புத்தளம் நகரில் நேற்று வீசிய மினி சூறாவளி காரணமாக சுமார் 600 வீடுகள் சேதமாகியதுடன் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
நேற்றுப் பகல் சுமார் 1.30 மணியளவில் நகரை ஊடறுத்து பலத்த காற்றுடன் மழையும் பெய்தது. சுமார் 3 அல்லது 4 நிமிட நேரம் பலமான காற்று மினி சூறாவளியாக வீசத் தொடங்கியது.
புத்தளம் கடற்கரை வீதி, 4ஆம் வட்டாரம், மன்னார் வீதி, மரைக்கார் வீதி, நூர் வீதி பகுதிகளிலுள்ள வீடுக ளின் கூரைகள் பறந்தன. வர்த்தக நிலை யங்களின் பெரிய பெயர்ப் பலகைகள் சரிந்தன. வீடுகளில் இருந்த உடை மைகள் தூக்கி வீசப்பட்டன. வீடுக ளின் கூரைகளில் கட்டப்பட்டிருந்த நுளம்பு வலைகள் மின் கம்பிகளில் தொங்கிக் கொண்டிருந்தன.
வீதியில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு ஆட்டோக்கள் பலத்த காற்றில் இழுத்துச் செல்லப்பட்டு சேதமடைந்தன. எல்ப்ரக வாகனமொன்று ஆட்டோக்களில் மேல் விழுந்ததால் சேதம் ஏற்பட்டது. இரண்டு வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன என்ற தகவல்களை புத்தளம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஏ. டி. எச். பந்துசேன தெரிவித்தார்.
தொலைபேசி வயர்கள் வீதியெங்கும் அறுந்து தொங்கிக்கொண்டிருந்தன மின்சாரம் தடைப்பட்டிருந்தது. மழை காரணமாக மக்கள் அல்லோல கல்லோலப்பட்டுக்கொண்டிருந்தனர். மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஸ்தலத்துக்கு விரைந்து பார்வையிட்டதுடன் மக்களுக்கு உடனடி நிவாரண ஏற்பாடுகளை செய்யுமாறும் சேத விபரங்கள் தொடர்பாக மதிப்பீடுகள் செய்யுமாறு கிராமசேவகர்களுக்கும் பணிப்புரைகளை வழங்கினார். பிரதி அமைச்சர் கே. ஏ. பாயிஸ், அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஆகியோர் புத்தளம் நகரில் சேதமடைந்த பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டனர். மீட்புப்பணிகள் தொடர்கின்றன.