செய்திகள்

செய்திகள்

செய்திகள்

மாணவி மீது வல்லுறவு ஒருவருக்கு விளக்கமறியல்

images000.jpgபாடசாலை மாணவியொருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய இருபிள்ளைகளின் தந்தையை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது. குருவிட்ட புஸ்தல்ல மகாவித்தியாலயத்தில் 8 ஆம் தரத்தில் கல்விகற்கும் 13 வயதான இம்மாணவி பாடசாலை விட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருக்கையில் அருகிலுள்ள நீர் நிலையொன்றுக்கருகில் பலவந்தமாக இழுத்துச் செல்லப்பட்டு வல்லுறவுக் குட்படுத்தப்பட்டதாக மாணவியின் தாயார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இரத்தினபுரி பட்டுகெதர பகுதியில் மறைந்திருந்த சந்தேக நபரை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்த போது அவரை விளக்கமறியலில் வைக்குமாறு இரத்தினபுரி நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.எம்.மிஹால் உத்தரவிட்டார்.

யாழ். குடாவில் சதொச விற்பனை நிலையம் – இன்று அங்குரார்ப்பணம்

யாழ். குடாவில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைக்கும் நோக்குடன் மூன்று கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்களை அங்கு (சதொச) அமைக்க வர்த்தக நுகர்வோர் அமைச்சு தீர்மானித்துள்ளது. முதலாவது கூ. மொ. வி. நிலையம் யாழ். வின்சர் திரையரங்கில் இன்று (28) காலை திறந்து வைக்கப்படவுள்ளது.

இந் நிகழ்வில் வர்த்தக நுகர்வோர் அமைச்சர் பந்துல குணவர்தன, சமூக சேவைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மின்சக்தி அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே, சதொச தலைவர் உட்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

யாழ். குடாவில் அத்தி யாவசியப் பொருட்களின் விலைகளை குறைக்க துரிதமாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி சம்பந்தப்ப ட்ட அதிகாரிகளுக்குப் பணித்திருந்தார். இதன்படி அங்கு கொழும்பு விலைகளில் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் ஏனைய பொருட்கள் வழங்குவதற்காக கூ. மொ. வி. களை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஏனைய இரு கூ. மொ. விகளும் விரைவில் திறக்கப்படவுள்ளன

அவசரமாய் தரையிறங்கிய ஷார்ஜா விமானம்

27-air-arabia-a.jpgசென்னை யிலிருந்து ஷார்ஜா புறப்பட்ட விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் அந்த விமானம் மீண்டும் அவசரமாக சென்னை அண்ணா சர்வதேச விமான நிலையத்தில் மிக அவசரமாகத் தரையிறங்கியது. சென்னை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து இன்று காலை ஏர் அரேபியா ஏர்வேஸ் விமானம் 128 பயணிகளுடன் ஷார்ஜா புறப்பட்டது. விமானம் பறக்க ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.

இதையடுத்து விமானத்தை உடனடியாக தரையிறக்க அனுமதி கோரினார் விமானி. இதைத் தொடர்ந்து அந்த விமானம் 9.30 மணிக்கு பத்திரமாகத் தரையிறங்கியது.

விமானத்தில் இருந்த 128 பயணிகளும் இறக்கப்பட்டு சென்னையில் உள்ள பல்வேறு ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர்.

சுமத்ரா தீவில் கடும் நிலநடுக்கம்

indonesiya.jpgஇந்தோ னேசியாவின் சுமத்ரா தீவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.  இன்று காலை ஏற்பட்ட இந்த நில நடுக்கத்தின் அளவு 6.1 ரிக்டராக பதிவாகியுள்ளது. இருப்பினும் இது 6.2 என்று பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.  இருப்பினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.

வனாட்டு தீவிலும்…

ஆஸ்திரேலியா அருகே பசிபிக் கடலில் உள்ள வனாட்டுத் தீவிலும் நில நடுக்கம் ஏற்பட்டது. இதில் இந்த தீவில் இருந்த கட்டடங்கள் அதிர்ந்தன. நில நடுக்கம் ரிக்டர்கோளில் 6.2 ஆகப் பதிவாகியுள்ளது.

யாழ்ப்பாணம் கொழும்பு தினசரி பஸ் சேவை குறித்து இன்று இறுதித் தீர்மானம்

bussss.jpgகொழும்பு யாழ்ப்பாணத்திற்கு இடையில் ஏ9 வீதியூடாக இ.போ.ச.பஸ் சேவையை தினசரி சேவையில் ஈடுபடுத்துவது தொடர்பான இறுதித்தீர்மானம் இன்று திங்கட்கிழமை மேற்கொள்ளப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை, ஏ9 வீதியூடான தனியார் போக்குவரத்திற்கு அனுமதி வழங்குவது குறித்து இன்னமும் முடிவு எடுக்கப்படவில்லை.

