நாடாளுமன்ற உறுப்பினர்களின் செலவின விவகாரம் குறித்து பிரிட்டிஷ் சபாநாயகர் வருத்தம்

_michaelmartin.jpg
பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது செலவினங்களுக்காக பெற்ற தொகைகளில் மேற்கொள்ளப்பட்டதாக குற்றஞ்சாட்டப்படும் ஊழல்கள் குறித்த விவகாரத்தில் தனது பங்கு குறித்து தான் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவிப்பதாக பிரித்தானிய நாடாளுமன்ற கீழவையின் சபாநாயகர் மைக்கல் மார்ட்டின் கூறியுள்ளார்.

உறுப்பினர்களால் நிறைந்திருந்த மக்களவைக்கு அளித்த அறிக்கை ஒன்றில், இந்த விவகாரத்தில் பிரிட்டன் மக்கள் கைவிடப்பட்டிருக்கிறார்கள் என்று அவர் கூறினார்.

இந்த விவகாரத்தில் முன்னேற்றம் காணுவதற்காக, தான் கட்சி தலைவர்களுடன் அவசர கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த விவகாரத்தை அவர் கையாண்ட விதம் தொடர்பாக அவர் இராஜினாமா செய்ய வேண்டும் என்று பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டதற்கு அவர் மறுத்துவிட்டார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *