எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

5வது டெஸ்ட் இன்று தொடக்கம் :ஆஷஸ் தொடரை வெல்வது யார்? பிளிண்டொப்புக்கு கடைசி டெஸ்ட்

cri0000.jpgபொண்டிங் தலைமையிலான அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. 5 டெஸ்ட் போட்டித் தொடரில் 2வது டெஸ்டில் இங்கிலாந்து 115 ஓட்டங்களிலும் 4வது டெஸ்டில் அவுஸ்திரேலிய இன்னிங்ஸ் மற்றும் 80 ஓட்டங்களிலும் வெற்றி பெற்றன.

முதல் மற்றும் 3வது டெஸ்ட் ‘டிரா’ ஆனது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இதில் வெற்றி பெறும் அணி ஆஷஸ் தொடரை கைப்பற்றும். இரு அணிகளும் தொடரை வெல்ல கடுமையாக போராடும். ‘டிரா’ ஆனால் தொடர் சமநிலையில் முடியும்.

இங்கிலாந்து சகலதுறை வீரர் பிளிண்டொப் ஏற்கனவே ஆஷஸ் தொடருக்கு பிறகு ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டார். இதனால் அவர் விளையாடும் கடைசி டெஸ்ட் இதுவாகும். உடல் தகுதி இல்லை என்று கூறி அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. அவர் ஆடாதது அந்த அணிக்கு தொல்வியை ஏற்படுத்தியது.

ஆஷஸ் தொடரை கைப்பற்றி ஓய்வுபெற வேண்டும் என்பது அவரது இலக்காக உள்ளது. அது நிறைவேறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

கண்ணி அகற்றும் பணிக்கு அமெ. மேலும் நிதி உதவி – 6 மில்லியன் டொலர் நன்கொடை

வட மாகாணத்தில் கண்ணி வெடிகளை அகற்றும் நட வடிக்கைகளை துரிதப்படு த்துவதற்காக அமெரிக்க அர சாங்கம் மேலும் ஆறு மில்லியன் அமெரிக்க டொலர் களை நன்கொடையாக வழங்கியுள்ளது.

ஐக்கிய அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் ஆயுத அகற்றலும் தணித்தலும் பற்றிய அரசியல், இராணுவ விவகார அலுவல் பணி யகத்தினூடாக இந்நிதி, இலங்கையில் கண்ணி வெடி களை அகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நான்கு அரச சார்பற்ற அமைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கண்ணி வெடிகளை அகற்றுதல் தொடர்பான தமது ஆற்றலை அதிகரிப்பதற்கும் அடுத்துவரும் 12 மாதங்களில் தமது பணியை விஸ்தரிப்பதற்கும் இம் மேலதிக நிதி வழங்கப்பட்டுள்ளது.

டென்மார்க் கண்ணி வெடி அகற்றும் குழு கண்ணி வெடி நடவடிக்கைகளுக்கான ஸ்விஸ் மன்றம், ஹேலோ நம்பிக்கைப் பொறுப்பு, கண்ணிவெடி மதியுரைக் குழு ணிதிமி) ஆகியன இந்நிதியை தமது நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தவுள்ளன.

“இலங்கையின் வட பகுதியில் கண்ணி வெடிகளை அகற்றுவதற்காக இந்நிதி அளிப்பது குறித்து ஐக்கிய அமெரிக்க அரசாங்கம் மகிழ்ச்சியடைகிறது” என்று பிரதித் தூதுவர் ஜேம்ஸ் ஆர். மூர் கூறினார்.

ஐக்கிய அமெரிக்க இராஜ்யத்தின் கண்ணி வெடி அகற்றும் நிபுணர்களைக் கொண்ட குழு கடந்த ஜுன் மாதம் இலங்கை வந்திருந்தது. அவர்கள் இங்கு நான்கு நாட்கள் தங்கியிருந்தபோது கண்ணி வெடி அகற்றலுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து தேவைகள் மற்றும் உதவிகள் குறித்து உரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சகல முஸ்லிம் அமைப்புகளையும் உள்ளடக்கிய பொதுக் கட்டமைப்பு – உலமா சபை தலைமையக மாநாட்டில் இணக்கப்பாடு

muslim-prayer.jpgஇந்நாட்டில் தஃவா பணியில் ஈடுபட்டுள்ள சகல முஸ்லிம் அமைப்புகளும் புரிந்துணர்வுடனும் ஒத்துழைப்புடனும் செயற்படவென பொதுக் கட்டமைப்பொன்று ஏற்படுத்தப்படவிருக்கின்றது.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் ஏற்பாட்டில் அதன் தலைமையகத்தில் நேற்று முன்தினம் நடை பெற்ற விசேட கலந்துரையாடலிலேயே இப் பொதுக் கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கான இணக்கப்பாடு ஏகமனதாக எடுக்கப்பட்டிருக்கின்றது.

இந்த இணக்கப்பாடு தொடர்பாக உலமா சபையின் உதவிப் பொதுச் செயலர் அஷ் ஷெய்க் மெளலவி எம்.எஸ்.எம். தாஸிம் கையெழுத்திட்டு விடுத்துள்ள அறிக்கை வருமாறு,

அண்மையில் பேருவளையில் நடைபெற்ற அசம்பாவிதம் குறித்து அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அதன் தலைமையகத் தில் 2009.08.18 அன்று ஒரு விசேட கலந்துரையாடலை நடத்தியது.

இக்கலந்துரையாடலில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களுடன், தரீக்காக்கள், தஃவா அமைப்புகளின் முக்கிய பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். தரீக்காக்கள், தஃவா அமைப்புகளுக்கு இந் நாட்டில் பல ஆண்டு கால வரலாறு உண்டு. இவைகளின் பணிகள் மூலம் இலங்கை வாழ் முஸ்லிம்கள் பல்வேறு பயன்களை அடைந்துள்ளனர். அடைந்தும் வருகின்றனர். அவ்வப்போது சிறு சிறு பிரச்சினைகள், சம்பவங்கள் நடைபெற்ற போதிலும் அவற்றின் நன்மைகள் அதிகம் என்பதே எல்லோரினதும் கருத்தாகும்.

இந்நிலையில் வேண்டத்தகாத நிகழ்வுகள் நடைபெறுவதை தவிர்க்கும் பொருட்டு சுமுகமான ஒரு நிலையில் தத்தமது செயற்பாடுகளையும் பணிகளையும் மேற்கொள்வதற்கான ஒரு ஒழுங்கமைப்பு உருவாக்கப்பட வேண்டுமெனவும் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. தரீக்காக்களினதும் தஃவா அமைப்புகளினதும் மற்றும் சில உலமாக்கள் எதிர்கால அமர்வுகளுக்கு அழைக்கப்பட வேண்டுமெனவும் மேற்கொண்டும் தீர்மானிக்கப்பட்டது.

கருத்து வேறுபாடுகளுக்கப்பால் அன்புப் பிணைப்புடன் புரிந்துணர்வின் அடிப்படையில் தஃவாப் பணியில் ஈடுபடுவதன் அவசியம் பற்றி எல்லோரும் வலியுறுத்திப் பேசியதுடன், எதிர்வரும் புனித ரமழான் மாதத்தில் அனைத்து முஸ்லிம்களும் சகோதர வாஞ்சையுடனும் சகிப்புத்தன்மையுடனும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடனும் நடந்துகொள்ளுமாறும் அங்கு வருகை தந்த அனைவரும் வேண்டிக்கொண்டனர். அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைமையின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்நன் முயற்சி தொடர்ந்து உறுதியாக முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் அனைவரும் வேண்டிக்கொண்டனர்.

ஆப்கானிஸ்தானில் இன்று ஜனாதிபதித் தேர்தல்; அனைவரையும் வாக்களிக்குமாறு ஐ.நா. வேண்டுகோள்

ஆப்கானிஸ்தானில் இன்று ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுகின்றது. தலிபான்களின் ஆட்சி அகற்றப்பட்ட பின்னர் நடைபெறும் இரண்டாவது தேர்தல் இதுவாகும். ஜனாதிபதி ஹமித் அல் கர்ஸாயி உலக வங்கியின் முன்னாள் உறுப்பினர் அஷ்ரஃப் கானி மற்றும் முன்னாள் நிதியமைச்சர் ஆகியோர் பிரதான வேட்பாளர்களாவர்.

ஜனாதிபதியையும் 34 மாகாண சபைகளின் 420 உறுப்பினர்களையும் தெரிவு செய்யும் இத் தேர்தலில் 17 இலட்சம் மக்கள் வாக்களிக்கவுள்ளனர்.  ஆறாயிரம் வாக்களிப்பு நிலையங்களில் வாக்குப் பதிவுகள் இடம்பெறவுள்ளன. தேர்தலைக் கண்காணிக்கவென இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகள் தயாராகவுள்ளனர்.

மோசடிகளைத் தவிர்க்கும் பொருட்டே இவ்வளவு தொகையான கண்காணிப்பாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இதேபோல் வன்முறைகள் கலகங்களைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் வீதிகள் பிரதான சந்திகளில் பாதுகாப்புப் படை யினர் குவிக்கப்பட்டுள்ளதுடன் வாக்களி ப்பு நிலையங்களிலும் இராணுவம் குவிக்க ப்பட்டுள்ளது.

ஜனநாயக அரசாங்கத்தை தெரிவு செய்ய ஆப்கான் மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டுமென ஐ. நா. செயலாளர் பான் கி மூன் கேட்டுள்ளார். காலை தொடங்கும் வாக்களிப்பு மாலையில் முடிவடையவுள்ளது. வெற்றி வாய்ப்புகள் குறித்து ஆரூடம் கூற முடியாதுள்ள நிலையில் ஹமித் அல் கார்ஸா யியும் அஷ்ரஃப்கானியும் உள்ளனர். முன்னாள் நிதியமைச்சரின் செல்வாக்கு குறைவாகவே உள்ளது.

அஷ்ரஃப் கானியின் உரை கவர்ச்சிகரமாக அமைந்தது. உணவையும், குடி நீரையும்தான் ஹமீத் அல் கார்ஸாயியால் தரமுடியும் பல தொழில்களையும் இலட்சக்கணக்கான வீடுகளையும் பாதுகாப்பையும் தன்னால் தரமுடியும் என அஷ்ரஃப் கானி தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்தார்.  வெளிநாட்டுப் படைகளின் பொறுப்பற்ற இராணுவ நடவடிக்கைகளால் ஆப்கானிஸ்தான் பெண்கள், சிறுவர்கள் உயிரிழந்தமை தற்போதைய ஜனாதிபதி ஹமித் அல் கர்ஸாயியின் செல்வாக்கைப் பாதித்துள்ளமையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தலிபான்கள் தேர்தலைக் குழப்பும் நோக்குடன் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதுடன் வாக்களிப்போரின் கரங்கள் துண்டிக்கப்படுமென்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த செவ்வாய்கிழமை ஜனாதிபதியின் மாளிகை மீது தலிபான்கள் ரொக்கட் தாக்குதல்களை நடத்தினர். மற்றும் தற்கொலைத் தாக்குதல்களையும் நடத்தினர். இத்தாக்கதல்களில் குறைந்தது 15 பேர் வரை கொல்லப்பட்டனர். தேர்தல் கண்காணிப்பாளர்கள் பாதுகாப்பு குறைவாக உள்ள பகுதிகளுக்குச் செல்லத் தயங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

யாழ் உயர்பாதுகாப்பு வலயங்களில் விரைவில் மீள் குடியேற்றம்!

north-governor.jpgயாழ் மாவட்ட உயர்பாதுகாப்பு வலயங்களில் விரைவில் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. யாழ் மாவட்டத்தில் மக்களை மீள் குடியேற்றுவதற்காக இனம் காணப்பட்ட பிரதேசங்களின் விபரங்களை உடனடியாக யாழ் அரசாங்க அதிபரிடம் சமர்ப்பிக்குமாறு வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி யாழ் படை அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

யாழ் மாவட்டத்தில் உயர்பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் மக்களை படிப்படியாக மீளக் குடியமர்த்துவது தொடர்பாக கடந்த 13 ஆம் திகதி படை அதிகாரிகளுடன் வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி கலந்துரையாடினார்.

இதேவேளை,  மணற்காடு உட்பட உயர்பாதுகாப்பு வலயமாகவுள்ள பிரதேசங்களில் மக்களை மீளக் குடியமர்த்துவது தொடர்பான விபரங்களை இன்னும்சில தினங்களில் வெளியிடப்படவுள்ளதாக யாழ் செயலக வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீள் குடியேற்றப்படும் மக்களின் வதிவிடங்கள் அடையாளம் காணப்பட்டு,  கண்ணிவெடி அகற்றப்பட்டமைக்கான உத்தரவாதப் பத்திரம் யாழ் மாவட்ட செயலகத்தின் கண்ணிவெடி அகற்றல் பிரிவினரால் வழங்கப்பட்ட பின்னரே மீள் குடியேற்றத்திற்கான இறுதி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென யாழ் மாவட்ட செயலக வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

குற்றவாளிகளாக நிரூபிக்கப்படும் பொலிஸாருக்கு எதிராக கடும் நடவடிக்கை – பாராளுமன்றத்தில் பிரதமர் தெரிவிப்பு

26parliament.jpgமாலபே மற்றும் அங்குலாணப் பகுதில் அன்மையில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் குற்றவாளிகளாக நிரூபிக்கப்;படும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றும் போதே  அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பயங்கரவாதத்தை ஒழித்தமைக்காக பாதுகாப்பு படையினரையும் பொலிஸாரையும் மக்கள் பாராட்டியுள்ளனர். ஆனால் மாலபே மற்றும் அங்குலாணப் பகுதில் அன்மையில் இடம்பெற்ற சம்பவங்களையடுத்து பொலிஸார் தமது கௌரவத்திற்கு பங்கம் ஏற்படுத்திக் கொண்டுள்ளனர் என பிரதமர் மேலும் தெரிவித்தார். 

இதேவேளை,  வடக்கில் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்கள் அவர்களது சொந்த இடங்களில் விரைவில் மீளக்குடியமர்த்தப்படுவர் என்றும் பிரதமர் உறுதியளித்துள்ளார்.

செப்டெம்பர் முதல் தனியார் பஸ் கட்டணம் 5.3% அதிகரிப்பு – 6 ரூபாவில் மாற்றம் இல்லை

bus_luxury.jpgதனியார் பஸ் கட்டணங்கள் எதிர்வரும் முதலாம் திகதி முதல் 5.3 வீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.  ஆரம்பக் கட்டணமான ஆறு ரூபா அதிகரிக்கப் படாதெனவும் ஏனைய கட்டணங்களே 5.3 வீதத்தினால் அதிகரிக்கப்படுமெனவும் சங்கம் தெரிவித்துள்ளது.

பஸ் உரிமையாளர் சங்கம் நாரஹன்பிட்டியிலுள்ள அதனது தலைமையலு வலகத்தில் நேற்று திங்கட் கிழமை நடத்திய ஊடகவியலாளர் மகாநாட்டில் அதன் தலைவர் கெமுனு விஜயரட்ண உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது;  பஸ் உதிரிப்பாகங்கள் விலை உயர்வு மற்றும் எரிபொருள் கட்டணம் என்பவற்றைக் கருத்தில் கொண்டு 7 வீத பஸ் கட்டண உயர்வைக் கோரினோம். எனினும், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு 5.3% அதிகரிப்பையே அனுமதித்தது. ஜூலை 1 முதல் பஸ் கட்டணங்களை அதிகரிக்க வேண்டிய நிலையில் நாம் அரசுக்கு காலக்கெடு வழங்கினோம்.

நாம் 45 நாள் காலக்கெடு வழங்கி கடந்த சனிக்கிழமை முடிவடைந்துள்ளது. இந்நிலையில், மக்களின் நலன்கருதி 5.3 வீத அதிகரிப்புக்கு இணங்குகின்றோம். இந்நிலையில், இக்கட்டண அதிகரிப்பை அடுத்த மாதம் முதல் அமுல்படுத்தத் தீர்மானித்துள்ளோம்.

இவ்விலையதிகரிப்பின் படி ஆரம்பக் கட்டணமான 6 ரூபா அதிகரிக்கப்படமாட்டாது. எனினும், ஏனைய கட்டணங்கள் அதிகரிப்பு வீதத்திற்கு ஏற்ற வகையில் அதிகரிக்கப்படும். பஸ் கட்டண அதிகரிப்பை அரசியல் கட்சிகள் அரசியலுக்கு பயன்படுத்தக் கூடாது.  நாம் நீதிமன்ற உத்தரவை அமுல்படுத்துமாறு கோருகின்றோம். குறிப்பாக ஒன்றிணைக்கப்பட்ட நேர அட்டவணை இதுவரை முழுமையாக அமுல்படுத்தாத வகையில் இதனை மேற்கொள்ளுமாறு கோருகின்றோம்.  இதேவேளை, தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் முதலில் 7 வீத கட்டண உயர்வைக் கோரியது. தற்போது 5.3% உயர்வுக்கு இணங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ள போதும் எமக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லையெனத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது குறித்து தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் இன்று செவ்வாய்க்கிழமை தேசிய பஸ் போக்குவரத்து ஆணைக்குழுவுடன் பேசவுள்ளதாகத் தெரியவருகின்றது.

வெளிநாடுகளில் ஒழிந்திருக்கும் பயங்கரவாதிகளின் தலைவர்களை கைது செய்ய நடவடிக்கை

pr-mahi.jpgஇந் நாட்டில் சட்டம், ஒழுங்குக்கு அப்பால் செயற்பட எவருக்கும் இடமளிக்க முடியாது. அவ்வாறு செயற்படுபவர்களைப் பாதுகாக்கவும் நாம் தயாரில்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

தோற்கடிக்கப்பட்டிருக்கும் பயங்கரவாதிகள் மீண்டும் அணி சேர்கின்றார்களா என்பதை மிகுந்த அவதானத்துடன் நோக்கி வருகின்றோம். இதேவேளை வெளிநாடுகளில் ஒழிந்திருக்கும் பயங்கரவாதிகளின் தலைவர்களைக் கைது செய்வதற்கும் நடவடிக்கை எடுத்திருக்கின்றோம்.

அதனால் இலங்கையின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாக அமையக் கூடியவர்கள் உலகின் எந்த இடத்தில் இருந்தாலும் அவர்களை முறியடிக்க நாம் தயாராக உள்ளோம் என்பதையும் சொல்லி வைக்க விரும்புகிறேன் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து நாட்டையும் நாட்டு மக்களையும் விடுவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும், பாதுகாப்புச் செயலாளரையும், முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர், சிவில் பாதுகாப்பு அதிகாரி ஆகியோரை சப்ரகமுவ மாகாண சர்வமதத் தலைவர்களும், மாகாண மக்களும் இணைந்து பாராட்டு சாசன பத்திரம் மற்றும் பேரானந்தி விருது வழங்கி கெளரவித்த வைபவம் இரத்தினபுரி சமன் தேவாலய வளாகத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில், பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து நாட்டை விடுவிக்கும் யுத்தத்தில் சப்ரகமுவ மாகாணத்தைச் சேர்ந்த சுமார் இரண்டாயிரம் இளைஞர், யுவதிகள் தம்முயிர்களைத் தியாகம் செய்திருக்கிறார்கள். பலர் ஊனமுற்றிருக்கிறார்கள்.

மாவிலாற்றை விடுவிக்கும் மனிதாபிமான இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு இம்மாதம் 16 ஆம் திகதியுடன் 3 வருடங்கள் நிறைவுற்றன. மூன்று வருட காலப் பகுதியில் பயங்கரவாதிகளையும் அவர்களது தலைவர்களையும் தோற்கடித்துள்ளோம். இப்பணி நிறைவுற்று மூன்று மாதங்களாகின்றன. இவ்வாறு குறுகிய காலப்பகுதியில் இப்பாரிய பணியை எம்மால் செய்யமுடியும் என்பதை உலகில் எவரும் நம்பவில்லை.

மனிதாபிமான இராணுவ நடவடிக்கையைக் கண்டு பயங்கரவாதிகள் ஆச்சரியமடைந்தார்கள். நாம் அவர்களை மட்டுமல்லாமல் முழு உலகையுமே ஆச்சரியப்படச் செய்தோம். அதனால் உலகம் இன்று எம்மை வலுவான புதுமை மிக்க நாட்டினராகப் பார்க்கின்றனர். அப்படியிருந்தும் நாம் இந்த வெற்றியைக் கண்டதும் மகிழ்ச்சியடைந்ததோடு எம்பணியை நிறுத்திக் கொள்ளவில்லை.

பயங்கரவாதத் தலைவர்களையும், அவர்களது தற்கொலையாளர்களையும் ஒழித்துக் கட்டிவிட்டோம் என்பதற்காக தேசிய பாதுகாப்பு பூரணத்துவம் அடையாது. அதன் காரணத்தினால் இதற்கு ஏற்ப நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். அதேநேரம் மக்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பதில் தொடர்ந்தும் கவனம் செலுத்தி வருகின்றோம்.

மனிதாபிமான இராணுவ நடவடிக்கையை அற்ப அரசியல் லாபம் பெறும் நோக்கில் முன்னெடுத்திருந்தால் இப்பாரிய வெற்றியை எம்மால் பெற்றிருக்கவே முடியாது.

மாறாக நாம் பாரிய நோக்கத்தை முன்நிறுத்தியே இந்நடவடிக்கையை முன்னெடுத்தோம். அதுவே தேசிய பாதுகாப்பு ஆகும். நாம் பயங்கரவாதத்தைத் தோற்கடித்து வெற்றி பெற்றதுடன் மக்கள் பாரிய சந்தோஷத்திற்கு உள்ளாகினர். இருந்தும் நாம் நாட்டின் பாதுகாப்பு, சுதந்திரம் என்பவற்றில் செலுத்தி வருகின்ற கவனத்தில் சிறிதளவேனும் குறைவை ஏற்படுத்தவில்லை. உலக வல்லரசுகளின் அழுத்தங்களுக்கு அடிபணியாமல் நாம் நாட்டை விடுவித்திருக்கிறோம். அது எமக்கு மிகவும் பெறுமதியானது.

நாம் பொருளாதார ரீதியாக வலுவான தேசமாக மாறவேண்டும். நாட்டை விடுவிக்கவென மனிதாபிமான நடவடிக்கையை முன்னெடுத்த நாம் இப்போது நாட்டை கட்டியெழுப்புவதற்கான மனிதாபிமான நடவடிக்கையை ஆரம்பித்திருக்கின்றோம்.

எவரிடமும் கையேந்தாமல் வாழக் கூடிய நாட்டைத் துரிதகதியில் கட்டியெழுப்புவது அவசியம். பயங்கரவாதத்தை ஒழித்து கட்டியது போல் நாட்டையும், கட்டியெழுப்ப வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் உள்ளது. இதனை சகல அரசியல்வாதிகளும் புரிந்து கொள்ளவேண்டும்.

அதேநேரம் எம்மிடம் ஒழுக்கம் இருக்க வேண்டும். எம்மிடம் காணப்படுகின்ற ஒழுக்கம் காரணமாக உலக நாடுகளின் கெளரவத்தைக் கடந்த காலங்களில் எம்மால் பெற்றுக்கொள்ள முடிந்தது.