இலங்கை போக்குவரத்து சபையின் சேவைகளை நாளாந்தம் நடத்துவது குறித்து இன்றைய உயர்மட்ட சந்திப்பில் முடிவு செய்யப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். வடக்கு அபிவிருத்திக்கென ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருக்கும் பசில் ராஜபக்ஷ எம்.பி. தலைமையிலான செயலணிக்குழுவின் பிரதிநிதிகளும் இலங்கை போக்குவரத்து சபை பிரதிநிதிகளும் பாதுகாப்பு தரப்பினரும் இன்றைய கலந்துரையாடலில் கலந்துகொள்ளவிருப்பதாகவும் அமைச்சர் அழகப்பெரும தெரிவித்தார்.

இதேநேரம், ஏ9 வீதியூடாக யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கான இ.போ.ச. பஸ் சேவையை ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரான பசில் ராஜபக்ஷ எம்.பி. கடந்த 22ஆம் திகதி யாழ்.துரையப்பா விளையாட்டரங்கிலிருந்து ஆரம்பித்து வைத்திருந்தார்.

எனினும் அது பரீட்சார்த்த சேவை ஆரம்பமேயென தெரிவித்த டலஸ் அழகப்பெரும, இன்று நடைபெறும் கூட்டத்திலேயே நாளாந்த சேவை குறித்து இறுதி முடிவெடிக்கப்படுமென்றும் கூறினார்.

இன்றைய கூட்டத்தின் இறுதியில் எடுக்கப்படும் தீர்மானத்துக்கு அமைய, இம்மாத இறுதிக்குள் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கும் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்குமான ஏ9 வீதியூடான நாளாந்த இ.போ.ச. பஸ் சேவையை ஆரம்பித்து விடமுடியுமென எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேநேரம், தனியார் போக்குவரத்துக்கான அனுமதி பற்றி கேட்டபோது, எதிர்வரும் நாட்களில் நிலைவரங்களுக்கு அமைய ஆராய்ந்து அதற்கான அனுமதிகள் வழங்கப்படுமென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த நிலையில், “ஏ9 வீதியூடான பொது போக்குவரத்து சேவைகள்’ எனும் விடயத்தின் கீழ் தேசிய பாதுகாப்புக்கான ஊடக நிலையத்தினூடாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார நேற்று விடுத்திருக்கும் ஊடக அறிக்கையில்;

“”யாழ்ப்பாணத்தில் வாழும் மக்கள் கொழும்பு வந்து திரும்பிச் செல்ல அரசாங்கம் ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளது. எனினும், பாதுகாப்பு காரணங்களுக்காக அனைத்து சோதனை சாவடிகளும் தொடர்ந்தும் செயற்பாட்டில் இருக்குமென்பதுடன், ஏனைய தேடுதல் நடவடிக்கைகளும் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும். எவ்வாறிருப்பினும், யாழ்ப்பாண மக்கள் கொழும்பு வந்து திரும்பிச் செல்வதற்கான போக்குவரத்து வசதிகளை ஒழுங்குபடுத்துவதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் செய்திருக்கிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேநேரம், இ.போ.ச. பஸ் சேவைக்கான அனுமதியே இங்கு வழங்கப்பட்டிருப்பதுடன், தனியார் போக்குவரத்துகளுக்கான அனுமதி எதுவும் வழங்கப்படவில்லை என்றும் பிரிகேடியர் உதய நாணயக்கார மேலும் தெரிவித்தார்.

இடம்பெயர்ந்த மக்களுக்காகப் பிரார்த்தித்தார் அமெரிக்கா உதவிச் செயலாளர்

us_ass_sec.pngவவுனியா, நிவாரணக் கிராமங்களுக்கு விஜயம் செய்த அமெரிக்காவின் சனத்தொகை, அகதிகள் மற்றும் குடியேற்றம் தொடர்பான உதவி இராஜாங்கச் செயலாளர் எரிக் பி.ஸ்க்வார்ட்ஸ் அங்குள்ள இடம்பெயர்ந்த மக்களிடம் நீங்கள் விரைவில் உங்களது சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்பட வாழ்த்துவதுடன் அதற்காக இறைவனைப் பிரார்த்திக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்த அமெரிக்க உதவி அமைச்சர், வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியாவிலுள்ள நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு அரசாங்கத்தினால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருக்கும் வசதிகளை நேரில் கண்டறிவதற்காக நேற்று வவுனியாவுக்கு விஜயம் செய்தார்.
நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் மிலிந்த மொறகொட மற்றும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் உள்ளிட்ட குழுவினரும் இந்த விஜயத்தில் கலந்துகொண்டனர். நிவாரணக் கிராமங்களுக்குச் சென்ற அமெரிக்க உதவிச் செயலாளர் அங்குள்ள இடம்பெயர்ந்த மக்களை நேரில் சந்தித்துக் கலந்துரையாடியபோதே அவர்களுக்காகப் பிரார்த்தித்தார்.

வவுனியா சென்ற அமெரிக்க உதவி அமைச்சர் தலைமையிலான குழுவினரை மெனிக்பாமில் மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வரவேற்றார். நிவாரணக் கிராமங்களில் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருக்கும் அடிப்படை வசதிகள் குறித்து அமைச்சர் ரிஷாத் மற்றும் வவுனியா அரசாங்க அதிபர் சார்ள்ஸ் ஆகியோர் அமெரிக்க உதவிச் செயலாளருக்கு விளக்கமளித்தனர்.

நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள சுமார் 3 இலட்சத்துக்கும் அதிகமான மக்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதையிட்டு திருப்தி தெரிவித்த அமெரிக்க உதவிச் செயலாளர், இதற்காக இலங்கை அரசாங்கத்துக்கு தமது பாராட்டுக்களைத் தெரிவிப்பதாகவும் அமைச்சர் ரிஷாதிடம் கூறினார்.

நிவாரணக் கிராமங்களில் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ள சுகாதார வசதிகள் தொடர்பாகக் கேட்டறிந்துகொண்ட அமெரிக்க உதவிச் செயலாளர்,  அங்கிருக்கும் வைத்தியசாலையை பார்வையிட்டதுடன் வைத்தியர்களுடனும் உரையாடினார்.

அருணாச்சலம் நிவாரணக் கிராமத்திலுள்ள மக்கள், தாங்கள் விரைவில் தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்படுவதையே விரும்புவதாக அமெரிக்க உதவிச் செயலாளரிடம் தெரிவித்தனர். அதற்குப் பதிலளித்த அவர்,  உலகம் முழுவதிலுமுள்ள அனைத்து இடம்பெயர்ந்த மக்களின் ஆசையும் இதுவே எனக் கூறினார். 

குறைந்த கட்டணத்தில் யாழ். நகருக்கான முதலாவது உள்ளுர் விமான சேவை இன்று ஆரம்பம்

flight_domestic.jpgகட்டணம் குறைக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணத்துக்கான முதலாவது உள்ளுர் விமான சேவை இன்று காலை 8.00 மணிக்கு ஆரம்பமானதாக இலங்கை விமானப் படைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.  இதுபற்றி அவர் மேலும் தகவல் தருகையில், இந்த விமான சேவை திங்கள், புதன்,  மற்றும் வெள்ளி ஆகிய தினங்களில் வாரத்துக்கு மூன்று தடவைகள் நடத்தப்படவுள்ளதோடு இருவழிப் பாதைக்குமான கட்டணமாக 19 ஆயிரத்து 100 ரூபா அறவிடப்படும்.

திருகோணமலை மற்றும் சீகிரியா ஆகிய நகரங்களுக்கும் விமான சேவைகள் நடத்தப்படவுள்ளன. வாரமொருமுறை நடத்தப்படவுள்ள இச்சேவை ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 8.00 மணிக்கு ரத்மலானையிலிருந்து ஆரம்பமாகும். திருகோணமலைக்கு இருவழிப் பாதைக் கட்டணமாக 15, 300 ரூபாவும் சீகிரியாவுக்கு இருவழிப் பாதைக் கட்டணமாக 9000 ஆயிரம் ரூபாவும் அறிவிடப்படும்.
 
கொழும்பிலுள்ள விமானப் படைத் தலைமையகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் விமான சேவை அனுமதிப்பத்திர கருமபீடத்தில் தினமும் காலை 8.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை சகல விமான சேவைகளுக்குமான அனுமதிப்பத்திரங்களையும் பெற்றுக்கொள்ளலாம். இதேவேளை,  இவ்வாரம் யாழ். அதிஉயர் பாதுகாப்பு வலயத்துக்கு வெளியிலும் விமான அனுமதிப்பத்திர கருமபீடமொன்று திறக்கப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

சிறை வைக்கப்பட்டுள்ள 1850 படை வீரர்கள் விடுதலை!

