இந்திய கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 149 இலங்கை மீனவர்கள் இந்திய சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டு ள்ளதாக மீன்பிடித் திணைக்களம் நேற்று தெரிவித்தது.
இவர்களில் 46 மீனவர்கள் கடந்த ஞாயிறன்று இரு படகுகளுடன் கைதானதாக மீன் பிடித் திணைக்கள பணிப்பாளர் எஸ். டபிள்யு. பதிரண தெரிவித்தார். வெளிவிவகார அமைச்சின் உதவியுடன் சென்னை பிரதி உயர் ஸ்தானிகராலயத்தினூடாக இவர்களை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.