சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை விண்ணப்பித்திருக்கும் 1.9 பில்லியன் டொலர் கடனுதவி தொடர்பாக நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை இறுதிச் சந்திப்பை மேற்கொள்ளவுள்ள நிலையில், இந்த விடயத்தில் “சர்வதேச சமூகத்தின் சகல அபிப்பிராயங்களும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்’ என்று நாணய நிதியப் பெண் பேச்சாளர் கரோலின் அட்கின்சன் கூறியுள்ளார்.
இன்னர் சிற்றி பிரஸ் கேள்வியொன்றை எழுப்பியிருந்தது. வடக்கில் செலவிடப்படும் நிதியானது இந்த மக்களை சிறையில் வைத்திருப்போருக்காக செலவிடப்படுவதாக அறிக்கைகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக என்ன பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளீர்கள். இதுதொடர்பாக நாணய நிதியத்தின் பதில் என்ன? என்று இன்னர் சிற்றி பிரஸ் கேட்டிருந்தது. அதிகாரிகளுடன் சிறப்பான முறையில் கலந்துரையாடல்களை நாணய நிதியம் மேற்கொள்வதாக அட்கின்சன் பதிலளித்தார். ஆனால், எந்தவொரு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அவர் கருத்துத் தெரிவித்திருக்கவில்லை. பிரிட்டிஷ் அதிகாரிகள் அறிக்கைகளை எடுத்திருந்தனர். இலங்கையின் விண்ணப்பமானது முன்னகர்த்தப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதேசமயம், அமெரிக்காவின் நிலைப்பாடு மாற்றமடைந்துள்ளது. ஒபாமாவின் நிர்வாகமானது ஊடகங்களை உன்னிப்பாக அவதானிக்கின்றது. ஜூலை 13 இல் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையின் முன்பக்க செய்தியாகவும் மறுநாள் ஆசிரியர் தலையங்கமாகவும் இந்த விடயம் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இலங்கைக்கான 1.9 பில்லியன் கடனுக்கு இப்போது சாத்தியம் குறைவாகவே காணப்படுவதை இந்தப் பத்திரிகையின் செய்தியும் ஆசிரியர் தலையங்கமும் சுட்டி நிற்கின்றன.
அடிக்குறிப்பு: ஐ.நா. பொதுச் சபை ஆவணத்தில் சர்வதேச நாணய நிதியம் தொடர்பான விமர்சனம் மற்றும் புவியியல் ரீதியான சமநிலை என்பன தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்தின் நிலைப்பாடு என்ன? என்று இன்னர் சிற்றி பிரஸ் கேள்வியெழுப்பியது. நாணய நிதியத்தின் நிலுவையாக இருக்கும் கடன் விண்ணப்பங்கள் தொடர்பான கேள்விகளை தடைசெய்தல் தொடர்பாகவும் கேள்வியெழுப்பப்பட்டது. உதாரணமாக இலங்கைக்கான கடன் வழங்குவது இன்னமும் நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பது குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. இது தொடர்பாக ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறதே தவிர நேரடியான பதில் கிடைக்கவில்லை என்று இன்னர் சிற்றி பிரஸ் கூறியுள்ளது.