எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

கிராமிய மின் விஸ்தரிப்புத் திட்டம் – ஈரான் 106 மில். டொலர் கடன் உதவி

கிராமிய மின் விநியோக திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கென ஈரான் அரசு 106 மில்லியன் அமெ ரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவின் விசேட வேண்டுகோளுக்கு இணங்க ஈரான் அரசு கடன் அடிப்படையில் நிதி உதவியை செய்துள்ளது. மின்சக்தி அமைச்சர், ஜோன் செனவிரட்ணவின் தலை மையில் இதற்கான ஒப்பந் தம் கடந்த 10ஆம் திகதி (புதன்கிழமை) அமைச்சு அலுவலகத்தில் கைச்சாத்தா னது.

அமைச்சின் செயலாளர் எம். எம். சி. பர்டினா ண்டோ, ஈரான் அரசின் சுனீர் மின்சார கம்பனியின் முகாமைத்துவ பணிப்பா ளர் ரேசா எபட்சாடென் மற் றும் ஈரானிய தூதுவர் ரஹிமி கோர்ஜி, இலங்கை மின்சார சபையின் தலைவர் ஈ. ஏ. எஸ். கே. எதிரிசிங்க ஆகியோர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். கிராமிய மின் விநியோக திட்டத்தை

நடைமுறைப்படுத்துவதற்காக பெறப்படும் 106 மில்லியன் அமெரிக்க டொலர்களும் மின்சார வசதியற்ற சுமார் 1000 கிராமங்களில் வாழும் சுமார் 1,80,000 பேருக்கு மின் வசதிகள் பெற்றுக்கொடுக்கப் பயன்படுத்தப்படும் என்றும் மின் சக்தி அமைச்சு தெரிவிக்கிறது. 100 கே. வி. கொண்ட சுமார் 1000 உப நிலையங்கள் மற்றும் திரீபேஸ் மின் கம்பியில் 4000 கிலோ மீற்றருக்கு இணைப்பை வழங்கவும் முடியும் எனவும் அமைச்சு அறிவிக்கிறது.

ஈரான் அரசு 65 மில்லியன் அமெரிக்க டொலர்களையே பெற்றுக்கொடுக்க முன்வந்திருந்தது. எனினும் ஜனாதிபதியின் விசேட வேண்டுகோளையடுத்து இதனை 106 மில்லியன் அமெரிக்க டொலர்களாக வழங்குவதற்கு முன்வந்துள்ளது. இந்த நிகழ்வின் போது இலங்கை மின்சார சபையின் மேலதிக பொது முகாமையாளர்களான ரஞ்ஜித் குணவர் தன. எஸ். ஜயவர்தனா, ஈரான் சுனீர் நிறுவன திட்டப் பணிப்பாளர் மொஹமட் நெரேஷன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

20-20 உலக கோப்பை கிரிக்கெட்: இன்றைய ஆட்டங்கள்

11bravo20-20.jpgதென் ஆப்பிரிக்கா Vs வெஸ்ட் இண்டீஸ் (இ பிரிவு)
இடம்: லண்டன் ஓவல், இலங்கை நேரம்: மாலை 6 மணி

நியுசிலாந்து Vs பாகிஸ்தான் (எப் பிரிவு)
இடம்: லண்டன் ஓவல், இலங்கை நேரம்: இரவு 10 மணி

தமிழ்சேவை ஊழியர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச் சேவை ஊழியர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வாழ்த்தும் பாடல் அடங்கிய இறுவட் டின் முதற் பிரதியை ஜனாதிபதியிடம் கையளித்தனர்.

இலங்கையில் புலிப் பயங்கரவாதத்தை வெற்றிகரமாக ஒழித்துக் கட்டி முழுச் சுதந்திரத்தையும் அனுபவிக்கக் கூடிய தேசத்தைப் பெற்றுத் தந்த ஜனாதிபதியின் புகழ்பாடும் வகையில் தமிழ்ச் சேவை தயாரித்த பாடலும், இலங்கை ஜனநாயக சோஷலிஸ குடியரசின் நான்காவது பாராளுமன்றக் கூட்டத் தொடரை ஆரம்பித்து ஜனாதிபதி ஆற்றிய உரையின் தமிழ் மொழி பெயர்ப்பும் கொண்ட இறுவட்டின் முதற் பிரதியும், 75 பிரதிகளும் அடங்கிய தொகுதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டன.

