செய்திகள்

செய்திகள்

செய்திகள்

தப்பி வருவோர் மீது புலிகள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 9 வயது சிறுவன் பலி! – ஐ.நா. வின் பெண் பணியாளருக்கும் காயம்

navy_civilians.jpgபுலிகளின் பிடியிலிருந்து தப்பி யாழ்ப்பாணம் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேசங்களை நோக்கி வருகை தந்த பொது மக்களை இலக்கு வைத்து புலிகள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 9 வயது சிறுவன் கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

புதுமாத்தளன் பிரதேசத்திலிருந்து நேற்று 5 படகுகள் மூலம் 66 பொதுமக்கள் தங்களது குழந்தைகளுடன் தப்பி வந்துள்ளனர். யாழ்ப்பாணத்தின் முனைப் பிரதேசத்தை நோக்கி வருகை தந்த இந்த சிவிலயன்களை இலக்கு வைத்து புலிகள் சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான படகில் வந்த தவநாயகம் தனூஷன் எனும் 9 வயது சிறுவன் படுகாயமடைந்து பின்னர் உயிரிழந்துள்ளார்.

புலிகளின் இத்துப்பாக்கிச் சுட்டில் 14 பொது மக்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களுள் ஐ.நா. வின் பெண் பணியாளரான சுதர்ஷினி தர்மிலா என்பவரும் அடங்குவதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

23 ஆண்கள்,17 பெண்கள்,15 சிறுவர் மற்றும் 11 சிறுமியர் அடங்கலான இந்த 66 பேரையும் சுன்டிக்குளம்-வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் வைத்து கடற்படையினர் நேற்றுக் காலை பாதுகாப்பாக மீட்டு அழைத்துச் சென்றதாகவும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.   

முல்லைத்தீவிலிருந்து திருமலைக்கு கப்பலில் சனிக்கிழமை அழைத்து வரப்பட்டோர் விபரம்

Wanni_Warமுல்லைத் தீவிலிருந்து கப்பல் மூலம் 440 பொதுமக்கள் அழைத்து வரப்பட்டு திருகோணமலை ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் காயமடைந்தோர் மற்றும் நோயாளர்களின் எண்ணிக்கை 265. இவர்களுக்கு வழித்துணையாக வந்த உறவினர்களின் எண்ணிக்கை 175. இவர்களில் இருவர் வரும்போது உயிரிழந்தனர்.
 
01. ஹரிஹரன், கிளிநொச்சி, (வயது 23),
02. ஏ. வித்தியா, முள்ளியவாய்க்கால் (வயது 23),
03. கோவழகி, முள்ளியவாய்க்கால், (23 வயது),
04. பிரசன்னா, பொக்கணை, (வயது 11),
05. பி. பிரேமலதா, பொக்கணை, (வயது 08),
06. பி. கௌரி, அம்பலன்பொக்கணை, (வயது 43),
07. பி. நவநீதேன், மாத்தளன், (வயது 27),
08. என். அரசி, மாத்தளன், (வயது 26),
09. சடாட்சரலட்சுமி, கிளிநொச்சி, (வயது 60),
10. எம். அழகம்மா, ஒட்டுசுட்டான், (வயது 54),
11. மாஸ்டர் கோகுலன், கிளிநொச்சி, (வயது 08),
12. எம். மகாதேவன், முள்ளியவாய்க்கால், (வயது 57),
13. கஜிதரன், வலையர்மடம், (வயது 26),
14. கலைச்செல்வி, யாழ்ப்பாணம், காரைநகர், (வயது 36),
15. ஜீவானந்தன், புதுக்குடியிருப்பு, (வயது 37),
16. கலைச்செல்வன், புதுக்குடியிருப்பு, (வயது 1.5),
17. ராமு துரைராஜா, பூநகரி, (வயது 55),
18. ரி. சாந்தகுமாரி, குமுழமுனை, (வயது 47),
19. எஸ். செல்வராணி, ஒட்டுசுட்டான், (வயது 63),
20. தர்மகலாதேவி, குமுழமுனை, (வயது 57),
21. பூவரசன், பூநகரி, (வயது 02),
22. ரி. கவிதா, பூநகரி, (வயது 26),
23. பவானி, மல்லாவி, (வயது 25),
24. அனுஷியா, மல்லாவி, (வயது 04),
25. பெயர் தரப்படவில்லை.
26. சிவானி, கிளிநொச்சி, (வயது 48),
27. அகிலேஸ்வரி, கிளிநொச்சி, (வயது 40),
28. சிவமுகா, பூநகரி, (வயது 1.5),
29. பெருமகை, உடையார்கட்டு, (வயது 62),
30. வை. ஹரிஹரன், உடையார்கட்டு (வயது 26),
31. வைத்திலிங்கம், புங்குடுதீவு,
32. ஈ. சரஸ்வதி, (வயது 60),
33. சுதர்சன், இரணைப்பாலை, (வயது 27),
34. சோதிநாதன், இரணைப்பாலை, (வயது 69),
35. விக்னேஸ்வரன், முரசுமோட்டை, (வயது 59),
36. ஜே. சாஜாய், முரசுமோட்டை, (வயது 01),
37. வசந்தகுமாரி, முரசுமோட்டை (வயது 37),
38. புருசோத்துமன், நெடுங்கேணி, (வயது 06),
39. ஆர். ராஜேந்திரன், நெடுங்கேணி, (வயது 30),
40. அவசர சிசிச்சைப்பிரிவில்.
41. பிரசாந்தி, சிவபுரம், (வயது 16),
42. எஸ். கோபிகா, புதுக்குடியிருப்பு, (வயது 21),
43. சபாரத்தினம், கிளிநொச்சி, (வயது 44)
44. அமுதாஜினி, கிளிநொச்சி, (வயது 19),
45. பி. முருகையா, கிளிநொச்சி, (வயது 58),
46. பி.ஜெயராணி, கிளிநொச்சி, (வயது 53),
47. தில்லைநாதன், துணுக்காய், (வயது 63),
48. ரி. தங்கம்மா, கிளிநொச்சி, (வயது 61),
49. திவ்வியன், கிளிநொச்சி, (வயது 04),
50. கஜந்தினி, கிளிநொச்சி, (வயது 25),
51. சுபாஷினி, பாலமுனை (வயது 30),
52. சுலக்ஷனா, பாலமுனை, (வயது 18),
53. மதுஷா, பாலமுனை, (வயது பத்து மாதம்),
54. கேதீஸ்வரன், கிளிநொச்சி, (வயது 30),
55. பிரியங்கா, பாலமோட்டை, (வயது 07),
56. ரத்தினம், பாலமோட்டை, (வயது 60),
57. சுபாஷினி, பாலமோட்டை, (வயது 30),
58. எம். ரமேஷ், கிளிநொச்சி, (வயது 25),
59. கே. சந்தனம், கிளிநொச்சி, (வயது 62),
60. விஜேகுமார், மாத்தளன், (வயது 32),
61. கனகதேவி, பரந்தன், (வயது 32),
62. உகதீஸ், பரந்தன், (4 மாதம்),
63. நாகபூஷனி, பொக்கணை, (வயது 49),
64. வி. ரஞ்சன், (வயது 12),
65. கீதரூபா, கிளிநொச்சி, (வயது 23),
66. பார்வதி, கிளிநொச்சி, (வயது 64),
67. சுப்பையா, கிளிநொச்சி, (வயது 65),
68. எஸ். சிவானந்தனி, நெடுங்குளம், (வயது 36),
69. வேலு, கிளிநொச்சி, (வயது 69),
70. கே. மயில்வாகனம், முள்ளியவளை, (வயது 60),
71. செல்வநாயகம், முள்ளிக்குளம், (வயது 53),
72. சுப்பையா, சுதந்திரபுரம், (வயது 65),
73. ஜுடித்ருஷா, மாத்தளன், (வயது 36),
74. பரமேஸ்வரி, புங்குடுதீவு, (வயது 63),
75. தினா, புங்குடுதீவு, (வயது 03),
76. மேஸ்வரி, புங்குடுதீவு, (வயது 39),
77. பிரவினா, புங்குடுதீவு, (வயது 07),
78. பார்த்தஸ்ரீ, புங்குடுதீவு, (வயது 12),
79. கிட்ணர், கொடிகாமம், (வயது 62),
80. பிரிங்கா, காரைதீவு, (வயது 08),
81. ரஞ்சனி, காரைதீவு, (வயது 27),
82. பிரசிந்தன், நடுகண்ணி, (வயது 10),
83. அனோஜன், நடுங்கண்னி, (வயது 08),
84. குணராஜா, விசுவமடு, (வயது 52),
85. வீரசிங்கம், மூங்கிலாறு, (வயது 56),
86. தவமணி, பயிரத்தம்பண்ணை, (வயது 59),
87. மாருதரஞ்சிதம், நடுகண்ணி, (வயது 87),
88. தனுஷியா, யாழ்நகர், (வயது07),
89. பரமேஸ்வரி, புத்தளம், (வயது 33),
90. தயாளன், யாழ்நகர், (வயது 32),
91. காத்தமுத்து, நெடுங்கேணி, (வயது 72),
92. திவாந்திரன், சுதந்திரபுரம், (வயது 63),
93. ஏ. தயாகரன், துணுக்காய், (வயது 30),
94. வண்ணுவன், பாலமோட்டை, (வயது 03),
95. ஜெயசீலன், பாலமோட்டை, (வயது 30),
96. டின்னோ, மாத்தளன், (வயது 02),
97. அம்ஷா, யாழ்ப்பாணம்,
98. செல்வரஞ்சினி, மாத்தளன், (வயது 25),
99. குணநாயகி, உடையார்கட்டு, (வயது 48),
100. சசிகுமார், பாலமோட்டை, (வயது 32),
101. ராமதாஸ், கிளிநொச்சி, (வயது 45),
102. பிரிங்ககா, பாலமடு, (வயது 10),
103. மரியாயி, கிளிநொச்சி, (வயது 60),
104. ரட்னேஸ்வரி, கிளிநொச்சி, (வயது 63),
105. சசிரேகா, முரசுமோட்டை, (வயது 25),
106. சபாபதிப்பிள்ளை, முள்ளியவளை (வயது 84),
107. ராதிகா, மாத்தளன், (வயது 30),
108. ஜீவிதா, நெடுங்கேணி, (வயது 14),
109. வளர்மதி, திருகோணமலை, (வயது 11),
110. மதுஷா, திருகோணமலை, (வயது 08),
111. ஜெனோட்ராஜா, திருமலை, (வயது 23),
112. மலர், திருகோணமலை, (வயது 33),
113. மதுஜா, திருகோணமலை, (வயது 03),
114. கமில்டன், கிளிநொச்சி, (வயது 13),
115. சரஸ்வதி, கிளிநொச்சி, (வயது 53),
116. சுந்தரேஸ்வரி, முல்லைத்தீவு, (வயது 50),
117. கேதீஸ்வரநாயகி, நாச்சிக்குடா, (வயது 39),
118. இனியவன், நாச்சிக்குடா, (வயது 01),
119. எம். மதுராஜ், வள்ளானை, (வயது 03),
120. சிந்துஜா, வள்ளானை, (வயது 08),
121. ஜெயலட்சுமி, கிளிநொச்சி, (வயது 45),
122. அருட்செல்வம், வலையர்மடம், (வயது 30),
123. வி. அரவானன், வலையர்மடம், (வயது 1.5),
124. உவனேஸ்வரி, கிளிநொச்சி, (வயது 24),
125. தாரனிக்கா, கிளிநொச்சி, (வயது 03),