சிறை வைக்கப்பட்டுள்ள 1850 படை வீரர்கள் இன்று விடுதலை செய்யப்படுவதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் மேஜர் ஜெனரல் வீ.ஆர்.டி. சில்வா தெரிவித்தார். சேவையில் இருந்து தப்பிச்சென்று மீண்டும் சேவைக்கு சமூகமளிக்காததால் யுத்த நீதிமன்றத்தால் குற்றவாளிகளாகக் காணப்பட்ட முப்படை வீரர்களே இவ்வாறு சிறை வைக்கப்பட்டிருந்தனர்.

நாட்டுக்காக போராடிய  இவர்கள் மீது கருணைகாண்பிக்கப்பட வேண்டும் என்ற சிபாரிசு முன்வைக்கப்பட்டதையடுத்து அதனைக் கவனத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என மேலும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை இந்தியாவுக்கு இடையில் மீண்டும் கப்பல் மற்றும் ரயில் சேவை!

ship121212.jpgஒருங்கி ணைக்கப்பட்ட கப்பல் மற்றும் ரயில் சேவையை இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் மீண்டும் ஆரம்பிப்பது  தொடர்பாக சார்க் போக்குவரத்து அமைச்சர்களின் மாநாட்டில் இலங்கை முன்வைத்த யோசனைக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அமைச்சர் டலஸ் அழகப் பெரும தெரிவித்தார். இதனால்,  சாதாரண வருமானம் பெறும் பிரிவினரும் இலகுவாக இரு நாடுகளுக்குமிடையில் சென்று வர முடியுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் இம்மாநாட்டு அமர்வின் போது இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் கப்பல் சேவையையும் அத்துடன் இணைக்கப்பட்ட ரயில் சேவையையும் இரு நாடுகளுக்குமிடையில் ஏற்படுத்துவதான யோசனை முன்வைக்கப்பட்டது. இது ஏற்றுக் கொள்ளப்பட்டதால் ஜனாதிபதியின் 25 வருட கனவு நனவாகப் போகின்றது.

1985 ஆண்டுக்கு முன் போக்குவரத்து சேவை இடம்பெற்ற நிலையில் மீள ஆரம்பிப்பதற்கு நடவடிக்கையெடுக்கப்படவுள்ளது. இதன்படி கொழும்புக்கும் கொச்சினுக்குமிடையில் போக்குவரத்து இடம்பெறுவதற்கு இலங்கை ரயில்வே திணைக்களம் தலைமன்னார் வரை ரயில் தண்டவாளம் போடும் அதேநேரம் இந்திய ரயில்வே பிரிவினர் ராமேஸ்வரம் வரை விஸ்தரிப்பர் இந்நிலையில் தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்துக்குமிடையில் கப்பல் சேவை இடம்பெறும்.

தெற்காசியாவில் பல்வேறுபட்ட சமூகங்கள் உள்ள நிலையில் பிணைப்பை ஏற்படுத்த இது வழிவகுக்கும். தெற்காசிய அமைப்பில் இலங்கையும் மாலைதீவும் தவிர ஏனையவை நிலத் தொடர்புடையவையாகும். இதேவேளை இந்தியா, பங்களாதேஷ், நேபாளம், பாகிஸ்தான், அப்கானிஸ்தான் ஆகியவற்றுக்கு ரயிலூடாக நேரடியாக செல்வதற்கும் யோசனை முன்னெடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

பஹ்ரேன் பிரதமர் மற்றும் பிரதி பிரதமர் நாளை இலங்கை வருகை

kalifa-shik-binsalman.jpgபஹ்ரேன் பிரதமர் மற்றும் பிரதிப் பிரதமர் ஆகியோர் நாளை இலங்கை வருகின்றனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரிலேயே இவர்கள் இருநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வருவதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார். இவர்களது வருகையையொட்டி கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் விசேட வரவேற்பு ஏற்பாடுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

பஹ்ரேன் பிரதமர் செய்க் கலீபா பின்சல்மான் அல்கலிபா எதிர்வரும் 29ஆம் திகதி புதன்கிழமை ஜனாதிபதியை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அன்றைய தினம் பல இருதரப்பு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படுமென எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சின் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை இலங்கை வரும் பஹ்ரேன் பிரதிப் பிரதமர் செய்க் மொஹமட் பின் முபாரக் அல்கலிபா வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவை சந்தித்து பேச்சு நடத்துவார். இச்சந்திப்பின்போது இரு நாடுகளுக்குமிடையிலான உறவு, வர்த்தகம் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்தும் ஆராயப்படவுள்ளன.