இன்று மௌனம் கலைக்கிறார் தேர்தல் ஆணையாளர்

ஜனாதிபதித் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட ஒருவார காலத்தின் பின்னர் தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க இன்று தனது மௌனத்தைக் கலைத்து ஊடகவியலாளர்களைச் சந்திக்கவிருக்கிறார். ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் கடுமையாகச் செயற்படப்போவதாக அறிவித்திருந்த தேர்தல்கள் ஆணையாளர் இறுதித் தேர்தல் முடிவை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அவர் தெரிவித்த கருத்துகள் மக்கள் மத்தியில் சந்தேகத்தையும்மனக் குழப்பத்தையும் ஏற்படுத்தியிருந்தது.

ஜனவரி 27 ஆம் திகதி மாலை செய்தியாளர் மாநாட்டில் முடிவுகளை அறிவித்த பின்னர் ஒருவார காலமாக எங்கிருக்கிறார் என்று அறியமுடியாதிருந்த தேர்தல் ஆணையாளர் இன்று புதன்கிழமை ஊடகவியலாளர் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்தச் செய்தியாளர் மாநாட்டில் அவர் முக்கிய விடயங்களைத் தெளிவுபடுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனாதிபதித் தேர்தல் முடிவுற்றதும் தான் உடனடியாகவே பதவிதுறக்க இருப்பதாக தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *