உலக பொருளாதாரம் வீழ்ச்சி கண்டு பல உலக நாடுகள் தொழில் வாய்ப்புக்களை குறைக்கும் வேளையில் இலங்கை அரசாங்கம் அரச துறையில் 3,05,060 நியமனங்களை வழங்கியுள்ளதாக பிரதி நிதி அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
2004 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை இந்த தொழில் வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி குறிப்பிட்ட கால எல்லையில் 205,349 புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் வெற்றிடங்களுக்கான நியமனங்கள் 99,711 வழங்கப்பட்டுள்ளன. எனினும் ஐக்கிய தேசியக் கட்சி பதவியில் இருக்கும் போது பலதரப்பட்ட சுற்றறிக்கைகளை வெளியிட்டு அரச சேவையில் பெரும் எண்ணிக்கையிலான நியமனங்களை இல்லாமல் செய்ததாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அரச துறையில் அத்தியவசிய சேவைகளில்; நிலவும் வெற்றிடங்களுக்கு தகுதியானவர்களை பகிரங்கமாக நியமிக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தூர்.