எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

அரசாங்கத் தரப்பில் 305060 நியமனங்கள்! பிரதி நிதி அமைச்சர் தகவல்

உலக பொருளாதாரம் வீழ்ச்சி கண்டு பல உலக நாடுகள் தொழில் வாய்ப்புக்களை குறைக்கும் வேளையில் இலங்கை அரசாங்கம் அரச துறையில் 3,05,060 நியமனங்களை வழங்கியுள்ளதாக பிரதி நிதி அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
2004 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை இந்த தொழில் வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி குறிப்பிட்ட கால எல்லையில் 205,349 புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் வெற்றிடங்களுக்கான நியமனங்கள் 99,711 வழங்கப்பட்டுள்ளன. எனினும் ஐக்கிய தேசியக் கட்சி பதவியில் இருக்கும் போது பலதரப்பட்ட சுற்றறிக்கைகளை வெளியிட்டு அரச சேவையில் பெரும் எண்ணிக்கையிலான நியமனங்களை இல்லாமல் செய்ததாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அரச துறையில் அத்தியவசிய சேவைகளில்; நிலவும் வெற்றிடங்களுக்கு தகுதியானவர்களை பகிரங்கமாக நியமிக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தூர்.

புத்தளம் மினி சூறாவளியில் 600 வீடுகள் சேதம்; 20க்கு மேற்பட்டோர் காயம்

021009monsoon-rains.jpgபுத்தளம் நகரில் நேற்று வீசிய மினி சூறாவளி காரணமாக சுமார் 600 வீடுகள் சேதமாகியதுடன் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

நேற்றுப் பகல் சுமார் 1.30 மணியளவில் நகரை ஊடறுத்து பலத்த காற்றுடன் மழையும் பெய்தது. சுமார் 3 அல்லது 4 நிமிட நேரம் பலமான காற்று மினி சூறாவளியாக வீசத் தொடங்கியது.

புத்தளம் கடற்கரை வீதி, 4ஆம் வட்டாரம், மன்னார் வீதி, மரைக்கார் வீதி, நூர் வீதி பகுதிகளிலுள்ள வீடுக ளின் கூரைகள் பறந்தன. வர்த்தக நிலை யங்களின் பெரிய பெயர்ப் பலகைகள் சரிந்தன. வீடுகளில் இருந்த உடை மைகள் தூக்கி வீசப்பட்டன. வீடுக ளின் கூரைகளில் கட்டப்பட்டிருந்த நுளம்பு வலைகள் மின் கம்பிகளில் தொங்கிக் கொண்டிருந்தன.

வீதியில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு ஆட்டோக்கள் பலத்த காற்றில் இழுத்துச் செல்லப்பட்டு சேதமடைந்தன. எல்ப்ரக வாகனமொன்று ஆட்டோக்களில் மேல் விழுந்ததால் சேதம் ஏற்பட்டது. இரண்டு வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன என்ற தகவல்களை புத்தளம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஏ. டி. எச். பந்துசேன தெரிவித்தார்.

தொலைபேசி வயர்கள் வீதியெங்கும் அறுந்து தொங்கிக்கொண்டிருந்தன மின்சாரம் தடைப்பட்டிருந்தது. மழை காரணமாக மக்கள் அல்லோல கல்லோலப்பட்டுக்கொண்டிருந்தனர். மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஸ்தலத்துக்கு விரைந்து பார்வையிட்டதுடன் மக்களுக்கு உடனடி நிவாரண ஏற்பாடுகளை செய்யுமாறும் சேத விபரங்கள் தொடர்பாக மதிப்பீடுகள் செய்யுமாறு கிராமசேவகர்களுக்கும் பணிப்புரைகளை வழங்கினார். பிரதி அமைச்சர் கே. ஏ. பாயிஸ், அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஆகியோர் புத்தளம் நகரில் சேதமடைந்த பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டனர். மீட்புப்பணிகள் தொடர்கின்றன.

பிரபாகரனை அழித்தது தவறெனக் கூறி எதிர்க்கட்சி விசாரணை நடத்தக் கோருகிறது

mahinda-rajapaksha.jpgஊடகவிய லாளர்கள் மட்டுமல்ல அரசியல்வாதி களேயானாலும் இந் நாட்டில் சட்டம் சகலருக்கும் சமமானதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நீதிமன்றத் தீர்ப்பை வைத்துக் கொண்டு சர்வதேசமெங்கும் எதிர்க்கட்சியினர் விஷமப் பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, நாம் பிரபாகரனை அழித்தது தவறு எனக் கூறி விசாரணை நடத்தக் கோரி வருகின்றனரென்றும் குறிப்பிட்டார்.

தென் மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கிராம சேவகர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள் கலந்துகொண்ட நிகழ்வொன்று அலரி மாளிகையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது :-

தென் மாகாண மக்களின் காணி உறுதிகள் பற்றி நாம் குறிப்பிடும் போது இன்னொன்றும் ஞாபகத்துக்கு வருகிறது.  எமது நாட்டின் மூன்றில் ஒரு பகுதி நிலப்பரப்பையும் மூன்றில் இரண்டு பகுதி கடற்பரப்பையும் ரணில் விக்கிரமசிங்க புலிகளுக்கு எழுதிகொடுத்த சம்பவம்தான் அது. அதை வைத்துக் கொண்டு புலிகள் தனி நிர்வாகமொன்றையே நடத்தினர். பொலிஸ், நீதிமன்றம்,  முப்படை, வங்கிகள் என அனைத்தையும் நிறுவி நிர்வாகம் செய்தவர்களுக்கு நாட்டின் ஒரு பகுதியை எழுதிக் கொடுத்தவர் ரணில் விக்கிரமசிங்க.

இன்று அந்த நிர்வாகம் கலைக்கப்பட்டு பயங்கரவாதம் பூண்டோடு ஒழிக்கப்பட்டு விட்டது. எம்மால் இந்நாட்டை ஒரே கொடியின் கீழ் கொண்டுவர முடிந்துள்ளது. நாம் யுத்தத்தை மட்டும் நடத்தவில்லை. அத்துடன் முழு நாட்டிலும் அபிவிருத்திகளை மேற் கொண்டோம். மஹிந்த சிந்தனை செயற்றிட்டத்தின் கீழ் நாம் ஒரு இலட்சம் காணித் துண்டுகளைப் பகிர்ந்தளிப்பதாக வாக்குறுதியளித்திருந்த போதும் இதுவரை ஐந்து இலட்சம் காணித் துண்டுகளை எம்மால் பகிர்ந்தளிக்க முடிந்துள்ளது.

அரச வேலைவாய்ப்புக்களைக் குறைப்பதற்காக அன்று ஐக்கிய தேசியக் கட்சியினர் உலக வங்கியிடம் உறுதிமொழியளித்தனர். இன்று நாம் அரச துறையில் 12 இலட்சம் ஊழியர்களுக்கு தொழில் வழங்கி சகல சலுகைகளையும் வழங்கி வருகிறோம்.

இந்த நிலையில் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு எமக்குக் கடன் வழங்க வேண்டாமென எதிர்க்கட்சியினர் சர்வதேசத்திடம் கோரி வருகின்றனர். எத்தகைய நிலையிலும் நாட்டைக் காட்டிக் கொடுக்கும் உரிமை எவருக்கும் கிடையாது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தென் மாகாண சபைத் தேர்தல் சம்பந்தமாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி அரசாங்கம் பெருவெற்றி பெறுவது உறுதி எனக் குறிப்பிட்டதுடன், சர்வதேசக் குற்றச்சாட்டுக்களிலிருந்து நாம் விடுதலைபெற தென் மாகாண மக்கள் வழங்கும் வெற்றி மிகவும் உறுதுணையாக அமையுமெனவும் தெரிவித்தார்.

ஆழ்கடல் மீன்பிடி அபிவிருத்தி செயலமர்வு – மூன்றாம் கட்டம் மாத்தறையில்

ஆழ்கடலில் மீன் பிடித்தலில் ஈடுபடுகின்றவ்களுக்கு கூடுதல் பலனைப் பெற்றுக்கொள்வது எவ்வாறு என்பது குறித்து விளக்கமளிக்கும் செயலமர்வின் மூன்றாவது கட்டம் எதிர்வரும் 08 ஆம் திகதி மாத்தறையில் நடைபெற உள்ளது.

மீன்பிடித்துறை சார்ந்த நவீன உபகரணங்களை பயன்படுத்துவது குறிதுது இதன்போது விளக்கம் அளிக்கப்படுகின்றது.

இந்தத்திட்டம் முதலில் கடந்த ஓகஸ்ட் மாதம் நீர்கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டது. அதில் சுமார் 75 மீனவர்கள் கலந்துகொண்டுதுடன் சிறந்த பிரதிபலனும் கிடைத்துள்ளது. இதனையடுத்து இந்தத் திட்டத்தை ஏனைய பகுதிகளுக்கும் விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி தென் மாகாணத்தில் மூன்று கட்டங்களாக நடத்த ஒழுங்கு செய்யப்பட்டது.

அதன் முதல் கட்டம் இம்மாதம் 01 ஆம் திகதி பெந்தோட்டையிலும் இரண்டாம் கட்டமாக  02 ஆம் திகதி காலியிலும் நடத்தப்பட்டது. மூன்றாம் கட்ட செயலமர்வு எதிர்வரும் 08 ஆம் திகதி மாத்தறையில் நடத்தப்படவுள்ளது.இலங்கை முதலீட்டு; சபையும் தேசிய நீர்வள ஆய்வு மற்றும் அபிவிருத்தி நிறுவனமும் இணைந்து இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளன.

நாட்டில் முழுமையான அபிவிருத்தியை உருவாக்க வேண்டிய பொறுப்பு எம்மிடம் – ஜனாதிபதி

290909mahinda.jpgநாட்டுக்குத் தேவையான முழுமையான அபிவிருத்தியையும், தேசிய முன்னேற்றத்தையும் உருவாக்க வேண்டிய பொறுப்பை நாம் இன்று ஏற்றுக் கொண்டிருக்கிறோம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். உலகிலேயே மிக மோசமான பயங்கரவாதிகள் என வர்ணிக்கப்பட்டவர்களுக்கு எதிரான யுத்தத்தில் படையினரின் வீரத்தைக் கண்ட எந்தவொரு அறிவுள்ளவரும் நாட்டைத் துண்டாட வேண்டும் என்றோ பிரிவினைவாதத்திற்காக ஆயுதம் ஏந்த வேண்டும் என்றோ நினைக்கமாட்டார்கள் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இராணுவத்தின் 60வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இராணுவத்தினரின் கண்காட்சி ஒன்று நடைபெறுகிறது. இதன் ஆரம்ப வைபவம் நேற்று நடைபெற்றது. இதில் அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உயிர்த்தியாகம் செய்த சகல படையினரும் உலகத்தில் ஈடிணையற்ற வீரர்கள் என்ற பெருமையை பெற்றுக் கொண்ட நிலையிலேயே இன்றைய 60 ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறோம். உலகில் ஈடிணையற்ற வீரர்கள் என்ற பெருமை நாம் பெற்ற வெற்றியினூடாகவே ஏற்பட்டுள்ளது.

ஆசியாவிலுள்ள சகல நாடுகளும் நாம் பெற்ற யுத்த ரீதியான வெற்றி தொடர்பாக ஆராய்ந்து வருகின்றன.

உலகம் கண்டிராத மிலேச்சத்தனமான தாக்குதல் முறைகளை பயங்கரவாதிகள் உலகுக்கு காண்பித்துக் கொண்டிருந்தனர். எனினும் எமது வீரர்கள் அவர்களுக்கு முகம் கொடுத்தது மட்டுமல்லாமல் வெற்றியும் கண்டார்கள்.

உலகில் பெரும்பாலும் இராணுவத்தினர் தாம் தயாரித்த நவீன ஆயுதங்களை, கண்காட்சிக்கு வைப்பதற்காக உற்சவங்களை நடத்துவார்கள். அணு ஆயுதங்கள் உட்பட, ஏனைய ஆயுதங்களையும் கண்காட்சிக்கு வைப்பது மட்டும் அல்லாமல் ஊர்வலங்களையும் நடத்துவார்கள். எனினும், பயங்கரவாதிகளுக்கு எதிரான யுத்த த்தில் பெற்றுக்கொண்ட வெற்றியை நெஞ்சில் உரமாக சுமந்து கொண்டு கண்காட்சிகளை நடத்துவதற்கு உகந்தவர்கள் எமது இராணுவத்தினரே என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இக்கண்காட்சி 3ஆம் திகதி முதல் 7 ஆம் திகதி வரை நடைபெறுகிறது.

இடம்பெயர்ந்த முஸ்லிம்களின் விண்ணப்பங்கள் கையளிப்பு

ramadan-mosque.jpgவட மாகாணத்தில் இருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்களை தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவதற்காக தகவல் திரட்டும் வகையில் வடமாகாண முஸ்லிம்களிடமிருந்து திரட்டப்பட்ட 7000 (ஆயிரம்) விண்ணப்பப் படிவங்களை இலங்கை முஸ்லிம்களின் சம்மேளனம் மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனிடம் நேற்று அமைச்சில் வைத்து கையளித்தது.

அநுராதபுரம் வைத்தியசாலையில் சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சைப் பிரிவு !

அநுராத புரம் போதனா வைத்தியசாலையில் சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சைப் பிரிவொன்று இன்னும் மூன்று மாதங்களுக்குள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிறுநீரக நோய் விசேட வைத்திய நிபுணர் டாக்டர் திலக் அபேசேகர தெரிவித்துள்ளார். அநுராதபுரம் போதனா வைத்தியசாலை வளவில் 2850 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட ஜந்து மாடிக்கட்டடத்தில் இப்பிரிவு ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதனால்,  ரஜரட்ட பிரதேச சிறுநீரக நோயாளர்கள் நன்மையடையவுள்ளனர். இதற்கு முன்னர் ஆயிரக்கணக்கில் பணம் செலவு செய்து கண்டி மற்றும் கொழும்பு போன்ற பகுதிகளுக்கு சென்றுவந்த இப்பகுதி நோயாளர்களுக்கு இது பெரும் வரப்பிரசாதகமாக அமையவுள்ளது. 

தெல்தோட்டை மினி சூறாவளியில் 25 குடும்பங்கள் பாதிப்பு

011009rain-in-upcountry.jpgதெல் தோட்டை, பட்டிகாமம் தோட்டப் பகுதியில் வீசிய மினி சூறாவளி காரணமாக 3 லயன்களிலுள்ள 25 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. லயன்களிலுள்ள வீடுகளின் கூரைகள் காற்றில் அள்ளிச் செல்லப்பட்டதுடன் வீட்டின் சுவர்கள் இடிந்து வீழ்ந்துள்ளன. நேற்று முன்தினம் பிற்பகல் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

25 குடும்பங்களைச் சேர்ந்த 49 பேர் பட்டிகாமம் மலைமகள் மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்குரிய சமைத்த உணவுகள் வழங்கப்பட்டுள்ளன. உடனடியாக நிவாரணங்களை பெற்றுக் கொடுக்கு மாறு அரச அதிபர் பணிப்புரை வழங்கியிருக்கிறார். பிரதேச செயலர்பால கிருஷ்ணன் நேரில் சென்று பார்வையிட்டார்.

சாம்பியன் கிண்ணம் இறுதியாட்டத்திற்கு அவுஸ்திரேலியா நியுசிலாந்து அணிகள் தெரிவு.

270909n-s.bmpசாம்பியன்ஸ் கிண்ண தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வெற்றிகொண்ட அவுஸ்திரேலிய அணியும் நேற்று இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பாக்கிஸ்தானை வெற்றிகொண்ட நியுசிலாந்து அணியும் நாளை நடைபெறும் ஐ.ஸி.ஸி. சாம்பியன் கிண்ணத்துக்கான இறுதிப் போட்டியில் மோதவுள்ளன.

நேற்று பாக்கிஸ்தான் நியுசிலாந்து அணிகளுக்கிடையிலான அரையிறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாக்கிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 233 ஓட்டங்களை தனது இனிங்சில் பெற்றது. நேற்றைய போட்டியில் பாக்கிஸ்தானின் துடுப்பாட்டம் மிகவும் மந்கரமாகவே காணப்பட்டதென கிரிக்கட் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்தனர். நியுசிலாந்து அணி இப்போட்டியில் 5 விக்கட் வித்தியாசத்தில் வெற்றி இலக்கை அடைந்து இறுதிப்போட்டிக்குத் தெரிவானது. பந்துவீச்சிலும், துடுப்பாட்டத்திலும் டெனியல் விட்டோரி மிகவும் சிறப்பாக பணியாற்றினார். ஆட்டநாயகனாக தெரிவானார்.

நாளை தினம் அவுஸ்திரேலியா நியுசிலாந்து அணிகளுக்கிடையிலான ஆட்டம் மிகவும் விருவிருப்பாக அமையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இதுவரை நடைபெற்ற போட்டிகளில் அவதானிக்கும் கிரிக்கட் விமர்சகர்கள் நியுசிலாந்துக்கு வெற்றி வாய்ப்பு அதிகமென தெரிவிக்கின்றனர். ஆனால், கிரிக்கட் ஆட்டத்தில் வெற்றி தோல்வியை ஹேஸ்யத்தின் மூலம் தெரிவிக்க முடியாது. அச்சந்தர்ப்பத்தில் காலநிலை மைதான நிலை நாணய சுழற்சியில் வெற்றி தோல்வி ஆகியனவே வெற்றியை தீர்மானிப்பதாக அமையுமென எதிர்பார்க்கலாம்.

நேற்றைய ஆட்டத்தில் அணிகள் பெற்ற ஓட்ட விபரங்கள் கீழே தொகுத்துத் தரப்பட்டுள்ளது.

ICC Champions Trophy – 2nd semi final
New Zealand v Pakistan
New Zealand won by 5 wickets (with 13 balls remaining)
       
 Pakistan innings (50 overs maximum)
 Imran Nazir  c Taylor b Bond  28 
 Kamran Akmal†  c Redmond b Butler  24
 Shoaib Malik  c Taylor b Butler  2 
 Younis Khan*  c Taylor b Vettori  15
 Mohammad Yousuf  b Mills  45
 Umar Akmal  lbw b Vettori  55 
 Shahid Afridi  c †McCullum b Butler  4 
 Naved-ul-Hasan  c Guptill b Vettori  8 
 Umar Gul  c Broom b Butler  6 
 Mohammad Aamer  not out  19
 Saeed Ajmal  not out  14  
 Extras (lb 6, w 5, nb 2) 13     
      
 Total (9 wickets; 50 overs) 233 (4.66 runs per over)
Fall of wickets1-46 (Imran Nazir, 9.4 ov), 2-61 (Shoaib Malik, 12.5 ov), 3-69 (Kamran Akmal, 14.2 ov), 4-86 (Younis Khan, 20.5 ov), 5-166 (Mohammad Yousuf, 38.6 ov), 6-181 (Umar Akmal, 40.5 ov), 7-183 (Shahid Afridi, 41.2 ov), 8-192 (Umar Gul, 43.3 ov), 9-198 (Naved-ul-Hasan, 44.2 ov) 
        
 Bowling   
 KD Mills 10 0 46 1
 SE Bond 10 1 54 1
IG Butler 10 0 44 4 8
JEC Franklin 8 0 33 0  
 DL Vettori 10 2 43 3
 GD Elliott 2 0 7 0  
 
 New Zealand innings (target: 234 runs from 50 overs)
 BB McCullum†  c Shahid Afridi b Mohammad Aamer  17 
 AJ Redmond  c & b Saeed Ajmal  31 
 MJ Guptill  c Naved-ul-Hasan b Umar Gul  11 
 LRPL Taylor  b Shahid Afridi  38 
 GD Elliott  not out  75  
 DL Vettori*  st †Kamran Akmal b Saeed Ajmal  41 
 NT Broom  not out  3
 
 Extras (b 2, lb 6, w 6, nb 4) 18     
      
 Total (5 wickets; 47.5 overs) 234 (4.89 runs per over)
Did not bat JEC Franklin, KD Mills, IG Butler, SE Bond 
Fall of wickets1-22 (McCullum, 4.3 ov), 2-43 (Guptill, 9.1 ov), 3-71 (Redmond, 16.4 ov), 4-126 (Taylor, 29.5 ov), 5-230 (Vettori, 46.6 ov) 
        
 Bowling  
 Mohammad Aamer 10 2 32 1
 Naved-ul-Hasan 8 0 57 0
 Umar Gul 8.5 0 48 1
 Saeed Ajmal 8 0 39 2
 Shahid Afridi 10 0 41 1 
 Shoaib Malik 3 0 9 0
 
Player of the match DL Vettori (New Zealand)

சம்பியன் கிண்ணம் – இன்று இரண்டாவது அரையிறுதிப்போட்டி New Zealand won by 5 wickets

270909n-s.bmpசம்பியன் கிண்ணத்துக்கான இரண்டாவது அரையிறுதிப்போட்டி இன்று பாக்கிஸ்தான் நிவுசிலாந்து அணிகளுக்கிடையில் இரவு பகல் ஆட்டமாக நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றிபெரும் அணி 5ஆம் திகதி நடைபெறும் ICCசம்பியன் கிண்ணம் இறுதியாட்டத்துக்கு தெரிவாகும்.

இன்றைய போட்டியில் பாக்கிஸ்தான் அணி வெற்றிபெற வேண்டுமென்ற இலக்குடன் சிறப்பாக விளையாடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேநேரம்,  நிவுசிலாந்து அணியும் இறுதியாட்டத்துக்கு முன்னேற வேண்டும் என்ற அடிப்படையில் முனைப்பாக விளையாடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இப்போட்டியின் ஸ்கோர் விபரங்களை தொகுத்துத்தர தேசம்நெற் விசேட ஒழங்குகளை மேற்கொண்டுள்ளது. இன்றைய போட்டி இலங்கை நேரப்படி மாலை 6 மணிக்கு ஆரம்பமாகிறது.

Pakistan won the toss and elected to bat
ICC Champions Trophy – 2nd Semi-Final
ODI no. 2906 | 2009/10 season
Played at New Wanderers Stadium, Johannesburg (neutral venue)
3 October 2009 – day/night (50-over match)
Umpires IJ Gould (England) and SJA Taufel (Australia)
TV umpire DJ Harper (Australia)
Match referee J Srinath (India)
Reserve umpire SJ Davis (Australia)

Pakistan 233/9 (50.0 ov)

Pakistan innings (50 overs maximum)
 Imran Nazir  c Taylor b Bond  28 
 Kamran Akmal†  c Redmond b Butler  24 
 Shoaib Malik  c Taylor b Butler  2 
 Younis Khan*  c Taylor b Vettori  15 
 Mohammad Yousuf  b Mills  45 
 Umar Akmal  lbw b Vettori  55
 Shahid Afridi  c †McCullum b Butler  4
 Naved-ul-Hasan  c Guptill b Vettori  8 
 Umar Gul  c Broom b Butler  6 
 Mohammad Aamer  not out  19
 Saeed Ajmal  not out  14  
 Extras (lb 6, w 5, nb 2) 13     
      
Total (9 wickets; 50 overs) 233 (4.66 runs per over)
Fall of wickets1-46 (Imran Nazir, 9.4 ov), 2-61 (Shoaib Malik, 12.5 ov), 3-69 (Kamran Akmal, 14.2 ov), 4-86 (Younis Khan, 20.5 ov), 5-166 (Mohammad Yousuf, 38.6 ov), 6-181 (Umar Akmal, 40.5 ov), 7-183 (Shahid Afridi, 41.2 ov), 8-192 (Umar Gul, 43.3 ov), 9-198 (Naved-ul-Hasan, 44.2 ov) 
        
 Bowling 
 KD Mills 10 0 46 1 
 SE Bond 10 1 54 1
 IG Butler 10 0 44 4 
 JEC Franklin 8 0 33 0
 DL Vettori 10 2 43 3
 GD Elliott 2 0 7 0  
   
New Zealand team    
BB McCullum†, AJ Redmond, MJ Guptill, LRPL Taylor, GD Elliott, NT Broom, JEC Franklin, DL Vettori*, KD Mills, IG Butler, SE Bond