அலரி மாளிகையில் இக்கையளிப்பு இடம்பெற்றது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஆலோசகர் வீ. ஏ. திருஞானசுந்தரம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹட்சன் சமரசிங்க, தமிழ்ச் சேவை மற்றும் தென்றல் பணிப்பாளர் கே. ஜெயகிருஷ்ணா, உட்பட தமிழ்ச் சேவையின் சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் ஜனாதிபதியைச் சந்தித்து இவற்றை கையளித்தனர்.

இச் சந்திப்பில் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பயங்கரவாதத்திற்கு எதிரான போரைத் தொடர்ந்து நாட்டுக்குக் கிடைத்த வெற்றியில், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்குப் பெரும் பங்கு உள்ளதென குறிப்பிட்டார்.

மனித நேய நடவடிக்கைகள் மாத்திரமன்றி, வடபகுதி மக்களின் நலன்களுக்காக அரசாங்கம் மேற்கொண்டு வரும்முயற்சிகள் பற்றியும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன அலைவரிசைகள் பெரும் பங்களிப்பை நல்கியதாகக் கூறியதோடு, வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தின் ஊடாக எதிர்காலத்தில் வடபகுதி மக்களுக்கு ஆற்ற வேண்டிய சேவைகள் பற்றியும், தேசத்தைக் கட்டியெழுப்பும் முயற்சிகளில் ஊடகங்களுக்குள்ள பொறுப்புக்கள் பற்றியும் மேலும் விளக்கிக் கூறினார்.

இரான் அதிபர் தேர்தலில் நேற்று உற்சாக வாக்குப்பதிவு

11iran.jpgஇரானில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் எதிர்பாராத அளவுக்கு அதிகமாக மக்கள் திரண்டு வாக்களிக்க வந்திருந்ததால், அங்கு வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கப்பட்டது.

இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபர் மஹ்மூட் அஹ்மடி நிஜாத் முன்னாள் பிரதமர் மீர் ஹொசைன் மூஸவி ஆகியோரிடையே கடும் போட்டி நிலவுகிறது.

இரானில் மொபைல் தொலைபேசி மூலமாக செய்திகளை பரிமாறிக் கொள்ளும் சேவைகள் பாதிக்கப்பட்டிருப்பதால், தம்மால் வாக்குச் சாவடிக்குக்கு இடையேயான மேற்பார்வையை ஒருங்கிணைப்பு செய்ய முடியாத நிலை உள்ளதாக முசவி அவர்களின் ஆதரவாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருவதாக தொலைத் தொடர்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த இரு வேட்பாளர்களை தவிர மெஹ்டி கரௌபி மற்றும் மொஷென் ரெசாய் ஆகிய இரு வேட்பாளர்களும் போட்டியில் இருக்கிறார்கள்.

இடம்பெயர்ந்த மக்களின் அவசர தேவைகளுக்காக 34 நாட்களில் நிர்மாணிக்கப்பட்ட வைத்திய விடுதி

“வன்னி யிலிருந்து இடம்பெயர்ந்த மக்களின் அவசர மனிதாபிமான மற்றும் சுகாதார தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்குடன் நேற்று முன்தினம் திறந்து வைக்கப்பட்ட  வைத்திய விடுதி 34 நாட்களில் அதிவிரைவாக நிர்மாணித்து முடிக்கப்பட்டதாகும்’.
என்று உலக சுகாதார நிறுவனத்தின் தேசிய ஆலோசகர் வைத்திய கலாநிதி ஹிரிஸ் சந்திரயக்கண்டாவல தெரிவித்திருந்தார்.

உலக சுகாதார நிறுவன நிதியுதவியுடன் அபிவிருத்திக்கும் நிவாரணத்துக்குமான சர்வதேச அமைப்பால் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட நோயாளர் விடுதியை திறந்துவைத்துப் பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி தயாளன் தலைமையில் நடைபெற்ற விடுதி திறப்பு விழாவில், பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட அவர், மேலும் தெரிவித்ததாவது;

யாழ். மாவட்ட மக்களின் அவசர தேவை கருதி, எமது நிறுவனத்தின் அமெரிக்கத் தலைமையகத்திலிருந்து சுமார் 10 கோடி ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்கள் எடுத்து வரப்பட்டுள்ளன. இவை மாவட்டத்திலுள்ள அனைத்து மக்களுக்கும் சென்றடையக் கூடியவாறு அந்தந்தப் பிரதேசங்களிலுள்ள வைத்தியசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என்றார்.

அங்கு உரையாற்றிய யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்ததாவது;

“வடக்கின் வசந்தம்’ திட்டத்தின் கீழ் பல வேலைத்திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. சாவகச்சேரி வைத்தியசாலையைப் பொறுத்த வரையில் பல்வேறு அவசரத் தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டியனவாக உள்ளன. வைத்தியர்கள், உத்தியோகத்தர்களுக்கான தங்குமிட வசதிகள், நடமாடும் வைத்திய பிரிவு, அவசர சிகிச்சைப்பிரிவு போன்றவை நிறைவேற்றப்பட வேண்டிய தேவைகளில் சிலவாகும்.

வளப்பற்றாக்குறைகள், நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இங்குள்ள வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் சிறந்த முறையில் சேவையாற்றி வருவது பாராட்டத்தக்க விடயமாகும் என்றார்.

உலக சுகாதார நிறுவனம் இந்நோயாளர் விடுதிக்குத் தேவையான கட்டில்கள், மெத்தைகள், அலுமாரிகள், மருந்துப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களையும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

‘டுவென்டி 20’ உலககோப்பை கிரிக்கெட் – குரூப் ‘இ’ பிரிவில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி

11bravo20-20.jpgஇங்கிலாந் தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கும் ‘டுவென்டி 20’ உலககோப்பை கிரிக்கெட் தொடரின் ‘சூப்பர் 8’ சுற்றுப் போட்டியில், குரூப் ‘இ’ பிரிவில் இடம் பெற்ற இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் ஜெயித்த இந்திய அணி 20  வது ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்திருந்தது.

தொ‌டர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 19வது ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அதிவிசேட சித்தி பெற்றவர்களில் 50 வீதமானோர் ஆங்கிலத்தில் பேச முடியாதவர்களாகவே உள்ளனர்

கல்விப் பொதுத் தராதர சாதாரண மற்றும் உயர்தரப் பரீட்சைகளில் ஆங்கிலப் பாடத்தில் அதிவிசேட சித்திபெறும் மாணவர்களில் ஐம்பது சதவீதத்திற்கு அதிகமானோர் ஆங்கில மொழியில் பேசமுடியாதவர்களாகக் காணப்படுகின்றனர்.

இதன் காரணமாக அவர்கள் நேர்முகப் பரீட்சைக்கு தோற்றி உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் போட்டிபோட்டு வேலைவாய்ப்புப் பெறும் சந்தர்ப்பத்தை இழக்கும் துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளாகின்றனர் என்று திருகோணமலை வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ. விஜயானந்தமூர்த்தி கவலை தெரிவித்தார்.

மாணவரிடையே ஆங்கிலமொழியில் பேசும் திறனை வளர்க்கும் செயற்றிட்டத்தின் கீழ் ஆங்கில மொழியைப் போதிக்கும் சிரேஷ்ட ஆசிரியர்களுக்கான பத்து நாள் விசேட பயிற்சிக்கருத்தரங்கைத் தொடக்கி வைத்துப் பேசும்போதே வலயக் கல்விப் பணிப்பாளர் இக்கருத்தை வெளியிட்டார்.

தேர்தலை எதிர்கொள்ள 120 நாள் பிரசாரத் திட்டத்தை ஐ.தே.க. முன்னெடுக்கும்

election_ballot_.jpgஅர சாங்கம் எந்நேரத்தில் எத்தேர்தலை நடத்துமெனத் தெரியாத நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி பொதுத் தேர்தலை எதிர்கொள்வதற்கு 120 நாள் பிரசார வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அதன் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

சுமுகமான சூழ்நிலையில்லாத நிலையில் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாநகர சபைத் தேர்தல் சுதந்திரமாக இடம்பெறுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையாளருக்குக் கடிதம் எழுதவுள்ளதாகவும் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் கலந்துகொண்டு பேசுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் பேசுகையில்;

ஐக்கிய தேசியக் கட்சி நடைபெறவுள்ள ஊவா மாகாணசபை மற்றும் வடக்கு உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. விசேடமாக யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா நகரசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான அபேட்சகர் தெரிவு இடம்பெறுகின்றது.

இந்நிலையில் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாநகரசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு சுமுகமான சூழ்நிலையில்லையென எமக்கு அறிக்கைகள் கிடைத்துள்ளன. எனவே, நாம் போட்டியிடுவதற்கும் எமது பிரசார வேலைகளை முன்னெடுப்பதற்கும் இடமளிக்குமாறு நாம் கேட்கின்றோம்.

இன்று வடக்கு பகுதிக்குச் செல்ல முடியாத நிலையேற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியமானது. இதனை செய்வதற்கான பொறுப்பு தேர்தல் ஆணையாளருக்குரியதாகும்.

எனவே,  வடக்கில் சுதந்திரமானதும் நேர்மையானதுமான தேர்தலை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு நாம் தேர்தல் ஆணையாளருக்கு கடிதம் எழுதவுள்ளோம். இதேவேளை அரசாங்கம் எந்நேரத்தில் எத்தேர்தலை நடத்துமெனத் தெரியாத நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி எத்தேர்தலையும் சந்திக்கத் தயாராகவுள்ளது.

இந்நிலையில், பொதுத் தேர்தலை அரசாங்கம் நடத்துமாயின் அதனை எதிர்கொள்வதற்கான தீர்மானங்களை எமது செயற்குழுவினர் எடுத்துள்ளனர். இதன் ஓர் அங்கமாக கிராமிய மட்டம் முதல் அனைத்து மட்டங்களிலும் பிரசார வேலைகளை முன்னெடுக்கவுள்ளோம்.

நாட்டில் 10 ஆயிரம் தேர்தல் வாக்களிப்பு நிலையங்களிலும் ஒரு பிரதிநிதி என்ற விகிதத்திலும் தெரிவு செய்து இந்தப் பிரசாரத்தை முன்னெடுக்கவுள்ளோம். இந்த வேலைத் திட்டத்தை 120 நாட்களில் முடிப்பதற்கும் தீர்மானித்துள்ளோம். இத்திட்டத்தை எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் மேற்கொள்ளவுள்ளோம் என்றார்.

இலங்கையில் யுத்தப் பிரதேசத்தில் பணிபுரிந்திருந்த மருத்துவர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்

இலங் கையில் வடபகுதிப் போரின் இறுதிக் கட்டத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பாதுகாப்பு வலயத்தில் கடமையாற்றிய டாக்டர் சத்தியமூர்த்தி உட்பட நான்கு பேர் நேற்று கொழும்பு மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் ஆஜர் செய்யப்பட்டனர். விடுதலைப் புலிகளுக்கு உதவினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இலங்கையில் அமலில் இருக்கும் அவசரகால சட்டத்தின் அடிப்படையில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் டாக்டர் சத்திய மூர்த்தி அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு அடையாளப்படுத்தப்பட்ட பின்னர் மீண்டும் தடுப்புக் காவலுக்கு அனுப்பப்பட்டார். டாக்டர் சத்திய மூர்த்தியும், அவரது சக சுகாதார அதிகாரிகளும் போர் குறித்த தவறான தகவல்களை வெளிநாட்டு ஊடகங்களுக்கு வழங்கினார்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றிய டாக்டர் சத்தியமூர்த்தியுடன், விடுதலைப் புலிகளின் மொழிபெயர்ப்பாளரான ஜோர்ஜ் மாஸ்டர், விடுதலைப் புலிகளின் டாக்டரான கந்தசாமி துரை கேதீஸ், அவர்களது தாதியான ஆறுமுகம் ஜெயலக்ஷ்மி ஆகியோரும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.

ஜோர்ஜ் மாஸ்டர் நேற்று 3 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியதாக கூறப்படுகிறது.

யாழ்ப்பாணம் ரயில் நிலையமும் விரைவில் புனரமைக்கப்படும்

yaal-devi.jpgயாழ்ப் பாணம் ரயில் நிலையம் புனரமைக்கப்படவுள்ளது. இப்பகுதியில் கண்ணிவெடிகள், மிதி வெடிகள் இருப்பதாக தெரிவிக்கப்படுவதால் அவற்றை முற்றாக அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதேபோல, யாழ்.ரயில் நிலையத்துக்கு அருகில் சேதமான விடுதிகள், அலுவலகங்கள், பெற்றோலியக் கூட்டுத்தாபன தாங்கிகள் என்பனவும் புனரமைக்கப்படவுள்ளன.