யாழ். வவுனியா தேர்தல்களுக்கான வேட்புமனுக்கள் இன்று முதல் ஏற்பு

election_ballot_.jpgயாழ்ப் பாணம் மாநகர சபை மற்றும் வவுனியா நகர சபை ஆகிய தேர்தல்களில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல் செயலகம் அறிவித்துள்ளது.

இத்தேர்தல்களில் போட்டியிடவுள்ள அரசியல் கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் எதிர்வரும் 25ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய முடியும்.

இதேவேளை, சுயேச்சைக் குழுக்கள் எதிர்வரும் 24ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை கட்டுப்பணம் செலுத்தலாம். யாழ். மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள சுயேச்சைக் குழுக்கள் 7250 ரூபாவும் வவுனியா நகர சபைத் தேர்தலுக்கு 3750 ரூபாவும் கட்டுப்பணமாக செலுத்த வேண்டும்.

யாழ். மாநகர சபைக்கு முதல்வர், பிரதி முதல்வர், தலைவர் மற்றும் உப தலைவர் உள்ளடங்கலாக 23 பேரும் வவுனியா நகர சபைக்கு 11 பேரும் தெரிவு செய்யப்படுவார்களென்றும் தேர்தல் செயலகம் மேலும் குறிப்பிட்டுள்ளது

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *