Sri Lanka, we call on President Rajapaksa to ensure the safety of all journalists and to use his new mandate to reverse the repressive trends of the past several years.”

வே பிரபாகரனின் மரண அத்தாட்சிப் பத்திரம் இந்தியாவுக்கு வழங்கப்பட்டது.

Pirabakaran 2007தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மரணமடைந்ததை இலங்கை அரசு இந்திய அரசுக்கு உறுதிப்படுத்தி உள்ளது. வே பிரபாகரன் மரணமடைந்ததை உறுதிப்படுத்தம் ஆவணங்களை இலங்கை அரசு இந்தியாவின் மத்திய புலனாய்வுப் பிரிவான சிபிஐ க்கு அளித்துள்ளதாக மத்திய உள்நாட்டு அமைச்சர் ப சிதம்பரம் உறுதிப்படுத்தி உள்ளார்.

வே பிரபாகரனது உடல் மே18ல் சர்வதேசத்திற்கும் காட்டப்பட்ட நிலையிலும் தமிழ் மக்கள் தரப்பில் குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்களின் பக்கத்தில் அதனை பல்வேறு காரணங்களுக்காகவும் ஏற்றுக்கொள்ளாத நிலை காணப்பட்டது. பிரபாகரனது மரணத்தை ஏற்றுக் கொள்ளாததற்கு வழங்கப்பட்ட காரணங்களில் இலங்கை அரசு இந்தியாவுக்கு பிரபாகரனின் மரணத்தை உறுதிப்படுத்தி ஆவணங்களைச் சமர்ப்பிக்கவில்லை என்பதும் ஒன்று. தற்போது அதுவும் செய்யப்பட்டு உள்ளது.

Pirabakaran V & Mahathayaதமிழீழ விடுதலைப் புலிப் போராளிகள் பல்லாயிரம் பேருக்கும் அஞ்சலிகள் செலுத்தப்பட்ட போதும் அதன் தலைவருக்கு இதுவரை தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதான பிரிவினர் இதுவரை எவ்வித அஞ்சலியும் செலுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் படுகொலை செய்யப்பட்ட மாத்தையா மற்றும் அவருடன் கொல்லப்பட்டவர்களுக்கும் புலிகள் அஞ்சலி செலுத்தி இருக்கவில்லை.