வடக்கு மாகாணசபையின் பிரதம செயலக வளாகம் மாங்குளம் நகரில் அமைக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மாகாண மக்கள் இலகுவாக தங்கள் கருமங்களை நிறைவேற்றிக் கொள்ள அவர்கள் வாழும் இடத்தில் நிர்வாகம் இருக்க வேண்டும் என்று வடக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி தெரிவித்தார்.
திருகோணமலை, வரோதய நகரில் தற்போது அமைந்துள்ள வடக்கு மாகாண சபையின் பிரதம செயலகத்தில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் ஆளுநர் , மாகாண அமைச்சர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் மத்தியில் ஆளுநர் உரையாற்றினார். இந்நிகழ்வு பிரதம செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
ஆளுநரின் செயலாளர் திருமதி ஆர்.விஜயலட்சுமி அறிமுகவுரையை நிகழ்த்தினார். இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணசபை இரண்டாகப் பிரிக்கப்பட்ட பின்னர் வடக்கு மாகாணசபைக்கான பிரதம செயலகம் திருகோணமலை வரோதய நகரில் அமைக்கப்பட்டு செயல்படுகிறது. வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களும் முற்றாக விடுவிக்கப்பட்டுவிட்டன. வளர்ச்சிப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதற்கு முன்னோடியாக வடக்கு மாகாணசபையின் பிரதம செயலகத்தை மாங்குளம் நகரில் அமைப்பதென அடையாளம் காணப்பட்டுள்ளது.
முக்கியமான பணியாக “வடக்கின் வசந்தம்’ செயற்றிட்டமும் ஆயிரக்கணக்கான இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்தி, புனர்வாழ்வு அளிக்கும் பணியும் எம்முன்னே உள்ளன. யாழ்ப்பாணம், வவுனியா மாவட்டங்களில் பணியாற்றிய நிறைய அனுபவம் பெற்ற புதிய ஆளுநரின் தலைமையில் இப்பணி முன்னெடுக்கப்படும் என்று ஆளுநரின் செயலாளர் திருமதி விஜயலட்சுமி தெரிவித்தார்.
Kirupa
“மாகாண மக்கள் இலகுவாக தங்கள் கருமங்களை”
….ஓ.. மத்திய மாகாண மக்கள் ??
செயலாளர் திருமதி விஜயலட்சுமி, “வடக்கின் வசந்தம்” உண்டொ இல்லையொ உஙகளுகு வசந்தமே..