எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

பாலியல் தொழிலுக்காக பெண்கள் கடத்தல் – இந்திய பெண்கள் அமைப்பு ஆழ்ந்த கவலை

290909family.jpgபாலியல் தேவைகளுக்காக இந்தியாவில் பெண்கள், சிறுவர்கள் கடத்தப்படுவது குறித்து இந்திய பெண்கள் அமைப்பு அக்கறை செலுத்தியுள்ளது.

இந்தியாவின் உத்தரப் பிரதேஷ், குஜராத், ராஜஸ்தான், புதுடில்லி ஆகிய மாநிலங்களிலே பெருமளவான பெண்களும் சிறுவர்களும் கடத்தப்படுகின்றனர்.

இவர்கள் பின்னர் பாலியல் தேவைகளுக்காகவும் தொழிலுக்காகவும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இந்த வேலையை குறிப்பிட்ட குழுவொன்று செய்து வருகின்றது. நேபாளத் திலிருந்தும் பெண்கள் இந்தியாவுக்குள் அழைத்து வரப்பட்டு பாலியல் தொழில்களுக்காக அனுப்பி வைக்கப்படுகின்றமை தெரியவந்துள்ளது.

இது குறித்து பெண்கள் அமைப்பு அதிக அக்கறை செலுத்தியுள்ளது.

கண்ணிவெடி அகற்றும் பணிக்கு 5மில்.டொலர்: யு.என்.எச்.சி.ஆர்.இணக்கம் – ஜெனீவாவில் பேச்சு

வடபகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கென ஐந்து மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 10 கண்ணிவெடி அகற்றும் இயந்திரங்களை வழங்க அகதிகளுக்கான ஐ. நா. உயர் ஸ்தானிகராலயம் இணக்கம் தெரிவித்துள்ளது.

வட மாகாணத்திற்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷவின் வேண்டுகோளின் பேரில் மனித உரிமைகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த சமரசிங்க நேற்று (29) அகதிகளுக்கான ஐ. நா. உயர் ஸ்தானிகர் எந்தோனியோ கெட்டஸ¤டன் பேச்சு நடத்தினார்.

இதன் போதே மிதிவெடி அகற்றும் இயந்திரங்களை வழங்க இணக்கம் காணப்பட்டது. ஜெனீ வாவில் நடைபெறும் அகதிகளுக்கான ஐ. நா. உயர் ஸ்தானிகராலயம் நிறை வேற் றுக்குழுக் கூட்டத்தில் இலங்கை சார்பாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க கலந்து கொண்டு ள்ளார்

கே. கே. எஸ். வரையான ரயில் நிலையங்களை மீளமைக்கும் பணி – 27 நிறுவனங்களிடம் இன்று கையளிப்பு

260909srilanka.jpgயாழ். தேவி ரயில் சேவையை யாழ்ப்பாணம் வரை விஸ்தரிக்கும் வகையில் காங்கேசன் துறை வரையான ரயில் நிலையங்களை மீளமை க்கும் பணிகள் 27 உள்நாட்டு வெளி நாட்டு நிறுவனங்களுக்கு இன்று (30) உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட உள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது.

யாழ்தேவி ரயில் சேவையை காங்கேசன்துறை வரை விஸ்தரிக்கும் திட்டத்தின் கீழ் இந்த வருட முடிவுக்குள் தாண்டிக்குளத்தில் இருந்து முகமாலை வரையான ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட உள்ளன.

தாண்டிக்குளத்தில் இருந்து காங்கேசன்துறை வரையுள்ள 27 ரயில் நிலையங்களையும் நிர்மாணிக்கும் பொறுப்புகளை 27 உள்நாட்டு வெளிநாட்டு அனுசரணையாளர்கள் பொறுப்பேற்றுள்ளனர்.

மேற்படி ரயில் நிலையங்களை மீளமைக்கும் பணிகள் போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழகப்பெருமவினால் இன்று (30) உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட உள்ளது. இது தொடர்பான வைபவம் இன்று மாலை மேல் மாகாண கலாசார மையத்தில் இடம்பெற உள்ளது.

தாயகம் திரும்பிய அகதிகளின் குழந்தைகளுக்கு இலங்கைக் குடியுரிமை

இலங்கையின் வடக்கே யுத்தச் சூழ்நிலை காரணமாக இடம்பெயர்ந்து, இந்தியாவில் தஞ்சமடைந்திருந்த பின்னர் தாயகம் திரும்பியுள்ள குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு இலங்கைக் குடியுரிமை வழங்குவதற்கான நடமாடும் சேவையொன்று திங்களன்று வவுனியாவில் நடைபெற்றது.

ஐக்கியநாடுகளின் அபிவிருத்தி செயற்திட்டத்தின் ”நீதி நியாயத்தை சமமாக அணுகும் கருத்திட்டத்தின்” அனுசரணையோடு, இலங்கை குடிவரவு, குடியகல்வு திணைக்களம் இணைந்து இந்த நடமாடும் சேவையை ஒழுங்கு செய்திருந்தது.

குடியுரிமைப் பத்திரம் மட்டுமல்லாமல் ஏனைய அத்தியாவசிய ஆவணங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருப்பதாக ஐக்கியநாடுகளின் அபிவிருத்தி செயற்திட்டத்தின் ”நீதி நியாயத்தை சமமாக அணுகும் கருத்திட்டத்தின்” வடபிராந்திய இணைப்பதிகாரியான ஹனிபா மொகமட் சியால் கூறுகின்றார்.

பசுபிக் பகிரங்க டென்னிஸ் தொடரில் ஷரபோவா முன்னேற்றம்

300909sarabova.jpgபான் பசுபிக் பகிரங்க டென்னிஸ் தொடரின் ஒற்றையர் முதல் சுற்றில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பான் பசுபிக் பகிரங்க டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த ஒற்றையர் முதல் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா, சீனாவின் ஜீ ஜெங்கை சந்தித்தார். விறுவிறுப்பான போட்டியின் முதல் செட்டை சானியா 7 – 5 என சற்று போராடி கைப்பற்றினார்.

பின்னர் எழுச்சி கண்ட சீன வீராங்கனை இரண்டாவது செட்டை 6 – 2 என தன்வசப்படுத்தி, பதிலடி கொடுத்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது சுற்றில் தொடர்ந்து அபாரமாக ஆடிய ஜெங் 6 – 3 என கைப்பற்றினார். இறுதியில் சானியா 7 – 5, 2 – 6, 3 – 6 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.

மற்ற ஒற்றையர் முதல் சுற்றுப் போட்டியில் ரஷ்யாவின் மரியா ஷரபோவா, நடியா பெட்ரோவா, அவுஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசுர், செக் குடியரசின் இவடா பெனிசோவா, சுலோவேகியாவின் டேனியலா ஹண்டுசோவா, பிரான்சின் மரியன் பர்டோலி உள்ளிட்ட வீராங்கனைகள் வெற்றிபெற்று, இரண்டாவது சுற்றுக்கு தகுதிபெற்றனர்.

ஒற்றையர் இரண்டாவது சுற்றில் உலகின் ‘நம்பர் – 1’ வீராங்கனையான ரஷ்யாவின் டினரா சபினா, சீன தைபேயின் கெய்-சென் சங்கிடம் 6 – 7, 6 – 4, 5 – 7 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.

‘கிழக்கு மாகாண விதவைகளுக்கு உதவ இந்திய சேவா நிறுவனம் முன்வந்துள்ளது’- மாகாண அமைச்சர்

கிழக்கு மாகாணத்தில் சுனாமி மற்றும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சுமார் 48,000 விதவைகளுக்கு நல்வாழ்வளிக்க இந்திய சேவா நிறுவனம் முன்வந்துள்ளதாக இலங்கையின் கிழக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருடன் மேற்கொண்ட சந்திப்பினைத் தொடர்ந்து மூவர் கொண்ட குழுவினர் கிழக்கு மாகாணத்துக்கு வந்து இது குறித்த ஆய்வினை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இத்தகைய நடவடிக்கைகளுக்கு இந்தியா, சார்க் பெண்கள் அபிவிருத்தி நிதியம் மூலம் 100 மில்லியன் டாலர்களை ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், இந்தியாவுக்கு வெளியே இந்த நிதி செலவிடப்படும் நிலையில் கிழக்கு மாகாணமும் இதற்கான கணிசமான நிதியைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.

தபால் மூல வாக்களிப்பு சுமுகம்

srilanka-voting.jpgதென் மாகாண சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புகள் நேற்று (29) இடம்பெற்றன. வாக்களிப்புகள் சுமுகமாக இடம்பெற்றதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் டபிள்யூ.பி. சுமணசிரி தெரிவித்தார்.

இதேவேளை, தபால்மூலம் வாக்களிக்க விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்களுக்கு தேர்தல் தினத்தில் வாக்களிக்க முடியும் எனவும் மேலதிக தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார். தபால் மூல வாக்களிப்பு இன்றும் (30) இடம்பெற உள்ளது. இரு தினங்களிலும் வாக்களிக்க முடியாத தபால் மூல வாக்காளர்களுக்கு இந்த வாரத்திற்குள் வேறொரு தினத்தில் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளது.

அமெரிக்க – கியூபா உறவுகளை வலுப்படுத்த காத்திரமான நடவடிக்கைகள் அவசியம்

கியூபா – அமெரிக்க உறவுகளை கெட்டியான முறையில் வளப்படுத்த அமெரிக்கா வரவேண்டுமென கியூபா வெளிநாட்டமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார். ஐ.நா. கூட்டத் தொடரில் உரையாற்றிய கியூபா வெளிநாட்ட மைச்சர் ரொட்ரிக் மேலும் கூறியதாவது, அமெரிக்கத் தலைவர்களின் ஐ.நா. உரை கியூபாவுடனான உறவுகளை பல ப்படுத்தும் வகையில் அமையவில்லை என்பது துரதிர்ஷ்டமான விடயம்.

சகல நாடுகளுக்கும் நன்மையளிக்கும் வகையிலான உறவுகளை அமெரிக்கா முன்னெடுக்க வேண்டும். இதற்கு சர்வதேச சமூகம் அவசரமாக பணியாற்ற வேண்டும்.

அமெரிக்கா, கியூபாவிடையே ஐம்பது வருடங்களாக நல்லுறவு இல்லை. கியூபா ஜனாதிபதி பிடல் கெஸ்ட்ரோ ஓய்வுபெற்ற பின்னர் அமெரிக்காவின் அணுகுமுறைகள் மாறத் தொடங்கின. சென்ற ஏப்ரல் மாதம் கியூபா மீதான சில தடைகள் தளர்த்தப்பட்டன. அமெரிக்கர்கள் தடை யின்றி கியூபா சென்றனர்.

செய்மதிச் சேவைகள் உள்ளிட்ட முக்கிய சேவைகள் அமெரிக்க கம்பனிகளால் கியூபா வில் நடத்தப்பட்டன. இது போன்ற நடவடிக்கைகள் இரு நாடுகளிடை யேயும் நல்லுறவுகளை வளப்படுத்த உதவுகின்றன. கியூபா பொருட்கள் சேவைகளை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யவுள்ளதாகவும் அந்நாட்டின் வெளிநாட்டமைச்சர் குறிப்பிட்டார்.

கிழக்கில் இடம்பெயர்ந்த அனைவரும் மீள்குடியேற்றப்பட்டனர்

கிழக்கில் இடம் பெயர்ந்து நலன்புரிக் கிராமங்களில் தங்கவைக்கப்பட்டிருந்த அகதிகள் அனைவரையும் அவர்களது சொந்த இடங்களில் அரசாங்கம்  மீள்குடியர்த்தியுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் 35,000க்கும் அதிகமான குடும்பங்கள் 112 நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் படிப்படியாக மீள்குடியர்த்தப்பட்டனர். இவர்களுள் இறுதியாக கொக்குவில் நலன்புரி கிராமத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த 91 குடும்பங்கள் நேற்று அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்பட்டனர்.

சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்பட்ட மக்கள் தமது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினர். 

149 இலங்கை மீனவர்கள் இந்திய சிறையில்

இந்திய கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 149 இலங்கை மீனவர்கள் இந்திய சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டு ள்ளதாக மீன்பிடித் திணைக்களம் நேற்று தெரிவித்தது.

இவர்களில் 46 மீனவர்கள் கடந்த ஞாயிறன்று இரு படகுகளுடன் கைதானதாக மீன் பிடித் திணைக்கள பணிப்பாளர் எஸ். டபிள்யு. பதிரண தெரிவித்தார். வெளிவிவகார அமைச்சின் உதவியுடன் சென்னை பிரதி உயர் ஸ்தானிகராலயத்தினூடாக இவர்களை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.