செய்திகள்

செய்திகள்

செய்திகள்

தலைவர் பிரபாகரன் நலம்; மூத்த உறுப்பினர்கள் பலர் வஞ்சகமாக கொல்லப்பட்டுள்ளனர்”: செ.பத்மநாதன்

Selvarasa_Pathmanathan_LTTEதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பாதுகாப்பாகவும் நலமாகவும் இருப்பதாகத் தெரிவித்திருக்கும் அந்த இயக்கத்தின் அனைத்துலக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன், ஆனால், தூரதிர்ஷ்டவசமாக தமது இயக்கத்தின் பல மூத்த உறுப்பினர்கள் வஞ்சகத்தனமாகக் கொல்லப் பட்டிருக்கின்றனர் எனவும் குறிப்பிட்டிருக்கின்றார்.

“சிறிலங்கா அரசாங்கம் போரில் வெற்றி பெற்றிருப்பதாகப் பிரகடனப்படுத்தலாம். ஆனால் இது ஒரு வஞ்சகத்தனமான வெற்றி என்பதை சிறிலங்கா அரசாங்கம் புரிந்துகொள்ளவில்லை. தமிழ் மக்களின் நம்பிக்கையை சிறிலங்கா அரசாங்கம் முழுமையாகவே இழந்துவிட்டது” எனவும் ‘தமிழ்நெட்’ இணையத்தளத்துக்கு வழங்கிய பேட்டியில் செ.பத்மநாதன் தெரிவித்திருக்கின்றார்.

அவரின் பேட்டியின் முக்கிய விபரங்கள் வருமாறு:

இந்தப் போரில் வெற்றி பெற்றிருப்பதாக சிறிலங்கா அரசாங்கம் பிரகடனப்படுத்தியிருக்கின்றது. விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டுள்ளதாகவும் அறிவித்திருக்கின்றது. இந்தப் போரில் உண்மையிலேயே சிறிலங்கா வெற்றிபெற்றுள்ளதா?

சிறிலங்கா அரசாங்கம் நிரூபிக்க முடியாத ஒரு உரிமை கோரலை வெளியிட்டிருக்கின்றது. எமது தேசியத் தலைவர் உயிருடனும் நலமாகவும் உள்ளார் என்பதை மட்டும் என்னால் நிச்சயமாகக் கூற முடியும். ஆனால், எமது அமைப்பின் பல மூத்த உறுப்பினர்களும் தலைவர்களும் உயிழந்திருக்கின்றனர் அல்லது துரோகத்தனமாகக் கொல்லப்பட்டுள்ளனர் என்பது உண்மை. இது மிகவும் தூரதிர்ஷ்டமானது. ஆனால், எமது மக்களுடைய விருப்பங்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்படும் வரையில் எமது போராட்டம் தொடரும்.

சிறிலங்கா இராணுவம் தமக்கு ஒரு இராணுவ வெற்றி கிடைத்திருப்பதாகப் பிரகடனம் செய்யலாம். ஆனால் அது ஒரு வஞ்சகத்தனமான வெற்றி என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. தமிழ் மக்களுடைய நம்பிக்கையை இவர்கள் முற்றாகவே இழந்துவிட்டனர்.

தற்போதைய நிலைமைகளின் அடிப்படையில் பார்க்கும்போது விடுதலைப் புலிகளின் எதிர்காலம் எவ்வாறு அமையும்?

தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு இராணுவ வழிமுறைகளில் அல்லாமல் ஒரு அரசியல் தீர்வைக் காண்பதற்கான முயற்சிகளையே முன்னெடுக்க வேண்டும் என்பதை நாம் எமது முன்னய அறிக்கைகள் பலவற்றிலும் தெளிவாகத் தெரிவித்திருந்தோம். எமது மக்களுடைய உயிர்களைப் பாதுகாப்பதற்காகவே இந்த நிலைப்பாட்டை நாம் எடுத்தோம். தமிழ் மக்கள் மீது குண்டுகளை வீசியும், எறிகணைகளால் தாக்குதல் நடத்தியும் அவர்களைப் படுகொலை செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் போரைப் பயன்படுத்துவதை தொடர்ந்தும் அனுமதிக்க நாம் விரும்பவில்லை.

இந்த விவகாரத்தில் தலையிட்டு தாக்குதலைத் தடுத்து நிறுத்துமாறு அனைத்துலக சமூகத்தை நாம் கேட்டுக்கொண்ட போதிலும்,  இதனைக் கருத்திற்கொள்ளாமல் தாக்குதல் நடவடிக்கையை தொடர்வதிலேயே சிறிலங்கா அரசு குறியாக இருந்தது. எமக்குக் கிடைத்துள்ள தகவல்களின்படி வெள்ளைக்கொடிகளை ஏந்தியவாறு சரணடைய முன்வந்த எமது போராளிகளும் தலைவர்களும் அனைத்துலக நடவடிக்கைகள் அனைத்தையும் மீறும் வகையில் ஈவிரக்கமற்ற முறையில் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கின்றார்கள். இந்த விடயத்தில் ஒரு பலமான நிலைப்பாட்டை எடுத்து சிறிலங்கா அரசாங்கத்தை இணங்கச் செய்வதற்கும் அனைத்துலக சமூகம் மறுத்துவிட்டது.

இந்த நிகழ்வுகளையிட்டு நாம் மிகவும் வருந்துகின்றோம். ஆனால், இலங்கையில் உள்ள தமிழர்களின் எதிர்காலமும் தமிழ்த் தேசியப் பிரச்சினையும் தீர்வு எதுவும் இன்றி தொடர்ந்திருக்கப் போகின்றது.

தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான தீர்வை முன்னெடுப்பதற்கான தமது பிரதிநிதிகளாக விடுதலைப் புலிகள் அமைப்புக்கு தமது ஆணையை மக்கள் வழங்கியிருக்கின்றனர். இவ்வாறு மக்கள் எமக்கு அளித்துள்ள ஆணையின் அடிப்படையில் பொருத்தமான மாற்றுத் திட்டங்களையிட்டுப் பரிசீலனை செய்வதற்கு எமது அமைப்பு தயாராக இருக்கின்றது.

நீங்கள் அரசியல் தீர்வு ஒன்று தொடர்பாகப் பேசுகின்றீர்கள். ஆனால் கொழும்பு வெளிப்படுத்தும் உணர்வுகளும், தமிழ் மக்களுடைய விருப்பங்களைப் புரிந்துகொள்ளாதவாறு நாட்டின் ஏனைய பகுதிகளில் காணப்படும் மனநிலையும் இதற்கு ஏற்றதாக உள்ளதா?

சிங்கள மக்களிடம் இருந்து வெளிப்படும் உணர்வுகளும் அவர்களின் போக்கும் தூரதிர்ஷ்டமானதாகவே இருக்கின்றது. அந்த நாட்டில் தமிழர்கள் சம உரிமை கொண்ட குடிமக்களாக கருதப்பட்டால் அவர்கள் கெளரவத்துடன் நடத்தப்பட வேண்டும். ஆனால், அரசாங்கமும் அதன் இராணுவத்தினரும் பேரினவாதத்தை ஊக்குவிக்கும் வகையிலேயே தமது செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன. இது, இனங்களுக்கு இடையேயான பிளவுகளை மேலும் அதிகப்படுத்துவதற்கே வழிவகுப்பதாக இருக்கும் என்பதுடன், பகை உணர்வுக்கு முடிவைக் கொண்டுவருவதற்கும் தடையாகவே இருக்கும்.

‘விடுதலைப் புலிகளுக்குப் பிற்பட்ட காலம்’ எனப் பேசப்படுகின்றது. இந்த நிலையில் விடுதலைப் புலிகளால் மக்களை எவ்வாறு அணிதிரட்டி அதற்கான தலைமையை வழங்க முடியும்?

எமது தேசியப் பிரச்சினை ஆசியாவின் நீண்டகாலப் பிரச்சினைகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகின்றது. தற்போது உருவாகியிருக்கும் நிலைமைகளுக்கு இசைவாக எமது தந்திரோபாயங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பது எமது தலைமைக்குத் தெரியும். புலம்பெயர்ந்த தமிழர்கள் விடுதலைப் புலிகளுக்குப் பின்னால் அணி திரண்டு தமது தீவிரமான ஆதரவை உலகம் முழுவதிலும் வெளிப்படுத்தியிருந்தமையை நீங்கள் பார்த்திருப்பீர்கள். வன்னியில் இடம்பெற்றுள்ள கொடூரம் தமிழர்களிடையேயான ஒற்றுமையை மேலும் பலப்படுத்தியிருக்கின்றது.

இதனைத் தனித்துநின்று சாதிக்க முடியாது என்பது எமக்குத் தெரியும். தமிழர்களின் நலன்களையும், அவர்களுடைய எதிர்காலத்தையும் உறுதிப்படுத்துவதற்காக இலங்கையிலோ அல்லது வெளிநாட்டிலோ தமிழர்கள் அல்லது தமிழ் அரசியல் கட்சிகள் மேற்கொள்ளக்கூடிய பங்களிப்பை நாம் வரவேற்கின்றோம். இதனை அடைவதற்காக இந்தியாவில் உள்ள தமிழ்க் கட்சிகள் உட்பட அனைத்துக் கட்சிகளுடனும் இணைந்து செயறபடுவதற்கு நாம் விரும்புகின்றோம்.

தமிழர்களின் இந்த தேசியப் பிரச்சினையின் அடிப்படையில் பல தமிழ்க் கட்சிகள் முன்னர் ஆயுதம் ஏந்திய போராட்டத்தை மேற்கொண்டிருந்தன. அவர்கள் அந்தக் கோட்பாடுகளுக்கு இப்போதும் கெளரவம் கொடுப்பார்கள் என நாம் நம்புகின்றோம். இந்த நிலையில் அதனை அடைவதற்கான இணைந்து செயற்படுவதற்கு அவர்கள் முன்வருவார்கள் என நாம் நம்புகின்றோம்.

நாளை தேசிய விடுமுறை தினம்

sri-lankan-government.jpgயுத்த வெற்றியை கொண்டாடும் முகமாக நாளை 20.5.2009  பொது தேசிய விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவித்தலை ஜனாதிபதி இன்று பாராளுமன்றத்தில் விடுத்தார்.

பிரபாகரன் மரணம் அடைந்தமைக்கு விஞ்ஞான ரீதியான ஆதாரம் தேடும் இந்தியா

புலிகளின் தலைவர் பிரபாகரன், புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் ஆகியோர் மரணம் தொடர்பில் விஞ்ஞான ரீதியிலான ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று இந்திய மத்திய புலனாய்வுப் பணியகம் கோரியுள்ளது.

புலிகளின் தலைவர் பிரபாகரன், பொட்டு அம்மான் உட்பட புலிகளின் முக்கியஸ்தர்கள் கொல்லப்பட்டுள்ளதாக படைத்தரப்பினர் தெரிவித்துள்ளதை அடுத்தே, இந்திய மத்திய புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரி இவ்வாறு கோரியுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கின் பிரதான எதிரிகளாக பிரபாகரனும் பொட்டம்மானும் குறிப்பிடப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் மரணித்து விட்டமைக்கு விஞ்ஞான ரீதியில் ஆதாரங்களைச் சமர்ப்பித்தால் நாம் இந்த வழக்கினை முடிவுக்குக் கொண்டு வருவோம் என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். 

இலங்கையில் உடனடியாக அதிகாரப் பகிர்வு அமுல்படுத்தப்பட வேண்டும்: இந்தியா கோரிக்கை

india-f-m.jpgஇலங்கையில் உடனடியாக அதிகாரப் பகிர்வு அமுல்படுத்தப்பட வேண்டுமென இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தமிழ் மக்களது உரிமைகளைப் பாதுகாக்கக் கூடிய அதிகாரப் பகிர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டுமென இந்திய வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் கௌரவமாக வாழக் கூடிய ஓர் சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. அடிப்படை தமிழர் பிரச்சினைகளை இனங்கண்டு தீர்வு காணப்பட வேண்டுமென இந்திய வெளிவிவகார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

ஐக்கிய இலங்கைக்குள் சகல இன மக்களது உரிமைகளும் உறுதிப்படுத்தக் கூடிய ஒரு தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

இந்திய-இலங்கை உறவு புதிய விடயங்களில் விஸ்தரிக்கப்படும் – கலாநிதி பாலித கொஹண

palitha_kohona_.jpg இலங்கைக்கும்,  இந்தியாவுக்கும் இடையிலான நட்புறவு மேலும் விஸ்தரிக்கப்படும் என இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கொஹண கூறியுள்ளார். புலிகளின் அச்சுறுத்தல் இருந்த காலத்திலிருந்த விடயங்களைவிட புதிய விடயங்களில் இரு நாடுகளுக்குமிடையிலான நட்பு விஸ்தரிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் மீண்டும் இந்தியாவில் ஆட்சியைக் கைப்பற்றியமை குறித்து ஊடகவியலாளர்கள் கேட்டகேள்வியொன்றுக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். மன்மோகன் சிங் அரசாங்கத்துக்கு மக்கள் வழங்கியிருக்கும் ஆணை பற்றி என்னால் கருத்துத் தெரிவிக்கமுடியாது. ஆனால், அவரின் அரசாங்கம் மீளத் தெரிவுசெய்யப்பட்டிருப்பதால் முன்னர் கடைப்பிடிக்கப்பட்ட கொள்கைகள் மீண்டும் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும் எனத் தெளிவாகிறது. இலங்கை இந்தியாவுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டுள்ளது. இனி அந்தத் தொடர்புகள் பல்வேறு புதிய விடயங்களிலும் விஸ்தரிக்கப்படும்” என்றார் அவர்

இடம் பெயர்ந்த மக்களுக்கு சீனாவின் முதற்கட்ட உதவியாக 6300 கூடாரங்கள்

IDP_Campsஇலங்கையில் இடம்பெயர்ந்துள்ள மக்களின் நலன் கருதி 6300 கூடாரங்களை சீன அரசாங்கம் இலங்கைக்கு முதற்கட்ட உதவியாக வழங்கியுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் செலவின விவகாரம் குறித்து பிரிட்டிஷ் சபாநாயகர் வருத்தம்

_michaelmartin.jpg
பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது செலவினங்களுக்காக பெற்ற தொகைகளில் மேற்கொள்ளப்பட்டதாக குற்றஞ்சாட்டப்படும் ஊழல்கள் குறித்த விவகாரத்தில் தனது பங்கு குறித்து தான் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவிப்பதாக பிரித்தானிய நாடாளுமன்ற கீழவையின் சபாநாயகர் மைக்கல் மார்ட்டின் கூறியுள்ளார்.

உறுப்பினர்களால் நிறைந்திருந்த மக்களவைக்கு அளித்த அறிக்கை ஒன்றில், இந்த விவகாரத்தில் பிரிட்டன் மக்கள் கைவிடப்பட்டிருக்கிறார்கள் என்று அவர் கூறினார்.

இந்த விவகாரத்தில் முன்னேற்றம் காணுவதற்காக, தான் கட்சி தலைவர்களுடன் அவசர கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த விவகாரத்தை அவர் கையாண்ட விதம் தொடர்பாக அவர் இராஜினாமா செய்ய வேண்டும் என்று பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டதற்கு அவர் மறுத்துவிட்டார்.

அலிக் அலுவிஹாரையின் இறுதிக் கிரியைகள் 21ம் திகதி

alu.jpgசுமார் அரை நூற்றாண்டு காலமாக அரசியலில் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட மாத்தளை மாவட்ட சிரேஷ்ட அரசியல்வாதியான அலிக் அலுவிஹாரயின் ஈமக்கிரியைகள் மாத்தளை பேர்னாட் அலுவிகாரை மைதானத்தில் எதிர்வரும் 21ஆம் திகதி இடம்பெற உள்ளது. 82 வயதைக் கொண்ட சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினரான அலிக் அலுவிகாரை கடந்த 17ஆம் திகதி கொழும்பில் தனியார் மருத்துவ மனையில் காலமானார்.

ஐ. தே. கட்சியின் நீண்ட கால உறுப்பினரான அவர் 1961ஆம் ஆண்டில் மாத்தளை மாநகர சபைக்கு மேயராக தெரிவு செய்யப்பட்டதன் மூலம் அரசியலில் புகுந்தார். பின்னர் அதே ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்ற இடைத் தேர்தலில் மாத்தளைத் தொகுதியின் எம். பியாகத் தெரிவானார்.

மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய உறுப்பினருமான வஸந்த அலுவிகாரை, மாத்தளை மாவட்ட எம். பி. ரஞ்சித் அலுவிகாரை, மாத்தளை மாநகர சபை உறுப்பினர் சர்ஜித் அலுவிகாரை, தோட்ட உற்பத்தியாளர் சஹன் அலுவிகாரை ஆகியோர் இவரது புதல்வர்களாவர். காலம்சென்ற அலிக் அலுவிகாரையின் ஈமக்கிரியைகள் 21ஆம் திகதி இடம்பெற முன்னர் மாத்தளை மாநகர சபையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக பூதவுடல் வைக்கப்படும். இதன் பின்னர் பேர்னாட் அலுவிகாரை விளையாட்டரங்கில் ஈமக்கிரியைகள் இடம்பெற உள்ளன.

ஜனாதிபதி இன்று நாட்டு மக்களுக்கு உரை:

parliament.jpgவட மாகாணம் விடுவிக்கப்பட்டிருப்பதைக் கொண்டாடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதனால் இன்று முதல் ஒரு வாரத்திற்கு அரசாங்க நிறுவனங்களில் தேசிய கொடியை ஏற்றி வைப்பதற்குப் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.

அதேநேரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்றுகாலை 9.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார். அவ்வுரையை சகல அரசாங்க நிறுவனங்களினதும் அதிகாரிகளும் செவிமடுக்கவும், பார்க்கவும் ஏற்பாடு செய்யுமாறும் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் டி. திஸாநாயக்க ஆலோசனை வழங்கி இருக்கிறார்.

இந்த அறிவுறுத்தலை அவர் அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும், மாகாண சபைகளின் பிரதம செயலாளர்களுக்கும், சகல திணைக்களத் தலைவர்களுக்கும், சகல கூட்டுத்தாபன நியதிச் சபைத் தலைவர்களுக்கும் மாவட்டச் செயலாளர்களுக்கும், அரசாங்க அதிபர்களுக்கும் வழங்கியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலக ஹபடைடிஸ் (கல்லீரல் நோய்) தினம் World Hepatitis Day – புன்னியாமீன்

hepatitis_a_virus_.jpgஇன்று மே மாதம் 19ஆம் திகதி உலக ஹபடைடிஸ் (கல்லீரல் நோய்) தினமாகும்.

பொதுவாக சர்வதேச தினங்கள் அனுஸ்டிக்கப்படுவது ஒரு குறிப்பிட்ட விடயத்தின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்துவதற்காக வேண்டியேயாகும். குறிப்பாக அத்தினத்தின் முக்கியத்துவத்தினை கருத்தரங்குகள். போட்டி நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தல்,  பதாதைகளை வெளியிடுதல்,  கலைநிகழ்ச்சிகளை நடத்துதல் போன்ற பல்வேறுபட்ட கருத்திட்டங்கள் ஊடாக வெளிப்படுத்தப்படும். இந்த அடிப்படையில் இன்றைய தினம் உலக ஹபடைடிஸ் (கல்லீரல் நோய்) பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவதை குறிக்கோளாகக் கொண்டுள்ளது.

பொதுவாக ஹபடைடிஸ் நோய் விட்டமின் பி மற்றும் சி குறைபாட்டால் ஏற்படும் ஒரு நோயாகும். இந்நோய் பற்றி மக்களுக்கு அறிவூட்டல் அதிகமாகத் தேவைப்படுகின்றது. இந்நோய் பற்றியும்நோயின் அறிகுறிகள்,  தன்மைகள் பற்றியும்  தடுப்பு நடவடிக்கைகள் பற்றியும் மக்களுக்கு உணர்த்துவதும் அதற்கான சிகிச்சை முறைகள் பற்றி அறிவுறுத்துவதும்,  ஊக்குவிப்பதும் இத்தினத்தின் நோக்கங்களாகும் உலகின் ஏறக்குறைய 10 மில்லியன் மக்கள் இந்நோயினால் பீடிக்கப்பட்டுள்ளார்கள். இந்நோய்க்கு முறையான சிகிச்சை மேற்கொள்ளாவிடில் அல்லது கவனக்குறைவோடு இருப்பின் ஈரல் புற்றுநோய்,  ஈரல் செயலிழத்தல் மற்றும் ஆபத்தான நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு. வருடா வருடம் உலகெங்கும் லட்சக்கணக்கான மக்கள் இந்நோயினால் பாதிக்கப்படுகின்றனர்.

உலக ஹபடைடிஸ் (கல்லீரல் நோய்) தினத்தை   உலக ஹபடைடிஸ் நற்பணி கழகம் முன்னின்று ஏற்பாடு செய்கின்றது. இந்த நற்பணி கழகத்தில் 200 நோயாளர் தொகுதிகளும், ஹபடைடிஸ் சி – டிரஸ்ட் ஐரோப்பா ஈரல் நோயாளர் சங்கம் மற்றும் சீன ஹபடைடிஸ்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நிறுவனம் என்பன அங்கம் வகிக்கின்றன. தற்போது உலகிலுள்ள HIV \ AIDS  நோயாளர்களைவிட 10 மடஙகு அதிகமான ஹபடைடிஸ் நோயாளர்கள் இருக்கின்றனர் என கூறப்படுகின்றது.

ஹபடைடிஸ் நோய் ஹபடைடிஸ் ஏ, ஹபடைடிஸ் பி என்று இரண்டு பிரதான வகைகளைக் கொண்டது. இந்நோய்கள் பற்றி சிறிய விளக்கமொன்றினைப் பெற்றுக் கொள்வோம்.

ஹபடைடிஸ் ஏ

ஹபடைடிஸ் ஏ எனப்படும் நோயானது கல்லீரலில் ஹபடைடிஸ் ஏ என்னும் வைரஸ் கிருமியினால் ஏற்படுவதாகும். இந்நோய் அசுத்தமான உணவுகளை உட்கொள்ளல், ஹபடைடிஸ் ஏ நோய் கண்ட நபருடன் நெருங்கிப் பழகுதல் போன்ற காரணங்களினால் பரவுகின்றது. இந்நோய் நீரினாலும் பரப்பப்படலாம். ஹபடைடிஸ் ஏ வைரஸ் நோய் தொற்றிய நபரில்,  நோயின் அறிகுறிகள் தோன்றுவதற்கு 15 முதல் 45 நாட்கள் எடுக்கும். மேலும் பாதிப்புக்குட்பட்ட முதல் வாரகாலத்தில் மலத்தின் வழியாக இவ் வைரஸ் வெளியேற்றப்படுகிறது. இந்த வைரஸ் இரத்தம் மற்றும் பிற உடற்கூறு சுரப்பிகள் வழியாகவும் தொற்றக்கூடியது. இவ்வகை வைரஸ் நோய் குணமான பின் உடலில் தங்கியிருக்காது. மற்ற பொதுவான ஹபடைடிஸ் வைரஸ் நோய் தொற்றுகளாவன, ஹபடைடிஸ் பி மற்றும் சி.எனும் கிருமிகளினால் ஏற்படுகின்றது.

இந்நோயின் அறிகுறிகளக பின்வருவன ஏற்படும். வெளிர்ந்த அல்லது களிமண் நிற மலம் வெளியாதல், கருமை நிறத்தில் சிறுநீர் வெளியாதல்,  உடலில் அரிப்புத் தன்மைஏற்படல், மஞ்சள் காமாலை,  உடல் சோர்வு,  பசியின்மை,  குமட்டலுடன் வாந்தி,  மிதமான காய்ச்சல்.

இந்நோய் தொற்றாமல் இருப்பதற்கான தடுப்பு முறைகள் வருமாறு: ஹபடைடிஸ் நோயாளியின் இரத்தம், மலம் மற்றும் உடல்திரவம் போன்றவற்றை கையாண்ட பின்னர் கைகளை நன்கு கழுவி சுத்தம் செய்வது,  கழிவறையை பயன்படுத்திய பின்னும் கைகளை நன்றாகக் கழுவி சுத்தம் செய்தல்,  உணவு உட்கொள்ளும்போதும் நீராகாரங்கள் பருகும்போதும் அவதானமாக இருத்தல்.

ஹபடைடிஸ் ஏ நோய்க்கான தடுப்பூசிகள் இருக்கின்றன. தடுப்பூசி ஏற்றிக்கொண்டு நான்காவது வாரத்திலிருந்து இம்மருந்தானது இந்நோய் ஏற்படுவதை தடுக்கிறது. நீண்ட நாள் பாதுகாப்பிற்கு, முதல் ஊசிபோட்டு ஆறிலிருந்து பன்னிரண்டு மாதத்திற்குள் பூஸ்டர் டோஸ் என்னும் கூடுதல் ஊசி எடுத்துக் கொள்ள வேண்டும். இது குறித்து மேலதிக ஆலோசனைகளை வைத்தியர்களிடம் பெற்றுக் கொள்ளலாம். 

இந்நிலையில் இந்த தடுப்பூசியை யார் ஏற்றிக் கொள்ள வேண்டும்? என்ற வினாவும் எழுகின்றது. குறிப்பாக ஹ‎படைடிஸ் ஏ நோய் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் பரவியிருந்தால். அப்பிரதேசத்தில் வாழும் ஏனைய மக்கள் மற்றும் நீண்ட நாட்களாய் ஹ‎படைடிஸ் பி அல்லது சி நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களும்  இத்தடுப்பூசியை ஏற்றிக் கொள்ளல் வேண்டும்.

ஹபடைடிஸ் பி

ஹபடைடிஸ் பி வைரஸ் கண்ட பெரும்பாலான நபர்கள் 6 மாத காலத்திற்குள் இந்த வைரஸ் பாதிப்பிலிருந்து விடுவிக்கப்படுவார்கள்.  இந்த குறுகிய கால நோய் தொற்றினை அக்யூட் ஹபடைடிஸ் பி என்பர். ஹபடைடிஸ் தொற்று கண்ட சுமார் 10 சதவீத மக்களில் இவ்வகை நோய் நீண்ட நாட்களுக்கு பாதிப்பை உருவாக்குகின்றது என சில ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்நோய்க்கான அறிகுறிகளை பின்வருமாறு நோக்கலாம். உடல் சோர்வும் உடல்நலம் குன்றுதலும்,  மூட்டுகளில் வலி ஏற்படுதலும் குறைந்த அளவு காய்ச்சல் ஏற்படுவதும். மேலும்,  குமட்டல், வாந்தி, பசியின்மை  வயிற்றுவலி,  மஞ்சள் காமாலை, சிறுநீர் மஞ்சள் நிறத்தில் வெளியாதல் போன்றனவையும் இந்நோய்க்கான அறிகுறிகளாகக் கூறப்படுகின்றது. 

ஆனால் பலருக்கு இந்நோயின் அறிகுறிகள் தோன்றுவதே இல்லை. இந்த அடிப்படையில் அறிகுறிகள் இல்லாத நோயாளிகள், இந்நோயினை பிறருக்குப் பரவச் செய்ய வாய்ப்புகள் அதிகம். இவ்வகை நோய்கண்ட நபரில்,  கல்லீரலானது நிரந்தரமாக சேதம் அடையக்கூடிய சாத்தியங்கள் உண்டு. அவையாவன, சிர்ரோஸிஸ் (கல்லீரலில் ஏற்படும் தழும்புக்காயங்கள்) மற்றும் கல்லீரல் புற்று நோய் என்பனவும் நீண்ட நோயாளிகளுக்கு பின்பு ஏற்பட இடமுண்டு.

ஹபடைடிஸ் பி இரத்தத்தின் மூலமும் மற்றும் உடற்திரவங்கள் மூலமும் பரவுகிறது. கீழ்காணும் முறையிலும் நோய் தொற்ற  இடமுண்டு. வைத்தியசாலைகளில் நோய்கண்ட நபரின் இரத்தத்தை கையாள்வதின் மூலம் மருத்துவர்கள், தாதியர் இந்நோயின் பாதிப்புக்கு உட்பட இடமுண்டு. மேலும்,  நோய் கண்ட நபருடன் பாதுகாப்பு அற்ற முறையில் உடலுறவு கொள்ளல்,  நோய்வாய்ப்பட்ட நபரின் இரத்தத்தினை பிறர்க்கு செலுத்துதல்,  ஒரே ஊசியினை பலர் பகிர்ந்து கொள்ளுதல் போன்வற்றினூடாகவும் இந்நோய் பரவலாம். அதேநேரம்,  நோய் கண்ட தாய்க்கு பிறக்கும் நோய் காவப்படுகின்றது.

இந்நோய்க்கான தடுப்பு முறைகள்: விசேடமாக இரத்த தானம் செய்பவர்கள் இரத்தத்தை பரிசோதித்த பின்பே தானம் செய்தல்  தடுப்பு ஊசியினை முழுமையான நோய் எதிர்ப்பு தன்மையை அடைய ஒரு நபர் ஆறுமாத காலத்திற்குள் மூன்று தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள வேண்டும், குறைந்த நாள்பட்ட அல்லது நாள்பட்ட ஹபடைடிஸ் பி வைரஸ் தாக்கம் கொண்டவரோடு பாலுறவு கொள்வதினை தவிர்க்கலாம்

ஹபடைடிஸ் நோய் ஏற்பட்டவர்களுக்கு முக்கியமான அறிகுறியாக காணப்படுவது மஞ்சள் காமாலையாகும். சில வகையான மருந்துகளை உட்கொண்டாலும் சிறுநீர் மஞ்சளாகப் போகும்.  குறிப்பாக வயிற்றோட்டத்திற்குத் தருகின்ற ·ப்ளுரோ ஸோஸிடோன் மருந்து,  அதிக உஷ்ணத்தாலும் சிறுநீர் மஞ்சளாகப் போகும்.  எனவே,  ஒருவருக்கு சிறுநீர் மஞ்சளாகப் போனால் அவரை பரிசோதனை செய்ய வேண்டும்.  அத்துடன் அவரது சிறுநீரிலும், இரத்தத்திலும் சில அடிப்படை பரிசோதனைகள் செய்யப்படல் வேண்டும்.  இதன் மூலம் ஒருவருக்கு மஞ்சள் காமாலை ஏற்பட்டுள்ளதா?  இல்லையா?  என்பதைக் கண்டறியலாம்.  பரிசோதனையினூடாகவே இந்நோயை உறுதிப்படுத்திக் கொண்ட பின்பு சிகிச்சையினைத் தொடங்க முடியும்.

இந்தியா, இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகளுக்கு மக்கள் மஞ்சள் காமாலையைப் பொறுத்த அளவில், இரு பெரும் தவறுகளைச் செய்து விடுகிறார்கள், முதலாவது, மஞ்சள் காமாலை வந்து விட்டதா?  இல்லையா?  என்பதை அறிந்து கொள்ளத் தவறி விடுகிறார்கள். இரண்டாவது, மஞ்சள் காமாலைக்குச் சிகிச்சை செய்யும் முன், அது எந்த வகை மஞ்சள் காமாலை எதனால் அது வந்தது?  என்று பார்க்காமல் நேரடியாகவே, சிகிச்சைக்குப் போய் விடுகிறார்கள்.

உண்மையிலேயே மஞ்சள் காமாலை பாராதூரமான நோயல்ல. நோயையறிந்து வைத்தியம் மேற்கொள்வோமாயின் இது சாதாரண நோய். இதை வேறு வகையில் கூறுவதாயின் ஒரு நோயின் அறிகுறியாகத்தான் இதனைக் கொள்ள வேண்டியுள்ளது. 

கிராமிய வைத்திய முறையில் மாதுளம் பழச்சாறு தயாரித்து அதை ஒரு இரும்புச் சட்டியில் நான்கு மணி நேரம் வைத்திருந்து பிறகு பருகி வரவேண்டும் என்று கூறுவார்கள். பத்து நாட்கள் இதே முறையில் தயாரித்து இரும்புச் சட்டியில் வைத்திருந்து பருகி வந்தால் மாதுளம்பழத்தில் உள்ள இரும்புச்சத்து, பொசுபரஸ், கல்சியம், விட்டமின் ஏ முதலியவற்றால் கல்லீரல் புதுப்பிக்கப்பட்டு பலம் பெறும் என்பார்கள். இல்லையெனில் காலை நேரத்தில் இரண்டு மாதுளம் பழங்கள் சாப்பிடலாம். இவற்றில் உள்ள உயர்தரமான ஆர்கானிக் அமிலம் உடலுக்கும் உள்ளத்துக்கும் உடனடியாக சக்தியை வழங்கிவிடும். எவ்வாறாயினும் நோய் தொற்றியவர்கள் வைத்தியரின் ஆலோசனைப் பெற்று சிகிச்சைப் பெறுவது இந்த நவீன காலத்தில் மிகவும் ஏற்புடையதாகும்.

http://thatstamil.oneindia.in/cj/puniyameen/2009/0519-world-hepatitis-day.html