எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

பாராளுமன்றத் தேர்தல்கள் (திருத்த) சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரண்

26parliament.jpgபாராளு மன்ற தேர்தல்கள் (திருத்தச்) சட்ட மூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்புச் சட்டத்திலுள்ள சில பிரிவுகளுக்கு முரணானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என சபாநாயகர் வி. ஜே. மு. லொக்குபண்டார நேற்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

மேற்படி சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றை அவ்வாறே நிறைவேற்ற வேண்டுமாயின் விசேட பெரும்பான்மையை பெறவேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது எனவும் சபாநாயகர் நேற்று தெரிவித்தார்.

பாராளுமன்றம் நேற்றுக் காலை சபாநாயகர் வி. ஜே. மு. லொக்குபண்டார தலைமையில் கூடியது. இதனைத் தொடர்ந்து சபாநாயகர் மேற்படி உயர் நீதிமன்ற தீர்ப்பை சபையில் அறிவித்தார்.

சபையின் அங்கீகாரத்திற்கென பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தேர்தல்கள் (திருத்தச்) சட்டமூலம் தொடர்பாக அரசியலமைப்பின் 121 (1) பிரிவின் கீழ் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (மக்கள் பிரிவு), ஐ. தே. க என்பன மேற்படி சட்டமூலம் தொடர்பாக அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தன. மேற்படி மனுக்கள் தொடர்பாகவே உயர் நீதிமன்றம் மேற்படி தீர்ப்பை வழங்கியுள்ளது.

பாராளுமன்ற தேர்தல்கள் (திருத்தச்) சட்டமூலத்தின் 2ஆம் வாசகத்தின் 7(5) ஆ உப பிரிவு 7(6) உப பிரிவில் அல்லது ஏதேனும் மதத்தை அல்லது சமுதாயத்தை குறித்துக்காட்டுவதாயின் எனும் சொற்கள் மற்றும் 4 ஆம் வாசகத்தின் 9 (3) உப பிரிவு ஆகியவை அரசியலமைப்பின் 12 (1) , 14(1) அ. மற்றும் 14 (1)(உ) ஆகிய உறுப்புரைகளுக்கு முரணானவை என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பாராளுமன்ற தேர்தல்கள் (திருத்தச்) சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பிரிவுகள் உள்ளவாறே நிறைவேற்றப்பட வேண்டுமாயின் அரசியலமைப்பின் 84(2) ஆம் உறுப்புரையின் பிரகாரம் விசேட பெரும்பான்மை வாக்குகளால் மாத்திரமே நிறைவேற்றப்படலாம் என அரசியலமைப்பின் 123 ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அவ்வாறே 2 ஆம் பிரிவின் 7 (5) (ஆ), 7 (6) மற்றும் 4 ஆம் பிரிவின் 9 (3) உப பிரிவுகள் உயர் நீதிமன்றத்தால் குறிப்பிடப்பட்டுள்ளவாறு திருத்தியமைக்கப்படும் பட்சத்தில் அரசியலமைப்புக்கு முரணானதல்ல என்றும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேற்குறிப்பிடப்பட்ட 2 ஆம் பிரிவின் 7(5) (ஆ), 7 (6) மற்றும் 4 ஆம் பிரிவின் 9 (3) உப பிரிவுகள் தவிர்ந்த சட்டமூலத்தின் ஏனைய பிரிவுகள் அரசியலமைப்புக்கு முரணானவை அல்ல என்றும் உயர் நீதிமன்றம் மேலும் தீர்ப்பு வழங்கியுள்ளது என்றும் சபாநாயகர் வி. ஜே. மு. லொக்குபண்டார தெரிவித்தார்.

இந்திய அணிக்கு கைகொடுத்த ஏர் இந்தியா

09-airways-99.jpgஜெட் ஏர்வேஸ் பைலட்டுகளின் வேலை நிறுத்தம் காரணமாக சென்னையிலிருந்து கொழும்பு செல்லவிருந்த பயணிகள் பெரும் தவிப்புக்குள்ளானார்கள். இதையடுத்து ஏர் இந்தியா நிறுவனம் சிறப்பு விமானம் ஒன்றை இயக்கி அவர்களை கொழும்பு அழைத்துச் சென்றது. ஜெட் ஏர்வேஸ் பைலட்டுகள் வேலைநிறுத்தம் காரணமாக ஜெட் ஏர்வேஸ் சேவை முற்றிலும் ஸ்தம்பித்துப் போயுள்ளது.

இந்த வேலைநிறுத்தம் காரணமாக சென்னையிலிருந்து ஜெட் நிறுவனம் இயக்கும் எட்டு விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று கொழும்புக்கான விமானம். இந்த விமானம் இன்று ரத்து  செய்யப்பட்டதால், அதில் செல்லவிருந்த பயணிகள் பரிதவிப்புக்கு ஆளாகினர்.

இதையடுத்து சென்னையிலிருந்து கொழும்புக்கு ஏர் இந்தியா நிறுவனம் கூடுதல் விமானத்தை இயக்கியது. சென்னை விமான நிலையத்தில் தவித்துக் கொண்டிருந்த ஜெட் ஏர்வேஸ் பயணிகள் இதில் அழைத்துச் செல்லப்பட்டனர்.

அதே விமானத்தில், ஜெட் வேலைநிறுத்தத்தில் சிக்கி கொழும்பு செல்ல வேண்டிய இந்திய கிரிக்கெட் அணியினரும் ஏர் இந்தியாவின் சிறப்பு விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்த சிறப்பு கூடுதல் விமானம் இன்று முற்பகல் 11.45 மணிக்கு சென்னைக்கு வந்திருந்த கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பிற பயணிகளுடன் பெங்களூர் சென்றது. அங்கு தங்கியிருந்த சில வீரர்களை ஏற்றிக் கொண்டு 12.45 மணிக்கு கொழும்பு சென்றது.

இந்த விமானத்தில் சச்சின், ராகுல் டிராவிட், கம்பீர், இஷாந்த் சர்மா, பிரவீன் குமார், அமித் மிஸ்ரா, யூசுப் பதான், படேல், அபிஷேக் நாயர், திணேஷ் கார்த்திக், ஆசிஷ் நெஹ்ரா ஆகியோரும், பயிற்சியாளர்களான ராபின் சிங், வெங்கடேஷ் பிரசாத், கேரி கிர்ஸ்டன் ஆகியோரும் பயணித்தனர்.

அமெரிக்க அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் மகள்

manmohan_daughter.jpgஆப்கா னிஸ்தான் மற்றும் ஈராக்கில் பிடிபட்ட சிறை கைதிகளை கொடுமைப்படுத்தியது தொடர்பான ரகசிய ஆவணங்களை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் மகள் அம்ரீத் சிங், அமெரிக்க கோர்ட்டில் வாதாடி பெற்றுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் கைது செய்யப்பட்ட கைதிகள் குவான்தனாமோ சிறையிலும்,  ஈராக்கில் கைது செய்யப்பட்ட கைதிகள் அபு கிரெய்ப் சிறையிலும் அடைக்கப்பட்டு அமெரிக்க ராணுவத்தினரால் பல்வேறு சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டனர்.  இது தொடர்பாக அமெரிக்க புலனாய்வு நிறுவனங்களான எப்.பி.ஐ., சி.ஐ.ஏ, போன்றவை பதிவு செய்த ஆவணங்கள் மற்றும் வீடியோ டேப்புகளை ஒப்படைக்கும் படி அமெரிக்க மனித உரிமை இயக்கம் நீண்ட நாட்களாக (ஏ.சி.எல்.யூ.,) கோரி வந்தது.

கியூபா நாட்டுக்கு அருகே உள்ள குவான்தனாமோ சிறை மற்றும் அபு கிரெய்ப் சிறையில் கைதிகள் கொடுமைப்படுத்தப்பட்ட அனைத்து விவரங்களையும் அளிக்கும்படி அமெரிக்க அரசுக்கு உத்தரவிடக் கோரி, ஏ.சி.எல்.யூ., இயக்கத்தில் உள்ள அமெரிக்க வக்கீலான மன்மோகன் சிங்கின் மகள் அம்ரீத் சிங்,  கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

சிறை கைதிகளுக்கு நேர்ந்த கொடுமை,  காவலில் இறந்த கைதிகளின் பிரேத பரிசோதனை அறிக்கை அனைத்தையும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அளிக்க வேண்டும்,  என ஏ.சி.எல்.யூ., நீண்ட நாட்களாக கோரி வந்தது.

இந்த அமைப்பின் சார்பில் அம்ரீத் சிங்கும்,  கனடா நாட்டைச் சேர்ந்த ஜமீல் ஜாபரும் கோர்ட்டில் வாதாடி,  ஒரு லட்சத்து 30 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ரகசிய ஆவணங்களை பெற்றுள்ளனர். இந்த ஆவணங்களை அரசிடமிருந்து போராடி பெறுவதற்கு ஒன்பது கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.  இந்த தொகையை அரசிடமிருந்து பெறவும் இந்த அமைப்பு திட்டமிட்டுள்ளது.
இதற்கிடையே,  இரண்டு கைதிகளை கொடுமைப்படுத்தியது தொடர்பான வீடியோ டேப்புகளை எரித்து விட்டதாக சி.ஐ.ஏ.,  தெரிவித்துள்ளது. இது கோர்ட் அவமதிப்பு செயலாகும் என கூறும் அம்ரீத் சிங்,  இன்னும் வெளியிடப்படாத ஆவணங்களையும் ஒப்படைக்கும் படி கூறி வாதாடி வருகிறார். அமெரிக்கரை திருமணம் செய்து கொண்டுள்ள அம்ரீத் சிங்(40) யேல் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெட் ஏர்வேஸ் – பைலட்டுகள் வேலை நீக்கம்

09-airways-99.jpgஜெட் ஏர்வேஸ் விமானிகளின் அறிவிக்கப்படாத வேலை நிறுத்தம் தொடர்வதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகிவருகிறார்கள். இதுவரை 160 விமானங்களின் சேவை பாதிப்புக்குள்ளாகியுள்ளது. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் விமான நிலையங்கலில் தவிக்கிறார்கள்.

ஏர் இந்தியா  மற்றும் சில தனியார் விமான நிறுவனங்கள் கூடுதலாக விமானங்களை இயக்கி நிலைமையைச் சமாளித்து வருகின்றன. கடந்த வாரம் ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் 2 பைலட்டுகளை வேலையிலிருந்து நீக்கியது இதற்கு எதிர்ப்பு  தெரிவிக்கும் வகையிலும், வேலை நீக்கம் செய்யப்பட்டவர்களை மீண்டும் பணியில் சேர்க்கவேண்டும் என்று வலியுறுத்தியும் நாடு முழுவதுமுள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவன பைலட்டுகள் 600பேர் திடீரென மாஸ் லீவ் எடுத்தனர்.

இதனால் 160 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது. நாடு முழுவதும் 20ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் உடல் நிலையை காரணம் கூறி விடுப்பில் போன பைலட்டுகளை ஜெட் நிறுவன அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். இதில் 8 பைலட்டுகள் சொன்ன காரணம் உண்மையில்லை என்று அறிந்த நிர்வாகம் 8பேரையும் பணி நீக்கம் செய்து இன்று உத்தரவிட்டுள்ளது.

இதோடு சேர்த்து இதுவரை 10 பைலட்டுகள் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பேச்சுவார்த்தைக்கு அழைப்பார்கள் என்று பைலட்டுகள் காத்திருந்த நிலையில் நிர்வாகம் மேலும் 8 பைலட்டுகளை பணிநீக்கம் செய்தது மற்ற பைலட்டுகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பயணிகள் சேவை பாதிக்கப்படுவதினால் பைலட்டுகளை மீண்டும் வேலைக்கு திரும்பவைக்க தேவையான நடவடிக்கை  எடுக்க மத்திய அரசு  ஜெட் ஏர்வேஸ் நிர்வாகத்தை கேட்டுக்கொண்டுள்ளது.ஆனால் பேச்சுவார்த்தை இப்போதைக்கு தொடங்குவதாகத் தெரியவில்லை.

ஊடகவியலாளர்கள் பிணையில் விடுதலை!

999.jpgதெனியாய பிரதேசத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்ட லங்கா வார இதழின் ஊடகவியலாளர்கள் மூவரும் நெற்று பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். தெனியாய பகுதியில் தனியார் தோட்டம் ஒன்றிற்குள் அனுமதியின்றி பிரவேசித்து அங்கு அமைக்கப்பட்டு வரும் கட்டடம் ஒன்றைப் படம் பிடித்த குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

பொலிஸார் இவர்கள் மூவரையும் நேற்று மொறவக்கை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அதன்போது நீதவான் மூவரையும் தலா 3000 ரூபா ரொக்கப் பிணையிலும் 50000 ஆயிரம் ரூபா சரீர பிணையிலும் விடுதலை செய்தார். இவர்கள் மீதான வழக்கு விசாரணை எதிர்வரும் நவம்பர் மாதம் 04 ஆம் திகதி நடைபெறவுள்ளது

பகிடிவதைக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை – அமைச்சர் விஸ்வ வர்ணபால சபையில் அறிவிப்பு

viswa-999.jpgஉயர் கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 2015ம் வருடம் வரை உதவி ஒத்துழைப்புகளை வழங்க உலக வங்கி முன்வந்துள்ளதாக உயர் கல்வியமைச்சர் விஸ்வ வர்ணபால பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தற்போது உயர் கல்வித்துறையில் 60ற்கு மேற்பட்ட கருத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதுடன் இதற்கென 10,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன் பல்கலைக்கழகங்களிலிருந்து பகிடி வதைகளை முற்றாக ஒழிக்க உரிய நடவடிக்கைகளை எடுக்கவும் அதற்கெதிரான சட்ட நடவடிக்கைகளை கடுமையாக்கவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்ட மூலத்தைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அதன் மீதான விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் தமதுரையில் மேலும் தெரிவிக்கையில்;

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் சேவை வயதெல்லையை 55 லிருந்து 57 ஆக அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வயதெல்லை பல நிபந்தனைகளுடன் அறுபதாகவும் நீடிக்கப்படலாம். அத்துடன் பல்கலைக்கழக அனுமதியை மேலும் அதிகரிப்பதற்கும் அடுத்த வருடம் முதல் 25,000 பேரை பல்கலைக்கழகங்களில் இணைத்துக்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் நடவடிக்கையை விரிவுபடுத்துவதுடன் கல்விசாரா ஊழியர்களுக்கு சேவை வாய்ப்பை நீடிப்பதற்காகவும் இந்தத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இலங்கை பல்கலைக்கழக நடைமுறையை உலக வங்கி பாராட்டியுள்ளது. உயர் கல்விக்காக அரசாங்கம் பெரும் வாய்ப்பை வழங்கியுள்ளதுடன் மேலும் 2015ம் ஆண்டு வரை அவ்வங்கி எமக்கு உதவ முன்வந்துள்ளது. இதன் மூலம் உயர் கல்வித்துறையில் பல முன்னேற்றமான மாற்றங்களை மேற்கொள்வதுடன் கட்டிடங்கள் ஆளணிகள் குறையையும் நிவர்த்தி செய்யத் திட்டமிட்டுள்ளோம்.

இருபதாயிரத்து எண்ணூற்று நாற்பத்தாறு மாணவர்கள் 2008ம் ஆண்டு பல்கலைக்கழகங்களுக்கு சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்கள். அடுத்த ஆண்டில் 25 ஆயிரம் மாணவர்களை இணைத்துக்கொள்வதே எமது எதிர்பார்ப்பு. பாடத்திட்டங்களை நவீன மயப்படுத்துவதுடன் கடந்த 60 வருட பாரம்பரிய கற்கைகளை விடுத்து நவீன பாடத் திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளோம். 2006, 2007ம் ஆண்டுகளில் பல புதிய பாடங்களும் 2008ல் பல புதிய துறைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் நன்மை கருதியே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கல்விசார் அபிவிருத்தியைப் பொறுத்தவரை இரண்டு புதிய கல்வி பீடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இத்தகைய முன்னேற்றங்கள் மூலம் வெளிவாரிக் கற்கைகளை ஆரம்பித்து மேலும் பெருமளவு பட்டதாரிகளை உருவாக் கவுள்ளோம். தேசிய தகைமை அமைப்பொன்றை உருவாக் கவும் நடவடிக்கை எடுக்கப்படும். சில தொழிற்சாலைகள் கூட போலிப் பட்டங்களை வழங்கும் நிலை இன்றுள்ளது.

இந்நிலையை மாற்றி சட்டப்படியான தகைமை களை உறுதி செய்வதற்கு இவ்வமைப்பின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இந்திய நீதிமன்றங்களில் பகிடிவதையை மனித உரிமை துஷ்பிரயோகமாகத் தீர்ப்பளித்து தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளதை இங்கு நாம் குறிப்பிடவேண்டும். மாணவ ர்களில் தீவிரமான சிலர் அரசியல் பின்னணி யுடன் பகிடி வதைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவை நிறுத்தப்ப டும். அதற்காக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள ப்படுமெனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

முரண்பாடுகள் பேச்சுவார்த்தைகளூடாக தீர்க்கப்படுமென்கிறார் ஜப்பான் ஜனநாயகக் கட்சியின் தலைவர்

japan-new-pri.jpgஅரசாங் கத்தை அமைப்ப தற்கான பேச்சுவார்த்தைகள் இன்னும் ஓரிரு தினங்களில் வெற்றிகரமாக முடிவடையு மென ஜப்பான் ஜனநாய கக் கட்சியின் தலைவர் யுகியோ ஹற்றோயாமா தெரிவித்தார்.  இவர் எதிர் வரும் 16 ஆம் திகதி பிரதமராகப் பதவியேற்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் தேர்தலில் வெற்றியீட்டிய ஜனநாயகக் கட்சி ஐம்பது வருடங்களின் பின் ஆட்சியைக் கைப்பற்றியது. அரசாங்கத்தை அமைப்பதற்காக இரண்டு கட்சிகளுடன் பேச்சுக்களை நடத்தி வரும் யுகியோ ஹற்றோயாமா அமைச்சரவை நியமனங்கள் பற்றியும் அக்கறை காட்டுகின்றார்.

வெளிநாட்டுக் கொள்கை பாதுகாப்பு போன்ற முக்கிய விடயங்களில் சோசியல் சமூகக் கட்சியும் மக்கள் புதிய கட்சியும் வேறு பட்ட நிலைப்பாட்டிலுள்ளன. இவ்விரண்டு கட்சிகளையும் சேர்த்தே புதிய அரசாங்கம் அமைக்கப்படவுள்ளது. பேச்சுவார்த்தைகள் முழுமையாக முடிவடையாததால் அமைச்சர்களின் நியமனங்களை ஒத்திவைக்கும்படி ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் அழுத்தம் கொடுத்துள்ளனர்.

சோசியல் சமூகக் கட்சி, மக்கள் புதிய கட்சியின் ஆதரவின்றி ஜப்பான் பாராளுமன்றத்தின் மேல்சபையை அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியாது. எனவே இவ்விரண்டு கட்சிகளின் கோரிக்கைகளையும் ஏற்க வேண்டிய நிலையில் பிரதான கட்சியான ஜனநாயகக் கட்சியுள்ளது. பாராளுமன்றத்தின் கீழ் சபையில் போதியளவு பெரு ம்பான்மை இக்கட்சிக்கு ள்ள போதும் மேல் சபை யில் இவ்விரண்டு சிறிய கட்சிகளின் ஆதரவும் தேவை ப்படுகின்றது.

சோமாலியக் கடற் கொள் ளையர்களைத் தோற்கடிக் கும் பணியில் ஈடுபட்டுள்ள இரண்டு ஜப்பான் கப்பல் களை திருப்பி அழைத்து அவற்றுக்குப் பதிலாக காவ ற்படகுகளை அனுப்புமாறும் ஆப்கானிலுள்ள அமெரிக்கப் படைகளுக்கு எரிபொருள் வழங்க இந்து சமுத்திரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பலை 2010 ஜனவரியில் மீள அழைக்கும் படியும் அக்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

இவ்வொப்பந்தங்கள் அடுத்த ஆண்டு ஜனவரியில் முடிவடைவதால் இவற்றை மீண்டும் புதுப்பிக்கக் கூடாதென்றும் அக்கட்சிகள் வலியுறுத்தியுள்ளதுடன் இது குறித்து எழுத்து மூலம் உறுதிப்படுத்த வேண்டுமென் றும் நிபந்தனை விடுத்துள்ளன. இவை அனைத்தும் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கப்பட்டு ஓரிரு நாட்களில் இணக்கம் காணப் படுமென பிரதமராகப் பதவி யேற்கவுள்ள யுகியோஹற் றோயாமா நம்பிக்கை தெரிவித்தார்.

ஜேம்ஸ் எல்டர் 21 ஆம் திகதிக்கு முன்வெளியேற வேண்டும் : அரசின் உத்தரவுக்கு பான் கீ மூன் கண்டனம்

banki-moon_elter.jpgஐக்கிய நாடுகள் சபையின் சிரேஷ்ட உயர் அதிகாரியும் யுனிசெப் அமைப்பின் இலங்கைக்கான பேச்சாளருமான ஜேம்ஸ் எல்டர் எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு முன்னர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற அரசின் இறுதி முடிவுக்கு பான் கீ மூன் கண்டனம் தெரிவித்துள்ளார். இலங்கை அரசு இந்த இறுதி முடிவு குறித்துத் தனக்கு அறிவித்ததாக யுனிசெப் அமைப்பின் தென்னாசியாவுக்கான பேச்சாளர் சர கிறோவ், சி.என்.என். செய்திக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இலங்கையின் இந்த அறிவிப்பால் யுனிசெப் அமைப்பு ஏமாற்றமும் அதிருப்தியும் அடைந்துள்ளது என்று அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஆன் பெமெமன் தெரிவித்துள்ளார்.  “ஜேம்ஸ் எல்டர் வெளியிட்ட அறிக்கை புலிகளுக்கு ஆதரவாக அமைந்தது. அந்த அறிக்கை உண்மைக்குப் புறம்பானதாகவும் இருந்தது. ஜேம்ஸ் எல்டர் உண்மை நிலையை ஆராய்ந்து அறிக்கை வெளியிட்டிருக்கவில்லை” என அவர் மீது அரசு குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜேம்ஸ் எல்டரை வெளியேற்றும் இலங்கை அரசாங்கத்தின் உத்தரவு குறித்து ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் பான் கீ மூன் கண்டனம் தெரிவித்திருப்பதாக ஐ.நா. பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.  இந்த விடயம் குறித்து பான் கீ மூன் விரைவில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் தொடர்பு கொள்ளவுள்ளதாகவும் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் பாரிய சேவைகளை செய்து வரும் ஒரு நிறுவனம் என்ற அடிப்படையில் அதன் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது இலங்கை அரசாங்கத்தின் கடமை என பான் கீ மூன் குறிப்பிட்டுள்ளதாகவும் பேச்சாளர் தெரிவித்தார்.

செனல் 4 வீடியோ காட்சி : தூதுவர்கள் – உயர்ஸ்தானிகர்களுக்கு அமைச்சர் விளக்கம்

mainpic999.jpgசெனல்-4 வீடியோ காட்சிகள் குறித்த தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வு நேற்று இடர் முகாமைத்துவம் மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க தலைமையில் இடம்பெற்றது.

ஜனாதிபதி செயலகத்தில் நடந்த இந்நிகழ்வில் வெளிவிவகார செயலாளர் பாலித கோஹண, சட்டத்தரணி மொகான் பீரிஸ், சிரேஷ்ட விரிவுரையாளர் டாக்டர் சத்துர சில்வா மற்றும் உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.

மேற்படி வீடியோ காட்சி தொடர்பாக வெளிநாட்டுத் தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்களுக்கு அமைச்சர் விளக்கமளித்தார். இது குறித்து ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் மாநாடு ஒன்றையும் ஏற்கனவே அமைச்சர் நடத்தியிருந்தார்.

வீடியோக் காட்சிகள் தொடர்பாக ஜனாதிபதியின் விதப்புரைக்கமைய நான்கு கட்ட விசாரணைகள் நடத்தப்பட்டதாக அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.

வீடியோ காட்சிகள் பற்றி டாக்டர் சுனில் ஹே வித்தாரண ( இவர் உலகளாவிய ரீதியில் பிரசித்திபெற்ற வீடியோ பரிசோதகர் ), மொறட்டுவை பல்கலைக் கழகத்தின் தலைமை தொழில்நுட்ப விரிவுரையாளர் சத்துர டி சில்வா, சிரேஷ்ட சமிக்ஞைகள் அதிகாரி பிரசாத் சமரசிங்க, மேஜர் ஜெனரல் பி. ஏ. பண்டார ஆகியோர் விசாரணை நடத்தி அமைச்சரிடம் அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்திருந்தனர்.

அந்த அறிக்கை மூலம் கிடைத்த தகவலின்படி, இந்த வீடியோ காட்சிகள் ‘கேம் கோடர்’ (Camcoder) மூலமாகவே ஒளிப்பதிவு செய்யப்பட்டவை என்றும் கையடக்கத் தொலைபேசியில் அல்ல எனவும் போலியான ஒலிப்பதிவு (Audio) நவீன தொழில்நுட்பத்தின் மூலம் பதிவாக்கப்பட்டது எனவும் அமைச்சுத் தரப்பில் கூறப்பட்டது.

தம்பலகாமத்தில் குழந்தைகளுக்கான ஆடைத் தொழிற்சாலை

திரு கோணமலை மாவட்டம் தம்பலகாமத்தில் ‘ரை ஸ்டார்’ நிறுவனத்தின் 34ஆவது ஆடைத் தொழிற்சாலையைக் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் மற்றும் மாகாண ஆளுனர் ரியல் அட்மிரல் மொஹான் விஜயவிக்ரம ஆகியோர் நேற்று வைபவ ரீதியாக திறந்து வைத்தனர். இத்தொழிற்சாலையில் அப்பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் மாகாண அமைச்சர்களான எம்.எஸ்.உதுமாலெப்பை, மாகாண அமைச்சர் துரையப்பா நவரட்ணராஜா  மத்திய அமைச்சர்களான சுசந்த புஞ்சிநிலமே எஸ்.எம். சந்திரசேன, முதலீட்டு ஊக்குவிப்பு சபைத் தலைவர் தம்மிக்க பெரேரா, பாராளுமன்ற உறுப்பினரும் கூட்டறவு அபிவிருத்தி உதவி அமைச்சருமான நஜீப் ஏ மஜீத் மற்றும் ஜனாதிபதியின் புதல்வரும் ‘இளைஞர்களுக்கு நாளை’ அமைப்பின் தலைவருமான நாமல் ராஜபக்ஷ உட்பட மாகாண சபை உறுப்பினர்களும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இத்தொழிற்சாலையில் இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான ஆடைகள் தயாரிக்கப்படும்; முதலாவது கேள்வி ஒப்பந்தம் பிரித்தானியாவிலிருந்து கிடைத்துள்ளதாக ரை ஸ்டார்’ நிறுவனத்தின் தலைவரான குமார் தேவபுர தெரிவித்துள்ளார்.