செய்திகள்

செய்திகள்

செய்திகள்

வட மாகாண மக்களுக்கு தனித்துவமான அரசியல் தீர்வு – பசில் ராஜபக்ஷ எம். பி. தெரிவிப்பு

basil.jpgவட மாகாண மக்களுக்கு நாட்டுக்கே உரிய தனித்துவமான அரசியல் தீர்வொன்றை அரசாங்கம் பெற்றுக் கொடுக்குமென்று ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும்,  வட மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். வட மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகள் தனித்துவமான செயற் திட்டங்கள் மூலம் மேற்கொள்ளப்படுமென்றும் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

வடக்கின் வசந்தம் அபிவிருத்தி செயற்றிட்டம் தொடர்பாக வவுனியா மாவட்டச் செயலகத்தில்; நடைபெற்ற கூட்டமொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“வடக்கின் வசந்தம் அபிவிருத்தித் திட்டத்தில் அந்தப் பிரதேசங்களைச் சேர்ந்த அதிகாரிகளை ஈடுபடுத்துகின்றோம். அந்த மக்களுக்குத் தேவையான அடிப்படை உட்கட்டமைப்பு வளங்களை மேம்படுத்தி,  தனித்துவமான ஓரு அரசியல் தீர்வைப் பெற்றுக் கொடுப்போம்.

அனுசரணை செயற் திட்டத்திற்கும் அப்பால்,  நாட்டுக்குப் பொருத்தமான செயற்திட்டத்தையே வடக்கில் நடைமுறைப்படுத்துகின்றோம்.

வீதி அபிவிருத்தி,மின்சாரம்,குடிநீர், விவசாயத்துறை மேம்பாடு ஆகிய பணிகளைத் துரிதமாக மேற்கொள்ள திட்டமிட்டு செயற்படுகிறோம். யாழ்ப் பாணத்திற்கான ஏ-9 பாதை, வவுனியா ஹொரவப் பொத்தானை வீதி உள்ளிட்ட வட பகுதியின் முக்கிய வீதிகளை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம் என மேலும் தெரிவித்தார்.

இராகலை நகரில் ஒரே நேரத்தில் 10 கடைகளில் கொள்ளை

நேற்று முன்தினம் இரவு கடைகளை மூடிவிட்டுச் சென்ற வர்த்தகர்கள், நேற்றுக் காலை கடைக்கு வந்தபோது கடை கள் உடைத்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பஸ் தரிப்பு நிலையம், உடபுசல்லாவை வீதி, பிரதான வீதி ஆகியவற்றில் உள்ள கிராமிய வங்கி, மளிகைக்கடை, மதுபான விற்பனை சாலை, புடவைக் கடை, இரசாய னப் பொருள் விற்பனை நிலையம், உள்ளிட்ட பத்து நிறுவனங்களிலும் ஒரே நேரத்தில் கொள்ளை மேற்கொள் ளப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

நள்ளிரவு பன்னிரண்டு மணிக்குப் பின்னரே கொள்ளையர்கள் தமது கைவரிசையைக் காண்பித்துள்ளதாக வர்த்தகர்கள் சந்தேகிக்கின்றனர். கடைகளின் பூட்டுகள் லாவகமாகக் கழற்றப்பட்டுள்ளதோடு, காசுப்பெட்டிகளிலிருந்த பணம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

கடைகளில் பெருமளவு பணம் இருக்காததால், கொள்ளையர்கள் பொருட்களை உடைத்துச் சேதப்படுத்திவிட்டுச் சென்றுள்ளனர். இதில் 10, 20 பேர் சம்பந்தப்பட்டிருக்கலாம் என சந்தேகி க்கப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து நுவரெலியா பொலிஸாருடன் இணைந்து இராகலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்கின்றனர். பொலிஸ் மோப்ப நாய்களும் புலனாய்வில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

யாழ். வவுனியா தேர்தல்களுக்கான வேட்புமனுக்கள் இன்று முதல் ஏற்பு

election_ballot_.jpgயாழ்ப் பாணம் மாநகர சபை மற்றும் வவுனியா நகர சபை ஆகிய தேர்தல்களில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல் செயலகம் அறிவித்துள்ளது.

இத்தேர்தல்களில் போட்டியிடவுள்ள அரசியல் கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் எதிர்வரும் 25ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய முடியும்.

இதேவேளை, சுயேச்சைக் குழுக்கள் எதிர்வரும் 24ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை கட்டுப்பணம் செலுத்தலாம். யாழ். மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள சுயேச்சைக் குழுக்கள் 7250 ரூபாவும் வவுனியா நகர சபைத் தேர்தலுக்கு 3750 ரூபாவும் கட்டுப்பணமாக செலுத்த வேண்டும்.

