நேற்று முன்தினம் இரவு கடைகளை மூடிவிட்டுச் சென்ற வர்த்தகர்கள், நேற்றுக் காலை கடைக்கு வந்தபோது கடை கள் உடைத்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பஸ் தரிப்பு நிலையம், உடபுசல்லாவை வீதி, பிரதான வீதி ஆகியவற்றில் உள்ள கிராமிய வங்கி, மளிகைக்கடை, மதுபான விற்பனை சாலை, புடவைக் கடை, இரசாய னப் பொருள் விற்பனை நிலையம், உள்ளிட்ட பத்து நிறுவனங்களிலும் ஒரே நேரத்தில் கொள்ளை மேற்கொள் ளப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
நள்ளிரவு பன்னிரண்டு மணிக்குப் பின்னரே கொள்ளையர்கள் தமது கைவரிசையைக் காண்பித்துள்ளதாக வர்த்தகர்கள் சந்தேகிக்கின்றனர். கடைகளின் பூட்டுகள் லாவகமாகக் கழற்றப்பட்டுள்ளதோடு, காசுப்பெட்டிகளிலிருந்த பணம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
கடைகளில் பெருமளவு பணம் இருக்காததால், கொள்ளையர்கள் பொருட்களை உடைத்துச் சேதப்படுத்திவிட்டுச் சென்றுள்ளனர். இதில் 10, 20 பேர் சம்பந்தப்பட்டிருக்கலாம் என சந்தேகி க்கப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து நுவரெலியா பொலிஸாருடன் இணைந்து இராகலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்கின்றனர். பொலிஸ் மோப்ப நாய்களும் புலனாய்வில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.