எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

வெற்றி நமதே …- யாழ். குடாநாட்டின் உயர்ச்சியை வெளிப்படுத்தும் திரைப்படம்

cinema.jpgசிங்கள மற்றும் தென்னிந்திய தமிழ் கலைஞர்கள் நடிக்கும் வீடியோ கலாமினியின் வெற்றி நமதே திரைப்படம் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களின் சகோதரத்துவத்தினை வெளிப்படுத்தும் வகையில் தயாரிக்கப்படவிருக்கும் வெற்றி நமதே திரைப்பட ஆரம்ப விழா அச்சுவேலி இராஜமாணிக்கம் கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது.

தமிழ், சிங்கள, ஆங்கில மொழிகளில் 4 கோடி ரூபா செலவில் தயாரிக்கப்படவுள்ள வீடியோ கலாமினி அச்சுவேலியூர் மாணிக்கம் சிவமூர்த்தியின் இயக்கத்திலும், கதை, வசனம், பாடல்களுடன் வெற்றி நமதே திரைப்படம் தயாரிக்கப்படவுள்ளது.

விஜய அபயசேகரவின் தயாரிப்பில் கோண்டாவில் புலவர் வீடியோ ரமேஸின் படப்பிடிப்புடன் வெற்றி நமதே திரைப்படம் தயாரிக்கப்படுவதுடன் உலக சாதனையை நிலைநாட்டும் வகையில் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறும் வகையில் இத் திரைப்படம் வெளியிடப்படவுள்ளது.

வெற்றி நமதே திரைப்படம் ஊடாக சுமார் 6 கோடி ரூபா வசூலை எதிர்பார்ப்பதாக தயாரிப்பாளர் தெரிவித்தார். சமூக, சமய, இனங்களிடையிலான பேதங்களை எடுத்துக் காட்டும் வகையில் யாழ்.

குடாநாட்டு நாயகன் ஒருவரையும் தென்னிலங்கை நாயகி ஒருவரையும் மையமாகக் கொண்டு காதல் உவப்புடன் ஏழை பணக்காரன் என்ற பாகுபாட்டினை வெளிப்படுத்தும் வகையிலும் யாழ். குடாநாட்டின் கல்வி மேம்பாடு, விவசாய உயர்ச்சி என்பவற்றினை பிரதிபலிக்கும் வகையில் இத்திரைப்படம் தயாரிக்கப்படவுள்ளது.

உள்நாட்டிலும், கனடா, லண்டன் உட்பட வெளிநாடுகளில் படமாக்கப்படும் இத் திரைப்படம் யாழ். குடாநாட்டின் திரைப்பட சாதனையை சர்வதேசம் ஈறாக பறைசாற்ற சிறந்த திரைப்படமாக உருவாக்கப்படவுள்ளது.

வரவேற்பு பாடல் மற்றும் நடனத்துடன் ஆரம்பமான இந் நிகழ்வில் நீதிபதி ஏ. பிரேம்சங்கர், யாழ். வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி வேதநாயகம், ஈ. பி. டி. பி. யாழ். மாவட்ட பிரதி அமைப்பாளர் அலெக்சாண்டர் சாள்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வவுனியா நகர சபை: தெரிவான உறுப்பினர்கள் 11 பேரும் இன்று பதவியேற்பு

வவுனியா நகர சபைக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப் பினர்கள் பதவி ஏற்பு விழா இன்று நடைபெறும். பிரதான வைபவம் நகர சபை கலாசார மண்டபத்தில் நடைபெறும். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா சம்பந்தன் உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளு மன்ற உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்வார்கள். நகர சபைத் தலைவராக முன்மொழியப்பட்டுள்ள எஸ். என். ஜி. நாதனும் சத்தியப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சி ஐந்து உறுப்பினர்கள், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி மூவர், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இருவர். சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒருவர் சபைக்கு உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

அமைச்சர் ரிசாட் பதிவுதீன், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், வவுனியா முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர்களும், வைபவத்திற்கு அழைக்கப் பட்டுள்ளனர்.

நடுவரை திட்டிய நடப்பு சாம்பியன் செரீனா அமெரிக்க ஓபனில் இருந்து வெளியேற்றம்

serena-williams.jpgஅமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதியில் நடப்பு சாம்பியன் செரீனா வில்லியம்ஸ் தண்டனை புள்ளியால் தோல்வியை சந்தித்தார். இதன்மூலம் இரண்டு ஆண்டுகளின் பின் டென்னிஸ் களம் திரும்பிய பெல்ஜியத்தின் கிம் கிளிஜ்ஸ்டர்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் 13 ஆவது நாளான நேற்று முன்தினம் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டிகள் நடைபெற்றன. இதில் அமெரிக்காவின் 2 ஆம் நிலை வீரõங்கனை செரீனா வில்லியம்ஸுடன் கிம்கிளிஜ்ஸ்டர்ஸ் பலப்பரீட்சை நடத்தினார்.

பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் கிம் கிளிஜ்ஸ்டர்ஸ் வெற்றிபெற இரண்டு புள்ளிகள் தேவைப்படும் நிலையில் செரீனா வில்லியம்ஸ் எல்லை கோட்டைத் தாண்டி விளையாடியதாக நடுவரால் அறிவிக்கப்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த செரீனா நடுவரை மோசமான வார்த்தையால் திட்டினார். இதனைத் தொடந்து நடுவர் இது குறித்து போட்டி மத்தியஸ்தரிடம் முறையிட அவர் தண்டனை புள்ளியாக கிம் கிளிஜ்ஸ்டர்ஸுக்கு ஒரு புள்ளியை வழங்க செரீனா இறுதிப் போட்டி வாய்ப்பை இழந்தார். இதன்போது செரீனா தன்னை கொலைசெய்து விடுவதாக குறிப்பிட்டார் என்று நடுவர் குற்றம் சாட்டினார்.

ஏற்கனவே இந்த போட்டியின் முதல் சுற்றின்போது செரீனா ஆடுகளத்தில் மோசமாக நடந்துகொண்டார். இதற்காக அவர் நடுவரின் எச்சரிக்கைக்கு உள்ளான நிலையிலேயே மீண்டும் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.இதன்படி கிம் கிளிஜ்ஸ்டர்ஸ் அமெரிக்க ஓபன் இறுதிப் போட்டியில் டென்மார்க்கின் கிரோலின் வொஸ்னிக்கை சந்திக்கவுள்ளார்.

மட்டக்களப்பு பெரியவட்டுவான் 25 கிலோ எடையுள்ள ரீ.என்.ரீ. வெடிமருந்துகள் கண்டுபிடிப்பு

udaya_nanayakkara_brigediars.jpgமட்டக்களப்பு, பெரியவட்டுவான் பிரதேசத்திலிருந்து 25 கிலோ எடையுள்ள ரி. என். ரி. அதிசக்திவாய்ந்த வெடிமருந்துகள் உட்பட பெருந்தொகையான ஆயுதங்களை படையினர் மீட்டெடுத்துள்ளனர்.

கிழக்கு மாகாணத்தின் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழுள்ள இராணுவத்தின் 233வது படையணியினர் நடத்திய பாரிய தேடுதல்களின் போதே இந்த வெடிமருந்துகளை மீட்டெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இதேவேளை, முல்லைத்தீவின் பல்வேறு பிரதேசங்களில் படையினர் நடத்திய தேடுதல்களில் ஆயுதங்களுடன் பெருந்தொகையான தொலைத் தொடர்பு கருவிகளையும் மீட்டெடுத்துள்ளனர்.

பெரியவட்டுவான் பிரதேசத்தில் நடத்திய தேடுதல்களில் ரி-56 ரக துப்பாக்கிகள் – 2, அதற்குப் பயன்படுத்தப்படும் ரவைகள் – 60, ஆர். பி. ஜி. குண்டுகள் – 07, கைக்குண்டுகள் – 05, மிதிவெடிகள் – 20 மற்றும் உபகரணங்களை மீட்டெடுத்துள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.

யாழ். லொறிகள் வவுனியாவில் பொருட்களை இறக்குவதற்கு ஏற்பாடு

யாழ்ப்பாணத்திலிருந்து ஏ9 வீதி வழியாக தென்பகுதிக்கு, யாழ். குடாநாட்டின் உற்பத்திப் பொருட்களை ஏற்றி வரும் லொறிகள் தம்புள்ள மற்றும் கொழும்பு சந்தைகளிலேயே அவற்றை இறக்கி வருகின்றன. இந்த லொறிகளில் இருந்து வவுனியாவில் பொருட்களை இறக்குவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் வவுனியாவில் பொருட்களை இறக்க முடியாதிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக யாழ். மாவட்ட வர்த்தகர்களின் வேண்டுகோளுக்கமைய, ஜனாதிபதியின் ஆலோசகரும், வடக்கின் வசந்தம் திட்டத்தின் தலைவருமான பசில் ராஜபக்ஷவின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு அல்லது தம்புள்ள சந்தைகளுக்குச் செல்லும் லொறிகளில் இருந்து பொருட்களை இறக்க முடியாது என்றும், வவுனியா சந்தைக்கென பொருட்களை ஏற்றி வரும் லொறிகள், அந்தப் பொருட்களை முழுமையாக வவுனியாவில் இறக்குவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்வதாக பசில் ராஜபக்ஷ தம்மிடம் உறுதியளித்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் தெரிவித்தார்.

கள்ள நோட்டுகளுடன் சந்தேக நபர் கைது

மூன்று இலட்சத்து 18 ஆயிரம் ரூபா கள்ள நோட்டுக்களை வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் அலவ்வ பொலிஸார் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரின் வீட்டிலிருந்து கள்ள நோட்டுக்களை அச்சிடுவதற்கு பயன்படுத்தப்பட்ட கணனி உட்பட பல்வேறு உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் நிமல் மெதிவக்க நேற்றுத் தெரிவித்தார்.

பிரதான சந்தேக நபர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் கள்ள நோட்டுக்களை அச்சிடும் செயற்பாடுகளுக்கு உதவியாக இருந்த மேலும் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை கள்ள நோட்டு அச்சிடும் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அலவ்வை பிரதேசத்திலுள்ள சந்தையில் பொருட்களை கொள்வனவு செய்த ஒருவர் 1000/- ரூபாவை கொடுத்துள்ளார். அந்த நோட்டு தொடர்பாக சந்தேகம் எழுந்ததையடுத்து குறித்த நபரை மடக்கிப் பிடித்து அலவ்வை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அவரை கைது செய்த பொலிஸார் அவரிடம் மேலதிக விசாரணைகளை நடத்தியுள்ளனர். தனது வீட்டில் மேலும் கள்ள நோட்டுக்கள் மறைத்து வைத்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நபரின் வாக்கு மூலத்தையடுத்து சந்தேக நபரின் வீட்டுக்குச் சென்ற பொலிஸார் போலியாக அச்சிடப்பட்ட (1000/-) ஆயிரம் ரூபா கள்ள நோட்டுக்கள் 318. (இந்த போலி நோட்டுக்களின் பெறுமதி 3 இலட்சத்து 18 ஆயிரம்) மீட்டெடுத்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அலவ்வ பொலிஸாருடன் இணைந்து இரகசிய பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

குழந்தை வயிற்றில் குழந்தை

130909baby.jpgசீனாவில் ஒரு வயதுடைய காங் மெங்ரூ என்ற பெண் குழந்தையின் வயிற்றில், இரட்டை சிசு உள்ள ஆபூர்வம் நடந்துள்ளது.

அக்குழந்தையின் வயிற்று பகுதி நாளுக்கு நாள் பெரிதாகி கொண்டே போவதால், குழந்தையின் பெற்றோர் மருத்துவமனைக்கு காங் மெங்ரூவை கொண்டு சென்றனர். மருத்துவர்கள் குழந்தை பரிசோதனை செய்த போது, குழந்தையின் வயிற்றில் இரட்டை சிசு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுபோன்று வினோதமான நிகழ்வு 500,000 பிரசவத்திற்கு ஒரு முறை நடக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். காங் மெங்ரூவிற்கு விரைவில் அறுவைசிகிச்சை நடக்க உள்ளது.

சட்டவிரோதமாக சென்ற மற்றுமொரு படகு அவுஸ்திரேலியாவில் தடுத்து வைப்பு

இலங்கையர்களும் உள்ளடங்குவதாக சந்தேகிக்கப்படும் அரசியல் தஞ்சம் கோரியோர்களை  ஏற்றிச் சென்ற படகு ஒன்றை அவுஸ்திரேலிய கடற்படையினர் தடுத்து வைத்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
 
அரசியல் தஞ்சம் கோரிய 83 பேரை  ஏற்றிச் சென்ற இந்த படகு, அவுஸ்திரேலியாவின் அஸ்மோர் தீவுக்கு அருகில் வைத்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

படகுடன், 83 அரசியல் தஞ்சம் கோரியவர்களையும், குறித்த படகோட்டிகள் நான்கு பேரையும் அவுஸ்திரேலிய கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு அரசியல் தஞ்சம் கோரியவர்களை  ஏற்றிச் சென்ற  20 வது படகே இன்று மீட்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் தற்போது கிரிஸ்மஸ் தீவில் உள்ள இடைத்தங்கல் முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் ப்ரண்டன் ஓ கோனர் தெரிவித்துள்ளார்.

தொழிலாளர்களுக்கு 405 ரூபா நாளாந்தம் சம்பளம்:தொழிற்சங்கங்கள்-முதலாளிமார் சம்மேளனம் நேற்றிரவு இணக்கம்

080909teawomen.jpgதோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பாக தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்திற்கும் இடையில் நடைபெற்ற இறுதிக் கட்ட பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடு காணப்பட்டுள்ளதாக இ.தொ.கா. உபதலைவர் ஆர்.யோகராஜன் தெரிவித்தார். இதன் அடிப்படையில் தோட்டத் தொழிலாளர்கள் நாளொன்றுக்கு 405ரூபா சம்பளத்தைப் பெறுவார்கள்

பத்மநாதனிடம் பாகிஸ்தான் அதிகாரிகளும் விசாரணைகளை நடத்தவுள்ளனர்

தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதனிடம் விசாரணைகளை நடத்த வேண்டுமென பாகிஸ்தானிய அதிகாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.  கடந்த மார்ச் மாதம் பாகிஸ்தானின் லாகூர் நகரில் இலங்கைக் கிரிக்கட் அணி மீது நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதல் தொடர்பில் கே.பி.யிடம் விசாரணை நடத்தப்பட வேண்டுமென பாகிஸ்தானிய அதிகாரிகள் கோரியுள்ளனர்.

அண்மையில் லிபியாவில் வைத்து ஜனாதிபதி மஹிந்தவிடம், இலங்கை கிரிக்கெட் அணி மீது லாகூரில்  நடத்தப்பட்ட தாக்குதலுடன் விடுதலைப்புலிகளுக்கு தொடர்பு உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஹிலார்னி தெரிவித்திருந்தார்.

இதன்படி, குமரன் பத்மநாதனிடம் விசாரணைகளை மேற்கொள்ளும் நோக்கில் பாகிஸ்தானிய உயரதிகாரிகள் குழுவொன்று இலங்கைக்கு எதிர்வரும் வாரத்தில் விஜயம் செய்யக் கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் படுகொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென இந்தியா ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில் பத்மநாதனை விசாரணை செய்யும் இந்திய புலனாய்வுக் குழுவினர் விரைவில் இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.