செய்திகள்

செய்திகள்

செய்திகள்

ராஜபக்சக்களுக்கு எதிரான போராட்டத்தின் திரை மறைவிலுள்ள குமார் குணரட்ணம் யார் ?- இடதுசாரிகள் ஆட்சி பீடமேறும் வரை தொடரப்போகும் போராட்டம்..!

No description available.இலங்கையின் அரசியலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அடுத்தடுத்து பல்வேறுபட்ட மாற்றங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. மே மாதம் ஒன்பதாம் தேதி உக்கிரமடைந்த ராஜபக்ச அரசுக்கு எதிரான போராட்டம் இந்த மாதம் ஒன்பதாம் தேதி இன்னும் உச்சமடைந்திருந்தது. உண்மையிலேயே ராஜபக்ச அரசின் எதேச்சதிகாரமும் – கண்மூடித்தனமான அரசியல் நகர்வுகளும் – சுயநல அரசியல் போக்கும் கேள்விக்கு உட்படுத்தப்பட வேண்டியவை இதில் எந்த சந்தேகமும் இல்லை. அடுத்த 20 வருடங்களுக்கு ராஜபக்சக்கள்தான் நாட்டை ஆளப்போகிறார்கள் பல அரசியல் ஆய்வாளர்களாளும் எதிர்வு கூறப்பட்ட நிலையில்   சுமார் 69 லட்சம் மக்கள் ஓட்டுக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் ஒன்று இவ்வளவு வேகமாக மண்ணை கவ்வியது. ஏன்..? எதற்கு..? எவ்வாறு..?  என்ற கேள்விகளை விட இந்தப் போராட்டங்களுக்கு பின்னணியில் – திரை மறைவில் இருப்பவர்கள் யார்..? இந்தப் போராட்டம் சுமார் மூன்று மாத காலங்களை தாண்டியும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்தப் போராட்டங்களில் பின்னணியிலிருந்து இயக்கிக் கொண்டிருக்க கூடிய அந்த நிறுவனம் யாருடையது..? இப்படியாக பல கேள்விகள் தோன்றி மறைந்த வண்ணமே உள்ளன.

இந்தக் கேள்விகள் ஒரு மையப் புள்ளியை நோக்கி இருக்கின்றன. அவை தான் இடதுசாரிய கட்சிகள்.
ராஜபக்ச அரசுக்கு எதிரான இந்த போராட்டங்களில் முனைப்பு காட்டுகின்ற அமைப்புகள் என்ற வகையில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்களும், இலங்கை தொழிலாளர் சங்கங்களும் முக்கியமானவை. வடக்கு – கிழக்கு இலங்கையை காட்டிலும் தென் இலங்கையில் அதிகமாக மாணவர் ஒன்றியங்களையும் –  தொழிலாளர் சங்கங்களையும் இணைக்கின்ற ஒரு மையப் புள்ளியாக இடதுசாரிய  கட்சிகள் காணப்படுகின்றன. இன்றைய போராட்டங்களை முன்னெடுக்கும் மிகப்பெரிய அமைப்புக்களாகவும் இந்த இடதுசாரி கட்சிகளை குறிப்பிடலாம். ஜே.வி.பி எனப்படும் மக்கள் விடுதலை முன்னணியும், முன்னணி சோசலிச கட்சி ஆகிய இரண்டு அமைப்புகள் இந்த போராட்டத்தில் திரை மறைவில் இருந்து செயல்படுவதை அவதானிக்க முடிகிறது.
ஏற்கனவே தேசத்தின்  முன்னைய கட்டுரை ஒன்றில் ராஜபக்ச களுக்கு எதிராக அரங்கேறிக் கொண்டிருக்கும் இந்தப் போராட்டத்தில் ஜே.வி.பி மறைமுக மற்றும் நேரடி தலையீடு தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வருட மே மாதம் மற்றும் ஜூன் மாதம் அளவில் போராட்டங்கள் மிக உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அனானிமஸ் என்ற மர்ம குழு தொடர்பான கருத்துக்கள் வேகமாக உலா வரத் தொடங்கியிருந்தன. இலங்கையின் அரசியல் அடித்தளத்தையே நாம் மாற்றப் போகிறோம். அரசியல்வாதிகளின் ஊழல்களை நாம் வெளியிட போகிறோம் என்ற வகையிலாக பல பிரச்சாரங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியிருந்தன.
கோட்டா கோ ஹோம் போராட்டங்கள் வலுவடைந்து கொண்டிருந்த போது

Who are the Anonymous group and why they are censoring Russian state media | Deccan Heraldகணினி ஹேக்கர்களில் குழுவான  ‘அனானிமஸ்,(anonymous) குழு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை எச்சரிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்ததது. 14 நாட்களுக்குள் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் எனவும் புதிய பாராளுமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் எனவும் அந்த காணொளியில் அவர்கள் சுட்டிக்காட்டியிருந்ததது. இல்லாவிட்டால் ராஜபக்ஷ  குடும்பத்தின் அனைத்து ரகசியங்களும் வெளியாகும் என அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டிருந்ததது.

இந்த வீடியோ தொடர்பான எச்சரிக்கை வெளியானதை தொடர்ந்து  இலங்கையின் சமூக வலைதளங்களில் இது தொடர்பான வாதங்கள் அதிகமாகியிருந்ததது. இதனை  தொடர்ந்து ஒரு சில நாட்களுக்குள்  ஜே.வி.பி தலைவர் அனுர குமார திஸநாயக்க அவசர அவசரமாக ஒரு ஊடக சந்திப்பை கூட்டி ராஜபக்சக்களதும், சஜித் பிரேமதாச, மைத்திரிபால சிறீசேன குழுவினரதும், ரணில் விக்கிரமசிங்கவினதும் கடந்த கால ஊழல்களை அம்பலப்படுத்தியிருந்தார். ராஜபக்சக்கள் மீதான கோபத்தையும் போராட்டத்தையும் தங்கள் பக்கமாக திருப்பி  ஜே.வி.பி மட்டுமே இலங்கையின் உண்மையான கட்சி என்பது போன்றதான ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவதாகவே இந்த சம்பவத்தை பார்க்க வேண்டியுள்ளது.
அனானிமஸ் குழுவினது ஆதாரங்களை எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஊடகங்களுக்கு அனானிமஸ் குழுவினது ஆதாரங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவனவாக தோன்றாத நிலையில் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தக்கூடியதான ஜே.வி.பியின் செய்திகளை காவிக்கொண்டு திரிந்தன. இதே காலத்தில் ஜே.வி.பி சார்பு ஊடகங்களும் – சில கொமினியூஸ்ட் எழுத்தாளர்களும் ஜே.வி.பி யே மீட்க தகுதியானவர்கள் என குறிப்பிட்டு எழுத தொடங்கினர்.
மக்கள் போராட்டம் என கூறப்பட்ட ஒரு போராட்டத்தை ஜே.வி.பி தன் பக்கம் கவர முற்படுகிறதோ என்ற ஐயம் தான் இங்கு அதிகமாக உள்ளது.
Sri Lanka Tweet 🇱🇰 💉's tweet - "A group including Leader of the JVP Anura Kumara Dissanayake arrives at the Galle Face green protest site - Hiru #LKA #SriLanka " - Trendsmap
அரசுக்கு எதிரான இந்த போராட்டங்களை முனைப்போடு ஆரம்பத்தில் எதிர்த்துக் கொண்டிருந்தது  எதிர்க்கட்சியான சஜித் பிரேமதாச தலைமை தாங்கும்  ஐக்கிய மக்கள் சக்தியே ஆகும். தொழிற்சங்கங்களினதும் – பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்களினதும் வருகையை தொடர்ந்து போராட்டம் முழுமையாக இடது சாரிய கட்சிகளின் பக்கம் சாய தொடங்கிவிட்டதை காணமுடிகின்றது.  மே- 9 ராஜபக்சக்களுக்கு எதிரான போராட்டம் உச்சமாக வலுவடைந்த போது அரசுக்கு எதிராக போராடிய போராட்டக்காரர்கள் அரச ஆதரவு குண்டர்களால் தாக்கப்பட்டனர். தாக்கப்பட்டோரை காலி முகத்திடலுக்கு ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச,  போராட்டக்காரர்கள் என குறிப்பிடப்பட்ட பலரால் துரத்தப்பட்டார். எனினும் அதே நேரம் போராட்ட களத்தை காண வந்த ஜே.வி.பி தலைவர் அனுரகுமார கைத்தாங்களாகவும் – கையசைத்தும் அந்த பரபரப்புக்குள்ளும் வரவேற்கப்பட்டார். இதனை ஊடகங்களும் பெரிய செய்தியாக காட்சிப்படுத்தின. ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்று இரண்டு மாதங்கள் வரை தொடர்ச்சியாக அமைதிப் பேணப்பட்டு வந்த நிலையில் இந்த மாத தொடக்கத்தில் கோட்டபாய ராஜபக்சவுக்கு எதிரான போராட்டத்திற்கான திகதியாக ஜூலை ஒன்பதாம் திகதியை பிரகடனப்படுத்தியதும் ஜே.வி.பி யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க என்பது கவனிக்கத்தக்கது.
உண்மையிலேயே இது மக்கள் போராட்டம் எனில் குறிப்பிட்ட ஒரு கட்சியின் பிரமுகரை மட்டும் தாக்கி – இன்னுமொரு கட்சி பிரமுகரை வரவேற்பது எந்தளவுக்கு பொருத்தமானது என்பதும் சிந்திக்கப்பட வேண்டியதே..!
ஜே.வி.பி மட்டுமா இந்தப் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்கின்றது என்றால் இல்லை.
அரசுக்கு எதிரான இந்தப் போராட்ட காலகட்டங்களில் பல்கலைக்கழக மாணவர்கள் அதிகம் உச்சரிக்கப்பட்ட பெயர் – சமூக ஊடகங்களில் அதிகம் உச்சரிக்கப்பட்டு கொண்டிருக்கும் பெயர் குமார் குணரட்ணம் என்பதாகும். போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பல பல பல்கலைக்கழக மாணவர்களின் சமூக வலைத்தள கணக்குகளில் இந்த நபருடைய பேச்சுக்களையும் உரையாடல்களையும் அவதானிக்க முடிகிறது. இந்த போராட்டத்தை உந்தும் குமார் குணரட்ணம் பற்றியும் நோக்க வேண்டியுள்ளது.
இலங்கையின் தற்போதைய மிகப்பெரிய மாணவர் அமைப்பாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உருவெடுத்துள்ளது. ராஜபக்ச அரசுக்கு எதிரான போராட்டங்களின் வேகம் குறையும் போதெல்லாம் அந்தப் போராட்டத்தை மீண்டும் மீண்டும் உத்வேகப்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு அமைப்பாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தை குறிப்பிட முடியும்.
தொழிற்சங்கங்கள் ஜேவிபியின் கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட இந்த மாணவர் ஒன்றியத்தை கட்டுப்படுத்தக் கூடிய ஒரு அமைப்பாக இன்னும் ஓர் இடதுசாரிய கட்சியாக முன்னணி சோசலிச கட்சி தொழிற்படுகிறது.
இலங்கையில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆரம்ப கால அசைவுகளை குறிப்பாக 2012 க்கு முன்னரான காலகட்டம் வரை ஜே.வி.பி தீர்மானித்திருந்தது. எனினும் 2012க்கு பிறகு இந்த மாணவர் அமைப்பை கட்டுப்படுத்தக் கூடிய ஒரு சக்தியாகவும் இதன் அசைவுகளை  தீர்மானிக்கக் கூடிய ஒரு மாபெரும் சக்தியாக உள்ள கட்சி Frontline socialist party (முன்னணி சோசலிஸ்ட் கட்சி) என்பதை மறுப்பதற்கு இல்லை. இந்த அமைப்பே இன்றைய பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் போராட்டங்களையும் தூண்டி வருவதை காணலாம்.
ஜேவிபி அமைப்பில் இருந்து தீவிர இடது சாரிய கொள்கைகளால் முன்னணி சோசலிச கட்சி மாறுபட்டு நிற்கின்றது. ஆஸ்திரேலியாவின் குடியுரிமையை பெற்றிருந்த பிரேம்குமார் குணரட்ணம் என்பவர் இந்த கட்சியின் முன்னணி ஒருங்கிணைப்பாளராக தற்போதைய தலைவராகவும் செயல்பட்டு வருகின்றார். 2017 ஆண்டு முதல் இலங்கையின் பிரஜாவுரிமையை  பெற்று செயல்பட்டு வரும் பிரேம்குமார் குணரட்ணம் 2020களில் அரசுக்கு எதிரான பாரிய போராட்டங்களை முதன் முதலில் ஆரம்பித்திருந்தார். இனவாதமற்ற இலங்கையினையும் –  இடது சாரிய அரசியலையும் முன்னிலைப்படுத்தி இயங்கிக் கொண்டிருக்கும் இந்த முன்னிலை சோசலிசக் கட்சி ராஜபக்ச அரசுக்கு எதிரான பல்கலைக்கழகம் மாணவர்களின் போராட்டத்தை இன்னும் முடக்கிவிட்டு இருக்கின்றது.
இந்தப் போராட்டங்கள் ஆரம்பிப்பதற்கு முன்னரான காலப்பகுதி வரை ஜே.வி.பி உடனான முறுகல் நிலை அதிகரித்து காணப்பட்ட போதும் கூட இன்றைய காலகட்டங்களில் ஜேவிபியுடன் முன்னணி சோசியலிஸ்ட் கட்சி இணைந்து செல்லக்கூடிய ஒரு போக்கு காணப்படுகின்றது. இதனை பிரேம்குமார் குணரட்ணம் Daily mirror ஆங்கில ஊடகத்திற்கு வழங்கிய உரையாடலில் குறிப்பிட்டிருந்தார். மக்கள் நிகழ்ச்சி நிரலுக்கு வெற்றியை உறுதி செய்ய வேண்டுமாயின் ஜேவிபியுடன் நாம் இணைந்து பணியாற்ற தயாராகவே உள்ளோம் என இந்த இடதுசாரிகள் குறிப்பிடுகின்றனர்.
Allow Gunaratnam to engage in politics' | Daily News
குமார் குணரட்ணம் டயஸ்போராக்களிடம் பணம் பெற்று ராஜபக்சங்களுக்கு எதிராக போராடி வருவதாகவும் பலத்த குற்றச்சாட்டுகள் ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பில் பதில் அளித்த குமார் குணரட்ணம் “டயஸ்போரா” என்றால் புலம்பெயர்ந்தோர் குழு. முற்போக்கான சிந்தனையுள்ள மூன்று இன மக்களுடனும் நாம் தொடர்பில் உள்ளோம் என அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி மாளிகை கைப்பற்றப்பட்டு அது ஒரு சுற்றுலா விடுதியாகப்பட்டமை, மேலும் பிரதமர் மாளிகை முற்றுகை இடப்பட்ட விவகாரம் , அதுபோல நேற்றைய பாராளுமன்ற முற்றுகை தொடர்பான போராட்டம் என பல்கலைக்கழக மாணவர்களின் கை ஓங்கி இருந்த தருணங்களின் பின்னணியில் குமார் குணரட்ணத்தின் தலைமையிலான முன்னணி சோசலிஸ்ட் கட்சியினுடைய ஆதிக்கம் மேலோங்கியுள்ளதை பரவலாக ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. அண்மையில் Daily mirror ஊடக சந்திப்பில் ராஜபக்ச அரசுக்கு எதிராக நடந்து கொண்டிருக்கும் இந்த போராட்டம் தொடர் குமார் குணரட்னவிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது “சோசலிஸ்டுகளின் ஆட்சி அமையும் வரை போராட்டம் தொடரும்” என்பது போன்றதான தொனியில் பேசியிருந்தார்.
No description available.
மக்கள் போராட்டம் என குறிப்பிடப்பட்டு மேற்கொள்ளப்படும் இந்த போராட்டங்களின் பின்னணி இடதுசாரிகளின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது என்பதே உண்மை. மக்கள் கூட்டத்தை சரியான வழியில் இந்த இடதுசாரியக் கட்சிகள் வழிநடத்தினால் சந்தோஷமே. ஆனால் ரஷ்யாவிலும் சரி கொமினியூச புரட்சி நடந்த உலகின் ஏனைய நாடுகளிலும் சரி புரட்சிகள் மட்டுமே முறையாக நடந்தன. புரட்சியின் பின்னராக அமைந்த அரசுகள் நீடித்த சர்வாதிகாரப் போக்கையே நடைமுறைப்படுத்தின. அவ்வாறான ஒரு நிலை இலங்கையிலும் ஏற்படுமாயின் ராஜபக்சக்களின் ஆட்சியே மேலானதாக இருந்திருக்கும்.
சரி இந்த போராட்டங்கள் எப்போது முடிவுக்கு வரும் என்றால் …?
இந்த இடதுசாரிய கட்சிகள் ஆட்சியைப் பிடிக்கும் வரை இந்த போராட்டங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கப் போகின்றன. இந்த இடது சாரிய கட்சிகளின் பதவி வெறிக்காக – வெற்றிக்காக – இடதுசாரிய அரசியலுக்காக இன்னும் எத்தனை அப்பாவிகள் கைதாகப்போகிறார்கள்..? வன்முறை நோக்கி தூண்டப்பட போகிறார்கள்..?  என்பது தான் சிந்திக்கப்பட வேண்டிய கவலையான விடயம்.

மைக்ரோபிளாஸ்டிக்கை உறிஞ்சும் மீன் ரோபோ – சீனா அசத்தல் !

மைக்ரோபிளாஸ்டிக்கை உறிஞ்சும் மீன் போன்ற ரோபோவை சீன விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளனர். சீனாவில் உள்ள சிச்சுவான் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் குழு மாசுபட்ட கடல்களை சுத்தம் செய்ய இந்த ரோபோவை கண்டுபிடித்துள்ளனர்.

 

தொடுவதற்கு மிகவும் மென்மையாக இருக்கும் இந்த ரோபோக்கள் 1.3 சென்டிமீட்டர் (0.5 அங்குலம்) அளவு கொண்டவை. ஆழமான நீரில் மைக்ரோபிளாஸ்டிக்கை உறிஞ்சவும், கடல் மாசுபாட்டை பகுப்பாய்வு செய்வதற்கான தகவல்களை வழங்குவதையும் இலக்காக கொண்டு இந்த ரோபோக்களை உருவாக்கியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ரோபோ மீன், ஒளியால் கதிரியக்கப்படுகிறது. ஒளியைப் பயன்படுத்தி இந்த ரோபோ மீன்களை மற்ற மீன்கள் அல்லது கப்பல்களில் மோதுவதைத் தவிர்க்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையின் போராட்டங்கள் இந்தியாவுக்கு எச்சரிக்கை என்கிறார் சுப்பிரமணியன் சுவாமி !

இலங்கையில் கட்டுக்கடங்காதவர்களின் நடத்தை குறித்து இந்தியா எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது” என  இந்திய ஆளும் கட்சி அரசியல்வாதியான சுப்பிரமணியன் சுவாமி, இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பதிவில், இந்த எச்சரிக்கையை விடுத்துள்ள அவர், கொழும்பில் சுற்றித் திரியும் கட்டுக்கடங்காத கூட்டத்தினர், நக்சல்கள், ஜெகாதிகள், சமூகவிரோதிகளால் வழி நடத்தப்படும் தகவல்கள் கிடைத்துள்ளன.

எனவே இந்த பிரிவுகளால் இலங்கையின் சீரழிவு மற்றும் தமது நாட்டின் எதிர்கால தாக்கம் குறித்து இந்தியா கவனம் செலுத்த வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி கோரியுள்ளார்.

பிரபஞ்சத்தின் ரகசியத்தை படம்பிடித்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி..!

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா ஆய்வு மையம் விண்வெளியில் உள்ள இதுவரை அறிந்திராத அதிசயங்களை கண்டறியும் பணியில் உலக நாடுகளுடன் இணைந்து ஈடுபட்டு வருகிறது. இதன்படி ஐரோப்பா மற்றும் கனடாவில் விண்வெளி ஆய்வு அமைப்புகளுடன் இணைந்து ‘ஜேம்ஸ் வெப்’ என்ற விண்வெளி தொலைநோக்கியை நாசா உருவாக்கியது.

இந்த தொலைநோக்கி, பிரெஞ்ச் கயானாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து 5 ராக்கெட்டுகள் மூலம் கடந்த டிசம்பர் மாதம் 25-ந்தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. பூமியில் இருந்து 10 லட்சம் மைல்கள் தொலைவில் நிலை நிறுத்தப்பட்டுள்ள இந்த தொலைநோக்கி அங்கிருந்து பிரபஞ்சத்தை படம் பிடித்து அனுப்பி உள்ளது. இதன் முதலாவது வண்ணப்படத்தை அமெரிக்க அதிபர் ஜோபைடன் நேற்று இரவு வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் துணை அதிபர் கமலாஹாரிஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

மனித கண்களுக்கு புலன் ஆகாத பகுதிகளையும் கதிர்வீச்சு ஊடுருவல் முறையில் படம் பிடித்து அனுப்பி உள்ளது. இதன் மூலம், விண்வெளியில் ஆயிரக்கணக்கான பால்வெளி மண்டலங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. பூமியில் இருந்து 1,300 ஆண்டுகள் பயணம் செய்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதாக நாசாவின் நிர்வாகி பில்நெல்சன் கூறி உள்ளார். இதுதொடர்பாக நாசா வெளியிட்டுள்ள டூவிட்டர் பதிவில், ‘இன்று வரை பிரபஞ்சத்தின் ஆழமான மற்றும் கூர்மையான அகச்சிவப்பு காட்சி. அது நமக்கு கண்ணுக்கு தெரியாத விண்மீன் திறள்களை காட்டுகிறது. தொலை நோக்கி மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் தொகுப்பு ஜூலை 12-ந்தேதி வெளியிடப்படும்’ என கூறப்பட்டுள்ளது. நாசாவின் இந்த சாதனை புகைப்படத்தை வெளியிட்ட ஜோபைடன், விஞ்ஞானிகளை வெகுவாக பாராட்டி உள்ளார்.

நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி: பிரபஞ்சத்தின் புகைப்படம் வெளியீடு | NASA's  Webb Delivers Deepest Infrared Image of Universe Yet - hindutamil.in

ரணில் விக்கிரமசிங்க வீட்டில் எரியூட்டப்பட்டதாக கூறப்பட்ட எரியாத புத்தங்கள் – ரணில் வீடு எரிக்கப்பட்டது அரசியல் நாடகமா..?

இந்த மாதம் 9ஆம் திகதி கோட்டாபாய ராஜபக்சவையும் – ரணில் விக்கிரமசிங்கவையும் பதவியிலிருந்து விலகுமாறு மேற்கொள்ளப்பட்ட கலவரத்தின் போது ஜனாதிபதி மாளிகை முழுமையாக போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டதுடன் அன்று நள்ளிரவு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வீடும் எரியூட்டப்பட்டது.

எரியூட்டப்பட்ட ரணில் விக்கிரமசிங்கவின் வீடு தொடர்பான அனுதாப அலைகள் வீசிக்கொண்டிருக்கின்றன. அந்த வீடு ரணிலின் ஒரே ஒரு வீடு. அஙங்கு சுமார் பழமையான 2000ற்கும் மேற்பட்ட புத்தகங்கள் காணப்பட்டன. இந்த வீடு பாடசாலை ஒன்றிற்காக  வழங்கப்பட்ட வீடு என்றெல்லாம் அனுதாப அலைகள் வீசின.

இதன் போது நேற்றைய தினம் ஒரு காணொளி வெளியாகி இருந்தது. ரணில் விக்கிரமசிங்கவின் வீடு எரிக்கப்பட முன்பு அவருடைய வீட்டிலுள்ள புத்தகங்கள் எல்லாம் பாதுகாப்பாக எடுத்து வைக்கப்பட்ட பின்ரே வீடு தீமூட்டப்பட்டதாக அந்த காணொளி நீள்கிறது. உண்மையில் புத்தகங்களும் – எந்த முக்கியமான ஆவணங்களும் ரணில் விக்கிரமசிங்க வீட்டிலிருந்து எரியவில்லை – எரிக்கப்படவில்லை.

