இலங்கையில் நாளையநாள் துக்கதினமாக பிரகடனம் !

மறைந்த ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபேக்கு மரியாதை செலுத்தும் வகையில் நாளை நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படுவதாக உள்நாட்டுஅலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

ஷின்ஸோ அபே - Tamil Latest News

நாளைய துக்கதினம் அரசுத் துறையின் செயல்பாடுகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாது, அரசு விடுமுறையாகக் கருதப்படாது என்றும் அனைத்து அரசு நிறுவனங்களும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறும் அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபே(67) கடந்த 8 ஆம் திகதி காலை நரா நகரில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டார் . அவரது இறுதிச் சடங்கு நாளை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *