எதிர்வரும் 27ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா யாழ். அரியாலையில் இந்திய நிதியுதவியுடனான வீடமைப்புத்திட்டம் ஒன்றை அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடம்பெயர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு 50 ஆயிரம் வீடுகளை இந்திய அரசாங்கம் நிர்மாணித்து வழங்கவுள்ளதாக உறுதியளிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் ஆரம்பக்கட்டமாக மேற்கொள்ளப்படவுள்ள ஆயிரம் வீட்டுத்திட்டத்தையே அவர் ஆரம்பித்து வைக்கவுள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் துரையப்பா விளையாட்டரங்கில் வடக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நூறு உளவு இயந்திரங்களை வழங்கும் நிகழ்வையும் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலந்து கொள்ளும் இந்நிகழ்வுகளில் இந்தியத்தாதுவர் அசோக் கே. காந்தா, இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என். டக்லஸ் தேவானந்தா ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது