செய்திகள்

செய்திகள்

செய்திகள்

கிறிஸ்மஸ் ஸ்பெசல்: யேசுநாதர் – சிவபெருமான் – அல்லாஹ் உடன் சூம் மீற்றிங் பிரித்தானியர்கள் முட்டாள்களா அல்லது அவர்களது பிரதமர் பொறிஸ் ஜோன்சன் அவர்களை முட்டாள்கள் எனக் கருதுகின்றாரா?

பிரித்தானியா மீண்டும் ஒரு லொக் டவுனுக்குச் சென்றுள்ளது. இந்த அறிவிப்பு நேற்று சனிக்கிழமை மாலை பிரித்தானியப் பிரதமரால் வெளியிடப்பட்டது. அதற்கு முன்பாக புதன்கிழமை டிசம்பர் 16 அன்று ‘மேரி லிற்றில் கிறிஸ்மஸ்’ என்ற பிரித்தானிய பிரதமர், ‘விதிமுறைகளில் எவ்வித மாற்றமும் வராது. லொக்டவுன் கொண்டு வருவது மனிதாபிமானமற்ற செயல்’ என்று எதிர்க்கட்சித் தலைவர் கியர் ஸ்ராமர் முன்வைத்த கேள்விக்குப் பதிலளித்தார். ‘கிறிஸ்மஸ் புத்தாண்டு காலத்தையொட்டி சமூக இடைவெளியயைப் பேணும் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது தவறு’ என்றும் ‘கொரோனா வைரஸ் கிறிஸ்மஸ் கொண்டாடுவதில்லை’ என்றெல்லாம் அரசினுடைய நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் எதனையும் செவிமடுக்கவில்லை.

தனது முட்டாள்தனமான நடவடிக்கைகளால் பிரிதானிய மக்களும் பிரித்தானிய பொருளாதாரமும் எதிர்கொள்ளும் கடுமையான நிலைதொடர்பில் பிரதமர் பொறிஸ் ஜோன்சனும் அவரது கொன்சவேடிவ் கட்சியும் எதனையும் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை. வெறும் வெற்று வாரத்தைகளின் சோடினையாலும் ‘பஞ்ஜ் டயலக்’ பேசியும் மக்களை வசீகரிக்கலாம் என்ற எண்ணத்தோடு, தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றார். அவரது பேச்சுக்களில் ஒரு போதும் உள்ளடக்கம் இருப்பதில்லை. வார்த்தை ஜாலங்களை அப்புறப்படுத்தி உள்ளடக்கத்தைப் பார்ப்பவர்களுக்கு எதுவும் கிடைக்காது. ‘பஞ்ஜ் டயலக்’ தான் எஞ்சியிருக்கும்.

கிரீன்விச் பாடசாலை மீளத் திறப்பு – கவுண்டமணி – செந்தில் நகைச்சுவை:
டிசம்பர் 19ம் திகதி புதிய லொக் டவுன் அறிவிற்ப்பிற்கு ஆறு நாட்களுக்கு முன்னதாக கிறீவிச் கவுன்சில் தனது உள்ளுராட்சிப் பிரிவில் உள்ள பாடசாலைகளுக்கு டிசம்பர் 14ம் திகதி விடுமுறையயை அறிவித்தது. அதாவது 17ம் 18ம் திகதிகளில் கிறிஸ்மஸ் கால தவணை விடுமுறையயை, வெள்ளிக் கிழமைக்குப் பதிலாக திங்கட் கிழமையே விடுமுறையயை வழங்கியது. அதற்குக் காரணம் லண்டனின் பல பகுதிகளில் கொரோனா வேகமாகப் பரவுவதால், குறிப்பாக பாடசாலை மட்டத்தில் பல ஆசிரியர்கள் அரச விதிமுறைப்படி தனிமைப்படுத்தலுக்குச் சென்றனர். பாடசாலை வகுப்புகளை நடாத்த ஆசியர் பற்றாக்குறை ஏற்பட்டது. அதனால் கிறின்விச் கவுன்சில் தனது உள்ளுராட்சிப் பிரிவில் உள்ள பாடசாலைகளை மூடுவதாக அறிவித்தது. பாடசாலைகள் பலவும் ஆசிரியர் பற்றாக்குறையினால் பல வகுப்புகளை இடைநிறுத்தி மாணவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். உண்மையில் டிசம்பர் மாத ஆரம்பம் முதலே பாடசாலைகளில் மாணவர், ஆசிரயர் வரவில் வீழ்ச்சி ஏற்பட்டு பாடசாலைகள் சீராக இயங்கவில்லை.

ஆனால் அரசு என்ன செய்தது? தொழிற்கட்சியின் அதகாரத்தில் இருந்த உள்ளுராட்சி சபைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக மிரட்டி, மறுநாள் மூடிய பாடசாலைகளை மீளத் திறக்க வைத்தது. மக்களுக்கு எதிரும் புதிருமான தகவல்கள் வழங்கப்பட்டு குழப்பத்திற்குள் தள்ளப்பட்டனர். கிறின்விச் கவுன்சில் தலைவர் தனது முடிவு சரியானது தான் என்றாலும், அரசுக்கு எதிராக நீதிமன்றம் செல்லும் நிலையில் கிரின்விச் கவுன்சிலின் நிதியயை விரயமாக்க விரும்பவில்லை என்பதால், அரசின் வேண்டுகோளின்படி பாடசாலைகளை மீளத் திறக்குமாறு அறிவித்தார்.

டிசம்பர் 20 இன்று ‘ஜனவரியில் பாடசாலைகள் வழமைபோல் ஜனவரி 4இல் திறக்கப்படமாட்டாது’ என்றும் ‘இரு வாரங்களின் பின்னதாகவே பாடசாலைகள் திறக்கப்படும்’ எனவும் அரசு அறிவித்துள்ளது. இந்த அரசின் கோமாளித் தனம் தமிழ்பட நகைச்சுவை நடிகர்கள் கவுண்டமணி – செந்திலின் நகைச்சுவையளவுக்கு மலிந்துவிட்டது.

ஒரு படத்தில் வீட்டிற்கு பிச்சை எடுக்க வந்தவரை ‘பிச்சை தர முடியாது’ என்று செந்தில் விரட்டியடித்துவிட்டடார். அப்போது அங்கு வரும் கவுண்டமணி, அதே பிச்சைக்காரரை திருப்பிக் கூட்டி வந்து பிச்சை கேட்கும்படி சொல்வார். அந்தப் பிச்சைக்காரரும் அதன்படி ‘பிச்சை போடுங்க தாயே ஐயா’ என்று இரந்து நிற்பார். உடனே கவுண்ட மணி ‘பிச்சை தரமுடியாது நாயே! வெளியே போ!’ என்று திட்டி துரத்திவிடுவார். இந்த நகைச்சுவைக்கும் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் செய்யும் கோமாளி அரசியலுக்கும் ஏதும் வித்தியாசம் தெரிகின்றதா? பள்ளிக் கூடத்தை நீ பூட்டக் கூடாது நான்தான் பூட்டுவேன் என்ற மாதிரித்தான் கிரின்விச் விவகாரம் அமைந்தது.

பிரதமர் பொறிஸ் என் முகநூலையாவது படித்திருக்கலாம்:
தனக்கு கிடைத்த விஞ்ஞானபூர்வமான தகவலின் அடிப்படையில் தான், தனது முடிவை தான் மாற்றியதாக பிரதமர் பொறிஸ் ஜோன்சன் தனது செயலை நேற்று நியாயப்படுத்தினார். ஒக்ரோபர் 31ம் திகதி எனது முகநூல் பதிவு இது: பிரித்தானியாவில் ஒரு நாளுக்கு 4 000 மரணங்கள் சம்பவிக்கலாம்!!! – கோவிட்-19 ஒரு நாளைக்கு நாலாயிரம் உயிர்களை பலி எடுக்கும் அபாயம் இருப்பதாக அரசின் விஞ்ஞான மருத்துவக்குழு எச்சரித்து உள்ளது. அரசின் விஞ்ஞான மருத்துவக் குழு விடுத்த இந்த எச்சரிக்கையயை பிரதமர் எங்கு சொருகி வைத்தார்? அன்று அனைவரும் கேட்டுக்கொண்டது இடைத் தவணை விடுமுறையயை இரு வாரங்கள் மேலும் நீடித்து முழுமையான லொக் டவுணைக் கொண்டு வந்து இந்த வைரஸைக் கட்டுப்படுத்தி, ரெஸ்ற் அன் ரேஸ் திட்டத்தை முழுமையாக அமுல்படுத்தி இருந்தால், இந்த கிஸ்மஸ் கால விடுமுறையயை மக்கள் ஓரளவு சந்தோசமாக களித்திருப்பார்கள். பிரித்தானியாவின் பொருளாதாரத்தின் ஒரு முக்கியமான வாரமான இந்த வாரத்தில் பல நிறுவனங்களும் தங்கள் வியாபாரத்தை நடத்தி இருக்கும். ஏற்கனவே விளிம்புக்குத் தள்ளப்பட்ட பொருளாதாரத்தை ஆதாள பாதாளத்தில் வீழ்ந்துவிடாமல் தடுத்திருக்க முடியும். தேவைப்பட்டால் ஜனவரி முதல் ஒரு லொக்டவுணைக் கொண்டு வந்திருக்க முடியும். இது எவ்வித திடமிடலும் இன்றி எழுந்தமானமாக அவ்வப்போது வீட்டில் எழும் பிரச்சினைகளுக்கு கணவன் மனைவியர் எடுக்கும் கடுகதி எதிர்வினைகள் போல் தான் பிரித்தானியா பிரதமரின் ஆட்சி நகர்கிறது. விஞ்ஞானத்தை பின்பற்றுகின்றேன் பொருளாதாரத்தை காப்பாற்றுகின்றேன் கல்விக்கு முன்னுரிமை கொடுக்கின்றேன் என்று சொல்லிச் சொல்லி அவற்றை அரசு சீரழித்து வருகின்றது.

அரசின் பொய்யும் புரட்டும்:
அரசின் விஞ்ஞான மருத்துவக்குழுவின் ஆலோசணைகளை அரசு உதாசீனப் படுத்தியது மட்டுமல்ல அதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை; இதுவெல்லாம் கற்பனைக் கதைகள் என்றெல்லாம் பிரித்தானிய பாராளுமன்றத்தில் அரச தரப்பு கொன்சவேடிவ் பாராளுமன்ற உறுப்பினர்கள் குற்றம்சாட்டினர். பிரித்தானிய பிரதமரும் கொன்சவேடிவ் கட்சியும் அவர்களது பிரச்சாரப் பீரங்கிகளான சன் மற்றும் டெய்லி மெயில் ஊடகங்களும்; 1980களில் தைப்பொங்கலுக்கு தமிழீழம் என்று தமிழ் இயக்கங்கள் ரீல் விட்டது போல கிறிஸ்மஸ் இற்குள் வைரஸ்யை வென்றுவிடுவோம் என்றெல்லாம் ரீல் விட்டன. புதிய வக்சினுக்கு விழுந்துகட்டி அனுமதியயை வழங்கிவிட்டு தாங்கள் தான் உலகத்திலேயே முதல் முதல் வக்சீன் போடுவதாக பீலாவிட்டனர். சினா, கொரியா, சிங்கப்பூர் போன்ற ஆசிய நாடுகள் வைரஸ்யை முழுமையாக கட்டுப்படுத்தி, பொருளாதாரத்தை கட்டி எழுப்பி வரும் நிலையில் பிரித்தானிய அரசு இன்றும் ‘வாய்ச் சொல் வீரன்’ என்ற நிலையில் தப்பட்டம் அடிப்பவர்களாகவே உள்ளனர்.

சீனா, ரஸ்யா போன்ற நாடுகளும் புதிய வக்சீனை அறிமுகப்படுத்தி வருகின்ற நிலையில் அவர்கள் வக்சீன் தவிர்ந்த ஏனைய கட்டுப்பாடுகளாலும் நோயயைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளனர். மேலும் ரஸ்யாவின் ஸ்புட்னிக்-5 வக்சீனை பரீட்சித்துப் பார்க்க அஸ்ராசெனிக்கா என்ற பெரும் பார்மஸிட்டிகல் நிறுவனமும் முன்வந்துள்ளது. ஸ்புட்னிக் – 5 வக்சீனுக்கு பயன்படுத்திய கூறுகள் வைரஸ்ற்கு எதிராக கூடிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது என்றும் அதன் கூறுகள் இயற்கையான வைரஸ் கூறுகளில் இருந்து தயாரிக்கப்பட்டதால் அந்த வக்சீன் நீண்ட கால பாதுகாப்பை வழங்கும் என்றும் கருதப்படுகின்றது. இவை பற்றியெல்லாம் பிரித்தானிய ஊடகங்கள் மூச்சுவிடுவதில்லை. நினைப்பு பிழைப்பை கெடுத்த கதையாக பிரித்தானியாவின் கோவிட்-19 மரணங்கள் இந்த ஆண்டு முடிவதற்குள் 70,000 தை தாண்டிவிடும் நிலைக்கு வந்துவிட்டது.

பிரித்தானிய அரசின் ஊழல் மோசடி:
கோவிட்-19 காரணமாக ஏற்பட்ட அசாதாரண நிலைமையை கையாள பிரித்தானிய அரசு 200 பில்லியன் பவுண்களை கடன் வாங்கியது. அதில் 10 வீதமான நிதி 20 பில்லியன் பவுண்கள் பாதுகாப்பு அங்கிகளை வாங்குவதற்கு செலவிடப்பட்டது. இந்தப் பாதுகாப்பு அங்கிகளை வாங்குவதற்கு தெரிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் பலவும் அது தொடர்பான எவ்வித முன் அனுபவங்களும் அற்ற நிறுவனங்கள் மட்டுமல்ல, அவைகளில் பெரும்பாலானவை கொன்சவேடிவ் கட்சியுடன் nநெருக்கமானவர்களின் நிறுவனங்களாகவும் இருக்கின்றது. மேலும் இந்நிறுவனங்கள் பாதுகாப்பு அங்கிகளை உற்பத்தி செய்வதனிலும் அதனை சீனாவிடம் இருந்து இறக்குமதி செய்துள்ளன. ஒரு சில பெனிகளுக்கு சீனாவிடம் இருந்து பொருட்களைத் தருவித்து, அதனை ஐம்பது முதல் ஆயிரம் மடங்கு வரை விலைகளை உயர்த்தி பிரித்தானிய மருத்துவமனைகளுக்கு விற்றுள்ளனர். 20 பில்லியனுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு அங்கிகளின் உண்மையான பெறுமதி 10 பில்லியன் பவுண்களே என மதிப்பிடப்படுகின்றது. உயிர்களைப் பணயம் வைத்து கொள்ளை இலாபம் ஈட்டிக்கொள்வதில் பிரித்தானிய ஆளும் கட்சி – கொன்சவேடிவ் கட்சி ஈடுபட்டு இருந்தமை நியுயோர்க் ரைம்ஸ் புலனாய்வுக் கட்டுரையில் அம்பலப்படுத்தப்பட்டு உள்ளது.

மேலும் ‘ரெஸ்ற் அன் ரேஸ்’ போன்ற கோவிட்-19 பரிசோதணை செயற்பாடுகள் கூடி அனுபவமிக்க பல்கலைக்கழகங்கள், பிரித்தானிய மருத்துவமனைகளுக்கு வழங்கப்படாமல் எவ்வித அனுபவமுமற்ற தனியார் நிறுவனங்களுக்கு வழங்கி, அவர்களுக்கு மில்லியன் கணக்கான நிதி வழங்கப்பட்டுள்ளது.

பள்ளி விடுமுறைகாலத்தில் மாணவர்களின் பட்டினியயைப் போக்க நான்கு மில்லியன் பவுண்களை ஒதுக்க மனமிரங்காத பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் தனது நெருங்கிய வட்டங்கள் 10 பில்லியனை சூறையாடுவதற்கு அனுமதித்துள்ளார். சில தினங்களுக்கு முன்னதாக யுனிசெவ் பிரித்தானியச் சிறார்கள் பட்டினியயை எதிர்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பதை அறிந்து விசேட் திட்டத்தை பிரித்தானியாவில் நடைமுறைப்படுத்த உள்ளனர். இவ்வாறாக பிரித்தானியச் சிறார்களை பட்டினியில் இருந்து காக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை கடந்த பத்து ஆண்டு கொன்சவேடிவ் ஆட்சிக்காலத்தில் தான் ஏற்பட்டு உள்ளது.

பில்லியனெயர்களின் வருமானம் அதிகரிப்பு:
2020ம் ஆண்டின் சமாதானத்திற்கான நோபல் பரிசு உலக உணவுத் திட்டத்தின் தலைமை அதிகாரியான டேவிட் பெய்ஸ்லிக்கு வழங்கப்பட்டது. அவருடைய கணிப்பின் படி கோவிட்ட-19 இன் பாதிப்பினால் உலகெங்கும் 270 மில்லின் மக்கள் ஒரு நேர உணவுக்கு வழியில்லாமல் பட்டினியயை நோக்கித் தளளப்பட்டு உள்ளனர். இவர்களை பட்டினியில் இருந்து மீட்க 15 முதல் 20 பில்லியன் டொலர் நிதி தேவைப்படுகின்றது. ஆனால் அதனை பெற்றுக்கொள்வது மிகக் கடினமாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

ஆனால் 2020 ஏப்ரல் முதல் யூலை வரையான நான்கு மாதங்களில் உலகில் உள்ள 2200 பில்லியனெயர்கள் – செல்வந்தர்கள் 2.7 ரில்லியன் டொலர்களைச் சம்பாதித்து உள்ளனர். அதாவது 1000 பில்லியன் ஒரு ரில்லியன். 2.7 ரில்லியன் சம்பாதித்தவர்களுக்கு ஒரு 20 பில்லியன் வழங்கி 270 மில்லியன் மக்களை காப்பாற்ற முடியாத ஒரு விலங்கினக் கூட்டத்தில் தான் நாங்கள் வாழ்கின்றோம்.

அதிஸ்ரவசமாக உழைத்த உழைக்காத அசையும் அசையாத சொத்துக்கள் எதையும் பரலோகத்திற்கு எடுத்துச் செல்ல முடியாததால் இன்னும் மனித இனம் இப்பூமியில் வாழ முடிகின்றது. தசம் ஒரு வீத சொத்தை பரலோகம் கொண்டு செல்ல முடியும் என்றொரு நிலை இருந்திருந்தால் இந்த 2200 செல்வந்தப் பிசாசுகளும் ஒட்டுமொத்த மனித இனத்தையே அழித்து, சொத்துக்களை பரலோகம் கொண்டு போயிருக்கும். இந்தப் பரலோகத்தில் இருக்கும் பரம பிதாக்கள் சிவபெருமான், யேசுநாதர், அல்லா என்று இப்படி இன்னோரன்னவர்களின் தொலைபேசி இலக்கம் இருந்தால் பதிவிடுங்கள் ஒரு சூம் மிற்றிங் போட்டு இதற்கான தீர்வு பற்றி டிஸ்கஸ் பண்ணலாம்!

LPL 2020 – முதல்தொடரில் முடிசூடியது யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ்! 

லங்கா பிரீமியர் லீக் இருபதுக்கு இருபது தொடரில் யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் அணி வெற்றிக் கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளது.

லங்கா பிரீமியர் லீக் தொடர் கடந்த நவம்பர் 26ஆம் திகதி ஆரம்பமாகியிருந்த நிலையில் நேற்று இறுதிப் போட்டி நடைபெற்றது.

இறுதிப் போட்டியில் காலி கிளாடியேற்றர்ஸ் மற்றும் யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் அணிகள் மோதியிருந்தன.

இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாண அணி நிர்ணயிக்கப்பட்ட 20 பந்துப்பரிமாற்றாங்கள் நிறைவில் ஆறு விக்கெட்டுகள் இழப்பிற்கு 188 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அணிசார்பாக, சொய்ப் மலிக் 46 ஓட்டங்களையும், திசர பெரேரா ஆட்டமிழக்காமல் 39 ஓட்டங்களையும் தனஞ்சய டி சில்வா 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் தனஞ்சய லக்சன் மூன்று இலக்குகளைக் கைப்பற்றினார்.

இந்நிலையில், பதிலுக்கு 189 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய காலி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் ஒன்பது இலக்குகளை இழந்து 135 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இந்நிலையில் 53 ஓட்டங்களால் காலி அணி தோல்வியடைந்தது.

அணிசார்பாக, பானுக ராஜபக்ச 40 ஓட்டங்களையும் அசம் கான் 36 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சில், உஸ்மன் சின்வாரி மற்றும் சொய்ப் மலிக் ஆகியோர் தலா இரண்டு இலக்குகளைக் கைப்பற்றயிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இறுதிப்போட்டியின் ஆட்டநாயகனாக சொகைய்ப்மாலிக் தெரிவு செய்யப்பட்டதுடன் தொடரின்நாயகனாக ஹசரங்க தெரிவுசெய்யப்பட்டார்.

LPL 2020 – தம்புள்ளையை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு நுழைந்தது ஜஃப்னா! 

நடைபெற்றுவரும் லங்கா பிரீமியர் லீக் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் அணி 37 ஓட்டங்களால் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.

தம்புள்ள வைக்கிங் அணிக்கெதிரான இந்தப் போட்டி அம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற தம்புள்ள அணி முதலில் களத்தடுப்பைத் தெரிவுசெய்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய யாழ்ப்பாண அணி நிர்ணயிக்கப்பட்ட 20 பந்துரிமாற்றங்கள் நிறைவில் ஒன்பது விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அணி சார்பாக ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாகக் களமிறங்கிய சார்ளஸ் 76 ஓட்டங்களையும் அவிஸ்க பெர்னாண்டோ 39 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்நிலையில், பதிலுக்கு 166 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய தம்புள்ள அணி, 19.1 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் சகல இலக்குகளையும் இழந்து 128 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. இந்நிலையில், 37 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

அணிசார்பாக, உபுல் தரங்க 33 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்ததுடன் பந்துவீச்சில் வனின்டு கசரங்க மூன்று இலக்குகளைக் கைப்பற்றினார்.

போட்டியின் ஆட்டநாயகனாக சார்ளஸ் தெரிவானார்.

இந்நிலையில், இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ள யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் அணி இறுதிப் போட்டியில் காலி கிளாடியேற்றர்ஸ் அணியுடன் வரும் 16ஆம் திகதி மோதவுள்ளது.

“தமிழ் அரசியல் கைதிகள் விடுவிப்பில் அரச கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதங்கள் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து நேர்மையாக ,தீவிரமாக ஈடுபட வேண்டும்”- ஈ.சரவணபவன் வலியுறுத்தல்! 

“தமிழ் அரசியல் கைதிகள் விடுவிப்பில் அரச கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதங்கள் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து நேர்மையாக ,தீவிரமாக ஈடுபட வேண்டும்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் வலியுறுத்தியுள்ளார்.

அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அரச ஆதரவாளர்கள், அரசியல்வாதிகள் உட்படத் தற்போது சிறைவாசம் அனுபவிக்கும் பலரை விடுவிக்கக் கோரி அரச தரப்பினரால் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. அவர்களை விடுவிப்பதற்கு வழி தேட வேண்டிய நிலையில் ஜனாதிபதியும், பிரதமரும் இருக்கின்றார்கள். அவர்களைச் சட்டபூர்வமாக விடுவிக்க முடியாது என்பதும், எல்லோரையும் பொதுமன்னிப்பில் விடுவித்தால் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும் என்பதும் தெரிந்த விடயம்.

இப்போது, போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புட்ட 607 கைதிகளைப் புனர்வாழ்வுக்கு அனுப்புவது பற்றியும், சிறுகுற்றங்கள் செய்து சிறையிலுள்ள 800 கைதிகளை விடுவிப்பதற்கும், தூக்குத் தண்டனைக் கைதிகளின் தண்டனையை, ஆயுள் தண்டனையாக மாற்றுவதற்கும் சட்டமா அதிபரின் ஆலோசனை கோரப்பட்டுள்ளது.

இப்படிப் பலர் விடுவிக்கப்படும்போது, அரச ஆதரவாளர்கள், அரசியல்வாதிகள் இத்தகைய காரணங்களைக் காட்டி பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படும் சாத்தியங்கள் உண்டு. அதற்காகச் சில அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்பது அரசின் தேவையாகவும் இருக்கலாம்.

இத்தகைய சந்தர்ப்பதில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்க விடயம். எனினும், ஒரு சில அரசியல் கைதிகளை மட்டும் விடுவிப்பது என்ற நிலையுடன் அந்த முயற்சி நின்றுவிடக் கூடாது என்பதுதான முக்கியமான விடயம். வழக்கு நிலுவையில் உள்ளவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்க முடியாது என்ற காரணங்களை அரசு கற்பித்து, பலரின் விடுதலை தட்டிக்கழிக்கப்படும் சந்தர்ப்பங்களும் உள்ளன. அதனால் சட்டமா அதிபர் வழக்குகளைத் திரும்பப் பெறுவதன் ஊடாக, அவர்களைப் பொதுமன்னிப்புக்கு உரியவர்களாக்க முடியும் என்ற விடயம் வலியுறுத்தப்பட வேண்டும்.

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து இந்த விடயத்தில் நேர்மையாகவும், தீவிரமாகவும் ஈடுபட வேண்டும் என்று கோருகின்றோம் என தெரிவித்துள்ளார்.

அண்மையில் அரசுடன் உள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக கவனமெடுக்குமாறு நீதியமைச்சரிடம் மனு ஒன்றினை கையளித்திருந்ததுடன் தமிழ்தேசிய கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரிடமும் அரசியல்கைதிகள் விடுதலை தொடர்பில் மனு ஒன்றை கையளித்திருந்தமையும் குறிப்பிடத்ததக்கது.

லங்கன் பிரீமியர் லீக் – 2020 – ஜஃப்னா ஸ்டாலியன்ஸை வீழ்த்தியது கண்டி !

லங்கன் பிரீமியர் லீக் – 2020 போட்டிகள்  விறுவிறுப்பாக நடைபெற்று வருவதுடன் போட்டிகள் நிறைவுக்கட்டத்தை நெருங்கி வருகின்றன.

இந்நிலையில் லங்கன் பிரீமியர் லீக் இன் 16ஆவது ஆட்டத்தில் இன்று மாலை ஜஃப்னா ஸ்டாலியன்ஸ் அணியும் கண்டி டஸ்கர்ஸ் அணியும் மோதின. நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஜஃப்னா ஸ்டாலியன்ஸ் துடுப்பாட்டத்தை தேர்வு செய்து களமிறங்கியது.

ஆரம்பம் முதலே தொய்வான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய ஜஃப்னா ஸ்டாலியன்ஸ் அணி 20 பந்துப்பரிமாற்றங்களின் நிறைவில் தன்னுடைய சகல விக்கெட்டுக்களையும் இழந்து 150 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

ஜஃப்னா ஸ்டாலியன்ஸ் அணி சார்பில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சொஹைப்மலிக் 44 பந்துகளில் 59 ஓட்டங்களை பெற்றமையே அணிக்கான அதிகபட்சமான ஓட்டமாக காணப்பட்டது.

Image may contain: 1 person, playing a sport and baseball, text that says "@My11CIRCLE LPL SHOAIB MALIK 52 (38) 一 Cricket TEIG ROUP f FACEBOOK.COM/LPLT20 JAFFNA STALLIONS VS KANDY TUSKERS DECEMBER 9T 2020 In INSTAGRAM.COM/LPLT20 TWITTER.COM/LPLT20"

151 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய கண்டி அணி ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அணி சார்பாக தலைவர் குசல்பெரரா 42 ஓட்டங்களை பெற்றார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய குணரட்ணே – இர்பான்பதான் ஜோடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றது. குணரட்ணே 52 ஓட்டங்களையும் இர்பான்பதான் 25 ஓட்டங்களையும் பெற 19 ஆவது பந்துப்பரிமாற்றத்தின் முதல் பந்திலேயே கண்டி வெற்றியை உறுதிப்படுத்தியது.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குணரட்ணே போட்டியின் ஆட்டநாயகான தெரிவானார்.

Image may contain: one or more people, text that says "OMY11CIRCLE LPL T2O Hats AINTS ra THEIPG GROUP MAN OF THE MATCH ASELA GUNARATNE JAFFNA STALLIONS VS KANDY TUSKERS DECEMBER 9TH 2020 FACEBOOK.COM/LPLT20 TWITTER.COM/LPLT20 INSTAGRAM.COM/LPLT20"

நடராஜனை கொண்டாடிய இந்திய கிரிக்கெட் வீரர்கள் !

அவுஸ்ரேலிய அணிக்கு எதிரான இருபதுக்கு இருபது தொடரில் இந்தியஅணியில் களமிறங்கியிருந்த தமிழகவீரர் நடராஜன் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளார். மிக பின்தங்கிய குடும்பத்தில் இருந்து இவ்வளவு தூரத்துக்கு முன்னேறியுள்ள நடராஜன் நடைபெற்று முடிந்த தொடரில் மொத்தமாக 06 இலக்குகளை வீழ்த்தியிருந்தார்.
இந்நிலையில், டி20 உலக கோப்பைக்கு எங்களுக்கு கிடைத்த சொத்து நடராஜன் என இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி புகழ்ந்துள்ளார்.
இதுதொடர்பாக கேப்டன் விராட் கோலி கூறுகையில், “பும்ரா மற்றும் சமி இல்லாத சூழலில் சிறந்த முறையில் நடராஜன் விளையாடினார். நெருக்கடியான நிலையில் உண்மையில் நின்று விளையாடினார். சர்வதேச அளவில், நடைபெற்ற போட்டியில் சிறந்த ஆட்டத்தினை அவர் வெளிப்படுத்தி உள்ளார். அவர் மிக தேர்ந்தவராக, கடின உழைப்பு மற்றும் பணிவு கொண்டவராகவும் இருக்கிறார். அவருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இடதுகை பந்து வீச்சாளர் என்பவர் எப்பொழுதும் அணிக்கு கிடைக்க கூடிய ஒரு சொத்து. இதேபோன்று களத்தில் அவரது ஆட்டம் தொடர்ந்து வெளிப்பட்டால், அடுத்த ஆண்டு நடைபெறும் சர்வதேச டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு சிறந்த ஒன்றாக இருக்கும் என தெரிவித்தார்.

அதே நேரம் நேற்றைய போட்டி முடிவில் ஹர்திக் பாண்ட்யாவுக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. ஆனால், அதை பெற்றுக் கொண்ட ஹர்திக், அந்த விருதுக்கு தகுதியானவர் தமிழக வீரர் நடராஜன் என்று கூறி கோப்பையை அவரிடம் வழங்கினார். இதேபோல, இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோலியும், 20 ஓவர்  தொடருக்கான கோப்பையை நடராஜனிடம் வழங்கி அவரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

தொடர் நாயகன் விருது கோப்பையை நடராஜன் கையில் வழங்கி அழகு பார்த்த ஹர்திக் பாண்ட்யா

ஆஸிக்கு ஆறுதல் வெற்றி – தொடரை கைப்பற்றியது இந்தியா !

இந்தியக் கிரிக்கெட் அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு இருபது போட்டியில், அவுஸ்ரேலியா அணி 12 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

சிட்னி மைதானத்தில் இன்று (செவ்வாய்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலியா அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 பந்துப்பரிமாற்றங்களில் நிறைவில் 5 இலக்குகள் இழப்புக்கு 186 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மத்தியு வேட் 80 ஓட்டங்களையும் க்ளென் மேக்ஸ்வெல் 54 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

ஆஸி.க்கு எதிரான கடைசி டி20 போட்டி: இந்தியாவுக்கு 187 ரன்கள் வெற்றி இலக்கு

இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், வொஷிங்டன் சுந்தர் 2 இலக்குகளையும் நடராஜன் மற்றும் சர்துல் தாகூர் ஆகியோர் தலா 1 இலக்கினையும் வீழ்த்தினர்.

தொடர்ந்து 187 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இந்தியா அணியால், 20 பந்துப்பரிமாற்றங்களில் நிறைவில் 7 இலக்குகள் இழப்புக்கு 174 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் அவுஸ்ரேலியா அணி 12 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இந்தப் போட்டியில் இந்தியா அணி தோல்வியை தழுவியிருந்தாலும், மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரை இந்தியா அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

இதன்போது இந்திய அணி சார்பில், அதிகப்பட்ச ஓட்டங்களாக அணித்தலைவர் விராட் கோஹ்லி 85 ஓட்டங்களையும் ஷிகர் தவான் 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், மிட்செல் ஸ்வெப்சன் 3 இலக்குகளையும் மேக்ஸ்வெல், ஆடம்செம்பா, சீன் அபோட் மற்றும் ஹென்ரிவ் டை ஆகியோர் தலா 1 இலக்குகளையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக அவுஸ்ரேலிய அணியின் மிட்செல் ஸ்வெப்சன் தெரிவுசெய்யப்பட்டார். தொடரின் நாயகனாக ஹர்திக் பாண்ட்யா தெரிவுசெய்யப்பட்டார்.

ஹார்டிக் பாண்ட்யா அபாரம் – அவுஸ்ரலியாவை பழிவாங்கியது இந்தியா !

அவுஸ்ரேலியாவுக்கு சுற்றப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் அவுஸ்ரேலியாவை எதிர்கொள்கின்றது. ஏற்கனவே ஒருநாள் தொடரை இழந்திருந்த இந்திய அணி மூன்று போட்டிகளை கொண்ட இருபதுக்கு 20 போட்டியில் ஒரு வெற்றியை பெற்றிருந்த நிலையில் இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் இன்று களம் கண்டது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பைத் தெரிவு செய்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 பந்துப்பரிமாற்றங்களில் 5 இலக்குகள் இழப்புக்கு 194 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

அவுஸ்திரேலிய அணி சார்பில் மத்தேயு வேட் 58 ஓட்டங்களையும் ,ஸ்டீவன் ஸ்மித் 46 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

195 எனும் இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 19 .4 ஓவர்களில் வெற்றியிலக்கைக் கடந்து அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.

இந்திய அணி சார்பில் ஷிகர் தவான் 52 ஓட்டங்களையும் விராட் கோலி 40 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். ஹர்திக் பாண்ட்யா 22 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 42 ஓட்டங்களும், ஷ்ரேயாஸ் அய்யர் 5 பந்தில் 12 ஓட்டங்களும் எடுத்து ஆட்மிழக்காமல் இருந்தனர். இந்த வெற்றி மூலம் இந்தியா 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என வென்றுள்ளது.

இந்த நிலையில் போட்டியின் சிறப்பாட்டக்காரராக ஹார்டிக் பாண்ட்யா தெரிவு செய்யப்பட்டார்.

அத்துடன், 3 போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு 20 தொடரை இந்திய அணி 2 க்கு 0 என கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விண்வெளியில் முள்ளங்கி அறுவடை – நாசாவின் முயற்சி வெற்றி !

பூமியில் இருந்து 408 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை அமெரிக்கா, ரஷ்யா, கனடா, ஐப்பான் ஆகிய நாடுகள் இணைந்து நிறுவியுள்ளன.

அங்கு தங்கியுள்ள விண்வெளி வீரர்கள் ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அவர்கள் பூமியில் இருந்து உணவை கொண்டு சென்றாலும் அதை நீண்ட நாட்களுக்கு உண்ண முடியாது. இதனால் விண்வெளி வீரர்கள் விட்டமின் சத்துக்கள் உள்ள மாத்திரைகளையே உணவாக சாப்பிடுகிறார்கள்.

இந்த நிலையில் புவி ஈர்ப்பு விசை சிறிதும் இல்லாத விண்வெளி நிலையத்தில் காய்கறி செடிகளை வளர்க்கும் ஆராய்ச்சியில் அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். விண்வெளி வீரர்களுக்கு வழங்குவதற்காக இந்த முயற்சியை மேற்கொண் டனர்.

இதற்காக குளிர்சாதன பெட்டி போன்று இயந்திரத்தை உருவாக்கி, செடிகள் வளருவதற்கு ஒக்சிஜன் மற்றும் செயற்கை சூரிய ஒளியை அளிக்கும் கருவி ஆகியவற்றை இணைத்தனர்.

அந்த இயந்திரத்துடன் பூமியில் உள்ள மண், உரம், சில செடி வகைகள் ஆகியவற்றை விண்வெளி வீரர்கள் எடுத்துக்கொண்டு கடந்த மாதம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்றனர். பின்னர் செடிகளை இயந்திரத்துக்குள் வைத்து தண்ணீர் ஊற்றி விஞ்ஞானிகள் பராமரித்தனர். இதில் பல செடிகள் பாதியிலேயே அழுகிவிட முள்ளங்கி செடி மட்டும் 27 நாட்களுக்குள் முழுவதுமாக வளர்ந்தது. இதையடுத்து அந்த முள்ளங்கி செடியை விண்வெளி வீராங்கனை கேட் ரூபின்ஸ் அறுவடை செய்தார்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் முள்ளங்கி அறுவடை - நாசாவின் முயற்சி வெற்றி!! -  Live LK

இந்த வீடியோவை நாசா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

விண்வெளியில் காய்கறியை பயிரிட்டு அறுவடை செய்வது இதுவே முதல் முறை.

லங்கா பிரீமியர் லீக் 2020 – யாழ்ப்பாண ஸ்டாலியன்ஸ் அணி முதல் தோல்வி !

லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரில், யாழ்ப்பாண ஸ்டாலியன்ஸ் அணி முதல் தோல்வியை தழுவியுள்ளது.

ஹம்பாந்தோட்டை மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற 11ஆவது லீக் போட்டியில், யாழ்ப்பாண ஸ்டாலியன்ஸ் அணியும் கொழும்பு கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொழும்பு கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 இலக்குகள் இழப்புக்கு 148 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, வனிந்து ஹசரங்க 41 ஓட்டங்களையும் அவிஷ்க பெனார்டோ 26 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

கொழும்பு கிங்ஸ் அணியின் பந்துவீச்சில், குய்ஸ் அஹமட் 3 இலக்குகளையும் சமீர 2 இலக்குகளையும் மத்தியூஸ், உதான, கௌசல் மற்றும் ரஸ்ஸல் ஆகியோர் தலா 1 இலக்குகளையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 149 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய கொழும்பு கிங்ஸ் அணி, 19.2 பந்துப்பரிமாற்றங்களில் நிறைவில் 4 இலக்குகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் கொழும்பு கிங்ஸ் அணி 6 இலக்குகளால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, தினேஷ் சந்திமால் ஆட்டமிழக்காது 68 ஓட்டங்களையும் ஆந்ரே ரஸ்ஸல் 32 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

யாழ்ப்பாண அணியின் பந்துவீச்சில், வனிந்து ஹசரங்க 2 இலக்குகளையும் வியாஸ்காந் மற்றும் சதுரங்க டி சில்வா ஆகியோர் தலா 1 இலக்கினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக 51 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 7 பவுண்ரிகள் அடங்களாக 68 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட தினேஷ் சந்திமால் தெரிவுசெய்யப்பட்டார்.

இந்தப் போட்டியின் ஊடாக வலதுக் கை சுழற்பந்து வீச்சாளரான விஜயகாந் வியாஸ்காந், லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரில், அறிமுகத்தை பெற்றுக்கொண்டார். இதன்மூலம்  லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடருக்கு தெரிவான முதல் தமிழன் என்ற பெருமையை அவர் பெற்றார்.

மத்தியூஸின் ஆட்டமிழப்பை யாழ்ப்பாண அணிக்கு பிறந்தநாள் விருந்தாக கொடுத்த  வியாஸ்காந்த்! | NewUthayan