எனினும் ரணில் விக்கிரமசிங்க வீடு எரிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் பேசிய போது “ இலங்கையிலும் வெளிநாட்டிலும் தமக்கு இருந்த ஒரே வீடு இந்த வீடு என்றும் தற்போது அது எரிந்து நாசமாகிவிட்டதாகவும் அதில் சேகரிக்கப்பட்ட அனைத்து பெறுமதிமிக்க புத்தகங்களையும் நன்கொடையாக வழங்குவதற்கு தனது மனைவி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க எதிர்பார்த்திருந்ததாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

தனது வீட்டில் அதிகமாக அழிந்துபோன சொத்துக்கள் நுால்களே என்றும் போர்த்துகேயர் காலம் மற்றும் ஒல்லாந்து கால நுால்கள் உட்பட்ட 2500 நுால்கள் அதில் இருந்தன என்று ரணில் குறிப்பிட்டுள்ளார். அதனை விட பழங்காலத்து சித்திரங்களும் இருந்தன என தெரிவித்துள்ள ரணில்,  எனினும் தற்போது ஒரேயொரு சித்திரமே தம்மிடம் எஞ்சியுள்ளதாக கூறியுள்ளார்.

இவ்வாறு நடந்துகொள்பவர்கள் ஹிட்லரின் சிந்தனையைக் கொண்டவர்கள் என்றும் பிரதமர் ரணில் தெரிவித்துள்ளார்.

கடந்த போராட்டங்களின் போது சுமார் 30 ற்கும் அதிகமான வீடுகள் எரிக்கப்பட்ட போதும் இந்த மாதம் இடம்பெற்ற போராட்டங்களின் போது எந்த வன்முறை சம்பவங்களும்  பெரிதாக பதிவாகவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் 9ஆம் திகதி போராட்டம் என்றவுடன் பிரதமர் இல்லமும் பாதுகாப்புக்குட்படுத்தப்பட்டது. ஆகவே வீட்டை எரிப்பதற்கான சந்தர்ப்பம் அரிதினும் அரிது.

No photo description available.

இந்த நிலையில் குறித்த வீடியோ சில கேள்விளை எழுப்பியுள்ளது..?

  • வீட்டை எரிப்பதற்காக வந்தவர்கள் எப்படி தேவையான புத்தகங்கள் – முக்கியமான புத்தகங்கள் – முக்கியமான ஆவணங்கள் என்பவற்றை கண்டுபிடித்து பத்திரப்படுத்திவிட்டு எரித்தார்கள் ..?
  • வீட்டை எரிப்பதற்காக வந்தவர்களுக்கு எப்படி இவ்வளவு கால அவகாசம் கிடைத்ததது..?
  • யாருடைய  வீடுகளும் எரிக்கப்படாத குறித்த நாளில் – குறித்த சூழலில் ரணில் விக்கிரமசிங்கவின் வீடு மட்டும் எரியூட்டப்பட்டது எப்படி..?
  • ஹிட்லரின் கூட்டம் என ரணில் கூறிய வன்முறை கூட்டத்துக்கு இந்த ஆவணங்கள் மீது மட்டும் என்ன தனிப்பட்ட கவனம்..?
  • வீடு எரிக்கப்பட்ட போது வீட்டில் யாருமே இல்லையே எப்படி..?

இப்படியாக விடை கிடைக்காத பல கேள்விகள்.

பசில் ராஸபக்ஷ, மகிந்த ராஸபக்ஷ ஆகியோர் பதவி விலகிய போது ராஸபக்சஆட்சி முழுமையாக கவிழ்ந்து விடும் அபாயம் காணப்பட்ட நிலையில் கோட்டாபாயவின்ஆட்சியை பாதுகாக்க ரணில் பிரதமராக பதவி ஏற்றார். கோட்டபாய அரசு மீதான மக்களின் கோவம் தன்னுடைய – தனது கட்சியினுடைய எஞ்சிய காலத்து அரசியலுக்கும் தடையாக அமைந்து விடும் என்பதால் மக்கள் அனுதாப அலையை தேடிக்கொள்ள ரணில் விக்கிரமசிங்க அரங்கேற்றிய திட்டமிட்ட நாடகமாக கூட இது இருக்கலாம்.

சிஐடி விசாரணைகளை ஆரம்பித்துளதாம் எரிந்த வீட்டின் எரியாத பக்கங்கள் தொடர்பில். பொறுத்திருந்து பார்ப்போம் என்ன இன்னமும் நடக்கப்போகிறது என.

ரணிலுக்கு சார்பான தென்னிலங்கை ஊடகங்கள் பலவும் ரணில் வீட்டில் எரிந்ததாக கூறி எரியாத  2500 புத்தகங்களை பற்றி பேசி ரணில் மீதான அனுதாப அலையை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றன. இந்த 2500 நூல்களை விட மிகப்பெறுமதியான சுமார் 90000 புத்தகங்களையும் – ஏட்டுச்சுவடிகளையும் கொண்டிருந்த ஆசியாவின் முக்கியமான நூலகமான நமது யாழ் நூலகம்   எரியூட்டப்பட்டதைப் பற்றி இந்த தென்னிலங்கை ஊடகங்கள் பெரிதாக அலட்டிக்கொள்வதே கிடையாது என்பதே உண்மை.

இலங்கையில் நாளையநாள் துக்கதினமாக பிரகடனம் !

மறைந்த ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபேக்கு மரியாதை செலுத்தும் வகையில் நாளை நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படுவதாக உள்நாட்டுஅலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

ஷின்ஸோ அபே - Tamil Latest News

நாளைய துக்கதினம் அரசுத் துறையின் செயல்பாடுகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாது, அரசு விடுமுறையாகக் கருதப்படாது என்றும் அனைத்து அரசு நிறுவனங்களும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறும் அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபே(67) கடந்த 8 ஆம் திகதி காலை நரா நகரில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டார் . அவரது இறுதிச் சடங்கு நாளை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மகிழ்ச்சியான தம்பதிகளாக வாழ்வதற்கு இந்த மூன்று கேள்விகள் போதும் – பராக் ஒபாமா அ்ட்வைஸ் !

திருமணம் ஆவதற்கு முன்பு கணவனும் மனைவியும் இந்த மூன்று கேள்விகள் முக்கியம் என்று முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபமா தெரிவித்துள்ளார். இரு மணங்கள் சேரும் திருமணம் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தங்களை போன்று மகிழ்ச்சியான தம்பதிகளாக வாழ்வதற்கு இந்த மூன்று கேள்விகளை தனக்குள் கேட்டுக் கொள்வது முக்கியம் என முன்னாள் அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.

அந்த மூன்று கேள்விகள் உங்களுக்காக

உங்கள் துணை எதில் ஆர்வமிக்கவர்?

நீங்கள் உங்கள் வாழ்வின் பெரும் பகுதியினை எல்லாரை விடவும் உங்கள் துணையுடன் செலவிடுவீர்கள். ஆகவே அவர் ஆர்வமிக்கவராக இருக்க வேண்டும் எனக் கூறுகிறார் ஒபாமா.

அப்போதுதான் உங்கள் துணை என்ன நினைக்கின்றார்? என்ன செய்யப்போகின்றார் ?என்பதை தெரிந்து வைத்து கொள்ளுங்கள் இல்லையென்றால் மொத்த வாழ்க்கையுமே கடினமாகிவிடும் எனக் கூறியுள்ளார்.

 உங்க துணை நகைச்சுவை உணர்வு  உள்ளவரா?

உங்களும் வரும் துணை தங்களது செயல்கள் மூலமாக நகைச்சுவை திறன் இருந்தால் அவர் உங்களின் வாழ்வின் ஒரு புதியலாக இருப்பார்.

ஏனென்றால் வாழ்க்கை எப்போதும் ஒரே மாதிரி இருக்காது சில தருணங்களில் சலிப்பு வரும் அப்போது உங்கள் பாட்னரிடம் இருக்கு நகைச்சுவை குணம்தான் உங்கள் வாழ்க்கையினை அழகாக்கும் உங்களின் திருமண வாழ்க்கியினை சிறப்பாக்கும் என ஒபாமா கூறுகின்றார்.

உங்க துணைவர் சிறந்த பெற்றோராக இருப்பாரா?

இந்த கேள்வி மிக முக்கியம் எனக் கூறும் ஒபாமா இந்த கேள்விதான் உங்கள் துணையை திருமணம் செய்யலாமா வேண்டாமா என முடிவு செய்ய உதவும் என்கிறார்.

உங்கள் வாழ்வின் பொக்கிஷமாக உள்ள குழந்தைகளுக்கு அன்பான, அக்கறையான, நல்ல பண்புகளை விதைக்கக்கூடியவராக இருப்பது முக்கியமானதும் அவசியமானதும் கூட என ஒபாமா கூறியுள்ளார்.

உங்கள் வாழ்க்கையின் துணையை தேர்ந்தெடுக்கும் முன்பு இந்த மூன்று கேள்விகளுக்கான விடையினை தெரிந்து கொண்ட பின்பு திருமணத்தை முடிவு செய்யலாம் எனக் கூறியுள்ளார்.

அமைதியை விரும்புவதாக கூறும் அமெரிக்கா உக்ரைனுக்கு 400 மில்லியன் டொலர் மதிப்பில் இராணுவ உதவி !

உக்ரைன் மீது ரஷியா தொடுத்து வரும் போர் 150-வது நாளை நெருங்கியுள்ளது. போரில் உக்ரைனின் பல நகரங்கள் ரஷியாவிடம் வீழ்ந்தபோதும், உக்ரைன் இராணுவம் தொடர்ந்து ரஷிய படையை எதிர்த்து சண்டையிட்டு வருகிறது.

இந்தப் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக இருந்து வரும் அமெரிக்கா ராணுவம், நிதி மற்றும் மனிதாபிமான உதவிகளை உக்ரைனுக்கு தொடர்ந்து வழங்கி வருகிறது. இந்நிலையில், உக்ரைனுக்கு 400 மில்லியன் டொலர் மதிப்பில் இராணுவ உதவிகளை வழங்குவதாக அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். அதிநவீன ஏவுகணை அமைப்புகள், பீரங்கி குண்டுகள், இராணுவ கவச வாகனங்கள், ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகள் உள்ளிட்ட திறன்மிக்க ஆயுதங்கள் இத்தொகுப்பில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டது.

இது ஒருபக்கமிருக்க புடின் தலைமையிலான ரஷ்யா அரசாங்கம் “அமெரிக்காவும் – மேற்குலக நாடுகளும் தொடர்ந்தும் ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்கிக்கொண்டிருப்பதனாலேயே போர் இன்னம் பூதாகரமாகிக்கொண்டிருப்பதாக தெரிவித்து வருகின்றனர்.

இந்த போரினுள் தன்னுடைய ஆதிக்கத்தை திணிப்பதற்காக அமெரிக்கா முயல்வதை தொடர்ந்தும் காண முடிகின்றது. உலக அமைதியே தன்னுடைய குறிக்கோள் என அண்மையில் ஜோ பைடன் குறிப்பிட்டிருந்தார். இந்த கருத்து உளமானதாக இருந்திருந்தால் – இருந்திருக்கும் பட்சத்தில் இரண்டு தரப்பபையும் சேர்த்து அமெரிக்கா அமைதிப்பேச்சுக்கு முயன்றிருக்கும். ஆனால் அது நடக்கவுமில்லை – அதற்கான வாய்ப்பும் இல்லை. அமைதியை விரும்புவதாக கூறும் அமெரிக்கா தான் ஆயுதங்களை வாரி வாரி கொட்டிக்கொண்டிருக்கிறது.

இந்த வல்லரசுகளின் பிடிக்குள் சிக்கிக்கொண்ட உக்ரைனியர்கள் தான் பரிதாபமானவர்கள் .

பிரச்சார மேடையில் துப்பாக்கிசூடு – ஜப்பானின் முன்னாள் பிரதமர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு !

ஜப்பானில் பாராளுமன்ற மேல்-சபைக்கு வருகிற 10-ந்திகதி (ஞாயிற்றுக்கிழமை) தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில் ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே (வயது 67) தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது துப்பாக்கிச்சூடு | Shinzo Abe

 

நேற்று இரவு நாரா நகரில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, அவர் துப்பாக்கியால் சுடப்பட்டார். மார்பில் குண்டு பாய்ந்த நிலையில் மயங்கி விழுந்த அவரை, பாதுகாவலர்கள் அங்கிருந்து தூக்கிச் சென்றனர். உடனடியாக ஹெலிகாப்டரில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் மூச்சுவிடவில்லை, இதயம் செயல்படவில்லை. எனவே, அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார்.

 

ஜப்பானில் நீண்ட காலம் பிரதமர் பதவி வகித்தவர் என்ற பெருமைக்குரியவர் ஷின்சோ அபே. 2020 ஆம் ஆண்டில் உடல்நல பிரச்சனை காரணமாக பதவி விலகினார். அதுவரை பதவியில் இருந்தார். துப்பாக்கி சூடு நடத்தியதாக சந்தேகத்தின்பேரில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். போலீசார் அவனிடம் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

9 குழந்தைகளுக்கு தந்தையான எலான் மஸ்க் – சனத்தொகை அதிகரிப்புக்கு என்னால் முடிந்த பணியை செய்கிறேன் என பதில் !

உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க் தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஷிவோன் சிலிஸ் என்ற பெண் அதிகாரியுடன் உறவில் இருந்து இரட்டை குழந்தைகளுக்கு தந்தையாகி உள்ளார்.

அவருடைய முதல் மனைவியான கனடாவை சேர்ந்த எழுத்தாளர் ஜஸ்டின் வில்சன், எலாஸ் மஸ்க்கின் மூலம் ஐந்து குழந்தைகளை பெற்றுள்ளார். பின்னர் கனடாவை சேர்ந்த பாடகி கிரிமிஸ், அவர் மூலம் இரு குழந்தைகளை பெற்றுள்ளார். இந்த நிலையில், இந்த தம்பதியினருக்கு கடந்த நவம்பர் மாதம் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. இந்த இரட்டையர்களையும் சேர்த்து எலான் மஸ்க்கிற்கு மொத்தம் தற்போது 9 குழந்தைகள் உள்ளன.

இது குறித்து பலர் அவரிடம் சமூகவலைத்தளங்கள் வாயிலாக பல கேள்விகளை எழுப்பி வந்தனர். இந்த நிலையில் அந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக எலான் மஸ்க் டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “குறைந்த மக்கள்தொகை நெருக்கடிக்கு உதவ என்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறேன். பிறப்பு விகிதம் வீழ்ச்சியடைவது நாகரிகம் இதுவரை எதிர்கொள்ளாத மிகப்பெரிய ஆபத்து” என தெரிவித்து உள்ளார். ஏற்கனவே இவர் சீனாவின் மக்கள்தொகை வீழ்ச்சி குறித்து எச்சரித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் எலான் மஸ்க் விமானப்பயணத்தின் போது விமானப்பணிப்பெண் ஒருவரை பாலியல்அத்துமீறலுக்கு  உட்படுத்துவது போல செயற்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு நஷ்ட ஈடும் அண்மையில் கோரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.