யாழ். மாநகர சபைக்கு முதல்வர், பிரதி முதல்வர், தலைவர் மற்றும் உப தலைவர் உள்ளடங்கலாக 23 பேரும் வவுனியா நகர சபைக்கு 11 பேரும் தெரிவு செய்யப்படுவார்களென்றும் தேர்தல் செயலகம் மேலும் குறிப்பிட்டுள்ளது

மாலைதீவு ஜனாதிபதி இன்று இலங்கைக்கு விஜயம்

moldivian-president.jpgமாலைதீவு ஜனாதிபதி மொஹமட் நசீத் இன்று பிற்பகல் இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரும் மொஹமட் நசீத் நாளை அநுராதபுரத்துக்கு விஜயம் செய்யவுள்ளதோடு அங்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

மாலைதீவு ஜனாதிபதி இவ்விஜயத்தின்போது வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவையும் சந்தித்து இருதரப்பு உறவுகள் தொடர்பாகக் கலந்துரையாடவுள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

‘ருவன்டி-20;’ கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று: தென்னாபிரிக்கா-பாகிஸ்தான் அணிகள் மோதல்

t20-world-cup.jpgஉலகக் கிண்ண ருவன்டி-20  கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் தென்னாபிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று மோதவுள்ளன. தென்னாபிரிக்க அணி இத்தொடரின் லீக் போட்டிகள் மற்றும் சுப்பர்-8சுற்றுப் போட்டிகள் அனைத்திலும் வெற்றியீட்டிய நிலையில் இன்று நம்பிக்கையுடன் களமிறங்குகிறது.

பாகிஸ்தான் அணியைப் பொறுத்தவரை முதல் சுற்றுக்களில் தடுமாறியபோதும் அரையிறுதி வாய்ப்பைப் பெற்றுக்கொண்டது. இந்நிலையில் இறுதிப் போட்டியை இலக்கு வைத்து இன்று பொறுப்புடன் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்தின் நட்டிங்ஹேம் நகரிலுள்ள ட்ரெட்ன்ட் ப்ரிட்ஜ் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ள முதலாவது அரையிறுதிப் போட்டி இலங்கை நேரப்படி இன்று இரவு 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இதேவேளை,  இத்தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையில் நாளை லண்டன்,  ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளதோடு இறுதிப் போட்டி நாளை மறுநாள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

ஏ 9 ஊடாக தனியார் லொறிகள் நேற்று யாழ்ப்பாணம் பயணம்

a-9-loorys.jpgயாழ். குடா நாட்டிற்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை ஏற்றிக் கொண்டு 35 தனியார் லொறிகள் நேற்று ஏ-9 பிரதான வீதி ஊடாக யாழ்ப்பாணம் சென்றடைந்தன. மிக நீண்ட நாட்களுக்குப் பின்னர் தென்பகுதியிலிருந்து வடக்கு நோக்கி தனியார் லொறிகள் செல்ல அனுமதிக்கப்பட்டமை இதுவே முதற் தடவையாகுமென்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார நேற்றுத் தெரிவித்தார்.

மூன்று தினங்களுக்கு ஒரு முறை இந்த லொறிகள் பொருட்களை ஏற்றிச் சொல்லவும் கொண்டுவரவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தென்பகுதியிலிருந்து பொருட்களை ஏற்றிக் கொண்டு செல்லும் இந்த லொறிகள் வடபகுதியிலுள்ள பொருட்களை ஏற்றிக் கொண்டு தென்பகுதியை நோக்கி திரும்பவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஒரு தடவைக்கு 40 லொறிகள் மாத்திரம் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட பிரிகேடியர் நேற்றைய தினம் 35 லொறிகளே சென்றதென்றும் குறிப்பிட்டார்.

தென்பகுதியிலிருந்து பொருட்களை ஏற்றிக் கொண்டு செல்லும் சகல தனியார் லொறி களும் ஓமந்தை சோதனைச் சாவடியை சென்றடைந்த பின்னர் அங்கு பாரிய சோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னர் வடக்கை நோக்கி செல்ல அனுமதிக்கப்படும். இதற்கமைய, ஓமந்தையிலிருந்து இராணுவ பாதுகாப்புக்கு மத்தியில் நேற்றைய தினம் சகல லொறிகளும் புறப்பட்டுச் சென்றன.

உணவு, மரக்கறி, பழ வகைகள் எண்ணெய் உட்பட அத்தியாவசிய பொருட்களே நேற்றைய தினம் எடுத்துச் செல்லப்பட்டன.  அதேபோன்று இந்த லொறிகள் கொழும்புக்கு திரும்பும் போது வடபகுதியில் உற்பத்தி செய்யப்படும் மரக்கறி, பழவகைகள் உட்பட பல்வேறு பொருட்களை அனுப்பி வைக்க யாழ். குடா மக்கள் தயார் நிலையில் உள்ளதாக பிரிகேடியர் சுட்டிக்காட்டினார்.

ஏ-9 பிரதான வீதியின் இரு மருங்கிலும் போதிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், தென்பகுதிக்கு தேவையான பொருட்களை ஏற்றிவரும் லொறிகள் ஓமந்தை சோதனைச் சாவடியில் சோதனையிடப்பட்ட பின்னர் தென்பகுதியை நோக்கி அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

ஏ-9 பிரதான வீதியையும் அதனை அண்மித்த பிரதேசங்களையும் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றிய சில காலங்களுக்கு பின்னர் பாதுகாப்பு படைவீரர்களின் விநியோகத்திற்காக ஏ-9 பிரதான வீதி உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்டிருந்தது.

அதேசமயம், இராணுவத்தின் பூரண வழித்துணையுடன் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளரின் வேண்டு கோளுக்கிணங்க யாழ். குடா நாட்டு மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் தரைவழியாக கொண்டு செல்லப்பட்டன. இந்நிலையில், தனியார் லொறிகளும் பொருட்களை கொண்டு செல்வதன் மூலம் அந்த மக்களுக்குத் தேவையான பொருட்களை மேலும் இலகுவாக பெற்றுக் கொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டார். இந்த நடவடிக்கை வடக்கு வசந்தத்திற்கு உந்து சக்தியாக அமைந்துள்ளது.

விமானத்தில் வந்தோர் பற்றிய விபரங்களை திரட்டுகிறது அமைச்சு

swine_flu.jpgபன்றிக் காய்ச்சல் வைரஸ¤டன் இலங்கைக்குள் வந்த சிறுவனுடன் பயணித்தவர்களின் விபரங்களை சுகாதார அமைச்சு குடிவரவு – குடியகல்வு திணைக்களத்திடம் கோரியுள்ளது.

அதேநேரம், வத்தளையில் கண்டுபிடிக்கப்பட்ட பன்றிக் காய்ச்சல் சிறுவனுடன் நெருங்கிப் பழகியவர்கள் தொடர் பாகவும் சுகாதார அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

கடந்த 14 ஆம் திகதி காலை 11.50 க்கு சிங்கப்பூரி லிரு ந்து இலங்கை வந்த எஸ். கியூ. 466 ரக சிங்கப்பூர் எயார் லைன்ஸ¤க்கு சொந்தமான விமானத்தில் 185 பய ணிகள் வருகை தந்தனர்.

இதில் 91 பேர் மட்டுமே குடி வரவு – குடியகல்வு திணைக்களத்திடம் இறங்குவ தற்கான படிவத்தை நிரப்பி கையளித்துள் ளனர். ஏனைய 94 பேர் படிவங்களைக் கையளிக்கவில்லை. 94 பேரும் இலங்கை க்குள் வந்துள்ளனரா? அல்லது விமான நிலையத்திலிருந்து டிரான்சிட் முறையில் வேறு விமானத்தில் சென்றுவிட்ட னரா? என்பது பற்றிய விபரங்களை விமான நிலைய குடிவரவு – குடியகல்வு திணைக்களத்திடம் விபரங்களை சுகாதார அமைச்சு கோரியுள்ளது.

(ஏ) எச். ஐ. என். ஐ. வைரஸ் தொற்றிய வர்கள் இலங்கைக்குள் வருவார்களேயா னால் அவர்களையும் அவர்களுடன் நெருங் கிப் பழகியவர்களையும் தனியான முறை யில் சிகிச்சையளிக்கவும் சுகாதார அமைச்சு ஏற்பாடு செய்துள்ளது.

பன்றிக் காய்ச்சல் வைரஸ் இலங்கைக் குள் வந்துள்ளதையடுத்து என்ன வகை யான முன்னெச்சரிக்சை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது பற்றிய அவசர கூட்டமொன்று நேற்று சுகாதார அமை ச்சில் நடைபெற்றது.சுகாதார அமைச்சின் பதில் செயலாளர் டாக்டர் நிஹால் ஜயதிலக்க தலைமையில் இக் கூட்டம் நடைபெற்றது.

பன்றிக் காய்ச்சலுடனான நோயாளி ஒரு வரை பராமரிக்கும், சிகிச்சையளிக்கும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கும் காய்ச்சல் தொற்றிவிடாதபடி எவ்வாறான பாதகாப்பு நடைமுறையை கடைப்பிடிக்க வேண்டும் என்பது பற்றியும் இங்கு ஆராயப்பட்டது.

