மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் ஏ-9 பாதையூடாக அடுத்த வாரத்திலிருந்து யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் இடையிலான சொகுசு பஸ் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மக்கள் எதிர்நோக்கும் போக்குவரத்து தொடர்பான கஷ்டங்களை ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டுவந்ததையடுத்தே இந்த சொகுசு பஸ் சேவை நடத்தப்படவுள்ளது. இதன்படி முதற்கட்டமாக 5 சொகுசு பஸ் வண்டிகள் இச்சேவையில் ஈடுபடுத்தவுள்ளதுடன் காலப்போக்கில் கூடுதலான பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்படும்.
இந்த சொகுசு பஸ் சேவையின் முதல் பயணம் அடுத்த வாரம் கொழும்பில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த நிகழ்வில் அமைச்சர்கள் மற்றும் சமயத் தலைவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.