126. நகுலேஸ்வரன், பூநகரி, (வயது 24),
127. எஸ். பூங்காவனம், யாழ்நகர், (வயது 63),
128. ஜெயசிங்கம், யாழ்ப்பாணம், குருநகர், (வயது 37),
129. எஸ். பத்தினிப்பிள்ளை, யாழ்ப்பாணம், (வயது 80),
130. மரியதாஸ், கிளிநொச்சி, (வயது 61),
131. ஜெயலட்சுமி, கிளிநொச்சி, (வயது 45),
132. மாரியம்மா, கிளிநொச்சி, (வயது 82),
133. குளநாயகம், மன்னார், (வயது 52),
134. சம்புலிக்குசும், முல்லைத்தீவு, (வயது 42),
135. சர்மிலா, மணல்குடியிருப்பு, (வயது 23),
136. சதுர்ஷன், மணல்குடியிருப்பு, (வயது 03),
137. ஜெ. செல்வராணி, உடையார்கட்டு, (வயது 53),
138. ஜெயமலர், முள்ளியவளை, (வயது 28),
139. புலேந்திரன், முள்ளியவளை, (வயது 64),
140. வி.கருஜன், கிளிநொச்சி, (வயது 13),
141. நிஷாந்தினி, யாழ்நகர், (வயது 12),
142. வி. நிதுஷா, கிளிநொச்சி, (வயது 08),
143. துஷாந்தி, கிளிநொச்சி, (வயது 05),
144. சிந்துஜன், கிளிநொச்சி, (வயது 09),
145. பேரழகி, கிளிநொச்சி, (வயது 30),
146. ஜெயதீஸ்வரன், கிளிநொச்சி, (வயது 45),
147. தீபன், யாழ்ப்பாணம், (வயது 23),
148. ரி. காசிதா, துணுக்காய், (வயது 26),
149. துவாரகா, துணுக்காய், (வயது 4.5),
150. எஸ். பொன்னம்மா, வட்டக்கச்சி, (வயது 57),
151. வாசலிங்கம், மாங்குளம், (வயது 51),
152. கே. ராஜா, கைவேலி, (வயது 65),
153. லேதிஸ்லெஸ், கிளிநொச்சி, (வயது 74),
154. சுப்பிரமணியம், மன்னார், (வயது 60),
155. மேரிஅக்னா, மணல்காடு, (வயது 23),
156. கனகி, பாலமடு, (வயது 80),
157. சாந்தபுஷ்பம், கரவெட்டி, (வயது 50),
158. கோபிதன், கரவெட்டி, (வயது 06),
159. அனிஷன், மாத்தளன், (வயது 1.5),
160. கோமதி, மாத்தளன், (வயது 30),
161. கல்யாணி, மாத்தளன், (வயது 50),
162. சாந்தன், மருதநகர், (வயது 26),
163. சிவரஞ்சினி, தர்மபுரம், (வயது 32),
164. திவாகரன், தர்மபுரம், (வயது 3.5),
165. கமல்ராஜ், தர்மபுரம், (வயது 09),
166. புஸ்பவதி, கிளிநொச்சி, (வயது 47),
167. எஸ். முத்துலிங்கம், நெடுங்கேணி, (வயது 55),
168. எம்.ரஜீவன், விசுவவடு, (வயது 09),
169. ரஜீதா, விசுவமடு, (வயது 26),
170. அபிஷேக், கிளிநொச்சி, (வயது 1.5),
171. திருமுகம், கிளிநொச்சி, (வயது 26),
172. ஆர். துண்டியம்மா, முல்லைத்தீவு, (வயது 54),
173. சத்ரேஸ்வரி, முல்லைத்தீவு, (வயது 38),
174. சத்தியசீலன், முல்லைத்தீவு, (வயது 02),
175. மல்லிகா, தர்மபுரம், (வயது 38),
176. ஜசிவன், தர்மபுரம், (வயது 07),
177. வி. புலந்தன், கிளிநொச்சி, (வயது 59),
178. வி. ஆறுமுகம், முல்லைத்தீவு, (வயது 73),
179. ஆர். கோபிநாத், கிளிநொச்சி, (வயது 10),
180. சஞ்சீவன், கிளிநொச்சி, (வயது 08),
181. ராஜேந்திரன், கிளிநொச்சி, (வயது 50),
182. சின்னத்தம்பி, முள்ளியவளை, (வயது 69),
183. சகுந்தலா, கிளிநொச்சி, (வயது 36),
184. தசாந்தன், கிளிநொச்சி, (வயது 04),
185. சுகந்தி, கிளிநொச்சி, (வயது 25).

“சிறுவர் படங்களை பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை’

sri-lanka-elections.jpgதேர்தல் பிரசாரத்தின்போது சிறுவர்களின் புகைப்படங்களை பயன்படுத்தக்கூடாதென சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக பெற்றோர் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமெனவும் அதிகாரசபையின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். சிறுவர்களின் புகைப்படங்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவது சிறுவர்களின் உரிமைமை மீறும் ஒரு நடவடிக்கையாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதன்படி உரிமையாளர்கள் மீதும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு சட்டத்தில் உரிய இடம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், சில பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் புகைப்படங்களை தேர்தல் பிரசாரத்துக்காக பயன்படுத்துவதற்கு அனுமதித்துள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேல்மாகாணசபைத் தேர்தலில் பிரசார சுவரொட்டிகளில் சிறுவர்கள்,முதியோர்களுடன் அரசியல்வாதிகள் நிற்பது தொடர்பான படங்கள் காணப்படுகின்றன. எதிர்காலத்தில் சிறுவர்களின் புகைப்படங்களை அரசியல்வாதிகள் தமது பிரசாரத்துக்கு பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

வவுனியா நலன்புரி நிலையங்களுக்கு இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் பொருட்கள் விநியோகம்

sri-lanka-red-cross.jpgவவுனியா நலன்புரி நிலையங்களில் உள்ள சுமார் 10 ஆயிரம் குடும்பத்தினருக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கியுள்ளதோடு மேலும் பொருட்களை வழங்க ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம் என இலங்கை செஞ்சிலுவைச்சங்க வவுனியா கிளையின் பொருளாளர் கே. தனபாலசிங்கம் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;

பூந்தோட்டம் பாடசாலை, கல்வியியற் கல்லூரி, நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களுக்கு குடிநீர் விநியோகத்தையும் மேற்கொண்டு வருகின்றோம். அத்துடன், எமது தொண்டர்கள் 50 பேரை பொது அரசினர் வைத்தியசாலையில் 24 மணிநேர மனிதாபிமான பணிகளில் அமர்த்தியுள்ளோம். காயங்களுடன் வந்துள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை எமது தொண்டர்கள் வழங்கிவருகின்றனர்.

சைவப்பிரகாச வித்தியாசாலை, காமினி வித்தியாசாலை நலன்புரி நிலையங்களில் இரவு நேரத்தில் இரண்டு நோயாளர் காவு வண்டிகள் தயார்நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இவற்றை நோயாளர்கள் அவசர தேவைக்கு பயன்படுத்திகொள்ள முடியும்.

மேலும், இடம்பெயர்ந்த மக்களுக்கு நாம் வழங்கும் மனிதாபிமான பணிகளை அறிந்துகொண்ட திருமலை கிளை 5 இலட்சம் ரூபாவினையும், அம்பாறை மாவட்ட கிளை 3 இலட்சம் ரூபாவினையும், எமக்கு அனுப்பிவைத்துள்ளது. குருநாகல் கிளையினர் 2 ஆயிரம் லீற்றர் கொள்வனவு கொண்ட 20 நீர்த்தாங்கிகளை அனுப்பியுள்ளனர். 3 இலட்சம் ரூபா பணம் கனடிய செஞ்சிலுவைச்சங்கத்தின் ஊடாக எமக்கு கிடைத்துள்ளது. இந்த நிதியானது நலன்புரிநிலைய மக்களுக்கு உலருணவு நிவாரணப் பொருட்களை வழங்க பயன்படுத்தப்படும்.

தலைமை அலுவலகத்திலிருந்து சுமார் 60 இலட்சம் ரூபாய் பெறுமதியான 16 ஆயிரம் மற்றும் 7 ஆயிரம் லீற்றர் கொள்வனவு கொண்ட இரண்டு தண்ணீர் பௌசர்கள் கிடைத்துள்ளன. நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களுக்கு இதன்மூலம் குடிநீர் விநியோகம் சிறப்பாக நடைபெற்று வருகின்றது என்றார்.

வன்னியிலிருந்து வெளியேறும் மக்கள் உறவுகளுடன் தொடர்புகொள்ள முடியாத அவலம் -செஞ்சிலுவைச்சங்கம்

trico.gifமோதல் நடைபெறுகின்ற வன்னிப்பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேறி வேறு இடங்களுக்கு செல்வதன் காரணமாக அவர்கள் தமது உறவினர்கள் மற்றும் குடும்பங்களைப் பிரிந்து வாழவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாட் பதியுதீனுடனான சந்திப்பு வெள்ளிக்கிழமை இடம் பெற்ற போது இதனை சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் அவரிடம் சுட்டிக்காட்டியுள்ளது. தமது குடும்பங்களை விட்டு பிரிய வேண்டிய இந்த நிலைமையின் போது நாட்டின் வேறுபகுதிகளில் வாழும் தமது உறவுகளுடனோ அல்லது வெளிநாட்டில் வாழும் உறவினர்களுடனோ எவ்வித தொடர்பையும் அம்மக்கள் மேற்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தனர்.

இம்மக்கள் தமது உறவுகளுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதற்கும் அவர்களுடன் திரும்பவும் இணைந்து வாழ்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட வேண்டுமெனவும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இம்மக்களுக்கான அடிப்படை சுகாதார வசதிகளை மேம்படுத்தவென முதலுதவி சிகிச்சை, நடமாடும் அம்புலன்ஸ் சேவை, உடல் உள விருத்திக்கான சமூக புனர்வாழ்வுத்திட்டங்கள் மற்றும் நடமாடும் சிகிச்சை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

அதிகாரிகள் தெரிவித்துள்ள தகவலின் படி, கடந்த டிசம்பரில் இருந்து 36 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் மோதல் நடைபெறும் பகுதிகளிலிருந்து வெளியேறியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டது.

பாதுகாப்பான சூழலில் இம்மக்கள் வாழ்வதற்கான உரிய ஏற்பாடுகள் அனைத்தும் மேற்கொள்ளப்படுவதுடன், போதிய தங்குமிட வசதிகள், சத்துணவு மற்றும் சுகாதார அடிப்படைவசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமெனவும் அத்துடன், அந்த மக்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கான அனுமதியும் வழங்கப்படவேண்டுமெனவும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கேட்டுள்ளது.

அமைச்சர் உடல்நிலை தேறி வருகிறார்

mahinda-wijayaratna.jpg அக்குரஸ்ஸ கொடபிட்டிய தற்கொலை குண்டுத் தாக்குதலில் படுகாயமடைந்த தபால் தந்தித் தொலைத் தொடர்பு அமைச்சர் மஹிந்த விஜேசேகர உடல் நிலை தேறி வருவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஹெக்டர் வீரசிங்ஹ தெரிவித்தார்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அமைச்சருக்கு தொடர்ந்தும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக டொக்டர் மேலும் தெரிவித்தார். 

இலங்கை அரசையும், புலிகளையும் சம பங்காளிகளாகக் கருத முடியாது. – த ஹிந்து பத்திரிகை செய்தி

hindu_newspaper.jpg இலங்கையில் ஜனநாயக முறைப்படி சட்ட ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தையும் பயங்கரவாத அமைப்பான எல்.ரீ.ரீ.ஈ. யினரையும் சம பங்காளிகளாகக் கருத முடியாது என இந்தியாவின் த ஹிந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை அரசாங்கமும் அந்நாட்டின் முப்படையினரும் பல்வேறு உணர்ச்சித் தூண்டல்களுக்கு இடம்கொடுக்காது பொறுப்புடனும் அமைதியாகவும் தமது கடமைகளை மேற்கொண்டு வருகின்றனர். எல்.ரீ.ரீ.ஈ. பிடியில் மனிதக் கேடயங்களாக சிக்கியுள்ள பொதுமக்களைப் பாதுகாப்பதற்கான கடப்பாட்டைக் கொண்டுள்ள இலங்கை அரசுக்கு இது ஒரு சோதணை மிகுந்த காலப் பகுதியாகும்.

எல்.ரீ.ரீ.ஈ.  யினரின் கட்டுப்பாட்டுப் பகுதியில் பொதுமக்கள் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தப்பட்டு வருவதால் இராணுவ நடவடிக்கைள் சற்று தாமதமாகியுள்ளன. மோதல் இடம்பெறும் பிரதேசங்களிலுள்ள தமிழ் மக்களை முழுமையாகக் காப்பாற்றுவதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள பாரிய ஒரு முயற்சியாக இதனைக் கருத முடியும் என த ஹிந்து  பத்திரிகை மேலும் குறிப்பிட்டுள்ளது.

மாணவி வர்ஷாவின் கொடூரக் கொலைக்கு கிழக்கு தமிழ் ஆசிரியர் சங்கம் கண்டனம்

varsa.jpg
திருகோணமலை சென்.மேரிஸ் கல்லூரி தரம் 1 மாணவியான (6 வயது) வர்ஷா யூட் ரெஜினால்ட் கடத்தப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவத்தை கிழக்கு மாகாணத் தமிழ் ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது.

“இதுபோன்ற கொடூரச் சம்பவங்கள் திருகோணமலை மாவட்டத்தில் மாத்திரமல்ல எமது நாட்டின் எப்பாகத்திலும் இடம்பெறக்கூடாது என்பதே எமது சங்கத்தின் கோரிக்கையும் பிரார்த்தனையும் ‘ என்று சங்கத்தின் தலைவர் ஆர்.ஜெறோம், பொதுச் செயலாளர் கு.நளினகாந்தன் வெளியிட்ட கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இதுபோன்ற கொடூரச் சம்பவங்கள் பாடசாலை மாணவ சமூகத்தில் இடம்பெறாமலிருப்பதை உறுதி செய்யக் கடும் நடவடிக்கைகளை கிழக்கு மாகாண முதலமைச்சர், மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி, பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் போன்ற உயர் அதிகாரிகள் எடுக்க வேண்டும் என எமது சங்கம் கோருகின்றது. 6 வயது மாணவி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு உரப்பையில் வீதியில் போடப்பட்ட சம்பவத்தை சங்கம் வன்மையாகக் கண்டிப்பதுடன் மாணவியின் இழப்பால் துயருறும் பெற்றோர், குடும்பத்தினர், பாடசாலை அதிபர் , ஆசிரியர்கள், மாணவியர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களையும் சங்கம் தெரிவித்துக் கொள்கிறது’  என்றும் சங்கத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈழத்தமிழருக்காக பா.ம.க. பிரமுகர் தீக்குளிப்பு: நேற்று இடம்பெற்ற சம்பவம்

elam-rajasekar.jpgஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்தும், இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யக் கோரியும் பாமக பிரமுகர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை தீக்குளித்தார். அரியலூர் மாவட்டம் உடையார் பாளையத்தை அடுத்த தத்தனூர் கீழ வீதியைச் சேர்ந்த பாமக பிரமுகர் இராஜசேகர். இவருக்கு வயது 30. ஈழத்தில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை டி.வி. மற்றும் செய்தித்தாள்களில் படித்து, கடந்த சில நாட்களாகவே வேதனைப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி அளவில் இராஜசேகர் தனது வீட்டு வாசலில் முன் உடல் முழுவதும் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

இதனால் அவர் உடல் முழுவதும் எரிந்து கருகியது. உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

1415 சிவிலியன்கள் அரச பகுதிக்கு வருகை – புலிகளின் சூட்டில் 14 பொதுமக்கள் காயம்

Wanni_Warமுல்லைத் தீவிலிருந்து தப்பி 1415 சிவிலியன்கள் நேற்றும் நேற்று முன்தினமும் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருகை தந்திருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

அரசாங்கத்தினால் முல்லைத்தீவில் அமைக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு வலயத்தில் வந்திருந்த 400 சிவிலியன்கள் நேற்றுக் காலை புதுக்குடியிருப்பு அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள உறவினரிடம் வந்து சேர்ந்திருப்பதாக பிரிகேடியர் நாணயக்கார கூறினார். புதுக்குடியிருப்பு மற்றும் புதுமாத்தளன் ஆகிய பகுதிகளிலிருந்து நேற்று முன்தினம் சனிக்கிழமை 1015 சிவிலியன்கள் அரச கட்டுப்பாட்டை நோக்கி வந்துள்ளனர்.

புலிகளின் பிடியில் சிக்கியிருந்த சிவிலியன்களுள் ஒரு தொகுதியினரான 592 பேர் நேற்று முன்தினம் புதுக்குடியிருப்பிலிருந்து அரச கட்டுப்பாட்டு பகுதியை நோக்கி வந்திருப்பதாக தேசிய பாதுகாப்புத் தொடர்பான ஊடக மத்திய நிலையம் குறிப்பிட்டது.

புதுக்குடியிருப்பிலிருந்து சிவிலியன்கள் காட்டு வழியாக தப்பித்து வரும்வழியில் அவர்களை நோக்கி புலிகள் சரமாரியாக துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் 14 பேர் படுகாயமடைந்திருப்பதாகவும் அவர்களுள் ஒருவர் ஐ. நா. அமைப்பாளரெனவும் ஊடக நிலையம் சுட்டிக்காட்டியது.

இதேவேளை, புதுமாத்தளனினூடாக முன்னேறி வரும் படையினர் நேற்று அங்கிருந்த 423 சிவிலியன்களை புலிகளிடமிருந்து விடுவித்துள்ளனர். விடுவிக்கப்பட்டுள்ள 423 சிவிலியன்களும் கடற் படையினரின் உதவியுடன் ஐ. சி. ஆர். சி. யின் க்ரீன் ஓசன் எனும் கப்பல் மூலம் நேரடியாக திருகோணமலைக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் ஊடக நிலையம் தெரிவித்தது.