நோய்த் தடுப்புக்கான மருந்து வகைகளை போதுமான அளவு உலக சுகாதார ஸ்தாபனம் வழங்கியுள்ளதுடன் இன்னும் தேவையேற்படும் பட்சத்தில் மருந்து வகைகளை பெற்றுக்கொடுக்கவும் உலக சுகாதார ஸ்தாபனம் ஆயத்தமாக இருக்கிறது என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும் விமான நிலையத்தில் பயணிகள் வருகை பிரிவில் பன்றிக் காய்ச்சல் வைரஸடன் வருபவர்களை கண்காணிக்கும் பகுதியில் ஆளணியை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கட்சத் தீவு-அனைத்து கட்சிகளும் ஆதரித்தால் தீர்மானம்: கருணாநிதி

karunanithi.jpgஅனைத்துக் கட்சிகளும் ஆதரி்த்தால் கட்சத் தீவை மீட்பது குறித்து சட்டப் பேரவையில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றத் தயாராக இருப்பதாக முதல்வர் கருணாநிதி கூறினார். இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைத் தடுக்கக் கோரியும் கட்சத் தீவை மீட்க மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றக் கோரியும் கச்சத் தீவில் இலங்கை ராணுவத் தளம் அமைப்பதை தடுக்கக் கோரியும் இன்று சட்டசபையில் எதிர் கட்சிகள் சிறப்பு ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வந்தன.

இந்த விவாதத்துக்குப் பதிலளித்துப் பேசிய முதல்வர் கருணாநிதி, அதிக மீனுக்கு ஆசைப்பட்டு தமிழக மீனவர்கள் எல்லை தாண்டிச் செல்வதாக 1992ம் ஆண்டில் முதல்வராக இருந்த ஜெயலலிதா மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். இப்போதும் அதே நிலை தான் நீடிக்கிறது. கட்சத் தீவை இலங்கையிடம் ஒப்படைத்ததை திமுக ஆதரிக்கவில்லை.

கச்சத் தீவை மீட்கக் கோரி சட்டப் பேரவையில் பலமுறை தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டபோதும் அனைத்துக் கட்சிகளின் ஒருமித்த ஆதரவு இல்லாததால் அதை நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது. இப்போது அனைத்துக் கட்சிகளும் ஆதரித்தால் இது தொடர்பாக தீர்மானத்தை கொண்டு வந்து நிறைவேற்ற அரசு தயாராக உள்ளது என்றார்.

30 கிலோ கிளேமோர்கள், குண்டுகள், ஆயுதங்கள் மீட்பு – முல்லைத்தீவில் தொடர்ந்தும் தேடுதல்

udaya_nanayakkara_brigediars.jpgமுப்பது கிலோ எடையுள்ள அதிசக்திவாய்ந்த கிளேமோர், பல்வேறு ரக மோட்டார் குண்டுகள் உட்பட பெருந்தொகையான ஆயுதங்களை முல்லைத்தீவிலிருந்து பாதுகாப்புப் படையினர் மீட்டெடுத்துள்ளதாக இரா ணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

வெள்ளைமுள்ளி வாய்க்கால், சாலை, புதுக்குடியிருப்பு, குப்பிலான்குளம், பட்டிக்கரை மற்றும் புளியம்பொக்கனை ஆகிய பிரதேசங்களில் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்தும் தேடுதல் களை மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் தெரிவித் தார்.

120 மி. மீ. ரக மோட்டார் குண்டுகள் – 02, 80 மி. மீ. ரக மோட்டார் குண்டுகள்-02, 81 மி. மீ. ரக மோட்டார் குண்டுகள்-03, 60 மி.மீ ரக மோட்டார் குண்டுகள்-03, மிதிவெடிகள்-100, ரி-56 ரக துப்பாக்கிகள்-04, கைக்குண் டுகள்-05 மற்றும் பல்வேறு வகையான ஆயுதங்களையும், வெடிபொருட்களையும் படையினர் மீட்டெடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பான் கீ மூனுக்கு எதிராக நியூயோர்க்கில் ஆர்ப்பாட்டம்

06bankimoon.jpgஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன் இலங்கையில் இடம்பெறும் தமிழ் மக்கள் மீதான ஒடுக்கு முறைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகக் கூறி நேற்று நியூயோர்க்கில் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. பான் கீ மூனுக்கும், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டனுக்கும் ‘உலக மனிதாபிமான விருது’ கிடைக்கவுள்ள நிலையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்ப்பாட்டத்தின்போது, வவுனியா மெனிக்பார்மில் உள்ள தடுப்பு முகாம்களை மூட வேண்டும் எனவும் அதில் ஈடுபட்டோர் கோரியுள்ளனர்.இதன் காரணமாக மாலை 6.30க்கு நடைபெறவிருந்த பான் கீ மூனின் ஊடக சந்திப்பு, இரவு 8.35 வரையில் இடம்பெறவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.