கொழும்பு – கிராண்ட்பாஸ் பகுதியில் துப்பாக்கியால் சுடப் பட்டு இறந்தவர்கள் இருவரின் சடலங்களை நேற்றுக் காலை (18) பொலிஸார் மீட்டுள்ளனர்.
கிராண்ட்பாஸ் மாவத்தை பகுதியில் நேற்றுக் காலை 7.30 அளவில் இரு சடலங்களும் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.
22 வயதான ஹில்ஹான், 51 வயதான மொஹமட் மர்சூக் ஆகிய இருவருமே துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்தக் கொலைச் சம்பவம் குறித்து விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகப் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.