என்றாலும் இந்த ஒழுக்க நிலை தொடர்ந்தும் காணப்பட வேண்டும். ஒரு சிலரின் தவறான செயற்பாடுகள் முழு நாட்டிலுமே அபகீர்த்தியை தேடித்தர முடியும். தம்மைத் தாமே கட்டுப்படுத்திக் கொள்ள முடியாத எவரும் முப்படையிலோ, பொலிஸ் துறையிலோ கடமையாற்ற முடியாது. இந்நாட்டின் சட்டம், ஒழுங்குக்கு அப்பால் யாரும் செல்லவும் முடியாது.

இந்த புனித பூமியில் முப்படையினருக்கும், பொலிஸாருக்கும் அளிக்கப்படும் கெளரவம் பேணிப்பாதுகாக்கப்பட வேண்டும் என்றார்.

முகாம்களில் மக்கள் ‘எலிகளைப் போல வாழ்கிறார்கள்’- ஆனந்த சங்கரி

இலங்கையின் வடக்கே வவுனியாப் பகுதியில் இடைத்தங்கல் முகாம்களில் உள்ள தமிழ் மக்களை தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி செவ்வாய்கிழமை சென்று சந்தித்துள்ளார்.  முகாம்களில் மன்னார் பகுதியைச் சேர்ந்தவர்கள் கூட இன்னமும் தங்கியிருப்பது எதனால் என்றும், எதனால் என்று தனக்கு தெரியவில்லை என்றும் ஆனந்தசங்கரி தெரிவிக்கிறார்.

“முகாம்களில் இருக்கும் கூடாரங்களில் எலிகளே வாழ முடியும்” என்றும் அங்கு மனிதர்கள் பல மாதங்களாக வாழ்ந்து வருவதாகவும் அவர் BBC தமிழோசையிடம் தெரிவித்தார்.  எனினும் முகாம்களில் உள்ள மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க அரசு முன்வந்துள்ளதையும் தாம் காணக் கூடியதாக இருந்தது என்றும் ஆனந்த சங்கரி கூறுகிறார்.

விடுதலைப் புலிகள் சிறார்களை பிடித்துச் சென்றார்கள் என்கிற குற்றச்சாட்டை கடுமையாக முன்வைத்த அரசு தற்போது முகாம்களில் சிறார்களை தொடர்ந்தும் தடுத்து வைத்திருப்பதில் நியாயம் இல்லை என்று அங்குள்ளவர்கள் தம்மிடம் தெரிவித்ததாகவும் அவர் தெரிவிக்கிறார்.

ரமழான் தலைபிறை தீர்மானிக்கும் மாநாடு

muslim-prayer.jpgஹிஜ்ரி 1430 ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை தீர்மானிக்கும் மாநாடு நாளை மறுதினம் (21) வெள்ளிக்கிழமை மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் அமைந்துள்ள மத்ரஸதுல் ஹமீதிய்யா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

அன்றைய தினம் மஃரிப் தொழுகை நேரமாகிய 6.24 மணி தொடக்கம் ரமழான் மாதத்திற்கான தலைமைப்பிறையை பார்க்குமாறு சகல முஸ்லிம்களையும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் கேட்டுக் கொள்கின்றது.

அவ்வாறு புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறையை கண்டவர்கள் தகுந்த ஆதாரங்களுடன் நேரிலோ அல்லது 011-2390783, 2432110, 2434651 மற்றும் 0777-366099 ஆகிய தொலைப்பேசி இலக்கங்களுடனோ தொடர்பு கொண்டு அறியத்தருமாறு கொழும்பு பெரிய பள்ளவாசலின் செயலாளர் நதுஷான் ஹஸன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உலமாக்கள், கதீப்மார்கள், ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாகிகள், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, முஸ்லிம் சமய கலாசார திணைக்கள அதிகாரிகள், ஸாவியா, தக்கியா, ஷரீஆ கவுன்ஸில் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.