இலங்கை இந்திய ஓப்பந்தத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட 13 வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடை முறைப்படுத்த கோரியும், அதற்கு மேலதிக அதிகாரங்களை வழங்க கோரியும் ஈ.பி.டி.பி யின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அரமைச்சரவை அங்கீகாரத்திற்கான பத்திரமொன்றை சமர்ப்பித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்திற்கான தேர்தல் நடத்தப்பட்டது போல் வடக்கிலும் விரைவாக மாகாணசபைக்கான தேர்தல் நடத்தப்பட்டு மாகாணங்களுக்குரிய அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் சர்வகட்சி தலைவர் விதாரண அவர்கள் ஐனாதிபதி மகிந்த ராஐபக்ச அவர்களிடம் தெரிவித்திருந்த ஆலோசனைக்கு இணங்க மாகாண சபைகளுக்கான உரிமைகள் நிறைவானதாகவும் உயரிய பயன்பாடுடையதாகவும் இருக்க வேண்டும் என்றும் அந்த அமைச்சரவை பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரிவிக்கப்படுகையில் சர்வகட்சி தலைவர் திசவிதாரண அவர்கள் மேற்குறித்த தீர்வுத்தட்டத்தை சமர்ப்பித்து ஒரு வருடத்திற்கு மேலாகிறது என்றும் புலித்தலைமையின் நடவடிக்கைகள் இல்லாதெழிக்கப்பட்ட போதிலும் புலித்தலைமைக்கு சார்பான தமிழ் அரசியல் கட்சிகள் அழிவுப்பாதையிலேயே தொடர்ந்தும் மக்களை இழுத்து செல்வதாகவும் தெரிவித்திருந்ததோடு அரசு இத்தருணத்தில் தீர்க்கமான அரசியல் தீர்வினை விருப்பத்துடன் முன்வைக்க வேண்டும் என்றும் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தனது அமைச்சரவை பத்திரத்தில் தெரிவித்திருக்கிறார்.